உப்புக்காத்து..18




சிலரை பார்த்த உடனேயே ஏனோ பிடிப்பதில்லை...
  அந்த மாணவனை பார்த்த முதல் பார்வையில் அவனை எனக்கு பிடிக்காமல் போயிற்று....முதன் முதலாக கல்லூரிக்கு சென்று வீடியோகிராபி பாடம் எடுக்க செல்கின்றேன்..  ஆங்கிலம் எனக்கு தத்க்கா பித்தக்கா..

 மூன்று வட இந்திய மாணவர்களை தவிர  மற்ற அனைவருமே தமிழ் பசங்கள்தான்... ஆனாலும் தமிழில் பாடம் நடத்திய போது, ஆங்கிலத்தில் பாடம் நடத்த  வேண்டும் என்று முதல் நாளே என்னை ராக்கிங் செய்வதான நினைத்து எதிர்ப்பு தெரிவித்தார்கள்..

 ஓகே காய்ஸ் லேட் மி கம் டு த பாயிண்ட்..... டு டே ஐ  வில் டீச் யூ சம் வீடியோகிராபி பேசிக் டெக்னிக்கல்திங்ஸ் என்று எனக்கு தெரிந்த ஆங்கிலத்துக்கு  மாறினேன்...எனக்கு ஒரளவுக்கு பயமற்று ஆங்கிலம் பேச , பழக என்  காதலியான மனைவி எனக்கு உதவி செய்தாள், ஆங்கிலம் ஒரு சப்பை மேட்டர் குவாட்டர் பிரயாணி என்று  நம்பிக்கை வளர்த்தாள்... தனியாக அவளிடம் சரளமாக பேசுவேன்... ஆனால் பத்து பேர் எதிரில் பேசுவது தயக்கமாகவே இருந்தது.. இதுதான் என் வாழ்க்கை, இங்கே கொஞ்சம் நாள் ஆட்டம் போட வேண்டும்.. தப்பித்த போக வேறு  வழியில்லை.. பேசியே ஆக வேண்டும்.. 

மேலும் என் தயக்கத்தை என்னோடு வேலைக்கு சேர்ந்த பவித்ரா என்ற எனது தோழி, எனக்கு பெரிய உற்சாகத்தை கொடுத்தார்...ஜாக்கி சார் என்கிட்ட பேசறிங்க இல்லை.. இது கூட தெரியாம நிறைய காலேஜ்ல வாத்தியாருங்க பத்து பதினைஞ்சு வருஷமா குப்பையை கொட்டிக்கிட்டு இருக்காங்க.. என்று நம்பிக்கை கொடுத்தார்....

 நான் பாடம் எடுத்தே ஆக வேண்டும்.  எங்கே இருந்து அந்த வேகம் வந்தது  என்று தெரியவில்லை.. சிம்பிள் ஆங்கிலத்தில் வெகு   தெளிவாக படம் நடத்தினேன்..


 எல்லா வகுப்பிலும் ,எல்லா பேச்சிலும் ஒரு அடங்காத மாணவன் இருப்பான்... அவன் சரியாக   கல்லூரிக்கு வரவேமாட்டான்..ஒரு வாரம் கழித்து  திரும்ப வீடியோ கிராபி பிராக்ட்டிகல் கிளாஸ்.... கிளாசுக்கு  வெளியே  கேமராவை மற்றும் மானிட்டர் வைத்து, எப்படி கேமராவை ஆன் செய்ய வேண்டும்.? எப்படி பிரேம் கம்போஸ் செய்ய வேண்டும்?

குளோசப் என்றால் என்ன? மிட்ஷாட் என்றால் என்ன?  எக்ஸ்ட்ரீம் குளோசப் என்று பேசிக் விஷயங்கள் கற்றுக்கொடுத்துக்கொண்டு இருந்தேன்... என்னையும் என் முடிகொட்டிய எனது தலையையும் ஒரு பெண் எதிரில் அவன் நக்கல் விட்டுக்கொண்டு இருந்தான்... முதலில் பேசிப்பார்த்தேன்...  அடங்குவதாக தெரியவில்லை.. புறக்கணிக்க ஆரம்பித்தேன்... நான் வெகு இயல்பாக மற்ற மாணவர்களிடம் பழகுவது அவனுக்கும் பிடித்து இருக்க வேண்டும்...


ஸ்கிரினிங் கிளாசில்... நல்ல திரைப்படங்களை அறிமுகம் செய்து அந்த திரைப்படத்தை பற்றி விளக்கி, அதில் இருக்கும் டுவிஸ்டுகள், ஷாட்டுகள் போன்றவற்றை வைத்து கல்நதுரையாடல் போல கிளாஸ் எடுக்க, சினிமாவில் அதிகமான ஆர்வம் கொண்ட அவன் என்னிடம் அதிகம் பேச அரம்பித்தான்.. அன்று நடந்த நிகழ்வுக்கு சாரி  சொன்னான்...


திருப்பதியில் மொட்டை போட்டு விட்டு பேருந்து கிடைக்காமல் இருந்த நேரத்தில் கீழ் திருப்பதியில் இருக்கும் பிரசாத் தியேட்டரில் மூட்டா  மேஸ்திரி  படம் பார்த்ததோடு எனக்கும் தெலுங்கு படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை...ஆனால் அவன்........ ஏன் அவனை அவன் அவன் என்று இத்தனை பாரா கழித்தும் அழைத்துகொண்டு இருக்க வேண்டும்..? அவனின் உண்மையான பெயர்  கார்த்திக் வீரா... அவன்  என்னிடம் வந்தான்... சார் பைலட் தியேட்டர்ல அனுக்க கொண்டே ஒக்க ரோஜுன்னு ஒரு படம் போட்டு இருக்கான்..  நீங்க அந்த படத்தை பாருங்க.. உங்களுக்கு கண்டிப்பா அந்த படம் பிடிக்கும் என்றான்...


 அந்த படத்தை பார்த்தேன்.. சான்சே இல்லை... தேங்யூ கார்த்திக்.. இது போல படம் எந்த படமா இருந்தாலும் என்கிட்ட நீ சொல்லனும் என்றேன்... சரி என்றான்.. பெரிய டவர் ஸ்பீக்கர் மற்றும் ஆம்ப் இருக்கு விக்க போறேன் சார்.. உங்களுக்கு  வேணுமின்னா  வாங்கிக்கோங்க என்றான்.. 3500 ரூபாய் கொடுங்க போதும் என்றான்.என் வீட்டில் ஹோம் தியேட்டர் வர காரணமாக இருந்தவன்... 

அதன் பிறகு  நிறைய படங்கள் அதில் பார்க்க ஆரம்பித்தேன்... காத்திக் என்னிடம் நிறைய திரைப்படங்களை பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தான்.. மெலோ டிராமிவில் எனக்கு  பெரிய இன்ட்ரஸ்ட் இல்லை..எனக்கு நிறைய மெலோ டிராமா வகை திரைப்படங்களை  பார்க்க சொல்லி எனக்கு அறிமுகப்படுத்தியவன் அவனே.. படம் முடியும் போது கண்களில் நீர் தளும்பும்..
கல்லூரிக்கே தலைகாட்டா மாட்டான்..,, நானும் எனது தோழி பவித்ராவும்தான் அவனை கல்லூரிக்கு தொடாந்து வர அறிவுறித்தினோம்.. அட்டென்டஸ் இல்லை.. அவனை மூன்றாம்  ஆண்டு தேர்வுக்கு அனுப்புவதற்குள் விழி பிதுங்கி விட்டது... சினிமாவில் அவனுக்கு  ஆர்வம் அதிகம் என்பதால்  ஒரு தியேட்டரை விட மாட்டான்...

கல்லூரி முடிந்தது என்ன செய்ய போகின்றாய் என்றேன்.?

எடிட்டிங்ல எனக்கு செம்மை இன்ட்ரஸ்ட்டா இருக்கு சார்.. அதுல பெரிய  லெவல்ல வரனும் சார்...

உங்க அப்பா பிசினஸ் யார்  பார்த்துப்பாங்க...?

சார் முதல் புள்ளையா பொறக்கறது நம்மை தப்பா சார்.. நமக்குன்னு கனவு இருக்கு சார்... அதை அடையாம இந்த சென்ட்டிமென்ட்ல எல்லாம் மாட்டிக்க கூடாது.. நாம என்ன நினைச்சமோ அதை இந்த ஜென்மத்துலு சாதிச்சி காட்டனும்...


 அவர் பிசினசை என் தம்பி பார்த்துகிட்டும் எனக்கு என்ன?

இரண்டு மாதங்கள் கழித்து போன் செய்தான்.. சார் வீட்டுல சண்டை...தனியா  ஆவிச்சி ஸ்கூல்கிட்ட எப்சிபி  மெஷின் போட்டு இருக்கேன்... ஏதாவது  ஷார்ட் பிலிம் ஆட் டாக்குமென்ட்ரி  என்று எதுவா இருந்தாலும் சொல்லுங்க சார்.. நான்  செஞ்சி தரேன் என்றான்... நானும் பிளாக்கில் சில காலம் அவன் விளம்பரத்தை போட்டேன்...

அதன் பிறகு  அவன் தொழில் திறமையால் பெரிய பெரிய புராஜக்ட் எல்லாம் செய்ய ஆரம்பித்தான்..

(குருப் போட்டோவில் எனக்கு பின்னே கடைசியாக நிற்கும் கார்த்தி)

ஏப்போதாவது அவன் ஆபிசுக்கு போகும் போது அவன்  செய்த  எடிட்டிங் ஒர்க் போட்டு காட்டுவான்.. எனக்கு பெருமையாக இருக்கும்.. எப்படி ஊராக்காலி மாடு மாதிரி சுத்திக்கிட்டு இருந்த பையன்.. எவ்வளவு பொறுப்பா ஒரு ஆபிஸ் போட்டு, தொழிலை  அவன் ஆர்வத்துல கத்துகிட்டு, காரணம் அவன் யாருகிட்டயும் அசிஸ்டென்ட்டா இல்லை.... அவனே கத்துகிட்டான்...  அவைனை பார்க்கும் போது ரொம்ப பெருமையா இருந்துச்சி...

முதலில் அவனை எனக்கு அடையாம் காண்பித்தது என்னோடு  ஆசிரியையாக பணி புரிந்த தோழி பவித்ராதான்.. காரணம் அவனை பற்றி  நல்லவிதமான செய்திகளை நான் கேட்டதே இல்லை..  சார் அந்த பையன் நல்ல பையன்தான்.. பேசி பார்த்தேன்...அவனை புறக்கணிக்காதிங்க...இனிமே அப்படி நடந்துக்க மாட்டான்.. ஆனால் கல்லூரி முடிந்தும் எனக்கும் அவனுக்குமான பந்தம் தொடரும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.  


ஒரு முறை வண்ணாபேட்டை  ஜேபி கோவில் தெருவில் மெடிக்கல் வைத்து இருக்கும்  விஜய்  எங்கள் குடும்ப நண்பர்.. அவரை பார்க்க நானும் என் மனைவியும் சென்றோம்...   அவரை பார்த்து விட்டு கிளம்பும் போது ,கார்த்தி வீடும்.. இங்கதான் ,பார்த்து ரொம்ப நாள் ஆயிடுச்சி.... அந்த பய  இருந்தா அவனை பார்த்துட்டு போலாம் என்று  என் மனைவியுடம் சொன்னேன்..அவன் வீட்டுக்கு சென்றோம்.. அவன் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை... 
மனைவியின் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு எனக்கு  மனதுக்கு  பிடித்த வெகு  நெருக்கமானவர்களை மட்டுமே அழைத்து இருந்தேன்...


கார்த்திக் வீரா....

சொல்லுங்க சார்..

நாளைக்கு வீட்ல பங்ஷன்  வச்சி இருக்கேன்..  பிரியா இருந்தா வீட்டுக்கு வாடா..

சரிசார்.. சார் நம்ம ராஜுவும் உங்களை பார்த்து நாள் ஆச்சின்னு  சொன்னான்.. அவனையும் அழைச்சிக்கிட்டு வரட்டுமா?  இது என்னடா கேள்வி? கூட்டிகிட்டு வாடா.. என்றேன்

. இரண்டு பயல்களும்  வந்து நிகழ்சியை சிறப்பித்தார்கள்..


(கைட்டியபடி  கார்த்தி பக்கத்தில் ராஜு....)

கார்த்தி என்னிடம் நிறைய பர்சனல்களை  பகிர்ந்து கொண்டு இருக்கின்றான்... நிறைய பேசி இருக்கின்றோம்...ஹாலிவுட் டைரக்டர்கள் பலரை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்ததில் அவனுக்கு பெரும் பங்குண்டு... அவனிடம் எந்த சந்தேகத்தையும் கேட்பதில் எனக்கு  எந்த கூச்சமும் இல்லை. அவனுக்கு ரொம்ப  பிடித்த இயக்குனர்.. குவாண்டின், மற்றும் நோலன்.


.
ஒரு வருடம் கழித்து சார் எத்தனை நாளைக்கு தான்  இப்படியே செக்குமாடு  மாதிரி ஒட்டிக்கிட்டு இருக்கறது... அதனால் எடிட்ட்டர் லெனின் போல பெரிய ஆள் யாருகிட்டயாவது சேர்த்து,  பெரிய அளவுல சினிமாவுல எடிட்டிங்ல வரனும் யோசிச்சி இருக்கேன்சார்... யாராவது தெரிஞ்சவங்க இருந்தா சொல்லுங்க என்று கண்களில் கனவுடனும்   நம்பிக்கையுடனும் பேசினான்.. நானும் ஏதாவது தெரிஞ்சா சொல்லறேன்...


கார்த்தி நல்ல முடிவு...  சினிமா காண்டாக்ட் வெளிய போன மட்டும்தான் கிடைக்கும்.... அதனால் நல்ல முடிவைதான் எடுத்து இருக்கே.. ஆல் த பெஸ்ட் டா கார்த்தி...


 சில மாதங்களுக்கு முன் ஒரு மாலைப்பொழுது யாழினி ஆய்துணியை அலசிக்கொண்டு இருந்தேன்...  போன் அடித்தது.. கார்த்தி என்று பெயர் வந்தது..

. சார் அப்பா இப்பதான் ஹார்ட் அட்டாக்குல இறந்துட்டாங்க... எனக்கு என்ன செய்யறதுன்னே  தெரியலை...  அவனை கட்டி அணைத்து தோளில் சாய்த்து ஆறுதல் சொல்ல வேண்டும் என்று  அந்த நேரத்தில் மனம் ஏங்கினாலும் என்னால் வண்ணாரபேட்டை  செல்ல முடியில்லை.. அந்த வருத்தம் இன்றும் என் மனதில் இருக்கின்றது...

 சில  வாரங்களுக்கு முன் போன் செய்தேன்... எப்படி கார்த்திஇருக்கே...?

சார் எல்லாம் தலைகிழ மாறிடுச்சி... அப்பாவோட மரணம் இப்படி பொறட்டி போடும்னு கனவுலயும் நினைக்கலை...எடிட் ஷூட்டை குளோஸ் பண்ணிட்டேன்...

அப்பா 40 வருஷ உழைப்போட நடத்தி வந்த விரபத்திர ஜுவல்லரியை நான் தான் இப்ப பார்த்துக்கறேன்... வீட்டுக்கு பெரிய புள்ளை இல்லையா? எனக்கு வேற வழி தெரியலை...மகாராணி தியேட்டருக்கு பின்னாடிதான் கடை.. அந்த பக்கம் வந்த அவசியம் வாங்க சார்...

தேவ்ர் மகன் திரைப்படத்தில் ஹோட்டல் ஆரம்பிக்கும் கனவோடு இருக்கும் கமல் சிவாஜி இறந்ததும் வேட்டி சட்டையோடு நடந்து வரும் இன்ட்ர்வல் பிளாக் என் மனத்திரையில் ஓடியது..


கூட்டுக்குடும்ப வாழ்க்கையில் வாழ்ந்து பழகிய நிறைய குடும்பத்தின் மூத்த பிள்ளைகளின் கனவுகள் இப்படியாகத்தான் சிதைந்து போகின்றது...

அதற்கு பின் அவனை இன்னும் பார்க்கவில்லை...   நேரில்  போய் பார்த்து விட்டு வரவேண்டும்....

கார்த்திக் வீரா  எந்த தொழில் செஞ்சாலும்  நீ நல்லா வருவடா.. வரனும்....







பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்






நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ....
.EVER YOURS...
 

16 comments:

  1. Best!
    Top Class.
    pl. continue...
    your good work...

    ReplyDelete
  2. முதல் பிள்ளை மட்டுமல்ல, கடைசி பிள்ளைக்கும் இதே கடமை இருக்குண்ணா, அப்பா பேர் விட்டு போயிற கூடாதுல்ல, கொஞ்ச நாள்ள பாருங்க கார்த்திக் வீரா சொந்தமா படம் எடுத்து பெரிய ஆளா வரப்போறார்.

    ReplyDelete
  3. ப்ச்.........:( கனவு சிதறின வலி மனசில் இருக்குமுல்லே?

    ReplyDelete
  4. சிலருக்கு மட்டும் வாழ்க்கையில் எல்லாவற்றையும் திருப்பிப் போடும் மாற்றங்களைக் கொடுத்து விடுகிறான் கடவுள்.

    கார்த்திக் வீரா, வெற்றி உமதே!

    ReplyDelete
  5. Dear Jackie,

    Greetings.

    I have been reading your blog for quiet some time and to be honest u r simply superb and your words carry no artificial excellence which most of us like and lots and lots in mind to say but as like many of us i hate typing.

    I request you to watch these films and write your reviews

    Human centipede

    salo or the 180 days of sodomy

    The Green Mile

    The Note Book

    P S I love you

    the first two movies i hate the most and the remaining are the few i like most,plz write the review and accept this a humble request

    ReplyDelete
  6. Man proposes and God disposes கார்த்திக் வெற்றி பெற வாழ்த்துக்கள்! பதிவு அருமை!

    ReplyDelete
  7. / * தேவ்ர் மகன் திரைப்படத்தில் ஹோட்டல் ஆரம்பிக்கும் கனவோடு இருக்கும் கமல் சிவாஜி இறந்ததும் வேட்டி சட்டையோடு நடந்து வரும் இன்ட்ர்வல் பிளாக் என் மனத்திரையில் ஓடியது.. * /
    கார்த்திக் வீரா நீ நல்லா வருவடா

    ReplyDelete
  8. thanks for sharing this jackie anna surely karthik will return to the editing route one day

    ReplyDelete
  9. மிகவும் சிறப்பான பதிவு! பிள்ளைகளின் கனவுகள் இப்படியும் சிதைக்கப்படலாம் என்று புரிந்து கொள்ள வைத்தபதிவு! நன்றி!

    ReplyDelete
  10. Mr.Jackie. I am impressed on your article today. My best wishes to Karthik to succeed in his new career.

    ReplyDelete
  11. Naanum kanchipuram kamatchi ammavai
    Vendikkiren. Karthi nalla varuvey.

    ReplyDelete
  12. கூட்டுக்குடும்ப வாழ்க்கையில் வாழ்ந்து பழகிய நிறைய குடும்பத்தின் மூத்த பிள்ளைகளின் கனவுகள் இப்படியாகத்தான் சிதைந்து போகின்றது...

    நெகிழ்ச்சியான பதிவு... என்னால் உணர முடிகிறது, ஏனென்றால்... நானும் ஒரு கூட்டுகுடும்ப வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டிருக்கும் மூத்த பிள்ளைதான்.

    ReplyDelete
  13. maanavan&guru uravukku nalla etuthukatu.uravugal thotarattum. nandri

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner