2012-2013 ஆம் ஆண்டுக்கான கல்வி உதவி தொகை விபரம் மற்றும் அழிஞ்சிக்குப்பம் மாணவ மாணவிகள்.


குறள்.
 சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.

கலைஞர் உரை:
சொல்லுவது எல்லோருக்கும் எளிது; சொல்லியதைச் செய்து முடிப்பதுதான் கடினம்.
=======
மு.வ உரை:
இச் செயலை இவ்வாறு செய்து முடிக்கலாம் என்று சொல்லுதல் எவர்க்கும் எளியனவாம், சொல்லிய படி செய்து முடித்தல் அரியனவாம்.
======
சாலமன் பாப்பையா உரை:
நான் இந்தச் செயலை இப்படிச் செய்யப் போகிறேன் என்று சொல்லுவது எல்லார்க்கும் சுலபம்; சொல்லியபடியே அதைச் செய்து முடிப்பதுதான் கடினம்.
=========
Translation:
Easy to every man the speech that shows the way;
Hard thing to shape one's life by words they say!.
========
Explanation:
To say (how an act is to be performed) is (indeed) easy for any one; but far difficult it is to do according to what has been said.
========




 கடந்த வருடம் மைதிலிக்கான உதவி தொகை கேட்டு  எழுதிய போது, இன்னும் 2013 மற்றும் 2014 அம் ஆண்டுடன் இந்த உதவியை ஏறக்கட்டிவிட வேண்டும் என்ற முடிவுடன் இருந்தது உண்மை.... அது ஆரம்பித்த போதே.. நிறைய பிரச்சனைகள்...
உதவி செய்கின்றேன் என்று சொன்ன  நெருங்கிய  நண்பர்கள்.... திடிர் என்று விலகினார்கள்... வாக்கு கொடுத்து விட்டேன்.... உதவி   செய்ய வந்த  நண்பர்களையும்.... வேண்டாம் உதவி  கிடைத்து விட்டது என்று மறுத்து விட்டேன்... திடிர் என்று   உதவி கிட்டாமல் நடு ரோட்டில் நின்ற போது... செய்தறியாது  திகைத்து போனேன்.
 ஆனால் என் மீது இருந்த நம்பிக்கையில்  உதவிகள் திரும்ப தேடி வந்தன... அடுத்த வருடம் உதவி செய்ய முடியுமா? என்று மைதிலி கேட்ட போது கூட நான், எப்படி செய்ய போகின்றேன் பார்ப்போம் என்று சொல்லி விட்டு நம்பிக்கையில்லாமல்தான்  வந்தேன்.


 ஆனாலும் நடு  ஆற்றில் விட்டு விட்டு செல்ல எனக்கு மனம் இடம் கொடுக்கவில்லை...

இதோ  நண்பர்கள் கொடுத்த உற்சாகத்தால்  இன்று   மைதிலி கடைசி வருடத்தை படித்துக்கொண்டு இருக்கின்றார்...


2013 வருடத்தில் மைதிலிக்கு பணம்  தேவை என்று எழுதிய அடுத்த நொடி  நுங்கம்பாக்கத்தில் இருக்கும் தோழர் கீதா அவர்கள் 20,000 கொடுத்தார்... அடுத்து  உதவி செய்ய  நினைத்த நண்பர்களுக்கு கஷ்டத்தில் பணம் அனுப்ப வேண்டாம்... நிறைய நண்பர்கள் உதவி செய்ய தயராய் இருக்கின்றார்கள்... அதனால்  எவ்வளவு அனுப்ப முடியும் என்று  மெயிலில் கேட்டுவிட்டுதான் பதில் மெயில் அனுப்பினேன்...

 பணம்  ஒருவர் ஒருவராக அனுப்பிக்கொண்டு இருக்கும் போதே ஆஸ்திரேலிய நண்பர் சாமி அவர்கள்... மொத்த தொகையும் தான்  ஒருவேரே தந்து விடுவதாக சொல்லி பணத்தையும் அனுப்பி வைத்தார்... கைக்கு  வந்தவுடன்தான் நிரந்தரம் என்பதால் பணம் அனுப்பியவர்களை நான் தடுக்கவில்லை...ஒருவரே அனைத்து பணத்தையும் கொடுத்து விட்ட காரணத்தால்  பணம்  கொஞ்சம் இருந்தது... சரி அடுத்த வருடத்துக்கு பயண்படுத்திக்கொள்ளலாம் என்று  விட்டு விட்டேன்..

 நான் போட்ட பதிவில் ஒரு மெயில் என்னை ஈர்க்க   அது உங்கள் பார்வைக்கு...


ஜாக்கி சார், இந்த பிளாக் இப்ப தான் பார்த்தேன். எனக்கு ஒரு உதவி தேவை. செய்வீங்க என நினக்கற.( Living at Vellore district Tamilnadu)1)எங்கள் பள்ளியில் 11வது வகுப்பு படிக்க 10 வது மார்க் சீட் வாங்க ரூ5000/- கொடுத்து (10/-கந்துவட்டி வாங்கி) 29/7 இன்று தான் சேர்ந்தான். அவன் படித்த பள்ளியில் 418/500 எடுத்து முதல் மாணவன்.அவனுக்கு நாங்களே கஷ்ட்த்தை உணர்ந்து பணம் கட்டி சேர்த்தேன். ஆனால் சீருடை வாங்க பணமில்லை. உதவ முடியுமா?

2) தாய், தந்தை இழந்து தவிக்கும் 11வ்து படிக்கும் மாணவிக்கு நானே முன்னின்று பள்ளியில் சேர்த்தேன். சுட்டி அவள். குடிசை வீட்டில் வயதான பாட்டியுட்ன் வறுமையால் கூலி வேலைக்கு செல்ல உள்ள அவள் 410/500 மார்க் எடுத்தாள். அம் மாணவிக்கு தாங்களால் புதிய துணிமனிகள் எடுத்து கொள்ள உதவ முடியுமா,

Headmaster.vijay



ஒரு ஹெட் மாஸ்டர் அதுவும் அரசு பள்ளியின் ஹெட்மாஸ்டர் அனுப்பிய  மெயில் என்னை ரொம்பவே  ஈர்த்தது...

கத்து வட்டிக்கு பணம் வாங்கி  கிராமத்தில் படிக்கும் மாணவன்... அவனுக்கு ஆசிரியர்கள் உதவி இருக்கின்றார்கள்.. நல்ல உடைகள் இல்லை...

 அடுத்து அப்பா அம்மா இல்லாது பாட்டியின் கூலி வேலையில்  படிக்கும்   பெண்ணுக்கு நல்ல  உடையில்லை.. உதவி செய்ய முடியுமா? என்று ஒரு தலைமை ஆசிரியர் கேட்கின்றார்...
உதவி செய்ய நண்பர்கள் தயாராக இருக்கின்றார்கள்...  உதவி இல்லாமல்  அரசாங்க பள்ளியில் படிக்கும் இரண்டு மாணவர்கள் கஷ்டப்படுகின்றார்கள்...

 சரி முதலில் நேரில் சென்று விசாரித்து  முடிவு எடுப்போம் என்று  நினைத்தேன்...

 அவருக்கு மெயில் அனுப்பி போன் நம்பர் பெற்றேன்...
 வேலை பளுவுக்கிடையே ஒரு நாள்  விடுப்பு எடுத்து பள்ளி சென்றேன்....

  ஆம்பூர் அருகே இருக்கும் மேல் அழிஞ்சிக்குப்பம் என்ற சிறிய கிராமம்.
 சென்னையில்  இருந்து பெங்களுர் செல்லும் போது  வேலூர் மாவட்டம் ஆம்பூருக்கு முன்  தேசிய நெடுஞ்சாலைக்கு பக்கத்தில்  சாலையும், ரயில் பாதையும் மலையும் ஒரு சேர சில கிலோ மீட்டர்கள்  முத்தமிட்ட படி செல்லும்   இடத்தில் அமைந்து இருக்கும் மிக அழகான கிராமம்....

மெயின்  ரோட்டில் இருந்து  ஒன்றரை கிலோ மீட்டரில்  அந்த பள்ளி அமைந்து இருந்தது...

நிதி கிடைக்க நிதி  கிடைக்க  கட்டிய பள்ளி என்பது ஒழுங்கற்ற  கட்டிடங்கள்   நமக்கு  எளிதில் புரிய வைத்தன.
 தலைமையாசிரியர் விஜய் சார் என்னை வரவேற்றார்...
 ஆசிரியர் குறிப்பிட்ட... இரண்டு  பதினோராவது படிக்கும் மாணவர்களை நான் பார்க்க விரும்பினேன்...


 பத்தாம் வகுப்பு வரை தனியார் பள்ளியில் படித்து இருக்கின்றான்.. மார்க் ஷீட் பெற வேண்டும் என்றால் பள்ளி  பிஸ் தொகை செலுத்தினால்தான் மார்க் லிஸ்ட் கொடுப்பேன் என்று பள்ளி நிர்வாகம் சொல்ல...

5000 ஆயிரம் ரூபாய் கந்து வட்டிக்கு பணம் வாங்கி  சர்ட்டிபிகேட் வாங்கி வெளியே வந்தவனுக்கு  மேல் அழிஞ்சிபட்டு அரசினர் பள்ளி கை கொடுத்து...418 /500 எடுத்த மாணவனை தன் பள்ளியில்     சேர்த்துக்கொண்டார்.  சீருடைகள் மற்றும் உடைகள் இல்லை என்று தெரியவந்தது...

  பதினோராம் வகுப்பு படிக்கும் போது  உடைகள் எவ்வளவு முக்கியம் என்பதை   ஒரு மாணவனாக உணர்ந்தவர்களுக்கு  கண்டிப்பாக தெரியும்...

பதினோரம் வகுப்பு படிக்கும் ஜீவானந்தத்தை ஆசிரியர் எனக்கு  அறிமுகப்படுத்தி வைத்தார்...  உதவிகள் கிடைத்தால் இன்னும் நன்றாக  படிப்பேன்    என்று  வாக்களித்தான்...

( மாணவன் ஜீவானந்தத்துடன்)


 அதன் பிறகு மகாலட்சுமி... பத்தாம் வகுப்பில்  410/500 மதிப்பெண்கள்... அப்பா அம்மா இரண்டு பேரும் இல்லை.. பாட்டி வளர்கின்றார்... கூலி வேலைக்கு சென்று  பாட்டி கொண்டு வரும் சொற்ப தொகையில் ஜீவனம் நடக்கின்றது...


 துணிமணிகள் இல்லை.. ஒரே சீருடையை தினமும் துவைத்து காய வைத்து போட்டு  வருவதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்... எனக்கு கலைவாணர் நடித்த நல்லதம்பி திரைப்படமும் பீரோ நிறைய உடைகள் இருக்கும் காட்சியும் நினைவுக்கு வந்தன.


எனக்கும் சிறுவயதில்  தீபாவளிக்கு ஒரு உடை நடுவில் எப்போதாவத டிராயர் நைந்து போய் விட்டால் ஒரு உடை.. அது மட்டுமல்ல...  பத்தாம்வகுப்பு படித்த போது  நண்பர் ஒருவரின் உடைகள் வாங்கி அணிந்து இருக்கின்றேன்.. சும்மா உடைகள் கொடுக்க கூடாது என்பதற்காக 25 பைசா ஒரு சட்டைக்கு  வாங்கிக்கொண்டு  கொடுத்து  இருக்கின்றார்....

(பாட்டி ஆதரவில் வளரும் மகாலட்சுமி படிப்பில் படு சுட்டி)

சரி சென்னை சென்று  உங்களுக்கான  சீருடைகள்  மற்றும்  கேஷுவல் உடைகள்  வாங்கி கொண்டு வந்து  தருகின்றேன் என்று  வாக்களித்தேன்...
  திடிர் திருப்பமாக  அக்கா, தம்பி இரண்டு பேரை  விஜய் சார் அறிமுகப்படுத்தினார்.. ஏழாம் வகுப்பு படிக்கும் உமா மகேஸ்வரி  மற்றும்   ஆறாம் வகுப்பு படிக்கும்  சதிஷ்குமார்  இரண்டு பேரும் வறுமையில் இருப்பதாக தெரிவித்தார்.

 அப்பா அம்மா ரெண்டு பேருமை இறந்துட்டாங்க..    குடி குடித்து விட்டு அப்பா திட்ட  அம்மா தூக்கில் தொங்கி இறந்து விட்டார்... அதன் பின் அவர்களின்  அப்பாவும் குடி மற்றும் உடல் ஊபாதை காரமாண தூக்கிட்டு இறந்து விட்டார்....

 எல்லாவற்றையும் விட கொடுமை   அப்பாவின் சடலம் நடு ஹாலில் கிடத்தப்பட்டு இருக்கும் போது கூட   புத்தகமும் கையுமாக படித்துக்கொண்டு இருந்தான் என்று சாவுக்கு சென்று வந்த மாணவர்கள்   ஆசிரியர்கள் சிலாகித்து கொண்டு இருந்தார்கள்.
(தாய் தந்தையரை இழத்த பிள்ளைகள்   உமா மகேஸ்வரி  மற்றும் அவரது தம்பி சதிஷ்குமார்... சதிஷ்குமாருக்கு படிப்பு  ரொம்ப முக்கியம் என்கின்றான்.)

அவர்களுக்கும்  உடைகள் வாங்கி  கொடுப்பதாக வாக்கு கூறினேன்....  எப்படி செய்ய போகின்றேன் ...??? ஆனாலும் செய்ய வேண்டும் என்ற உத்வேகம் மட்டும் இருந்தது.


சென்னை வந்தேன்... மைதிலிக்கான உதவிகள் கிடைத்து விட்டன போதும் என்று ஏற்கனேவே அறிவித்து விட்டேன்....  மைதிலிக்கு ஒருவரே  பணம் கட்டி விட்டகாரத்தால்  மீதம் இருந்த பணம்..  மற்றும்  அத்துடன்  மெயிலில் பணம் எவ்வளவு வேண்டும் என்று எனக்கு  மெயில் அனுப்பிய அத்தனை நண்பர்களுக்கு விஷயத்தை விளக்கி கண்டிப்பா உதவி தேவை என்று மெயில் அனுப்பினேன்.


மெயில் அனுப்பிய  அடுத்த நிமிடம் பணம் வரத்தொடங்கியது...
பணம் எவ்வளவு கிடைக்கும் என்பது தெரியவில்லை.. அதனால் முதலில் சின்னதாக பர்ச்சேஸ் செய்து வைத்து இருந்தேன்...  நண்பர்கள் உதவிகள்  தொடர்ந்து கிடைத்த காரணத்தால்     சீருடைகள்  மற்றும் கேஷூவல் உடைகள் தலா பத்து  செட் துணிகள் எடுத்தேன்.

திரும்ப  அழிஞ்சி பட்டு செல்ல முடிவு எடுத்த போது எல்லாம் வேலை பளு  காரணமாக செல்ல முடியாத நிலை.... தள்ளி  போய்க்கொண்டு இருந்தது...விஜய் சார் ஒரு ஐடியா சொன்னார்  ஆசிரியர் தினத்தன்று நடக்கும் விழாவில்  உதவி  பொருட்களை வழங்கலாம் என்று ஐடியா தெரிவித்தார்....

அப்போது தான் எழுது பொருட்கள் மற்றும் நோட்டு புத்தகங்கங்கள்... அவர்களுக்கு   மற்றும் மாணவர்களுக்கு தேவையான பொருட்களை  வாங்குவது என்று முடிவு செய்தேன்...

 அவசரம் அவசரமாக பணி  முடிந்து  விடு திரும்பி திரும்ப  போரூரில் இருந்து  யாழினியை அழைத்துக்கொண்டு திநகர்  மற்றும்  பாரிஸ் அலைந்தோம் ...கால் டாக்சிகள் மூலம்தான் பொருட்களை எடுத்து வந்தோம்...

  மூன்று கட்டமாக நான்கு   பெரிய  சாக்குபைகளில்  எழுது பொருட்கள் மற்றும்  துணிகளை பேக் செய்தோம்...
தலைமை ஆசிரியர் விஜய்... ஆசிரியர் தினத்தன்று குடும்பத்துடன் வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்....

டாக்சி வைத்து செல்வதாக பிளான்....


 (இது முதல் பர்சேசின் பொது வாங்கிய  பொருட்களை மட்டுமே)


 நண்பர்... குறும்பழகனிடம் இது பற்றி பேசிக்கொண்டு இருக்கும் போது... அவர் புதியதாக வாங்கிய  ஷிப்ட் காரை கொடுத்து டீசலுக்கு ஆயிரம் ரூபாய் பணமும் கொடுத்தார்...
  முதலில் அவரும் குடும்பத்துடன் வருவதாக இருந்தது... ஆனால் அவர்   வர முடியாத சூழல்...
 நான் , என் மனைவி, யாழினி   மூவரும் கடந்த வருடம் ஆசிரியர் தினத்தன்று  காலையிலேயே  ஆம்பூர் அருகே  இருக்கும் பொருட்களை காரில் ஏற்றிக்கொண்டு  ஆம்பூர் அழிச்சிப்பட்டு பள்ளிக்கு   கிளம்பினோம்....

புதிய கார் என்பதால்  சிறீக்கொண்டு இருந்தது.... நான் எழுபது என்பதை தாண்டவில்லை...மதியம் ஒரு மணிக்கு  ஆம்பூரை அடைந்து  மதியம் சாப்பாட்டினை முடித்துக்கொண்டு... பள்ளிக்கு சென்றோம்...

பெரிய அளவில் விழாவினை ஏற்பாடு செய்து இருந்தார்கள்....முதலில் மாணவ மாணவிகளுக்கு உடைகள் டைலர் மூலம் அளவு எடுத்து  அவருக்கான  பைசா கொடுத்து டைலரிடம் ஒப்படைக்க பட்டது...


பயனாளி மாண மாணவிகளுக்கு நாங்கள்  அந்த பள்ளிக்கு வந்ததில் இருந்தே  அவர்களுக்கு  இனம் புரியாத ஒரு சந்தோஷம்..  முகத்தில் அப்பி இருந்தது...மகாலட்கூமியின் பாட்டியும், ஜீவானந்தம் பையனின் அம்மாவும்  முதலிலேயே என்னை  சந்தித்து நன்றி கூறினர்.
 விழா தொடங்கும் நேரம்  இருட்டிக்கொண்டு வந்த மேகம் ஒரு மணி நேரம் மழையாக கொட்டத்தொடங்கியது... கொஞ்சம் மழை விட்டதும் மீண்டும் நான்கு மணிக்கு மேல்  விழா ஒரு ஹாலில்   தொடங்கியது... அப்போதும் மழை வெளுத்து வாங்கிக்கொண்டுதான் இருந்தது....


விழாவில் ஊர் பெரியவர்கள் மற்றும் உயர் பொறுப்பில் இருப்பவர்கள் சில டிரஸ்ட்டிகள் கலந்து கொண்டன்ர் விபத்தல்  இறந்த தன் பெண்  நினைவாக அறக்கட்டளை  நடத்தி வரும் ஒரு பெரியவரும்  விழாவில் கலந்துக்கொண்டார்..

  மாணவ  மாணவிகளுக்கு என்னை அறிமுகபடுத்தி வைத்தார்.... சில வார்த்தைகள் பேச சொன்னனார்... நாம் எப்போதுமே தன்னம்பிக்கையை பற்றிதான் அதிகம் பேசுவேன்... என் வாழ்க்கையில் இருந்து சில உதாரணங்களை சொன்னேன்... மாணவர்களும் மாணவிகளும் ஆர்வமாக கேட்டார்கள்.


 துணி மணிகள், எழுது பொருட்கள் , புத்தகங்கள் போன்றவற்றை பிள்ளைகளுக்கு வழங்கினோம்... ஊர் பெரியவர்களை கைகளால் வழங்க வைத்தோம்... விழா நடந்துக்கொண்டு இருக்கும் போதே வினாடி வினா போல கேள்வி கேட்டு உடனுக்குடன் பரிசுபொருட்கள் வழங்கினோம்..
மாணவர்கள் மத்தியில் விழாவை விட  வினாடி வினா  அதிகம் நடக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார்கள்...

துணிமணிகளை அப்பா இல்லாத பிள்ளைகளுக்கு கொடுத்த போது  மேடையில் இருந்து ஊர் பெரியவர் நான்கு பிள்ளைகளுக்கும்  தலா ஆயிரம் ரூபாய் கவரில் வைத்து   மேடையிலேயே வழங்கினார்கள்..


 விழாவில் கலந்துக்கொண்ட அத்தனை  மாணவ மாணவிகளுக்கு  விழா முடிந்து  வெளியேறிய போது... மூன்று ரூபாய் மதிப்புள்ள பேனாக்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது..


மாணவர்களுக்கு மாணவிகளுக்கு முகத்தில் அவ்வளவு  சந்தோஷம்... சர்வ நிச்சயமாய்  சொல்கின்றேன்.. காசு பணம் நிறைய இருக்கின்றததா... வருடத்துக்கு ஒரு முறை இது போன்ற ரூரல் அரசு பள்ளிகளில் சின்ன சின்ன உதவிகள் செய்து வாருங்கள்... அது கொடுக்கும் மன நிறைவு  வேறு எங்கேயும் கிடைக்காது... கடந்த 2013 ஆசிரியர் தினத்தை என்னால் நிச்சயம் மறக்க முடியாது...


ஒரே ஒருவருக்கே  எல்லா பயணும் சென்று  சேரக்கூடாது என்பதில்  நாங்கள் தெளிவாக இருந்தோம்..
  எழுது பொருட்கள், நோட்டு  புத்தகங்கள், பாக்ஸ், வாட்டர் பாட்டில் போன்று வேறு ஒரு செட் தனியாக  ஆசிரியர் தினம் என்பதால் வாங்கி  வைத்து இருந்தேன்.. அதனை ஆசிரியரிடம் கொடுத்து  அப்பாவோ  அல்லது அம்மாவோ இல்லாத மாணவர்களில்  அல்லது நன்றாக  படிக்கும் மாணவர்களுக்கு வழங்க கேட்டுக்கொண்டேன்...



அதே போல  பள்ளி வளாகத்தில் துய்மையாகவும்... நேர்மையாகவும் இருக்கும் மாணவ மாணவிகளுக்கு அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக பரிசுகளை வழங்கவும் கேட்டுக்கொண்டேன்.
அதே போல  பத்து செட் துணிகளையும் தனியாக வைத்து இருந்ததேன், நன்றாக படிக்கும் . அப்பா இல்லாத பெண் பிள்ளைகளக்கு வழங்க  கேட்டுக்கொண்டேன்..... அப்பாவோ அல்லது அம்மாவோ இல்லாத பிள்ளைகளுக்கே அதன் வலி தெரியும் புரியும்.... அது  எழு கழுதை வயசானாலும் சரி....


 தனியாக லிஸ்ட் எடுத்து வழங்கி அதனை வழங்கியதோடு யார் யாருக்கு வழங்கினோம் என்பதை லிஸ்ட் எடுத்து அனுப்பி வைத்தார் ஹெட் மாஸ்டர் விஜய் சார்... அந்த அளவுக்கு நேர்மை...

முதல் முறை அவரை  பார்க்க பள்ளிக்கு சென்ற போது மூன்று நாட்கள் பள்ளி விடுமுறை...  லட்சக்கனக்கான  மாணவர்களுக்கு வழங்க வேண்டிய லேப்டாப் போன்ற பொருட்கள் இருக்க... அதனை  எப்படி எல்லாம் பாதுகாக்க வேண்டும் என்று  இன்ஸ்ட்ரக்ஷ்ன் கொடுத்ததை என்னால் மறக்கவே முடியாது...

((இது முதல் பர்சேஸ் மட்டுமே))

நெடுநாள்  பழகிய நண்பரை போல  என்னோடு பழகினார்.. சில மாதங்களுக்கு முன் அவருடைய மகள் திருமணம் என்னை குடும்பத்தோடு அழைத்து பத்திரிக்கை  வைத்தார்... ஆனால் என்னால் போக முடியவில்லை.. என் பதிவுகளை தொடர்ந்து வாசித்து வருகின்றார்...
 இரண்டு மாதங்களுக்கு முன்  ஆசிரியர் விஜய் பணி ஓய்வு பெற்று விட்டார்...

மைதிலிக்கு  உதவி என்று    எழுதியதும்... அவர் வாங்கிய முதல் மாத பெண்ஷனில் இருந்து 5000 ஆயிரம் அனுப்பி  வைத்து இருக்கின்றார்... எவ்வளவு பெரிய மனது வேண்டும்...  மாட்டை மேய்த்தோமா? கோலை  போட்டோமா என்று இல்லாமல் தன்  பள்ளி மாணவர்களில்  நன்றாக படிக்கும்  மாணவர்களுக்கு  உதவி கேட்டு அதனை பெற்றுக்கொடுத்தைதையும்... தற்போது வேறு ஒரு கல்லூரி மாணவிக்கு  உதவி என்றதும் தன் முதல் மாத பெண்ஷனில் இருந்து பணம் 5000 அனுப்பியதும் போற்றுதலுக்குறியது..

 எனக்கு தெரிந்து பள்ளி மாணவ மாணவிகளை தங்கள் குழந்தை போல பாவிப்பது  குறைந்து வரும்  இக்காலத்தில் விஜய் சார் போன்ற ஆசிரியர்கள் சமுகத்துக்கு முன் உதாரணம்...


((தலைமை ஆசிரியர் ஆசிரியர் விஜய்.)) 


அவர் மட்டும்  என் பதிவை   படித்து உதவி கேட்டு எழுதாமல் இருந்து இருந்தால்  நன்கு  படிக்கும் ஒரு பெண்... ஒரே உடுப்பை துவைத்து  காய போட்டு  திரும்ப அணிந்து... படிப்பை விட துணி துவைக்க வேண்டும்... காலைக்குள்  அதன் ஈரம்  காய வேண்டும் என்று நினைத்துக்கொண்டு இருந்தால் படிப்பில் கவனம் எப்படி பதியும்.???
முதலில் அவர்   எழுதிய கடித்தத்துக்கு உதவி எப்படி செய்ய முடியும்..?  என்றுதான் நினைத்தேன்... 

மைதிலிக்கு உதவி வேண்டி  ஏழுதிய பதிவுக்கு,  சில தினங்களுக்கு முன்   அவர் எனக்கு அனுப்பிய கடிதம் கீழே..

ஜாக்கி சார் எப்படி இருக்கீங்க,

நான் இவ்வருடம் 31.05.14ல் பணிநிறைவு பெற்றுவிட்டேன்.

செப் 5 ஐந்தினை என்னால் எப்போதும் மறக்கமுடியாது. ஆசிரியர் தினவிழா மட்டுமா?.கொட்டும் மழையில் குடும்ப சகிதமாய் காமராஜரை போல ஏழைமாணவர்களுக்கு வழ்ங்கியதை நினைவு கூறும்நாள் அல்லவா? சகோதரி, யாழினி எப்படியுள்ளார்கள்?

தாங்கள் வலைத்தளத்தில் மைதிலி உதவிக்கு எழுதியுள்ள்தும், மதிப்பெண்கள் பெற்றதையும் வெளியிட்டுள்ளீர். மைதிலிக்கு வாழ்த்துக்கள்.

கடைசியாண்டு எந்த அரியரும் வைக்க்கூடாது என்பதை தெரிவிக்கவும். ஆசிரியர் என்பதால் தான் இதை சொல்கிறேன். வளாகத்தேர்வில் கலந்து கொள்ளச் சொல்லவும்.(Campus Interview), என்னால் முடிந்ததை தாங்கள் வங்கிகண்க்கில் ரூ.5000.00 இன்று எச்.டி.எப்.சி யில் அனுப்பியுள்ளேன். இது என் முதல்மாத பென்ஷன் வாங்கி , ப்டிப்புக்கான் கொடுப்ப்தில் பெருமிதம் அடைகிறேன். எல்லா புகமும் இறைவனுக்கே.(ரமலான் மாதம்)

ப்ரியாநண்பன்
விஜய் 24.7.14.



சார்... ரொம்ப    நன்றி விஜய்  சார்..
காமராஜர் ரேஞ்சிக்கு எல்லாம் நான் ஆள் கிடையாது...நானும்  சரி நீங்களும் சரி...ஆணி அடிக்க பயண்படும் சுத்தியல்  போலத்தான்... ஆணி அடித்த உடன் சுத்தியல் ஓரமாக வைக்கப்படும் அவ்வளவுதான்..

ஆனால்  எல்லாவற்றையும் விட சந்தோஷம்.,...  விழா நடந்த அன்று மழைதான் குறுக்கிட்டதே தவிர எல்லோருமே மகிழ்ச்சியின் உச்சத்தி  இருந்தோம்....  விழா நடந்த அன்று  சந்தியா  என்ற ஏழாம் வகுப்பு   மாணவிக்கு எந்த விதமான சந்தோஷத்தை கொடுத்தது என்பதும், அதை  அவளுக்கு தெரிந்த  ஓவிய கலை மூலம் வெளிப்படுத்திய பாங்கு  பார்த்து  அசந்து போனேன்...



((நன்றி சந்தியா)) 


விழா நடக்கும் போதே அந்த பிள்ளை வரைந்து தனது  தலைமை ஆசிரியரிடம் கொடுத்து  ஆசிரியர் தின வாழ்த்து  சொன்னது  உண்மையில் என்னை  நெகிழ வைத்தது...

 நன்றாக  படிக்கும்  மாணவர்கள்.. முக்கியமாய   தாய் தந்தையரை இழந்த பிள்ளைகளுக்கு  பரிசு பொருட்கள்  வழங்கப்பட்டன. அதன் லிஸ்ட்.



Prizes are given to the following  students  list during 2013-14 on 5th sep 2013 Teacher’s Day

S.NO
NAME
CLASS
NO FATHER
NO MOTHER
1
M.SAKTHIVEL
6
YES
*
2
K.DINESH
6
YES
*
3
R.DHOBIK
6
YES
*
4
R.SATHISH KUMAR
6
YES
YES
5
M.SHOBANA
7
YES
*
6
V.SANTHI DEVI
7
YES
*
7
K.SAKTHI VEL
7
YES
YES
8
R.UMA MAHESWARI
7
YES
YES
9
R.SHOBA
8
YES
*
10
E.MEENA
8
YES
*
11
S.DEVI
8
*
YES
12
S.VIJAY
8
YES
*
13
B.NATHEEM AHMED
8
*
YES
14
M.NATHIYA
8
YES
*
15
M.SUBASHINI
8
YES
*
16
R.DILIP
8
*
YES
17
M.AJITH
8
YES
*
18
SARAN.K
8
YES
*
19
VIKRAM DARMA
8
YES
*
20
KARTHIKEYAN
8
YES
*
21
KAMESH
8
YES
YES
22
V.VIGNESH
11
*
YES
23
R.JEEVANANDAM
11


24
MAHALAKSHMI
11
YES
*


 பள்ளி வளாகத்தில்  தூய்மை மற்றும் சுகாதாரத்தில்  சிறந்து விளங்கிய மாணவ மாணவிகளுக்கு  பரிசுகள் கொடுக்கப்பட்ட லிஸ்ட்...
SCHOOL   CLEANING  SANITATION   INTERESTED STUDENTS LIST
1
M.SANTHIYA
10 B
2
S.KEERTHANA
6
3
E.RAMESH
6
4
M.MADESH
6
5
J.DILIP
6
6
R.GANESH
6
7
P.PARANTHAMAN
6
8
M.VIGNESH
6
9
E.JEEVA
6
10
S.VIDHYA
10C
11
T.VISHVA KUMAR
7


SPECIAL   ATTENTION  STUDENT
V.SANTHIYA 7TH  FOR THANKS GIVING LETTER TO TEACHER’S DAY
அப்பா  இல்லாத பெண் பிள்ளைகளுக்கு உடைகள் வழங்கிய லிஸ்ட்.
THE FOLLOWING FATHERLESS GIRLS LIST,(GIVEN DRESSES)
1
R.SHOBANA
8A
2
R.ANANTHI
12A
3
E.MEENA
7
4
V.SANTHI DEVI
7
5
M.SUBASHINI
8
6
M.NATHIYA
8
7
SANGEETHA
10










====================
2012  மற்றும் 2013 ஆண்டுக்கான  வரவு செலவு கணக்குகள் லிஸ்ட்...

  



Education Funds for 2013

Amount Received
Opening balance from 2012

                   3,500.00
Senthil Kumar Dhoa

                 10,000.00
Victor Paul Raj

                   5,000.00
Thilak Balakrishnan

                   5,000.00
Amarnath Ponuswamy

                   2,500.00
Santhana krishnan

                   5,000.00
Pothirajan Subramaniyan

                   3,000.00
Magesh Kumar Pannerselvam

                 10,000.00
Gurunathan Sundaresan

                   3,500.00
Geetha Nungambakkam

                 20,000.00
Rajesh

                   5,000.00
Kurumbazhagan

                   1,000.00


                 73,500.00
Amount Spent:
Uniform dresses for Kids (4 members)
   11,785.00
10 sets of Casual dresses (5 member including Mythili)(chudidhar sets and pant shirt sets)
   28,525.00
stationaries(writing pads, books, long size note books, short size note books,browncovers, Geomentry boxes,file,Oxford dictionary,Thirukural,Tamil - English Dictionaries,sketch pen sets, pencil sets,pen sets, tiffin boxes, water bottles, Pencil boxes, crayons, colour pencils
   17,300.00
Stiching charges
     5,680.00
Transportation and food
     4,080.00
Basic model micromax mobile to Mythily
     1,900.00

   69,270.00
Balance as on 2013

                   4,230.00


2014 ஆம் ஆண்டுக்கான மைதிலிக்கான உதவி தொகை கிடைத்து விட்டது... ஒரு நாள் லீவ் போட்டு விட்டு பணமும் புத்தக செலவுகளுக்கான தொகையும் அளித்து விட்டு வந்து விட்டேன்...



((மைதிலியின் கல்லூரியில் பணம் கட்ட  காத்து இருந்த போது..))



((டோனேஷ்ன் அல்லது அரசு அறிவித்த  தேர்வுத் தொகைக்கான ரசீது))

அதே போல கடந்த வருடம் மைதிலியை தொடர்பு கொள்ள முடியவில்லை என்ன என்று விசாரித்த போது   அவள்  வைத்து இருந்த 1100 மொபைல்  செயல் இழந்து விட்டதாக சொன்னார்... அதனால்  பேசிக் மாடல் மொபைல் வாங்கி கொடுத்தோம்....

2014 ஆம் ஆண்டில் தற்போது அழிஞ்சிக்குப்பம் மாணவன், ஜீவானந்தம் மற்றும் மகாலட்ட்சுமி   தற்போது பிளஸ்டூ   படித்து வருகின்றார்கள்... இந்த வருடமும் அவர்களுக்கும்,  .


தாய் தந்தையரை இழந்த அந்த   ஏழாம் வகுப்பில்   அக்கா தம்பிகள்  இருவருக்கும்   உதவி தொகையில் இருந்து  உதவி செய்ய எண்ணி  இருக்கின்றேன்... அதே போல காசி மேட்டில் தந்தையை இழந்து  ஆர்ட் அண்டு சயின்ஸ் பள்ளியில் படிக்கும்  கல்லூரி பெண்ணுக்கு உதவி தேவை என்று நண்பர் விரிவாய்  மெயில் அனுப்பி இருந்தார்.... நேரில் சென்று பார்த்த பின் உதவிகள் செய்வது குறித்து யோசிப்போம்...

அதே போல ராகவி  என்ற கேன்சர் பாதிப்பில்  இருக்கும் ஈரோடு  மாணவி குறித்து எழுதி இருந்தேன்...65  ஆயிரம் வரை அவர்களுக்கு உதவிகள் கிடைத்து... தற்போது கீமோ செய்து அந்த  பெண் நலமாக இருப்பதாகவும் அவர்  அப்பா என்னிடம் போனில்  தெரிவித்தார்....

பென்னி குக் பற்றி  அவணப்பட வேலைகள் ஆரம்பித்து கால் வாசி வளர்ந்து கிணற்றில் போட்ட கல்லாக கிடக்கின்றது...  நிறைய பைல்கள் சேமித்து வைத்த ஹார்ட் டிஸ்க் பெயிலியர் ஆகி விட்டது... திரும்ப முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்,... நிறைய மெனக்கெட் நேரம் தற்போது எனக்கு இல்லை... ஆனால் கண்டிப்பாக என்னால் முடிந்த விஷயத்தை செய்யும் நம்பிக்கை இருக்கின்றது...

திருச்சி வாசகர்  நல்ல தம்பி அம்மாவை மருத்துவமணையில்  சேர்த்து இருந்த போது எதிர் பெட்டில் ஏழாம் வகுப்பு   படிக்கும் மாணவன் வீட்டில் சோதனை செய்து பார்த்த போது  தீ விபத்தில் சிக்கி தீக்காயத்துடன் போராடுவதாக  நண்பர் தெரிவித்தார்...

 பிளாக்கில் அதை பற்றி எழுதினேன் அந்த பையனின்  அப்பாவின் வங்கி என்னை கொடுத்து இருந்தேன்....35 ஆயிரம் வரை அந்த பையனுக்கு கிடைத்து இருந்தது... அந்த பையனின் பெற்றோர் எனக்கு நன்றி  தெரிவித்து போன் செய்தனர்... அந்த பையனும் எனக்கு போன் செய்து தான் நலமாக  இருப்பதாக போனில் தெரிவித்தான்... எனது நண்பர் அயனாவரம் அனந் கூட அந்த பையனின் சிகிச்சைக்கு  தன் பிறந்த நாளின் போது  பத்தாயிரம் அனுப்பி இருந்தார்... ஆனால் சில  வாரங்களுக்கு முன் சிகிச்சை பலன் அளிக்காமல் அந்த மாணவன் இறந்து விட்டான் என்பது  வேதனையான செய்தி...  சவுதியில் இருந்து சென்னை வந்து இருக்கும் நண்பர்  ஆனந்துக்கு கூட இந்த செய்தியை நான் இன்னும் சொல்ல வில்லை.




வங்கி கணக்கு எனது  சொந்தக்கணக்கு என்பதால்    நிறைய  பண பரிவர்ததனைகள்   எனக்குன்டு...தயவு செய்து இனிமேல் பணம் அனுப்பும் நண்பர்கள்..

ரெபரன்சில் கல்வி  உதவி தொகை என்று குறிப்பிட்டு அனுப்புமாறும்..  இதற்கு முன் அப்படி அனுப்பி  இருந்தால் என்னிடம் மெயிலில் ரெபரன்ஸ் என்னோடு என்னிடம்  மெயில்  அனுப்பி உறுதி செய்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்..


அதே போல பணம் அனுப்பி விட்டு தன் கடமை முடிந்து விட்டதாக தகவு செய்து நினைக்க வேண்டாம்.. ஒரு மெயில் அனுப்பி தங்கள்  அனுப்பிய பணம் எனக்கு கிடைத்து விட்டதா என்று ஒரு வார்த்தை என்னிடம் விசாரித்துக்கொள்ளவும்...

நண்பர் அரவிந்திடம் இது குறித்து பேசும் போது  ஜாக்கி ஏன் நீங்க டிரஸ்ட் ஆரம்பிக்க கூடாது என்றார்...  அதில் எனக்கு விருப்பம் இல்லை... வருடத்தில்  தனி மனிதானக  ஒரு வாரம் உழைத்து  உதவிகளை  பெற்று உரியவர்களிடம் சேர்பித்தால் போதும் என்று  நினைப்பதாக சொல்லி விட்டேன்... அது மட்டுமல்ல...டிரஸ்ட்   என்பது  நிறைய வேலைகள்  மற்றும் மனித உழைப்புகளை கொண்டது.. எனக்கு நேரம் இல்லை...

அதே போல  நான் சமுக சேவை செய்வதையே வாழ்நாள் கடமையாக கொண்டு இருக்க வில்லை...  என் வாழ்க்கை பயணித்தில் அது ஒரு பகுதியே..

என் மீது நம்பிக்கை வைத்து பணம் அனுப்பிய நண்பர்களுக்கும், அந்த பணத்தை மைதிலி  போன்றே அரசு பள்ளியில்  படிக்கும்  ஏழை மாணவர்களுக்கு வழங்க  போகின்றேன் என்று மெயில் அனுப்பியபோதும் பணம் அனுப்பிய நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நண்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்...

 உதவியை தயங்காமல் கேட்ட தலைமை ஆசிரியர் விஜய் அவர்களுக்கும், புதிய காரை கொடுத்து உதவிய...   வாசக நண்பர் குறும்பழகனுக்கும்.... ((இப்போது மட்டுமல்ல... எப்போது எனக்கு கார் தேவை என்றாலும்,   காரை வந்து எடுத்துக்கிட்டு போங்க ஜாக்கி என்று வற்புறுத்துபவர்))
 நன்றிகள்...

இரண்டரை மாத குழந்தை யாழினியோடு, மாணவ மாணவிகளுக்கு உடை மற்றும்  எழுது பொருட்கள் வாங்க என்னோடு  அலைந்து திரிந்து அந்த   பொருட்களை கடைசியாக சேர்ப்பித்தது வரை என்னோடு துணை நின்ற எனது மனைவிக்கும், யாழினிக்கும் என்  நன்றிகள்...

 யாராவது  மதியம்  பிரியாணி சாப்பிட்டு விட்டு.... குச்சியால்  பல் குத்திக்கொண்டு ,... இத்தனை பேர் இத்தனை ஆயிரம் போட்டு இருக்கின்றார்கள்...  நீங்கள் என்ன செய்தீர்கள் ஜாக்கிசார்...? என்று யாராவது கேள்வி எழுப்பலாம்...

மைதிலி மற்றும் அழிஞ்சிக்குப்பம் மாணவர்களுக்கு உதவிகள் செய்ய ஆறு நாட்கள்  நான் லீவ் போட்டு விட்டு அலைந்து இருக்கின்றேன்...  ஒரு  நாளைக்கு எனக்கு  ஆயிரத்து 500 ரூபாய்  சம்பளம்.... லீவ்   நாளில் சென்று இருக்கலாம் என்று ஏதாவது ஒரு பிரகஸ்பதி கேட்கும்... கல்லூரி மற்றும் பள்ளிகள்.. சினிமா தியேட்டர் அல்ல... விடுமுறை தினங்களில் திறந்து இருக்க...மழைகாலங்களில் கால் டாக்சி ஆட்டோவுக்கு சண்டை போட்டு   பேரம் பேசி  அலைந்து பொருட்களை சேர்த்த தினங்களை மறக்க இயலாது...


முன்று  முறை பர்சேஸ் செய்து.. அதனை  ஒன்றாக சேர்த்து, அதனை  ஆம்பூர் அருகே இருக்கும் அழிஞ்சிக்குப்பம் கிராமத்தில்  உரிய பயணாளிகளிடம்  சேர்பித்த போது, ஒரு  நிறைவு இருக்கின்றது பாருங்கள் ...   அதுதான் பெரிய விஷயம்..


உதவிய  அத்தனை  பேருக்கும் எனக்கு தோள் கொடுத்த உண்மையான  தோழர்கள்  அனைவருக்கும்  என்  சிரம் தாழ்ந்த நன்றிகள்... முக்கியமாக வெளிநாட்டில்  இரவு பகலாக வேலை பார்த்து  ஒரு அவசரம் என்றால் வரிந்துக்கட்டிகொண்டு  உதவும் அந்த மனம் இருக்கிறதே...

அன்பே சிவம்....

 மீண்டும் நெடுஞ்சான் கிடை  நன்றிகள்.

இவ்வளவு  விளக்கம் கொடுத்தும் ஜாக்கி சார் நீங்க என்ன  செஞ்சி இருக்கலாம்  தெரியுமா? என்று ஐடியா மணியாக யாராவது மாறினால்...  பதிவின் மேலே உள்ள  குறளை மீண்டும் ஒரு முறை வாசிக்கவும்...

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.


குறிப்பு...

இந்த பதிவை படித்து விட்டு தனி தனியாக மெயில் அனுப்பி கல்வி உதவி தொகை எந்த அக்கவுண்ட் எண்ணுக்கு அனுப்ப பட வேண்டும் என்று தொடர் ந்து நண்பர்கள் மெயில் அனுப்பிய வண்ணம் உள்ளனர்.
கீழ் கண்ட வங்கி எண்ணுக்கு .....

Ac no.06751140048217
Name. V. Dhanasekaran 
IFSC Code:- HDFC0000675, 
Branch. Gopalapuram, chennai
Bank. HDFC

Education என்று குறிப்பிட்டு உதவி தொகை அனுப்பிட வேண்டுகின்றேன்.. அனுப்பியஉடன் மறக்காமல் அதனை ஈமெயிலில் எனக்கு தெரிய படுத்தி கன்பார்ம் செய்துக்கொள்ள வேண்டுகின்றேன்... இந்த தொகை மைதிலிக்கு என்று இல்லை..கஷ்டப்படும் ஏழை மாணவர்களுக்கு இதன் பயண் சென்று சேரும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்.

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.

நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....


EVER YOURS...
 

18 comments:

  1. well done is better than well said "" one more saying ,well done sir

    ReplyDelete
  2. well done is better than well said "one more saying WELL DONE SIR

    ReplyDelete
  3. மிகச்சிறப்பான பணி சார்! பணம் கொடுப்பது பெரிதல்ல! அதை தேவைப்படும் நபருக்கு தேவைப்படும் நேரத்தில் கொண்டு சேர்ப்பதுதான் பெரிது! சொந்த கஷ்டங்கள் வேலைகள் இருக்கையில் இத்தனை உதவிகள் செய்வதே பெரிது! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. நன்றி டியர் பாலாஜி..

    ReplyDelete
  5. நன்றி ஆல்பர்ட் சுரேஷ்குமார். சார்.

    ReplyDelete
  6. நன்றி தளிர் சுரேஷ்....

    ReplyDelete
  7. Congratulations and well done Jackie. Keep the good work going.

    ReplyDelete
  8. Myathali ku Help ketu mail matum anuptu onuma panalanu mansu kastama eruku sir

    ReplyDelete
  9. Your Role model for us and Great and Keep rocking sir

    ReplyDelete
  10. உன் மண்டைகுள்ள இவ்வளவு நல்லெண்ணம் இருக்கு.. கடவுள் ஆசி உனக்கு கண்டிப்பா உண்டு. வாழ்த்துகள்.

    ReplyDelete
  11. உங்களைபோன்றவர்களால் அனைவருக்கும், ஊரில் மழைபொழியும் ஜாக்கி.
    வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  12. இந்த பதிவை படித்து விட்டு தனி தனியாக மெயில் அனுப்பி கல்வி உதவி தொகை எந்த அக்கவுண்ட் எண்ணுக்கு அனுப்ப பட வேண்டும் என்று தொடர் ந்து நண்பர்கள் மெயில் அனுப்பிய வண்ணம் உள்ளனர்.
    கீழ் கண்ட வங்கி எண்ணுக்கு .....

    Ac no.06751140048217
    Name. V. Dhanasekaran
    IFSC Code:- HDFC0000675,
    Branch. Gopalapuram, chennai
    Bank. HDFC

    Education என்று குறிப்பிட்டு உதவி தொகை அனுப்பிட வேண்டுகின்றேன்.. அனுப்பியஉடன் மறக்காமல் அதனை ஈமெயிலில் எனக்கு தெரிய படுத்தி கன்பார்ம் செய்துக்கொள்ள வேண்டுகின்றேன்... இந்த தொகை மைதிலிக்கு என்று இல்லை..கஷ்டப்படும் ஏழை மாணவர்களுக்கு இதன் பயண் சென்று சேரும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்.

    பிரியங்களுடன்
    ஜாக்கிசேகர்.

    ReplyDelete
  13. அன்பு ஜாக்கி சேகர் அவர்களுக்கு,
    நலமா?

    நெடுநாட்கள் ஆகிவிட்டன பின்னூட்டமிட்டு. உங்கள் பணி மிகவும் சிறப்பானது. தொடரவும். ஆண்டவன் அருள் உங்களுக்கு எப்போதும் கிடைக்கட்டும்.

    வாழ்க வளமுடன், என்றும் அன்புடன்

    நன்றி

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner