இந்த நாடளுமன்ற தேர்தல்....2014



நடந்து முடிந்த  நாடளுமன்ற தேர்தல்களிலேயே இந்த நாடாளுமன்ற தேர்தல்  வித்தியாசமான  தேர்தல்.

 கொடுக்கற தெய்வம் கூறையை பிச்சிக்கிட்டு  இந்தியாவுல இருக்கற இரண்டு பேருக்கு கொட்டுச்சி... ஒன்னு அர்விந் கெஜ்ரிவால் மற்றவர் கேப்டன் விஜயகாந்த்... அற்புதமான வாய்ப்பு... அரசியல்  வாழ்க்கை ஆரம்பித்து சில மாதங்களில் டெல்லி முதல்வர் பதவி.....

 இரண்டு தேர்தலை சந்தித்தவருக்கு  தமிழ்நாட்டின் எதிர்கட்சி தலைவர் போஸ்ட்.... அடித்து ஆடி இருக்கலாம்... களப்பணியாற்றி ஆட்சியில் இருப்பவர்களை தூக்கம் வர விடாமல் விழி பிதுங்க வைத்து இருக்கலாம்... திமுக  அதிமுகவுக்கு  மாற்று  கட்சி நான்தான்  என்று மக்கள் மத்தியில் நிலை நிறுத்தி இருக்கலாம்... சட்டசபை ஏலெக்ஷனுக்கு  பிறகு தற்போதுதான் கேப்டன் மக்கழே பிரச்சனைகளை சந்திக்கின்றார்.... டெல்லி முதல்வர் பதவியில்  இருந்து கொடுத்த வாய்ப்பை பயண்படுத்தி  ஒரு முதல்வர் எப்படி இருக்க வேண்டும் என்று நிரூபித்து காட்டி இருக்க வேண்டும்... ஆனால் அதற்குள்  இந்தியாவின்  அடுத்த பிரதமர்  தான் ஆகி விடவேண்டும் என்று அதீத  பேராசை காரணமாக  முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டு  தற்போது எல்லோரிடமும் அறை வாங்கிக்கொண்டு இருக்கின்றார்... ஹெலிகாப்டரில் பறக்க வேண்டிய வித்தை தெரிய வேண்டும் என்றால் தமிழக பக்கம்  வர வேண்டுமாய் கேட்டுக்கொள்கின்றேன்...


 தமிழ்நாட்டில் எப்படி ஜெயலலிதா நாற்பதும் எனதே என்று முதலில்  களமாடினாரோ.... அதே போல மத்தியில் எங்கள் பிரதம  வேட்பாளர் மோடி என்று முதல் முறையாக அறிவித்து களமிறங்கி விடப்பட்டார்...

அமெரிக்கா ஒரு நாட்டின் மீது போர் தொடுக்க வேண்டும் என்றால்...  முதலில் அந்த  நாட்டை பற்றி இல்லாத பொல்லாத செய்திகளை தொடர்ந்து உலக ஊடகங்களில் வெளிவருவது போல பார்த்துக்கொள்ளும்... முக்கியமாக அந்த நாடு கனிமவளம் உள்ள நாடக இருந்தால்தான் அதன் மேல்  அமெரிக்காவுக்கு தனி கரிசனம் வரும். சோ இப்படி 5 வருடங்களுக்கு முன்பாகவே  அந்த நாட்டை பற்றி பெரிய தவறான பரப்புரையை  செய்து மக்கள் மத்தியில்  நெகட்டிவ்   இமேஜ் உருவாக்கி விட்டு போர் தொடுக்கும்... பொதுமக்கள் அமெரிக்க  செய்தது நியாயம் என்று வாய்  மூடி மவுனிப்பார்..  இங்கதான் ராசாயண ஆயுதம் இருந்துச்சின்னு போர் தொடுத்தோம்... இப்ப  இல்லை என்று சொன்னாரலும் மக்கள் எதிர்கேள்வி கேட்க மாட்டார்கள்... காரணம் அமெரிக்கா உலக நாடுகளின் தலைவன்... அவனை எப்படி அவமானப்படுத்துவது? என்ற மனநிலைதான்..

அதே போல மோடி ஒரு சிறந்த   நிர்வாகி என்று கடந்த வருடங்களாகவே முன்னிறுத்தப்பட்டு குஜராத்தில்  பாலாறும் தேனாறும் ஓடுவாதாக அறிவித்து வருகின்றனர்.. இந்த பரப்புரை  இந்த தேர்தலில் ஒரளவுக்கு பயண் கொடுக்கும் என்று நம்பலாம்.... இரண்டாவது காங்கிரஸ்மேல்  வெறுப்பு இருந்தாலும் இந்த  தேர்தலோடு பொட்டி கட்டிக்கொள்ளும் என்று யாரும் சொல்லிவிட முடியாது. அதற்கென ஓட்டுவங்கியை யாரும் உடைத்து விட முடியாது.,



பாமக  தனித்து நின்று எங்கள் பலத்தை  நிரூபிப்போம் என்று சூளுரைத்து பின்பு  சில பல   காய் நகர்த்தலுக்கு பிறகு பிஜேபி கூட்டனியில் அங்கம் வகித்தது... அன்புமணியும் விஜயகாந்தும் நேருக்கு   நேர் சந்தித்தும்.. பேசிக்கொள்ளாமல் முகத்தை திருப்பிக்கொண்டு செல்ல   கேப்டன் விக்கித்து நின்ற சம்பவங்களை நேரில் பார்த்த  பத்திரிக்கை நண்பர்கள் வருத்தப்பட்டு பேசினார்கள்.

15 வருடங்கள் ஒரே கூட்டனி திருமாவளவனின்  திமுக கூட்டனியை ரொம்பவே சிலாகிக்கின்றனர்... அம்மா எப்படி பட்டவர் என்று தெரிந்து ஒன்றோ  ரென்டோ  சீட்டுகள் வாங்கி  மரியாதையுடன் வலம் வருகின்றார்... அம்மாவுடன் கூட்டனி என்ற இலக்கில்  இலவு காத்த கிளி லிஸ்ட்டில்  முன்பு வைகோ இருந்தார்.. அடுத்து கம்யூனிஸ்ட்  வந்து விட்டார்கள்.... சீட் கொடுக்காத குமைச்சலை உடனே கொட்டாமல்... ஒரு மாதம் கழித்து எங்களுக்கும்  கோபம் வரும் என்று   தா பாண்டியன்  வாய் திறந்து இருக்கின்றார்.



40ம் எனதே என்று முதல் முறையாக பரப்புரைக்கு முதல்வர் ஹெலிகாப்டர் ஏறினார். கூட்டனி வேண்டாம் என்றார்....தனித்து நின்றே.... வெற்றிக்கொடி நாட்டுவேன் என்று சூளுரைத்தார்.  முதல் அடி அடித்தவனுக்கு  வெற்றி என்று ஊடகங்கள்  மாய்ந்து மாய்ந்து எழுதின...  சொத்து குவிப்பு  வழக்கு இறுதி கட்டத்தை எட்டும்  இந்த வேளையில் எங்கே ஆஜராக சொல்லி விடுவார்களோ என்று பயந்து முதன்  முறையாக தேர்தல் பிரச்சார பயம்   மேற்கொண்டார்.... என்று  ஒரு சாரர்  சொன்னார்கள்... நிறைய இடங்களில்  அதிமுக அமைச்சர்களை வாக்கு சேகரிக்க பொதுமக்கள்  ஊர் உள்ளே விடவேயில்லை... சென்னையில் வேலை செய்யும் ஊடககாரர்கள்.. மின்சார தட்டுப்பாடு இல்லாமல் ஏசியில் உட்கார்ந்துக்கொண்டு  முதலில் 40 என்றார்கள் இப்போது 15 என்கின்றார்கள்.

இரண்டு மணி நேரத்துக்கு மின்சாரம் இல்லை...கலைஞர் எதிர்கட்சி அந்தஸ்த்தை கூட எட்ட முடியவில்லை..... லாஸ்ட் மினிட்டில்  அழகிரி லந்து செய்ய...  சஸ்பெண்ட் செய்தார்... ரவுடி அழகிரி என்று சித்தரித்த ஊடகங்கள் தியாகி அழகிரி என்று எழுதி தள்ளின.... கடைசி வரை திமுகாவில் இருந்தால்தான் மதிப்பு என்று தெரிந்து   அவர் அமைதி காக்கின்றார் என்று நினைக்கின்றேன்.. கலைஞர் 90 வயதிலும் பிரச்சாரத்தில் அசத்துக்கின்றார்...  இந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் அது முக ஸ்டாலின் பிரச்சார உத்திக்கு கிடைத்த  வெற்றி என்று என்னலாம்.. திமுக வாஷ் அவுட் என்றார்கள்.... புதிய தலைமுறையை விட கலைஞர் டிவி செய்தி சேனலில் முதலிடத்தை பிடித்து இருப்பதை டிஆர்பி ரேட்டிங்கில் காணலாம்....


கரண்ட் இல்லை என்ற வருத்தம் தென் மாவட்ட மக்களிடம் நிரப்பி வழிகின்றது... கலைஞர் குடும்பம் கொள்ளை அடித்தது என்று திரும்ப திரும்ப சொன்னாலும் கரண்ட் கொடுத்து விட்டு சொல்லுங்கள் என்கின்றார்கள் மக்கள்....

 கடந்த சனிக்கிழமை  அப்பா வை பார்க்க  ஊருக்கு போனேன்...  என் பால்ய கால வீடு இன்னும் ஆஸ்பெட்டாஸ் ஷீட் போட்ட வீடுதான்.. பக்கத்தில்  இருந்த மாமரமும் பக்கத்து வீட்டு காரர்களின் புண்ணியத்தில் பட்டு போய் விட... அப்பா வெப்பத்தில்  தகித்துக்கொண்டு இருந்தார்..பராலிஸ் அட்டாக்கில் அவரால் அதிகம் நடக்க முடியாது....

 அவர் கட்டி இருந்த கைலி தொப்பலாக நனைந்து இருந்தது... அப்பா கைலியில ஒன்னுக்கு போயிட்டியான்னு கேட்டேன்..?? கரண்ட் இல்லை...வெயிலை சமாளிக்க தண்ணியை தொப்பலா நினைச்சி  கட்டி இருக்கேன்னு சொன்னார்.... கலங்கி போயிட்டேன்.. ஒரு  ஏர் கூலர் இருக்கு...  எதுவா இருந்தாலும் கரன்ட் வேணும் இல்லை.

இங்க ஏசியில உட்கார்ந்துக்கிட்டு எழுதறவனுக்கு மக்கள் படும் துயரங்கள்  தெரிய நியாயமில்லை... சென்னையில் மட்டும் வடமாவட்டம் போல தென் மாவட்டம் போல 12 மணி நேரம் கரண்ட் கட் பண்ணா அவ்வளவுதான் வெகுண்டு எழுந்து விடுவார்கள்.....பாரின்ல இருக்கறவனுக்கு  சுத்தம். 

யப்பா  யாரு  வேணா வாங்க... கரண்ட் மட்டும் கொடுங்க.... 

இரண்டு மணி நேரத்துக்கு எதிர்கட்சி அந்தஸ்தையே இழக்க வச்சவங்க...16 மணி நேரம் அதுவும்  வெக்கயா இருக்கற நாட்களில் கூட என்றால் ... பொதுமக்கள் அவ்வளவு  முட்டாளாவ இருப்பாங்க?   என்ற அடிப்படை கேள்விதான்  என்னை ஆட்டிப்படைக்கின்றது... ஊடகங்கள் வெளியிடும் கருத்துக்கணிப்புகளை பார்க்கையில்  அப்படித்தான் தோன்றகின்றது...  பார்ப்போம்...??

