ஈ அடிச்சான் காப்பி அடிக்கும் புரட்சி எப்எம்.




உலகில் மிகப்பெரிய கொடுமை எதுவென்றால்... நீங்கள் எழுதிய பதிவை  நீங்களே இது நான் எழுதிய பதிவுதான் என்று   நிரூபிக்க வேண்டிய இடம் இருக்கின்றது பாருங்கள் அதுதான் கொடுமை...


காப்பி என்றால் என்ன இன்ஸ்பிரேஷ்ன் என்றால் என்ன? என்று  பக்கம் பக்கமாக எழுதியவன் நான்...இப்போது ஈ ஆடிச்சான்  காப்பி என்றால் என்னவென்றுவேறு எழுதி தொலைக்க வேண்டி வரும் போல...


புரட்சி எப்எம் என்பது இணைய வானொலி... பேஸ்புக்கில் இரண்டு லட்சத்துக்கு மேல்  லைக் வைத்து இருக்கின்றார்கள்...   நெகிழ்ச்சியாக யாராவது பதிவு எழுதி இருந்தால் அதனை தேடி எடுத்து பெயரை  மட்டும் எடுத்து விட்டு ஈ அடிச்சான் காப்பியாக  அந்த பதிவை போட்டு லைக்கு வாங்கும் ஈனப்பொழப்பில் ஈடுபடுபவர்கள்.. அவர்கள்  இதுவரை முகநூலில் போட்டு இருக்கும்  முக்கால் வாசி பதிவுகள் ஈ அடிச்சான்  காப்பி பதிவுகள்தான்...


அவர்கள் இரண்டு நாட்களுக்கு முன் 2014 ஆம் ஆண்டில் சிறந்த பதிவு என்று நான் கடந்த  வருடம் மே பத்தாம் தேதி எழுதிய பதிவை பேட்டு இருந்தார்கள்  நான் மிக ஆசையாக  சென்று பார்த்தேன்..

அதில் என்  பெயர் இல்லை...

அவர்களுடைய ஸ்கிரின்  ஷாட் இங்கே...



புரட்சி எப்எம்  என் பதிவை ஆட்டயை போட்ட பதிவை பார்த்து என்னை விட  மிக அதிகமாக டென்ஷன் ஆனாது என் உடன்பிறவா தம்பிகள்தான்...

நண்பர் சாம்ஸ்டீபன் புரட்சிஎப்எம்மிடம் சாட்டில் சென்று கேட்டு இருக்கின்றார் அதற்கு அவர்கள் நக்கலாக  அவர்கள்தான்  காப்பியடித்தார்கள் நாங்கள் காப்பியடிக்கவில்லை என்று..... அதற்கான ஸ்கிரின் ஷாட் இத்துடன்  இணைத்து இருக்கின்றேன்..






ஆதாவது அவனுங்க உத்தமபுத்திரன்களாம்... நான் தான் காப்பியடிச்சிட்டேனாம்... அதனால் என்னை போய் செக் செய்ன்னு சொல்லி இருக்கான்...

இதுல வேற உலக தமிழர்களின் உறவுப்பாலம் விளங்கிடும்... சாரிங்க தப்பு நடந்துடுச்சின்னு பதில் வரும் அப்படியே விட்டு விடாலாம்ன்னு பார்த்தா???? நாங்கதான் எழுதினோம் என்று சொன்னா இந்த பதிவை எழுதிய உங்களுக்கு  எப்படி இருக்கும்??

இப்ப கூட இந்த ஆதாரத்தை  நான் கொடுக்கலைன்னா.. நான்தான் காப்பியடிச்சி எழுதினேன்னு ஒரு நியூசை பரப்பி விட்டாலும் விட்டு விடுவான்க என்பதால்   இதனை கொடுக்கின்றேன்..

அது மட்டுமல்ல.. கடந்த வருடம் 2014 ஆம் ஆண்டு மே பத்தாம் தேதி  இந்த பதிவை எழுதினேன்...  10,711 லைக்குகளும் 7789 ஷேர்களும் ஆன பதிவு இது... அதற்கான ஸ்கீரின் ஷாட்டையும் இதில் இணைத்துள்ளேன்... என் தளத்தில் இருந்து எடுத்த ஸ்கிரீன் ஷாட்டை இத்துடன் இணைத்துள்ளேன்...




திருடறதையும் திருடி... அதுவும் ஈ அடிச்சான் காப்பி அடிச்சிட்டு , இதுல நான்தான் காப்பியடிச்சேன் சொல்றானுங்க அந்த பேமானி புர்ட்சி எப்எம் காரனுங்க...

ஒரு மயிறும் புடுங்க முடியாதுதான்..  என் என்றால்  என் பதிவுகள் நிறைய இடங்களில்  காப்பியடிக்க படுகின்றது...

வருடத்துக்கு ஒரு பஞ்சாயத்து இது போல நடக்கும்

2010 இல்  அப்படியே காப்பி அடித்து  தற்போதைய பிரபலபதிவர் ஒருவர் அந்த போஸ்ட்டை பாக்கியா பத்திரிக்கை அனுப்பி வைக்க.. அது  அவர் பெயரில் பிரசுரம் ஆக... பத்திரிக்கையிலேயே என்ன நடந்துச்சின்னு சொல்லிட்டாங்க...என்னங்க உங்க பதிவு ஈ ஆடிச்சான்  காப்பியா பேர் மாறி  மாறி  வந்து இருக்குன்னு எனக்கு போன் பண்ணி  விசாரிச்சாங்க..



 ஒன்னும் பண்ண முடியலை...

 ஒன்னும் பண்ணவும் முடியாது அதுவும் தெரியும்.. ஆனால் ஆதங்கத்தை எழுதி தீர்த்துக்கலாம்  இல்லை.


ஆனா இந்த கதை மயிறு எதுவும் தெரியாத ஒரு உண்டசோறு  நீ காப்பி அடிக்கலைன்னா   நீ எழுதிய பதிவை ஆதாரத்தோடு கொடுன்னு  பின்னுட்டத்துல வந்து சொல்லிச்சி.....  என் மீது பாசமாக இருக்கும் சில அடிவருடிகளின் வேலை  என்பது தெரிந்து போனாது...


 அது மட்டுமல்ல... சவுஜன்யா வீட்டுக்கு தீபாவளிக்கு போய்  சில உதவிகளை செய்து விட்டு வந்தேன் அதற்கான போட்டோ  ஆதாரத்தையும் இணைத்துள்ளேன். இதை எல்லாம் இந்த நேரத்துல திரும்ப சொல்றது கஷ்டமா இருந்தாலும் சொல்ல வேண்டிய சூழல்...

போதுமா-.? பொறம்போக்குகளா.,..? இங்கே என்னை பின் தொடரும் அத்தனை பேருக்கும் என்னை பற்றி  தெரியும்... அது தெரியாம வாண்டடா வண்டியில எறினா  நான் பாட்டுக்கு  பிளாக் பண்ணிட்டு அடுத்த வேலையை பார்த்துக்கிட்டு போய்க்கிட்டே இருப்பேன்..

உனக்கு துப்பு இருந்தா நான்  ஆதாரத்தை கொடுத்துட்டேன்... புரட்சி எப்எம் காரன்கிட்டு போய்...டேய் திருட்டு பையா.. நீ ஈ அடிச்சான் காப்பி அடிச்சிட்டு... அந்த ஆளை போய் ஏன்டா காப்பியடிச்சவன் சொல்றேன்னு வாய்ல வந்ததை எல்லாம் கேட்டு தொலைங்க...

பொறம் போக்குகளா  நல்லா வயில வருதுடா.,..ங்கோத்தா நான் எல்லாம் பேச ஆரம்பிச்சா... டாராயிடுவே...  ஓடிப்போயிடு...

என் எழுத்தை காப்பி அடிக்கலாம்..., நக்கல் அடிக்கலாம்,ஆனா என்னை போல எழுதும் திறமையை காப்பி அடிக்க முடியாது... 




ஜாக்கிசேகர்
05/01/2015



நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

8 comments:

  1. இவர்களையெல்லாம் எந்தளவு இறங்கி திட்டினாலும் சுரணை வராதுங்க் ஜாக்கி

    ReplyDelete
  2. அவர்களது பக்கத்தில் Report Page option சொடுக்கி விட்டு Harassing option செலக்ட் செய்யலாம். இதைப் போல பல நூறு பேர் செய்தால் நிச்சயம் அவர்கள் பக்கத்தை பேஸ்புக்கே தடை செய்ய வாய்ப்புண்டு. என் பங்குக்கு நான் செய்திருக்கிறேன்.

    ReplyDelete
  3. என்னம்மா இது கலீசாகீது......!

    கடைசியில சொன்னீங்களே...அது நூத்துக்கு நூறு உண்மை... எத்தனை பதிவுகளை வேண்டுமானாலும் காப்பி அடிக்கலாம்...

    ஆனால் அதுபோல எழுதணும்னா கண்டிப்பா திறமை வேணும்..

    அந்த தனிப்பட்ட எழுத்து திறமை இருக்கிறவங்களால மட்டுமே நூறு என்ன ஆயிரக்கணக்குல பதிவுகள் எழுத முடியும்.

    எழுத்தையும், பதிவையும் திருட முடியுமே தவிர, அந்த தனிப்பட்ட திறமையை எந்த மயிராண்டியும் திருட முடியாது....

    இதுக்கெல்லாம் கோப்பட்டா இன்டர்நெட்ல வண்டியை ஓட்ட முடியாது...

    கூல் ஆகிடுங்க பிரதர்.. டேக் இட் பாலிசி.....

    ReplyDelete
  4. ஒரு யூஸ்புல் டெக் பதிவு: கொஞ்சம் வித்தியாசமாகவும் எழுதயிருக்கேன். படிச்சிப் பாருங்களேன்...!

    சுட்டி: உங்களுக்குத் தேவையான புரோகிராம்களை இன்ஸ்டால் செய்து கொடுக்கும் பயனுள்ள இணையதளம்

    ReplyDelete
  5. கஷ்டப்பட்டு பதிவெழிதினால் சுலபமாக திருடிவிட்டு அதில் நீதான் காப்பி அடிச்சே... நான் அமெரிக்காவுல பதிஞ்சேனாக்கும்... ஐரோப்பாவுல பதிஞ்சேனாக்கும்ன்னு உதாரு விட்டுக்கிட்டு இந்த நாறப் பொழப்புக்கு...

    விடுங்க அண்ணா... உங்கள் பதிவு எல்லாருக்கும் தெரியும்...

    ReplyDelete
  6. அட இவங்களும் ஆரம்பிச்சாட்டாங்களா இந்த ஈனத் தொழிலை! திருந்தவே மாட்டார்கள் போல!

    ReplyDelete
  7. தங்கள் பதிவுகளை தமிழ் மணத்தில் படிக்கும் வாசகர்களில் நானும் ஒருவன். இந்த பதிவு முழுக்க ஆழ்ந்து படித்தேன். எனக்கும் இந்த கொடுமை நேர்ந்துள்ள படியினால், உங்கள் ஆதங்கமும் வேதனையும் புரிகின்றது. நீங்கள் தொடக்கத்திலேயே சொன்னது போல

    // உலகில் மிகப்பெரிய கொடுமை எதுவென்றால்... நீங்கள் எழுதிய பதிவை நீங்களே இது நான் எழுதிய பதிவுதான் என்று நிரூபிக்க வேண்டிய இடம் இருக்கின்றது பாருங்கள் அதுதான் கொடுமை... //

    என்பதுதான் உண்மை. நாம் ராப்பகலாய் யோசித்து மெனக்கட்டு எழுதி வைத்ததை, ஒரு நொடியில் நோகாமல் “காப்பி பேஸ்ட்” செய்து அவர்கள் பெயரைப் போட்டுக் கொள்கிறார்கள். நன்றி என்று கூட சொல்ல மாட்டார்கள். என்னதான் காப்பிரைட் அது இது என்றாலும் ஒன்றும் காரியத்திற்கு ஆகாது. அதிலும், குறிப்பாக பேஸ்புக் முழுக்க, பெரும்பாலும் இப்படித்தான் இருக்கிறார்கள்.

    நம்மால் செய்யக் கூடியது ஒன்றே ஒன்றுதான். அவர்களை அடையாளம் காட்டுவதுதான். இன்றைய உங்கள் பதிவின் மூலம் புரட்சி எப்.எம் மற்றும் சென்னிமலை செந்தில் குமார் பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது. நானும் எனது வேதனையை பற்றி எழுதி இருக்கிறேன்.

    த.ம.2

    ReplyDelete
  8. எமது பதிவுகள் முகநூல் வேறு பெயறுடன் VARUKINDRATHU




    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner