தமிழர்களே சிந்திப்பீர் கடந்த மாதம் 20 /03 /08 அன்று குறிப்பாக தென் தமிழகம் வெள்ளத்தால் நிறைந்தது நாம் அனைவரும் அறிந்ததே, கடண் வாங்கி பயிர் செய்த தென்னக விவசாயி ஒருவர் தற்கொலையே செய்து கொண்டார், நாம் மறந்து இருப்போம் அதற்க்கு காரணம் வாட்டாள் நாகராஜ் மற்றும் தமிழ் நடிகர்களின் உண்ணாவிரதமாக இருக்கலாம், இந்த எதிர்பாராத கோடை மழை விவசாயிகளின் வாழ்வை கேள்வி குறியாக்கியது,? மிகச்சரியாக 20 நாட்கள் கழித்து 6 வது சம்பள கமிஷனை எதிர்பார்த்து இருக்கும் அதிகாரவர்க்க அதிகாரிகள், கையில் மினரல் பாட்டில் சகிதம் தென்னக விவசாயிகள் துயர் துடைக்க எலிகாப்டர் ஏறி ஓடோடி வந்தார்கள் அவர்கள் வரும் வரை மழை நீர் வடியாமல் இருக்குமா? நீர் வடிந்து விட்டது . மத்திய அய்வு குழுவினர் மழை பாதித்த பகுதிகளை புகைபடத்தில் பார்த்து ச்சச்சோ என்று வருத்தபட்டனர், வந்த மத்தியகுழு எருமைகள் அமெரிக்காவில் இருந்து வரவில்லை நம் தலைநகர் டெல்லியில் இருந்துதான் வர வேண்டும், மத்திய அரசுக்கு போர்கால நடவடிக்கை என்றால் என்ன என்று தெரியவில்லை , பங்கு சந்தை சரிந்தால் உடனே பதறும் மத்திய அரசு , விவசாயிகள் என்றால் இளக்காரமா? மத்தியஅரசுக்கு ஒரு வேண்டுகோள் “ நிலவுக்கு மனிதனை அனுப்பவதில் காட்டும் ஆர்வத்தை ஒரே நிலப்பரப்பில் வாழும் தமிழன் மீதும் காட்ட வேண்டுகிறேன்” நம்புங்கள் தமிழர்களே நாம் சுதந்திரம் பெற்ற 60 ஆண்டுகால இந்தியாவில் வாழ்கிறோம்
_______________________________________________________________________________________
அன்புடன்- நிழற்படம் ,கருத்து . ஜாக்கி சேகர்
_______________________________________________________________________________________
Its a true Statement . . .
ReplyDelete