புதிய வாக்களர் நிறைய பேர் களத்தில் குதிக்கின்றார்கள் என்ற பேச்சு இருக்கின்றது... ஆனால் லைனில் நின்று சினிமா டிக்கெட் எடுக்காமல் டிவி பார்த்துக்கொண்டு  ஆன்லைனில் சினிமா டிக்கெட் புக் பண்ணும் இன்றைய இளைய தலைமுறை பெரிய அளவில் ஜனநாயக  கடமை ஆற்றாது என்பது என்  எண்ணம்... அப்படி  லைனில் நின்று வாக்களித்து ஜனநாயக கடமை ஆற்றினால் ரொம்ப  சந்தோஷமே....

வாக்களியுங்கள்  அது நமது கடமை....

அரசியல்வாதிகள் அள்ளி தெளித்தது போல  தேனாறும் பாலறும் ஓடினால் சந்தோஷமே....


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.


நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS..
.

12 comments:

  1. enna boss, foreignla irukiravan mela avvalavu kaduppu. unga kalaignar appuram anatha ammavaiyum konjam middle east pakkam vanthu irukka sollunga. Intha palai vanathileyum eppadi makkalukku thevaiyana vasathigal seithu kodukirargal ena theriyum. Intha mathiri current cut seivathan adipadiye arasanga kattupattil ulla minsara variyathin methana nambikkaiyai izhakkal seivathuthan. appuram private company allungali ulle puguthi ithileyum attaiyai pdouvathu than ivarkalin thittam. Kalvi, sugathara sevai, maruthuvam enru arasanga salugaikali kattupaduthi athile thaniyarai nuzhaithu sugam kana virumbukirargal. athanudaiya vilaive ippothu naam santhikkum minsara thattupadu. Muraiyana thittamidal illai enru potham pothuvaga kuttram satta mudiyathu. Ivaiyellam arinthe nadakiirathu. intha minsara thattupadukkana thirvaga kandipaga oru reliance power mattrum silla pala company varum enpathu ellalavum santhegam illai. Ungallukku kandipaga 24 mani neram minsaram appothu kidaikkum. anal ungalin purse eppothum kaliyagathan irrukkum. ithu oru navina pick pocket

    ReplyDelete
  2. இதுக்கு நேரடியாவே திமுகவுக்கு ஓட்டு போடுங்க என்று சொல்லியிருக்கலாம்.. ;-)

    ReplyDelete
  3. Jackie i have been there in GUJARAT, leave all all claimed about Gujarat,
    Water and Current assured just dream about your own village before and after change of cyclone.

    See the change 1. BHUJ and KUTCH before and after earthquake
    2. Surat before and after plague
    3. Sabarmati river before and after Modi
    a vast influential activities with properly managed

    ReplyDelete
  4. பவர் கட் தான் அம்மா வை ஹெலிக்கொப்தொரிலிருந்து கீழே இறக்க போவுது

    ReplyDelete
  5. well written jackie. i am surprised to see most of the media (almost all media) and even bloggers still dont criticize jaya like the way they did during dmk rule. some even come up with a stupid argument that this is a parliamentary election and that local issues (like power cut) should not be discussed and only national issues (like foreign policy) should be discussed !!. i dont know how jaya manages to keep the entire media in her control.

    ReplyDelete
  6. //
    இரண்டு மணி நேரத்துக்கு எதிர்கட்சி அந்தஸ்தையே இழக்க வச்சவங்க.
    //
    Anne Chennai la than rendu mani neram
    Matha pakalam oru mani nerathuku oru time power cut

    ReplyDelete
  7. 2 மணிநேரம் பவர் கட் உள்ள சென்னை வென்னைகள் ஒட்டு சதம் வெறும் 59 தான்.16 மணிநேரம் பவர் கட் உள்ள தருமபுரி ஒட்டு சதம 80.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner