Neethaane En Ponvasantham-2012-நீ தானே என் பொன் வசந்தம்-சினிமா விமர்சனம்



முதலில் சொல்லி விடுகின்றேன்.... நீ தானே என் பொன் வசந்தம்..படம் மொக்கை என்ற விமர்சனத்தை படித்தவர்கள் அதை ஆமோதிப்பவர்கள் இந்த வரியோடு விடைபெற்றுக்கொள்ளுங்கள்... நன்றி வணக்கம்....


நீ தானே என் பொன் வசந்தம்  திரைப்படம் வருன், நித்யா  என்ற இரண்டு பேருடைய நட்பு  காதல் சண்டை ஊடல் போன்றவற்றை சொல்லும்  திரைப்படம்....

காதல் மறுக்கப்பட்ட தேசத்தில் அதுவும் 2012லும் காதல் திருமணத்தினால்  ஜாதி வெறியோடு கலவரங்கள் மற்றும் உயிர் பலிகள் நடக்கும் இந்த தேசத்தில் காதல் என்ற வார்த்தை இன்னும் பலருக்கு எட்டாக்கனியாகத்தான் இருக்கின்றது.....
யோசித்து பாருங்க... அப்படி பட்ட காதல் மறுக்கப்பட்ட  நாட்டுல முழுபடமும் இரண்டு காதலர்களும் அவுங்க சண்டையும் சொன்னா? எவன்யா  தியேட்டல உட்கார்ந்து பார்க்கறதுன்னு  சொல்லுவாங்க.. அல்லது சலிச்சிக்குவாங்க...அல்லது அப்படியான காதலை வெறுப்போம்...


ச்சே அலைகள் ஓய்வதில்லைன்னு ஒரு படம் அதை எம்மாம் நாள் நாங்க ஓடவச்சோம் தெரியுமா? என்று எதிர்கேள்வி கேட்கலாம்..?ஆனா படம்  முழுக்க ஜீவா  சமந்தாதான்... அவஙுங்க   சண்டைதான்...

நம்ம திரைக்கதைகள் பொதுவா ஒன்னாவது ரீலில் காதலர்கள் சந்திக்க  ஆரம்பிச்சி  படம் ஆரம்பிச்ச மூன்றாவது ரீலில்  முத்தம் கொடுத்து, வேற பிரச்சனைக்கு போய் விட வேண்டும்....ஆனால்  படம்  முழுக்க இரண்டு பேர்... அவுங்க  சண்டை.... அப்ப எவனுக்கு  இந்த  புடிக்கும் ?  இந்த படம் கண்டிப் புடிக்கும்  யாருக்கு? அனு அனுவா காதலிச்சவனுக்கு  இப்பவும் காதலிச்சிக்கிட்டு இருக்கறவனுக்கும்...


காதலை பதட்டப்படாமல் காதலை ரசிச்சி மெல்ல மெல்ல ருசிபார்த்தவனுக்கு இந்த படம் பிடிக்கும்...கவுதம் கிளிஷேக்கள் இந்த படத்தில் இருக்கின்றது என்று பொத்தாம் பொதுவாக சொல்லி விட முடியாது...


ஆயிரம் பேர் படிக்கும் கல்லூரி.. அதில் 100 பேர் காதலிக்கின்றார்கள் என்று ஒரு  உதாரணத்துக்கு சொல்லுகின்றேன்... அந்த 100 பேரில் ஜெசி, கார்த்திக் ஒரு  ஜோடி அவர்களின் கதை விண்ணைதாடி வருவாயா ஒரு கதை என்றால்.... வருன் நித்யா ஜோடியின் கதை இரண்டாவது என்றால் இன்னும் 98 காதல் கதைகள் அதே கல்லூரியில் இருக்கின்றது...
அடுத்த ஒரு ஜோடியின் கதையை எடுத்துக்கொண்டு இரண்டு பேர் கல்லூரியில் படிக்கும் போது காதலிக்கின்றார்கள் என்று சொல்லி விட்டு வயல்வெளியில் போய் ஷாட்  வைக்க முடியாது அல்லவா?  அதனால்தான் இதனை கிளிஷே என்று சொல்லி முடியவில்லை...


முன்பு ஒருமுறை ஒரு  பேட்டியில்  இயக்குனர் பாலுமகேந்திரா  இரண்டு பெண்டாட்டி கதைகள் 200 படம் பண்ணும் அளவுக்கு என்னிடத்தில் உண்டு என்று சொல்லி இருக்கின்றார்...  நீ தானே என் பொன் வசந்தம்...திரைப்படம் காதலின்  உள்ளே இருக்கும் பிரச்சனையை பெரிய  அள்ளவில் அலசாமல் ஜஸ்ட் லைக்தட்டாக கடந்து போகின்றார் இயக்குனர்...படம் இரண்டு பேர்தைனே போர் அடித்து விடும் என்று ஒரு குத்து பாட்டோ அல்லது  ஒரு கவர்ச்சி பாட்டு கூட இதில் வைக்க வில்லை... அந்த அளவுக்கு  படம் நீட்டாக... இரண்டு பேருடைய காதலை மட்டும் பிரச்சனைகளை  மட்டும் அலசுகின்றது...


படத்துல ஒரு டயலாக் வரும்... காதலிக்கும் போது நாம பார்க்கற படம்  கேட்கற பாட்டு எல்லாம் நமக்காக எழுதியது போல இருக்கும்  இல்லையா? என்று ஆம் அப்படித்தான் இருக்கும்... அப்ப நீங்க காதலில் இருந்தால் இந்த படம் ஒருவேளை பிடிக்கலாம் பிடிக்காமலும் போகலாம்.. ஆனால் மோசம் என்று சொல்லமாட்டேன்..


=========================
நீ தானே என் பொன் வசந்தம் ஒன்லைன்...

வருன், நித்யா  இரண்டு பேருடைய  பள்ளி வாழ்க்கை ,கல்லூரி வாழ்க்கை, அதில் வளரும் காதல் அதனால் வரும் பிரச்சனைகள்  எப்படி சரியாகின்றது என்பது படத்தின் ஒன்லைன்.
==================

நீ தானே என் பொன் வசந்தம்... படத்தின் கதை என்ன?


ஜீவா மற்றும் சமந்தா இரண்டு பேரும் காதலர்கள்.. ஆனால் அவர்களுக்கு ஏற்ப்படும் சின்ன சின்ன சண்டைகள் அவர்களை பிரிந்து இருக்க வைக்கின்றது... அவர்கள் எப்படி ஒன்று  சேர்கின்றார்கள் என்பதுதான் கதை...
================

ஜீவா இந்த படத்தில் வாழ்ந்து இருக்கின்றார்.... கியூட்டா இருக்கார்... பிரைட்டாவும் இருக்கார்...

சந்தானம் கேரக்டர்  படம் நெடிகிலும் நண்பர் பாத்திரமாக வருவதால் காமெடி பெரியதாய் இல்லை என்றாலும் படத்தை  ரசிக்க வைக்க அவரும் காரணமாய் இருக்கின்றார்...

பட் ஐ லைக் இட் மச்சான்...

நீயும் ஒரு யுகோவுல  போடி நானும் போறேன் என்ற சொல்லிட்டு போய் இருக்கலாம்... என்று சந்தானம் சொல்ல... அதுக்கு ஜீவா...  போயிருக்கலாம் அதுக்கு அப்புறம் வாழக்கையை கைல புடிச்சிக்கிட்டுதான் உட்கார்ந்து இருக்கனும் என்று ஒரு வெடிச்சிரிப்பு   சிரிப்பது போல படம் முழுக்க இயல்புதன்மை விரவி கிடக்கின்றது...

படத்துல சமந்தா இண்டோரவும் அதுக்கு அப்புறம் சமந்தா கொடுக்கும் பத்து நிமிட ரியாக்ஷள்  சான்சே இல்லை.

உதாரணத்துக்கு ஜீவா ஸ்டேஜ்ல இருக்கும்  போது பெரிய கேப்புக்கு அப்புறம் அவனை பார்க்கற  அந்த  நேரத்துல வே கொடுக்கற ரியகாஷ்ன்.. யப்பா....

நாங்க பாடப்போற பர்ஸ்ட்  பாட்டு...

நினைவெல்லாம் நித்யா என்று ஜீவா சொல்ல.... 

அந்த  நேரத்தில் சமந்தா கண்கள் மெல்ல   விரித்து, தலை லைட்டாக திருப்பி,விரல்களை மூக்குக்கு எடுத்து சென்று அப்படியே கன்னத்து வழியே விரல்கள் டிராவல் ஆகி,ஒரு கேள்வி குறி போட்டு, உதடுக்கு வரும்  போது  சமந்தா கொடுக்கும் அந்த ரியாக்ஷன் சான்சே இல்லை..... என்ன ரியாக்ஷ்ன்? என்ன ரியாக்ஷன்....நீ தானே என் பொன்வசந்தம் ராக்ஸ்.........


பிரிவுகள் அதற்க்கான காரணங்கள் மிக இயல்லபாக சொல்லப்பட்டு  இருக்கின்றன... மிகப்பெரிய உதாரணம்... அந்த தண்ணீர் தொட்டி சீன்.. ச்சே நான்தான் நான்தான் என் பின்னாடியே சுத்திக்கிட்டு இருந்தா ஒரு  நேரத்துல நீ என்னையே  வெறுத்துடுவே என்று ஜீவா சொல்லும் அவந்த ஒணர வரிய டயலாக்கில் வாழ்க்கை புதைந்து இருக்கின்றது.. அது எத்தனை பேரால்  உணரப்பட்டது என்று தெரியவில்லை...


இந்த பிரிவு சாத்தியாமா... அது கதைக்காக மாற்றிக்கொண்டது  என்றாலும்...  என்னதான்  ஒரு பிகரை உயிருக்கு உயிராய் காதலித்தாலும்... வேலை என்று வந்து வெளியூர் போய் விட்டால்   வேலை கண்முன் வந்து நின்றால் உயிருக்கு உயரான பிகர் மறைந்து விடும்.. ஆனால் நேரில்  பார்த்த உடன் பார்த்துக்கொண்டு இருக்கும் எல்லா  வேளையையும் உதறி விட்டு அவளோடு நேரம் செலவழிக்க தோனும்... அப்படித்தான் ஜீவாவின் பாத்திரத்தை படைத்து இருக்கின்றார்கள்...


 சின்ன வயது பிரேக்கப்புக்கு வளுவான காரணத்தை சொல்லி இருக்கலாம்... பள்ளி ஸ்கூல் பீப்பிள் பிரச்சனை ,ஈகோ  என்பது சரியான காரணம்...அதே போல எம்பிஏ படிக்கும் போது ஏற்ப்படும் பிரிவும் லாஜிக்தான் கிளைமாக்ஸ் சினிமாதனம் என்றாலும் ரசிக்க வைக்கின்றார்......


 வானில்  வந்த வாசம் இங்கு மண்ணில் வந்தாடுதே  பாடல் ஆரம்மபிக்கும் போது இளையாராஜா நம்மையும் கட்டிப்போடுகின்றார்... முதல் பாட்டில்  பின் பகுதியில் வரும் ஒரு சின்ன பிட் துருத்திக்கொண்டு இருப்பது போல என் மனதுக்கு பட்டது... இளையாராஜா அசத்தல் ராஜா...


மாருதி ஜென் கார், திருட்டு முத்தம், டிடிகே கேசட், செல்போன், அந்த கால பத்து ரூபாய், என்று  காட்சிகளில் சுவாரஸ்யம்  சேர்த்து இருக்கின்றார்....


 இலக்கில்லாமல் எதை பற்றியும்  யோசிக்காத போது காதல் மிக அழகாக இருந்தாலும்... கமிட் மென்ட் என்று வரும்  போது பிரச்சனை வெடிக்கின்றது...


இந்த படத்தை பார்த்து விட்டு என் கடந்த காதல் வாழ்க்கை  நினைத்து பார்த்தேன்.. படத்தில் காட்டி இருக்கும் அத்தனை விஷயங்களையும் நான் கடந்த வந்து இருக்கின்றேன்... படத்தின் கேரக்டர்கள்தர்ன் அவர்களுக்கு அவர்களுக்கே வில்லன்கள்....  புதிதாய் வில்லன்  யாரும் படத்தில் இல்லை... காதா பாத்திரமும் சூழ்நிலைகளும் படத்தில் வில்லன்..


===============================
படத்தின் டிரைலர்..


================
படக்குழுவினர் விபரம்..

Directed by Gautham Menon
Produced by Reshma Ghatala
Venkat Somasundaram
Elred Kumar
Jayaram
Gautham Menon
Written by Reshma Ghatala
Gautham Menon
Screenplay by Reshma Ghatala
Gautham Menon
Story by Reshma Ghatala
Starring Jiiva
Samantha
Music by Ilaiyaraaja
Cinematography M. S. Prabhu
Om Prakash
Editing by Anthony
Studio Photon Kathaas
RS Infotainment
Release date(s)
14 December 2012[1]
Running time 155 minutes
Country India
Language Tamil

================================
பைனல்கிக்.


ஒரு சிரிப்பு கண்ணத்தில் இருந்த கண்ணுக்கு போவதை சொல்பவனால்தான் இன்னும் காதலிக்க முடியும்... கவுதமை தமிழகத்து யாஷ் சோப்ரா  என்று கூட சொல்லலாம்.... அந்த அளவுக்கு காதல் படம் நெடுக விரிவி கிடைக்கின்றது...

கிளைமாக்ஸ் மிகுந்த நெகிழ்ச்சியை கொடுத்தது...

படம் முடிந்ததும் என் காதலிக்கு போன் செய்தேன்..

ஐ லவ்யூ..

 என்ன திடிர்ன்னு...பொதிமரம் ஏதாவது ஆபிஸ்க்கிட்ட இருக்கா?

இல்லை சொல்லனும்ன்னு தொனிச்சி...

அதான் என்ன திடிர்ன்னு? கேட்கிறேன்..?

தோனிச்சி....

ஏதாவது படம் பார்த்தியா?

ஆமாம்....

 என்ன படம்...??

நீதானே என் பொன்வநந்தம்...

அதானே பார்த்தேன்.. என்றாள்....


நேற்று இரவு இரண்டரை மணிநேரம் நெடுநாள் நண்பருடன் பேசுவது போல இயக்குனர் கவுதம்வாசதேவமேனனோடு மனம் விட்டு பேசினேன்.... அவரும் அப்படியே... இந்த படம் கொடுத்த சந்தோஷத்தையும் என் காதலையும் மறுமுறை திரும்பி பார்க்க வைத்தீர்கள் எனக்கு எனர்ஜி திரும்ப ஏறியது போல இருக்கு என்றேன்... என் காதலியிடம்  படம் முடிந்ததும் நான் போன் பண்ணி   பேசியதை சொன்னேன்..அதற்கு கவுதம். இதை விட எனக்கு பெரிய  பாரட்டு கிடைத்து விடப்போவதில்லை என்றார்....

நன்றி சொன்னேன்.,
===================
கம்யூட்டர் ரிப்பேர் ஆகி இப்போதுததான் கைக்கு கிடைத்தது... அவசரமாக டைப்பிட்டு அலுவலகம் கிள்ம்பிகின்றேன். பிழைகளை பொறுத்தருள்க...  இன்ற இரவு திருத்துகின்றேன்... நன்றி...


நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

20 comments:

  1. An interesting review with a personal touch, after a long time. :-) Keep it up, Jackie.

    ReplyDelete
  2. excellent film sir i watched 3 times ur review so good

    ReplyDelete
  3. ஒரு தமிழ் பதிவர்களால் கூட இந்த படத்தை ஏற்று கொள்ள முடியவில்லையா என்று கவலையாக இருந்தது, இந்த பதிவை வாசிக்கும் வரை. நன்றி. என்னை பொறுத்த வரைக்கும் இதற்கு இணையாக ஒரு தமிழ் படமும் இல்லை என்பேன்.

    ReplyDelete
  4. விமர்சனம் எழுதுறதுக்கு நல்லா காசு கொடுக்குராங்கல்லாம் ஜாக்கி.

    பத்தாயிரம் - சூப்பர்
    இருபராயிரம் - டாப் டக்கர்
    ஐம்பராயிரம் - ஒண்டர்புல்

    ReplyDelete
  5. நல்ல விமர்சனம் தந்தமைக்கு நன்றி.

    Tamil Latest Movie News

    ReplyDelete
  6. தியேட்டரில் பார்க்கும் போது வந்த தேவையில்லாத கமெண்ட்டுகள் வெறுப்பேற்றினாலும் இந்தப் படம் சற்றே தனிமையில் அமைதியான சூழ்நிலையில் பார்க்கவேண்டிய படம். பிடித்திருந்தது எனக்கு.

    ReplyDelete
  7. ithae thaan yenakkum.... yenga roomla padam nalla irukunnu sonnathkku yenna kola panna muyarchi pandranga boss

    ReplyDelete
  8. padam than enodu othu poguthu nu ninachen....ungal varium kuda....
    same phone call
    same reaction...
    but comments than different
    "dei appdi na dailum padam par"

    ReplyDelete
  9. padam than enodu othu poguthu nu ninachen....ungal varium kuda....
    same phone call
    same reaction...
    but comments than different
    "dei appdi na dailum padam par"

    ReplyDelete
  10. The Chemistry between Jeeva and Samantha was not that good ...felt very artificial...

    ReplyDelete
  11. படம் கொஞ்சம் ஸ்லோவ்ங்குறத தவிர மற்றபடி படத்தை ரசித்து பார்தேன் படம் நன்றாகவே இருந்தது.ஆனால் தமிழ் பதிவர்கள் ஒருவர் கூட படம் சுமார் என்று கூட விமர்ச்சிக்க வில்லையே என வருதமாக இருந்தது. தங்கள் விமர்சனத்திற்கு நன்றி.

    ReplyDelete
  12. love or fight,failure or success all depends upon our mentality . For most peoples love is life and for someothers that is part of life.Definition for love not yet find out.There are different opinions.Anyhow your review VERY FINE.

    ReplyDelete
  13. அன்புள்ள ஜாக்கி சேகர் அவர்களுக்கு,
    அலுவல்களுக்கிடையே கிடைக்கும் சிறிது நேரத்தில் உங்கள் ப்ளாக்கைப் படித்துவிடுவேன். உங்களுடைய மற்றும் யாழினியின் ரசிகை நான். முடிந்தால் இதைப் பதிவிடுங்கள்.

    தில்லியில் பணிக்குச் சென்று வீடு திரும்பும் வரை பத்திரமாகப் போய்ச் சேருவோம் என்ற நம்பிக்கையில்லாமல் இருக்கும் பெண்களில் நானும் ஒருத்தி.
    இந்தியர் என்று சொல்லவே வெட்கப்படும் வகையில் நடந்துள்ள ஒரு விஷயம் இந்தியாவை ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கிறது. பாலியல் பலாத்காரம் நடந்ததாகச் சொல்லப்படும் இடமான முனிர்கா, ஆர்.கே.புரம் இந்தப் பகுதிகளெல்லாம் அமைதியாக இருக்க, பார்லிமென்ட் சாலை, ஜந்தர் மந்தர் சாலை, இண்டியா கேட் பகுதிகளில் தொடர்ந்து இரண்டு வாரங்களாக போராட்டங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. வேதனையளிக்கும் விதமாக இன்று அதிகாலை 2 மணியளவில் மிருகத்தனமாக பலாத்காரம் செய்யப்பட்ட அந்த 23 வயதுப்பெண் இறந்துவிட்டாள். இன்றும் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
    சாதாரணமாக DTC பஸ்ஸைத் தவிர வேறு எந்த பஸ்ஸுமே பாதுகாப்பானதாக இருக்காது. டிரைவர், கண்டக்டருடன் இன்னும் நான்கைந்து பேர் உட்கார்ந்து கொண்டு பெண்களை தரக்குறைவான முறையில் விமர்சித்து வருவதை பலமுறை பார்த்திருக்கிறேன். பணத்தை மட்டும் வாங்கிக் கொள்வார்கள். டிக்கெட் கொடுக்கமாட்டார்கள். முடிந்தவரை அத்தகைய பஸ்களைத் தவிர்த்தே வந்திருக்கிறேன்.
    டிசம்பர் 16 இரவு தன் நண்பருடன் திரைப்படம் சென்று திரும்பியவள் முனிர்காவில் தனியார் பஸ் ஒன்றில் ஏறியிருக்கிறாள்.
    இந்த விபரீதம் நடந்தபிறகு காவல்துறை விசாரணையில் தெரியவந்திருப்பது அந்த குறிப்பிட்ட பஸ் 6 முறை (?) தகுதியற்றதாக அறிவிக்கப்பட்டிருந்தது என்பது.
    யாரைக் குற்றம் சொல்வது? அந்நியன் படத்தில் சொல்வதுபோல் அடிமட்டத்திலிருந்து வந்தால் பஸ்ஸின் க்ளீனர் முதல் போலீஸ் தொட்டு அரசியல்வாதிகள் வரை எத்தனை பேர் குற்றவாளிகள்?
    அந்தப் பெண் அடாவடித்தனமாகப் பேசிய டிரைவரை கடுமையாக சாடியிருக்கிறாள். அவளுக்கு ஆதரவாகப் பேசிய அவளுடைய நண்பரை இரும்புக் கம்பியால் தாக்கியிருக்கிறார்கள். தப்பிப் பிழைத்த அவர் அருகிலிருந்த காவல்நிலையத்தில் சொன்னபோது அது எங்கள் ஜூரிஸ்டிக்ஷனில் வராது. நீங்கள் ஆர்.கே.புரம் போங்கள் என்று கூறியிருக்கிறார்கள். (போராட்டம் ஆரம்பமானபின் அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள்) காவலர்கள் (?) கொஞ்சம் பொறுப்புணர்ச்சியோடு செயல்பட்டிருந்தால் அவள் இன்று உயிரோடு இருந்திருப்பாள்
    அவள் என்னை அவமானப் படுத்தினாள். அதனால்தான் அப்படிச் செய்தேன் என்று சொன்னானாம் அந்த டிரைவர்.
    பிறப்புறுப்பில் இரும்புக் கம்பியை நுழைக்கும் அளவுக்கு மனிதன் எப்படி அவ்வளவு குரூரமானவனாக மாறமுடியும்? அவளுடைய அந்தரங்க உறுப்புகள் பலவற்றை நீக்கியபின்பும் உயர்தரமான சிகிச்சை கொடுத்தும் அவள் இறந்துபோனதை நினைக்கும்போது எவ்வளவு கடுமையான பாதிப்புக்குள்ளாயிருந்திருக்கிறாள் என்பது புரியும். ஒரு சக மனுஷியிடம் இப்படி காட்டுமிராண்டித்தனமாக நடக்க அந்த ஆறு பேருக்கும் எப்படி முடிந்தது? நினைக்க நினைக்க ரத்தம் கொதிக்கிறது.
    கொஞ்ச நேரம் நினைவு திரும்பும்போது அவள் திரும்பத் திரும்ப சொன்னது நான் வாழ விரும்புகிறேன் என்பதுதான். என்னால் அழுகையைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை.
    மக்கள் தொகை நிறைந்திருக்கும் பெருநகரங்களில் குற்றங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. அதைத் தாண்டிப் போய்க்கொண்டே இருக்கிறோம். எங்கே போகிறோம் நாம்?

    ReplyDelete
  14. i saw this movie 4 times. gowtham menon sir simply rocks. jackie, naanum modha time intha padam pathu mudichi veliya vanthathum ennoda lover-ku call panen. ennoda lover kita naan last 2 months-a pesama irunthen oru chinna ego problem-nala. but ennoda lover enaku last 2 months-la 782-mura cl panaru, and 1421 msg panaru, but naan cl-um atnd panala, msg-ku reply-um panala. intha padam paathu mudichadhum modhala en lover-ku thaan cl pananum-nu thonichu. may be naan cl pananum-nu thonunadhuku avar enna vitutu poiduvaru-nu vantha bayama ilana naan avara unmaiya love panadhala avar mela vechiruntha pasama-nu enaku realise pana theriyala....? but once again thanks to gowtham menon sir.

    ReplyDelete
  15. நல்ல விமர்சனம்...தொடருங்கள்

    ReplyDelete
  16. காதலை பதட்டப்படாமல் காதலை ரசிச்சி மெல்ல மெல்ல ருசிபார்த்தவனுக்கு இந்த படம் பிடிக்கும்..

    ReplyDelete
  17. சமந்தாவின் நடிப்பு சூப்பர், ஜாக்கி சார் சொன்னதுபோல அவர் அறிமுக காட்சியில் அவர் எக்ஸ்பிரஷன் எல்லாம் படு அழகு. ஆனால் மொட்டை மாடியில் ஜீவாவோடு பேசும்போது அடிக்கடி முன்னாடியும் பின்னாடியும் நடந்து நடந்து அவர் பேசுகிற காட்சிகள் கொஞ்சம் ஓவர் ஆக்டிங்காகவே தெரிகிறது...

    ஜீவா வழக்கம்போல ஸ்மார்ட்டாக நடித்திருக்கிறார். சந்தானம் ஜீவா இருவரும் பல நேரங்களில் பேசிக்கொள்ளும் காட்சிகள் ஏதோ இரு நண்பர்கள் பேசிக்கொள்வதை காண்டிட் கேமிரா மூலம் எடுத்தது போல மிக இயல்பாக அமைந்திருக்கிறது..

    ஜீவா காதலை துறந்து முதலில் வேலை பிறகுதான் மற்றதெல்லாம் என்று முடிவெடுப்பதற்கான காரண காட்சிகள் இன்னும் கொஞ்சம் அழுத்தமாக காட்டியிருந்திருக்கலாம்.

    மற்றபடி படம் சூப்பர் அப்படி என்றெல்லாம் என்னால் சொல்லமுடியவில்லை...

    காதலர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கலாம்.

    ReplyDelete
  18. எதிர்மறை விமர்சனங்களாலேயே இப்படத்தை இவ்வளவு நாட்களாகியும் பாராமல் இருந்தேன். இன்றுதான் நேரம் கிடைத்தது. படம் பார்க்கப் பார்க்கப் பிடித்து ஒன்றிவிட்டேன். காதலை விட பாடம் முக்கியம் என படிக்கப் போன ஜீவா!.. இதேதான் வாரணம் ஆயிரத்தில் முதல் ஹீரோயின் செய்வாள்.

    இப்போது வரும் ஆயிரம் மொக்கைப் பட டாஸ்மாக் குடிகார பாடல்களைக் கொண்ட படங்களுடன் ஒப்பிடும்போது இது செம க்ளாஸ் படம். அனிருத்தின் அப்பா ரவி ராகவேந்திராவின் கேரக்டர் க்ளைமேக்சில் பாடம் நடத்தாமல் நருக். சுருக் என தந்தி வசன நடையில் அமைதியாக கண்ணியம் காத்தது - டைரக்டரின் டச். மற்ற படமாக இருந்தால் (உ.ம். ஜெயப்பிரகாஷ் (பசங்க) அப்பாவாக இருந்தால் 15 நிமிடத்துக்குப் பாடம் நடத்தி இருப்பார். இன்னும் ஒரு வாரத்துக்கு என் தலைக்குள் இந்தப் படம் வந்து வந்து போகப் போகிறது. உங்கள் விமர்சனத்தை முன்னமே பார்த்திராதது என் தவறு. மன்னிக்கவும்.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner