(பாகம் / 3 )டூரிங் டாக்கிஸ் அல்லது செல்லமாக டென்ட் கொட்டா...



கால ஓட்டத்தில் காணமல் போனவைகள் தொடரில் இந்த பாகத்தில் தமிழகத்தில் பலரால் மறக்க முடியாத அந்த கால பொழுது போக்கு சாதனமான டுரிங் டாக்கிஸ் பற்றி இந்த வாரம் பார்ப்போம்

நெற்றிவேர்வை நிலத்தில் சிந்தி உழைத்த தமிழனை களைப்பு போக்கி சினிமா கலை வளர்ந்த அல்லது வளர்ந்த இடம் கிராமத்து டூரிங் டாக்கிஸ்கள் என்றால் அது மிகையில்லை.





இன்று ஐநாக்ஸ் சத்தியம் போன்ற திரையரங்குகளில் ஒரு படம் பார்க்க நுழைவு கட்டணமாக இன்று ரூபாய் 120ல் இருந்து 150,180 வரை கட்டணம் வசூலிக்கின்றார்கள், ஆனால் அப்போது படம் பார்க்க டூரிங் டாக்கி்ஸ் வசூலித்த கட்டணம் 30 பைசா அப்போது தியேட்டர்களில் அதிகபட்ச டிக்கெட் விலை 4லிருந்து 5ரூபாய் அவ்வளவுதான்.

அப்போதும் படம்தான் பார்த்தோம் இப்போதும் படம்தான் பார்க்கிறோம் என்ன சற்று வசதிகளைஅதிகப்படுத்தி இருக்கிறார்கள் அவ்வளவுதான். அது காலத்தின் கட்டாயம். இப்போது படம் பார்க்கும் போது சிம்ரன் வந்து நெஞ்சு அல்லது ...தடவி படம் பார்க்க வைக்கிறாரா? எதற்க்காக இவ்வளவு கட்டணம்? பாருங்கள் டாபிக் விட்டு கோபத்தில் வெளியே போய் விட்டேன்.

அப்போது டிவி எல்லோர் வீட்டிலும் தன் அழிச்சியாட்டத்தை அரம்பிக்காத நேரம். அதுவும் கலர் டிவி என்பது எல்லோருக்கும் பகல்கணவாய் இருந்த கால கட்டம் அது. உழைத்து களைத்த அத்தனை பேருக்கும் அரும் மருந்து இந்த டூரிங் டாக்கிஸ்கள்தான்.

சரி ஏன் டுரிங் டாக்கிஸ் தெரியுமா?சினிமா பேசாத காலகட்டத்தில் இருந்து பேசும் காலகட்டத்துக்கு வந்த போது அது பேசியதால் அதாவது டாக் செய்ததால் அதற்க்கு டாக்கிஸ் என்று பெயர் வைத்தார்கள்.

டுரிங்டாக்கிஸில் படம் பார்க்கின்றது என்பது என்னை பொருத்தவரை ரொம்ப சந்தோஷமான செயல் என்பேன். ஒரு நாளைக்குஇரண்டு காட்சிகள் மட்டுமே திரையிடுவார்கள் மாலைக்காட்சி அடுத்தது இரவு காட்சி. மாலை காட்சி இரவு எழு மணிக்கும், இரவு காட்சி பத்து மணிக்கும் ஆரம்பிப்பார்கள்.

டாக்கிஸ்ல் படம் துவங்கும் அழகே அழகு. முதலில் கூம்பு ஒலி பெருக்கியில் நாதஸ்வரம் இரவு 6.50க்கு போடுவார்கள். கிராமத்தில் படம் பார்க்க செல்லும் எல்லோர் வீட்டிலும் சின்ன பதட்டம் வந்து ஓட்டிக்கொள்ளும்.

“கொட்டாயில பாட்டு போட்டுட்டான் எல்லாரும் சீக்கிரம் கிளம்புங்க”

என்றவுடன் அடித்து பிடித்து ஓடிய அந்நநாளைய நினைவுகள் என்னை அந்த காலகட்டத்துக்கு அழைத்து செல்கின்றன.

நாதஸ்வரம் 5 நிமிடத்தில் முடிந்து ஒரு வெஸ்டன் இசை ஒளிக்க ஆரம்பிக்கும் அது முடிந்த உடன் சர்வ நிச்சயமாக எந்த மைனர் வந்தாலும் வரா விட்டாலும் படம் ஆரம்பித்துவிடும்அதானால் நாங்கள் அனைவரும் நடையில் ஓட்டத்தை சேர்ப்போம்.

30 பைசா டிக்கெட் தரை டிக்கெட்டில் படம் பார்பது போன்றதொறு சுகம் எனக்கு தெரிந்து சத்தியம் ஐநாக்சில் கூட இல்லை என்பேன்.பறந்த மணல் பகுதி அதில் நடுவில் கட்டை அல்லது சிமென்ட் கட்டை கட்டி ஆண்கள் பெண்கள் என்று பிரித்து இருப்பார்கள். அந்த வயதில் நாங்கள் பெண்கள் பகுதியில்தான் உட்காருவோம் ஏன் என்றால் அம்மாதானே படத்துக்கு அழைத்து செல்வார் அதனால்தான். அதே போல் படம் தெரியவில்லை என்றால் கூடுதலாக மணல் கூட்டி அதன் மீது உட்காருவோம்.

யாரவது எதிரில் மறைத்தால் அவர் பின்புறம் மணலை கொஞ்சம் நோண்டினால் அவர் மெல்ல கீழ் இறங்குவார்.
அதே போல் பசங்களுக்குள் விளையாடும் விளையாட்டும் அதுவே. மண் கூட்டி உட்கார்வதும் அதனை பின்னால் இருந்து பறிக்கும் தமிழர்களின் அரசியல் விளையாட்டை அப்போதே நாங்கள் விளையாடுவோம்.

அதே போல் இருபாலிணத்தையும் பிரிக்கும் கட்டை சுவர் பக்கம் ஆண்கள் பக்கம் என்றாலும் பெண்கள் பக்கம் என்றாலும் உட்காரவே கூடாது அப்படி உட்கார்ந்தால் ஒரு லிட்டர் பெனாயிலில் கை கழுவ வேண்டும் கட்டை சுவர் ஓரம் எல்லாம் வெற்றிலைபாக்கு எச்சில் துப்பி வைத்து இருப்பார்கள்


படம் முதல் இன்டர் வெல் விடும் போது அந்த கால முங்கள் ஊர் டாக்கி்ஸ்ல் அழது வடியும் 40 வாட்ஸ் பல்பு அழுது வடிந்து கடமைக்காக எரியும்.அப்போது கட்டை குரலில் தேங்காய் ரொட்டி முருக்கேய்,
தேங்காய் ரொட்டி முருக்கேய் என்று காலனி பசங்க அலுமினிய தட்டில் வைத்து தேங்காய் ரொட்டி முருக்கு போன்றவற்றை விற்ப்பார்கள்.
அதற்க்கு தட்டு முருக்கு என்று செல்ல பெயர் கூட உண்டு.


எங்க அம்மா ஒரு கஞ்சபிசினாரி வீட்டில் ஏற்க்னவே இருக்கும் காராசேவ், முருக்கு போன்ற தீன்பண்டங்களை ஓயர் கூடையில் போட்டு எடுத்து வந்து விடும்.

காளிமார்க் சோடா பாட்டிலில் அந்த காலத்து லோக்கல் பெப்சி கலர் கலர்கலராக இருக்கும் அது பிரிட்ஜ் இல்லாத காலம் அல்லது அந்த ஊர் டாக்கிஸ்க்கு கட்டுபடி ஆகாததால் தேர்மக்கோல் ஐஸ்கட்டிகள் வாங்கி ஐஸ் சீக்கிரம் உருகாமல் இருக்க உமி போட்டு வைத்து இருப்பபார்கள். ஒரு கலர் 1,50 ரூபாய் அதை வாங்கி கட்டையில் சாய்ந்தபடி ஸ்டைலாக வாங்கி குடித்த காலமும் உண்டு.

முக்கோன பன்னில் ஜாம் தடவி அதில் கலர் கலரான சேமியா போல் வெள்ளை ஜாம் மேல் ஒட்ட வைத்து இருப்பார்கள். அது என்னுடைய பேவரிட் திண்பண்டம்





இப்போது போல் அப்போது எல்லாம் புது படங்கள் டென்டு கொட்டாய்க்கு வரவே வராது. அல்லது வினியோகஸ்த்தர்கள் கொடுக்கவும் மாட்டார்கள்,அன்பே வா, துணிவே துனை,சவாலேசமாளி, வஞ்சிக்கோட்டை வாலிபன், மாயாபாஜார்,வசந்த மாளிகை போன்ற பழைய படங்கள்தான் திரையிடப்படும்.

சிவாஜி படத்துக்கு நிறைய பெண்கள் கூட்டத்தை பார்க்கலாம். எம்ஜியார் படத்துக்கு நிறைய ஆண்கள் கூட்டத்தையும் கொஞ்சமாக பெண்கள் கூட்டமும் இருக்கும். முக்கியமாக பாட்டாளி மக்கள் கூட்டம் மிக ஆதிகமாக வருவார்கள், நிறைய விசிலும் கூடவே சாராய நெடியும் பின்னி பெடெலெடுக்கும்.

ரஜினி கமல் படத்துக்க எல்லா சின்ன பசங்களும் வந்து கொட்டாய் சுற்றி ஓடிபிடித்து விளையாடுவதுமாக சண்டை போட்டுக்கொள்வதுமாக இருப்பார்கள் கமல் படங்கள் வந்ததால் அரும்பு மீசை வாலிபர் பட்டாளம் கைலியை ஏற்றி கட்டிக்கொண்டு வந்து நி்ற்க்கும். வெள்ளிக்கிழமையானால் படம் கண்டிப்பாக மாறிவிடும் எல்லோரும் பார்த்த படம் என்பதால் அந்த படத்துக்கு ஆயில் காலம் ஒரு வாரம்தான்.

பெண்கள் பக்கம் நான் உட்கார்ந்து படம் பார்க்கும் போது ஒரு நெலியவைக்கும் பிரச்சனை என்ன வென்றால் நம்மை சின்ன பையன் என்று எண்ணி நம் எதிரிலே துணி தூக்கி சுச்சு போவார்கள் . அதை விட கொடுமை ஆயாக்கள் எல்லாம் நின்ற படியே சுச்சு போவார்கள். அதனாலே நான் அடம் பிடித்து ஆண்கள் பக்கம் போய் உட்காருவேன்.


அதே போல் படங்கள் சரியாக ஓடவில்லை என்றால் சட்டென தகர சேரை மடக்கி ஒளிவரும் ஓட்டையை அடைத்தும் ரகளை செய்வார்கள். முதல்நாள் படம் ஓட்டுவதில் பிரச்சனை என்றால் ஒரு பாஸ் கொடுத்து அனுப்புவார்கள் அதை எடுத்து போய் டிக்கெட் இல்லாமல் படம் பார்க்கலாம். அந்த பாசுக்கு வேறு அடித்து கொள்வார்கள்...


கால மாற்றத்தில் காணாமல் போனாலும் இன்றளவும் பல விஷயங்களை கற்றுக்கொடுத்தது டுரிங் டாக்கிஸ்கள்தான். எப்போது அந்த டெண்ட் கொட்டைகளை பார்த்தாலும் பழைய நினைவுகள் என்னில் நிழலாடும் எங்கள் ஊர் கடலூர் கூத்தப்பாக்கத்தில் ஜெகதாம்பிகா என்ற டெண்ட் கொட்டகை இருந்தது, அந்த நினைவுகள்இதை எழுதும் போது எல்லாம் நினைவுக்கு வருகிறது.

இந்திரன் வந்ததும் சந்திரன் வந்ததும் இந்த சினிமாதான், அட என்டியார் வந்ததும் எம்ஜியார் வந்ததும் இந்த சினிமாதான், கலை வளர்ந்தது இங்கேதான் காதல் சொன்னதும் இங்கேதான், கட்சிவளர்த்ததும் ஆட்சி வளர்த்ததும் இந்த சினிமாதான் அட அமெரிக்காவுலா ஆட்சி புடித்ததும் இந்த சினிமாதான்

என்ற ஆண்பாவம் படத்து பாடல் எங்கேயோ கேட்பது போல் இல்லை, அந்த பாடலில் வரும் வரிகளில் உண்மை இல்லாமல் இல்லை.....


அன்புடன்/ஜாக்கிசேகர்

15 comments:

  1. மிக அருமையான பதிவு.. டெண்டுகளில் படம் பார்த்தவர்களுக்கே இந்த உணர்வுகள் மிகவும் புரியும்.. ஜாக்கி..

    ReplyDelete
  2. நன்றி கேபிள் சங்கர். தங்கள் வருகைக்கும் தங்கள் பாராட்டுக்கு

    ReplyDelete
  3. உண்மை தமிழன் சுட்டிக்காட்டியதற்க்காக சில வரிகள் மாற்றி அமைக்கபட்டுள்ளன...

    ReplyDelete
  4. வடலுர் ரயில் கேட்டுக்கு அருகில் என்று நினைக்கிறேன்.நான் வள்ளலார் குருகுலம் பள்ளீயில் 8 வது படித்து கொண்டிருந்த்ட்தேன்.நீயா..
    பார்த்த நினைவு.. மருதமலை மாமணீயே.. பாட்டு முதலில்..பின் திரை தூக்கும்போது.. ட்டடன் டன் டன் டை....நல்ல...நினைவு கூரல்..

    ReplyDelete
  5. வடலுர் ரயில் கேட்டுக்கு அருகில் என்று நினைக்கிறேன்.நான் வள்ளலார் குருகுலம் பள்ளீயில் 8 வது படித்து கொண்டிருந்த்ட்தேன்.நீயா..
    பார்த்த நினைவு.. மருதமலை மாமணீயே.. பாட்டு முதலில்..பின் திரை தூக்கும்போது.. ட்டடன் டன் டன் டை....நல்ல...நினைவு கூரல்..

    ReplyDelete
  6. உங்கள் பதிவு அற்புதம் ஆனால் முறுக்கு விற்பது ? காலனி பையன் மன்னிக்கவும்
    ஏற்றுக்கொள்ள முடிய வில்லை

    ReplyDelete
  7. நல்லாத்தான் எழுதுறீங்க நைனா...

    இன்னும் கொஞ்சம் எறங்கி ராவா எழுதுனா நல்லா இருக்கும். உங்க பலமே அதுதான் தலீவா...

    தொடரெல்லாம் எப்ப ஆரம்பிக்கப்போறீங்க?

    நாட் வேணுமின்னா சொல்லுங்க புடிச்சுத் தாரேன்

    அன்பு நித்யன்

    ReplyDelete
  8. நல்ல கட்டுரை ஜாக்கி.. அப்படியே என்னோட சின்ன வயசை ஞாபகப்படுத்திட்டீங்க.. என்ன இருந்தாலும் டென்ட் கொட்டாயில 2 / 3 இன்டர்வெலுக்கு நடுவுல படம் பாக்குற ஜாலியே தனிதான்..

    ReplyDelete
  9. நன்றி ராஜ் தங்கள் வருகைக்கு

    ReplyDelete
  10. நீயா..
    பார்த்த நினைவு.. மருதமலை மாமணீயே.. பாட்டு முதலில்..பின் திரை தூக்கும்போது.. ட்டடன் டன் டன் டை....நல்ல...நினைவு கூரல்..

    படம் போடும் போது அதே அங்கயும் அதே இசைதானா? நன்றி தண்டோரா

    ReplyDelete
  11. இன்னும் முறுக்கு மற்றும் எடு புடி வேலை செய்தே அந்த சமுகம் முன்னேறுகின்றது அதனால்தான் அப்படி எழுதினேன்

    ReplyDelete
  12. நித்யா நல்லா உசுப்பு ஏத்தறிங்க..

    ReplyDelete
  13. நன்றி வெண்பூ தங்கள் பாராட்டுக்கு

    ReplyDelete
  14. ஜாக்கி பொதுவாக கிராமத்த்தில் வளர்ந்த எல்லோருக்கும் இந்த அனுபவம் இருக்கும். நல்லதொரு பதிவு. ரோஹிணியின் பஸ் மூலம் இன்று இந்த பதிவை படிக்கும் வாய்ப்பு.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner