79 வயதில் காமம் தவறில்லை.

79 வயதில் காமம் தவறில்லை...
பேரன் பேத்தி வந்த பிறகும் கூட காமம் தவறில்லை.. அது தனிநநபர் உணர்வு சார்ந்த விஷயம்.

வேலை வெட்டி இல்லை ஆனாலும் லட்சத்தில் சம்பளம் , கால் அமுக்க கை அமுக்க சொடுக்கு போட்டால் சொல்லுங்க எஜமான் என்று சொல்ல டஜன் கணக்கிகல் பணியாளர்கள்....



வெயில் சுத்தமாக தெரியாத அளவுக்கு நகர பரபரப்பான சந்தடிக்கு நடுவில் . சுத்தி அடர்ந்த காடு...
அதற்கு நடுவில் . வெள்ளைக்காரன் கட்டி வச்ச விஸ்தாரமான கட்டிடம் , சுற்றிலும் மான்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி வரும் நந்தவனம்,,

ஆத்திர அவசரசத்துக்கு வெளிய போவனும்னா... போலிஸ் பந்தோஸ்த்து.

ராஜா வாழ்க்கை... அதிகார மமதை எல்லாம் சேரும் போது காமம் தலை தூக்கும்தான்..

ஏழுந்திரு அஞ்சலி எழுந்திரு அஞ்சலி கதையாக இருந்தாலும் புலூட் வாசிக்கவாவது ஆள் இருந்தால் நல்லது என்று தோன்றி இருக்கும்...

அதற்கு சென்னையில் நிறைய பெணகள் இருக்கின்றார்கள்... சரியான ஆளை பிடித்தால்.. கானகம் முழக்க பெண்களின் அந்தபுரமாக ஒரு நொடியில் மாற்றலாம்...

ஆனால் படிக்கும் பிள்ளைகளை படுக்கைக்கு அழைக்க வலை விரிக்கவும் அதுவும் ஏழை பெண் குழந்தைகளை வறுமையின் காரணத்தை முன் வைத்து... வலை விரிப்பது... பெருங்கொடுமை. அந்த இடத்திலேயே ஒரு ஆள் காட்டியை உருவாக்கி பிரஷ் பிசுக்கு அலைவது... கடந்து எடுத்த ஐயோக்கியதனம்.

த்தூ இதெல்லாம் ஒரு பொழப்பு...

ஆங்கில பத்திரிக்கைகள் எல்லாம் இரண்டூ மாதத்துக்கு முன்னே அடையாளம் காட்டியும்.. தமிழ் பத்திரிக்கைகள் வாய் மூடி மவுனம் காத்தன..

தமிழ்நாட்டின் ஆகப்பெரும் சாபம் இதுதான்.

ஜாக்கிசேகர்
18/04/2018


நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner