பெண்ணியம்.

இதே பூமியில் வாழும் ஆண்களால் சமீபத்தில் நிகழ்த்தப்பட்டவை.


காதலிக்க மறுத்தபெண்ணின் முகத்தில் ஆசிட் ஊற்றுகின்றான்...

வெளிநாட்டில் இருக்கும் போது காதலித்து விட்டு தற்போது பேசாமல் புறக்கணித்த முறைபெண்ணை கடலூர் கல்லூரி வாசலில் நின்று அவள் உடம்பில் கத்தியால் குத்துகின்றான்...குத்திய கத்தி அந்த பெண்ணின் உடம்பில் சிக்க அடுத்த கத்தியால் கழுத்தை அறுத்து சாகடிக்கின்றான்.

காதலிக்க மறுத்த பெண்ணின் வாயில் திராவகம் ஊற்றுகின்றான்...

டெல்லி பேருந்தில் பயணம் செய்த பெண்ணை கூட்டாக வண்புணர்வு செய்து யோனியில் இரும்பு ராடை சொருகுகின்றான்....

குடித்து விட்டு பொது இடத்தில் மனைவியை விளாசுகின்றான்.

மத்திய பிரதேசத்தில் ஐந்து பிள்ளை பெற்ற மனைவியின் மீது சந்தேகம் கொண்டு, யோனியை இரும்பு தகரத்தை வைத்த பூட்டு போட்டு விட்டு வேலைக்கு சென்ற ஆட்டோ டிரைவரை பார்த்து வியந்து போய் இருக்கின்றது இந்திய ஊடகம்...இப்படியான ஆண்கள் இப்போதும் இருக்கின்றார்கள்...

சரி விஷயத்துக்கு வருவோம்........................

நம்ம ஜாதியில பொண்ணுங்க எட்டாவதுக்கு மேல எப்ப படிச்சி இருக்காங்க? என்று ஒரு ஒரட்டுக்கை சித்தப்பன் தூபம் போட்டு இருந்தால்....

படிச்ச பொம்பளைங்க குடும்பத்துக்கு அடங்காதுங்க எதுக்கு படிக்க வச்சிக்கிட்டு பிரச்சனை பெரிசாக்கிட்டு... அப்புறம் அந்த படிச்ச கழுதைக்கு சரிசமமா மாப்பிளை வேணும்ன்னு கேட்பாளுங்க... ஏதுக்கு இப்ப படிக்க வச்சிக்கிட்டு என்று யாராவது ஒரு ஒன்னு விட்ட கோண பெரியப்பன் சொல்லி இருந்தாலோ....

பொட்ட கழுதைக்கு என்ன கதை புக் வேண்டி கிடக்கு...?? வராண்டா புல்லா முறுங்கை கீரை ஆஞ்சி குப்பை கூலமா இருக்கு??? என்று ஒன்னு விட்ட மாமா கத்தி இருந்தாலோ???..........

பொட்டக்கழுதைக்கு என்ன படிப்பு வேண்டிக்கிடக்கு? என்று மதிய சோற்றை குறிவைத்து ....வீடு வந்து போட்டு கொடுக்கும் அல்லகைகாரன் எவனாவது தூபம் போட்டு இருந்தாலோ?....

நம்ம சமுகத்துல வயசுக்கு வந்த அடுத்த செகன்ட்டே கல்யாணம் பண்ணி கொடுத்துடனும் என்று தாய்மாமன் கெடா விருந்தில் தூபம் போட்டு இருந்தாலோ?.........

நான் சொல்லற படிப்பைதான் படிக்கோனும் ... கட்டிக்க சொல்லறவனைதான் கட்டிக்கோனும் என்று பெத்த அப்பன் சொல்லி இருந்தாலோ??.......

பேச்சுக்கு எதிர் பேச்சு என்ன வாழுது.. இப்பயே வாயில ரெண்டு போட்டு வளர்க்கலைன்னா... கல்யாணத்துக்கு அப்புறம் வாழ வெட்டியாதான் வந்து தொலைக்கு என்று சகோதரன் சலித்துக்கொண்டாலோ???.............

கல்யாணத்துக்கு அப்புறம் என்ன புத்தகம்? என்ன படிப்பு? வேலை? வெட்டி? என்று கட்டிய கணவன் தடை போட்டு இருந்தாலோ?..........

நீயா நானாவில் பெண்ணியம் பேசிய பெண்கள் பக்கம் ஒரு பெண்மணி உட்கார்ந்து பேசி இருக்க முடியாது... இவர்கள் இந்த அளவுக்கு சுதந்திரமாக பொது சபையில் தங்கள் கருத்துக்களை பகிர அல்லது முன் வைக்க...

அவர்களுக்கு பின்புலமாக தந்தையாக, சகோதரனாக, கணவனாக, பெண் என்ற பாலின பிரிவை பார்க்காமல்.... அவர்களை சுதந்திரமாக சரிக்கு சமமாக நடத்திய ஆண்களுக்கு ஒரு பொக்கே பார்சல்.......

பெண்களை சரிக்கு சமமாக நடத்தப்படவேண்டும் என்று சொல்லி, தமிழ்நாட்டில் தன் வாழ்நாள் முழுவதும் விழிப்புணர்வு ஏற்ப்படுத்திய பெரியாருக்கு ஒரு சலாம்.

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.




நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS... 

3 comments:

  1. ஆனால் அந்தக்காலத்தில் இதுபோன்று பெண்கள் அறிவியல் முறையிலெல்லாம் கொல்லப்படவில்லையே.

    ReplyDelete
  2. அருமையான பகிர்வு அண்ணா...

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner