காணமல் போன ஆட்டோ மீட்டர்.... டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு வாழ்த்துகள்...




2013 ஆண்டில்  தமிழக ஊடகங்களின் முயற்சியினால் ஆகச்சிறந்த கண்டுபிடிப்பு எது என்று கேட்டால்?  ஆட்டோ மீட்டர் என்று தைரியமாக  சொல்லலாம்...
ஆம் ஆட்டோ மீட்டர் என்றால்  என்ன என்று.... சென்னையில் பிறந்த  ஒரு தலைமுறையே பிள்ளை பெக்கும் வயதுக்கு வந்தும், ஆட்டோ மீட்டர் எப்படி இருக்கும் என்று  அறியாமல் இருந்த விஷயம்... 

தமிழக  ஊடகங்களின் முயற்சியின் காரணமாக காணாமல்  போன ஆட்டோ  மீட்டர்  கண்டு பிடித்து பொது மக்களிடம் அளித்ததுதான் 2013 ஆம் ஆண்டின் மிகப்பெரிய சாதனை....
இந்த நல்ல முயற்சியை முன் எடுத்த  டைம்ஸ் ஆப்  இன்டியா  ஆங்கில தினசரியை  எவ்வளவு பாராட்டினாலும் தகும்.... எத்தனையோ விருதுகள்  கடந்த 2013 ஆம் ஆண்டு யார் யாருக்கோ கொடுக்கப்பட்டது...

 மக்களுக்கு சேவை செய்த டைம்ஸ் ஆம் இந்தியாவை பாராட்டி கவுரவித்து இருக்க வேண்டும்... ஆனால் யாரும் செய்யவில்லை....ஊடக போட்டிதான்... யார் கொடுத்த என்ன கொடுக்காட்டா என்ன....? நாம பாராட்டுவோம்....


முதலில் அவர்கள்தான்  பேருந்துக்கு பின்னே  காணாமல் போன ஆட்டோ மீட்டர் பற்றி  படங்கள் ஸ்லோகங்கள் எழுதி பொது மக்களுக்கு முதல் விழிப்புணர்வை  ஏற்ப்படுத்தினார்கள்... 

மெல்ல பீச், சாலையோரை ஹோர்டிங் என்று டைம்ஸ் நாளிதஷ் எடுத்த முயற்சிகள் சாதாரன விஷயம்  அல்ல... 1998 ஆம் ஆண்டோடு காணாமல் போன  ஆட்டோ மீட்டர்... கண்டு பிடிப்பது அவ்வளவு எளிதானது அல்ல.... மக்கள் அதை கேட்டு இருக்க வேண்டும்... அவர்கள் எந்த பிரச்சனைக்கு குரல் கொடுத்து இருக்கின்றார்கள் ...?? இதுக்கு குரல் கொடுக்க....

 சற்றே பின்னோக்கி....

2012 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16,000 கையெழுத்துக்களுடன் ஆன்லைன் பெட்டிஷன் தாக்கீது செய்தார்கள்..

 செப்டம்பர் மாதம் காணாமல் போன மீட்டரை கண்டு பிடித்து கொடு என்று  விளம்பரை விழிப்புணர்வு மூலம்... ஒரு லட்சம் கையெழுத்துடன் மேலும் வலு சேர்த்தார்கள்...
2012 டிசம்பர் மாதம்  சுப்ரீம் கோர்ட் ஆட்டோ கட்டணத்தை நிர்ணயிக்க மாநில அரசுக்கு கட்டளை இட்டது...நீங்க சொன்னா  நாங்க  கேட்டு ஆகனுமான்னு மாநில அரசு ரொம்ப மெத்தனமா இருந்தது...

2013 ஆம் ஆண்டு மார்ச் நாலாம் தேதி இன்னும் எங்களுக்கு டைம்  வேண்டும் என்று சுப்ரீம்  கோர்ட்டில் மக்கள் நல அரசு கோரிக்கை வைத்தது...

இந்த காமெடிகள் ஒரு புறம் அரங்கேரி கொண்டு இருந்த போதுதான்... நம்ம ஆட்டோ களத்தில் குதித்தது...  சென்னையின் பெருமை என்று களத்தில் குதித்த மேலும் பொதுமக்களிடம் மீட்டர் குறித்த வித்தியாசத்தை உணர்த்தி  எந்த அளவுக்கு  மீட்டர் போடாமல்  பகல் கொள்ளை  அடிக்கின்றார்கள் என்று மக்கள் உணர ஆரம்பித்தார்கள்... நிறைய நம்ம  ஆட்டோ டிரைவர்கள் தாக்கப்பட்டார்கள்... நிறைய இடங்களில் அவர்கள் விரட்டபட்டார்கள்... ஆனாலும் பொதுமக்கள் நம்ம ஆட்டோவை சென்னையின்  பெருமை என்று உணர்ந்தார்கள்... நம்ம ஆட்டோவை  பொதுமக்கள் கொண்டாடுவதை  ஊடகங்கள்  எழுதின....


திரும்ப சுப்ரீம் கோர்ட்... என்ன ஆச்சா ??  ஆட்டோ கட்டணத்தை நிர்ணயம் செய்து விட்டீர்களா?- என்று திரும்ப நினைவு படுத்தியது... மக்கள் நல அரசு அதை பற்றிக்கண்டுக்கொள்ளவேயில்லை.....

சுப்ரீம்  கோட்டு சும்மா இருக்குமா? அது என்ன சுப்ரீம் ஸ்டாரா? அம்மா புகழ் பாட...??  இத்தனாம் தேதிக்குள்ள கட்டணத்தை நிர்ணியக்க வில்லை என்றால் அபராதம் என்றது.... மக்கள் நல அரசு அதை பற்றி  கிஞ்சித்தும் கண்டுக்கொள்ளவேயில்லை... ஹைடெக் மீட்டர் வைக்க வேண்டும் என்று அவகாசம் கேட்டது....

அதெல்லாம் அப்புறம் வச்சிக்கலாம்... முதல்ல  பழைய மீட்டர் இம்ளிமென்ட் பண்ணுங்க என்றது...  தமிழ்நாட்டு சைடில் இருந்து  மயான அமைதி...


சுப்ரீம்  கோர்ட் காலக்கெடுவை காரணம் காட்டி அதை  மீறியதற்க்காக அபராதம் பத்தாயிரம் ரூபாய் என்று சுப்ரீம்  கோர்ட் அறிவித்தது... இது என்ன  பிசாத்து பணம் என்று அந்த பணத்தை மக்கள் நல அரசு பைன் கட்டி விட்டு சும்மாதான் இருந்து இருக்கும்... ஆனால் திரும்ப சுப்ரீம் கோர்ட் ஒரு டெட்லைன் வைக்க... பைன் கட்டியே அரசு  கஜானா காலியாகி விடக்கூடாது என்று தமிழக அரசு  விழித்துக்கொண்டு... தனியார் நிர்ணயம் செய்த  நம்ம ஆட்டோ கட்டணத்தை அப்படியே  பட்டி டிங்கரிங் செய்து  வெளியிட்டது....



THE ROME WAS NOT BUILD ONE DAY  என்று ஒரு அருமையான  உவமை ஆங்கிலத்தில் உண்டு ... அது போல ஒரு நாளில்  காணாமல் போன  மீட்டர் வந்து விடவில்லை... இதுக்கு பின் பெரிய போராட்டம் இருக்கின்றது...  டைம்ஸ் ஆப் இந்தியாவும் மற்ற ஊடகங்களும் தொடர்ந்து ஆட்டோ மீட்டரை வலியுறுத்தி வந்தன....


2013 ஆம் ஆண்டு  காணமல் போன மீட்டரை   போராடி கண்டு பிடித்து பொதுமக்களிடம்  கொடுத்து உரிமைகளை நிலைநாட்ட   செய்த டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு ஒரு பொக்கே பார்சல்...



நெஞ்சார்ந்த வாழ்த்துகள் டைம்ஸ் ஆப் இந்தியா... சென்னைவாசிகள் அனைவரும் டைம் இதழுக்கு நன்றி தெரிவிப்போம்...

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.





நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

16 comments:

  1. sir,
    please don't force the makkal nala arasu to send a auto without meter and number plate to your house take care

    ReplyDelete
  2. I have been coming to Chennai since 1982 at least thrice a year and whenever I get down from Navjeevan Express, I am compelled to give minimum one railway ticket fare from Baroda to Chennai to reach my destination in Madipakkam from Central. All these years, no government has taken any initiative to set right this auto meter, because most of the auto owners are either Marvadis or ?????; hence, no government did bother to take any step. Now at least this government is doing some thing. First let us appreciate them also. May be it is a delayed step but "better late than never". Okay. During all these years, in Baroda, I have not faced much problem for commuting within the city from autowallas. I can write a detailed analysis of the autowalas of Baroda and Chennai but it will be boring for some and for many it will be stomach burning issue.

    ReplyDelete
  3. now also in nanganalur auto drivers are driving without meters

    ReplyDelete
  4. now also nanganallur auto drivers driving without axis thye meeter

    ReplyDelete
  5. உங்களுடன் சேர்ந்து நானும் வாழ்த்துகின்றேன்.

    ReplyDelete
  6. அடப் பாவியா ? நா அம்மா தா கொண்டுவந்தாங்கன்னு இருக்கேன். நல்ல கட்டுரை ஜாக்கி.

    இருந்தாலும் வீட்டுக்கு பக்கத்தில இருக்கிற ஆட்டோ டிரைவர்களை பகைத்துக் கொள்ள முடியவில்லை.

    ReplyDelete
  7. Good One Post Congrats to Times of India

    ReplyDelete
  8. ஜாக்கி,மீட்டர் போடவைத்த TOI க்கு நிச்சயம் இந்த பாராட்டு வேண்டியது தான் ஆனால் இன்னும் ப்ல இடங்களில் அவர்கள் வைத்தது தான் சட்டமாக இருக்குது ஏனென்றால் அந்த பகுதியில் முறையான போக்குவரத்து வசதியில்லாமல் இருப்பது.மினிபஸ் அவர்களை இன்னும் முடக்கிப்போட்டிருக்கிறது.என் வீட்டுக்கு பக்கத்தில் ஒரு ஆட்டோ ஸ்டாண்டில் எப்போதும் 6 ஆட்டோ வரிசையில் நின்றுகொண்டிருக்குது.டிரைவர்கள் சாகவாசமாக பேப்பர் படித்துக்கொண்டும் தொழில் போயிவிட்டது என்ற குறை கூறல்களும் ஒலித்துக்கொண்டிருக்கிறது.என்னை பொருத்தவரை சென்னையின் அசிங்கம் என்றால் கூவத்துக்கு பிறகு ஆட்டோ தான்.

    ReplyDelete
  9. //என்னை பொருத்தவரை சென்னையின் அசிங்கம் என்றால் கூவத்துக்கு பிறகு ஆட்டோ தான்.// உண்மை

    ReplyDelete
  10. IN chennai All the gas delivery persons take Rs.30 per cylinder. Where as in other places in India they return even 1 rupee.

    We talk about culture. But in tamilnadu they expect money( extra of any order) for any small thing. my north indian friends always complaint about these auto and gas, small petti workers

    ReplyDelete
  11. IN chennai All the gas delivery persons take Rs.30 per cylinder. Where as in other places in India they return even 1 rupee.

    We talk about culture. But in tamilnadu they expect money( extra of any order) for any small thing. my north indian friends always complaint about these auto and gas, small petti workers

    ReplyDelete
  12. in chennai all the gas delivery persons charge Rs. 30 extra. Media people should come forward and rescue peop[le from these

    ReplyDelete
  13. அப்படியே காணாமல் போன (உணவங்களில்தான்)விலைப் பட்டியல், கா.போ. பத்திரிகை தர்மம், கா.போ. லஞ்சம் வாங்கா காவலர்கள்......என இன்னும்........ கா.போ. பட்டியல் இட்டால் மகிழ்ச்சி

    ReplyDelete
  14. But the same old meter "சூடு " has started. From royapuram over bridge to beach station petrol bunk the meter showed 2.1 km. when asked the driver said அதெல்லாம் எனக்கு தெரியாது. மீட்டர் போட்டு ஓட்ட சொல்றாங்க. நாங்க ஓட்டறோம். வேணும்னா மீட்டர் போட சொன்னவனை போய் கேளு. I don't know how this menace is going to be tackled

    ReplyDelete
  15. Both DMK & ADMK kept on ruling for 40 years doing nothing for the commom people
    1. water problem 2. auto fare
    Sick of DMK & ADMK

    ReplyDelete
  16. கேரளாவில் இவர்களின் வருகைக்கு பிறகு கொள்ளை சம்பவங்கள் அதிகரித்த காரணத்தால், இவர்களின் ID proof போலிஸ் stationil submit செய்த பிறகே இவர்கள் வேலைக்கு எடுக்க படுகிறார்கள் ...........

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner