நித்யா கதவை திற... ரஞ்சிதா வரட்டும்....

நேற்று முழுவதும் சீரியல் கேரக்டர்களை பற்றி அதிகம் பேசும் வீட்டு பெண்கள்.. நித்யாவின் படுக்கை அறை காட்சிகள் பற்றி அதிகம் பேசினார்கள்... பதிவுலகில் கூட நேற்று காரசார விவாதம் நித்யாவை பற்றியதே...

நேற்று இரவுதான் சன் நியூஸ் பார்த்தேன்... நித்யா படுக்கையில் இருப்பதும்... ஆர் எழுத்து நடிகை என்று சன் புடகமாக பேசியது... ஒரு நடிகை ஒரு சாமியாரின் மீது மெல்ல கொஞ்சம் கொஞ்சம் ஏறி படுத்து கிடப்பதையும்...விண்ணைதாண்டி வருவாயா போல கிஸ் அடித்த காட்சிகளை பார்த்த போது அதிர்ச்சியில் உறைந்து போனேன்..

ஆனால் வியாழக்கிழமை வெளிவரும் நக்கீரன் நித்யா சாமீயாருக்காக ஒரு நாள் முன்பே வந்த அந்த ஆர் எழுத்து நடிகை ரஞ்சிதா என்று படத்தை போட்டு விட்டது... மூன்று பக்கத்துக்கு அதே படங்கள்தான்...
நித்யானந்தர் ஜட்டியுடன் கால் தூக்கிகொண்டு ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருக்கும் அந்த படங்களை பாத்து விட்டு புத்தகம் வாங்கிய இருவர்... இது ஒரு வகை ஆசிர்வாதம் போல என்று சொல்லி விட்டு போனார்கள்...


நக்கீரன் பத்திரிக்கையின் வால் போஸ்டர் பார்த்து விட்டு வினாடி வினாவுக்கு ஆன்சர் தெரிந்தது போல் உடனே தன் சொந்தங்களுக்கு உடனே போன் செய்து சொன்னவர்கள் ஏராளம்.. பத்திரிக்கை வாங்காமல் அந்த கம்பியில் மாட்டி வைத்து இருக்கும் பத்திரிக்கையை துணியை தூக்கி பார்பது போல் பலர் பார்த்து விட்டு பரவசம் அடைந்தனர்.....

டீக்கடையில் டீ குடித்த சிலர்...“ மச்சான் இதுக்கெல்லாம் மச்சம் வேண்டும்டா???”என்ற அங்கலாய்து கொண்டார்கள்... எதாவது ஒரு தேவகியோ,கல்பனாவோ,சரதாவாக இருந்து இருந்தால் இந்த அங்கலாய்ப்பு வந்து இருக்காது.... நடிகை ரஞ்சிதா என்பதால் பலர் விட்டபெருமூச்சில் பொறாமை சூடு அதிகமாக இருந்தது...


பத்திரிக்கையில் பல படங்கள் போட்டு இருப்பதை கொஞ்சம் குறைத்து இருக்கலாம்

இந்த வருட புத்தககண்காட்சியில் கூட சாமியாருக்கு தெரிய பேனர் எல்லாவற்றையும் வைத்து அசத்தினார்கள்...

நித்யாவின் சொற்பொழிவுகளுக்கு என் கடலூர் நண்பன் தீவிர ரசிகன்... சாமியாருடைய புத்தகங்களை அதிகம் வாசித்தவன்... என் அப்பாவிடம் கூட சாமியார் நடத்திய சொற்பொழிவை சிடியாக கொடுத்து கேட்க சொல்லி வற்புறுத்தியவன்...
நேற்று அவனுக்கு போன் செய்த போது தொடர்பு எல்லைக்கு வெளியில் இருப்பதாக கைபேசி சொல்லியது....

வளசரவாக்கத்தில் கூட ஒரு துணிக்கடையில் சாமியாருடைய புத்தகத்தை வைத்து விற்பனை செய்து கொண்டு இருந்தார்கள்.. அதாவது சாமியாருடைய புத்தகங்கள் இருந்தால் அது மதிப்புக்கு உரிய விஷயமாக இருப்பதாக அவர்கள் நினைத்தார்கள்..அவர்கள் எல்லோருக்கும் இப்போது வெளிவந்து இருக்கும் வீடியோ.... இது மரண அடி... அந்த நம்பிக்கைகள் தூள் தூள் ஆகி போனது...

சாதாரண ஒரு கோடிஸ்வரர் இந்த செயலை செய்தாலும் அது பெரிய விஷயமாக எடுத்து கொள்ளமாட்டார்கள்...ஆனால் சாமியார் போர்வையில்இந்த செயல் கொஞ்சம் ஓவர்தான்...

தொடர் குண்டு வெடிப்பு காரணமாக, தொடர் தீவிரவாத கைது காரணமாக... முஸ்லீம்கள் என்றால் ஒரு தீவிரவாத முத்திரை சமுகத்தில் வந்து விழுந்து விட்டது...சென்னையில் அந்த சமுகத்து மக்களுக்கு வீடு கொடுக்க நிரம்ப யோசிக்கின்றார்கள்...அந்த வேதனை ரொம்ப கொடுமையானது....யாரோ சிலர் செய்த தவறுகளுக்கு பல குடும்பங்கள் பாதிக்கபட்டு உள்ளார்கள்... அதே போல் சாமியார்கள் என்றால் அவர்கள் செக்சில் வீக்காகதான் இருப்பார்கள் என்ற மன நிலைக்கு மக்கள் வந்து விட்டார்கள்...

அதே போல் வடஇந்தியாவில் சாமியார் பெயர்.... இச்சாதாயிசாது இவர் பெண்களை வைத்து விபச்சாரம் செய்து வந்தது கண்டுபிடிக்கபட்டு இருக்கின்றது... கைது செய்யபட்டு இருக்கின்றார்...

என்னை பொறுத்தவரை ஒரு மனிதன் எப்படி சாமியாராக இருக்க முடியும் என்ற கேள்வி எனக்கு சிறுவயதில் இருந்தே எழுந்த விஷயம்தான்...

சாய்பாபா பற்றி எனக்கு நிரம்ப கருத்து வேறுபாடுகள்.. ஆனால் அந்த புகழையும் பணத்தையும் கொண்டு 200 க்கு மேற்பட்ட கிராமங்களுக்கு மேல் குடிநீர் வழங்கியவர்... அதனால் சாய்பாபாவை ஒரு மனிதனாக பிடிக்கும்...


தனது சாய்பாபா டிரஸ்ட் மூலம் கிருஷ்ணா நதி நீரை சேதம் இல்லாமல் தமிழகத்துக்கு வர வைத்தவர்... அப்போது இருந்த ஜெ அரசு... அந்த பணத்தை அப்படியே கொடுத்து விடுங்கள் நாங்கள் செய்து கொள்கின்றோம் என்று சொன்ன போது... பணத்தை கொடுக்காமல் அவர் டிரஸ்ட் மூலம் செய்து முடித்தவர்...

பூட்டபர்த்தியில் ஒரு வாரம் தங்க நேர்ந்தது...கோவில் வாசலில் ஒரு ராமர் சீதை அனுமன் சிலை பிரதிஷ்ட்டை நடந்த போது அப்போது அங்கே அந்த சிலைக்கு அருகில் இருந்து வீடியோ எடுத்துக்கொண்டு இருந்தேன்.. எல்லோரும் அவர் பாதம் தொட்டு வணங்கிய போது எனக்கு அந்த எண்ணமே தோன்றவில்லை.... மனிதர்கள் எப்போதும் மனிதன்தான்....

இந்த நித்யானந்த சாமியாராவது ஒரு நடிகையுடன் படுத்தார்... ஆனால் ஒரு சாமியார் கொலை செய்து விட்டு இன்னும் பவனி வந்து கொண்டு இருக்கின்றார்...தமிழகத்தில் ஆன்மீகத்தின் போர்வையில் இன்னும் என்னவெல்லாம் நடக்க போகின்றதோ தெரியவில்லை.....

கல்கி சாமியார் ஐட்டியுடன் ஆடும் லீலைகளை தெலுங்கில் டிவி9 தொலைக்காட்சி அந்தரங்க காட்சிகளை வெளியி்ட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது....இன்னும் அவர்களிடம் நிறைய புட்டேஜ் இருக்கின்றதாம்...
பொதுவாக சாமியார்களுக்காக நேரம் சரியில்லை....
எத்தனை பெரியார் வந்தாலும் இவனுங்களை திருத்த முடியாது...


ஒரு ரகசியம்....

அந்த கோவில் சென்னை பாண்டிக்கு நடுவில் இருக்கின்றது... அந்த கோவிலுக்காக தேசிய நெடுஞ்சாலையே தனது வழக்க பாதையை சற்றே மாற்றிக்கொண்டது.... அம்மன் ஒரு பிரச்சனையே இல்லை...அம்மன் சாந்தமான அம்மன்தான்... ஆனால் அம்மன் பேரில் வளர்ந்த குடும்பம் அவர்கள் நடத்தும் கல்வி கூடங்களில் அடாவடி தலைவிரித்து ஆடுகின்றதாம்... பல தற்கொலைகள் நடந்து இருக்கின்றன... ஒரு வளரும் சமுதாயமே.... நடைபினமாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றதாம்...எது பேசினாலும் உதைதான்....எல்லோருக்குமே அங்கு மரியாதை இல்லாத அர்சசனைதான் அனைவருக்கும் கிடைத்து கொண்டு இருக்கின்றதாம்...துக்ளக் தர்பாரை நேரில் பார்க்க வாய்ப்பு இல்லாதவர்கள்.... கல்வி கூடங்களில் நடக்கும் பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தினை நேரில் பார்த்தால் துக்ளக்கே தேவலாம் என்று இருக்குமாம்.... பூனைக்கு மணி கட்டுவதுயார் என்று மாணவ சமுதாயம் விழி பிதுங்கி இருக்கின்றதாம்...


அன்புடன்
ஜாக்கிசேகர்

(இவ்வளவு தூரம் சுவாரஸ்யமா படிச்சிங்களே.... ஒரு ஒட்டு போட்டா என்ன? கொறைஞ்சா போயிடுவிங்க....)

34 comments:

  1. It becomes a profession now to do things behind the screen and earn money. People should change. They can read their books. But should not worship them as God.

    ReplyDelete
  2. //மனிதர்கள் எப்போதுமே மனிதர்கள்தான்//
    மிகச் சரியான வார்த்தை.
    மக்களின் மாயமான் வேட்டைகள் முடிவுக்கு வரும்போதுதான் இவர்களின் கொட்டம் அடங்கும்.
    என் பதிவையும் காண்க.

    http://masusila.blogspot.com/2010/03/blog-post.html

    ReplyDelete
  3. Compared to other Godmen and related sexual encounters, Nithya's seems to be different. In this case, he is with an actress in his bedroom. If this is the only woman Nithya has a relationship, I don't know what is wrong in it. Yes, he hasn't married that woman, but "living tigether" is becoming common in our society. We also have married godmen like "Melmaruvathur amma". By the way, who recorded this video? In my opinion that is the real crime! -Krishnamoorthy

    ReplyDelete
  4. ரஞ்சிதான்னு நைட்டே கண்டு பிடிச்சிட்டேன் நக்கீரன் பார்க்காமல்:))

    //என்னை பொறுத்தவரை ஒரு மனிதன் எப்படி சாமியாராக இருக்க முடியும் என்ற கேள்வி எனக்கு சிறுவயதில் இருந்தே எழுந்த விஷயம்தான்...//

    இதே கேள்வி எனக்கும் உண்டு.
    இன்னொரு கேள்வியும் அதென்ன சினிமா நடிகைகள் சாமியாரையே தேடுகிறார்கள் சொர்ன்மால்யா ரஞ்சிதா போல??

    ReplyDelete
  5. /எல்லோரும் அவர் பாதம் தொட்டு வணங்கிய போது எனக்கு அந்த எண்ணமே தோன்றவில்லை.... மனிதர்கள் எப்போதும் மனிதன்தான்....//

    எல்லோரும் இதை உணர்ந்து கொண்டால் பிரச்சினையே இல்லையே.
    பெரிய பெரிய ஆளுங்கதான் அடி வருடிகள்.

    ReplyDelete
  6. என் மனசாட்சியை உங்களிடம் பார்ப்பதுபோல் இருக்கிறது. நான் நினைக்கும் நிறைய கருத்துக்கள் உங்கள் எழுத்தில் ஒத்துப்போகிறது.என்னைப்பொறுத்தவரை கடவுளுக்கும் ,நமக்கும் தரகர்கள் தேவையில்லை என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  7. innum ethana Peri(sami)yar vanthalum namma jananga thiruntha mattanunga!

    ReplyDelete
  8. we dont know the full background, whether Ranjitha did for money or under threat, force. Because Ranjitha is an educated matured actress.

    Sun TV is more concerned about the ashram's image and property damage rather than talking about saints.

    ReplyDelete
  9. மேட்டர் சரி சூடு ஜாக்கி!!

    3.00 மணியாகியும்.. இந்த மேட்டரெல்லாம் ரொம்ப சுவாரசியமா போகுதா.. தூங்காம படிச்சிகிட்டு இருக்கேன்! :)

    இவனுங்களையெல்லாம்... திருத்த முடியாது.

    ReplyDelete
  10. /அம்மன் பேரில் வளர்ந்த குடும்பம் அவர்கள் நடத்தும் கல்வி கூடங்களில் அடாவடி தலைவிரித்து ஆடுகின்றதாம்/

    மேல் மருவத்தூர் அம்மனா????

    ReplyDelete
  11. ஜாக்கி,

    என்னத்த சொல்லறது.

    Kicha சொல்லறாரு, // I don't know what is wrong in it. Yes, he hasn't married that woman, but "living tigether" is becoming common in our society.//

    //who recorded this video? In my opinion that is the real crime! //

    இவரும் எதோ சாமியார் தான் போலிருக்கு.

    இப்போதானே ஆரம்பிச்சிருக்கு. பொறு இன்னும் வரும். கதவ திறக்க வேணாம். ரஞ்சிதா மட்டும் அல்ல இன்னும் குஞ்சிதா, சொர்ணா எல்லாம் வரும்.

    'சாமியார்' என்பதே கெட்ட வார்த்தையாகி விட்டது.

    'நான் கடவுள் ' படத்தில் சொல்லபடுவதை போல 'சட வச்சவானெல்லாம் சாமியார்ன்னு சொல்றான்'.

    பாலா.

    ReplyDelete
  12. @ kicha : this video show reality of saints.I just ask one thing how it is crime.video guy not take a family couples sex.Lakhs of people believe that goose nithi next to god.Your words is baseless & careless

    ReplyDelete
  13. //அந்த கோவில் சென்னை பாண்டிக்கு நடுவில் இருக்கின்றது... அந்த கோவிலுக்காக தேசிய நெடுஞ்சாலையே தனது வழக்க பாதையை சற்றே மாற்றிக்கொண்டது.... அம்மன் ஒரு பிரச்சனையே இல்லை...அம்மன் சாந்தமான அம்மன்தான்... ஆனால் அம்மன் பேரில் வளர்ந்த குடும்பம் அவர்கள் நடத்தும் கல்வி கூடங்களில் அடாவடி தலைவிரித்து ஆடுகின்றதாம்... பல தற்கொலைகள் நடந்து இருக்கின்றன... ஒரு வளரும் சமுதாயமே.... நடைபினமாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றதாம்...எது பேசினாலும் உதைதான்....எல்லோருக்குமே அங்கு மரியாதை இல்லாத அர்சசனைதான் அனைவருக்கும் கிடைத்து கொண்டு இருக்கின்றதாம்...துக்ளக் தர்பாரை நேரில் பார்க்க வாய்ப்பு இல்லாதவர்கள்.... கல்வி கூடங்களில் நடக்கும் பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தினை நேரில் பார்த்தால் துக்ளக்கே தேவலாம் என்று இருக்குமாம்.... பூனைக்கு மணி கட்டுவதுயார் என்று மாணவ சமுதாயம் விழி பிதுங்கி இருக்கின்றதாம்...//

    1000% true...but its very difficult to control them as one his son married to DGP's daughter('2000).Also they have relatives with all political and judge fertenity.

    ReplyDelete
  14. It becomes a profession now to do things behind the screen and earn money. People should change. They can read their books. But should not worship them as God.----//

    நன்றி கலையரசி நீங்கள் சொல்வது உண்மைதான்,...

    ReplyDelete
  15. //மனிதர்கள் எப்போதுமே மனிதர்கள்தான்//
    மிகச் சரியான வார்த்தை.
    மக்களின் மாயமான் வேட்டைகள் முடிவுக்கு வரும்போதுதான் இவர்களின் கொட்டம் அடங்கும்.
    என் பதிவையும் காண்க.///

    சுசிலா மேடம் உங்கள் பதிவை ரசித்தேன்... நன்றி..

    ReplyDelete
  16. Compared to other Godmen and related sexual encounters, Nithya's seems to be different. In this case, he is with an actress in his bedroom. If this is the only woman Nithya has a relationship, I don't know what is wrong in it. Yes, he hasn't married that woman, but "living tigether" is becoming common in our society. We also have married godmen like "Melmaruvathur amma". By the way, who recorded this video? In my opinion that is the real crime! -Krishnamoorthy///

    கிச்சா இதனை தனிமனித உரிமை மீறல் என்று நீங்கள் சொல்வதை ஒரு சாரர் ஏற்றுக்கொண்டலும்... இந்து மதத்தை பயண்படுத்தி சொத்து சேர்த்தும்...சொற்பொழிவும் வழங்கியதும் எந்த விதத்தில் ஏற்றுக்கொள்வது???

    ரஞ்சிதாவோடு நான் வாழ்கின்றேன் என்று சொல்லி விட்டு இந்த வீடியோ வந்து இருந்தால் அது நிச்சயம் தனிமனித மீறல்தான்....

    ReplyDelete
  17. //என்னை பொறுத்தவரை ஒரு மனிதன் எப்படி சாமியாராக இருக்க முடியும் என்ற கேள்வி எனக்கு சிறுவயதில் இருந்தே எழுந்த விஷயம்தான்...//

    இதே கேள்வி எனக்கும் உண்டு.
    இன்னொரு கேள்வியும் அதென்ன சினிமா நடிகைகள் சாமியாரையே தேடுகிறார்கள் சொர்ன்மால்யா ரஞ்சிதா போல??//

    அது பற்றிய பதில் எனக்கு தெரியாது.. இருப்பினும்...உங்கள் கெஸ் சரிதான்...

    ReplyDelete
  18. என் மனசாட்சியை உங்களிடம் பார்ப்பதுபோல் இருக்கிறது. நான் நினைக்கும் நிறைய கருத்துக்கள் உங்கள் எழுத்தில் ஒத்துப்போகிறது.என்னைப்பொறுத்தவரை கடவுளுக்கும் ,நமக்கும் தரகர்கள் தேவையில்லை என்று நினைக்கிறேன்.//

    நன்றி மைதீன் உங்கள் பகிர்தலுக்கு... அதுமட்டும் அல்லாமல் கடவுளுக்கும் நமக்குமான தரகர் தேவையில்லை என்பதுதான் என் கருத்தும்..

    ReplyDelete
  19. innum ethana Peri(sami)yar vanthalum namma jananga thiruntha mattanunga!//
    நன்றி 23சீ

    ReplyDelete
  20. மேட்டர் சரி சூடு ஜாக்கி!!

    3.00 மணியாகியும்.. இந்த மேட்டரெல்லாம் ரொம்ப சுவாரசியமா போகுதா.. தூங்காம படிச்சிகிட்டு இருக்கேன்! :)

    இவனுங்களையெல்லாம்... திருத்த முடியாது.//

    பாலா இதை படிக்கிறதுக்கு நட்சத்திர வாரத்துக்கு எதாவது படத்தை பத்தி எழுதிட்டு படிக்கவும்...

    இங்க தமிழகத்துல திரும்பன இடமெல்லாம் இதுதான் பேச்சு...

    ReplyDelete
  21. /அம்மன் பேரில் வளர்ந்த குடும்பம் அவர்கள் நடத்தும் கல்வி கூடங்களில் அடாவடி தலைவிரித்து ஆடுகின்றதாம்/

    மேல் மருவத்தூர் அம்மனா????//

    மேல் மருவத்தூர் அம்மனையே கேளுங்க..

    ReplyDelete
  22. இப்போதானே ஆரம்பிச்சிருக்கு. பொறு இன்னும் வரும். கதவ திறக்க வேணாம். ரஞ்சிதா மட்டும் அல்ல இன்னும் குஞ்சிதா, சொர்ணா எல்லாம் வரும்.//
    பாலா நம்ம ஊர் குசும்பு அப்படியே..பிரியாக இருக்கும் போது போன் செய்யவும்..

    ReplyDelete
  23. @ kicha : this video show reality of saints.I just ask one thing how it is crime.video guy not take a family couples sex.Lakhs of people believe that goose nithi next to god.Your words is baseless & careless//

    அபிராமி உங்கள் கருத்தோடு ஒத்து போகின்றேன்..

    ReplyDelete
  24. 1000% true...but its very difficult to control them as one his son married to DGP's daughter('2000).Also they have relatives with all political and judge fertenity.//

    அப்படியா செல்வகுமார்...?பகிர்தலுக்கு நன்றி...

    ReplyDelete
  25. சாமியார்னாலே போலிதான். அப்புறம் போலிச்சாமியார்னு வேற நிஜச்சாமியார்னு வேறயா?

    கமல் சொல்றமாதிரி 'நான்தான் சாமின்னு சொல்றவனை மட்டும் நம்பவே கூடாது'

    ReplyDelete
  26. என்னங்க இது? சாமியார் பத்தி மட்டும் சொல்லி முடிசிட்டிங்க... அப்போ ரஞ்சிதா வ பத்தி அடுத்த பதிவுல எழுத போறிங்கள?

    ReplyDelete
  27. ஜாக்கி, இனிமே நித்யா கதவைத் திறந்தா ரஞ்சிதா வரமாட்டாங்க; கொசுதான் வரும்.

    ReplyDelete
  28. //எத்தனை பெரியார் வந்தாலும் இவனுங்களை திருத்த முடியாது...
    //
    தனி வாழ்வில் எப்படி இருந்தாலும் மற்றவர்களுக்கு நல் ஒழுக்கத்தை போதித்த நித்யானந்தாவை விட வெறுப்பை உமிழும் பெரியாரும் அவர் சீடர்களும் எந்த விஷயத்தில் உசத்தி?

    ReplyDelete
  29. ராகசுதான்னு சொல்றாங்க.. நீங்க ரஞ்சிதான்னு சொல்றீங்க.. ஒரே கன்ப்யூஷன் பாஸ்

    ReplyDelete
  30. @ Punnakku Moottai
    I am a young scientist and was a research professor in USA until September 2009. I am married and expecting baby in April, not a samiyar for sure.
    //இப்போதானே ஆரம்பிச்சிருக்கு. பொறு இன்னும் வரும். கதவ திறக்க வேணாம். ரஞ்சிதா மட்டும் அல்ல இன்னும் குஞ்சிதா, சொர்ணா எல்லாம் வரும்//
    If that happens, then Nithya has committed a crime and deserves punishment.

    @ jackiesekar
    //கிச்சா இதனை தனிமனித உரிமை மீறல் என்று நீங்கள் சொல்வதை ஒரு சாரர் ஏற்றுக்கொண்டலும்... இந்து மதத்தை பயண்படுத்தி சொத்து சேர்த்தும்...சொற்பொழிவும் வழங்கியதும் எந்த விதத்தில் ஏற்றுக்கொள்வது???//
    I am a religious person and I go to temples regularly. Even while I was on my work related trips, I go to nearby temples. For example, while I was in IIT-Kharagpur for an international conference, I went to Puri and Linganath temples at Bhuvaneshwar. However, I never met a godmen nor did I buy a CD or a book written by Godmen. If you are gullible, you will be exploited. I guess it was said by Pattukottai Kalyanasundaram.
    @Abiramii Fashions
    //Lakhs of people believe that goose nithi next to god//
    That is your problem. After all, he is a human like you and me, how can he be better? We had so many preceding instances on these samiyars. After all these, you go, meet samiyar, get his blessing and believe that you are better off than earlier. You assume that he is god and on one fine night, you watch a video and decide that he is a criminal! It sounds silly to me.

    ReplyDelete
  31. ஜாக்கி அண்ணன்..நீங்கதான் ஜாக்கி..நித்தியா அண்ணன் லங்கோடு போட்ருகாப்டி...(பார்த்துபுட்டனே...பார்த்துபுட்டனே)...!!

    ReplyDelete
  32. இவ்வளவு தூரம் சுவாரஸ்யமா படிச்சிங்களே.... ஒரு ஒட்டு போட்டா என்ன? //

    போட்டாச்சி,போட்டாச்சி

    ReplyDelete
  33. ++++++++++ எத்தனை பெரியார் வந்தாலும் இவனுங்களை திருத்த முடியாது...

    ++++++++++++

    பெரியார் யோக்கியமோ? கால கொடுமை

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner