NO MERCY-2013/ கொரியா/கருனை என்பது அனைவருக்கும் பொதுவானது.




2013 வருட முடிவில் இருக்கின்றோம்...
நிறைய உலக படங்கள் பற்றி எழுதினாலும் நான் மென் சோக படங்களை பொதுவாக  தவிர்த்து விடுவேன்... காரணம் அவற்றை எழுத ஒரு  பெரும் கூட்டமே இருக்கின்றது... எழுதக்ககூடாது என்று இல்லை....அப்படி எழுதினாலும் அது ரொம்ப ரேர்.


தற்போது  நண்பர்கள் பரிந்துரைக்க நல்ல நல்ல படங்கள் அதிகம் பார்த்து விட்டு நேரம் கிடைக்கும் போது எழுதலாம் என்று 300 படங்களுக்கு மேல்  லிஸ்ட்டில் இருக்கின்றன... சிலர் சொல்லுகின்றார்கள்.. சார் அதை பேஸ்புக்கில் லிஸ்ட் போல  போட்டா நாங்க பார்த்து பயணடைவோம் இல்லை என்று....  வாஸ்தவம்தான்.. பட் அப்படி லிஸ்ட் போடுவதில் ஒரு பெரிய பிரச்சனை என்னவென்றால் அதன் பிறகு அந்த திரைப்படங்களை விரிவாய் எழுத எனக்கு தோன்றாது அல்லது  உடம்பு வளையாது என்பதே....  அதான் நல்ல படம்ன்னு  சொல்லிட்டோமே..... அப்புறம் இன்னாத்துக்கு எழுனும்ன்னு சோம்பேறியாயிடும்.. நல்ல படம்ன்னு ஒரு வார்த்தையில சொல்லிட்டு போற ஆள்  நாள் இல்லை.. அது ஏன் நல்ல படம்... அதுக்கு   காரணம் என்ன? நான் ஏன் ரசிச்சேன் சொல்லறதுதான் எனக்கு ரொம்பவே பிடிக்கும்...


எனக்கு திரில்லர், சஸ்பென்ஸ் திரைப்படங்கள் மீது  அதிக காதல்... அப்படி பார்த்த வியந்த படங்களை அதிகம் எழுதி வருகின்றேன்.... சரி  விஷயத்துக்கு வருவோம்...

 எப்படி இப்படி ஒரு  படத்தை எடுத்தானுங்க இந்த  கொரியாகாரனுங்க... சான்சே இல்லை... இதுவே நம்ம ஊர்  பெரிசு இந்த படத்தை பார்த்துச்சிக்கு வச்சிக்கோ.. அவன்க  மூத்திரத்தை வாங்கி குடிச்சா கூட உங்களுக்கு இப்படி ஒரு படம் எடுக்க புத்தி வராதுன்னு சேம் சைடு கோல்  போட்டு ஓத்தாமட்டு விட்டுட்டு போவும்...

  எந்த படம் பார்த்து விட்டு ஒரு அதிர்வலையை  உங்களுக்குள் ஏற்ப்படுத்துகின்றதோ? அதுவே  நல்ல திரைப்படம் என்பது எனது கருத்து.,..

இந்த படம் அப்படி ஒரு அதிர்வலையை ஏற்ப்படுத்திவிட்டது.. ஒருவேளை இந்த திரைப்படத்தை யார் பார்த்தாலும் ஒரு மிடில் கிளாஸ் மனசாட்சி கண்டிப்பாக உறுத்தும் என்பது தின்னம். முக்கியமா  டாக்டருங்க ரொம்பவே யோசிப்பாங்க...

 கண்ணுக்கு  கண் பல்லுக்கு பல்... தண்டனை  ஹெமுராபி காலத்து சட்டம்... இதுதான் இந்த படத்தோட ஒன்லைன்..... கை வெட்டினா  கையை வெட்டுங்க.. ஆசிட் முஞ்சில வீசினா  வீசினவன் முஞ்சில  ஆசிட் ஊத்துங்க என்பதுதான் கண்ணுக்கு கண் பல்லுக்கு பல்  சட்டத்தோட ஷரத்...

டெல்லி கற்பழிப்புல ஈடுபட்டவன் வீட்டுல இருக்கற பொண்ணுங்களை அதே போல கற்பழிச்சா எப்படி இருக்கும்? தப்பு செஞ்வனுங்க  5 பேர் அதுல வீட்டுல இருக்கற பொண்ணுங்க என்ன செய்யும்ன்னு கேட்கறது  ரொம்பவே   நியாயம்... இது பொதுபுத்தி...கண்டிப்பா வீட்டுல இருக்கற பெண்கள் என்ன தப்பு செஞ்சாங்கன்ற கேள்வி வரும். என்பது உண்மைதான்.....

அந்த  குற்றவாளி 5 பேரு வீட்டு பெண்களை அவுங்க எதிர்க்க  கற்பழிச்சா  குற்றவாளிகள் பாயிண்டாப் வியூவுல யோசிச்சி பாருங்க...? முக்கியமா யோனியில‘ ராடு  உட்டானே  அதே போல ராடு விட்டவன் கண்ணு  எதிர்ல எந்த தப்புமே செய்யாத  அவுங்க வீட்டு பெண்ணை பாலாத்காரம் செஞ்சா எப்படி இருக்கும்? குற்றவாளி தவிச்சிடுவான் இல்லை..... அதேதான் கண்ணுக்கு கண் தண்டனை...டெல்லி பேருந்துல போன பெண் அப்பாவி.... அவளை கற்பழிச்சாங்க.. அதே  தப்பு செஞ்சவன் வீட்டுல இருக்கற பெண்ணும் அப்பாவிதான்.. ஆனா? என்ன ஆணா? அப்பாவிக்கு அப்பாவி சரியா போச்சு என்பதுதான் கண்ணுக்கு கண்...   பட்  நிகழ்கால வாழ்க்கையில் கண்ணுக்கு கண் என்பது மிக குறைவு....


அதே போல என்னைக்கோ ஒரு தப்பு பண்ணி இருப்பிங்க... அதுக்கு ரொம்ப நாள் கழிச்சி எதிர்வினை  நடக்கும் ..  அப்படி ரொம்ப நாள் கழிச்சி அந்த எதிர்வினை நடந்துச்சின்னு வச்சிக்கோங்க... அதை எந்த மனுஷனாலும் தாங்க  முடியாது... அதைதான் இந்த  திரைப்படம் பொட்டில் அடித்தது  போல சொல்கின்றது.


தடயவியல் துறையில் இருக்கும்  டாக்டர் கெங்... தன்மகளோடு வாழ்பவர்... ரொம்ப இன்டலிஜென்ட்..  தன் அனுபவங்களை அவருக்கு  பின்  அவர் துறையில்  பணியாற்றும்  அதிகாரிகளுக்கு செமினார் எடுக்கும்  வல்லுனர்....  கொலை நடந்த இடத்தில் தடயங்களை எப்படி சேகரிக்க வேண்டும்...?? என்ன செய்ய வேண்டும்? எதையெல்லாம் கவனத்தில் கொண்டு சீன் ஆப்  கிரைமை பார்க்க வேண்டும்  என்று பிட்டு பிட்டு வைத்து பாடம் எடுக்கும் கில்லி டாக்டர். ஆற்றங்கரையோரம் ஒரு   பெண்ணின் பினம் கிடக்கின்றது... தலை தனியாக  உடம்பு தனியாக கால்கள் தனியாக....ஒரு கை காணவில்லை.... தடயம் சேகரிக்க  கொலை   நடந்த இடத்துக்கு டாக்டர் வருகின்றார்...


பெண்ணின் உடலை அடாப்சி செய்து குற்றவாளிகளை  நெருங்கி விடுகின்றார்கள்.. குற்றவாளி சிக்கு கொள்கின்றான்.. அவனை கைது செய்கின்றார்கள் .... ஆனால் டாக்டருக்கு மிரட்டல் வருகின்றது.. என்ன செய்வயோ? ஏது  செய்வியோ எனக்கு  தெரியாது?  இப்ப குற்றவாளி கூண்டு இருக்கற குற்றவாளியை ரிலிஸ் பண்ணனும்.. அதுக்கு தடயங்களை அழிச்சி அவளை வெளியே  அனுப்பு... இல்லை உன் பொண்ணு மர்கேயான்னு  டாக்டர் பொண்ணு கடத்தன போட்டோவை அனுப்பி வைக்கிறானுங்க.... குற்றவாளி தப்பிச்சானா? டாக்டர்  பொண்ணு தப்பிச்சிடுச்சான்றது மீதி கதை.

டாக்டரோட திறமையை மதிக்கற  போலிஸ் பொண்ணு சிக்குன்னு இருக்கு.. அது பண்ணற இன்வெஸ்ட்டிகேஷன் நல்லவே இருக்கு.... சின்ன முகம் ... அழகோ அழகு.... படத்தின் பெரிய ரிலிப் இந்த பெண் போலிஸ்தான்...


 பட படக்கும் திரைக்கதை வேகம்.... குற்றவாளியா இருந்துக்கிட்டு கொடுர கொலை செஞ்சவன் டாக்டரை மெறட்டுறான்.... என்னை வெளியே எடு... தடயங்களை அழின்னு...  அப்படியே அழிச்சாலும் பரவாயில்லை,.. வேற ஒருத்தவனையும் இந்த கொலையை அவன்தான்  செஞ்சான்னு வலுவான தடயத்தை மாத்துன்னு சொல்லறான்.... டாக்டர் துடிக்கறான்..... சான்சே இல்லை....


  அந்த  பொண்ணு கொலை செய்யப்பட்டு இருக்கா ஆனா கற்பழிக்க படலை.... சோ குற்றவாளியை   சொன்ன ஆளை மாட்ட வைக்கனும்னா அவனுடைய விந்து  தேவை.... சார்  ரெண்டு சொட்டு விந்து தானமா கொடுன்னா கேட்க முடியும்...  அந்த டாக்டர் தன் மகளை  காப்பாற்ற ஒரு    விபச்சாரியை  பிடிச்சி அவக்கிட்டு  பணத்தை கொடுத்து அவன் கூட உடலுறவு கொண்டு அப்படியே அவனை மயக்கி வாய் புணர்ச்சிக்கு  அவனை உட்படுத்தி பைனலா அவ வாயில செமன் இருக்க அத சின்ன  டப்பியில  துப்பி எடுத்து வந்து அந்த விபச்சாரி  கொடுக்க அதுக்கு இன்னும் நிறைய பணம் கொடுத்து டாக்டரை அலைய வைக்கறான் அந்த குற்றவாளி...

 இது சின்ன  சாம்பிள்  தான்.....


படம் முடியும் போது கபால்ன்னு சுத்தி எடுத்து அடிவயித்துல ஒரு அடி கொடுத்தா எப்படி இருக்கும்????? அப்படி ஒரு அடி வாங்குன எபெக்ட் இந்த படத்து கிளைமாக்ச பார்க்கும் போது  கிடைச்சிது... இன்னமும் அந்த கிளைமாக்ஸ் காட்சியில் இருந்து இன்னும் நான் மீளவேயில்லை...மெமரிஸ் ஆப் மர்டர் படத்துக்கு  அப்புறம் என்னை ரொம்பவும் அசத்திய படம்...


=============
படத்தின் டிரைலர்.



===========
படக்குழுவினர் விபரம்.

Director : Kim Hyung-Joon [김형준]
Main Cast : Seol Kyung-Gu [설경구], Ryu Seung-Beom [류승범], Han Hye-Jin [한혜진]
Genre : Crime, Suspense
Release Date : January 7, 2010


============
பைனல் கிக்.

இந்த படம் கண்டிப்பா பார்த்தே தீரவேண்டிய திரைப்படம்.. திரைப்படதுறையிலும் ஸ்கீரின் பிளேலும் ஹாலிவுட்டுக்கே டப் பைட்  கொடுக்கறானுங்க.. சான்சே இல்லை.. கண்டிப்பா எல்லா  உதவி இயக்குனர்களும் பார்த்தே தீரவேண்டிய திரைப்படம்...  கிளைமாக்சில் எடுக்கும் முடிவுகள்... வசனங்கள் பழி வாங்கலை மட்டும் பேசவில்லை.. வாழ்க்கையை பேசுகின்றன...மன உணர்வுகளை பேசுகின்றன... சான்சே இல்லை.... இந்த படம்  போல ஒரு படம் தமிழ்சினிமாவில் சாத்தியம் இல்லை.... கொலைசெய்ப்பட்டாமல் இந்தி சினிமாவில் சாத்தியம் இருக்கின்றது... இந்த படத்தை இயக்கிய இயக்குனர் 




2010 இல் வந்த திரைப்படம்....இன்னேரம் நம்ம ஆட்கள்  இந்த படத்தை பாடாக படுத்தி இருப்பார்கள் என்று நினைக்கின்றேன்... அப்படி நடக்கவில்லை என்றால்   சந்தோஷம்...தமிழில் இந்த படத்தை மிஷ்கின் எடுக்கலாம்.,.. அல்லது விடியும் முன் திரைப்பட டீம்  இந்த படத்தை  எடுக்கலாம் என்பது எனது பார்வை....

===============
படத்தோட ரேட்டிங்.

 பத்துக்கு  ஏழு....

பட் கிளைமாக்ஸ் காட்சிக்கு  யோசிச்ச காரணத்துக்காக....  பத்துக்கு எட்டு.

============
பிரியங்களுடன்

ஜாக்கிசேகர்.



நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

12 comments:

  1. http://thepiratebay.se/torrent/5523376/No.Mercy.2009.DVDRip.XviD.AC3-ViSiON

    ReplyDelete
  2. நல்ல படம் குறித்த நல்ல விமர்சனம்... பார்க்கணும்...

    ReplyDelete
  3. எழுத்து பிழை கொஞ்சம் அதிகமா இருக்கு ஜாக்கி கதை புரிஞ்சிக்க சிரமமா இருக்கு. .... கொஞ்சம் பாத்து எழுதுங்க

    ReplyDelete
  4. // சின்ன முகம் ... அழகோ அழகு.... படத்தின் பெரிய ரிலிப் இந்த பெண் போலிஸ்தான்...//..........அத் தானே பார்த்தேன் .. இன்னும் ஒன்னும் காணோமே ன்னு ...:-)

    //

    ReplyDelete
  5. where did you get world film dvds...

    www.writerkarthikeyan.blogspot.in

    ReplyDelete
  6. Movie Link : http://www.asian-horror-movies.com/nomer.php
    Wonderful movie...

    ReplyDelete
  7. Movie Link: http://www.asian-horror-movies.com/nomer.php
    Excellent movie...

    ReplyDelete
  8. படம் முடியும் போது கபால்ன்னு சுத்தி எடுத்து அடிவயித்துல ஒரு அடி கொடுத்தா எப்படி இருக்கும்????? அப்படி ஒரு அடி வாங்குன எபெக்ட் இந்த படத்து கிளைமாக்ச பார்க்கும் போது கிடைச்சிது... இன்னமும் அந்த கிளைமாக்ஸ் காட்சியில் இருந்து இன்னும் நான் மீளவேயில்லை...மெமரிஸ் ஆப் மர்டர் படத்துக்கு அப்புறம் என்னை ரொம்பவும் அசத்திய படம்... nice comment

    ReplyDelete
  9. படம் முடியும் போது கபால்ன்னு சுத்தி எடுத்து அடிவயித்துல ஒரு அடி கொடுத்தா எப்படி இருக்கும்????? அப்படி ஒரு அடி வாங்குன எபெக்ட் இந்த படத்து கிளைமாக்ச பார்க்கும் போது கிடைச்சிது... இன்னமும் அந்த கிளைமாக்ஸ் காட்சியில் இருந்து இன்னும் நான் மீளவேயில்லை...மெமரிஸ் ஆப் மர்டர் படத்துக்கு அப்புறம் என்னை ரொம்பவும் அசத்திய படம்... nice comment

    ReplyDelete
  10. இந்த படம் 10 சேது 20 nandha 50 பரதேசிக்கு சமம்

    ReplyDelete
    Replies
    1. Punishment to a rape verdict and forging document OK but so so many loops and climax scenes are like commercial ends

      Delete
  11. The world movies is nothing but open for director to present his /her view to audience.
    we are loosing this , the operation , tearing of bodies, semen application all can be transferred in dialogue, but expressions add value to the story. One thing the korean movies all with steady cam always shaky... my dislike on close up shots

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner