கோ பேக் மோடி



#gobackmodi டுவிட்டர்ல முதல் இடத்துல டிரென்ட் ஆனதுல பக்தாள் பதறிபோய் கிடக்கறா... நாம மட்டும் விளையாண்ட கிரவுன்ட்ல இந்த பயக கதி கலங்க வைப்பானுங்க என்று நினைத்து பார்க்கவில்லை...

ஏன் அவர்கள் காலம் காலமாய் திராவிடம் என்றாலே வேப்பங்காய் கசப்பாய் கசக்கின்றது என்று புத்தி இருப்பவன் புரிஞ்சிக்கிட்டு இருப்பான்...



இந்தியாவில் கடவுளின் பெயரால் அவர்கள் ஆடிய கபட நாடகத்துக்கு இந்தியாவே அவர்கள் காலடியில் மண்டியிட்டாலும் தமிழகம் மண்டியிடவில்லை...

அதனால்தான் இந்திராகாந்திக்கு பிறகு தமிழர்கள் மோடியை டூவிட்டரில் விரட்டி விரட்டி வெளுத்தார்கள்.. மற்ற எந்த மாநிலத்திலும் இது சாத்தியம் இல்லை..

நீதி கட்சி தோன்றி இருக்கவில்லை என்றால்... மூத்திரபையுடன் பெரியார் சமுக நீதி காக்க போராடவில்லை என்றால் அதன் முன்னெடுப்பாக இன்று மூத்திரபையுடன் கருப்பு சட்டை அணிந்து எதிர்ப்பு தெரிவித்த கருணாநிதி முதல்வராக இருக்கும் போது இடஒதுக்கீட்டுக்கான ஆணை பிறப்பிக்கவில்லை என்றால்... ??

டுவிட்டரில் கோ பேக் மோடி சாத்தியமே ஆகி இருந்து இருக்காது...

நாம் அனைவரும் சாணி அள்ளிக்கொண்டு இருந்து இருப்போம்... அதுவே உன்னதம் என்று நமக்கே கிளாஸ் எடுத்து இருப்பார்கள்... அவர்கள் பத்திரிக்கையில் டமில்நாடு என்று எழுதினாலும் சூப்பரு இல்லை என்று சிலாகித்து இருப்போம்...
ஜெயலலிதா டெம்போ டிராவலர் டயர் நக்கிகளாக இருந்து இருப்போம்...

இப்போதும் நிறைய பேர் டயர் நக்கிகளாக இருக்கின்றார்கள் அது வேறு விஷயம்...... ஆனாலும் பாதிக்கு பாதிபேர் எதிர்கேள்வி கேட்கவும் விரட்டி விரட்டி வெளுக்கவும்.. கருணாநிதியும் ஒரு நேரடி காரணம் என்பதை மறக்காதீர்கள்..

இந்த நேரத்தில் வரலாறு முக்கியம் அமைச்சரே...

ஜாக்கிசேகர்
13/04/2018


நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS..
.

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner