மிக ஆபத்தான சென்னை வெளிவட்ட சாலை.. காதலர்கள் ஜாக்கிரதை...

பொதுவாக சென்னையில் காதலர்கள் சந்தித்து பேச சரியான இடம் இல்லை என்பேன்...முன்பு போல் இப்போது எல்லாம் காதலர்கள் பேசுவது மட்டும் இல்லை... அடுத்த படியாக முத்தம், கழுத்துக்கு கீழே கை என்று போய் வெகு நாட்கள் ஆகிவிட்டது...


மீடியாவி்ன் ஆதிக்கம் அதிகமானாதால் இப்போது வளரும் பருவத்தினரின் மனக்கட்டமைப்பு மாறி போய் விட்டது...கடந்த பத்து வருடங்களில் எல்க்ட்ரானிக் மீடியாவின் அசுர வளர்ச்சியே இதற்கு காரணம்...

உலகமயமாக்கல் பல துறைகளில் வேரூன்ற காதல் மட்டும் என்ன பாவம் செய்தது... அது பரிமாணம் பெற்றுவிட்டது... என்ன... கலாசச்சார முகமூடியால் என்ன செய்வது என்று தெரியாமல் திக்கு முக்காடி போய் கிடக்கின்றது... அதை கட்டுடைத்து வெளிவர நாள் நேரம் பார்க்காமல் மெல்ல மெல்ல வந்து கொண்டு இருக்கின்றது...

முன்பெல்லாம் பெண்கள் உள்ளே போடும் பிரா பட்டை வெளியே தெரிந்தாலே.. சட்டென மனம் தந்தி அடிக்கும்.. மனம் கிளர்ச்சி கொள்ளும்... சட்டென நம் தலையில் தட்டி கொண்டு ... தெரியாத பெண்ணாக இருந்தாலும் செய்கையில் நாம் உணர்த்தினால் அவள் சரி செய்து கொண்டு ஒரு நன்றி பார்வை வீசுவாள்.. இப்போது எல்லாம் என்ன சமாச்சாரம் உள்ளே என்பதை அறிவிப்பது போலான உடை சர்வசாதாரணமாகிவிட்டது...


ஆணும் இப்போது பர பரவெனமாறிவிட்டான்... காதலித்து மேட்டர் முடித்து, காதலித்து மேட்டர் முடித்து, அதே போல் பெண்களும்....ஆனால் ஒன்றை கவனிக்க வேண்டும்... இன்னும் ஒழுக்கமான காதலும், பெண்களும் ,ஆண்களும் மிக டிசன்டாக காதலி்த்தபடி இருக்கின்றார்கள்...

மனதை கட்டு படுத்த முடியாதவர்கள்.. மகாபலிபுரம் சவுக்கு தோப்பு,பூங்கா புதர், என்று மறைவிடம் நோக்கி போகின்றார்கள்...

சென்னையில் ஒரு சாலை இருக்கின்றது... சரியாக பதினெட்டு கிலோமீட்டர் நீளம்...பெரிதான வாகன போக்குவரத்து அதிகம் இல்லை...லாரிகள் மற்றும் கார்கள் மட்டும் அதிகம் பயண்படுத்தபடும் சாலை அது... ஆறு மணிக்கு மேல் அந்த சாலையில் விளக்கு இருக்காது.. வரும் வாகனங்களின் வெளிச்சம்தான்...

பெருங்களத்தூரில் இருந்து தாம்பரம் கிண்டி விழியாக செல்லாமல்...மதுரவயல் செல்லும் அந்த சென்னையின் வெளிவட்டசாலைதான் அது...வாகனங்கள் சீறி பாய்ந்து செல்லும் டபுள் ரோடு அது...

பெருங்களத்தூரில் இருந்து...
விருகம்பாக்கம்,வளசவாக்கம் வர... நாம் எப்போதும்....தாம்பரம் வழியாக வந்து குரோம்பட்டை, பல்லாவரம்,கிண்டி , அசோக்நகர், கே கேநகர், விருகம்பாக்கம் ,வளசரவாக்கம்... வர வேண்டும்...இந்த விழியில் அதிகமான போக்குவரத்து மற்றும் சிக்னல்கள்.. டூவிலரில் வர ஒன்றரை மணிநேரம் எப்படியும் அகி விடும்... ஆனால் வளசரவாக்கத்தில் இருந்து போரூர் போய் இந்த டபுள் ரோட்டை பிடித்தால் அரை மணி நேரத்தில் பெருங்களத்தூர்....

அதனால் நான் பெருங்களத்தூர் செல்ல இந்த சாலையைதான் தேர்ந்து எடுப்பேன்... அதன் வாகன நெரிசலற்ற போக்குவரத்து... என்னை அதிகம் கவரும்...

பெருங்களத்தூரில் என் மனைவியின் அத்தை வீடு இருக்கின்றது... அங்கு இரவு உணவை முடித்து குசாலம் எல்லாம் விசாரித்து கிளம்ப கொஞ்சம் நேரம் ஆயிற்று... மணி இரவு பத்து... தாம்பரம் வழியாக சென்றால் லேட் அகும் என்பதால்... நான் மதுரவயல் பைபாசை தேர்ந்து எடுத்தேன்... அந்த சாலை பற்றியும் அதன் தனிமையும் எனக்கு தெரியும் இருந்தாலும்.. எதாவது ஒரு லாரிக்கு முன்னால் அதன் வெளிச்சத்தில்....சென்று கொண்டே இருக்கலாம் என்று நினைத்து போக... அந்த நேரத்தில் எந்த லாரியும் வரவில்லை... சரி என நானும் என் மனைவியும் பைக்கில் வேகம் எடுத்து செல்கையில்....ரிவர்யூ மீரரில் அந்த இரண்டு தடிப்பயல்களை பார்த்தேன்...ரோட்டில் வாகனத்தில் அளப்பறை செய்த கொண்டு வந்தார்கள்... நல்ல போதை என்பது தெரிந்து போயிற்று.. நான் எனது வண்டியை வேகம் எடுக்க அவர்களும் வேகம் எடுத்து எங்கள் வண்டி அருகில் மோதுவது போலும், நிறுத்துமாறும் செய்கை செய்ய செய்து கொண்டு இருக்க... ஒரு வேனும் ஒரு லாரியும் முன் சென்று கொண்டு இருக்க நான் வேகம் எடுத்து அதன் முன் சென்று விட அதன் பிறகு அவர்களை கானோம்... என் மனைவி கொஞ்சம் பயந்து விட்டாள்....

அதிலிருந்து இரவு பத்துக்கு மேல் இரவு பயணத்தை அந்த சாலையில் தவிர்த்துவிட்டோம்...இரவு வருவதாய் இருந்தால் தாம்பரம் வழியாகவே வருகின்றோம்.. ஆனால் மாலையில் அந்தி சாயும் வேலையில் அந்த பக்கம் எப்போதாவது போகும் போது... இப்போதெல்லாம் பின்னால் உட்கார்ந்து இருக்கும் பெண் முழுதாய் வண்டி ஓட்டும காதலனைஅனைத்த படி மெதுவாய் செல்கின்றார்கள்... அந்த வாகனம் 20 அல்லது 30 கீலோமீட்டா வேகத்தில்தான் செல்கின்றது. அதற்கு நடந்தே போய் விடலாம்...

அந்த சாலையின் பிரச்சனைகள்....

1.பதினெட்டு கிலோமீட்டருக்கு இரவில் விளக்கு இருக்காது...

2. காதல் போதையில் பெட்ரோல் போட மறந்து விட்டால்.... நடராஜா சர்விஸ்தான்...

3.தாம்பரம் அருகில் ஒரு பெட்ரோல் பங்கு உள்ளது.

4. பஞ்சர் ஆனால் எந்த இடத்திலும் கடை கிடையாது..

5. இவ்வளவு ஏன் அந்த சாலையில் ஒரு டீக்கடை கூட கிடையாது....
6.மழைவந்தால் எங்கேயும் ஒதுங்க முடியாது...

இப்படி பட்ட சாலையில் சமீபகாலமாக இரு சக்கர வாகனத்தில் பல காதலர்களை இப்போது பார்க்கின்றேன்... பொதுவாக புறநகர் கல்லூரி மாணவ மாணவிகளை பார்க்கின்றேன்...

போலிஸ் வாகனம் எப்போதாவது அந்த வழியாக கிராஸ் ஆகின்றது.... அந்த யாருமற்ற தனிமை...பல இளவட்டங்கள் தண்ணி அடித்து ஆட்டம் போட அந்த வழி ஏதுவாக இருக்கின்றது..... அந்த சாலைகளை இப்போது பல குடும்பத்தினர் பயண்படு்த்த ஆரம்பித்து விட்டார்கள்... வாகனங்கள் விரைவாய் செல்லும் சாலை இது....

இருப்பினும் காதலர்களுக்கு ஒன்றை சொல்லிக்கொள்வேன்... அந்த வழி வேண்டாம்...பாதுகாப்பு ரொம்ப குறைவாக இருக்கின்றது...குடும்பஸ்தர்களுக்கு ஒரு எச்சரிக்கை... குழந்தைகள்.. மனைவியுடன் அந்த வழியே இரவில் செல்ல வேண்டுமாயின்.. அந்த பாதையை தவிர்த்து விட்டு ஜன நடமாட்டம் அதிகம் உள்ள பாதையை தேர்ந்து எடுங்கள்.. வண்டி பஞ்சர் ஆனால் அவ்வளவுதான்...


மூன்று மாதங்களுக்கு முன் கூட பெருங்களத்தூரில் இருந்து அந்த வழியாக இரவு7 மணிக்கு அந்த சாலையில் நான் வந்து கொண்டு இருந்த போது.. திருநீர்மலை அருகில் அந்த கைனட்டிக்ஹோண்டாவை பார்த்தேன்...

அந்த பெண் வாகனத்தை ஓட்டிக்கொண்டு இருந்தாள்... பின்னால் அவளை கட்டி பிடித்தபடி அவன் உட்கார்ந்து இருந்தான்...எனது வாகனத்தின் வெளிச்சம் அவனின் மேல் பட்டும் அந்த பெண் மீது இழைந்து கொண்டு இருப்பதை அவன் நிறுத்தவில்லை... அவர்களை கடக்கையில் நான் பார்த்தேன்... அவள்தலை அநியாயத்திற்க்கு கலைந்து போய் இருந்தது... பின்னால் உட்கார்ந்து இருந்தவனின்.. ஒரு கை அந்த பெண்ணின் இடு்ப்பிலும்.. ஒரு கை சுடிதார்.......................................................... இருந்தது... எப்படியும் அந்த பெண் அவள் வீட்டில்... ஸ்பெஷல் கிளாஸ் என்று சொல்லிவிட்டு வந்து இருக்கும்...ஸ்ஸஸஸஸ் பெஷல் கிளாஸ்தான் அந்த பெண் அட்டென்ட் செய்து கொண்டு இருந்தது... பட் எதாவது ஒரு தண்ணி அடிச்ச குருப் பார்த்தா... அந்த பெண்ணை தேவிடியா ரேஞ்சுக்கு...சுத்தி வளைச்சி முழு துணியை அவுக்க வச்சிடுவானுங்க...

தயவு செய்து பெண்கள் காதல் போதையில் காதலருடன்.. தனிமையான இடம் செல்வதை தவிருங்கள்...

நான் அவர்களுக்கு இந்த சாலை பற்றி எச்சரிக்கலாம் என்று நினைத்தேன்... இந்த நேரத்தில் யார் சொன்னாலும் அவர்கள் காதில் வாங்கி கொள்ளமாட்டார்கள் என்பதாலும்... நம்மை கரடி ரேஞ்சுக்கு நினைப்பார்கள் என்பதாலும் நான் வந்து விட்டேன்...

அந்த பையன் எப்படியாவது எதையாவது செய்து விட்டு தூங்கினாலும்... அந்த பெண் நிச்சயம் அந்த இரவில் தூங்கி இருக்கமாட்டாள் என்பது மட்டும் நிச்சயம்...

(புகைபடங்கள்... ஜாக்கிசேகர்)

அன்புடன்
ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும், சினிமா சுவாரஸ்யங்கள் தொடரையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

பப்பரபப்பே என பல் இளிக்கும் சென்னை சாலைகள்...


சென்னையின் உள்கட்டமைப்பை இப்போது யாராவது ஒரு வெளிநாட்டவர் வந்து பார்த்து இருந்தால் தூ என்று காரி துப்பி இருப்பார்.... அந்தளவுக்கு படு கேவலமாக இருக்கின்றது....

எல்லா இடத்திலும் தோண்டி வைத்து அதில் ஒப்புக்கு ஒரு காண்டிராக்டர் மண் போட்டு முடி வைக்க.... அந்த இடங்கள் எல்லாம் மழையில் சென்னைவாசிகளுக்கு மரணக்குழிகளாயின...

எவன் சொன்னான் என்று தெரியவில்லை சென்னையில் தங்கம் கிடைக்கின்றது என்று எப்போது பார்த்தாலும் தொண்டி எழவெடுத்துக்கொண்டே இருக்கின்றார்கள்...

மழையால் சேதமாகிவிட்ட சாலைகள் என்று சொல்கின்றார்கள்... அப்படி சொல்ல வெட்கமாக இல்லை... ஒரு மூன்றுநாள் மழைக்கு சாலைகள் சேதமாகிவிடுமா?... அப்போது இதற்கு முன் சாலைகள் ஒழுங்காக இருந்தனவா?... அதற்கு முன்னும் அதே லட்சனம்தான்... இப்போது மழையால் இன்னும் கொடுமை...

இரண்டு சக்கரவாகனத்தில் பயணிக்கும் போது எந்த இடத்தில் பள்ளம் இருக்குமோ? என்று வாகனம் ஓட்டி செல்கையில் ஒரு வீத பீதியுடன்தான் செல்ல வேண்டும்....


வளசரவாக்கம் கேசவர்த்தினி பஸ் நிறுத்தம் அருகே... நடு ரோட்டில் ஒரு பெரிய பள்ளம்... வாகனத்தில் வேகமாக தண்ணீரை கிழித்து வந்தவர்கள் எல்லாம்...ஓ பன்னீர் செல்வம் போல் பொட்டிபாம்பாய் மாறி போனது பார்க்க கண் கொள்ளா காட்சிகள்.. அதே வேகத்துடன் வந்து மட்டென்று சத்தம் கேட்டு நிலை தடுமாறி முகம் வெளிறி மரணபயத்துடன் பல பொதுஜனங்கள், அந்த இடம் விட்டு நகர்ந்தார்கள்...

அது எப்படித்தான் சாலைக்கு நடுலே எரிக்கல் விழுந்தது போல் குழி விழும் என்று தெரியவில்லை...முதலில் சின்னதாக உருவாகும் பள்ளம் அதன் பிறகு இரண்டாம் நாள் மழைக்கு அரை அடி பள்ளத்திற்க்கு மாறிப்போனது...

வேளச்சேரியில் இருந்து தரமனி செல்லும் சாலை.. அப்படி ஒரு மோசம் எப்படித்தான் இந்த ஐடி வாலாலக்கள் அதில் காரிலும் பைக்கிலும் சென்று வருகின்றார்களோ? தெரியவில்லை

ரொம்பவும் கொடுமையானவர்கள்.. மவுன்ட் ரயில்வே ஸ்டேசனில் இருந்து வாணுவம்பேட்டை வழியாக, மடிப்பாக்கம், கீ்ழ் கட்டளை செல்பவர்கள்தான்... எவனாவது அரசாங்கத்தில் இருந்து வந்து மழையால் சாலை பழுதடைந்தது என்று சொன்னால் அவனை ஏறி மிதித்து விடுங்கள்...

ஏனென்னறால் மழையினால் மட்டும் அந்த சாலைகள் பழுதடையவில்லை... கடந்த பல வருடங்களாக அந்த சாலைகள் அப்படியேதான் இருக்கின்றது....

சரி மழையில ரோடு வீணாயிடுச்சி... நாங்க என்ன பண்ண முடியம் என்று நெடு்ஞ்சலைதுறை ஊழியர்கள் கேட்ககின்றார்களா?.. நியாயமான கேள்விதான்... ஆனால் பள்ளம் இங்கே இருக்கின்றது என்று அறி்விக்க எந்த இடத்திலும் அறிவிப்பு பலகை சென்னை மற்றும் தமிழகத்தில் எங்கும் இல்லையே... அப்ப நீங்க எல்லாம் எங்க போயிடறிங்க... மாதா கோயில்ல மணி ஆட்டவா?... வெயில்லதான் வேலை செய்வோம்.. மழையில நாங்க வேலை செய்யமா கையில புடிச்சிகிட்டு... அதான் செல்போனை நிப்போம்ன்னு சொன்னா என்ன அர்த்தம்?...

ஒரு சாலையில் பள்ளம் இருக்கின்றது என்று பொதுமக்களுக்கு அறிவிப்பு செய்வது நெடுஞ்சலைதுறையின் வேலை... ஆனால் தமிழகத்தை பொறுத்த மட்டில்... பொதுமக்கள் அந்த பள்ளத்தில் விழுந்து எழுந்து பக்கத்தில் எதாவது ஒரு மரத்தின் கிளையை ஒடித்து அதில் நட்டு வைத்து விட்டு இனி வரும் வாகன ஓட்டிகளுக்கு அறிவிப்பு செய்து விட்டு செல்வார்கள்... “எச்சரிக்கை இங்கே பெரிய பள்ளம் இருக்கின்றது” என்று... அந்த மரக்கிளைகள் உணர்த்தும்...


இந்த மழையில் சென்னை முழுவதும் சாலைகளின் நடுவே மரம் நடு விழாவை பொது மக்களே செய்தார்கள்.... என்ன வழக்கமாக சாலை ஓரத்தில் மரம் நடுவார்கள்..இப்போது ரோட்டுக்கு நடுவே....என்ன ஒரு கொடுமை என்றால் மரம் நட்டு தண்ணீர் ஊற்ற வில்லை... அதான் ஊரே தண்ணியில மெதக்குதே...


மழைன்னா சட்டென ஆட்கள் கோதாவில் இறங்க வேண்டும்... பள்ளம் உள்ள இடத்தில் அறிவிப்பு பலகைகள் வைத்து பொது மக்களை எச்சரிக்க வேண்டும்... அந்த பழக்கமே நம்மிடத்தில் இல்லை,...

எங்கள் ஊர் கடலூரில் இன்னும் கூட சாலைகள் சரிசெய்யபடவில்லை.... என் கல்யாணத்துக்கு வந்தவர்கள்... என் ஊர் சாலை லட்சனத்தை பார்த்து முகம் சுளித்து விட்டு போனார்கள்.. திருமணம் முடிந்து ஒரு வருடம் ஆயிற்று இன்னும் எவன்...........................ன்னு தெரியலை....

போர்கால நடவடிக்கை என்று ஒரு வார்த்தையை அடிக்கடி தினத்தந்தியில் பார்த்து இருக்கலாம்... போர்ன்னு சொன்னா ... பொதுவா தமி்ழ்நாட்டுகாரனக்கு என்னன்னு தெரியும்?.... அந்த வலி , இடப்பெயர்வு,எதுவும் அவனுக்கு தெரியாது...

போர்கால நடவடிக்கை என்றால்... முடியாது என்ற வார்த்தையை சொல்லவே கூடாது... கட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடும் போது அதில் மிதவை பாலம் அமைத்து... பொதுமக்களை பாதுகாப்பான இடத்திற்க்கு அழைத்து செல்ல வேண்டும்...போர்நடக்கும் இடத்திற்க்கு மருந்து மற்றும் உணவுபொருட்கள் எந்த தடை வந்தாலும் எடுத்து செல்ல வேண்டும்.. இல்லையென்றால் போரில் தோற்க்க வேண்டி வரும்...

அதாவது விரைவாய் செயலாற்றுவதற்க்கு போர்கால நடவடிக்கை என்று சொல்லுவார்கள்... ஆனால் தமிழகத்தில் அந்த வார்த்தையை எல்லா இடத்திலும் சர்வசாதாரணமாக பயண்படுத்த ஆரம்பித்து விட்டார்கள்...
இன்னும் கொஞ்சம்நாளில் போர்கால நடவடிக்கையில் இலவச டிவி கொடுப்போம் என்று சொன்னாலும் சொல்லுவார்கள்...

மழை முடிந்து நேற்றுதான் எல்லா இடங்களிலும்... பள்ளங்களில் மண்ணையும் கல்லையும் கொட்டிவிட்டு போனார்கள் அந்த புண்ணியவான்கள்....


நெடுஞ்சாலை துறை மற்றும் உள்ளாட்சி ஊழியர்களுக்கு,மழையில் களப்பணி ஆற்றாதவர்களுக்கு? எதற்கு போனஸ் லொட்டு லொசுக்கு எல்லாம்??? ஆனால் இதே கொட்டும் மழையில் களப்பணி ஆற்றியவர்களை நான் பார்த்தேன்... அந்த ஊழியர்களுக்கு என் நன்றிகள்..

ஏன் இங்கு சாலை பராமாரிப்பு என்பதே இல்லாமல் போய் விட்டது... அப்படியே பராமரித்தாலும் எல்லா வற்றிலும் லஞ்சபேய் தலைவிரித்து ஆடி...பொதுமக்கள் உயிரை எடுக்கின்றது..


நல்ல சாலைகள் மற்றும் குடிக்க குடிநீர் இதுதானே... ஒரு அரசிடம் பொதுமக்கள் வேண்டுவது..... அனால் இதை எந்த அரசும் சரியாய் செயல்ப டுத்தவில்லை என்பதுதான் உண்மை...

சரி நாமதான் இப்படி கஷ்டபடறோம் தலைவர்கள் வீட்டு பக்கம் எல்லாம் எப்படி இருக்கின்றது என்று பார்க்க போனேன்... கோபாலபுரத்து பக்கமும், போஸ்கார்டன் பக்கம் போய் பார்த்தேன் சாலைகளில் தண்ணீர் சிறிதளவுக்கு தேங்கி இருந்தததே தவிர.... சாலைகளில் பள்ளம் எங்கேயும் இல்லை....மிக நேர்த்தியாக இருந்தது...


(குறிப்பு) படங்கள் நெட்டில் சுட்டது.....

அன்புடன்
ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும், சினிமா சுவாரஸ்யங்கள் தொடரையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி...

சாண்ட்விச் அன்டு நான்வெஜ் 18+ (11/11/2009)

ஆல்பம்....

பதிவர் அண்புடன் மணிகண்டன் வேண்டு கோளுக்கு இணங்க... இந்த கலக்கல் சாண்ட்விச்....


மெரினா கடற்கரை கிரிக்கெட்....
வழக்கம் போல் மெரினாவில் கிரிக்கெட் விளையாட தடையை ரொம்பவும் மும்முரமாக அமுல் படுத்தி உள்ளனர்...அவர்கள் கிரிக்கெட் விளையாடுவதில் எந்த பிரச்சனையும் இல்லை... ஆனால் அந்த சர்விஸ் லேனில் வாகனம் ஓட்டி செல்கையில் எந்த பக்கத்தில் இருந்து பந்து வந்து உதை கொடுக்கும் என்று தெரியாமல் பயந்தே செல்ல வேண்டும் ...

ஒரு பொட்டிக்கடை அம்மாவின் கண் கீழே பெரிய வீக்கம் என்ன வென்று கேட்க கிரிக்கெட் கார்க் பால் பட்டுவிட்டதாகவும் கொஞ்சம் மேலே பட்டு இருந்தால் கண் போய் இருக்கும் என்று சொல்லி கண்ணீர் விட்டார்... அதற்கு என் மனைவியே சாட்சி... அந்த அண்ணாடம் காட்சி என்ன பாவம் செய்தார்....

பலதரப்ட்ட இடங்களில் இருந்து மாணவர்கள் வந்து அந்த மூன்று கிலோமீட்டர் ரோட்டில் விளையாடுகின்றனர்... எந்த தெரு, எந்த நகர் எதுவும் தெரியாது...ஒரு சிலர் டென்னிஸ் பாலில் விளையாடுகின்றனர்... அது கூட பிரச்சனை இல்லை.. ஆனால் கார்க் பால் ரொம்பவும் ஆபத்தானது... அத்த பாலில் உதைவாங்கியவர்களுக்கே அது தெரியும்... ஒரு திரில்லுக்காக ஒரு சில கிரிக்கெட் குழுக்கள் இந்த பாலை மெரினாவில் பயண்படுத்துகி்ன்றார்கள்...பல்லாயிரக்ணக்கான மக்கள் ஒன்று கூடும் இடத்தில் இந்த கார்க் பால் பிரச்சனைதான்... எந்த திசையில் இருந்து பால் உதை விழும் என்று பயந்து உட்கார்ந்து இருக்கின்றேன்....

எல்லாம் ஓக்கே அதற்க்காக மாணவர்கள் விளையாட வருவதை தடுக்க.... ஏதோ திவிரவாதிகளை பிடிக்கும் அளவுக்கு அல்லது மிரட்டும் அளவுக்கு போலிசை குவித்தது கொஞ்சம் ஓவர் என்று சொல்லலாம்...

ரிலையன்ஸ்ஆபர்...
ரிலையன்ஸ் பிரஷ்ல் ஒரு அபர் போட்டு இருக்கின்றார்கள்... அதாவது பிலிப்ஸ் 29இன்ச் டிவி மற்றும் டிவிடி பிளேயர் மற்றும் 5,1 மல்டி மீடியா ஸ்பீக்கர் எல்லாம் சேர்த்து ரூ...14990க்கு கொடுக்கின்றார்கள்.... நல்ல சகாய விலை வாங்குபவர்கள் வாங்கலாம்....

ஊட்டி நிலசரிவு...40 பேர் பலி...
சட்டென்று அந்த பெருந்துயரம் நிகழ்ந்து விட்டது... ஊட்டியில் வரலாறுகாணாத மழை பெய்து கொண்டு இருக்கின்றது... எல்லா இடத்திலும் 30 செமீட்டருக்கு மேல் பெய்து கொண்டு இருக்கின்றது.... மரங்கள் அழித்து காண்கிரிட் காடுகளாக மாறும் போது இது போன்ற நிலச்சரிவுகள் தொடர்கதையாகும் வாய்புகள் உள்ளன...

யாரும் மண்ணின் தன்மை ... அது இருக்கும் இடத்தின் புவியியல் பிரச்சனைகள் ... என்று யாரும் அலசி பார்த்து வீடுகளை கட்டுவதில்லை... அரசும் அதனை முறைபடுத்துவது இல்லை.... இப்போது கண் இமைக்கும் நேரத்தில் 40பேர் பலி... இது தொடர்கதையாகமல் இருக்க இனிமேலாவது அரசு விழித்து கொள்ள வேண்டும்...

மிக்சர்...
அந்த வீட்டு ஓனர் நாதாரியை உதைச்சா என்ன?

எனது நண்பர் கேசவர்த்தினி அருகில் ஒரு வீட்டில் வசித்து வருகின்றார்... வீட்டில் கேபி்ள் டிவியில் படம் பார்த்து கொண்டு இருந்தாலும்.. விரும்பும் சேனலை பார்க்க முடியவில்லை என்பதால்... ஏர்டெல் டிஷ் டிவியை வாங்கி வீட்டின் மீது டிஷ் ஆண்டெனாவை வைக்கும் போது... என் வீட்டில் டிஷ் வைக்க கூடாது... அதே போல் இன்னும் ஒரு வாரத்தில் இந்த வீட்டில் வரும் கேபிள் ஒயர்களையும் அறுத்து எரிந்து விடுவேன்... டிவி பார்த்து எல்லோரும் கெட்டு போய் கொண்டு இருக்கின்றார்கள் என்று விளக்க உரை வேறு அந்த ஹவுஸ் ஓனர் நாதாரி... சொற்பொழிவு ஆற்றிக்கொண்டு இருக்கின்றான்....
என்ன செய்வது சிலது இப்படியும் உயிர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.. இப்போது நண்பர் திரிசங்கு சொர்க்க நிலையில் இருக்கின்றார்.. டிஷ் விற்பனையை திரும்ப பெற முடியாது என்று ஏர்டெல் டீலர் கை விரிக்க... இப்போது நண்பர் ஏர்டெல் டீலராக மாறி ...
யாருக்காவது ஏர்டெல் டிஷ்டிவி வேனுமா?.. இது சன் டிடிஎச்சை விட நல்லா இருக்கும் என்று எல்லோரிடத்திலும் செல்லில் பேசி வருகின்றார்...

இன்னொறு நாதாரி...

மனைவியை ஆபிசில் விட்டு விட்டு திரும்புகின்றேன்... லோனில் கார் வாங்கி இருக்கும் ஒரு ஜென்மம்.. காருக்குள்ளே உட்கார்ந்து கொண்டு அது வீட்டு பெட்ரூம் அட்டாச்சுடு பாத்ரூமை திறப்பது போல் திறக்க... நான் எனது டூவிலரில் இடிக்க என் கைகளில் காயம் வராத வரையில் நல்ல அடி...கூடவே என் வாகன இண்டி்கேட்டர்கள் சரவணபவன் ஹோட்டல் அப்பளம் போல் நொறுங்கின..அந்த ஆள் கதவு திறக்கும் போது நான் வந்ததாக அந்த ஆள் சொன்ன போது... நான் ஒன்றே ஒன்று சொன்னேன்.....கதவு திறக்கும் முன் பின்னாடி என்ன வண்டி வருகின்றது என்று அந்த நாதாரி பார்த்து திறந்து இருக்க வேண்டும்... ஆனால் திறக்க வில்லை..


நான் அந்த நாதாரியிடம் சொன்னேன்....

1. நான் சண்டை போடும் மூடில் இல்லை...

2.பக்கத்தில் ஏதாவது வண்டி வருதான்னு பார்த்து கதவை திறக்க வேண்டியது நீ...

3, தப்பு உன் மேல...

4. கண்டிப்பா லோன்ல சமீபத்துல கார் வாங்கினவனதான் நீ இருப்ப....

5.இதுக்கு மேல நீ ஒரு வார்த்தை பேசினாலும்.. டீ கடையில டீ குடிக்கற உன் ஆபிஸ் பொண்ணுங்க எதிரில் நீ கேவலமா என் கிட்ட உதை வாங்குவ... ஆனா தப்பு நான் செஞ்சு இருந்தா... கண்டிப்பா.. இந்நேரம் உன்கிட்ட சாரிகேட்டு இருப்பேன்... உன் பணக்கார திமிரை போல் நான் காட்டி இருக்க மாட்டேன் என்றேன்...

6. ஒழுங்கா சாரி சொல்லிட்டு போயிடு... எனக்கு அது போதும் என்றேன்... என் வலியை பொறுத்த படி...

அவனும் அதே போல் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை சாரி சொன்னான்....


விஷுவல் டேஸ்ட் நான் எடுத்ததில் பிடித்தது....




நான்வெஜ்....

ஒருத்தன் எப்போதும் கட்டிலில் விளக்கு அனைத்தும்தான்.. எந்த வேலையும் செய்வான்.. அவன் மனைவி காரணம் தெரியாமல் நகத்தை கடித்து கொண்டு இருந்தாள்... பல வருடங்களுக்கு பின் அவளுக்கே ஒரு சலிப்பு வந்து.. இன்னைக்கு எப்படியும்... மேட்டர் நடக்கும் போது லைட்ட போட்டுடனும் என்று நினைத்து கொண்டாள்... அதே போல் மேட்டர் நடக்கும் போது லைட்ட போட்டு விட்டாள்....

தலைவர் ஒரு ரப்பர் சமாச்சாரத்தை கையில் வைத்து கொண்டு அசடு வழிந்தான்... உனக்கு வெட்கமா இல்லை என்று அவள் கேட்டாள்.. இத்தனை வருசமா இதை வச்சிதான் உன்கதையை ஓட்டினியா என்றாள்... அதற்கு கணவன் நான் அப்படிதான்... உன் கிட்ட ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன்... நமக்கு 3புள்ளைங்க எப்படி பொறந்துச்சு???????????


அன்புடன்
ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும், சினிமா சுவாரஸ்யங்கள் தொடரையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

ஐ லவ் யூ வை மிக அழகாக சொன்ன விளம்பர படம்...

சில நேரங்களில் மனைவியை சட்டென பிடிக்கும்.. அதற்க்கு எந்த காரணமும் இருக்காது.. சட்டென பேன் காற்றில் பறந்து உதட்டில் பட்ட முடியை சட்டென தனது விரல்களால் விளக்குவதாக இருக்கட்டும்... அல்லது உங்களுக்கு பிடித்த விஷயத்தை நீங்கள் சொல்லாமலே அவர்கள் புரிந்து கொண்டு செய்வதாகட்டும்...அதே போல் உங்கள் உறவுக்கு அவள் கொடுக்கும் முக்கியமாகட்டும் என்று பல விஷயங்களை சட்டென பிடித்து விடும்... இப்படி சொல்லிகொண்டே போனால் பதிவை முடிக்கவே முடியாது...


ஆனாலும் சில நேரங்களில் மனம்முழுவதும் சந்தாஷமாக இருக்கையில் அவளை கலாய்க்க மனம் தயாராகும்...அப்போது எதாவது ஒரு விஷயத்துக்கு முகத்தை உர் என்று வைத்துக்கொண்டால்... அவள் என்ன காரணம் என்று அறிந்து கொள்ள எதையாவது கேட்டு வைப்பாள்...

ரசத்துல உப்பு கம்மியா இருந்துச்சே அதனாலயா?

உன்னி கிருஷ்ணன் குரலும் முகமும் அழகுன்னு சொன்னனே அதா?

கமலோட பர்சனல் கேரக்டர் பிடிக்கலைன்னு சொன்னனே அதனாலையா இந்த கோபம்?

உங்க தங்கச்சி பாலை பொங்க உட்டு அடுப்பை தொடைக்காம போயிட்டாங்கன்னு சொன்னனே... அதனாலையா?


அம்மாகிட்ட அரை மணி நேரமா போன்ல பேசிகிட்டு இருந்தனே அதனாலையா?


உலகத்துலயே எனக்கு ரொம்ப பிடிச்சவங்கன்னு என் ராதா அத்தைய சொன்னே அதனாலயா?

பிரசன்ட் பண்ணறதுல என் தம்பியை அடிச்சிக்கு இந்த உலகத்துல ஆளே இல்லைன்னு சொன்னனே அதனாலயா?


கொஞ்ச நேரத்க்கு முன்ன சர்வம் பாட்டுல திரிஷா கழுத்துக்கு கிழே என்ன டாட்டு ஒட்டி இருக்குன்னு நீ அலைஞ்சி பாக்கும் போது தொடையில வலிக்கறா போல கிள்ளிட்டேனே... அதனாலயா ?

இப்படி எல்லாம் கேட்டு விட்டு ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல்... என்ன எழவுன்னுதான் சொல்லிதொலையேன்... என்று சொல்லி அப்போதும் சொல்லி வைக்கவில்லை என்றால் தலையனையால் உதைத்தாவது விஷயத்தை வாங்கினால்தான் பொதுவாக மனைவிகளுக்கு தூக்கம் வரும்...

தான் தினம் ரசிக்கும் ஒரு மனிதன், அவனின் அசைவுகளுக்கு பல வருடங்களாய் பழக்க பட்டவள்... அவனின் சட்டென முக மாறுதலுக்கு என்ன காரணம் என்று தெரிந்து கொள்ள அவள் படும் பாடுகள்..அது மட்டும் இல்லாமல் அவனுக்கு காயத்ரி என்ற பெண்ணின் பிரச்சனையை மனைவியுடன் ஏற்க்கனவே ஷேர் பண்ணி இருக்கின்றான்... அந்த பிரச்சனை எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்... ... அப்போது இன்னும் அந்த மனைவி கலவரம் ஆவாள் அப்படி கலவரம் ஆன மனைவி... உம் என்று முகத்தை வைத்து கொண்டு வார்த்தை சொல்ல முடியாமல் முழுங்கி தொலைக்கும் கணவன்... அந்த இருவருடைய ஊடலும் , இங்கே கவிதையான விளம்பரமாய்.....

அந்த கவிதையான ஊடல் விளம்பரம்...




இந்த விளம்ர படம் வந்த போது தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் சென்னையில் பலமாக கால் பதித்த நேரம் அது...

அது ஐடியில் வேலை செய்து விட்டு வீட்டுக்கு வரும் ஒரு கணவனின் சில நிமிடங்களை வெகு இயல்பாய் பதிவு செய்தது போல் இருக்கும் என்பது என் எண்ணம்... காரணம் அப்போது எல்லோருக்கும் ஐடியில் வேலையை விட்டு தூக்கி கொண்டு இருந்தார்கள்... காலையில் வேலைக்கு போனதும்தான் தெரியும்... தனக்கு இனி வேலை இல்லை என்று.....

ஐடி ஆட்களுக்கு பெண் பிள்ளைகளின் சகவாசம் கொஞ்சம் அதிகம்... இதையெல்லாம் கலந்து கட்டி நிகழ்காலத்தின் அறைக்கூவலாய் ...சமுகத்தின் நிதர்சனங்களை கொடிட்டு காட்டுவதாய் ...அந்த விளம்பர படம் இருந்தது என்பேன்...


முதலில் கணவனின் தடுமாற்றத்துக்கு வேகேஷன் வேலை என்று யோசித்தவள்.... எப்படி ஏத்துக்கவன்னு தெரியலை என்று சொல்லும் போது சட்டென காயத்ரி மேட்டர் என்று போகும் போது இந்த மனைவிகள் எந்த அளவுக்கு ரொம்ப ஷார்ப் என்பதை புரிந்து கொள்ளலாம்... இந்த விளம்பர படத்தின் வசனகர்த்தாவும், இயக்குனரும், ஒளிப்பதிவாளரும் பாராட்டபடவேண்டியவர்கள்...

அந்த பெண்ணின் படபடபடப்பு கணவனை நேசிக்கும் எல்லா பெண்களிடமும் இதை காணலாம்... அதே போல் லவ்யூ சொல்லி விட்டு சட்டென எந்த ரியாக்ஷனும் காட்டாமல் அதன் பிறகு உதட்டில் வெளிபடுத்தும் மென் புன்னகை.. ஒரு தேர்ந்த நடிகனுக்கு உரியது...துள்ளுவதோ இளமை ஹீரோவின் அந்த சிரிப்பின் ரசிகனாய் மாறிப்போனேன்....

நீங்கள் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத விளம்பர படம் இது...

22 ஷாட்டுகளில் 53 செகன்டில் ஒரு அற்புதமான விளம்பரம் இது...

வழக்கம் போல் இசை சான்சே இல்லை... பேச நல்ல டைம் எனும் போது கெஞ்சம் அந்த புல்லாங்குழல் இசைஅற்புதம்...

எற்கனவே பல முறை பார்த்த விளம்பரம் என்றாலும் எனக்காக ஒரு முறை ஒரே ஒரு முறை...

ரசிப்பின் பகிர்வை பின்னுட்டம் மூலம் தெரியபடுத்துங்கள்..

அன்புடன்
ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும், சினிமா சுவாரஸ்யங்கள் தொடரையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

என் இல்லாளின் வருகையும்.. சென்னை ஏர்போர்ட்டும்.....

சென்னை இரவு நேரத்தில் எழில் கொஞ்சும் ஏர்போர்ட்... புதிய பாலத்தில் இருந்து எடுத்தேன் கிளிக்கி பிரமாண்டமாய் பார்க்கவும்...

ஒரு வழியாக சனிக்கிழமை காலை அயர்லாந்து டப்ளின் ஏர்போர்ட்டில் காலை 6 மணிக்கு ஏறி... 10 மணிக்கு பாரிஸ் வந்து... பாரி்சில் இருந்து ஸ்வதேஷ் ஷாருக் போல் இந்திய மண்ணில் என் மனைவி கால் பதிக்க பயணித்து வந்த , அந்த அலுமினிய பறவை இடம் தேர்ந்து எடுத்தது...பெங்களுரில் ஞாயிறு நடு இரவு 12,30க்கு. இமிக்கிரியேஷன் செக் எல்லாம் முடித்து... போர்டிங் பாஸ்வாங்கி வெளியே போய் அவள் அம்மாவை பார்த்து பேசி விட்டு....

பெங்களுரில் விடியலில் 6,30க்கு கிங்பிஷரின் சென்னை பிளைட் ஏற வேண்டும் ... ஆனால் சென்னையில் வருணபகவானின் உக்கிர பார்வையால் புவியீர்ப்பு திசைக்கு எதிர் திசையில் பயணிக்க கொஞ்சம் சிரமமாக இருப்பதால்... அந்த பிளைட் கேன்சல் செய்யபட்டு, எழுமணி சென்னை பிளைட்டில் அனைவரையும் ஏற்றி 8,30க்கு சென்னை எர் போர்ட்டில் வந்து சேர்த்தார்கள்... நான் அங்கு முன்பே போய் எனது இல்லாளின் வருகைக்கு, எனது மச்சான் ஆனந் மற்றும் குடும்ப நண்பர் சுந்தர்ராஜனுடன் காத்து இருக்கு ஆரம்பித்தேன்...

கிங்பிஷர் விமான பணிப்பெண்கள் நமக்கு பிரஷர் ஏற்றும் வகையில் தொடை தெரிய கருப்பு காலுரை அணிந்து நடந்து போனார்கள்...

ஏர் போர்ட் முன்பு போல் இல்லை... இப்போதுதான்இந்திய விமான துறை தூக்கம் கலைந்து விரிவு படுத்தி கொண்டு இருக்கின்றார்கள்... அது அழகாகவும் இருக்கின்றது..

பத்து ரூபாய்க்கு ஏர் போர்ட்டில் விற்க்கும் காப்பி,டீ... அடை மழை காரணமாக ரொம்பவும் தண்ணியாக இருந்தது..


எல்லா இடத்திலும் நவ நாகரீக நங்கையர் தலை கோதி...பக்கவாட்டில் பார்க்கும் போது பலத்த பெருமூச்சு ஏற்பட வைத்தனர்...

எதோ ஒரு இந்திய வெளிநாட்டு அதிகாரியின் பெயரையும் வெல்கம்மையும் கடனுக்கு எழுதி போராட்டகாரர்கள் போல் அட்டை பிடித்து... அழைத்து போக வந்த கார் டிரைவர்கள் கால் கடுக்க நின்று கொண்டு இருந்தார்கள்....

எல்லா இடத்திலும் பிரிவின் வலியை வரவேற்க்க நிற்க்கும் சொந்தங்களின் கண்களில் பார்க்க முடிகின்றது...

தூரத்தில் டிராலியோடு நடந்து வரும் கணவனை பார்த்தஉடன் கண்களில் சட சடவென நீர் பெருகும் மனைவியை பார்த்தேன்...

வரும் போது மனைவியை வரவேற்க்கு எந்த பொருளும் வாங்கி செல்லவில்லை.. அது எனக்கு இதுவரை பழக்கமும் இல்லை... சரி ஏர் போர்ட்டில் போக்கே கடைக்கு போனால் ரூபாய் 150 என்றார்கள்...
நான் அந்தளவுக்கு காஸ்ட்லியாக அன்பை வெளிப்படுத்தாமல் ஒரு ஒற்றை சிவப்பு ரோஜா 20 ரூபாய்க்கு கிடைத்து... இலைகளுடன் பிளாஸ்டிக் பேப்பரில் தன்னை சிறைபடுத்த ஒப்புக்கொண்டது...


பொதுவாக விமானபயணம் என்பது இன்னும் பயம் கொள்ளும் விஷயமாகவே எனக்கு இருக்கின்றது... காரணம் அதிக ஆங்கில படம் பார்த்ததும், இதற்கு முன் அதில் நான் பயணம் செய்யாததே காரணம் என்பேன்.. சென்னை வந்த புதுதில் நங்க நல்லூர் போக ஜி எஸ்டி சாலையில் போய் கொண்டு இருக்கையில் திடிர் என்று தலைக்கு மேல் பயங்கர சத்தத்துடன் இறங்கும் அந்த எருமையை பயத்துடன் பார்த்து இருக்கின்றேன்...

நான் இதுவரை விமானம் ஏறியதில்லை...முதலில் ஒரு பாஸ்போட் எடுத்தேன் அதற்கு பத்து வருட வேலடிட்டி இருந்தது.. இந்திய அரசு முத்திரை தவிர வேறு எந்த நாட்டு முத்திரையும் குத்தாமலேயே.. கைபடாத கன்னியாகவே காலவதி ஆனது... இப்போதும் பாஸ்போர்ட் எடுத்து வைத்து இருக்கின்றேன்...ஹேர்ஹோஸ்ட்டல் கையால் சாக்லேட்டோ, சரக்கோ வாங்கி சாப்பிடும் பாக்கியம் கிடைக்கின்றதா? என்று பார்ப்போம்...

9 மணிவாக்கில் டிராலியில் பொருட்களுடன் எங்களை தேடியவாறு என் மனைவி வந்தாள் ..சென்னையில் ஏர்போர்ட்டில் அனைத்து... நெற்றியில் முத்தமிடுவது அனைவரையும் கவனிக்க வைக்கும் செயல் என்பதால்...கை குலுக்கி... 20ரூபாய் ரோசை கொடுத்து வரவேற்றேன்...கண்களில் மூன்றுமாத பிரிவுவை நான் படித்தேன்... மனதுக்கு நிறைவாய் இருந்தது...

செக்கின் போது ஏர் போர்ட்டில்... எல்லாம்பொருளின் எடை குறித்த வாக்குவாதம் இல்லாமல்... டென்ஷன் இல்லாமல்...அயர்லாந்து மற்றும் சென்னையில் எந்த பிரச்சனையும் இல்லாமல்... என் மனைவியும் மனைவியின் நண்பர்பகளும் வெளியே வந்தார்கள்... அதற்கு காரணம் அயர்லாந்து நண்பர் மேஷக்... எடை பார்க்கும் மெஷினை விருந்தோம்பலின் போதே கொடுத்து விட்டு இருந்த படியால்...முன்பே எடை பார்த்து அதற்கு ஏற்றார் போல் பொருள் அடுக்கி எந்த டென்ஷனும் இல்லாமல் வர காரணமாய் இருந்த அயர்லாந்து வாசக நண்பர்கள் மேஷாக் மற்றும் ஸ்டிபன் இருவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்....

அதே போல் அயர்லாந்தில் எனது மனைவி மற்றும் நண்பர்களை எங்கள் விட்டிற்க்கு ஏன் அழைத்து வரவில்லை என்று உரிமையோடு மேஷாக்கை கோபித்துக்கொண்ட நல்ல வாசக தமிழ் உள்ளங்களுக்கு எனது நன்றிகள்...


நண்பர் மேஷாக்கின் கடிதம்

(அன்பின் ஜாக்கி அவர்களுக்கு பதிவை படித்தேன் என்ன சொல்வது என்று எனக்கு தெரியவில்லை நீங்கள் குறிப்பிட்டிருந்தபடி நாங்கள் செய்தது ஒன்றும் இல்லை. ஸ்டீபன் படித்தபோது அவருடைய கண்கள் கலங்கியதுதான்உண்மை, அவர் என்னிடம் சொல்லும்போது ஜாக்கி நம்பளை எங்கோ கொண்டுபோய் வச்சிட்டருப்பாஎன்று சொல்லிக்கொண்டிருந்தார். அதுமட்டுமல்லாது இங்கு இருக்கும் நண்பர்கள் ஒருவர் விடாமல் போன் செய்து சிஸ்டர் மற்றும் அவர்கள் நண்பர்களை எங்கள் வீட்டிற்கும் அழைத்து வந்தால் என்ன என்று விசாரித்தார்கள். நாங்கள் யாருக்கும் சொல்லவில்லை அவர்களே தமிலிஷ்ல் பார்த்துவிட்டு விசாரித்தார்கள் அப்புறம்தான் நானே பார்த்தேன்.என் மனைவியும் எப்பவாவதுதான் உங்களுக்கு இதுபோல உருப்படியாய் செய்யதோனும் என்று பாராட்டினாள்(? ). எங்கள் வீட்டில் அனைவருக்கும் மகிழ்ச்சியே. என் மகனும் நேத்து வந்தாங்களே அந்த aunty எல்லாம் இந்தியா போயிட்டாங்களா என்று கேட்டான். நேற்றுதான் சிஸ்டேரிடம் பேசினேன் எல்லாம் ரெடி என்றும் இந்தியா சென்றதும் மெசேஜ் அனுப்புகிறேன் என்றும் சொன்னார்கள். கமெண்ட்ஸ் எழுதவில்லை என்றாலும் உங்கள் பதிவுகளை ஒன்று விடாமல் படித்துக்கொண்டிருக்கின்றோம். ஸ்டீபன் மற்றும் எங்கள் குடும்பத்தின் சார்பாக உங்களுக்கு எங்களின் அன்பு கலந்த வணக்கம். நீங்கள் மென் மேலும் வளர ஆண்டவரிடம் பிரார்த்திக்கின்றோம் . நன்றி மேஷாக் )

மேஷாக்...மற்றும் ஸ்டீபன்... இப்போதும் உங்களுக்கு சொல்கின்றேன்... நீங்கள் செய்த உதவி ரொம்ப சாதாரணம் என்று நீங்கள் சொல்கின்றீர்கள்... அது என்னை பொறுத்தவரை, என் மனைவியை பொறுத்த வரை அது ரொம்ப பெரிய விஷயம்...இன்னும் என் மனைவியின் நண்பர்கள்...என்மனைவியை ரொம்ப பெருமையாக பார்க்கின்றார்கள்.. கடல் கடந்து பல்லாயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் இப்படி ஒரு உதவி கிடைத்ததே என்று.....மிக்க நன்றி ...


பொருட்களை எல்லாம் காரில் ஏற்றி விட்டு என் மனைவி என் இரண்டுவார தாடியை பார்த்து விட்டு...
என்ன தாடி எல்லாம் வைத்துக்கொண்டு இருக்கின்றாய்..? என்று கேட்டாள்...நான் பிரிவு துயர் என்றேன்... 3 மாசம் என்றாள் நிறைய இருக்கனுமே... கொஞ்சம்தான் தாடி இருக்குது... என்று எதிர்கேள்வி கேட்டாள்.... இதுக்குதான் படிச்ச பொண்ணுங்களை கல்யானம் செய்ய கூடாது...யுவர் ஆனர்... (அப்பவே எங்க அப்பா கள்ளகுறிச்சி பக்கம் சிறுவந்தாடு கிராமத்துல பெண் பார்ப்பதாக சொன்னார்... அதை நினைத்துக்கொண்டேன் சும்மா சோக்கு)

அன்புடன்
ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும், சினிமா சுவாரஸ்யங்கள் தொடரையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

கேமராவுக்கு பூஜை (சினிமா சுவாரஸ்யங்கள் /பாகம் 2)

தமிழ் சினிமா பற்றி எழுத எவ்வளவோ விஷயங்கள் இருந்தாலும்.. முதலில் இந்த சுவாரஸ்யத்தில் ,இருந்து துவங்குவோம்...பொதுவாக கேமரா என்றால் அது ஜெர்மன் தயாரிப்புதான்..

நமது திரையுலகில் தற்போது பயன்பாட்டில் இருப்பது...ஏரி235, ஏரி435,ஏரி435 எக்ஸ்ட்ரீம்.. போன்றவை பயன் பாட்டில் உள்ளன... பானவிஷன் கேமராக்கள் ஹாலிவுட்டில் அதிக அளவு பயன் படுத்தினாலும் இந்தியாவில் அதாவது வளரும் நாடுகளின் சாய்ஸ் ஏரி நிறுவன தயாரிப்பு வகை கேமராக்கள்தான்....

ஏரிவகை கேமராக்கள் இரண்டாம் உலக போரின் போது டாக்குமென்ட்ரி எடுக்கவும் போர்கால சூழலை அடுத்த தலைமுறைக்கு தெரியபடுத்தவும் எளிதில் கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கபட்ட இந்த கேமரா முதலில் இது டாக்குமென்ட்ரி படமெடுக்க உருவாக்கபட்டது...மோஷன் பிக்சருக்கு செட் அனது காலத்தின் கோலம்...

இது சிறியது... பெனாவிஷன் கேமராக்கள் போல் பெரியது இல்லை... அதுவும் இல்லாமல் இது விலை குறைவானது... அதனாலே வளரும் நாடுகளான நாம்.. ஏரி வகை கேமராக்களையே அதிகம் பயன்படுத்துகின்றோம்..

இருப்பினும் சினிமா சந்தை அதிகம் புழங்கும் இந்திய மார்கெட்டில் ஏரி கோலச்சுவதை கண்டு இப்போது பேனாவிஷன் கம்பெனி சில பலமாறுதல் மற்றும் விலைகுறைப்பை செய்து விட்டு மெல்ல இந்திய சினிமா சந்தையில் கால் எடுத்து வைக்கின்றது..

இது கேமராக்கள் பற்றிய விவரம் கொடுக்கும் பதிவு அல்ல... இனி மேட்ட்ருக்கு வருகின்றேன்..

எனக்கு தெரிந்து தென் இந்தியாவில் தமிழ் தெலுங்கு ,மலையாளம், கன்னடம், போன்ற திரைஉலகில்... கேமாரா ஷுட்டிங் ஸ்பாட்டில் கேமரா வைத்தவுடன் பஸ்ட் ஷாட் எடுக்கும் முன்... கேமராவுக்கு முன்னால் தேங்காயில் சூடம் காட்டி படைத்த விட்டு உடைக்கும் பழக்கம் உண்டு... வட இந்தியாவில் எப்படி என்று தெரியவில்லை.. ஆனால் தென் இந்தியாவில் இப்போதும் எல்லா நாளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது..

இது எப்படி இந்த பழக்கம் வந்து இருக்க வேண்டும்.. என்று சற்றே யோசித்தால்... மற்ற நிறுவனங்கள் போல்... ஒரு டிப்பார்ட்மென்ட்ரிப்போர்ட் வேண்டும்... அந்த ரிப்போர்ட்டை நாளைக்கு தருகின்றேன் என்றால் அது பிரச்சனை இல்லை...

ஆனால் இங்கே ஒரு காட்சியை செல்லுலாய்டில் பதிக்க அத்தனை டிப்பார்ட்மென்ட் ஒரு சேர உழைக்க வேண்டும்... அப்போதுதான் சினிமா எடுக்க முடியும்..லைட்மேன்டிப்பார்ட்மென்ட், கேமரா டிப்பார்ட்மென்ட், ஆர்ட் டிப்பார்ட்மென்ட்,டைரக்ஷன் டிப்பார்ட்மென்ட், போன்றவை களத்தில் பம்பரமாக சுற்றினால் மட்டுமே இது எல்லாம் சாத்தியம்.... இந்த ஒன்று கூடல் நடந்தால் சினிமா என்று வரும் போது பல்வேறு குணநலன் கொண்ட மனிதன் இனையும் போது.. ஆண்டவா.. எந்த பிரச்சனையும் இல்லாம ,ஷுட்டிங் நடக்கனும்...எனென்றால் ஒரு மணி நேரத்துக்கு ஒரு லட்சத்தில் இருந்து ஒரு கோடிவரை செலவு செய்து படம் எடுக்கும் போது தென் இந்தியர்கள் இந்த வேண்டுதலை அதாவது கேமராவுக்கு முன் சூடம் காட்டி கடவுளிடம் வேண்டுவது இங்கே சர்வசாதாரணமாகிவிடு்கின்றது...

அது மட்டும் அல்லாமல், இப்போது போல் அப்போது எல்லாம் படம் எடுக்கும் போதே பிரேமில் என்ன இருக்கின்றது.. என்று பார்க்க டிஸ்ப்ளே வசதி இல்லாமல் இருந்த காலங்களில்... கேமராவில் என்ன எடுத்தாலும் டெவலப் பண்ணி பார்த்த பிறகுதான் என்ன வந்து இருக்கின்றது என்று தெரியும் போது... சென்னையில் இருந்து கன்னியாகுமரியில் ஷட்டிங் பண்ணி பிலிமில் அல்லது கேமராவில் எதாவது பிரச்சனை என்றால் அரோகராதான்... எல்லோருடைய உழைப்பும் வீண்... அந்த பயம்தான் கேமராவுக்கு முன் சூடம் காட்டி வழிபடும் பழக்கம் வந்து இருக்க வேண்டும்.. என்று எனக்கு தோன்றுகின்றது..

எனது நண்பர் செந்தூரப்பூவே படத்தின் கேமராமேன் ரங்கசாமி அவர்களிடம் பேசும் போது இந்த கேமரா முன் சூடம் காட்டும் செயல் குறித்து பேசுகையில்... அவர் இப்படி சொன்னார்...

அது ஒரு ஒழுக்கம்... நான் செய்யற செயல் சிறப்பா வரனும்னு ஒரு சேர எல்லோரும் பிரார்திப்பது...இப்ப தேசிய கொடியை ஏத்தி விட்டு சல்யுட் செய்யறோம் அது முட நம்பிக்கையா?... அது ஒரு ஒழுக்கம் அது போலதான் இதுவும் என்றார்... செண்டிமென்ட் சொன்னா சொல்லிட்டு போவட்டும்.. என்பார்..

அவர் சொன்னது போல் அந்த ஒழுக்கம் சின்னதிரையிலும் வந்து விட்டது.. இப்போது கூட நீங்கள் எங்காவது ஷட்டிங் நடக்கின்றது என்றால்... அது சின்னதிரையாக இருந்தாலும் பெரிய திரையாக இருந்தாலும்...எல்லாம் ரெடியாகி கேமராகோனம், ஆர்ட்டிஸ் ரிகர்சல், எல்லாம் பார்த்த பிறகு... ரெடி கேமரா என்ற டைரக்டரின் குரலுக்கு முன்... படப்பிடிப்பு குழுவில் இருக்கும் செட் அசிஸ்டென்ட்கள்... காலில் உள்ள செருப்பை அவிழ்த்து விட்டு ஒரு தேங்காயில் சூடம் வைத்து,அதனை கொளுத்தும் தீப்பெட்டியை டைரக்டரிடம் கொடுக்க, அவரும் காலில் உள்ள செறுப்பை அவிழ்த்து விட்டு கற்புரம் கொளுத்த..கேமராவுக்கு முன் வலது பக்கம், இடது பக்கம் மூன்று சுற்று சுற்றி விட்டு அதை, டைரக்டரிடம் காட்ட அந்த எரியும் கற்புரத்தில் கை வைத்து லேசாக கண்ணில் ஒத்திக்கொள்ள, அப்புறம் கேமராமேன் என்று அது பலரிடம் டிராவல் ஆகி அந்த தேங்காயை தரையில் அடித்து சுக்குநூறாக உடைத்து விடுவர்கள்...

அது செண்டிமென்டாகவும் இருக்கலாம்...எல்லாவற்றிலும், அதாவது அத்தனை பேரின் கூட்டு முயற்ச்சியை, வியற்வையை, உழைப்பை, செல்லுலாய்டில் பதியும் கேமராவுக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்ற பயம் காரணமாக இருக்கலாம்... கேமராமேன் ரங்கசாமி சொல்வது போல், அது ஒரு ஒழுக்கத்தின் வெளிப்பாடாய் இருக்கலாம்... ஆனால் இப்போது பலரிடம் முன்பு போல் அந்த செயலுக்கு இப்போது மரியாதை கொடுப்பது குறைந்து வருகின்றது... நான் அப்படி அல்ல... கற்புரத்தை கண்ணில் ஒத்திக்கொள்ளும் போது இறையே, ஒளியே இன்று நடக்கும் நிகழ்வுகள் எனக்கு முன்னேற்றத்தை தரவல்லதாக இருக்க வேண்டுமாய் வேண்டிக்கொள்வேன்..
அது செண்டிமென்டோ ஒழுக்கமோ இது போன்ற மிக நட்பமான சின்ன , சின்ன சுவாரஸ்யங்களில் இருந்து இன்னும் பல பல பெரிய விஷயங்கள் வரை உங்களோடு நேரம் கிடைக்கும் போது,பகிர்ந்து கொள்ள எழுதுகின்றேன்..


அன்புடன்
ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும், சினிமா சுவாரஸ்யங்கள் தொடரையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

அயர்லாந்து நண்பர்கள் மேஷாக் மற்றும் ஸ்டீபனுக்கு என் நன்றிகள்..

சில நாட்களுக்கு முன் அயர்லாந்தில் எனக்கு கிடைத்த உதவி என்று ஒரு பதிவு போட்டு இருந்தேன்...என் மனைவி அயர்லாந்து போனதும்... அங்கு யாராவது தமிழ் பதிவர்கள் அல்லது வாசகர்கள் இருக்கின்றார்களா? என்று கேட்டு எழுதி இருக்க... மேஷாக் என்பவர் கல்பாக்கத்தில் இருந்து அயர்லாந்தில் செட்டில் ஆகி இருப்பதாகவும் எனது எழுத்துக்களை... தொடர்ந்து வாசிப்பதாகவும்.. அயர்லாந்தில் ஏதாவது உதவி என் மனைவிக்கு, வேண்டும் என்றால் உடனே தன்னை தொடர்பு கொண்டு ,எந்த தயக்கமும் இல்லாமல் கேட்க வேண்டும்... என்று கேட்டுக்கொண்டார்...

எனக்கு அப்போது ஏற்ப்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.. அதற்கு காரணம் இப்படி எழுதி இருந்தேன்..
பொதுவாக தமிழர்கள் இல்லாத தேசம் இல்லை என்றாலும்... முக்கியமாக வாசிக்கும் பழக்கம் இருக்க வேண்டும்... தமிழில் பிளாக் என்று விஷயம் பற்றி தெரிந்து இருக்க வேண்டும்... அப்படியே தெரிந்து இருந்தாலும அவர்கள் தொடர்ந்து தமிழ் மணம், தமிளிழ் போன்ற திரட்டி தளங்கள் பற்றி அறிந்து இருக்க வேண்டும்... அப்படியே இருந்தாலும்.. எனது எழுத்தை அவர்கள் வாசிக்க வேண்டும்.. அப்படியே வாசித்தாலும் அது சுவாரஸ்யமா இருக்க வேண்டும் ... இவ்வளவு வேண்டும் இருப்பதால் நம்பிக்கை இல்லாமல்தான் நான் அந்த உதவி வேண்டும் என்ற பதிவை போட்டேன்...

ஆனால் இரண்டு நாட்களில் அயர்லாந்தில் இருந்து...மேஷாக் கடிதம் போட அதனை சுருக்கி உங்கள் பார்வைக்கு வைத்தேன்.. எனக்கு ரொம்ப சந்தோஷம் மற்றும் வியப்பு...எனது எழுத்தையும் ஏதோ ஒரு மூலையில் வாசித்து உதவிக்கு வருகின்றேன் என்று சொன்ன போது .. சில நேரங்களில்.. தூக்கம் கண்களை தழுவ பதிவு போட்டது ஞாபகத்துக்கு வருகின்றது..

கடந்த ஞாயிறு அன்று எனது மனைவி அயர்லாந்தில் உள்ள மேஷாக் வீட்டிற்க்கு,அவரது அழைப்பின் பேரில், அவளது அலுவலக நண்பர்களுடன் செல்ல.. அங்கு சிறப்பான விருந்தோம்பல் அவர்களுக்கு அளிக்கபட்டது...

அங்கு போன பிறகுதான்... ஸ்டீபன் என்ற அவரது நண்பரும் எனது பதிவுகளை ரெகுலராக வாசித்து வருவதும் அவரும் வரவேற்ப்பில் ஈடுபட்டதும் தெரிய எனது மனைவி மற்றும் அவளது அலுவலக சகாக்கள் சந்தோஷத்தில மிதந்து இருக்கின்றார்கள்... இவர்களை அழைத்து போக இரண்டு கார்களை எடுத்து வந்து, அவர்களை அழைத்து போய் இரவு உணவு கொடுத்து மறுநாளுக்கும் உணவை தயார் செய்து கொடுத்த அனுப்பி அவர்களை ஸ்டேஷன் வரை வந்து வழி அனுப்பி நெகிழ வைத்து இருக்கின்றாகள்...

என் மனைவி போனதில் இருந்து எனது பதிவுகைளை பற்றி அதிகம் பேசி இருக்கினறனர்.. எல்லாவற்றையும் விட நான் கஷ்டபட்டு முன்னேறி இருப்பதை ரொம்ப பெருமையாக பேசி இருக்கின்றனர்...இதையெல்லாம் பார்த்து விட்டு எனது மனைவியின் நண்பர்களும், என் மனையின் நண்பி மேரியும் இப்படி சொன்னார்களாம்... கடல் கடந்து உங்க புருஷனை பத்தி யாரொ ரெண்டு பேர் பாரட்டுறதை கேட்கறதுக்கு ரொம்ப சந்தோஷமா,பெருமையா இருக்கு.... என்று சொன்னது மட்டும் அல்லாமல்... இனி அவர் எழுத நீ ரொம்ப ஹெல்ப் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்களாம்... எனக்கு சிரிப்புதான் வந்தது...ரொம்ப பெரிய லெவல்ல பீல் பண்ணிட்டாங்க.. என்ன செய்ய.. எல்லாம் நேரம்...

யாரும் என் கையை பிடித்து எழுத சொல்லி கட்டாய படுத்தவில்லை... என் ஆத்ம திருப்திக்காக எழுதுகின்றேன்...நான் ரொம்ப இலக்கிய வாசனையோடு எழுதுபவன் அல்ல... எனது வாசிப்பு உலகம் மற்றும், உலக ஞானம்... மற்றவர்களின் எழுத்துக்களை பார்க்கையி்ல் ரொம்ப கம்மிதான்... எனது படைப்புகள் எந்த பத்திரிக்கையிலும் அதிக அளவில் வந்தது இல்லை... இருப்பினும்.. இந்த உதவியும் பாராட்டும்.. எல்லாம் வல்ல பரம் பொருளின் விளைவாய் கிடைத்ததாக நினைக்கின்றேன்...
(நண்பர் மேஷாக் மற்றும் அவரது மகனுடன்...அவரது நண்பர் ஸ்டீபன்...)

என் மனைவி குகிள் டாக்கில் பேசும் போது அவர்கள் ரொம்ப உயர்வாய் மரியாதையாக நடத்தியது குறித்து சொல்லி சந்தோஷபட்டாள்...அவரது மனைவியின் விருந்தோம்பல் மற்றும் அவரது நண்பர் ஸ்டீபன் போன்றவர்களோடு உரையாடியதையும்,அந்த கணங்களை சொல்லி ரொம்பவே சந்தோஷபட்டாள்...

(எனது மனைவியின் அலுவலக நண்பர்களுக்கு விருந்தோம்பல் செய்யும் மேஷாக் நண்பர் ஸ்டீபன்....)

மேஷாக் அவர்களின் கடிதம்...


அன்பின் ஜாக்கி அவர்களுக்கு, மன்னிக்கவும் நீங்கள் சாட்டிங்கில் வரும்போது நான் வெளியே சென்றிருந்தேன்,இரவுதான் பார்த்தேன். பிறகு சண்டே அன்று தங்கள் மனைவி மற்றும் அவர்கள் நண்பர்களோடு வந்து எங்களை கௌரவபடுதியதர்கு மிகவும் நன்றி. சீக்கிரமாய் இரவு ஆகிவிட்டபடியால் எங்களால் அவர்களை பக்கத்திலுள்ள ஷோப்பிங்கிற்கு கூட நேரம் கடந்தே போகும்படி ஆகிவிட்டது. இங்கு ஸ்டீபன் என்ற நண்பரும் எங்களுக்கு உதவியாய் இருந்தார் அவர்தான் அடிக்கடி உங்களை கேட்டுக்கொண்டே இருப்பார். நாங்கள் இந்தியா வரும்போது அவசியம் உங்களை சந்திப்போம்.மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் நிறைய எழுதுங்கள் உங்களுக்கு அழகாக வருகிறது விட்டுவிடாதீர்கள். நமக்கெல்லாம் படிப்பதற்க்குமட்டுமே வரும் கமெண்ட்ஸ் போடுவதற்குள் தாவு தீர்ந்துவிடும். உங்களுக்காக ஆண்டவரிடம் பிரார்த்திக்கின்றோம் குடும்பமாக. என் மனைவியும் உங்களை விசாரித்ததாக சொல்லசொன்னர்கள்.

என்றும் அன்புடன்.
மேஷாக்


எங்கேயோ பிறந்து எப்படியோ வளர்ந்து.. ஏதோ ஒரு தூர தேசத்தில் வாசம் செய்யும் குடும்பம்... என் வலைபக்கம் மூலம் அறிமுகம் ஆகி நட்புபாராட்டியதை இப்போது நினைத்தாலும் ஆச்சர்யமே...

நண்பர் மேஷாக் அவரது துனைவியார்மற்றும் அவரது பிள்ளைக்கு

எனது அன்பும் கனிவும்...

அதே போல் மேஷாக்கோடு தோள்கொடுத்து விருந்தோம்பிய... நண்பர் ஸ்டீபனுக்கும் அவரது குடும்பத்தினருக்கு எனது நன்றியும் வணக்கமும்... இரு குடும்பத்தினரும்... சென்னைவந்தால் இந்த ஜாக்கியின் வீட்டீற்க்கு வருகைதரவேண்டுமாய் கேட்டுக்கொள்கின்றேன்..

அன்புடன்
ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

(My Sassy Girl) உலக சினிமா/கொரியா... குடிகார காதலி


ஒரு சில பெண்கள் நம் வாழ்க்கையில் கடந்து போய் இருப்பார்கள்... அல்லது வாழ்நாள் முழுவதும் நம்முடனே வாழ்க்கை நடத்துவர்கள்... அவர்கள் என்னதான் தப்பு செய்தாலும் அவர்கள் மேடல கோபம் வரவே வராது.. பொதுவாக ஒரு சிலரிடம் அவர்களை பார்த்தாலே வயிற்று எரிச்சலாக இருக்கும்..
இத்தனைக்கும் அவர்களுக்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது... அவர்கள் அறிமுகம் கூட நமக்கு இருக்காது.. இருப்பினும் பயங்கர கோபம் வரும்... இத்தனைக்கும் அவர்கள் நமக்கு எந்த கெடுதலும் செய்து இருக்க மாட்டார்கள்..

மனதோடு கேள்வி கேட்கும் போது இந்த கேள்விக்கு மட்டும் விடை தெரியாமல் அந்த கேள்வி மட்டும் எடியுரப்பா கவெர்மெண்ட் போல் மலங்க மலங்க விழிக்கும்...ஆனால் இது உங்கள் எல்லோருடைய வாழ்க்கையிலும் நடந்து இருக்கும்.. உங்கள் மனது வெறுக்கும் ஒரு நபரை ஏதாவது ஒரு சூழலில் அவர் உங்களிடம் நட்பாக பேசி அவரை மட்டும் உங்களுக்கு பிடித்து விட்டால் அவ்வளவுதான் வாழ்நாள் முழுவதும் உங்களை யாரும் பிரிக்க முடியாத அளவுக்கு அந்த வெறுத்த நபருடன் அன்பு பாராட்டுவீர்கள்... இது நிச்சய்ம உங்கள் வாழ்க்கையில் நிகழ்ந்து
இருக்கும்.. யோசித்து பாருங்கள்...

அதே போல் ஒரு சிலர் செய்யும் தவறுகளை நாம் மன்னித்து கொண்டே இருப்போம்... அதற்க்கு காரணம் ரொம்ப சிம்பிள் அந்த நபரை நீங்கள் ரொம் ரொம்ப அதிகமாக நேசிக்கின்றீர்கள் என்று அர்த்தம்.. அது பிள்ளையாக இருக்கலாம் அல்லது மகளாக இருக்கலாம்... இவ்வளவு ஏன் நிங்க வளக்கற உங்க நாயா கூட இருக்கலாம்... அப்படி ஒரு குடிகார பெண்ணை ஒருவனுக்கு ரொம்பவும் பிடித்து போக அவன் படும்பாடுதான்.. மை சாசி கேள் எனும் கொரிய மொழி படம்...

My Sassy Girl கொரிய மொழி படத்தின் கதை இதுதான்........

அவன் ஒரு உருப்படாத பய வெகுளி...Gyeon-woo (Cha Tae-Hyun) ரொம்பவும் வெகுளி பழி பாவத்துக்கு அஞ்சுபவன்.. அவன் கல்லூரியில் படித்து கொண்டு இருக்கின்றான்... ஒரு நாள் இரவு ரயில் நிலையத்தில் நிறைய குடித்த ஒரு ஆழகான இளம் பெண்.. ரயில் வரும் போது பிளாட்பாரத்தின் முனையில் நின்று கொண்டு இருக்க எப்போது வேண்டுமானாலும் விழுந்து இறந்து விடுவாள் என்று இருக்கும் போது ஓடி போய் அவளை காப்பாற்ற... அதன் பிறகு அவள் வேதாளம் முறுங்கை மரத்தில் ஏறிய கதையாக... அவனது வாழ்வில் தொடர்ந்து குறுக்கிட்டு கொண்டே இருக்கின்றாள்.. அவள் செய்யும் ஒவ்வொறு செயலும் எரிச்சல் படம் பார்க்கும் நமக்கு ஏற்பட்டாலும்..அவனுக்கு மட்டும் அவள் மீது வெறுப்பு வரவேயில்லை..
அந்த பெண்ணிடம் நிறைய உதை வாங்கி கூட அவனுக்கு புத்தி வரவில்லை... அவள் நிறைய தவறுகள் செய்தாலும் அவளிடம் ஒரு பரிதாபம் கொண்ட காதல் இருப்பதை உணர்கின்றான்.. அவளை அவன் காதலிக்க தொடங்குகின்றான்... இருவரும் நடுவில் பிரிகின்றனர்.. திரும்பவும் ஒன்று சேர்த்தார்களா? என்பதை வெண்திரையில் காண்க..

(குறிப்பு) வழக்கம் போல் டிவிடி எங்கு கிடைக்கும் என்று தயவு செய்து கேட்காதீர்கள்....

படத்தின் சுவாரஸ்யங்களில் சில..

வாசக நண்பர் ராஜ்குமார் கேட்டுக்கொண்டதற்க்கு இணங்க இந்த படம்.. காரணம் இந்த படம் ஒரு ரோமான்டிக் காமெடி திரைப்படம்...

இந்த படத்தின் கதாநாயகன் படும் பாடுகளை நீங்கள் நினைத்து நினைத்து பார்த்து விழுந்து விழுந்து சிரிப்பீர்கள்..
இந்த படம் ஒரு அற்புதமான காதல் கவிதை என்றால் அது மிகையாகது..

இந்த படம் 2001ல் வெளியிடப்பட்டது..

இதே படத்தை ரீமேக்கி 2008ல் இதே பெயரில் ஹாலிவுட்டில் எடுத்து வெளியிட்டார்கள்..

இதே படத்தை இந்தியிலும் மல்லிகாஷெராவத் நடித்த அங்லி அவுர் பக்லி படத்தை அப்பட்டமாக எடுத்து இருப்பார்கள்..

இந்த படம் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கபட்டது..

இந்த படத்தின் கதாநாயகி பர்பி டால் போல் அழகாய் இருப்பாள்...
முதலில் இந்த படத்தின் கதாநாயகனை பிடிக்காமல் போக படம் 15 நிமிடம் கழித்து அவனை பிடிக்க ஆரம்பிக்கும்...

படத்தில் ரயிலில் வாந்தி எடுக்கும் சீனும் அதற்க்கு அங்கு நட்க்கும் காமெடி காட்சிகளும் அருமை...


படத்தின் டிரைலர்...



படக்குழுவினர் விபரம்...

Directed by Kwak Jae-yong
Produced by Shin Chul
Written by Kim Ho-sik
Kwak Jae-yong
Starring Jun Ji-hyun
Cha Tae-hyun
Distributed by Cinema Service
Release date(s) July 27, 2001
Running time 123 min.
137 min. (director's cut)
Country South Korea
Language Korean

அன்புடன்
ஜாக்கிசேகர்...
(குறிப்பு... பதிவுலகில் நிறைய பேர் திரைவிமர்சனம் எழுதுகின்றார்கள்... அனால் எனது தளத்தில்...உலகின் மிகச்சிறந்த படங்களை மட்டுமே பதிவர்களுக்கும் வாசகர்களுக்கும் அறிமுகபடுத்துகின்றேன்... சிறந்த படத்துக்கு மொழி ,நாடு வித்யாசமில்லை... ஒரு நல்ல படத்தை நான் உங்களுக்கு அறிமுக படுத்த 15 குப்பை படங்களை பார்த்து தொலைக்க வேண்டி இருக்கின்றது... அதற்க்கு நிறைய பணம் செலவழிக்க வேண்டி உள்ளது... எந்த படம் நல்ல படம்? என்று நான் தேடிய போது இது போன்று அறிமுகபடுத்த தளங்கள் அப்போது இல்லை... அது போல் வரும் தலைமுறை தட்டுதடுமாறக்கூடாது என்று நான் அதிகம் நேசிக்கும் சினிமாவை எனது தளத்தில் உலக சினிமா,உள்ளுர்சினிமாவில் தி பெஸ்ட் என்று பெயர் எடுத்த படங்களை மட்டும் எழுதி வருகின்றேன்... பின்னுட்டம் இட்டும ஓட்டு போட்டும் உற்சகபடுத்துவீர் என்ற நம்பிக்கையுடன்)

ஜாக்கிசேகர்

கணவர்களின் அலட்சியத்தை, குத்திக்காட்டும் அந்த விளம்பர படம்...

காதலிக்கும் போது காதலியை சுற்று சுற்று என்று சுற்றிக்கொண்டு இருக்கின்றோம்... அவளுக்காக பல கிலோமீட்டர் நடந்தே சென்று இருப்போம்... பொறுமையாக பத்து பக்கத்துக்கு மிகாமல் காதல் கடிதங்கள் எழுதி இருப்போம்... கண்ணே மணியே என்று கொஞ்சி இருப்போம்... இது காதலித்தவர்கள் மட்டும் அல்ல... திருமணம் ஆன புதிதில் பல கொஞ்சல்கள்... அழகாய் இருக்கின்றாய் என்று பொய் சொன்ன கணங்கள் எல்லோருடைய வாழ்க்கையிலும் நடந்த நிகழ்வுதான் இது....

ஆனாலும் காதலித்த போது காத்த பொறுமை.. திருமணத்துக்கு பிறகு நம்மில் பலருக்கு இருப்பதில்லை...பொதுவாக பெண்கள் எப்போதும் ஆண்களை மைக்கில் ஹலோ டெஸ்ட்டிங்..123 என்பது போல் நீ என்னை காதலிக்கின்றாயா? காதலி்க்கின்றாயா ? என்று கேட்டபடியே இருப்பார்கள்.. ஏனென்றால் கணவன் தன்னை மட்டும் நேசிக்க வேண்டும் என்ற பேராசைதான்.. காரணம் அவளோடுதான் மணிக்கணக்காக செலவிட வேண்டும் என்ற எண்ணமும் நிறைய பேச வேண்டும் என்று மனைவிகள் விருப்பம் கொள்கின்றார்கள்...

காதலிக்கும் போது நிறை பேசனிங்க... இப்ப எதுவுமே பேசவில்லை என்ற ஆதங்கம் அதிகம் எல்லா பெண்களுக்கும் உண்டு.. காரணம்... காதலியை வீட்டுக்கு தெரியாமல் இரண்டு் மணி நேரம்தான் பார்க்க முடியும் எனும் போது மனதில் உள்ள எல்லாவற்றையும் கொட்டி விடுகின்றோம்... ஆனால் திருமணத்துக்கு பிறகு 24 மணி நேரமும் அவளோடு செலவிடும் போது பேச்சு குறைந்து விடுகின்றது...

இது போன்ற ஒரு பெண்ணின் ஏக்கத்தை மிக அழகாக காதலுடன் பதிவு செய்த இந்த விளம்பரம் மிக அற்பதமான காதலையும் .. நேசிப்பையும் சொல்வதால் இந்த விளம்பர படம் எனக்கு மிகவும் பிடிக்கும்

அந்த அழகான 3 ரோசஸ் டீ விளம்பரம்...



கணவன் பேப்பர் படித்து கொண்டு இருக்கின்றான்... சுவாதியோட டாகியை பார்த்திங்களா, என்று கேட்டபடி வரும் மனைவி நாயை பற்றி அதன் பிள்ஸ்களை பற்றி சொல்லிக்கொண்டு வரும் போது கணவணுக்கு டீயை கலந்து கொடுக்கின்றாள்... அவனிடம் அவள் பேசிக்கொண்டு இருக்கும் போது அவள் சொல்வதை கேட்காமல் பேப்பர் புரட்டிக்கொண்டு இருக்கின்றான்... நாய் நம்மோடு இருக்கும் வீட்டை காக்கும் என்று சொல்லும் போது... கணவன் அப்புறம் என்று கேட்க... அது ஆபிஸ்ல இருந்து லேட்டா வராது என்று சொல்லும் போது கணவன் தன் தவற்றை உணர்ந்து.. தான் திருந்த ஒரு வாய்ப்பு கேட்க.. அவள் சரி என்று சொல்லும் போது இருவரும் காதலுடன் சிரிக்கின்றார்கள்... அதை விட இந்த விளம்பர படத்தில் நடித்த இந்த பெண்ணின் கண்கள் அவ்வளவு அழகு... அது அபிஸ்ல இருந்து லேட்டா வராது என்று சொல்லி விட்டு அதற்க்கு அடுத்து அந்த பெண்ணுக்கு கொடுத்த குளோசப்களில் அந்த பெண் சிக்கசரும் பவுண்டிரியும் அடித்து ஆடுவது போல் எக்ஸ்பிரஷன் கொடுத்து இருப்பார்.... அதை விட முக்கியம் இதன் இசை... மனதை மயக்கும் இந்த இசையை எப்போது வேண்டுமானாலும் கேட்டுக்கொண்டு இருக்கலாம்...

52 செக்கன்டுகளில்.. குடும்ப பெண்களின் தனிமையையும் ஏக்கத்தையும் சொல்லி இருக்கும் இந்த 3 ரோசஸ் டீ ,விளம்பர குழுவுக்கு எனது ராயல் சல்யுட்கள்.... இவர்களின் இன்னோரு விளம்பரம்... மனைவிக்கு ஐலவ்யூ சொல்வதான அந்த விளம்பரம் எமது அடுத்த பதிவில்...

இந்த விளம்பர படத்தின் ஒளிப்பதிவாளர், இயக்குனர் இசையமைப்பபாளர் போன்ற தகவல்களை படிப்பவர்கள் பின்னுட்டம் வாயிலாக தெரிய படுத்த வேண்டுகின்றேன்... அது எனக்கு அடுத்து பதிவை வாசிப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாய் இருக்கும்
நன்றி

அன்புடன்
ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

(WRONG TURN) மனித மாமிசம் சாப்பிடுபவர்கள்....

மனித மாமிசம் சாப்பிடுவது காலம் காலமாய் நடந்து வருகின்றது... இதை சாக்காக வைத்து பல படங்களை எடுத்து ஹாலிவுட்காரர்கள் நமது முதுகை ஜில்லிட வைத்து இருக்கின்றார்கள். இந்த படமும் அந்த வகையை சார்ந்ததுதான் என்றாலும், மக்களின் வரவேற்ப்பை பெற்றபடம் இது என்பது குறிப்பிட்டதக்கது...
(WRONG TURN) படத்தின் கதை இதுதான்....

மேற்கு வெர்ஜினியா மலைபகுதி பக்கம்Chris Flynn (Harrington) தனது வேலை விஷயமாக போய் கொண்டு இருக்கின்றான்... நடுவில் நமது சரோஜா படத்தில் வருவது போல கெமிக்கல் லாரி இரண்டும் விபத்துக்குள்ளாகி இருக்க, தனது பயணப்பாதையை மாற்றி வேறு பாதையில் செல்ல ,அங்கு அவனுக்கு சிறு விபத்து ஏற்படுகின்றது.. அந்த விபத்தின் போது அங்கு ஒரு நண்பர் குழுவை சந்திக்கின்றான்...

அவர்கள் வந்து வாகனம் ஒரு முள் கம்பியில் சிக்கி் பஞ்சர் ஆகி விட ,அவர்களுடன் இவனும் இனைந்து கொள்ளும் போது சட் சட்டென காணமல் போக காரணத்தை ஆராயும் போது, அவர்கள் ஒரு நர மாமிசம் சாப்பிடும் ஒரு அங்க குறைபாடு உள்ள மனிதர்களிடம் மாட்டிக்கொள்ள... அங்கிருந்து எத்தனை பேர் உயிரோடு வந்தார்கள் என்பதை படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்..
படத்தின் சுவாரஸ்யங்களில் சில...

முதல் காட்சியி்லேயே மலை ஏறும் இரண்டு காதலர்கள் கொடுரமாக இறக்கும் போதே படத்தின் மீது விறு விறுப்பு வந்து உட்கார்ந்து கொண்டு விடுகின்றது....

அதே போல் வழக்கம் போல் இது போன்ற படத்தின் மிகப்பெரிய சுவாரஸ்யம் அழகான பெண்கள்... இந்த படத்திலும் லட்டு கணக்காக பொறுக்கி போட்டு இருக்கின்றார்கள்...

கட்டிலுக்கு அடியில் மறைந்து இருக்கும் போது இவர்கள் நண்பர்கள் கூட்டத்தை சேர்ந்த பெண்ணை கொடுரமாக கொலை செய்து, மறைந்து இருப்பவனின் முகத்துக்கு அருகில் அவளை கிழே போட்டு அவளின் ரத்தம் அவனின் கை வரை செல்லுவது சிறப்பான படபடப்பான காட்சி...

அதே போல் ஒரு போலிஸ் உதவி கிடைத்த்து விட்டது என்று கதாபாத்திரமும், படம் பார்க்கும் நாமும் நினைக்கையில்... அந்த டுவிஸ்ட் வழக்கமாக இது போன்ற படங்களில் பார்த்து இருந்தாலும், அந்த டுவி்ஸ்ட் ரசிக்க தக்கதாக இருந்தது...


மற்றவைகளை படம் பார்த்து கொள்ளுங்கள் இல்லையேல் சுவாரஸ்யம் போய்விடும்..
பொதுவாக தமிழக மக்கள் வீடியோ லைப்ரேரியில் போய் படம் பேர் சொல்லாமல் ஒரு திகில் படம் கொடுங்க என்று சொல்லுவார்கள்... அந்த வகையில் இந்த படத்தின் பேர் சொல்லி கேட்டு வாங்கி பாருங்கள் ஏமாற்றாது...

இந்த படத்தின் அடுத்த பாகங்கள் நேரம் கிடைக்கும் போது,

படத்தின் டிரைலர்...


படக்குழுவினர் விபரம்...
Directed by Rob Schmidt
Produced by Stan Winston
Brian Gilbert
Erik Feig
Robert Kulzer
Written by Alan B. McElroy
Starring Desmond Harrington
Eliza Dushku
Emmanuelle Chriqui
Music by Elia Cmiral
Cinematography John S. Bartley
Editing by Michael Ross
Studio Regency Enterprises
Summit Entertainment
Constantin Film
Newmarket Capital Group
Distributed by 20th Century Fox (All US rights, UK DVD)
Pathé (UK theatrical)


Summit Entertainment (non–USA)
Release date(s) May 30, 2003
Running time 84 minutes
Country United States
Language English
Budget $12,600,000
Gross revenue $28,650,575 (worldwide)
Followed by Wrong Turn 2: Dead End

அன்புடன்
ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner