முத்துக்குமார் அஞ்சலி கூட்டம் நடை பெறுவதால் இந்த முறைபதிவர்களை சந்தித்து விடுவது என்று கங்கனம் கட்டிக்கொண்டதால் மலை நேரத்து கடற்கரை காற்று சாயங்கால சினிமா என எல்லாவற்றையும் தியாகம் செய்து விட்டு திநகர் நடேசன் பார்க் போனேன். போகும் போதே பெரும் குழப்பம் நடேசன் பார்க் ஜி என் செட்டி ரோட வெக்கட் நாராயண ரோட என்று குழப்ப அதிஷாவிடம் கைபேசியில் அழைத்து தெளிவு படுத்திக்கொண்டேன்.
4மணிக்கு கூட்டம் ஆரம்பம் நான் ஒரு அக்மார்க் இந்தியன் என்பதால்காலம் கடந்து 4,30க்கு சென்றேன். முதல் பதிவர் சந்திப்பு என்தால் கொஞ்சம் படபடப்பு அவ்வளவே.போனதும் அதிஷா என்னை வரவேற்றார். நாங்கள் கைபேசியில் பேசி இருந்தாலும் நேரில் பார்த்து கொண்டது இதுதான் முதல் முறை.
வட்டமாக பதிவர் சந்திப்பு நடந்தது. எல்லோரும் முத்துக்குமார் மரணம் பற்றியும் அதில் சன்டிவி கலைஞர் டிவி ஜெயா டிவி நடந்து கொண்ட முறை பற்றியும் காரசாராமாக விவாதிக்கப்பட்டது.
கலைஞர், இந்து ராம்,ஜே , சுப்ரமணிசாமி, மாலன் போன்றவர்களை வாணலியில் போட்டு பாரபட்சம் இல்லாமல் வருத்து எடுத்தார்கள்.சுகுனாதிவாகர் மற்றும் லக்கி லீட் எடுத்துக் கொடுத்து கொண்டு இருந்தார்கள்.
என்தரப்பு நியாயங்களாக எப்ப வட இந்திய எலக்ட்ரானிக் மீடியாக்கள் ஏழு கோடி மக்கள் சார்பாக தமிழகத்தில் ஏதாவது கருத்து கேட்க வேண்டும் என்றால் அவர்கள் தமிழகத்தில் மொத்தம் மூன்று பேரிடம் பேட்டி காண்கிறார்கள்.
1சுப்ரமணிய சுவாமி
2சோ
3இந்துராம்
இந்த முன்று பேரும்தான் எழு கோடி தமிழர்களின் குரலாக இன்றும் வட இந்தியமீடியாக்களில் ஒளிக்கின்றது என்று வருத்தப்ட்டேன். உடனே ஒரு பதிவர் பெண்கள் சார்பாக எப்போதும் குஷ்புவை பேட்டிகாண்பதாக தன் வருத்தத்தை பதிந்தார்.
கூட்டம் நடந்து கொண்டு இருக்கும் போதேஎதிரில் ஒரு ஜோடி என் கண்ணில் பட்டது.அந்த பெண் சுமாராக இருந்தால் அவன் தொப்பி போட்டு இருந்தான். முதலில் அவன் ஏதாவது முத்தம் கொடுத்து இருக்கலாம் மாறாக அவன் கையை எடுத்து அவள் கண்ணஙத்தில் அடித்தான், பின்அவள் சடை பிடித்து இழுத்து வலிமைகாட்டினான்.
அவள் முகத்தில் வலியின் ரேகைகள் அவள் எந்த எதிர்ப்பும் காட்ட வில்லைஅதனாலே அவன் முன்னிலும் வேகம் பெற்றுஅவன் அவள் கையை முறுக்க பதிவர் நர்சிம் அவர்களை கண்டித்தார்.
திரும்பவும் சிதறிய கவணத்தை முத்துக்குமார் மேல் நிலை நிறுத்தினோம்.அவர் எழுதி சென்ற கடிதத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துமற்ற மாநிலத்தவர் படிக்க உதவ வேண்டுமாய் கேட்டுக்கொள்ளபட்டார்கள்.
அடுத்து காங்கிரஸ்காரர்கள் வரக்கூடாது என்று சூளுரைத்தார்கள்.அதே போல் ஒருவர் பிஜேபி வர வேண்டும என்பதில் தெளிவாக இருந்தார்.
அடுத்ததாக பதிவர் அகிலன் பேசினார் இந்த போர் பத்து நாட்கள் தொடர்ந்து நீடித்தால் மூண்று லட்சம் தமிழர்களுக்கு வெகு விரைவில் வாய்க்கரிசி போட வேண்டி வரும் என்றார் அவர் பேசும் போது அனைவர் மனமும் கலங்கியது எல்லோரும் கையறு நிலையில் இருப்பதை அனைவர்முகமும் காட்டிக்கொடுத்தது.
எனக்கு ஈழம் வேண்டாம் ஏதுவும் வேண்டாம் போர் நிறுத்தப்பட்வேண்டும் சாவின் விளிப்பில் இருக்கும் அந்த மூன்று லட்சம் தமிழர்கள் காப்பற்ற பட வேண்டும் என்று அகிலன் பேசினார்.
15 நாளில் ஏதாவது செய்து அந்த சாவின் விளிம்பில் இருக்கும் மக்களை காப்பாற்ற பட வேண்டும் என்ற போது யாராலும் ஏதும் செய்ய முடியாது என்பது விளங்கி போயிற்று.
அகிலன் மேலும் சொல்லும் போது 800 பேர் இலங்கையில் பலி என்று செய்தி வந்தால் நான் தினமும் இறந்தவர் பட்டியலில் என் அம்மா பெயர் இருக்கின்றதா என்று இன்டர்நெட்டில தினமும் 5 முறை தேடுவேன் என்ற போது அந்த கொடுமை எவருக்கும் வரக்கூடாது என்று இறைவனை வேண்டினேன்.
பாழாய் போன மத்திய அரசு, சுயநல தமிழக தலைவர்கள் இப்படி இருக்கும் போது 15 நாளில் எதும் செய்ய முடியாது என்பது எல்லோருக்கம் விளங்கி போயிற்று...
மனநல மருத்துவர் ருத்ரன் வந்து இருந்தார்அவர் பக்கத்தில் இருந்த ஒரு பதிவர் நிறைய விஷயங்கள் பேசினர் .
அதே போல் பதிவர் கூட்ட்த்தில்இந்த எழுச்சியை அனையாமல் தொடர்ந்து பதிவர்கள் எழத வேண்டும என்றும் கொஞ்சம் சினிமா குறைத்துக்கொள்ளுங்கள் என்று பதிவர் அரவிந்தன் பேசினார்.
அதே போல் அவர் பெங்களுரில் முத்துக்குமார் மரணத்தை கன்னட மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக வரும் ஞாயிறு பெங்களுரில் எம் ஜி ரோட்டில் ஆர்பாட்டம் செய்ய போவதாக அறிவித்தார். அவருக்கு வாழ்த்துக்கள் சொன்னேன்.
அதன் பிறகு கொசு தொல்லை வேறு அதிகம் இருந்ததால் நாங்கள் எழுந்து நின்று பேசினோம் 6 மணி அளவில் ஒரு பெண்மனி பேச அதன் முடிவில் முத்துக்குமாருக்கு பதிவர்கள் சார்பில் மௌன அஞ்சலி செலுத்தினோம்.
பதிவர் ஸ்ரீராம் தேசிய கொடி எரிப்பு தவறு என்றார் அதே போல் அவர் சொன்ன கருத்தில் கடைசி வரை உறுதியாக இருந்தார். பலர் ஒரு இணம் அழிவதை வேடிக்கை பார்க்கும் போது இது சகஜம் என்றனர்.
பலர் பேசினாலும் எனக்கு பெயர்கள் தெரியவில்லை.
பதிவர்களில் ரொம்ப விடலையாக காட்சி அளித்தது லக்கியும்அதிஷாவும்தான்.
கேபிள் சங்கரோடு நிறைய நேரம் பேசினேன் நல்ல மனிதர்.
பதிவர் பாரதி , நட்டு போல்டு தன்னைதானே ஆறிமுகப்படுத்திகொண்டார்கள்.எல்லோரும் இலங்கை அகதிகள் போல் டீக்கடை தேடி அலைந்தோம்.
டீக்குடித்து எல்லோரும் கலைந்தாலும் நான், லக்கி, கேபிள் சங்கர், முரளி கண்ணன்,சுகுனாதிவாகர்,ஜயரோம் சுந்தர்,நர்சிம், நட்டு போல்டு, ஆழியுரான் ,அதிஷா போண்றவர்கள் வெகுநேரம் பேசினோம்.ஜயரோம் சுந்தரும் சுகுனாதிவாகரும் எல்லோரிடமும் விடை பெற்று செல்ல எல்லோரும் என்னை ஜாக்கிசேகர் என அழைத்தது மனதுக்கு நிறைவாக இருந்தது.
தலையில் இருக்கும் நாளு முடிக்கு சம்மர் கட்டிங் அடித்து சென்றதால் பலருக்கு என்னை அடையாளம் தெரியவில்லை,வண்டி எடுத்து கிளம்பும் போதுதான் முரளி கண்ணனுக்கு நான் யார் என்று தெரிந்தது. அறிமுகம் இல்லாமல் என் திருமணத்துக்கு கைபேசியில் வாழ்த்து தெரிவித்த ஒரே தமிழ்நாட்டு பதிவர் அவர்தான்
பதிவர்களில் பல பேர் பெயர் விடுபட்டு இருந்தால் அடியேனை மன்னிக்கவும். இது எனது முதல் பதிவர் சந்திப்பு.
வேலை பளு காரணமாக சந்திப்பில் கலந்து கொள்ள முடியாததால் பதிவர் சந்திப்பு எப்படி நடந்தது என உண்மைதமிழன் கைபேசியில் விசாரித்தார்.
நான் கேபிள்சங்கர், லக்கி, அதிஷா, நட்டு போல்டு, நர்சிம், அமேரிக்க ரிட்டன் ஸ்ரீராம், முரளிகண்ணன், போன்றவர்கள் இரவு ஒன்பது வரைபேசினோம்,
விடுதலைபுலிகள்,முத்துக்குமார், கலைஞர், இல்ங்கை,ஜெயலலிதா என்று நிறைய சொற்க்கள் பயண் படுத்த பட்டது. இரவு 9 மணியளவில் எல்லோரும் கலைந்து சென்றோம், மவுனசாட்சியாய் நிலா மட்டும் நாங்கள் கலைவதை வேடிக்கை பார்த்தது. ஆத்மாவோ ஆவியோ உண்மையாக இருக்கும் பட்சத்தில் எங்கள் உடன் இன்லெக்சுவல் முத்துக்குமாரும்.......
அன்புடன்/ஜாக்கிசேகர்
என்ன தலைவரே.. சுடச் சுட, பதிவா..?
ReplyDeleteHi
ReplyDeleteWe have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com.
Please check your blog post link here
If you haven't registered on the Directory yet, please do so to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.
Sincerely Yours
Valaipookkal Team
கலக்கல் நடையில் நல்ல பதிவு ஜாக்கிசேகர்.. எல்லா மேட்டரையும் கவர் செய்ததும் நன்றாக இருந்தது..
ReplyDeleteநல்ல கவரேஜ்
ReplyDeleteஉடன் பதிவர் சந்திப்பை பதிவு செய்தற்க்கு நன்றி டோண்டுவுக்கு பிறகு நீங்கள இந்த வேலையை எடுத்து செய்வதற்க்கு நன்றி
ReplyDeleteமுதல் சந்திப்பு என்பதால் பதிவும் முதல் ஆளா போட்டுடிங்களா?
ReplyDeleteவேறு பதிவுகளே காணோமே!
அமாங்க தலைவரே.காலையில 5 மணிக்கு போட்ட பதிவு
ReplyDeleteநன்றி நர்சிம், தங்கள் வருகைக்கு்ம், வாழ்த்துக்கும்
ReplyDeleteநன்றி முரளி கண்ணன், மங்கள் வருகைக்கு வாழ்த்துக்கும்
ReplyDeleteநன்றி சிந்தாமணி யாரோ ஒருவர் செய்தால் போச்சு, ந்ன்றி
ReplyDeleteஆமாம் வால்பையன் இதுதான் என் முதல் பதிவர் சந்திப்பு அதனால்தான்,. மற்றவர்கள் நேரம் கிடைக்கம் போது எழுதுவார்கள்
ReplyDeleteசந்திப்புக்கு வராத என் போன்ற பதிவர்களூக்கு , நேரே கலந்து கொண்டது போன்ற உணர்வு உங்களீன் பதிவு ஏற்ப்படுத்தியது
ReplyDeleteஅன்பின் ஜாக்கி,
ReplyDeleteகடைசியாக பேசிய பெண்மணி ஈழத்து கவிஞர் தமிழ்நதி.
அவர் சொன்ன ஒரு கருத்து மத்திய அரசை கண்டிக்கும் அள்விற்கு நாம் மாநில அரசை கண்டிப்பதில்லை என்பது
அன்புடன்
அரவிந்தன்
பெங்களூர்