குண்டு வெடித்ததும் இந்தியாவில் நிகழ்வது என்ன?

நேற்று அசாம் கவுகாத்தியில் குண்டு வெடித்து 70 பேர் பலியானார்கள்(30/10/2008) இந்த பதிவு டெல்லி குண்டு வெடிப்பின் போது எழுதியது. இப்போதும் எப்போதும் இந்தியாவிற்க்கு பொறுந்தும்.....

இன்னும் குண்டு வெடிக்கும் போதெல்லாம் இதே பதிவை உயிர் சேதம் மற்றும் நாளை மடடும் மாற்றி போடலாம் என்று இருக்கிறேன். எனெனில் இத்தனை பலியாகி இருக்கிறார்கள் உளவுதுறை என்ன செய்கிறது? அவர்களுக்கு கெபடுககும் சம்பளம் எல்லாம் விழலுக்கு இறைத்த நீர்தானா?

இதற்க்கு மேல் பழைய பதிவை படியுங்கள் இது எப்போதும் பொறுந்துவது போல்தான் எழுதியுள்ளேன்


நேற்று முன் தினம் தலைநகர் டெல்லியில் நடந்த குண்டு வெடிப்பில் இதுவரை 30 பேர் உடல் சிதறி மடற்றும் 100க்கு மேற்பட்டவர்கள் பலியாக உள்ளனர்.



சில மாதங்களுக்கு முன் அகமதாபாத், பெங்களுர், சூரத் போன்ற இடக்ளில் குண்டு வெடித்து இறந்து போனது ஞாபகம் இருக்கலாம் அல்லது தமிழனாக இருக்கும் பட்சத்தில் அது மறந்து போய் இருக்கலாம்.இந்தியனாக இருக்கும் பட்சத்தில் அதை சகித்து கொண்டு இருக்கலாம். அல்லது பொதுவானாக இந்தியனாக இருந்தால் பக்கத்து வீட்டில்தானே நடந்தது நமக்கேன் கவலை என்ற உயர்ந்த பண்பு காரணமாகவும் நாம் மறந்து போய் இருக்கலாம்,


பெங்களுர், சூரத், அகமதாபத் போன்ற இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்ந்த போது எப்படி பொங்கி எழுந்து தீவரவாதத்தை அடக்குவதாக பாவித்து என்ன சூலுரைத்தார்களோ, அதே போல்தான் இப்போதும் பெரிய தலைவர்கள் அனைவரும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள்.


இதுவரை தீவரவாதத்தை அடக்க எந்த ஒரு முன் ஏற்பாடும் எடுத்ததாகதெரியவில்லை. உளவுதுறை என்ன மயிர் புடுங்கி கொண்டு இருக்கிறது என்பது புரியவில்லை.

இந்தியாவில் ஒவ்வோரு முறை குண்டு வெடிப்பின் போது கீழுள்ளவை நிகழும்...

1. குண்டு வெடிப்பு நிகழ்ந்ததும் உடல்களை உடனே அப்புறபடுத்தி உடனே லட்ச ரூபாய் நிவாரணம் அறிவிப்பார்கள்

2. காயம் பட்டவர்களை நேரில் பார்த்து ஆறுதல் கூறி ஒரு போட்டோ எடுத்து அதனை இந்தியா முழுவதும் வெளிவரும் பிராதன பத்திரிக்கைகளில் முதல் பக்கத்தில் வரும் படிபிரதமர் வட்டாரத்தினர் பார்த்து கொள்வார்கள்.

3.சோனியா காந்தியும் நேரில் போய் பார்க்கிறார் என்றால் குண்டு வெடிப்பு சேதம் அதிகம் என்று அர்த்தம்.

4. அத்வானி பொடா சட்டம் இருந்தால் தீவிரவாதமே நிகழாது என்று பேட்டி கொடுப்பார்.

5. இந்திய மீடியாக்கள் நான்கு நாட்கள் நாம் இருப்பது இந்தியாவிலா அல்லது இலங்கையிலா என்று தற்போது விஸ்காம் முடித்த வெள்ளை தோல் பெண்களை வைத்து மூண்றுநாள் ஓப்பாரி வைத்து விட்டு சல்மான்கான் யார் உதட்டில் இப்போது ஈரப்டுத்தி கொள்கிறார் என்பதை ஆராய போய் விடுகிறார்கள்.

6.கொஞ்சம் கோபம் உள்ளவர்கள் பத்திரிக்கையிலும் பிளாக்கிலும் எழுதி தன் கோபத்தை தீர்த்து கொள்கிறார்கள்.

7. எல்லா தலைவர்களும் கண்டனம் தெரிவிப்பார்கள்.

8.குண்டு வெடிப்பில் தன் உற்றாரை இழந்து வாடும் உறவினர்கள் மார்பில் அடித்துகொண்டு அழும் காட்சி மறுநாள் தினசரிகளில் நிச்சயம் இடம்பெறும்.



9. ஒருவாரம் கழித்து இறந்தவர் ஒருவருடைய சோக செய்தி வாரப் பத்திரிக்கையில் இடம்பெறும்.



10. இந்தியர்கள் பத்திரிக்கை, தொலைகாட்சி, வாரபத்திரிக்கைகளில் குண்டு வெடிப்பு செய்திகளை படித்து விட்டு பார்த்து விட்டு, த்சோ த்சோ என்று சொல்வார்கள் .


அடுத்த குண்டு வெடிப்பு நடந்ததும் இதே செயல்கள் இந்தியாவில் நிச்சயம் நடைபெறும் இந்தியர்கள் த்சோ, த்சோ சொல்ல காத்து இருப்பார்கள்...

அன்புடன்/ஜாக்கிசேகர்

9 comments:

  1. வருத்தமாத்தான் இருக்கு ஜாக்கி.. அநேகமா எல்லா பேப்பர், ந்யூஸ் சேனல்லயும் ஒரு டெம்ப்ளேட் ஒருக்கும் போல‌

    _____ல் குண்டு வெடிப்பு!! __பேர் பலி!! __ பேர் படுகாயம்!! ____ அமைப்பு காரணமாக இருக்கலாம் என்று போலீஸ் உயரதிகாரிகள் தகவல்!! பிரதமர் _____ கண்டனம்!!

    இப்படி.. ஒவ்வொரு தடவையும் ___ ல இருக்குறது மட்டும்தான் மாறுது.. ரொம்ப வருத்தமா இருக்கு ஜாக்கி!! ஒண்ணும் பண்ணமுடியலன்னு வெக்கமாவும் இருக்கு :(((

    ReplyDelete
  2. நன்றி வெண் தொடர்ந்து தரும் உங்கள் ஆதரவுக்கு. இன்னும் எத்தனைமுறை இந்தியாவில் குண்டு வெடித்தாலும் இதுதான் நடக்க போகிறது.

    ReplyDelete
  3. வருத்தமான விசயம் ஒன்னும் செய்யறதுக்கில்லை :(((((((

    ReplyDelete
  4. முக்கியமானதை விட்டு விட்டீர்களே!.
    உடனே லஸ்கரே தொய்பா அல்லது சிமி அல்லது ஹர்கத்துல் முஜாஹிதீன் அல்லது முஸ்லீம்கள்தான் என்று தெரிகிற மாதிரி ஏதாவது ஒரு பெயரைச் சொல்லி அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார்கள். அல்லது அவர்கள்தன் என்று சொல்ல வேண்டும்.

    ReplyDelete
  5. அரசு நல்லது செய்தோ இல்லியோ, சினிமா காரங்க நல்ல விஷயம் சொல்றாங்க, இந்த குண்டு வெடிப்பைப் பத்தி. மும்பை மேரி ஜான் படம் பாருங்க.

    ReplyDelete
  6. Nice article, but quite a lot of spelling mistakes Jackie!

    ReplyDelete
  7. நன்றி ஜோ என்ன செய்வது நேரமின்மையும் தேடி தேடி தமிழ் எழுத்து அடிக்கும் போது இப்படி பிழை வருகிறது

    ReplyDelete
  8. நீங்க சொல்றது எல்லாம் சரிதான்?
    வேற என்ன செய்யனும்னு எதிர் பார்க்குறீங்க? இந்த தீவிரவாதம் அப்படீன்றது அரசு மட்டும் சம்பந்த பட்டது இல்லை. மக்கள், மதம் எல்லாமும் சம்பந்த பட்டது.

    அரசு என்னதான் விழிப்புடன் இருந்தாலும் இது போன்ற செயல்கள் அதுவும் இந்தியா போன்ற நாடுகளில் நடக்கத்தான் செய்யும்.
    ஏன் என்றால் நம்மை சுத்தி நல்லவனுங்க அத்தனை பேரு இருக்கானுங்க.

    தமிழ்நாட்டில் அத்தகைய செயல்கள் குறைவு. அதற்காக நம் அரசாங்கமோ அல்லது மக்களோ விழிப்புடன் இருக்கிறார்கள் என்று அர்த்தம் இல்லை.

    We are geographically away from the terrorism so that we are not getting damaged by Terrorism.

    மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். அரசாங்கத்திற்கு அதை உணர்த்த வேண்டிய தருணங்களில் உணர்த்த வேண்டும்.

    என்னை கேட்டால் அத்வானி அவர்கள் சொல்வது போல் தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை தீவிர படுத்துவதற்கான நேரம் இது.

    தேசத்தின் முக்கியமான வளர்ச்சி கட்டத்தில் நாம் இருக்கும் இந்த தருணத்தில் தீவிரவாத செயல்கள் அந்த வளர்ச்சியை ஒன்றும் இல்லாமல் நீர்த்து போகத்தான் செய்யும்.

    தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் காங்கிரசிடம் ஒரு மென்மையான அணுகுமுறையே இருந்தது என்றால் அது மிகை இல்லை. BJP is far better than congress in taking strict action against Terrrists & Terrorism.

    காங்கிரஸ் எப்பொழுதும் தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை ஒரு குறிபிட்ட மதத்திற்கு எதிரானதாகவே நினைத்து மென்மையான அணுகுமுறையை கையாள்கிறது. அதற்க்கு அதன் ஒட்டு வங்கி அத்தனை முக்கியம்.

    இது வரை உலக சரித்திரத்தில் எந்த ஒரு புரட்சியும் மக்களிடம் ஏற்படாத ஒரு மிக பெரிய ஜனநாயக நாடு உண்டு என்றால் அது இந்தியா மட்டுமே.

    யோசிக்க தெரியாத மக்கள். தன் மனைவி, மக்கள், குடும்பம், கல்வி, கும்மாளம் என்றே பொழுதை கழித்து பேரன் பேத்திகளுடன் வயோதிகம் கழித்து மண்ணுக்கு உரமாகும் மாக்கள் இருக்கிற நாடு.

    கமல் கூறியது போல் சொல்ல வேண்டுமென்றால் 100 கோடி கடவுள் வாழும் நாடு. (என்ன கொடுமை...) எல்லாருமே கடவுள்னா யாருதான் தொண்டு செய்றது.

    மக்கள் மேலும் மேலும் மாக்களாகவே இருக்கத்தான் கலர் டிவி, இலவச மின்சாரம், இலவச இட்லி, அதற்க்கு சட்னி என்று போய் கொண்டு இருக்கிறது,

    போதாத குறைக்கு ஒட்டு ஒன்றுக்கு 1000 ருபாய், க்வார்டர், கோழி பிரியாணி இன்னும் எத்தனையோ...

    என்று திருந்தும் இந்த எழைகளின் தேசம்.

    ReplyDelete
  9. நீங்க சொல்றது எல்லாம் சரிதான்?
    வேற என்ன செய்யனும்னு எதிர் பார்க்குறீங்க? இந்த தீவிரவாதம் அப்படீன்றது அரசு மட்டும் சம்பந்த பட்டது இல்லை. மக்கள், மதம் எல்லாமும் சம்பந்த பட்டது.

    அரசு என்னதான் விழிப்புடன் இருந்தாலும் இது போன்ற செயல்கள் அதுவும் இந்தியா போன்ற நாடுகளில் நடக்கத்தான் செய்யும்.
    ஏன் என்றால் நம்மை சுத்தி நல்லவனுங்க அத்தனை பேரு இருக்கானுங்க.

    தமிழ்நாட்டில் அத்தகைய செயல்கள் குறைவு. அதற்காக நம் அரசாங்கமோ அல்லது மக்களோ விழிப்புடன் இருக்கிறார்கள் என்று அர்த்தம் இல்லை.

    We are geographically away from the terrorism so that we are not getting damaged by Terrorism.

    மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். அரசாங்கத்திற்கு அதை உணர்த்த வேண்டிய தருணங்களில் உணர்த்த வேண்டும்.

    என்னை கேட்டால் அத்வானி அவர்கள் சொல்வது போல் தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை தீவிர படுத்துவதற்கான நேரம் இது.

    தேசத்தின் முக்கியமான வளர்ச்சி கட்டத்தில் நாம் இருக்கும் இந்த தருணத்தில் தீவிரவாத செயல்கள் அந்த வளர்ச்சியை ஒன்றும் இல்லாமல் நீர்த்து போகத்தான் செய்யும்.

    தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் காங்கிரசிடம் ஒரு மென்மையான அணுகுமுறையே இருந்தது என்றால் அது மிகை இல்லை. BJP is far better than congress in taking strict action against Terrrists & Terrorism.

    காங்கிரஸ் எப்பொழுதும் தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை ஒரு குறிபிட்ட மதத்திற்கு எதிரானதாகவே நினைத்து மென்மையான அணுகுமுறையை கையாள்கிறது. அதற்க்கு அதன் ஒட்டு வங்கி அத்தனை முக்கியம்.

    இது வரை உலக சரித்திரத்தில் எந்த ஒரு புரட்சியும் மக்களிடம் ஏற்படாத ஒரு மிக பெரிய ஜனநாயக நாடு உண்டு என்றால் அது இந்தியா மட்டுமே.

    யோசிக்க தெரியாத மக்கள். தன் மனைவி, மக்கள், குடும்பம், கல்வி, கும்மாளம் என்றே பொழுதை கழித்து பேரன் பேத்திகளுடன் வயோதிகம் கழித்து மண்ணுக்கு உரமாகும் மாக்கள் இருக்கிற நாடு.

    கமல் கூறியது போல் சொல்ல வேண்டுமென்றால் 100 கோடி கடவுள் வாழும் நாடு. (என்ன கொடுமை...) எல்லாருமே கடவுள்னா யாருதான் தொண்டு செய்றது.

    மக்கள் மேலும் மேலும் மாக்களாகவே இருக்கத்தான் கலர் டிவி, இலவச மின்சாரம், இலவச இட்லி, அதற்க்கு சட்னி என்று போய் கொண்டு இருக்கிறது,

    போதாத குறைக்கு ஒட்டு ஒன்றுக்கு 1000 ருபாய், க்வார்டர், கோழி பிரியாணி இன்னும் எத்தனையோ...

    என்று திருந்தும் இந்த எழைகளின் தேசம்.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner