மரக் என்று வெங்காயத்தை கடித்து குண்டானில் துழவி கைக்கு தட்டு பட்ட நாலைந்து சோற்று பருக்கைகளை வாயில் போட்டு விட்டு ,கடைசியாக குண்டான் நீராகராத்தில் இருக்கும் முக்கால் வாசி தண்ணீரை குடித்து விட்டு வாயை துடைத்து, வேலைக்கு கிளம்ப எத்தனித்தாள்....கனகா...
கனகாவுக்கு 34 வயது... பார்க்கும் போது 22 வயதைதான் சொல்லுவார்கள்.... சரியான உடம்புக்கு எடுத்துக்காட்டாக கனகா உடம்பை தைரியமாக சொல்லலாம்...
எல்லா சாப்பாட்டையும் ஒரு பிடி பிடித்தாலும்.... கனகாவுக்கு தொப்பை மட்டும் அவளுக்கு விழுந்ததே இல்லை... தெகிலான வயிறு அவளுக்கு இறைவன் கொடுத்த வரம்... அதனாலே சென்னை பாலவாக்கம் பங்கிம்காம் கால்வாய் ஓரம் அவள் வீட்டு வேலைக்கு செல்லும் போது தெருவாசியாக இருக்கும் முக்கால் வாசி ஆண்களளில் இளசில் இருந்து கிழங்கள் வரை அவளை சைட் அடிப்பதை ஓரக்கண்ணால் பார்த்து இருக்கின்றாள்...
கனகா அப்பாவுக்கு தூத்துக்குடி சொந்த ஊர்.... கனகா அப்பா நல்லவர்தான் ...இருந்தாலும் சூட்டிகை இல்லை... தொழிலில் ஏற்பட்ட நட்டம் காரணமாக தனது மனைவி மற்றும் மூன்று பெண்பிள்ளைகளுடன் பாலவாக்கம் பங்கிம் கால்வாய் ஓரம் 2000 ஆம் ஆண்டு தங்கள் ஜாகையை நிறுவினார்கள்...
காலையில் ரோட்டு ஓர டிபன் கடையும்...இரவில் செக்யூரிட்டி வேலை பார்த்து வந்த சொற்ப வருமானத்தில் குடும்பத்தை நடத்தினார்.... கடனை உடனை வாங்கி கனகாவை ஒரு டிரைவர் மாப்பிளைக்கு 26 வயதில் கனகாவை மனம் முடிந்து கொடுத்தார்கள்...
கனகாவுக்கு இரண்டு தங்கைகள்... இரண்டு பேருமே பத்தாவது வரை படித்தவர்கள்.... பக்கத்தில் உள்ள தொழில்சாலையில் வேலைக்கு போனார்கள்.... கனகா பிளஸ் டூ வரை படித்து இருக்கின்றார்... திருமணம் முடிந்து வறுமையுனுடே வாழ்க்கை மகிழ்ச்சியாக கனகாவுக்கு சென்றாலும்...
உளுந்தூர் பேட்டை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அடையாம் தெரியாத வாகனம் மோதி திருமணமான இரண்டு வருடத்தில் ஒரு அதிகாலையில் கனகாவில் புருசன் உயிரை விட்டு இருந்தான்...
திருமணத்துக்கு வாங்கிய கடன் அடைத்து முடிக்காத நிலையில் கணவன் கண் முன் பாடையில் போனான்.... கனகாவுக்கு வாழ்க்கை இருண்டது...இருந்தாலும் தங்கைகயோடு கம்பேனிக்கு வேலைக்கு போனாள்...
கணவன்இறந்து விட்டான் என்று பரிதாபபட்ட அத்தனை சூப்பரவைசர்களுமே....கனகாவின் வேலையின் ஊடே அவளை மன உளைச்சல் அடைய செய்து அவள் உடம்பை சாப்பிட்டு பார்க்க சூப்பர் வைசர்கள்.... வாரம்வாரம் செக் வைத்து பார்த்தார்கள்.... கணவன் இறந்து விட்டதாலே காலைவிரித்துக்கொண்டு வருபவன் போகுபவனிடம் வந்து புணர்ந்து விட்டு போ.... என்று ஒரு பெண் வெறியாக அலைந்துகொண்டு இருப்பாள் என்ற எண்ணம் இவர்களிடம் எப்படி வந்தது என்று கனகா அனுதினமும் யோசித்து பார்த்தும் அவளுக்கு விடை தெரியவில்லை...
ஒரு கட்டத்தில் கம்பெனியின் 5 ஆயிரம் சொற்ப சம்பளத்தில் இருந்து தன்னை கனகா விலக்கிக் கொண்டாள்...
2005 இல் இருந்து ஓஎம்மாரில் ஐ டி நிறுவணங்கள் வளர ஆரம்பித்தன... பேபி பார்ம் ஆவது போல சின்ன சின்ன குடியிருப்புகள் தோன்ற ஆரம்பித்தன. வீட்டு வேலைக்கான ஆட்கள் தேவையை பக்கிம்காம் கால்வாய் ஓரம் வாழ்ந்த மக்கள் நிறைவேற்ற ஆரம்பித்தார்கள்.. கனகா மூன்று வீட்டுக்கு வேலைக்கு செல்ல ஆரம்த்தாள்...
காலை ஆறு டூ ஏழரை ஒரு வீடு... ஏழரை டூ ஒன்பது ஒரு வீடு...
நடுவில் ஒரு மணி நேரம் ரெஸ்ட்.... அதன்பின் பத்து டூ பதினொன்னரை மூன்றாவது வீட்டில் வீட்டு வேலை...
பெண்டு நிமிர்ந்தாலும் பெரிய பாலியல் தொந்தரவுகள் இல்லை.... புதிததாய் திருமணம் ஆகி வந்த கம்யூட்டர் என்ஜினியர் வீட்டில் வீட்டுக்கு வேலைக்கு ஆள் தேவை என்று செல்ல.... அவள் அங்கே வேலைக்கு சேர்ந்தாள்.....
மூன்றாவது வாரம்.... அவன் மனைவிக்கு மார்னிங் ஷிப்ட்... அவன் மட்டும் கம்யூட்டரில் ஏதோ வேலை செய்துக்கொண்டு இருந்தான்.... வேலை முடித்து விட்டு கிளம்புகின்றேன் என்று கனகா சொன்ன போது ஒரு நிமிடம் இருக்க சொன்னான்.. ஒரு சின்ன கவரை கொடுத்தான்....
இரண்டு நாளைக்கு முன்ன ... ஊக்கு போடுற இடத்துக்கு பக்கத்துல உன் பிரா ரொம்ப கிழிச்சி இருந்துச்சி.. அதான் வாங்கியாதேன்..32 தானே உன் சைஸ்??? என்றான்......
கவரை அப்படியே வாஷிங் மெஷின் மேல வைத்து விட்டு வீட்டுக்கு வந்தாள்... நான்கு ஐந்து முறை அவனின் மனைவி அழைத்தும் அந்த வீட்டு பக்கம் கூட அவள் திரும்பவில்லை..
வீட்டில் அதிகமாக ஆட்கள் இருக்கும் வீடாக பார்த்து வேலைக்கு சேர்ந்தாள்... குடும்ப உறுப்பினர்கள் அதிகம் இருந்தால் பத்து பாத்திரத்தில் இருந்து துணி துவைத்து காய வைப்பது என வேலை அதிகம் இருந்தாலும்...பாலியல் தொந்தரவுகள் அதிகம் இல்லை..
. துணி துவைக்கும் போதே பத்து பாத்திரம் கழுவும் போதோ.. யாரோ உற்று பார்க்கின்றார்கள் என்று தோணும் போது திரும்பி பார்த்தால் வீட்டுக்கு விருந்தினராக வந்து இருக்கும் ஆடவன் யாராவது விழுங்கி விடுவது போல பார்த்தாலும் பிரச்சனை அதிகம் இல்லை..
வேலை அதிகம் என்றாலும், வறுமை அதிகம் என்றாலும் நிம்மதி இருந்தது...கனகாவுக்கு கல்யாணத்துக்கு வாங்கிய கல்யாண கடனை அடைக்க ஆரம்பித்தார்கள்... அதன் பின் இரண்டு தங்கைகள் திருமண வயதில் இருக்கின்றார்கள் என்பதால் கனகாவுக்குஇரண்டாவது கல்யாணம் என்ற பேச்சையே எடுக்கவில்லை...
ஒருவேலை அப்படியே கனகா கல்யாணம் செய்துக்கொண்டு போனால் இன்னும் இரண்டு பெண்கள் திருமணத்தை யார் நடத்தி வைப்பது..? என்ற கனகா அப்பாவின் சுயநல பயமும்..... கனகாவின் இரண்டாம் திருமண பேச்சை எடுக்கவிடாமலும், அப்படியே எடுத்தாலும் கனகாவின் அம்மா தட்டிக்கழித்தும் வந்தாள்....
மாதம் 12 ஆயிரம் வெறியாக உழைத்து கொடுத்தும் சில வருடங்களில் நிம்மதி இல்லாமல் தவித்தாள்...... அக்கம் பக்கம் உறவினர் வீட்டு திருமணங்களுக்கு செல்லும் போது மகிழ்ச்சியாக இருக்கும் தம்பதிகளை பார்க்கையில் தன் கணவன் நியாபகம் வந்தாலும்... காமம் மனதில் மெல்லிய நினைவாய் இருந்தது...
இளம் பெண் விதவை உதவி திட்டத்தில் பதிந்தாள் பணம் கிடைக்க வழி செய்யாமல் இரவு பதினோரு மணிக்கு போன் செய்து அவளிட்ம் வழிந்த அரசு ஊழியரை பார்த்து வெறுத்து போய்விட்டாள்.
ஒரு இளம் விதவை அரசு பணம் வாங்க இவ்வளவு சிக்கலா? அதற்கும் உடலைகொடுக்க வேண்டுமாம்... அப்படியும் இல்லை என்றால் வரும் உதவிதொகையில் பாதியை லஞ்சமாக கேட்கும் பிச்சைக்கார அதிகாரிகளும் அவர்களுக்கு மாமா வேலை பார்க்கும் மனசாட்சி இல்லாத பியூன்களை மனதுக்குள் சபித்தாள்.
ஒரு நாள்......பாலவாக்கத்தில் வீட்டு வேலை செய்யும் இடத்தில் இருக்கும் மாமி அவளை அழைத்தாள்... எத்தனை வீட்டில் வேலை செய்கின்றாய்..?? மூணு வீட்டுலம்மா???
இந்த மாசத்ததோடு வர மாட்டேன்னு அவுங்க கிட்ட சொல்லிடு....
சொல்லிட்டு..?? நான் வயித்து பொழப்புக்கு என்ன செய்ய???
கனகா.... மாசம் பதினைந்தாயிரம் ரூபாய் ... நீலாங்கரையில் இருக்கும் 52 வயது என்ஜினியர் வீட்டுல வேலை....... பிக்கல் பிடுங்கல் இல்லை.....காலையில் இரண்டுமணி நேரம் சாயங்காலம் இரண்டு மணி நேரம்.. வேலை... அவருக்கு வாய்க்கு ருசியா சமைக்கனும் ... துணி மணியை அயர்ன் பண்ணி எடுத்து வைக்கனும்... அவ்வளவுதான்... வேலை... அவர் ஒருத்தர்தான் அந்த பங்களாவுல இருக்கார்... நம்பிக்கையான ஆள் கேட்டாங்க.... ஒன்னை சொன்னேன் என்றார்.
மகிழ்வாய் கனகா ஒத்துக்கொண்டாள்...
நிலாங்கரையில் அவ்வை சண்முகி திரைப்படத்தில் லரும் ஜெமினிகணேசன் வீடு போல அந்த பங்களா இருந்தது.. தோட்டக்காரர் கார் டிரைவர் என்று சகலத்துக்கும் ஆள் இருந்தார்கள்... கனகா என் பேரு பெர்ணான்டஸ்...என்று அந்த 52 வயது என்ஜினியர் அறிமுகப்படுத்திக்கொண்டார்... அவர்45 வயது இளமையோடு இருந்தார். வீட்டை சுற்றி பார்த்தாள்....
பால்கனியில் இருந்து பார்த்தால் கடல் .....அலையோடு ஆர்பரித்துக்கொண்டு இருந்தது... இரண்டு காதலர்கள்.. நீதானே என்பொன் வசந்தம் ஜீவா சமந்தா கிளைமாக்ஸ் சீனை நினைவு படுத்தும்விதமாக உதட்டு முத்தம் கொடுத்துக்கொண்டார்கள்.
ஆறு மாதத்தில்... வீட்டை மேலும் அழகு படுத்தி இருந்தால்.... என்ஜினியர் இரண்டு படம் வரைந்து கொடுத்தால் கூட மாதம் ஒரு லட்சம் ... இரண்டு லட்சம் என்று பணம் சம்பாதித்து வந்தார்...
ஒரே ஒரு பெண் அதுவும் ஆஸ்திரேலியாவில் இருப்பதாக கனகா தெரிந்துக்கொண்டாள்.. என்ஜினியரின் பெண் கல்லுரியில் படித்துக்கொண்டு இருந்த போது அவளுடைய அம்மா தவறிவிட்டாள்..... ஒரே பெண்ணை ...........கம்யூட்டர் என்ஜினியருக்கு மனம் முடிந்து கொடுக்க...அவள் அஸ்திரேலியாவில் செட்டில் ஆகி விட்டாலாம்.. அப்பாவை எவ்வளவோ முறை அழைத்தும்.... அவர் தன் சொந்த வீட்டை வீட்டு வரமுடியாது என்று மறுத்து விட்டாராம்... இதுதான் அவளுக்கு தெரிந்த சேதி...
ஒரு வருடம் கழிந்து மாமி கனகாவுக்கு விடியற்காலை போன் செய்தாள்... என்ஜினியர் வீட்டுக்கு வரும் போது தானும் வருகின்றேன் என்று சொல்ல... என்ன கதை என்று கனகாவுக்கு புரியவில்லை...
எட்டு மணிக்கு மாமியோடு போய் என்ஜினியர் வீட்டில் இறங்கினாள்... வழக்கமாய் என்ஜினியர் வந்து கதவை என்ஜினியர்.. வந்து கதவை திறக்காமல் ஒரு பெண் கதவை திறக்க அதிசியத்து நிற்க....
கனகா... ரைட் என்று சொல்லி கனகாவோடு என்ஜினியர் மகள் அறிமுகப்படுத்திக்ககொண்டாள்... மாமியோடு ஆங்கிலத்துக்கு தாவி அதிக நேரம் பேசினாள்...
கனகாவை அன்று எந்த வேலையும் செய்ய வேண்டாம் என்று அவரின் மகள் பணித்தாள்...கனகாவோடு பேச வேண்டும் என்று மாமி, என்ஜினியர், என்ஜினியர் மகள் என்றுஒரு வட்ட மேஜை மாநாட்டை போல உட்கார்ந்தார்கள்....
இன்னையில்இருந்து உனக்கு இங்கே வேலை இல்லை என்று கனகாவை பார்த்து என்ஜினியர் மகள் சொன்னாள்.... அவளுக்கு சோபி என்று பெயர் வைப்போம்.... சோபி ‘ சொன்ன அடுத்த கணம்.. கனகா... என்ஜினியரையும், மாமியையும் பார்த்தாள்... கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டது...
நான் என்ன தப்பு செஞ்சேன் ???என்று விணவினாள்... பேசுவதை மட்டும் கேள்...! எதிர் கேள்வி வேண்டாம் என்று பணித்தாள்...
கனகா விழிகளில் வழிந்த நீரை துடைத்துக்கொண்டு அமைதியானாள்...
ஆனாலும் என்ஜினியரை பார்க்க அவர் கண்களில் அமைதியாக இரு என்று சைகையில் சொன்னார்...
சோபி சொன்னாள்... நேர பாயிண்டுக்கு வரேன்...
எனக்கு எங்க அப்பாதான் எல்லாம்.... நான் என் லைப்பை என் கணவரோடு ஜாலியா என்ஜாய் பண்ணறேன்... பணம் மாசா மாசாம் அஸ்திரேலியாவில் கொட்டுது... இந்த வீடு இல்லாம.. இதே நீலாங்கரையில் இதே போல இன்னும் மூணு வீடு இருக்கு.....
எங்க அப்பாவை ஆஸ்திரேலியாவுக்கு வர சொன்னா...?
நான் வரமாட்டேன்னு சொல்லிட்டார்... அவருடைய வார்த்தைக்கு நான் ரெஸ்பெக்ட் கொடுக்கறேன்.. அவருடைய உணர்வுக்கு நான் முக்கியத்துவம் கொடுக்கறேன்....
ஏன்னா எங்க அப்பா எனக்காக எவ்வளவோ தியாகம் பண்ணி இருக்கார்.... அவருக்கு ஒரு கம்பானியன் தேவை... அவரை வேலைக்காரி அப்படின்ற லெவல்ல பார்த்துக்காம மனைவியா பார்த்துக்கனும்... உன்னால முடியுமா? என்ற திடுதிடுப்பென்று கேட்க...?
கனகா காலில் பூமி நழுவுவது போல இருந்தது...
எங்கப்பாவுக்கு உன் நேர்மை புடிச்சி இருக்கு... வீட்டை பார்த்துக்கற லட்சனம் புடிச்சி இருக்கு....முக்கியமா அப்பாவை நல்லா பார்த்துக்கறே....
உனக்கு புடிச்சா மேல பேசலாம்...இல்லைன்னா இந்த பேச்சை இப்பவே டிராப் பண்ணலாம் என்று சொல்ல...
கனகாவுக்கு வேர்த்து இருந்தது... இரண்டு நாளில் பதில் சொல்வதாக கனகா சொன்னாள்... அவளுக்கு ஆஸ்திரேலியாவில் இருந்து வாங்கி வந்த பரிசு பொருட்களோடு கனகா வீட்டுக்கு வந்து குழப்பத்தில் ஆழ்ந்தாள்.....
ஏன் இரண்டு நாளாக வேலைக்கு செல்லவில்லை.. என்று கேட்டு குடும்பத்தில் நச்சரித்தார்கள்... யாரோடும் கலக்கவில்லை.... தன் வாழ்க்கையின் நல்லது கெட்டதுவை மற்றவர்கள் தீர்மாணிக்க கூடாது என்பதில் தெளிவாக இருந்தாள்....
இரண்டு நாள் கழித்து மாமியோடு சென்றாள்...
அதே போல வட்ட மேஜை மாநாடு....
என்ஜினியர் குழப்பத்தோடு கனகா என்ன பதில் சொல்ல போகின்றாள் என்று நகம் கடித்தார்.... சோபி அர்த்த புஷ்ட்டியோடு கனகாவை பார்த்தாள்... மாமியும் கேள்விக்குறியோடு அவளை பார்த்தாள்.. மாமி என்ன முடிவு எடுத்து இருக்கின்றாய் என்று கேட்டதற்கு கூட.... குழப்பமாக இருக்கின்றது என்று மட்டும் இரண்டு நாட்களாக கனகா சொன்னாள்....
நான் வயதுக்குதான் யோசித்தேன்.... ஆனால் என் கணவர் செத்ததில் இருந்து வயது வித்தியாசம் பார்க்காமல் தான் என்னை எல்லோரும் அடைய நினைத்தார்கள்... ஆனால் இதே வீட்டில் மனைவி ஸ்தானம் என்னும் போது.... எனக்கு ஓகே... என்று தயங்கி சொன்னாள்...
சோபி மகிழ்ச்சியோடு எழுந்து கனகாவை கட்டிக்கொண்டாள்... வீட்டில் சொல்லி விட்டாயா? என்று கேட்டதற்கு இனிமேல் சொல்ல வேண்டும் என்றாள்..
என் அப்பாவின் இந்த பங்களா மற்றும் பாண்டிச்சேரியில்இருக்கும் ஒரு வீடு , உங்கள் இரண்டு பேர் பெயரிலும் இருக்கும்... அப்பாவின் மறைவுக்கு பிறகு அது உனது சொத்தாகும்...
உன் தங்கை இருவர் திருமணத்துக்கும் தலா நான்கு லட்ச ரூபாய் கொடுக்கின்றோம்.. நல்ல வரன் பார்த்து மனம் முடியுங்கள்...
நீ போய் எத்தனை சொந்தக்காரர்களை வேண்டுமானாலும் பார்க்கலாம்... இங்கே உங்க எந்த சொந்தத்தையும் அனுமதிக்க முடியாது.. காரணம் அப்பாவுக்கு அமைதி ரொம்ப பிடிக்கும்... அதே போல அவர் பிரைவசி கெடுவதை அவர் விரும்பமாட்டார்...
திருமணத்துக்கு பின் எந்த முடிவாக இருந்தாலும் நீங்கள் இரண்டு பேரும் சேர்ந்து எந்த முடிவு எடுத்தாலும் எனக்கு கவலை இல்லை என்றாள்....
கனகா வீட்டில் பேசப்பட்டது... வாயெல்லாம் பல்லாக சம்மதம் தெரிவித்தார்கள்..
ஒரு மாதத்தில் இருவரும் பதிவு திருமணம் செய்துக்கொண்டார்கள்...கனகா எஜமானியாக அந்த வீட்டுக்கு மாறினாலும் சமைக்க ஆள் வைத்துக்கொள்ளவில்லை...
அவளே சமைத்து போட்டு என்ஜினியரை அசர அடித்துகொண்டு இருந்தாள்...
சில வருடங்கள் கழித்து.....
சென்னையின் பிரபல மாலில்... கார் பார்கிங்கில் வோல்ஸ் வோகனில் ஏறப்போனவள்... என்னை பார்த்து விட்டு நலம் விசாரித்தாள்.... வாழ்க்கை எப்படி போகின்றது என்று கேட்டேன்...
மகிழ்ச்சியோடு செல்வதாக தெரிவித்தாள்...
புது வாழ்க்கை கிடைத்த வசதியில் என்னை பார்த்தும் பார்க்கதது போல செல்வாய் என்று நினைத்தேன் என்றேன்...
எப்பயுமே அதே கனகாதான் ஜாக்கி என்றார்..
நிறைய பெண்களை பார்த்து இருக்கின்றேன்.. பார்த்தும் பார்க்காதது போல செல்வார்கள்... அதனால் கேட்டேன் no issues என்றேன்..
ஏற்கனவே கனகா வனப்பாக இருப்பாள்... பணமும் சந்தோஷமும் அவனை இன்னும் வனப்பாக மாற்றியிருந்தது....
பாலவாக்கம் பக்கிம்காம் கால்வாய் ஓர கனகாவை இது என்று ஆச்சர்யமாக அவளை பார்த்தேன்... வீட்டுக்கு வேலைக்கு அரக்க பரக்க விரைவாய் இவள் நடக்க பின் முதுகு கழுத்து என வியர்வை வழிய நடக்கும் கனகாவை எனக்கு நன்கு தெரியும்..
லைட்டாக மேடிட்ட வயிற்றை பார்த்து முகத்தில் வினா எழுப்பினேன்....
ஐந்து மாதம் என்றாள் 34 வயதில் கனகா வெட்கத்துடன்
இவ்வளவு சந்தோஷமாய் அவனை நான் பார்த்ததே இல்லை.... மனதுக்கு மகிழ்வாய் இருந்தது....
அவர் என்ன லேகியம் இரவில் சாப்பிடுகின்றார் என்று கேட்கலாம் என்று நினைத்து அந்த கேள்வியை கை விட்டேன்... கை குலுக்கி அவள் விடை பெற்றாள்...
நான் எனது பைக்கை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்....
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

கதை நன்று! அருமையான நடை! ஆவலைத் தூண்டும் வகை! சுவைத் தேன்!
ReplyDeleteஎல்லா இளம் விதவைகளுக்கும் இப்படி அமைவதில்லை. நல்லா இருக்கட்டும்.
ReplyDeleteஇது என்ன சிறுகதையா, அனுபவக் கட்டுரையா? வழவழா கொழகொழா என்ற நடையில், மலிந்து கிடக்கும் எழுத்துப் பிழைகளும், எரிச்சல் மூட்டும் வாக்கிய அமைப்புகளுமாக (கனகாவுக்கு தொப்பை மட்டும் அவளுக்கு விழுந்ததே இல்லை) இருக்கும் இந்தக் குப்பையை படித்து நேரம் வீணானது தான் மிச்சம். பரஸ்பரம் சொறிந்து கொள்வதற்காக இது போன்ற குப்பைக்கெல்லாம் சுட்டி இணைத்து, இண்ட்ரோ-வும் கொடுத்து....அவரை நம்பும் வாசகரைக் கடுப்பேற்றிக் கொண்டிருக்கிறார் லக்கி :(
ReplyDeleteசரி நீங்கள்தான் கொஞ்சம் உயர்வான நடை சொல்லித்தாருங்களேன். ..
Delete