
தமிழ்மண நட்சத்திர பதிவராக தேர்ந்து எடுக்கபட்ட போதே உள்ளுக்குள் ஒரு குருவி கத்தியது... அதே போல் ஷுட்டிங்கில் வேலை பெண்டு நிமிரும் அளவுக்கு வேலை, வேலை...
ஆனால் தம்பி நையான்டி நைனா கொடுத்த ஐடியா படி எற்க்கனவே பொதுவான பதிவுகள் எழுதி டிராப்டில் சேமித்து வைத்து விட்டேன்....
ஒரு மூன்று நாட்கள் எந்த பிரச்சனையும் இல்லை... அப்படிஎன்றால் பெரிதாய் இல்லை எனலாம் ... நான் ஷுட்டிங் போனதும் டிராப்டில் உள்ள போஸ்ட்டைதமிழ்மணத்திலும் தமிளிஷ்லும் இணைக்க என் மனைவிக்கு, ஒரு மணிநேரம் தேவைபட்டது... என்றால் பார்த்து கொள்ளுங்களேன்.. அதாவது நெட் கனெக்ஷன் வந்து வந்து போய் கண்ணா மூச்சி ஆட்டம் ஆடிக்கொண்டு இருந்தது....
அந்த டாட்டா இன்டிகாம் நாதாரிகளுக்கு போன் செய்தால் சர்வர் டவுன் என்று பழைய பல்லவியே பாடிக்கொண்டு இருந்தார்கள்... ஒரு கட்டத்தில் கொஞ்சம் நஞ்சம் வந்து கொண்டு இருந்த நெட் கனெக்ஷன் கூட அதன் பிறகு வர வில்லை... காரணம் கேபிளில் பிரச்சனை என்றார்கள்....நான் தவித்தேன் துடித்தேன் அலறினேன்.... வேலைக்கு ஆக வில்லை.... சரி அதன் பிறகு பெண் டிரைவில் ஏற்க்கனவே நோட் பேடில் எழுதி வைத்ததை பிரவுசிங் சென்ட்ர் போய் போஸ்ட் செய்தேன் அதனாலே யாருக்கும் என்னால் பின்னுட்டம் கூட போட முடியவில்லை....
ஆனால் முகம் தெரியாத உங்களால் இது சாத்தியம் அயிற்று தமிழ்மண பதிவராக நான் முதல் பக்கத்தில் வந்த போது அறிமுக பதிவுக்கு 52 கமென்ட்ஸ்.... என் மெயில் பாக்ஸ் நிரம்பி வழிந்தது....எனக்கு கண்களில் ஒரு ஓரமாக நீர்த்திவிலைகள்..
அதன் பிறகுஎல்லா பதிவுகளுக்கும் குறைந்தது 25 கமென்டாவது நான் பதில் போடாமலும் வந்து கொண்டுதான் இருந்தது... இந்த வெற்றி உங்களாலும் உங்கள் புரிதலாலும் சாத்தியம் ஆயிற்று... நன்றி எனக்கு பிரதிபலன் பார்க்காது இந்த ஒரு வாரத்துக்கு தோள் கொடுத்த தோழர்கள் தோழிகள் கீழே.....
நித்யகுமாரன்... என்னை வலையுலகில் அறிமுகபடுத்தியவர்...முன்பெல்லாம் நிறைய எழுதியவர், கல்யாணம் ஆனதும் எழுதுவதை குறைத்துக்கொண்டவர்...என்னை போல் தடவி டைப் அடிப்பது போல் இல்லாமல் பத்து நிமிடத்தில் பதிவு போடும் வேகம் இருக்கின்றது ஆனால் ஏன் எழுதவில்லை என்று எனக்கே தெரியவில்லை.....
வெட்டிபயல் ....இவர் எப்போதாவது என் வலை பக்கத்து வருபவ்ர் முதல் வாழ்த்து இவருடையதுதான்...
காத்திகை பாண்டியன்.. நல்ல நண்பர் எனது கைபேசி எண் வாங்கி பேசி அறிமுகபடுத்திக்கொண்ட நண்பர்...தன் வரலாறுகளை திறம்பட சொல்லுபவர்...இரண்டு பேருக்கும் உள்ள ஒற்றுமை வாத்தியர் தொழில்.....
நட்புடன் ஜமால்.... பதிவு போஸ்ட் பண்ண அடுத்த நொடி இவர்கிட்ட இருந்து பின்னுட்டம் வர தவறுவதே இல்லை...எனக்கு ஆச்சர்யம் ஏற்படுத்தும் நபர்,சாட்டில் பேசி என்னிடம் நட்பானவர்....
பிரேம்ஜீ... எந்த ஒரு டெக்னாலஜி பத்தியும் சட்டென தகவல் சொல்லுபவர், இவரது பக்கத்தில் திரைப்பட டிரைலர் என்னை கவர்ந்த விஷயம்...
வந்தியதேவன்.. எனக்கு சுவாரஸ்ய வலை பதிவு விருது கொடுத்த புண்ணியவான், எனது சான்ட்விச் அன்ட் நான்வெஜ் பரம ரசிகன்.... நான்வெஜ் சரியில்லை என்று அடிக்கடி வருத்தம் கொள்பவன்
கேபிள் சங்கர்... இரண்டு பேருக்கும் உள்ள ஒரே ஒற்றுமை இருவரும்சினிமா காதலர்கள்... அதை தவிர்த்து நல்ல நண்பர்...எனக்கு இவரிடம் மிகவும் படித்தது உணவை ருசித்து சாப்பிடுபவர்.....
மங்களுர் சிவா....பதிவுலகில் நான் முதன் முதலாக நேரில் சந்தித்த நபர், இவர் திருமண போட்டோவை நான்தான் எடுத்தேன் என்று நினைக்கின்றேன்.... என் மேலே ரொம்ப பாசம். பத்து நாள் வலை பக்கம் வரலைன்னாலும், பதினோறாவது நாள் வந்து, எனது எல்லா பதிவையும் படிச்சிட்டு பின்னுட்டம் போடும் பாசக்கார பயபுள்ள.. எனக்கு முதன் முதலில் தொடர்ந்து பின்னுட்டம் போட்டு என்னை உற்சாகபடுத்தியவன்....
கிரி.... கிரி தலைவர் ரஜினி... நம்ம தலைவர் கமல்...அதையும் மீறி எனக்கு கிரியோட எழுத்து பிடிக்கும்.. சிங்கபூர் பற்றி எழுதிய கட்டுரை... சமீபத்தில் பாடகர் மைக்கேல் பத்தி எழுதின கட்டுரை அருமை....
வண்ணத்து பூச்சி... என்னோட நலனில் அதிகம் அக்கரை கொண்டவர், எப்பவும் போன் பண்ணி அடுத்து என்ன பண்ண போற என்று ஆர்வமாய் கேட்பவர்....இவரும் ஒரு சினிமாகாதலர்.. முதன் முதலில் உலக படவிழாவில்தான் சந்தித்து கொண்டோம்.....
கோவி கண்ணன்....மனதில் பட்டதை காம்பரமைஸ் செய்துக்கொள்ளாமல் விஷயத்தை சொல்லும் வல்லவர் எனக்கு,தொடர்ந்து ஒரு வாரம் பின்னுட்டம் இட்டு அசத்தியவர்....
பைத்தியக்காரன்... பைத்தியக்காரன் அரசியல் பார்வை வித்தியசமானது.. வேற ஒரு கோனத்தில் யோசி்த்து அதனை திறம்பட சவைபட சொல்லுபவர்...எப்போதுமே ஜாக்கி கேமராவோட வந்து விழாவை சிறப்பிக்கனும்னு அன்போடு சொல்லுபவர்....
டோன்லீ... சில பல பதிவுகளை படித்து எனக்கு தொடர்ந்து பின்னுட்டம் ஈடுபவர் நல்ல நண்பர்
சந்தனமுல்லை.... எப்போதாவது வந்தாலும், என் நினைவில் இருப்பவர்
குசும்பன்.... பெயருக்கு ஏற்றார் போல் குசும்பு திலகம்தான் இவரின் நக்கல் எனக்கு மிகவும் பிடிக்கும்..பொதுவாக வலைபதிவர்களை கலாய்க்கும் கற்பனைக்கு ஈடு இனை இல்லை.....
நையான்டி நைனா... பார்பதற்க்குதான் நையான்டி நக்கல் எல்லாம்... ஆழ்ந்த கருத்துக்களை சொல்லும் அறிவாளி... எனது உடன் பிறவா சகோதரன்... தானே போன் செய்து அறிமுகப்டுத்திக்கொண்டவன்...இவனின் என் மீதான பாசம் என்னை சிலிர்க்க வைக்கும்...
சரவணகுமரன்.... தொடர்ந்து என் எழுத்துக்களை வாசித்து பின்னுட்டம் பொடுபவர்.... நன்றி தோழர்
துபாய்ராஜா.... சமீபத்தில் எனது பதிவில் பின்னுட்டம் இட்டு அறிமுகமான நண்பர்.. தொடர்ந்து வாசித்து வாழ்த்தும் கமென்டும் சொல்லும்நண்பர்...
கலையரசன்.... எங்கள் ஊர் பக்கத்து ஊர் ஆளு... எப்பவுமே முக்கிய பதிவுக்கு பின்னுடத்தில் தன் கருத்தை சொல்லும் பாசக்கார பய புள்ள... நல்ல நண்பர்,இவர் பதிவுகளின் சில நக்கல்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும்
சுரேஷ்குமார்.... சில நாட்களாய் அறிமுகம்.... என்னை அஜீத்துக்கு பிறகு பலர் தலை என்று அழைக்கின்றார்கள் ஏன் என்பது உங்கள் எல்லோருக்கும் தெரிந்தது தானே....
சுப்பையா.... எனக்கும் சுப்பையா சாருக்கும் பெரிய அறிமுகம் இல்லை என்றாலும் வாழ்த்த மனது வேண்டும்.... நன்றி சுப்பையா சார்...
ராஜன்... சமீபமாய் தொடர்ந்து என் பதிவுகளை வாசித்து பின்னுட்டம் இடும் நண்பர்... நன்றி ராஜன்..
ஸடார்ஜன்... வலைப்பூக்களில் இப்போதுதான் அறிமுகம் என்றாலும் விடாமல் வாசி்த்து எனக்கு வாழ்த்தும் பின்னுட்டமும்... போட்டு திக்கு முக்காட செய்பவர்...நன்றி நண்பரே...
புதுவை சிவா..... தொடர் வாசிப்பு நண்பர்...நேரங்கிடைக்கும் போது பின்னுட்டம் இடுவார்.. என் வலையில் சின்ன பிரச்சனை இருந்த போது டோன்டு விடம் ஜாக்கிக்கு பின்னுட்டம் போட முடியவில்லை என்று வருத்தபட்டதாக நியாபகம்...நன்றி சிவா
தண்டோரா.... இவரின் மகள் என் கல்லூரி மாணவி.. ஆனால் பல வருடங்களுக்கு முன்பே பாண்டி கன்னியக்கோவிலில் பாரில் பீர் சாப்பிட்டு கலைந்து போய் இருக்கின்றோம்....தலைவருக்கு கோபால புரம் என்றால் எட்டிக்காய் கசப்பு... பதிவை மீறி நல்ல நண்பர்... இவரின் அலுவலகம் எனக்கு இளைப்பாறும் வேடந்தாங்கல்....தமிழ் பிழைகள் நான் திருத்திக்கொள்ள வேண்டி அன்பாய் ,சில நேரங்களில் அதட்டி சொல்லுபவர்....பீர் வாசனையை விட இலக்கிய வாசனை இவரிடம் அதிகம்....
துளசிகோபல்... டீச்சரின் பயண பார்வைகள் வெகு அழகு...சில கருத்துக்களை விதண்டாவாதம் செய்யாமல் உண்மை இருப்பின் அதன் பக்கம் நிற்பவர்.... எப்போதாவது என் வலைபக்கம் வருபவர்.. எப்போதவது வந்தாலும் நல்ல பின்னுட்டம் இட்டு என் தமிழ் பிழைகளை உரிமையாய் திருத்தும் அன்பு டீச்சர்...
ஜெட்லி... என் மீது நேசம் கொள்ளும் இன்னோருதம்பி....முக்கியமாக இசிஆர் பக்க தியேட்டர் பற்றி இவர் எழுதி இருக்கும் பதிவுகள் அருமை என்பேன்....
ஆசிப் மீரான்.... வலையுலகில் அண்ணாச்சி என்று செல்லமாக அழைக்கும் மாஸ் ஹீரோ ....இவ்ரின் பதிவுகள் சிம்பிளாக இருந்தாலும் நீட்டாக இருக்கும்...என் எழுத்து பிழைகளை வாழை பழத்தில் ஊசி ஏற்றுவது போல் சொல்லி காட்டுபவர் நன்றி அண்ணாச்சி....
புருனோ.... பேருக்கதான் டாக்டர் பல விஷயங்களை இவருடன் விவாதிப்பதில் எனக்கு அலாதி ஆனந்தம்...சில கேள்விகளை எதிராளி நகராமல் ஓடாமல் ஓளியாமல் இருக்கும் படி நச் கேள்விகளை லாஜீக்கோடு கேட்பவர்.....நல்ல நண்பர்.....என் மீது எப்போது பாசம் வைத்து இருப்பவர்....நன்றி டாக்டர்....
நான் ஆதவன்.... இப்போதெல்லாம் என் பின்னுட்டங்களில் தொடர்ந்து நண்பர் ஆதவனை பார்க்கின்றேன் மிக்க நன்றி ஆதவன்....
வெயிலான்....நல்ல நண்பர்...நல்ல விஷயங்கள் நடக்கும் போது சட்டென கைகுலுக்கும் தோழர்....
அது ஒரு கனாக்காலம்... நான் சமீபமாய் கேள்வி படும் நபர் வாழ்த்து தெரிவித்தமைக்கு நன்றி நண்பரே...
யுவகிருஷ்னா....ஒரு சில நாட்களுக்கு முன் ,மூத்த பதிவராய் ஒரு மணி நேரத்துக்குமேலாய் என்னை தொடர்பு கொண்டு அறிவுரை சொன்னவர்... என் எழுத்துக்களை பாராட்டியவர்....வளரும் போது வரும் பிரச்சனைகளை களைய கற்றுக்கொடுத்தவர்... நன்றி லக்கி
வெண்பூ.... மங்களுர் சிவா போல் எனக்கு தொடர்ந்து என் எழுத்தை வாசித்து பின்னுட்டம் போட்டு என் எழுத்தை சீர்படுத்திய நண்பர்....தற்போது வேலை பளு காரணமாக எப்போதாவது தலை காண்பிக்கின்றார்... நன்றி நண்பா....
டிவி ராதாகிருஷ்ணன்.... எப்போதாவது வரும் நண்பர் இருப்பினும் வாழ்த்து தெரிவித்தமைக்கு என் நன்றிகள்...
தமிழ் பிரியன்.... தொடர்ந்து நண்பர் தமிழ் என் பதிவுகளை படிக்கின்றார் என்று நினைக்கின்றேன்.... நன்றி தமிழ்பிரியன்
பிஸ்கோத்துபயல்.... தொடர்ந்து வாசிக்கும் நண்பர்...தொடர்ந்து பின்னுட்டம் இட்டு என்னை ஊக்க படுத்துபவர்....நன்றி பிஸ்கோத்துபயல்....
சகாதேவன்.... ஜாம்பவான் ஒளிப்பதிவாளர்களை போல் நான் பிரகாசிக்க வாழ்த்திய நண்பர் சகாவுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்....
சதங்கா...பெரிய பரிட்சயம் இல்லா விட்டாலும் என்னை வாழ்த்திய சதங்காவுக்கு என் நன்றிகள்
அக்னிபார்வை.... ஏதாவது டெக்னிக்கலாக தெரியவேண்டுமாயின் உடனே அக்னிக்கு போன் அடித்து சந்தேகம் கேட்பேன்... உடன் சந்தேகம் நிவர்த்தி் செய்யபடும்... நல்ல நண்பர்... பதிவர் சந்திப்பில் கடைசி கடைசியாக போவது நாங்கள்தான்...
வால்பையன்.... தொடர்ந்து பின்னுட்டம் இட்டு கலக்கும் நண்பர் ஆங்கில பட ஹீரோக்களிடம் எனக்கு பிடித்த பல விஷயங்கள் வாலுக்கும் பிடிக்கும்....சில பின்னுட்டங்களில் நக்கல் ஜாஸ்த்தியாக இருக்கும்....நன்றி வால்
சூரியன்... சமீபகாலமாய் பழகிய நண்பர் தொடர் பின்னுட்டம் இட்டு என்னை உற்சாக படு்த்துபவர்...நல்ல நண்பர் உலக படங்கள் மீது காதல் கொண்டவர்..
பிரதீப்பாண்டியன்... எனது பதிவுகளை தொடர்ந்து வாசிப்பவர் என்னோடு நட்புபாராட்டுபவர் உலகபடவிழாவில் கலந்து கொள்ள துடிப்பவர்... நன்றி பிரதீப்...
ஆர் ஆர்... இப்போதுதான் கேள்வி படுகின்றேன் வாழ்த்தியமைக்கு நன்றி
கீத் குமாரசாமி... இவரும் சினிமா காதலர்தான் பல பதிவுகளை வாசித்து இருக்கின்றேன்... கமல் விரும்பி என்று நினைக்கின்றேன் நன்றி கீத்....
ராஜ்குமார்.... என் எழுத்துக்களில் உள்ள எளிமையையும் வளமையையும் சிலாகிப்பவர்.. என் எண்ணங்களை போலவே சிந்திப்பது ராஜிக்கு மிகவும் பிடித்தமானது. ஒரே அலைவரிசையில் சிந்திப்பது என்பது சந்தோஷமான விஷயம்தானே.... நன்றி ராஜ்
சீனா... எப்போதாவது வந்தாலும் தொடர்ந்து என்னை உற்சாகபடுத்தி வருபவர்....
நன்றி சீனா
கல்ப் தமிழன்.... நன்றி கல்ப் தமிழா உங்களை போன்றவர்களின் தட்டிக்கொடுத்தலே எனக்கு மிகுந்த உற்சாகத்தை தருகின்றது.....
கேஎஸ் முத்துபாலகிருஷ்ணன்.... முகம் தெரியாத நீங்கள் எனக்கு பாராட்டு வாழ்த்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி....
என் பக்கம்.... எப்போதாவது வந்தாலும் தொடர்ந்து வரும் என் பக்கத்துக்குநன்றி என் பக்கம் தொடர் வாசிப்புக்கும் பின்னுட்டத்திற்க்கும்... நன்றி
பேரரசன்.... வாழ்த்து தெரிவித்த அரசனாருக்கு என் நன்றிகள்
மஞ்சூர் ராஜா... என்னை பெரிய திரையில் வெற்றி பெற உளமாற வாழ்த்தியமைக்கு என் நன்றிகள்..
சுரேகா..... என்னை பாராட்டி பின்னுட்டம் இட்ட நண்பர் சுரேக்காவுக்கு என் நன்றிகள்
கோஸ்ட்.... என் படங்களை பாராட்டியமைக்கு என் நன்றிகள் நன்பா
நர்சிம்.... நன்றாக கலாய்பதில் வல்லவர்...இவரின் எழுத்துக்கள் எனக்கு பிடிக்கும் நல்ல நண்பர்
கதிர் ஈரோடு..... நன்றி கதிர் எனது பக்கத்தை வாசித்து பின்னுட்டம் இட்டதிற்க்கு...
அத்திரி.... நக்கல் நையாண்டியோடு சமகால அரசியலை அலசுபவர் பல நாட்களாக என் வலைப்பக்கம் பார்க்க முடிவதில்லை...நச் சென கமென்ட் போடுபவர்....
ராஜ்... தொடர்ந்து வாசிப்பவர் ஆங்கில படங்கள் மீதான ஆர்வம் நிறைய... மர்டர் அட் 1600 படம் விரைவில் எழுதுகின்றேன்.. டிவிடி கிடைக்கவில்லை அதனால் இந்த தாமதம்...
ஸ்ரீராம்.... பாஸ்டன்.... சமுக கோபங்கள் அதிகம் உள்ள நண்பர்... பேசுவதை விட நம்மால் ஏதாவது செய்யவேண்டம் என்று கங்கனம் கட்டிக்கொண்ட அலைபவர்.. எனத இந்த நிலைபாட்டை எப்படி எடுத்தீர்கள் என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு தெளிவுபடுத்திக்கொண்ட நண்பர்.. நன்றி நண்பா... பாஸ்டனில் இருந்தது ஒர மணிநேரத்துக்கு போனில் பேசுபவர்... நன்றி நண்பா....
குடுகுடுப்பை....நல்ல பதிவர் நான் இப்படித்தான் என்று நடிப்பு கலக்காமல் சொல்லுபவர் தமிழ்மண நட்சத்திரமாக பிரகாசிக்க எனது வாழ்த்துக்கள்....
குடந்தை அன்புமணி... சமீபமாய் என் பதிவுகளில் வலம் வந்து பின்னுட்டம் இடும் நண்பர் நன்றி
அகநாழிகை.... இவரின் கவிதைகளுக்கு நான் ரசிகன் நல்ல இலக்கிய எழுத்துகள் இவருடையது... மது மாதுக்கு செலவு செய்யாமல் புத்தகங்களுக்காக செலவு செய்பவர்...நல்ல நண்பர்
கைப்புள்ள... அந்த வடிவேலு படத்துக்கு விசிறிநான்.. நன்றி கைப்புள்ள
அமு செய்யது...எப்போதாவது வந்தாலும் தொடர்ந்து பின்னுட்டம் இட்டு உற்சாகபடு்த்தும் நண்பர்..
இராகவன் நைஜீரியா.... நல்ல நண்பர் எவர் மனதையும் காயபடுத்திவிடக்கூடாது என்று நினைப்பவர் சின்ன விஷயத்துக்கு கூட சட்டென மன்னிப்பு கேட்டு விடுபவர்....சிலரால் மட்டுமே எவர் மனதையும் காயபடுத்தாமல் வாழ முடியும்.... நன்றி நண்பரே....
கிஷோர்... தொடர்ந்து என் ஆங்கில படத்தின் விமர்சனங்களுக்கு பின்னுட்டம் போட்டு பாராட்டும் நபர்... நன்றிகிஷோர்
மதுவதனன் மௌ... தொடர்ந்து என் பதிவுகளை நேரம் கிடைக்கும் போது வாசித்து பின்னுட்டம் இடுபவர்...
காத்திகேயனும் அறிவுதேடலும்.... நல்ல ஆங்கில பட விமர்சகர்....படங்களை மிக விரிவாய் எழுதி விமர்சிப்பவர்... நல்ல நண்பர்.. என் எழுத்து மீது மதிப்பு வைத்து இருப்பவர்... நன்றி கார்த்தி்...
மற்றும்,
யோ, நேமித்திரன் தமிழன் கறுப்பி, உடன்பிறப்பு, சம்பத் , கிச்சா, அபாபல் ஜோ, உழவன் ,ஜோ, 23சீ, ரூட்டோ, செந்தில், டூ டூ, ஆதித்தன், ஜோதி கார்த்திகை...யூஎம் கிருஷ்னா,சீ,யாசவி, சங்கா, பிளாக்பாண்டி,இளவட்டம் நாஞசில் நாதம்,ராபின் ,ஜாம்பஜார் ஜக்கு, மிஸ்டர் அடோர்...,ராஜாராமன், பராரி ,வேந்தன், என் உலகநாதன், மின்னுது மின்னல், சதிஷ், வெண்காட்டான், செந்தில்வேலன்,கக்குமாணிக்கம், சுவனபிரியன்,நட்ராஜ் ,அன்வர், ராம்ஜியாஹு,அருன்மொழிவர்மன்,உங்களில் ஒருவன் , பரிமளா, மனசு,தமிழ் ஓவியா2009,நிகழ்காலத்தில்,கவிர்மைந்தன், பாஸ்கர்,வலசுவேலனை, பிஜீ,வே இராதாகிருஷ்ணன்,குட்டிபிரபு, குமார், தருமி, போன்றவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்
அதே போல் மெயிலில் பதிவிலும் அதிகம் நட்பு பாராட்டும், ஹரிராஜகோபாலன், குழந்தை வேலு,புரபசர் பெர்னான்டோ,சிங்கார வேலு ,கல்யான் குமார்,
அப்புறம் பெயர் சொல்ல வேண்டாம் என்ற... அலட்டி பெண்மணி...போன்றவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்....
இந்த ஒரு வாரத்தில் என் பதிவை பாராட்டி பின்னுட்டம் இட்டவர்களுக்கு என் அன்பை வெளிபடுத்தவே இந்த பதிவு பலரின் வலை தளத்தை போய் நான் பார்த்து கூட இல்லை... இருப்பினும் எனக்கு அதரவு தந்த மேலுள்ள அன்பு உள்ளங்களுக்கு என் நன்றிகள்....
என்னை தமிழ் மண நட்சத்திர பதிவராக தேர்ந்து எடுத்த தமிழ்மண நிர்வாகத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் பல
சன்டிவி வருடத்துக்கு ஒரு முறை சொல்வது போல்.... இந்த வெற்றி உங்களால் சாத்தியமாயிற்று....
அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....