சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் /திங்கள்/23/04/2012


ஆல்பம்..

ஒகே ஒகே படத்தில் சந்தானம் சொல்லுவார்... இப்படியே பொண்ணுங்க... கார்த்திக், வாசு,ரமேஷ், பாபுன்னு ஏமாத்திகிட்டே இருந்தா? இந்தியா எப்படி வல்லரசு ஆகும்  டல்லரசுதான் ஆகும்
என்று அந்த படத்தில்  தெரிந்தோ தெரியாமலோ சொன்ன வாய் முகூர்த்தம் பலித்து விட்டது.. அக்னி ஏவுகனையை பரிசோதித்ததின் மூலம் இந்தியாவும்  வல்லரசு லிஸ்ட்டில் தன்னை இணைத்துக்கொண்டு விட்டது...ரொம்பவே ஆட்டம் ஆடிகிட்டு இருக்கற சைனாவுக்கு இது மிகப்பெரிய பதிலடி என்றால்  அதில் சந்தேகமே இல்லை என்பேன்.. இந்த அக்னி எவுகனைக்காக உழைத்த அத்துனை விஞ்ஞானிகள் குழுவினர் அத்தனை பேருக்கும் என் நன்றிகள்..  ரொம்ப பெருமையா இருக்கு....
===============
தனியார் பள்ளிகள் தங்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ஆன்சர் ஷீட் ஜெராக்ஸ்  எடுத்து பிட் கொடுத்த கதைக்கு தமிழகம் முழுக்க  நாறிப்போய் இருக்கின்றது.. நாங்களும்தான் படிச்சோம்..ஒரு ஒரு வாத்தி இப்படி இருந்தா கூட எவ்வளவு நல்லா இருந்து இருக்கும்..? வடை போச்சே..
=================
 கார் வைத்து இருப்பவர்கள் மற்றும் காரில் பயணிப்பவர்கள் எல்லோரும் மிக கவனமாக இருக்க வேண்டிய விஷயம் இது... தயவு செய்து இந்த செய்தியை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்...சில நாட்களுக்கு முன்  சென்னை கோவிலாம்பாக்கத்தில் 50வயது மதிக்கத்தக்க என்ஜினியர் தனது பேத்தியை பள்ளியில்  விட இரு சக்கர வாகனத்தில்  சென்று இருக்கின்றார்.. ரோட்டுக்கு ஓரமாக  நின்றுக்கொண்டு இருந்த இன்டிகா காரின் கதவை அதில்  உட்கார்ந்து இருக்கும் டிரைவர் பின்ன்னால் வாகன்ம் ஏதும் வருகின்றதா? என்று திரும்பி பார்க்காமல் ஏதோ ஒரு ஞாபகத்தில் கார் கதவை திடும் என்று திறக்க... எதிர்பாராமல் திடும் என்று திறந்த காரின் கதவில் பேத்தியும் தாத்தாவும் வாகனத்தோடு  மோதி சாலையில் விழ பின்னால்  வேகமாக வந்த டிப்பர் லாரி பிரேக் கூட போட அவகாசம் இல்லாமல் இருவர் மீதும் ஏறி நின்றது....இரண்டு டிரைவரும் கைது செய்யப்பட்டு இருக்கின்றார்கள்..ஆனால் கனவுகளோடு பள்ளிக்கு சென்ற பிஞ்சு என்ன பாவம்   செய்தது.. இதே போல ஒரு போறம் போக்கு ஓஎம் ஆரில் இருக்கும் ஆர் எம் இசட் கிட்ட ஒரு டீக்டைக்கிட்ட போய் நின்று விட்ட கார் திடிர் என்று திறக்க நான் தடுமாறி பிரேக் பிடிப்பதற்குள் கார் கதவில் எனது விரல்கள் இடித்து பெருத்த வலி... உள்ளே உட்கார்ந்து இருந்த அந்த டை கட்டிய  வேஸ்ட் லேன்ட் என்னை பார்த்து சொல்லியது.. சார் பாத்து வரனும்... நான் இப்படி ஆரம்பித்தேன்... டேய் ங்கோத்தா பாடுப் பு......................... என்று கோவத்தோடு ஆரம்பிக்க... அந்த டைகட்டிய வேஸ்ட்லேன்ட் திரும்ப கார் கதவை வேகமாக சாத்திக் கொண்டான்..
========================
நான் ஈ படத்தின் டிரைலர்.... நல்லா இருக்கில்ல பார்த்திட வேண்டியதுதான்..





மிக்சர்..
சென்னையில் சந்துக்கு  சந்து போலிசார் நின்று வாகன சோதனை நடத்துகின்றார்கள்.. எதிர்பாராத இடங்கிள்ல் எல்லாம் போலிசார் நின்றுக்கொண்டு வாகனங்களை வழி மறித்து  சோதனை செய்கின்றார்கள்.. வரவேற்க்க தக்க விஷயம். ஆனால் பொதுமக்களை அடிமைகள் போல நடத்துவதும் அலட்சியமாக பேசுவதையும் எப்போது நிறுத்திக்கொள்ள போகின்றார்கள் என்று தெரியவில்லை.
==================
சமீபகாலமாக  ஒரு பெரிய பிரச்சனையை நான்  சந்தித்துக்கொண்டு இருக்கின்றேன்.. மருத்துவமனையில்  உயிருக்கு போராடும் யாரோ ஒருவருடைய  பணத்தேவையை பூர்த்தி செய்ய எனக்கு மெயில் அனுப்பிக்கொண்டு இருக்கின்றார்கள்..டாகடர் லட்டர்.. ஆப்பரேஷன் தொகை, போன்றவற்றை ஸ்கேன் செய்து அனுப்பி  வைக்கின்றார்கள். மெயில் அனுப்பியவுடன்  உதவி செய்த திருப்தியுடம் அவர்கள் பாட்டுக்கு போய் விடுகின்றார்கள்.. யார்.. அவருக்கும் என்ன? அவருடைய பின்புலம் என்ன? என்று எதையும் தெரிவிக்க மாட்டேன் என்கின்றார்கள்... தயவு செய்து மெயில் அனுப்புவதோடு மட்டும் உங்கள் கடமை முடிந்து போவது அல்ல.... அது போல மெயிலை தயவு  செய்து அனுப்பாதீர்கள்..
=====================
ஒரு வாரகாலமாக இணையத்தின் பக்கம் வரவே இல்லை.. நிறைய வேலைகள்...குழந்தைக்கு வேறு திடிர் என்று உடல்நிலை சரியில்லாமல் போய் விட்டது.. இருப்பினும் என்ன? என்னாச்சு என்று விசாரிக்க நிறைய நண்பர்களே சேர்த்து வைத்து இருக்கின்றேன்.. அந்த அளவில் மிகப்பெருமையாகவே உணர்ந்து நான்  இதனை எழுதுகின்றேன். மிக்க நன்றி நண்பர்களே... இன்னும்கூட ஒரு வாரம் விட்டு எழுதலாம் என்று இருந்தேன். .. எவ்வளவோ பேர் பிளாக் எழுதுகின்றார்கள்.. ஆனால் எல்லோரையும் அனைவரும் படித்து விடுவதில்லை..ஆனால் எழுதினால் படிக்க ஆட்கள் ரெடியாக இருக்கும் போது எதுக்கு தள்ளிப்போடவேண்டும் என்று சோம்பேறிதனத்தை உதறி விட்டு தினமும்  என் தளத்துக்கு வந்து போகின்றவர்களை ஏமாற்றாமல் இருக்கு முடிந்தவரை நேரம் கிடைக்கும் போது எழுதுகின்றேன்.
===================
நேற்று கலைஞர்  செய்திகள்  தொலைக்காட்சியில்  இரவு ஒளிபரப்பான மர்ம முடிச்சி என்ற நிகழ்ச்சியில் எனது பேட்டி ஒளிபரப்பானது... பிரமீட்களின் அதிசய தகவல்களை  பகிர்ந்துகொண்டேன்.. அது பற்றி நிறைய தகவல்களை சேகரித்துக்கொண்டு இருக்கும் போது , ஒரு நண்பர் எழுதிய பிளாக்கில்நிறைய புதிய தகவல்களை படிக்க நேர்ந்தது...அந்த பிளாக் இதோ... புதிதாக எழுத வருபவர்களுக்கு நான்  ஒன்றைச்சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்.... யாரோ ஒருவர் எழுதிய சில சுவாரஸ்ய தகவல்கள் இன்னும் அந்த பேட்டியை சுவாரஸ்யமாக்கின.. அதனால் உங்களுக்கு தோன்றுவதை எழுதி வையுங்கள்.. நிச்சயம் அது  யாருக்காவது பயண்படும்..
கலைஞர் டிவியில் இருந்து கவிஅரசி பேசறேன்... சொல்லுங்கம்மா... சார் உங்க பிளாக் படிச்சேன்.. ரொம்ப சுவாரஸ்யமா இருந்துச்சி.. பிரமிட் பத்தி நீங்க இன்ரஸ்டிங்கா பேசனும் என்றார்கள்... வீட்டுக்கு வந்து ஒளிப்பதிவு செய்துக்கொண்டு போனார்கள்.. நான் எத்தனையோ இன்டர்வியூ கேமராமேனாக எடுத்தாலும் எனது வீட்டுக்கு வந்து லைட்டிங் செட் பண்ணி என்னை பேட்டிக்கண்டது எனக்கு இது புதிய அனுபவம்....நிகழ்ச்சி இயக்குனர் திபிகாவுக்கும் கவியரசிக்கும்  கேமராமேன் பாபுவுக்கும் எனது நன்றிகள். எனக்கு  ரொம்பவும்  பிடித்த முதல் இண்டர்வியூ இது என்பேன். யாராவது யூடியூப் லிங்க்  கொடுத்தால் தன்யனாவேன்.
நிறைய வாழ்த்து மழைகள்.. மெயிலிலும் தங்கள் வாழ்த்தை பகிர்ந்து கொண்டார்கள். சர்ப்பிரைசாக மெயிலில் நண்பர் கருந்தேள் கண்ணாயிரம்  நிகழ்ச்சி முடிந்தவுடன் நிகழ்ச்சி நன்றாக வந்து இருப்பதாக வாழ்த்தி இருந்தார்.. நன்றி  நண்பர்களே..
===================
நேற்று நீயா நானாவில் கலகலப்பானவர்கள்.. ரிசர்வ்ட் டைப் கட்டிக்கொண்ட கணவன் மனைவி பாடுகளை விவாதமாக வைத்து இருந்தார்... நிகழ்சியில்  கலந்து கொண்ட ஒரு வாத்தியாரின் மனைவி கலகலப்பானவர் ஆனால் அவரின்  வாத்தியார் கணவர் ரொம்ப ரிசர்வ்ட்..இரண்டு பேரில் அவரின் மனைவி மேடையில் முத்தம் எல்லாம் கொடுத்தார்..இன்னைக்கு காலேஜ் போகும் போது அந்த வாத்தியார்.. என்ன  பாடு படபோகின்றார் என்று தெரியவில்லை..?
================
இந்தவாரகடிதம்..
ஹலோ ஜாக்கி சார்,  எப்படி இருக்கீங்க? எப்போ நியூ போஸ்ட் போடுவீங்க... டெய்லி உங்க தளத்திற்கு வந்து ஏமாந்து போகிறேன்.  ப்ளீஸ் அப்டேட் சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ். 

Convey my regards to யாழினி.
I hope all is well.


- ஷங்கர் 
==============
எனக்கு எப்போதும் பிடிச்ச ஆல்டைம் பேவரிட் வாக்கியம் என்றால் அதுஇதுதான்.. நீங்கள் இந்த உலகில் மிக்ச்சாதரண மனிதராக இருக்கலாம் ஆனால் உங்களையே உலகம் என்று நினைப்பவர்கள் இருக்கின்றார்கள் என்ற வாக்கியம் எனக்கு ரொம்ப பிடித்த வாக்கியம்.. இந்த பதிவு மேலுள்ள அன்புக்காகவும் ஏமாற்றத்தை தடுக்கவும் வேலைப்பளுவுக்கு மத்தியில் எழுதுகின்றேன்.
=============================

இந்தவார பிலாசபி பாண்டி,..





===================
நான்வெஜ்18+


ரெண்டு நிமிஷத்துல தயராகின்ற மேகியை ஓவன்ல உள்ள வச்சா.. வச்ச உடனே மனைவி கணவனை கூப்பிட்டு உடலுறவு செய்யச்சொன்னா.. கணவனுக்கு ஒரு கருமாந்திரமும் புரியலை...??  எதுக்குடி இப்படி அவசரப்படுத்தறே? என் மேல உனக்கு அவ்வளவு லவ்வான்னு கேட்டான்..?, இல்லை ஓவன்ல இரண்டு நிமிஷத்துல ரெடியாகின்ற மேகிநூடுல்சை வச்சிட்டேன்.. ஓவன்ல டைமர் வேலை செய்யலை அதான்  உங்களை கூப்பிட்டேன் என்றாள்..

 ===============

 பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....


நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

18 comments:

  1. Jacky us usual super sandwich. Last sunday ipdi than nanum scootyla poitu irukumpodhu oru advocate horn and indicator ilama suddena vandhutan. Full smash. 2 vehicleskum sema adi. Bt avan engakita aniyayama law pesi 15,000/- collect panitan. Public fulla enaku support pananga. Bt no use. Indha car owners too mucha behave panranga pa. enna panlam avangala? Ipolam drive panave romba bayama iruku.

    ReplyDelete
  2. சாரி தெரியாம கதவை திறந்திட்டேன்னு சொன்னாக்கூட தேவலை ஆனா பார்த்து வரனும்னு சொன்னதுக்கு
    ##... டேய் ங்கோத்தா பாடுப் பு......................... என்று கோவத்தோடு ...##-- இது பத்தாது.. இன்னும் இறங்கி ரெண்டு கொடுத்திருந்தா.. சார் வாழ்கையில இரண்டு பக்கமும் பார்க்காம கார் டோரை ஓப்பன் செய்ய மாட்டார்ல..

    ReplyDelete
  3. Egypt pyramid அதிசியகள் கண்டிப்பாக நேரில் பார்க்கவேண்டிய இடம் .

    ReplyDelete
  4. I have seen the program, nice to the highlight points which normally not in the science articles.
    The weakness of the program on the clarity of archive videos.

    The philosophy PANDY ,all time superb.

    ReplyDelete
  5. மர்ம முடுச்சு மிக‌ அருமை...
    Video link இருந்தால்/கிடைத்தால் பகிரவும் (sivasamy29@gmail.com)

    ReplyDelete
  6. மிக அருமையான பதிவு

    ReplyDelete
  7. Glad to hear that your daughter is getting better.
    இந்தவார பிலாசபி பாண்டி is so true. Thank you.

    ReplyDelete
  8. அன்பு சேகர்,
    வல்லரசுக் கனவா, போரில்லாத உலகா என்பதை நாம் யோசிக்க வேண்டும். உங்களுக்கும் வல்லரசு கனவு வந்து விட்டது என்பது வருத்தமாக இருக்கிறது. கல்விக்கும் குடிநீருக்கும் சுகாதாரத்துக்கும் செலவு செய்ய வேண்டிய நம் நாடு தொடர்ந்து ஆயுதப் போட்டியில் ஏராளமாக நம் பணத்தை ஸ்வாகா செய்வதில் உங்களுக்கு உடன்பாடா ?

    ReplyDelete
    Replies
    1. நாம் உணவுக்காக சண்டையிடும் காலம் வெகுதூரம் இல்லை..

      Delete
    2. உண்மை நன்பரே.. நாம் உணவுக்கா சண்டையிடும் காலம் வெகுதொலைவில் இல்லை..

      Delete
  9. antha professor maduranthagam aduthu irukka oru kovil arakattaliyai serntha kalloriyil MBA department professor ah irukkar.. avar reserve aaga irunthalum, he is a good teacher & person. but very reserved in college...

    ReplyDelete
  10. Regarding the professor in Neeya Naana, He is working as professor in a college belongs to a trust of famous temple near Maduranthagam, He is reserved in his college too, but he is good teacher & person.

    ReplyDelete
  11. தொலைக்காட்சி நிகழ்சிகளில் தம்பதிகள் அடிக்கும் லூட்டி சில சமயம் தாங்க முடிவதில்லைதான்!

    ReplyDelete
  12. road accident patriya pathivu migavum ubayogamanathu nandri jackie anna how is yalini?

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner