இந்த கோடையிலும் அதே தவறு நடக்க போகின்றது


அறுபது வருடத்தற்க்கு முன் நம்மை ஆட்சி செய்தவர்கள் ஆங்கிலேயர்கள் , அவர்களின் உடல்வாகு நமது தட்ப வெப்ப நிலையை ஏற்று கொள்ள முடியவில்லை, அதனால் அப்போது நீதி மன்றங்களில் பணி புரிந்த வெள்ளை கார துரைகள் , நீதிமன்றங்களுக்கு விடுமுறை விட்டுவிட்டு தன் மனைவிமார்களுடன் சல்லாபிக்க கொடைக்கானல், ஊட்டி சென்று விடுவார்கள், அதே போல் அப்போதைய மக்கள் தொகை ,பாரதி சொன்னது போல் முப்பதுகோடி முகம் மட்டுமே நமக்கு இருந்தது. அப்போது நாம் அடிமை வாழ்வு வாழ்ந்தோம் ரு பாய் 55 க்கு விற்ற சமையல் எண்ணை, ருபாய் 110 விலை ஏறிய போது எப்படி எந்த கேள்வியும் கேட்காமல் அப்பளம் பொறித்து சாப்பிடுகிறோமோ , அதே போல் தான் அப்போதைய இந்தியர் வாழ்கையும் இருந்தது , ஆனால் இன்று நாம் சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகால ஜனநாயக இந்தியாவில் வாழ்கிறோம் , ஓய்வு ஒழிச்சல் இன்றி நாம் அனைவரும் ஒரே சிந்தனையுடன் முப்பது கோடி மக்கள் தொகையை இரவு பகல் பாராது உழைத்து 110 கோடிக்கு மக்கள் தொகையை உயர்த்தினோம். இதனால் பிரச்சனை அதிகமானது , பிரச்சனையை தீர்க்க வேண்டிய நீதிபதிகள் அதுவும் இந்திய நீதிபதிகள் கோடை விடுமுறை கோர்டுக்கு விட்டு விட்டு , தாங்கள் ஓய்வு எடுப்பது என்ன நியாயம் ? ஆண்டுக்கு பல கோடி வழக்குகள் நீதிமன்ற கொடன்களில் வவ்வால் நாற்றத்துடன் தூங்குவதாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது . இந்த லட்சனத்தில் பள்ளிபோல் இவர்களுக்கு கோடை விடுமுறை தேவையா? கட்டாய ஹெல்மட் சட்டத்தை அரசு எதிர்த்து்ம் , பஸ்ஸில் செல்லும் டிராபிக் ராமசுவாமி வழக்கு தொடர , அதை அப்படியே ஏற்றுக்கொண்டு பொது ஜனத்தை 108 டிகிரி வெய்யிலில் தலைகவசம் அணியவைத்து , வயிற்றெரிச்சல் கொட்டிக் கொள்ளும் நீதிதுறை இந்த விஷியத்தில் கவனம் செலுத்துமா ....?

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner