பதிவர்களுக்கு என்நன்றிகள் (எனக்காக நேரம் ஒதுக்கியவர்களுக்கு மட்டும்)




வாழ்த்துவது என்பது ரொம்ப ரொம்ப மனதை மகிழ்விக்கும் செயல் என்பேன், நீங்க நல்லா இருக்கனும் அப்படி சொல்லரதுக்கு காசு பணம் தேவை இல்லை. அப்படி சொல்லறதையே சோம்பேறி தனமா நினைக்கறவங்களும் இருக்கதான் செய்யறாங்க.


கடந்த அக்டோபர் மாதம் 19ம் தேதி என் திருமணம் மிக சிறப்பாக நடந்தது, பொதுவாக இயற்கையை ரசிப்பவன் நான் என்பதால் கல்யாணத்திற்க்கு முதல் நாள் இயற்கை என் கல்யாணத்தை ரொம்பவே ரசித்தது. புதுச்சேரி அருகே இருக்கும், கடலூரில்எனது திருமணம் இனிதே நடந்தேறியது . சென்னைக்கும் கடலூருக்கான பயணதூரம் 3மணி நேரம் 45 நிமிடங்கள்.


அதுமட்டும் இல்லாமல் தேமுதிக மாநாடு சென்னையில் நடந்ததால், டிராபிக் ஜாம் வேறு அதிக அளவில் இருந்ததாக சென்னையில் இருந்து நேரில் வந்து வாழ்த்திய நண்பர்கள் சொன்னார்கள்.

நான் மிகவும் எதிர்பார்தத்த நபர்கள் வெவ்வேறு சூழ்நிலை கைதியாகி சில பல ஏற்புடைய காரணங்கள் சொன்னாலும் நான் எதிர்பார்க்காத நபர்கள் மற்றும் முகம் பார்த்திராத பதிவர்கள் வாழ்த்தியது என்னை மெய் சிலிர்க்க செய்தது.

பதிவர் அதிஷா என் திருமண அழைப்பை தன் பதிவில் இட்டு என் வேலை பளுவை வெகுவாய் குறைத்தார். அதை ரொம்ப உரிமையாகவும் செய்தார்.




பதிவர் நித்யகுமாரன் அந்த கொட்டும் மழையிலும் தன் ஒருவயது குழந்தையுடன்,குடும்பத்துடன் வந்து வாழ்த்தினார். தன் வார இறுதி நாட்களை தியாகம் செய்து வந்து இருந்தார்.

பதிவர் முரளி கண்ணன் அவர்கள் என்னை கைபேசியில் தொட்ர்பு கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
எனக்கு ரொம்பவே ஆச்சர்யம் முடிந்த வரை வர முயற்ச்சி செய்வதாக சொன்னார்.

பதிவர் தங்க முகுந்தன் சுவிட்சர்லாந்து நாட்டிலிருந்து போன் செய்து வாழ்த்து தெரிவித்தார் ரொம்பவும் மகிழ்வாக உணர்ந்தேன் வாழ்ந்து சொல்ல எனக்காக கொஞ்ச நேரம் மெனக்கெட்டார் பாருங்கள் , அது எனக்கு மிகுந்த மகிழ்வை தந்தது.

பதிவர் நிர்ஷான் கொழும்பிலிருந்து திருமண்த்தன்று கைபேசியில் வாழ்த்து தகவல் அனுப்பினார்

அதே போல் பல முகம் தெரியாத பதிவர்கள் கைபேசி முலம் வாழ்த்து செய்தியை சொன்னார்கள் திருமண வேலை பளுவில் மறந்து தொலைத்து விட்டேன். மன்னிக்கவும்.


வாழ்திய பதிவர்கள்

1. தங்கராசா ஜீவராஜ்
2.புகழேந்தி
3.ஜ்யோவராம்சுந்தர்
4.புதுகை தென்றல்
5.அரவிந்தன்
6.புதுவைசிவா
7.யேகன்பாரிஸ்
8.வெண்பூ
9.யாழ்
10.ரமேஷ்
11. சந்திரன்
12. பின்னுட்டம் பெரியசாமி
13.சரவணகுமரன்
14. கானாபிரபா
15.கிரி
16தெகா
17.நவநீதன்
18. தமிழ்பறவை
19.ராஜநடராஜன்
20.புதுகை அப்துல்லா.
21.முகுந்தன்
22. அத்திரி போன்ற பதிவர்கள் பின்னுட்டம் போட்டும் மெயில் அனுப்பியும் வாழ்த்து சொன்னார்கள்


பொத்தாம் பொதுவாய் கைபேசியிலும் நேரிலும் பின்னுட்டம் இட்டும் வாழ்த்து சொன்ன நல்ல உள்ளங்களுக்கு என்று என்னால் என் நன்றியை தெரிவிக்க எனக்கு இஷ்டம் இல்லை . அப்படிதான் பொத்தம் பொதுவாக ஒரு நன்றி தெரிவிக்கபடுகிறத தென்றால் அந்தநன்றியை நான் தெவிக்காமலே இருந்து இருப்பேன்.

எல்லாவிலை உயர்வையும் சமாளிக்க,வாழ்ந்தே தீரவேண்டிய கட்டயாத்தில் பொங்கியதை டிபன் பாக்ஸில் சுட சுட அடைத்து கொடுத்த அன்னைக்கு, “போயிட்டுவரேன்மா ” என்று சொல்ல கூட மறந்து, மாநகர பேருந்து பிடிக்கவும், புறநகர்மின் தொடர் வண்டி பிடிக்கவும் சிட்டாக பறந்து செல்லும் இன்றைய கால கட்டத்தில் எனக்காக நேரம் ஒதுக்கி,


என் எதிர்கால வாழ்வு சிறக்க வாழ்த்திய மேலே பெயர் குறிப்பிட்ட எனதருமை பதிஉலக நண்பர்களுக்கு இந்த ஜாக்கிசேகரின் நெஞ்சார்ந்த நன்றிகள்



அன்புடன்/ஜாக்கிசேகர்

2 comments:

  1. கல்யாண வாழ்க்கை அருமையாக தொடர வாழ்த்துக்கள்! அழகா நன்றி சொல்லியிருக்கீங்க.

    ReplyDelete
  2. நன்றி கபிஷ் தங்கள் வாழ்த்துக்கு

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner