sanveg and nonveg | சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் | 28/10/2015




சாண்ட்வெஜ்  அண்டு நான்வெஜ்…28/10/2015
  ஆல்பம்.

மத்தியில் பிரதமர்   மோடி ரெஸ்ட் எடுக்காமல்இந்தியாவின்  வளர்ச்சிக்கா நாடு நாடாக சுற்றிக்கொண்டு இருக்கிறார்… பெஸ்ட்டிவல் தினம் என்பதால் தீபாவளிக்கு   சொந்த நாட்டுக்கு வந்துள்ளார்… 
 

Heritage Bridge Built by British at Tamilnadu | Koppadi Bridge | கோப்பாடி பாலம் அல்லது கோப்பாடி செட்



 கோப்பாடி பாலம்..

சிதம்பரத்தில் இருந்து காட்டுமன்னார் கோவில் செல்லும் வழியில் இருக்கும் சிறிய ஊராட்சியின் பெயர் குமராட்சி...

Beware - Dog Lovers | Pet Animal Lovers must Watch Video | True Story | ஒரு நெகிழ்ச்சிக் கதை





பெட் அனிமல் வச்சி இருக்கறங்க….   முக்கியமாக   நாய் பூனை வளர்க்கறவங்க கண்டிப்பாக பார்க்க வேண்டிய பகிர்ந்துக்க வேண்டிய  பதிவு இது..


கடலூர் நியூசினிமா தியேட்டர் எதிரில் தரைகாத்த காளியம்மன்  கோவில் இருக்கு… அதுக்கு பக்கத்து   கெடிலம் ஆத்து ஒரமா எனது  நண்பர் குமார் என்பவர் டிங்கர் ஒர்க்ஷாப்  வச்சி இருக்கார்… அவுங்க வீட்டுல ஆடு மாடுங்க கோழிங்க அதிகம்…

Naanum Rowdy Dhaan (2015) Movie Review by Jackie Sekar | நானும் ரவுடிதான் திரைவிமர்சனம்



நானும் ரவுடிதான்..


விஜய் டிவி விருது வழங்கும் விழாவில் யாருடன் உங்களுக்கு நடிக்க விருப்பம் என்று  விஜய்சேதிபதியிடம் கேட்டு வைக்க… அவரும் முகம் எல்லாம் வழிச்சலோடு நயன்தாரா என்று ரொம்ப கூச்சமாக அதே சமயம் கியூட்டாக சொன்னார்… 

10 Endrathukulla Movie review | 10 எண்றதுக்குள்ள திரைவிமர்சனம்.








 10எண்றதுக்குள்ள… 

1990 ஆம் ஆண்டு என் காதல் கண்மணி திரைப்படத்தின் மூலம் சியான் விக்ரம்  தமிழ் திரையுலகில் கால் பதித்து 25 வருடங்கள் ஆகி விட்டன. அவருடைய முதல் படம் அக்டோபர் 17 ஆம் தேதி ரிலிஸ் ஆனாது..  25 ஆண்டுகள் கழித்து அவருடைய படமான பத்து எண்றதுக்குள்ள  அதே அக்டோபர் மாதத்தில் ரிலிஸ் ஆகின்றது…


happy anniversary


 
அது நடந்து ஏழு வருடங்கள் ஆகி விட்டன...
ரிசப்ஷன் தொடங்க இன்னும் பத்து நிமிடம் இருக்கும் போது மணமக்கள் சண்டை போட்டுக்கொள்கின்றார்கள்..
திருமணத்திற்கு வருபவர்களுக்கு தேங்காய் வெற்றிலை பாக்கு என தாம்புல பை போட்டுக்கொண்டு இருக்கும் உறவினர் பசங்கள் முதலில் அதிர்ச்சி அடைந்தாலு ம் தொடர்ந்து தாம்புல பை போட்டுக்கொண்டு இருக்கின்றார்கள்...
சண்டை என்றால் அப்படியான சண்டை...
ஆயிரத்து 500 பத்திரிக்கை மேல் வைத்தாகி விட்டது... ஆயிரத்துக்கு மேல் தேங்காய் தாம்புல பை ரெடியாகி கொண்டு இருக்கின்றது.,,
மாலை மூன்று மணியில் இருந்தே இரவு விருந்துக்கு சமையல் ஆட்கள் வியற்வை கசகசப்போடு மண்டபத்தில் சமைத்துக்கொண்டு இருக்கின்றார்கள்..

CHENNAI MYLAPORE VERY FAMOUS AND OLD KARPAGAMBAAL SWEET STALL | மயிலை கற்பகம்பாள் இனிப்பு கடை




கைமணம் நிகழ்ச்சியில் இன்று நாம் காண இருக்கும் கடை… மயிலையில் இருக்கும் கற்பகாம்பாள்   இனிப்பக கடையைத்தான் இந்த பக்கத்தில் பார்க்க  இருக்கிறோம்.


Nusrat Fateh Ali Khan birthday | இன்று நுசுரத் பதே அலிகான் அவர்கள் பிறந்த தினம்…




இன்று பாகிஸ்தான் பாடகர் நுசுரத் பதே அலிகான் அவர்கள் பிறந்த தினம்…
இந்தியா பாகிஸ்தான் ஒற்றுமையாக இருந்து பிரிந்து மூன்று மாதம் கழித்து பாகிஸ்தான் பஞ்சாபில் பிறந்தவர்…

இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் மட்டும் நுசுரத் பதே  அலிகானை அவரது வந்தே மாதரம் இசை ஆல்பத்தில் பாட வைக்காமல் இருந்து இருந்தால்.. என்னை போன்ற இசையறிவு அதிகம் இல்லாத கடலூர் கார பயலுக்கு இவரை பற்றி தெரியாமலே போய் இருக்கும்..

கவாலி இசையின் ராஜா என்று  இவரை இசை உலகம் போற்றுகின்றது…ஹைபிட்சில் கவாலி இசையில் பாடுவதில் வல்லவரான இவரை.. 50 வது பொன்விழா ஆண்டில்  ரகுமான் வெளியிட்ட இசை ஆல்பத்தில் நுசுரத்தின் பங்கும் இடம்  பெற்றது..

வழக்கம் போல  தானும் படுக்க மாட்டான்  தள்ளியும் படுக்கமாட்டன் என்பது போல நுசுரத் பதே அலிகானை  பாட வைத்தற்கு எதிர்பு கிளம்பியது…
 வந்தே மாதர்ம் இசை ஆல்பத்தில் "Gurus of Peace" பாடலை ரகுமானும் நுசுரத்தும் சேர்ந்து பாடி கலக்கினார்கள்….

வந்தே மாதரம் இசை ஆல்பமான மா துஜே சலாம் தயாரிப்பின் போது முதல் போடும் சோனி நிறுவனம் சொன்னது.. யாராவது பிரபலமானவரை உங்களோடு இணைந்து பாடச்செய்தால்.. இன்னும் இந்த ஆல்பம் சிறப்பாக இருக்கும்  அது மட்டுமல்ல.. இந்திய இசை உலகம் எங்கும் கூடுதல் கவனம் பெறும் என்றதோடு… டைட்டானிக் படத்தில்   உச்சஸ்தாயில் பாடும் செலின் டியோன் பெயரை   சோனி பரிந்துரைத்தது.. ஆனால் ரகுமான் அந்த பெயரை நிராகரித்ததோடு… எங்கள் தோழமை தேசமான பாகிஸ்தானில்  உள்ள பாடகர் நுசுரத்  பதே அலிகான் பாடினால் சிறப்பாக இருக்கும் என்றதோடு…தண்ணியும் எண்ணெயும் எப்போதும் ஒன்று சேராமல் எதிரும் புதிருமான   தேசத்தில் இருந்து முதல் முறையாக இரண்டு குரல்கள்  ஒன்றாக இணைந்தன.. அந்த பாடல்தான்… வந்தே மாதரம் ஆல்பத்தில் இடம் பெற்ற "Gurus of Peace"
 கருத்தாம்மாவில் வரும் போறாளே பொண்ணுதாயி பாடலை கொஞ்சம் நாகசு செய்து மாற்றி இருந்தார்…


பாடலின் துவக்கத்திலேயே  நுசுரத்  பதே அலிகான் கலக்கி இருந்தாலும்..2 ,27 இல் பின்னி இருப்பார்… 




 முதல் முறையாக  இந்த பாடலை கேட்ட போது இவர் யார் என்று அறிந்துக்கொள்ளும் ஆர்வம் வந்ததோடு புதிய குரல்….
பிறகு இணையத்தில் தேடி இவரை பற்றி அறிந்துக்கொண்டேன்…  வந்தே மாதரம் இசை ஆல்பம் வெளியான  தினம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி… சரியாக  ஐந்து நாட்கள் கழித்து கிட்னி செயல் இழப்பு காரணமாக இறந்து போனார்..


இந்தி பாடல்களில் அவர் பிரபலம்… ஆனால் கடைகோடி தமிழனுக்கு Nusrat Fateh Ali Khan அறிமுகப்படுத்தியதில் பெரும் பங்கு ரகுமானுக்கு உண்டு
உலகின் நம்பர் ஒன் தேடுதல் இயந்திரம் கூகுள்..  இவரது புகைப்படத்தை தேடுதல் இயந்திரத்தின் முகப்பில் வைத்து இவருடைய பிறந்த தினத்துக்கு மரியாதை செய்துள்ளது

இனிய பிறந்தநாள்  வாழ்த்துகள் ‘
Nusrat Fateh Ali Khan ji



நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

CHENNAI BEST BURMA FOOD ATHO | சென்னை பாரிஸ்கார்னர் பர்மிய உணவு அத்தோ





கைமணம்  பகுதியில்...

இன்று நாம் சுவைக்க இருக்கும் உணவு அத்தோ.
அத்தோ  பர்மாவின் தேசிய உணவு….


puli ( 2015) movie review | புலி திரைவிமர்சனம்.




புலி திரை விமர்சனம்.

பாகுபலி போலா..??? என்று கேட்டால் ஆம்.. ஆது போன்று ஒரு பேன்டசி கதைதான்.. ஆனால் பாகுபலி நீண்ட கால தயாரிப்பு... புலி குறைந்தகால தயாரிப்பு... ஆனாலும் தமிழல் அரைத்த மாவையே அரைக்காமல் பேன்டசி ஜேனரில் ஒரு பெரிய ஹீரோவை வைத்து  கதையை யோசித்த வகையில் அதில் விஜய்  நடித்த வகையில்   இருவருக்கும் ஒரு ஸ்பெஷல் பொக்கே..
 
====
புலி படத்தின் கதை என்ன?
 
வேதாள தேசம்... மனிதர்களை விட சக்தி வாய்ந்தவர்கள்... அவர்கள் கட்டுபாட்டில் 59 க்கும் மேற்ப்பட்ட   கிராமங்கள் உள்ளன.. அதில் உள்ள ஒரு ஊரில் மருதீஸ்வரன் (விஜய்) தனது அப்பா பிரபுவோடு வசிக்கின்றார்...அதே ஊரில் வசிக்கும் நரேனின் மகள் ஸ்ருதியோடு லவ்வு.. ஒரு சப யோக சுபதினத்தில் ஸ்ருதியை வேதாள தேசத்து  ஆட்கள் கடத்தி செல்கின்றார்கள்... விஜய் தன் காதலியான ஸ்ருதியை எப்படி மீட்டார் என்பதே  புலி திரைப்படத்தின் கதை...
 
=====
 
படத்தின் சுவாரஸ்யங்கள்..
 
 விஜய் கொடுத்த பாத்திரத்தை நிறைவு செய்து இருக்கின்றார்.. ஆனால் நிறைய இடங்களில் அவர்காட்டும் ரியாக்ஷன் பண்டைய கால  பாண்டசி திரைப்படத்தை பார்க்கும் உணர்வை குறைப்பதை மறுக்க முடியாது அதே வேளையில் ஸ்ருதியை அழைத்து வருவதும் தனது கடமை என்று விஜய் சொல்லும் அந்த காட்சியில் ரசிக்க வைக்கின்றார்...
 
 
========
 
 
 
வீடியோ விமர்சனம்..
 



நினைப்பது அல்ல நீ

நிரூபிப்பதே நீ....

.EVER YOURS..

.

சாண்ட் வெஜ் அண்டு நான்வெஜ் 23/09/2015

ஆல்பம்

 கச்சா பொருட்களின் விலைகள் குறைந்தாலும்  பெட்ரோலிய  பொருட்களை குறைக்காமல் இரண்டு ரூபாய் முன்று ரூபாய் என்று குறைத்து பொது மக்கள் வயிற்றில் அடித்து ,  இந்த தில்லாலங்கடியின் காரணமாக மத்திய அரசு முப்பதாயிரம் கோடிவரை சம்பாதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன...  மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்  நான் உங்கள் வீட்டு பிள்ளை என்று  கணீர் என்று பேசிய காட்சிகள் நினைவுக்கு வருகின்றன.

Audi A6



 Audi A6


A more powerful, intuitive and sophisticated version of the world's most successful executive sedan the AUDI A6 MATRIX drove into Chennai at a glittering launch function recently. By actress pooja kumar.


Adding yet another winner to its comprehensive and diverse portfolio, Audi, the German luxury car manufacturer introduced the new Audi A6 Matrix – a comprehensively updated version of one of the world’s most successful executive sedans.
This is the sixth launch for Audi this year after the launch of the Audi R8 LMX, Audi RS 7 Sportback, Audi TT Coupé, Audi RS 6 Avant and the Audi Q3.


சென்னை தேவி தியேட்டர் பின்புறம் இயங்கும் 40 வருட பாம்மே லஸ்சி கடை








சென்னை தேவி தியேட்டரில் டிக்கெட் எடுத்து அரைமணி நேரத்துக்கு மேல்  படம் பார்க்க காத்து இருந்த  அத்தனை  சென்னை ரசிக பெருமக்களுக்கு   பரிட்ச்சயமான கடை எதுவென்றால் அது  பாம்பேலெஸ்சி கடைதான்…

பதினைந்து 20வருடத்துக்கு முன்….ஒரு மணி ஷோவுக்கு 12 45க்கு சைக்கிள் டோக்கன் போட்டு விட்டு ஒரு லெஸ்சிஅடித்து விட்டு படத்துக்கு போனால் வயிறு கும் என்று இருக்க …பசியே எடுக்காது… படத்தையும் பசி  நினைப்பே இல்லாமல்  ரசிக்கலாம்..  சென்னையில் 40 ஆண்டுகளுக்கு மேலாக குப்பை கொட்டும்   அத்தனை சினிமாரசிகர்ளுக்கும் இந்த பாம்பே லெஸ்சி கடை அத்துப்படி.

cycle light Dynamo | கால ஓட்டத்தில் காணாமல் போனவை... சைக்கிள் லைட்… டைனமோ, ( பாகம் 29)






சைக்கிள் லைட்… டைனமோ,
இன்றைக்கு சென்னை தெருக்களில் சைக்கிள்களை பார்ப்பதே அரிதாகிவிட்டது.  பத்து வருடங்களுக்கு சென்னையில் சைக்கிளில் சுற்றி இருக்கிறேன்..
 


 வடபழனியில் இருந்து அண்ணா நகரில் வள்ளியம்மாள் கல்லூரியில்  படித்த  காதலியை தினமும் சைக்கிளில் சென்று சந்தித்து விட்டு வருவேன்..

வளசரவாக்கம்  திருநகர் அனெக்சில் இருந்து   மோட்சம் தியேட்டர்  , தேவி,  காசினோ மெலடி என்று சுற்றி இருக்கிறேன்..     ஆனால் அந்த கணங்களை இன்று நினைத்து பார்த்தால்  வியப்பாக இருக்கிறது... கருவேப்பிலை கொத்தமல்லி  வாங்கவே பைக்கும் காரும்  அத்தியாவசியமாகிவிட்டன...


BANGALORE CHAI POINT HIGHTECH TEA SHOP






A normal tea shop which is running in every street corners of India,  has taken its new form and been well recognised in Bangalore Which Is Chai Point. 


Chai point a high end modern tea shop in Bangalore. Corporate offices has got a very good impression with Chai point. Amuleek Singh Bijral founded Chai Point Whose business premise was very clear “India Runs on chai”



யுவகிருஷ்ணா




தமிழ் டைப்பிங்  தெரியாம பிளாக் எழுத வந்தவன்  நான்….

 ஒரு போஸ்ட் எழுத தடவி தடவி அடிச்சி முடிக்க மூன்று மணி நேரத்தில் இருந்து நான்கு மணி நேரம் ஆகும்..

 அந்த நாட்களில் வலைபதிவுகளில்  லக்கி செம பேமஸ்… யாருடா இந்த ஆளு… என்று கவனித்த  நாட்கள் அவை…லக்கி அளவுக்கு வளர வேண்டும்… ஒரு பதிவர்  சந்திப்புக்கு  சென்றால் என் பெயர் தெரியவேண்டும் என்ற அளவுக்கு ஒரு ஆசையும்  வேகமும் இருந்தது.

கொஞ்சம் என் பெயர்  வெளியே தெரிய ஆரம்பித்தது….

Bangalore Chai Point | பெங்களூர் டீக்கடை சாய் பாயிண்ட்






 சாய் பாயிண்ட்…

 சாய் பாயிண்ட்  பெங்களூருவில்  உள்ள  ஒரு ஹைகிளாஸ் டீக்கடை.

 டீக்கடை என்று  சதாரணமாக  நாம் நினைக்கும் விஷயம் பெங்களூருவில்  கார்பரேட் லெவலில்  …  சக்கை போடு  போட்டுக்கொண்டு இருக்கிறது..


 சாய்  பாயிண்ட்… என்பது ஒரு டீக்கடை… டெல்லி மட்டும் பெங்களூருவில் மட்டுமே இயங்குகின்றது. 300 ஊழியர்ள்  பணி புரிகின்றார்கள். அதில் 70 இல்இருந்து 80 பேர்  டீ  மாஸ்டர்கள்


Srimanthudu-2015 Movie Review | ஸ்ரீமந்துடு என்கிற செல்வந்தன் திரைவிமர்சனம்.



 ஸ்ரீமந்துடு.

மகேஷ்பாபுவுக்கு  கடந்த கால படங்கள்   மாஸ் ஹிட் வெற்றிப்படங்கள் என்று  சொல்ல முடியாவிட்டாலும்,   சிறிய அளவில் வெற்றி பெற்ற படங்கள் அவை..  கொரட்டல சிவாவோடு ஸ்ரீமந்துடுவில் வெற்றி பெற வேண்டும்  அதுவும் மாஸ் வெற்றிக்கனியை பறிக்க வேண்டும் என்று  மகேஷ் பாபு கோதாவில் இறங்கி இருக்கின்றார்.

Mission: Impossible - Rogue Nation-2015 | மிஷின் இம்பாசிபிள் பாகம் 5 திரை விமர்சனம்



 மிஷின் இம்பாசிபிள் 5


மிஷின் இம்பாசிபிள் ரோக் நேஷன்  ஐந்தாம்பாகம் ரிலிஸ் ஆகி வெற்றி நடை போட்டுக்கொண்டு இருக்கின்றது…
மிஷின் இம்பாசிபிள் திரைப்படத்தின் அடிநாதம் …  பரபரப்பான வேகம்… விறு விறுப்பான திரைக்கதை…

 பார்வையாளன் நினைத்துக்கொண்டு இருப்பதை  நாலு சீனுக்கு  ஒரு சீனில் நீ   நினைத்துக்கொண்டு இருந்தது தவறு என்று அடி  வயிற்றில்  ஓங்கி ஒரு குத்து விடும்  டேர்னிங் பாயிண்ட் திரைக்கதை… அதனால்தான் நான்கு பாகமும் கலெக்ஷனில் பின்னி பெடலெடுத்தது… இந்த ஐந்தாம் பாகமும்அதற்கு விதிவிலக்கில்லை..

கோவை சென்ட்ரல் திரையரங்கில் மிஷின் இம்பாசிபிள் திரைப்படத்தை பார்ததேன்.. சுவற்றில் கரும்பலகையில் பொடி எடுத்துக்களாய்… மிஷின் இம்பாசிபிள் திரைப்படத்தின் கதையை எழுதி வைத்து இருப்பார்கள்..

ஆங்கிலம் தெரியாதவர்கள் முன் கதை சுருக்கத்தை வாசித்து விட்டு படம் பார்க்கும் போது புரியும்  அல்லவா??? அதனால்  அந்த ஏற்பாடு.. ஆனால் இன்று தமிழ் டப்பிங்கிள் ஆங்கில படங்கள் உலகமெங்கும் வெளியாகும்  அதே தினத்தில்  வெளிவர ஆரம்பித்து விட்டன. எல்லாம் டிஜிட்டல் தொழில் நுட்பம் செய்த மாயம்… அதே போல  இரண்டாம் பாகம்  வந்த போதுதான் டிடிஎஸ்   சவுன்ட் சிஸ்ட்டம் தமிழ் நாட்டில் கால் பதித்த நேரம்… பழைய நினைவுகள் …. லெட் மி கம் டூ த பாயிண்ட்.

======
மிஷின்இம்பாசிபிள் திரைப் படத்தின்  கதை என்ன???

சின்டிகேட்  என்ற  அமைப்பு நாசகார வேலைகள் உலகம் எங்கும் செய்து வருகின்றன..சிஐஏ அப்படி  ஒரு அமைப்பே இல்லை என்று  நினைக்கிறது… ஆனால் ஈத்தன்… (டாம்குருஸ்)  கண்டிப்பாக  சின்டிகேட் அமைப்பு இருக்கின்றது…  என்பதை  கொஞ்சம் ஆதரங்களோடு வைத்துக்கொண்டு நம்புகின்றார்..  அந்த அமைப்பை அவர் எப்படி கண்டு பிடித்து முறியடித்தார் என்பதுதான் மிஷின் இம்பாசிபிள் ரோக் நேஷன் திரைப்படத்தின் கதை.


மேலும் வாசிக்க இங்கே கிளிக்கவும்.



=======
மிஷின் இம்பாசிபிள் வீடியோ விம்ர்சனம்.




நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ....
.EVER YOURS...
 

HAPPY BIRTHDAY GAURAV- இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் இயக்குனர் கவுரவ்




எனக்கு நடிக்க பிடிக்கும்….

ஆனால் பள்ளி காலத்திலோ  அல்லது நண்பர்களின் நாடகங்களிலோ..   இதுவரை நான் நடித்தது இல்லை… அதனால் பிறவி நடிகன் அல்ல…

கல்லூரியில்  பணி புரிந்த போது மாணவர்கள் குறும்படங்களில் நடித்து இருக்கிறேன்.

Sakalakala Vallavan Appatakkar-2015 Movie Review | சகலகலா வல்லவன் அப்பாடக்கர் திரைவிமர்சனம்






ரோமியோ ஜூலியட் இப்போதுதான் வந்தது போல இருக்கு…. அதற்குள் ஜெயம் ரவியின் அடுத்த படம் அப்பாடக்கர். கமர்ஷியல் இயக்குனர்  சுராஜ் இந்த திரைப்படத்தை இயக்கி இருக்கின்றார். அஞ்சலி, திரிஷா,சூரி  மற்றும் பலர் நடித்துள்ளனர்.


ithu enna maayam-2015 movie Review | இது என்ன மாயம் திரைவிமர்சனம்




இது என்ன மாயம்…. இயக்குனர் விஜய் இயக்கத்தில்  விக்ரம் பிரபு கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளிவந்து இருக்கும் திரைப்படம்…   ஜாலியான காதல் சப்ஜெக்ட்..
======


Orange Mittai-2015 Movie Review - ஆரஞ்சு மிட்டாய் திரைவிமர்சனம்.






விஜய் சேதுபதியின் உழைப்பு பிரம்மிக்க வைக்கின்றது… சினிமாவில் என்னவாகப்போகின்றோம் என்று எந்த திட்டமிடலும் இல்லாமல் சினிமாவில் என்ட்ரியாகி… சினிமாவில் ஒரு சில திரைப்படங்களிலேயே முன்னனி நடிகராக வலம் வருவது சாதாரண விஷயம் இல்லை.. அதை விட… கமலை போல சினிமாவில் சம்பாதித்து சினிமாவிலே முதலீடு செய்வது போல விஜய் சேதுபதி தனது சொந்த பேனரில் தயாரித்து இருக்கும் திரைப்படம்தான் ஆரஞ்சு மிட்டாய்..
டீசரும் டிரைலரும் ஏகத்துக்கு எதிர்பார்க்கை எகிற விட்டு இருந்தன என்றால் அது மிகையில்லை.. முக்கியமாக விஜய் சேதுபதி வயதான கதாபாத்திரத்தில் நடித்ததோடு ஒரு சின்ன சிக்வென்சுக்கு போடும் ஆட்டத்திற்காக .. அந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவல் அதிகமானது நிஜம்…

Valanjamkanam water falls near Kuttikkanam - மயக்கும் வலன்ஜ கானம் அருவி /கேரளா.



மவுனராகம் படம் எல்லோரும் பார்த்து இருப்பிங்க…
 அதுல  மோகன் ஒரு நாள் ரேவதியை அழைச்சிக்கிட்டு வெளியே போவார்… அதுவும் தாஜ்மாகாலுக்கு மத்தவங்கள  மாதிரி தொல்பொருள்துறை பாதுகாக்கும் கட்டிடம்., நுழைவு சீட்டு   வாங்கும் இடம் என்று வழக்கமாக போகும் வழியில்லாமல்…



SABARI MALAI DOLLY STORY - சபரிமலை… டோலிகள்




சபரிமலை… டோலிகள்

தென்னிந்தியாவில் உள்ள   கேரளாவில் , மேற்கு தொடர்ச்சி மலையில் இருக்கும் ஆன்மிக ஸ்தலம் சபரிமலை . 18 மலைகள்  சூழ்ந்து இருக்கும் மலையில் ஒரு மலையில் இறைவன் ஐயப்பன் வீற்று இருக்கின்றான்…  ஐய்யப்பனை காண , பம்பையில் இருந்து நீலிமலை வழியாக நான்கு கிலோ  மீட்டர் ஏற்றமான  மலைபாதையை  கடக்க வேண்டும்…

Maari(2015) Movie Review - மாரி திரைவிமர்சனம்.



மாரி…..
புதுப்பேட்டை படத்திற்கு பிறகு ரவுடி கேரக்டர் மாரி  படத்தில்  தனுஷ் செய்து இருக்கின்றார்… அவர்  கேரியரில் மறக்க முடியாத படம் புதுப்பேட்டை என்றால் அது மிகையில்லை… தனுஷ் என்ற நடிகனை  வெளிக்கொண்டு வந்த படம்… ஆனால்  மாரி அந்த அளவுக்கு ராவான  ரவுடி சப்ஜெக்ட் இல்லை.. காமெடி என்டர்டெய்னர் என்று  முன்பே சொல்லிவிட்டார்கள்…
====
மாரி படத்தின் கதை என்ன?

சாதாரணமாக புறா பந்தயத்தில் கலந்துக்கொண்ட மாரி எப்படி  பின்னாளில் ரவுடியாக பரிணமிளிக்கின்றான் என்பதும் அவன் வாழ்வில்  காதேலோடு குறிக்கிடும் பெண்ணை அவன் காதலித்தானா? அல்லது  அந்த காதலுக்காக இரண்டு மணி நேரத்தில் ரவுடி தொழிலை தூக்கி கடாசி விட்டு  உத்தமனாக மாறினானா? இல்லையா என்பதே மாரி படத்தின் கதை.
=
பாலாஜி மோகனின்  முந்தைய இரண்டு படங்கள்  மென்மையான காதல் படங்கள்…  அப்படியான இயக்குனர்  ரவுடிசப்ஜெக்ட்   எப்படி  எடுப்பார் ???என்ற ஆர்வம்  இண்டஸ்ட்ரி முழுக்க எல்லோருக்கும் இருந்தது…  ஆனால் நன்றாகவே  பக்கா  கமர்ஷியல்  படத்தை எடுத்து  இருக்கின்றார். ஆனால் கதை  சுவாரஸ்யமில்லாத வழக்கமான கதை. ஆனால் இதில் புதுமை என்வென்றால்  புறா ரேசை பின்புலமாக வைத்துக்கொண்டு களம் இறங்கி இருக்கின்றார்..


 பிரேமுக்கு பிரேம் ரஜினி சாயல் தெரிகின்றது… படத்தின் கதையே பாட்ஷா படத்தை நினைவு படுத்தி தொலைக்கின்றது. ஆனால் ரஜினி போல ஒரு கமர்ஷியல் ரூட்டுக்கு வர  வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கின்றார்.


 தனுஷ் ஒரே ஷாட்டில் நடனம் ஆடுகின்றார்..

மேலும் வாசிக்க.... இங்கே கிளிக்கவும்.,..

 மாரி வீடியோ விமர்சனம்.





நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

Baagupali Movie (2015) review - பாகுபலி இந்திய சினிமாவின் பிரமாண்டம்.



இந்திய சினிமாவின் பிரமாண்டம் என்ற அடை மொழி…. மூன்று வருடகால  தவம்.. 250 கோடிக்கு மேல் ஏப்பம் விட்டு கிடக்கும்  திரைப்படம்...  அப்படி என்றால்   அந்த படத்தை  எப்பை சோப்பையாக எடுக்க முடியுமா???  அதே போல மொக்கையாகவா  அந்த படத்துக்கு விளம்பரம் செய்வது??? அதனால்  பாகுபலி படத்துக்கான  விளம்பரம் அதிகம் என்றால் அது மிகையில்லை.. அதே போல  பாகுபலி  படக்குழுவினர் மிக அழகாக ரசிகர்களுக்கு டெம்ட் ஏற்றினார்கள் என்றே  சொல்ல  வேண்டும்… இந்த  அளவுக்கு  பிராண்டிங் செய்ததே இந்த படம் எந்த மாதிரி எதிர்வினை ஆற்றினாலும் படம்  ஓடி  விட வேண்டும் என்ற ஒரு  கார்பரேட் கால்குலேஷன்தான்…


பாபநாசம் திரைப்பட கிளைமேக்ஸ் சர்ச்சை..

#papanasamclimax


மொள்ளமாறி ,பொறம்போக்கு, ஊரை அடிச்சி உலையில போடுறவன் , கஞ்சா கடத்தறவன், கட்டபஞ்சாயத்து பண்ணறவன்கவுரவகொலை செய்யறவன்.. நல்லது செய்யறேன்னு ஆட்சிக்கு வந்து நாட்டை சொரண்டுற அரசியல் வாதிங்க...

Papanasam (2015) movie review - அசத்தும் தகப்பன் கமலஹாசன்.





தினம் தினம் பாத்ருமில் குளிக்கும் ஸ்கான்டல் வீடியோக்கள் வெளிவந்துக்ககொண்டு இருக்கின்றன… காதலன் கெஞ்சி  கேட்டான் என்பதற்காகா   தான் குளிப்பதை தானே செல்போனில் வீடியோவாக எடுத்து  வீடியோ முடியும் போது பிளையிங் கிஸ் கொடுத்து  கேமரா அனைக்கு பெண்கள் ஒருவகை….

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner