தவழ்ந்து செல்ல வில்லை நடந்து செல்லும் நுட்பம் கண்டுக்கொண்டு
விட்டாள் எங்கள் மகள்...
அதனால் எல்லா இடத்திற்கும் நடந்து சென்று கொண்டு இருக்கின்றாள்.. அவள் உயரத்துக்கு அலமாரிகளில் இருக்கும் பொருட்கள் எல்லாம் புவியீர்ப்பு சக்திக்கு எதிர்பேச்சு பேசாமல் அடிமையாகி விடுகின்றன.
அதனால் எல்லா இடத்திற்கும் நடந்து சென்று கொண்டு இருக்கின்றாள்.. அவள் உயரத்துக்கு அலமாரிகளில் இருக்கும் பொருட்கள் எல்லாம் புவியீர்ப்பு சக்திக்கு எதிர்பேச்சு பேசாமல் அடிமையாகி விடுகின்றன.
வீடே கலவர பூமி போல்
காட்சி அளிக்கின்றது...
கீழே சிதறி கிடைக்கும் பொருட்களை அடுக்கி வைக்கவே ஒரு ஆள் வேலைக்கு வைக்க வேண்டும் போல… அந்த அளவுக்கு யாழினியின் அராஜகம் எல்லை மீறி போய்க்கொண்டு இருக்கின்றது..
ஒன்றும் சொல்ல முடியவில்லை… எதிர்த்து பேசாமல் கைக்கட்டி வாய் பொத்தி பேசாமல் இருப்பதை தவிர எனக்கு வேறு வழியும் புரிய வில்லை...
=====
ஒரு மாதத்துக்கு முன் இரண்டு லிட்டர் புருட்டி பாட்டிலை, பசி மயக்கத்தில் செங்கல்லை தள்ளாடி சுமந்து செல்லும் சித்தாள் போல....
தள்ளடி தள்ளாடி தூக்க முடியாமல் தூக்கி எடுத்து வந்து என்னிடத்தில் கொடுத்தாள்… நான் அதை வாங்கி வைத்துக்கொண்டு மும்முரமாக டிவி பார்த்துக்கொண்டு இருந்தேன்… திரும்ப ஏதோ ஏதோ பேசிக்கொண்டு நடந்து வரும் அவள் கொலுசு சத்தம் கேட்டு திரும்பினேன்..
கண்ணாடி கிளாசை
எடுத்து வந்து கொடுத்து… என்னை பார்த்து அப்பா….
ஜுசிக்பிக்க என்றாள்.....
திரும்ப திரும்ப அதையே சொன்னாள்… அவள் அம்மா இந்த கூத்தை பார்த்து விட்டு அவளுக்கு புருட்டி ஊத்திக்கொடுக்க சொல்லறா என்று சொன்னாள்.. நானும் அவளுக்கு ஊற்றிக்கொடுத்து விட்டு சோபாவுக்கு கீழ் இருந்த சரக்கு பாட்டிலையும் கண்ணாடி கிளாசையும்
சிரமம் பார்க்காமல் எழுந்து
எடுத்து போய் முதல் வேலையாக மறைய வைத்தேன்...
=========
பேச்சு நன்றாக வந்து விட்டது அம்மா, அப்பா எல்லாம் ஸ்பஷ்ட்டமாக
உச்சரிக்கின்றாள்.. அதிலும் அப்பா என்று கொஞ்சலாக காலையில் எழுந்து அழைக்கும் அழகே அழுகு..
ஒத்தா ஒரு குழந்தையை பெத்துட்டு இப்படி கொஞ்சிகிட்டு இருக்காங்களே இந்த காவாலி பயலுங்க என்று நான் பலரை நக்கல் விட்டதுக்கான அர்த்தம் எனக்கே பூமராங்காக வரும் என்று நினைக்கவேயில்லை ஓ இதைத்தான் பரேக்கிங் பாயிண்ட்டுன்னு சொல்லுவாங்களோ????
========
ஞாயிற்று
கிழமை ஒருநாள்தான் எங்கள் இருவருக்கும் விடுமுறை என்பதால் ஞாயிறு காலையில் பரபரப்பு இல்லாமல் ஒரு தூக்கம் போடலாம் என்றால் அவள் விடுவதில்லை..
காலையில் சரியாக ஆறாரை மணிக்கு எழுந்து , சிதம்பரத்தை மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தூக்கியே தீருவேன் என்று கங்கனம் கட்டிக்கொண்டு இருக்கும் ஜெயலலிதா போல.. எங்களை எழுப்பியே தீருவேன் என்று முழு முயற்சியில் இறங்குகின்றாள்.. அதில் வெற்றி பெறாமல் ஓய்வதில்லை.. மீறியும் படுத்து தூங்கினால் முகத்தில் ரெண்டு அப்பு விட்டு நான் முழச்சிக்கிட்டு இருக்கேன்.. உங்களுக்கு இன்னா மயிருக்கு அப்படி ஒரு தூக்கம்? என்ற பாவனையுடன் எழுப்பிவிட்டு விட்டுதான் ஓய்கின்றாள்...
======
எந்த
பொருளை நான் சாப்பிட்டாலும் அவளுக்கும் கொடுக்க வேண்டுமாம். சிக்கள் சாப்பிட்டுக்கொண்டு இருந்தேன்.. அதை மட்டும் கொடுத்து இருந்தால் என் மனைவி வானத்துக்கும் பூமிக்கு குதித்து இருப்பாள்… இது சாப்பிடக்கூடாது கண்ணா என்றால் கோபம் மூக்குக்கு மேல் வருகின்றது…. நேராக நடந்து வந்து டமால் என்று ஒரு உதைகொடுத்து விட்டு திரும்ப அவள் அம்மாவிடம் கம்ளெயின்ட் சொல்லப்போகின்றாள்..
=============
அவள் சாப்பிடும் எந்த பொருளையும் சின்னதாக பிட்டு தரக்கூடாது கைக்கு அடங்கவில்லை என்றாலும் முழுதாக கொடுக்க வேண்டும்… இல்லையென்றால் அப்படியே தூக்கி போட்டு
கொடுத்த சின்ன தின்பண்டத்தை கையால்
பிசைத்தோ அல்லது தூக்கி வீசியோ தன் எதிர்ப்பை ஆக்ரோஷமாக தெரிவிக்கின்றாள்.. இப்பையே இப்படி கோவம் வந்தா நான் என்ன செய்ய போறேன்னு எனக்கே தெரியலை...
==========
கரடி
பொம்மைகளை அப்படியே அணைத்துக்கொள்ளுகின்றாள்.. அதனை அவள் தூக்கும் பாங்கு ஒரு குழந்தையை தூக்குவது போல தூக்குகின்றாள்..
========
வேனாம் மச்சான் வேண்டாம் இந்த பொண்ணுங்க காதலு பாடல் எங்கு ஒளித்தாலும் இடுப்பை ஆட்ட ஆரம்பித்து விடுகின்றாள்..
என் மனைவி
நான் வாங்கி வந்த வரம் அப்படி என்று சொல்லி விட்டு தலையில்
கை வைத்து விசனத்துடன் பார்க்கின்றாள்...
இதே போல என் மனைவியின் அத்தை வீட்டுக்கு போனால்
சாமியை காட்டி, உம்மாச்சி காப்பத்து
என்றால் இரு கரம் கூப்பி சாமி கும்பிட்டு விட்டு சாமி படங்களுக்கு எதிரே விழுந்து சேவிப்பதை பார்த்து
என் மனைவி ஆச்சர்யப்பட்டு போகின்றாள்..
--
===========
===========
எதை செய்யக்கூடாது என்று சொல்லுகின்றோமோ? எதை தொடக்கூடாது என்று சொல்லுகின்றோமோ அதை போய் தொடுவதும், அதை செய்வதும்தான் யாழினிக்கு
கை வந்த கலையாக இருக்கின்றது. அப்பன் புத்தி அப்படியே அது கிட்டு வந்து
ஒட்டிக்கிட்டு இருக்கு.. என்று யாழினி செய்யும் சேட்டைகளையும் கோவத்தையும்
பார்த்து சிடு சிடுகின்றாள்... இதில்
கொடுமையான விஷயம் எதுவென்றால் 172 செமீ உயரத்துடனும் 84
கிலோ வெயிட்டுடன் நேரில் போய் கடோத்கஜன் போல நான் நின்று
மிரட்டினாலும், என்னை மதிக்காமல் என்னை கடந்து போய் அந்த பொருளை எடுத்து உடைப்பதை
நினைக்கும் போதுதான் எனக்கு அழுகை அழுகையாக வருகின்றது.
===========.
தவழ்ந்து செல்ல வில்லை நடந்து செல்லும் நுட்பம் கண்டுக்கொண்டு
விட்டாள் எங்கள் மகள்...
அதனால்
எல்லா
இடத்திற்கும் நடந்து சென்று கொண்டு இருக்கின்றாள்..
அவள் உயரத்துக்கு
அலமாரிகளில் இருக்கும் பொருட்கள் எல்லாம் புவியீர்ப்பு
சக்திக்கு எதிர்பேச்சு பேசாமல் அடிமையாகி விடுகின்றன.
வீடே கலவர பூமி போல்
காட்சி அளிக்கின்றது...
கீழே சிதறி கிடைக்கும் பொருட்களை அடுக்கி வைக்கவே ஒரு ஆள் வேலைக்கு வைக்க வேண்டும் போல… அந்த அளவுக்கு யாழினியின் அராஜகம் எல்லை மீறி போய்க்கொண்டு இருக்கின்றது..
ஒன்றும் சொல்ல முடியவில்லை… எதிர்த்து பேசாமல் கைக்கட்டி வாய் பொத்தி பேசாமல் இருப்பதை தவிர எனக்கு வேறு வழியும் புரிய வில்லை...
=====
ஒரு மாதத்துக்கு முன் இரண்டு லிட்டர் புருட்டி பாட்டிலை, பசி மயக்கத்தில் செங்கல்லை தள்ளாடி சுமந்து செல்லும் சித்தாள் போல....
தள்ளடி தள்ளாடி தூக்க முடியாமல் தூக்கி எடுத்து வந்து என்னிடத்தில் கொடுத்தாள்… நான் அதை வாங்கி வைத்துக்கொண்டு மும்முரமாக டிவி பார்த்துக்கொண்டு இருந்தேன்… திரும்ப ஏதோ ஏதோ பேசிக்கொண்டு நடந்து வரும் அவள் கொலுசு சத்தம் கேட்டு திரும்பினேன்..
கண்ணாடி கிளாசை
எடுத்து வந்து கொடுத்து… என்னை பார்த்து அப்பா….
ஜுசிக்பிக்க என்றாள்.....
திரும்ப திரும்ப அதையே சொன்னாள்… அவள் அம்மா இந்த கூத்தை பார்த்து விட்டு அவளுக்கு புருட்டி ஊத்திக்கொடுக்க சொல்லறா என்று சொன்னாள்.. நானும் அவளுக்கு ஊற்றிக்கொடுத்து விட்டு சோபாவுக்கு கீழ் இருந்த சரக்கு பாட்டிலையும் கண்ணாடி கிளாசையும்
சிரமம் பார்க்காமல் எழுந்து
எடுத்து போய் முதல் வேலையாக மறைய வைத்தேன்...
=========
பேச்சு நன்றாக வந்து விட்டது அம்மா, அப்பா எல்லாம் ஸ்பஷ்ட்டமாக
உச்சரிக்கின்றாள்.. அதிலும் அப்பா என்று கொஞ்சலாக காலையில் எழுந்து அழைக்கும் அழகே அழுகு..
ஒத்தா ஒரு குழந்தையை பெத்துட்டு இப்படி கொஞ்சிகிட்டு இருக்காங்களே இந்த காவாலி பயலுங்க என்று நான் பலரை நக்கல் விட்டதுக்கான அர்த்தம் எனக்கே பூமராங்காக வரும் என்று நினைக்கவேயில்லை ஓ இதைத்தான் பரேக்கிங் பாயிண்ட்டுன்னு சொல்லுவாங்களோ????
========
ஞாயிற்று
கிழமை ஒருநாள்தான் எங்கள் இருவருக்கும் விடுமுறை என்பதால் ஞாயிறு காலையில் பரபரப்பு இல்லாமல் ஒரு தூக்கம் போடலாம் என்றால் அவள் விடுவதில்லை..
காலையில் சரியாக ஆறாரை மணிக்கு எழுந்து , சிதம்பரத்தை மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தூக்கியே தீருவேன் என்று கங்கனம் கட்டிக்கொண்டு இருக்கும் ஜெயலலிதா போல.. எங்களை எழுப்பியே தீருவேன் என்று முழு முயற்சியில் இறங்குகின்றாள்.. அதில் வெற்றி பெறாமல் ஓய்வதில்லை.. மீறியும் படுத்து தூங்கினால் முகத்தில் ரெண்டு அப்பு விட்டு நான் முழச்சிக்கிட்டு இருக்கேன்.. உங்களுக்கு இன்னா மயிருக்கு அப்படி ஒரு தூக்கம்? என்ற பாவனையுடன் எழுப்பிவிட்டு விட்டுதான் ஓய்கின்றாள்...
======
எந்த
பொருளை நான் சாப்பிட்டாலும் அவளுக்கும் கொடுக்க வேண்டுமாம். சிக்கள் சாப்பிட்டுக்கொண்டு இருந்தேன்.. அதை மட்டும் கொடுத்து இருந்தால் என் மனைவி வானத்துக்கும் பூமிக்கு குதித்து இருப்பாள்… இது சாப்பிடக்கூடாது கண்ணா என்றால் கோபம் மூக்குக்கு மேல் வருகின்றது…. நேராக நடந்து வந்து டமால் என்று ஒரு உதைகொடுத்து விட்டு திரும்ப அவள் அம்மாவிடம் கம்ளெயின்ட் சொல்லப்போகின்றாள்..
=============
அவள் சாப்பிடும் எந்த பொருளையும் சின்னதாக பிட்டு தரக்கூடாது கைக்கு அடங்கவில்லை என்றாலும் முழுதாக கொடுக்க வேண்டும்… இல்லையென்றால் அப்படியே தூக்கி போட்டு
கொடுத்த சின்ன தின்பண்டத்தை கையால்
பிசைத்தோ அல்லது தூக்கி வீசியோ தன் எதிர்ப்பை ஆக்ரோஷமாக தெரிவிக்கின்றாள்.. இப்பையே இப்படி கோவம் வந்தா நான் என்ன செய்ய போறேன்னு எனக்கே தெரியலை...
==========
கரடி
பொம்மைகளை அப்படியே அணைத்துக்கொள்ளுகின்றாள்.. அதனை அவள் தூக்கும் பாங்கு ஒரு குழந்தையை தூக்குவது போல தூக்குகின்றாள்..
========
வேனாம் மச்சான் வேண்டாம் இந்த பொண்ணுங்க காதலு பாடல் எங்கு ஒளித்தாலும் இடுப்பை ஆட்ட ஆரம்பித்து விடுகின்றாள்..
என் மனைவி
நான் வாங்கி வந்த வரம் அப்படி என்று சொல்லி விட்டு தலையில்
கை வைத்து விசனத்துடன் பார்க்கின்றாள்...
இதே போல என் மனைவியின் அத்தை வீட்டுக்கு போனால்
சாமியை காட்டி, உம்மாச்சி காப்பத்து
என்றால் இரு கரம் கூப்பி சாமி கும்பிட்டு விட்டு சாமி படங்களுக்கு எதிரே விழுந்து சேவிப்பதை பார்த்து
என் மனைவி ஆச்சர்யப்பட்டு போகின்றாள்..
--
===========
===========
எதை செய்யக்கூடாது என்று சொல்லுகின்றோமோ? எதை தொடக்கூடாது என்று சொல்லுகின்றோமோ அதை போய் தொடுவதும், அதை செய்வதும்தான் யாழினிக்கு
கை வந்த கலையாக இருக்கின்றது. அப்பன் புத்தி அப்படியே அது கிட்டு வந்து
ஒட்டிக்கிட்டு இருக்கு.. என்று யாழினி செய்யும் சேட்டைகளையும் கோவத்தையும்
பார்த்து சிடு சிடுகின்றாள்... இதில்
கொடுமையான விஷயம் எதுவென்றால் 172 செமீ உயரத்துடனும் 84
கிலோ வெயிட்டுடன் நேரில் போய் கடோத்கஜன் போல நான் நின்று
மிரட்டினாலும், என்னை மதிக்காமல் என்னை கடந்து போய் அந்த பொருளை எடுத்து உடைப்பதை
நினைக்கும் போதுதான் எனக்கு அழுகை அழுகையாக வருகின்றது.
===========.
பெட்ரூமில் இருந்து
பக்கத்து ரூமில் இருக்கும் கம்ப்யூட்டர் ரூமுக்கு தினமும்
காலையில் தத்தக்கா புத்தக்கா என்று நடந்து வந்து மும்முரமாக நான் ஸ்கிரிப்ட் எழுதிக்கொண்டு இருக்கும் போது…
அப்பா……….. அப்பா………. என்று
கொஞ்சலாக அழைத்து விட்டு என் மடி மீது ஏறி உட்கார்ந்து
கொள்வது காலையில் எழுந்ததும் அவள் செய்யும் முதல் வேலை...
=========
பைக்கில் முன் பக்கம் உட்கார வைத்தால் அவளும்
பைக் ஓட்ட வேண்டும் என்று, பெட்ரோல் டேங்கில் படுத்து ஹெண்டில் பாரை பிடிக்க
வேண்டும் என்று இப்போதே ஆசைப்படுவதும் அதை தடுத்தால் என் கையில்
ரெண்டு வைப்பதும் யாழினிக்கு கை வந்த கலையாக இருக்கினந
உடம்பெல்லாம் வேர்க்குரு வந்து அவளை படுத்தி
எடுக்கின்றது...முதல் சம்மரை யாழினி
எதிர்க்கொள்வதால் அப்படி இருக்கின்றது.. பேசமா இவளுக்காகவே யூரோப் பக்கம்
போயிடலாம்னு இருக்கேன்..
=========
யாழினி
மெயில் ஐடிக்கு தொடர்ந்து மெயில்கள் வந்த வண்ணம் இருக்கின்றன... சில மெயில்களுக்கு
நான் தகுதியானவனா என்று தெரியவில்லை
அப்படி ஒரு பாசத்தை என் மீதும் யாழினி மீதும் காட்டுவதை நினைக்கும் போது
எனக்கு நெகிழ்ச்சியாக இருக்கின்றன.. முக்கியமாக யாழினிக்கு நிறைய அத்தைகள் கிடைத்து இருக்கின்றார்கள். உங்க அப்பா எழுத்தை
விடாமல் படித்து வருகின்றேன் என்று சொல்லும் போது ரொம்ப சந்தோஷமாக இருக்கின்றது...
என் கடிதம் யாழினிக்கு வந்து சேர்ந்ததா
என்று கேட்பவர்களுக்கு ரிப்ளே அவ
பண்ணுவா... தி பெஸ்ட் லட்டர்ஸ்சை நான் இங்க போடறேன்.. உங்க லட்டர் போட வேண்டாம்னு
குறிப்பிட்டு இருந்தா நான் கண்டிப்பாக
போடலை.. ஓகே..வா.. இந்த யாழினி அப்பா பதிவுக்கு உங்கள் விவரிவான எண்ணங்களை யாழினி மெயில் முகவரிக்கு தெரிவிக்கவும் .. நிறைய பேர் எனது மெயிலுக்கு போட்டு விடுகின்றார்கள்.. yazhinijackiesekar@gmail.com இது வேறு அது வேறு
=========
hi jackie sir,
i am janaa from malaysia
nan unga blockoda regular reader
my native is sankari salem dt.
unga block padikkumpothu
normala namba close friendkuda "apparam machan enna matter"
apdingara mathiri oru feel irukku , athuthan ungala neraya perkitta reach panna vechu irukkunnu nan nenaikiren
nanga ellam foreign work panrathala happya irukaratha ellarum nenaippanga
but ennathan salary vankinalum oru function , oru tour illa oru chinna shopping pogum pothum
varra antha feeling varthaila solla mudiyathu....but unga mathiri sila peraala antha feelingsa
koncham koraikka mudiyuhtu....hats off to u..ungaloda ella pathivum etho oru vagaila
ellaraium bhathikuthu...so keep on writing...
ithu ennoda birthday gift for ur YAZHINI kuttikku
yerkanave azhaga irukara yazhinioda pera
ennala mudincha alavukku azhagakirikken
========
i am janaa from malaysia
nan unga blockoda regular reader
my native is sankari salem dt.
unga block padikkumpothu
normala namba close friendkuda "apparam machan enna matter"
apdingara mathiri oru feel irukku , athuthan ungala neraya perkitta reach panna vechu irukkunnu nan nenaikiren
nanga ellam foreign work panrathala happya irukaratha ellarum nenaippanga
but ennathan salary vankinalum oru function , oru tour illa oru chinna shopping pogum pothum
varra antha feeling varthaila solla mudiyathu....but unga mathiri sila peraala antha feelingsa
koncham koraikka mudiyuhtu....hats off to u..ungaloda ella pathivum etho oru vagaila
ellaraium bhathikuthu...so keep on writing...
ithu ennoda birthday gift for ur YAZHINI kuttikku
yerkanave azhaga irukara yazhinioda pera
ennala mudincha alavukku azhagakirikken
========
மிக்க நன்றி ஜனா.. நேரம் இருக்கும் போது அழையுங்கள்......
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS..
.

ஜாக்கி , பொதுவா இப்ப நான் படிக்கறதோட சரி, கமென்ட் எங்கயும் போடறதில்லை. யாழினியின் குறும்புகள் கமென்ட் போட வைத்து விட்டது.பிடிவாதம்,கோபம் எல்லாம் போக போக குறைந்து விடும்
ReplyDeleteKAALAKKURA YAZHINI PAPPA.........SUPER........
ReplyDeleteAdhukulla Chattingla irangittanga. Photo is cute :).
ReplyDeletecute photos jackie anna
ReplyDeletecute photo - yalini's photo while she is chatting
Whatever we do (good or bad), will come back to us. From there we need to correct our mistakes. ( eg. Sarakku glass). Jackie enjoy. All the best.
ReplyDeleteதவழ்ந்து செல்ல வில்லை நடந்து செல்லும் நுட்பம் கண்டுக்கொண்டு விட்டாள் எங்கள் மகள்///muthal variye padikka thoonduthu arumai,,,,
ReplyDeleteகுழந்தைகள் பிறந்தவுடன் பொறுப்பு வந்து விடுகின்றது. வளரும் போது பயம் வரும் என்று நம்பிக்கை கொண்டிருந்தேன். ஆனால் கவித்துவமான நடையில் என்று வேண்டுமானாலும் படித்து இன்புறலாம் என்ற உங்கள் எழுத்து நடை வசீகரித்தது. குழந்தைகள் என் (எங்கள்) அன்பு முத்தங்கள்.
ReplyDeleteviyarkuruvukku... calamine lotion podunga jackie... (lacto calamine, etc)
ReplyDeleteviyarkuru-vukku calamine lotion podunga... best for babies...
ReplyDelete//என்னை கடந்து போய் அந்த பொருளை எடுத்து உடைப்பதை நினைக்கும் போதுதான் எனக்கு அழுகை அழுகையாக வருகின்றது.
ReplyDelete//
sema...
எஞ்சாய் டா ஜாக்கி..
ReplyDeleteஎஞ்சாய் டா ஜாக்கி..
ReplyDeleteAnna Super...
ReplyDeleteEnga veetilayum 2 vanduka eppaditha tension Paduthranga...(7 years,3 years...) Eppavumae umpire dutythan...
Enjoynna....
Yazhini Pappakku Vazhthukkal
Kavitha Saran
This entry brings a wide grin on my face. Now you have a boss.
ReplyDeleteWelcome to fatherhood.
\\ஓ இதைத்தான் பரேக்கிங் பாயிண்ட்டுன்னு சொல்லுவாங்களோ????// ஒரு தடவை நாம கூகுள் பஸ்ல பேசிட்டு இருக்கும் போது சொன்னேன் தெரியுமா,, நீங்களுக்கு ஒரு நாள் இப்படி உங்க பொண்ணை பற்றி பேசிட்டு இருப்பீங்கன்னு :))))
ReplyDeleteயாழினியை தூக்கி வச்சிருக்காரே, அது யாரு? உங்க மச்சினனா?
ReplyDeleteகரடி பொம்மைன்னு போட்டு, அவர் படத்தை போட்டு வச்சிருக்கீங்களே... அண்ணிகிட்ட வத்தி வச்சிட்டேன்... LOL.
Annae..kojam unga amma t aketu parunga... nengalum inda mari rowdism panni irupinga....
ReplyDeletePAAPPAA MAAMAA VAEREN... SELLATHUKKU ELLAAM VAANGITHAAREN... APPAAVUKKU POOSAI THAREN...
ReplyDeleteநன்றி நண்பர்களே.. உங்கள் பிரியத்துக்கு..
ReplyDeleteஇனி நான் உங்கள் வாசகன்.
ReplyDelete