சென்னையில் பட்டம் விடும் எமன்கள்...





பொதுவாக வட சென்னையையும் தென்சென்னையையும் பற்றி சென்னைவாசிகள் கருத்து என்னவெனில் பாரிஸ்கார்னருக்கு இந்த பக்கம் அதாவது தென் சென்னை பக்கம் யாராவது தெரியாமல் இடித்து விட்டால்.. அவர் உடனே உங்களிடம் மன்னிப்பு கேட்பாரென்றும்.. அதுவே பாரிஸ்கார்னருக்கு அந்த பக்கம் அதாவது வடசென்னை ... யாராவது உங்களை இடித்து விட்டால் அவர் மீது தப்பு இருந்தாலும்...“ங்கோத்தா பாத்து போகமாட்டே” என்ற விதத்தில் கேள்விகள் இருக்கும்.... என்றும் பொதுவாய் சொல்லுவார்கள்... எதாவது ஒரு இடத்தில் யாராவது ஒரு வனுக்கு ஒரு ரவுடியின் அறிமுகம் இருக்கும்..

பல லட்சக்கனக்கான பொருட்கள் விற்பனையாகும் இடம் கட்டபஞ்சாயத்தில் இருந்து, கைகால் எடுப்பதுவரை அனுதினமும் அவர்களுக்கு வேலை இருந்து கொண்டே இருக்கும்... அதே போல் துறைமுக சரக்கு என்று பல கோடி ரூபாய் கை மாறும் இடம்... இன்னும் மகாகாவி பராதியார் நகரெல்லாம் சென்றால் மெயின் ரோட்டில் குடுத்தனம் நடத்துவர்ர்கள்...யாரையும் கேள்வி கேட்க முடியாது... தென் சென்னையிலும் சில பகுதிகள் இருக்கின்றன....

பட்டம் விடுவது என்பது தென் சென்னையை காட்டிலும் வட சென்னைவாசிகள்தான் அதிகம்.... முன்பு மெரினாவில் அதிகம் பட்டம் விட்டு கொண்டு இருந்தார்கள்... அது பல பேருடைய கழுத்தை பதம் பார்த்து பலர் மரணம் அடைந்தார்கள்....
போலிஸ் கயிறு அறுத்து செத்து போனா யாரை போய் அரேஸ்ட் செய்வது என்று போலிஸ் மெரினாவில் பட்டம் விட தடை செய்தது...

வட சென்னையில் பட்டம் விடுவது என்பது பந்தயம் வைத்து நடத்தபடுவதால் யார் மாஞ்சா பெஸ்ட்ன்னு சொல்ல பக்கவா தயாரிக்கறாங்க... போட்டி அதுலயும் பணம்னு வந்துட்ட பிறகு... பொது மக்களோட உயிராவது மயிறாவது என்று அலட்சியமாக இருக்கின்றனர்....

ஆனால் வட சென்னையில் குடியிருப்பு பகுதியில் மாஞ்சா தடிவிய நூலில் பட்டம் விட்டு அது அறுத்து்கொண்டதும் அந்த நுாலை இவர்களால் எடுக்க முடியாது அது பைக்கில் வருபவர் கழுத்தை சடுதியில் அறுத்து விடுகின்றது...

பொதுவாய் அது போன்ற மாஞ்சா நூல்கள் கண்ணுக்கு எளிதில் தெரிவதில்லை.. அதனால் சட்டென அறுத்து விடும்... நன்றாக யோசி்த்து பாருங்கள் வீட்டில் காய்கறி வாங்கி வரேன்னு போனவன் கழுத்து அறுந்து திரும்பி வந்தா எப்படி இருக்கும்...? அப்படித்தான் சென்னையில் நடந்து கொண்டு இருக்கின்றது

நேற்று கூட வெட சென்னையில் பட்டம் விட்ட பதினைஞ்சு பேரை பிடித்து எச்சரித்து அனுப்பி இருக்கின்றது... காவல் துறை...

மெரினாவில் குடும்பத்துடன் பைக்கில் வந்த ஒரு வரின் கழுத்தை மாஞ்சா நூல் பதம் பார்த்து அப்புறம் அவரின் காதை லேசாக கிள்ளி எடுக்க அவரின் மகள் நன்றாக பேசிக்கொண்டு வந்த அப்பா திடிர் என்று ரத்தம் வந்து தனது அப்பா துடிப்பதை பார்த்து பெருங்குரெலெடுத்து அழுத போது நான் அவளை சமாதானம் செய்ய முடியாமல் தவித்தேன்....

பொதவாக சென்னையில் எந்த இடத்திலேயும் பட்டம் விட தடை வி்திக்க வேண்டும் பைக்கில் போகும் போது மாஞ்சா நூல்தான் கழுத்தை அறுக்கும் என்பது அல்ல உங்கள் கழுத்தை அறுக்க சாதாரண நூலே போதும்...

அதே மெரினா.. என் மனைவியோடு ஏதோ ஒரு சண்டை பைக்கில் வந்து கொண்டு இருந்தோம்... நான் கேட்ட எந்த கேள்விக்கும் அவள் பதில் சொல்லமல் அமைதியாக வர கோபத்தில் பின்புறம் திரும்பி வண்டி ஓட்டிக்கொண்டே ஒரு அடி அவளை அடிக்க...
அவள் கத்துவதுக்கு பதில் நான் கத்திக்கொண்டு இருக்கின்றேன்...

என் மனைவி இந்த ஆள் அடித்ததுக்கு நாம அழாம இந்த ஆள் எதுக்கு இப்படி கத்தறான்னு தெகச்சு போய் பார்த்தா.... என் கழுத்துல மாஞ்சா கயிறு லேசா ரத்தம் பார்த்து இருக்க... அவ பதற நான் பதற... துரத்தில் கயிறு எடுக்க ஓடி வந்த சில தடிமாடுகளை...கோபத்தில் ங்.......தே...... பசங்களா என்று நான் கத்தி கொண்டு நான் ஓட ....அவர்கள் பின்னங்கால் பிடறியில் அடிக்க எங்கு ஓடினார்கள் எப்படி ஓடினார்கள் என்று தெரியவில்லை...

இப்போது எல்லாம் என் மனைவியை கோபத்தில் அடிப்பதே இல்லை... அப்படியே அவளை கோபத்தில் அடிக்க நினைத்தாலும், மேலே கிழே சைடு எல்லா பக்கமும் பார்த்துக்கொண்டு கொஞ்சம் முன்னெச்சிரிக்கையாகவே இருக்கின்றேன்....


அன்புடன்
ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

(Road Trip: Beer Pong..2009) 18+ ஹாலிவுட் காதல்கள்...

பொதுவாக ஹாலி வுட்டில் இது போன்ற படஙகள் குறைந்த முதலீட்டில் நிறைய லாபம் சம்பாதித்து தரும் படங்கள் இவை... இந்த படங்களுக்கு பெரிய கதை என்று பார்த்தால் எதுவும் இல்லை..

திரைக்கதையில் ஏதாவது ஒரு இடத்தில் பயணம் மேற்கொள்வது போல் காட்சிகளை அமைத்து அந்த... பயணத்தின் ஊடே நடக்கும் பிரச்சனைகளை அழகான பெண்களை வைத்து காமெடியாக சொல்வதுதான் இவர்கள் ஸ்டைல்...
இந்த படங்களுக்கு எதுவும் இலக்கணம் வரையறை போன்ற எதுவும் கிடையாது... அவர்கள் சி்ரிக்க வைக்க எந்த எக்ஸ்டிரிமுக்கு போக கூடியவர்கள்...




காமெடி என்ற ஒற்றை வார்த்தையை மட்டும களம் இறங்கி இருக்கும் இந்த படத்தின் கதை என்ன என்று பார்ப்போம்...

Road Trip: Beer Pong படத்தின் கதை இதுதான்....

Andy (Preston Jones) கல்லூரியில் படித்து கொண்டு இருப்பவன் அவனுக்கு Katy (Julianna Guill) எனற் பெண்ணை 5 வருடமாக காதலித்து கொண்டு இருக்கின்றான்... அனாலும் அவனுடைய முன்னாள் பெண் நண்பிபீர் பான்ங் மாடல் பெண் மீது காதல் வர பீர் பான்ங் போட்டி நடக்கும் இடத்தில் அந்த மாடல் பெண்ணை காதலி இருக்கும் போதே தனது நண்பர்களுடன் சென்று சந்திக்க முடிவு செய்கின்றான்...
போவதற்க்கு பணம் ஆரஷ் என்ற நண்பனிடம் கேட்கலாம் என்று அவன் வீடு போகின்றார்கள்... ஒரு கட்டத்தில் அரஷ்ம் அவர்களோடு இணைய... அவர்கள் போட்டி நடக்கும் இடத்திற்க்கு செல்வது எப்படி என்பதை காமெடியோடு சொல்லி இருக்கின்றார்கள்....

படத்தின் ஸ்வாரஸ்யங்களில் சில...

பீர் பான்ங் டோர்னமென்ட் என்றால் என்ன தெரியுமா.. ஒரு மேஜைக்கு ரெண்டு பக்கமும், சத்தியம் தியேட்டர்ல 50 ரூபாய் வாங்கி அபிட்டு விட்டுக்குனு500 எம் எல் பெப்சி புடிச்சு தருவாங்களே அது போல கப்புங்களை மேஜைக்கு ரெண்டு பக்கமும் முக்கோண வடிவத்துல வச்சி அதில பீர் ஊத்தி வச்சி இருப்பாங்க... கையில இருக்கற சின்ன பாலை எடுத்து எதிர்ல இருக்கற கப்புல போட்டுட்டா அந்த பாலை எடுத்து கொடுத்துட்டு பீரை கூடி்ச்சிடனும்.. பாலை கரெக்டா போட்டவனுக்கு ஒரு பாயிண்ட்... இதுதான் விளையாட்டு...


பழைய ரோட் டிரிப் படத்தை பார்த்து இருப்பவர்களுக்கு இந்த படத்தின் திரைக்கதையின் மீது கவணம் செலுத்தாமல் பெண்கள் மீது கவணம் செலுத்தலாம்...

படம் துழுவதும் பல பெண்கள் திறந்த மார்பகத்துடன் தரிசனம் தருகின்றார்கள்... எல்லாம் அழகான பெண்கள்..

ஒரு இந்திய கேரக்டர் ஆரெஷ் என்று உருவாக்கி நமது நாட்டு மானம் கப்பலேறி போகின்றது...

ரோட்டில் போகும் போது வழியில் ஒரு பெண்ணை எற்றிக்கொள்ள அந்த பெண் ஒரு டிப்பார்ட்மென்ட் சென்டரில் கொள்ளை அடிக்க அந்த உரிமையாளர் துப்பாக்கியுடன் அவர்களை துரத்த தண்டைக்கானோம் துணியை கானோம் என ஓடுவது ரசிக்கதக்க காட்சிகள்...

இன்னும் படத்தில் பல காட்சிகள் இருந்தாலும் சொன்னால் படம் பார்க்கும் போது சுவாரஸ்யம் போய் விடும்.. ஆதமட்டும் அல்ல அதனை எழுத்தில் எழுத முடியாத அளவுக்கு விஷயம் இருக்கின்றது....

படத்தின் கடைசி காட்சி நமது தமிழ்படத்தை ஞாபகபடுத்துவதை தவிர்க்க முடியவில்லை...
பரங்கிமலை ஜோதியில் ஒரு ஜாக்கெட் ஹுக் அவுக்க அரைமணிநேரம் அகும்..... இந்த படத்தில்
மெயின் கேரக்டரில் நடித்த இரண்டு பெண்களை தவிர பல பெண்கள் கவலை படாமல் வஞ்சனை இல்லாமல் படார் படார் என்று தங்கள் மார்பக்த்தை காட்டுகின்றார்கள்...

அருவருப்பு என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பார்கள்... அப்படியே கேட்டாலும் அப்பிடின்னா இன்னா நைனா என்கின்றார்கள்... இங்கே இது போன்ற படங்கள் வர வெகு நாட்கள் ஆகும் அப்படியே வந்தாலும்.. 18 + என்ற சென்சார் சர்டிபிகேட் கொடு்த்தாலும்.... சில கட்சிகள் கலாச்சார காவலனாய் தன்னை திடிர் என்று மாற்றி கொண்டு பேனர் கிழிக்கும்...எதாவது ஒரு பத்திரிக்கைஒற்றை எழுத்தில் சீக்கு பதிலாக தூ என்று விமர்சனம் பண்ணும்....
ஆனால் இதே விஷயம் தமிழ்நாட்டில் இல்லையா இருக்கின்றதே.... நாம் நமது கிராமிய கலையான கூத்தில் கெட்டிக்காரன் என்பவன் சொல்லாத, செய்யாத எந்த விஷயத்தையும் இந்த படத்தில் அவர்கள் சொல்லவில்லை... இதை விட காமெடி என்னவென்றெல்... குடும்பத்துடன் எந்த வித சென்சார் கட்டுபாடும் இல்லாமல் பார்க்கின்றார்கள்... அது மட்டும் இல்லாமல் மாரியம்மன கோலில் செடல் திருவிழாவில் மழை டான்ஸ் என்று ஒன்று நடத்துகின்றார்கள்... அந்த வீடியோ பார்த்த போது தமிழ்நாடா.. என்று ஆச்சர்யம் கொள்ள வைக்கின்றது..எத்தனை சின்ன பசங்கள் அதனை பார்ப்பார்கள் தெரியமா? நம் வேஷத்தின் வெளிவடிவம் அவைகள்தான்...


படத்தின் டிரைலர்...

0);">படக்குழுவினர் விபரம்...

Directed by Steve Rash
Produced by Suzie Peterson
Written by Brad Riddell
Starring Preston Jones
Michael Trotter
Daniel Newman
Julianna Guill
Cinematography Levie Isaacks
Editing by John Gilbert
Studio Paramount Famous Productions
Distributed by DreamWorks Pictures
Release date(s) August 11, 2009 (2009-08-11)
Running time 95 minutes
Country United States
Language English
Preceded by Road Trip

அன்புடன்
ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

(THE CYCLIST) உலக சினிமா/ ஈரான்... மனதில் பாறாங்கல்லை ஏற்றி வைக்கும் இந்த படம்


மருத்துவ வசதி என்பது நாம் வாழும் நாட்டில் எல்லோருக்கும் சரிக்கு சமமாக கிடைக்க வேண்டும்.. ஆனால் அது எல்லா நாட்டிலும் கிடைக்கின்றதா என்றால் இல்லை எனலாம்... ஒரு சாமானிய குடிமகனுக்கு அவன் குடும்பத்துக்கும் நல்ல மருத்துவசதி கிடைப்பதில்லை என்பது நெஞ்சில் கை வைத்து பார்த்தால் அனைவருக்கும் தெரியும்...

நமது மத்தியமைச்சருக்கு ஒருவருக்கு ரொம்பவும் உடல்நிலை சரியில்லாமல் போக அவருக்கு தனி விமானம் வைத்து அமெரிக்கா போய் வைத்தியம் பார்த்தார்கள்.. அப்புறம் அந்த செலவை அரசு கொடுப்பதாக சொல்ல, அந்த தொகை வேண்டாம் என்று அவர் குடும்பம் மறுத்து விட்டது... சரி பல் இருக்கறவன் பட்டானி சாப்பிட்டு விட்டான் இல்லாதவன் என்ன செய்வான்...????

எங்கள் வீட்டில் யாருக்கு ஜுரம் வந்தாலும் சரியாக இரண்டு நாள் என் அம்மா கை வைத்தியம் பார்ப்பாள்அதன் பிறகும் ஜுரம் விட வில்லை என்றால்... நேராக நடத்தியே அழைத்து போய் பஸ் ஸ்டாண்டில் நிக்க வைத்து,..... ஜுரத்தில் துடித்து்கொண்டே பஸ்சுக்கு காத்து இருந்து... அதன் பிறகு பஸ் வந்ததும் கூட்டத்தில் ஏறி நின்று கொண்டே.. கடலூர் கூத்தப்பாக்கத்தில் இருந்து ஏறி.. கடலுர் போஸ்ட் ஆபிஸ் ஸ்டாப்பில் இறங்கி.. அப்படியே நடந்தே பெரிய ஆஸ்பத்திரிக்கு போய்... ஒபி சீட்டுக்கு வரியையில் காத்து இருந்து... அதன் பிறகு சம்பந்த பட்ட டாக்டர் எந்த வார்டில் இருக்கின்றான்றாரோ... அவரை பார்க்க... அங்கும் ஒரு பெரிய கியுவில் நின்று...கால் கை உடைந்து ரன வேதனைகளுடன் வீல் சேர்களில் கடக்கும் அதிகபடியான நோயாளிகளை பார்த்து...ஒரு வழியாக டாக்டரை பார்த்து அவர் ஒரு ஊசி போட்டு மாத்திரை எழுதி வைக்க அந்த மாத்திரை வாங்க அடுத்த பிளாக்கு நடந்தே போய் அங்கு ஒரு பெரிய கூட்டம் காத்து இருக்கும்...


ஏனென்னறால் பல்வேறு நோய்களுக்கு மாத்திரை பெற பெரும் கூட்டம் அங்கு இருக்கும்.....அந்த பெரிய கியுவில் போய் மாத்திரை வாங்கி திறந்து பார்த்தால் த/அ என்ற போட்டு இருக்கும்... எல்லா வெள்ளை மாத்திரையும் ஒரே மாதிரி வேற இருக்கும்.... அதன் பிறகு எனது அம்மா என்னை ரோட்டில் உள்ள டீக்கடைக்கு அழைத்து வந்து ஒரு டீ வாங்கி கொடுப்பார்கள் அது கூட மாத்திரை போடுவதற்காக... அந்த மாத்திரை போடும் முன்னே இந்த அலச்சலில் அந்த விஷஜுரம் காணாமல் போய் இருக்கும்...

நான் என் சிறு வயதில் எந்த தனியார் மருத்துவமனைக்கு சென்றதில்லை... எல்லாவற்றிர்க்கும் எங்கள் கடலூர் பெரிய ஆஸ்பத்திரிதான்....
இவ்வளவு ஏன்.. நான் மட்டும்தான்.. பண்ரூ்ட்டி கடலூர் சாலையில் உள்ள இந்திரா நர்சிம் ஹோமில் பிறந்தேன்..

அதன் பிறகு எனக்கு நாலு தங்கைகள்.. எல்லோரும் அரசு அஸ்பத்திரியில் பிறந்தார்கள்... ஆனால் இப்போது ஜுரம் என்றால் உடனே ஆட்டோ பிடித்து விடுகின்றோம்... அடுத்த நொடி டாக்டர் வீட்டு வாசலில் இருக்கின்றோம்....என் அம்மா அப்படி இல்லை... வறுமை ஒரு காரணமாக இருந்தாலும்.. வந்த ஜுரத்துக்கு போக தெரியும் என்ற நம்பிக்கை ஒரு காரணம்....

அப்படி வறுமையில் இருக்கும் ஒருவன் தன் மனைவிக்கு உடல் நிலை சரியில்லாமல் ஒரு பிரவேட் ஆஸ்பத்திரியில் சேர்க்க அவன் படும் பாடுதான்...

தி சைக்கிளிஸ்ட் படத்தின் கதை ....

தி சைக்கிளிஸ்ட் படத்தின் கதை இதுதான்....

நசிம் ஒரு ஆப்கான் அகதி... ஈரானில் இருக்கும் அவன் குடும்பம் வறுமை அரக்கன் அந்த குடும்பத்தை சுற்றி வளைத்து வெகு நாள் ஆயிற்று... அவ்ன் ஒரு சைக்கிளிஸ்ட்.. அதாவது சைக்கிளை நிறுத்தாமல் ஒரு சின்ன வட்டத்தில் விடாமல் ஓட்டிக்கொன்டே இருக்க வேண்டும்... ஏற்க்கனவே மூன்று நாட்கள் விடாமல் சைக்கிள் ஓட்டியவன்....

அவள் மனைவிக்கு உடம்பு முடியாமல் போக அவளை ஒரு தனியார் மருத்துவமைனையில் சேர்க்கின்றான் ... அங்கு அவளுக்கு மருத்துவம் பார்க்க, தங்க, பணம் கட்டினால்தான் எல்லாம் நடக்கும் என்று சொல்ல பணத்துக்கு தன் மகனுடன் அலைய.... ஒரு கட்டத்தில் தற்கொலைக்கு முயற்ச்சிக்க, பின்பு கடத்தல் வேலை செய்து கொஞ்சம் காசு பார்க்கலாம் என்றால் அதுவும் முடியாமல் போக...

இந்த முறை ஒரு வாரத்துக்கு விடாமல் சைக்கிள் ஓட்ட சம்மதிக்க.. அதன் மூலம் அவனுக்கு பணம் வந்ததா? அவன் மனைவிக்கு மருத்துவ உதவிகள் கிடைத்தா? எல்லவற்றையும் விட முக்கியமான விஷயம் நசிம் ஒரு வாரம் ரெஸ்ட் இல்லாமல் சைக்கிள் எப்படி ஓட்டினான்.. எப்படி ஓட்ட முடியும்??? மீதி வெண் திரையில் பார்க்கவும்...

படத்தின் சுவாரஸ்யங்களில் சில....

எந்த கலர் உடுப்பும் போட்டு ஜிங்கு ஜிங்கு என்ற குதி்க்காமலேயே... இந்த படம் மனதில் பதிவது இந்த படத்தின் சிறப்பு..

ஒரு நல்ல படத்துக்கு எந்த பெரிய தொழில்நுட்பம், இசை போன்ற எதுவும் தேவையில்லை என்று நிரூபித்த படம் இது...

கதை நன்றாக இருக்க வேண்டும் அந்த கதையை திரைக்கதையால் மனதை புழிய வேண்டும் அதை இயக்குனர் மெக்மெல்பப் நன்றாகவே செய்து இருக்கின்றார்...

மருத்துவமனையில் படுத்து இருக்கும் மனைவி ஆக்சிஜன் இல்லாமல் தவிக்க உயிர் போய் விடும் பயத்தில் அந்த ஆக்சிஜன் மாஸ்க்கை எடுக்க போராடும் போது... இங்கே கவுண்டரில் அவன் பையன் பணம் கவுன்டரில் கட்ட பணம் கிடைத்ததும் அந்த கிழவன் ஒரு போன் போட அதன் பிறகு ஒரு கை அந்த ஆக்சிஜன் மாஸ்க்கை பொறுத்துவதும்.. அதன் பிறகு சலைன் ஏற்றுவதும் .. உலகில் எல்லா தனியார் மருத்துவமனைகளும் அப்படித்தான் இருக்கின்றது போலும்...

பணம் சம்பாதிக்க நசிம் எடுக்கும் முயற்ச்சிகளும் அதன் தோல்வியும் மனதை கனக்கச்செய்யும்.. நசிமாக நடித்து இருக்கும் அந்த பாத்திரத்தின் பரிதாப முகம்தான் இந்த படத்தின் வெற்றி...

இந்த படத்திக் இயக்குனம் மெக்மெல்பப் இயக்குனர் ,தயாரிப்பாளர் எழுத்தாளர் என் பன்முக திறமை கொண்டவர்...இவர் ஆசியன் பிலிம் அக்காடமியில் பிரசிடென்டாக இருந்து இருக்கின்றார்...

இந்த படம் ஹவாய் பிலிம் பெஸ்ட்டிவலில் சிறந்த படத்துக்கான விருதை பெற்றது...

படம் பார்க்கும் போது உங்கள் கண்களில் இருந்து கண்ணிர் பெருக்கெடுக்க வைக்கும் ..


படக்குழுவினர் விபரம்...
Starring: Moharram Zaynalzadeh, Esmail Soltanian, Samira Makhmalbaf

Director: Mohsen Makhmalbaf

அன்புடன்
ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

அழுதா மனசு தாங்காதே.....


கடற்கரை எங்கும்
நம் இருவரின் கால்பதித்த
தடயங்கள்
தேடிக்கொண்டு இருக்கின்றேன்...

சிக்னலில்
சட்டென சீறிப்பாயாமல்
நீ இருப்பதாய் நினைத்து
நிதானமாய் கிளப்புகின்றேன்...

நீ
இல்லாமல் சத்தியமாக,
சத்தியம் தியேட்டர்
செல்லவில்லைநான்...

மாதத்துக்கு இரண்டு
கோட்டா உண்டு என்றாலும்...
எதையும் தொடவில்லை
உன்னிடம் கெஞ்சி
திட்டு வாங்கி குடிப்பதில்
ஒரு கிக் இருக்கத்தான் செய்கின்றது...

உனை மறக்க
மெரினாவில் தனியாய்
காற்றுவாங்குகையில்...
சுக்கு காபி விற்பவன்
அக்கா எங்கே? என்று கேட்கின்றான்....
போங்கடா நீங்களும் உங்க பாசமும்...


அடித்தொண்டையில்
கசக்கும் அளவுக்கு
காபி சாப்பிட்டு வெகுநாள் ஆயிற்று....

வண்டியில் போகும் போது
காற்றில் துணி விலகி
இடுப்பு தெரியும் பெண்ணை,
நீ கடிப்பாய், கிள்ளுவாய் என்ற
பயம் இல்லாமல்
தைரியமாக பார்க்கின்றேன்....

மழையில் இரண்டுநாளாய்
நனையும் உள்ளாடையும்,
போட்டது போட்டபடி
வீடு முழுவதும் கிடக்கும்
ஒழுங்கற்ற பொருட்கள்
உன் பிரிவை தெரிவிக்கின்றன...

விரைந்து வந்து விடு...
என் உடம்பில் பசலை
படர்வதை நானே உணர்கின்றேன்....

ஸ்வீட் ஹார்ட்,
பட்டு,
செல்லம்,
ஐலல்யூ,
நான் உன்னை மிஸ் பண்றேன்,என்று ...
ஆயிரம் முறை சொல்லியாகிவிட்டது
வெப்கேம் எதிரே....
எப்படி சொன்னாலும்
தோள் உரச,
கடற்கரை மணலில்
நடப்பதற்க்கு ஈடாகுமா? அது...

“நுயூயார்க் நகரம் உறங்கும்” பாடலை நான்
தமிழ்நாட்டில் கேட்டால்
நீ அயர்லாந்தில் அழுகின்றாய்..

சட்டென கண்ணில் ஜலம்
வைத்துக்கொள்கின்றாய்...
வெப்கேமில் வெடிக்கை
பார்பதைவிட
என்ன செய்து விட
முடியும் என்னால்.....


எனக்குசென்னை சற்றே
அழகு குறைவாய்
காணப்படுகின்றது...
அயர்லாந்தும்
அப்படியே இருக்கின்றதாய்
நீ தினமும் சொல்வதில்
இருந்து அறிகின்றேன்...


நேரில் வா...
கடந்து போன காலங்களை
தேடிப்பிடித்து
வட்டியும் முதலுமாய் கொண்டாடுவோம்...



(முதல்வருட திருமணநாளின் போது வெப் கேம் எதிரே காதலுடன் அழுத மனைவியின் கண்ணீரை துடைக்க முடியாமல் தவித்த கணவனின் விசும்பலின் வெளிப்பாடுகள்... மேலுள்ளவை...)


அன்புடன்
ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

எனது மூன்றாவது குறும்படம் “பரசுராம் வயது 55... செலவு ரூபாய் 850 மட்டுமே...

அறிவிப்பு....
படத்தின் கால அளவு 20 நிமிடங்கள்...அதனால் 20 நிமிடம் செலவு செய்ய தயார் என்றால் பார்த்து கருத்து கூறுங்கள்...


பரசுராம் வயது 55... இது எனது மூன்றாவது குறும்படம்... பொதுவாக உங்களில் ஒரு கேள்வி கேட்கலாம்.. எப்படி ரூபாய் ஆயிரத்துக்குள் ஒரு குறும்படம் எடுப்பது சாத்தியம்...

முதலில் கேமரா எனது சொந்த கேமரா... இரண்டாவது எனது கம்யூட்டரில் அல்லது நண்பர்களை வைத்து எடிட் செய்வேன்...நடிக்கும் யாருக்கும் பணம் கிடையாது... செலவே இல்லாத வகையில் திரைக்கதை அமைப்பது போன்றவற்றால் இது சாத்தியம்...

அதுமட்டும் இல்லாமல் கதை ,திரைக்கதை, ஒளிப்பதிவு இயக்கம் என்று அனைத்து விஷயங்களையும் நானே பார்த்து கொள்கின்றேன்... ஆனால் , செலவு செய்து நான் எடுத்த படம் “துளிர்” அந்த படத்துக்கு செலவு ஐம்பதாயிரம் ரூபாய்...

அது எனது நண்பரின் முதலீடு...அந்த படத்தை அப்படி செலவு செய்து எடுக்க எனது நண்பர் ஆசை பட்டார்... இப்போது போல் அப்போது எடிட்டிங் கேமரா அந்த அளவுக்கு இலகுவாய் கிடைக்கவில்லை....


ஆனால் இந்த படத்தில் நடித்தவர் என் உறவுக்காரர்... இந்த படத்தில் நடித்த எவருக்கும் எந்த சினிமா அனுபவமும் இல்லை.. எவரும் இதற்கு முன் பாஸ்போட் மற்றும் போட்டோவுக்கு மட்டும்தான் கேமரா முன் நின்றவர்கள்... என்பதை உங்களுக்கு சொல்லி கொள்ள ஆசை படுகின்றேன்..
இதுவே பணம் மட்டும் இருந்தால் இதைவிட சிறப்பாக என்னால் காட்சிகளை அற்புதமாக எடுத்து கொடுக்க முடியும்... இந்த படத்தில் சிறப்பாக எனக்கு ஒத்துழைப்பு கொடுத்தவர்களுக்கும்.. எனது எல்லா முயற்ச்சியையும் ஊக்க படுத்தி.... பணம் கொடுத்து உதவிய தயாரிப்பாளர் , சப்டைட்டில், ஸ்டில்ஸ் போன்றவற்றில் உதவி புரிந்த எனது மனைவிக்கு என் நன்றிகள்...

பரசுராம் வயது 55குறும்படத்தின் கதை இததான்..
சென்னையில் தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி அடைந்த போது சென்னையில் ஒரு பெரிய பிரச்சனை வாடகை உயர்வு மற்றும் பல பொருட்களின் விலையேற்றம் நடுத்தர குடும்பத்து வாழ்க்கையை வெகுவாக பாதித்தது... அப்படி பாதித்த போது இளமையாக இரத்த ஓட்டம் அதிகம் இருந்தவர்கள் ஓரளவுக்கு சமாளித்தார்கள்...,தற்போது படித்து வெளிவந்தவர்கலால் சமாளிக்க முடிந்தது... ஆனால் 55வயதில் தனது மனைவியோடு குடும்பம் நடத்தும் ஒரு குடும்ப தலைவனால் எப்படி சமாளிக்க முடியும்....???

வடபழனியில் குடி இருந்த நான்... வாடகை விலை உயர்வால் நான் ராமபுரம் வந்த போது , ஒரு பெரியவர் பூந்தமல்லி தாண்டிதானே வடகைக்கு வீடு பார்த்து இருக்க முடியும்?... அப்படி நடுத்தரவயதை கடந்தவர்களால்... சென்னையில் வாழ்க்கை போராட்டம் நடத்த என்ன செய்வார்கள்...? உயிர் வாழ்வதும், உறங்க இடமும் முக்கியமல்லவா?.... எதுவும் நிச்சயம் இல்லாத வாழ்வில் எல்லாம் சாத்தியமே என்ற வரியை மையபடுத்தி எடுத்த படம்.. மனைவியை அதிகம் நேசிக்கும் பெரியவர்....வரதட்சனை அதிகம் கொடுத்து தனது மகள்களை கட்டி கொடுத்த கொஞ்சம் கடனில் இருக்கும் பெரியவரை பற்றிய கதை இது...

இந்த படத்தின் கதை ஒரு உண்மை சம்பவத்தை மையமாக கொண்டது....
இந்த படம் சென்னை உலக குறும்பட விழாவில் திரையிடபட்டது... இந்த படத்தில் நடித்த எனது உறவுக்கார பெரியவருக்கு 51ரூபாய் வெற்றிலை பாக்கு வைத்து மடித்து கொடுத்தேன்... இந்த படம் ஒன்றரை நாளில் எடுத்து முடிக்கபட்டது... இந்த படத்தின் ஆடியோக்கள் லைவ் ஆடியோ.... முதலில் மற்றும் கடைசியில் பரசுராம் கேரக்டர் பற்றி நான் கூறுவது மட்டும் டப் செய்யபட்டது....

பரசுராம் வயது 55 பகுதி...1




பரசுராம் வயது 55 பகுதி...2



உங்கள் கருத்துக்களுக்காக காத்து இருக்கும்...
குறிப்பு.. பெரியவராக நடித்த பரசுராம் அவர்கள் உண்மை பெயரையே இந்த படத்துக்கு வைத்து விட்டேன்.... நடிப்பு அனுபவம் இல்லாத இவர் நடிப்பு பிடித்து இருந்தால் அவரது எண்ணுக்கு போன் செய்து உங்கள் வாழ்த்துக்களை தெரிவியுங்கள்...9345988759 என்ற கைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.. அவர் சந்தோஷம் கொள்வார்...

அன்புடன்
ஜாக்கிசேகர்(என்கின்ற)
தனசேகரன்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

தீபாவளி பண்டிகை ஒரு பின்னோக்கிய பார்வை...

தீபாவளி பண்டிகை சந்தோஷம் மிகச்சரியாக ஒன்றரை மாதத்துக்கு முன்பே அந்த உற்சாகம் வந்து விடும்... தினமும் நாள்காட்டியில் காகிதம் கிழிக்கும் போது நாட்கள் குறைய குறைய மனம் எங்கும் சந்தோஷம் கொப்பளிக்கும்....

மனம் கொப்பளிக்க ஒரே காரணம் பட்டாசுதான்... ஏனென்றால் அப்போதைய காலகட்டத்தில் மனம் சந்தோஷமடைய அது மட்டுமே பிரதான காரணமா இருந்து இருக்கின்றது...

இப்போது போல் மாணவர்கள் பல் வேறு விஷயங்களில் காண்சன்டிரேட் செய்வது போல் அப்போது எல்லாம் இல்லை... இப்போது எல்லாம் ஒவ்வோறு சப்ஜெக்டுக்கும் டியுஷன் வைத்துக்கொள்கின்றார்கள்.... இப்போது போல் அப்போது எல்லாம் சுட்டி டிவியும் இல்லை ஒரு புன்னாக்கும் இல்லை...


அதனால் பொங்கலும் தீபாவளியும்தான் சந்தோஷம் கொடுக்கும் தினங்கள்...தீபாவளி அன்று காலையில் விடியலில் மூன்று மணிக்கே அங்கொன்றும் இங்கொன்றுமாக கேட்ட வெடிச்சத்தம் விடியலில் 5 மணிக்கு சத்தம் காதை கிழிக்கும்... அந்த சத்தம் காலை ஒன்பது வரை விடாது கேட்டுக்கொண்டே இருக்கும்....

அப்புறம் கொஞ்சம் ரெஸ்ட் விட்டு யாராவது ஒரு புண்ணியவான் அமைதியா இருக்குற நேரமா பார்த்து ஒரு பத்தாயிரம் வாலா பட்டாசு வெடிக்க... நாங்க வாயில ஈ போறது தெரியாம பார்ப்போம்....அப்புறம் மதியத்துக்கு மேல ரெஸ்ட்.. எல்லாம் தீபாவளி பலகாரத்தை சாப்பிட்டு விட்டு நல்ல தூக்கம் போட்டுகிட்டு இருக்கும் போது ....ஆட்டோ பாம் எல்லாம் இந்ம மதிய நேரத்துலதான் வெடிப்பாங்க... அதன் பிறகு 5 மணிக்கு பிஜிலி வெடிகளுடன் ஆரம்பிக்கும் வெடித்திருவிழா....இரவு ஆறு மணிக்கு மேல் வாண வேடிக்கைகளும் கை கோர்க்க விழா களைகட்டி இருக்கும்... அப்புறம் அது இரவு பத்துமணி வரை நிறுத்தாமல் தொடர்ந்து... பத்தில் இருந்து பதினோருமணிவரை வேகம் குறையும் நேரம்...

அப்புறம் டிவியின் பரவல்... அப்புறம் தனியார் தொலைகாட்சி வருகைக்கு பிறகு இந்த கொண்டாட்டம் நிறைய தடை பட்டு விட்டது... சன் டிவி வந்த போது பட்டாசு அதிகம் வெடிக்காமல் சாலைகள் வெறிச்சோடி கிடந்தன... ஏதாவது அறுவை புரோகிராமுக்குதான் மக்கள் வெளியே வந்து வெடி வெடிக்க ஆரம்பித்தார்கள்...... அந்தளவுக்கு மீடியா வளர்ச்சி... தீபாவளி திருவிழாவை மாற்றியது எனலாம்...

அதே போல் பட்டாசு... அப்பா கொஞ்சமாக வாங்கி வரும் போது எல்லாம் மனதில் அவரை திட்டி இருக்கின்றேன்.... 5 பிள்ளைகளுக்கு தகப்பனால் எல்லோருக்கும் புது துணி வாங்கி எல்லோரையும் மகிழ்விக்க வேண்டும் .. அதனை எங்க அப்பா சிறப்பாகவே செய்தார்...

இப்போத நான் கஷ்டபட்டு பணம் சம்பாதிக்கும் போது பண்டிகைக்கு ரூபாய் 100க்கு மேல் வெடி வாங்குவதில்லை.. ஒரு லட்சுமி கட்டு பிரிச்சி வெடிச்சா 20 ரூபாய் பணம் கண் எதிரே சுக்கு நூறாய் போகுவதாக எண்ணம் வருகின்றது... அதற்க்கு நல்ல சாப்பாடு சாப்பிடலாம்... யாராவது ஏழைக்கு ஒரு வேளை சாப்பாடு வாங்கி கொடுக்கலாமே... என்று புத்தி போகின்றது....



பார்ப்போம் குழந்தை குட்டி என்று ஆன பிறகு அவர்கள் மகிழ்ச்சிக்காக பட்டாசு வாங்கிதான் ஆக வேண்டும்... என் வீட்டு எதிரில் உள்ள டாக்டர் வீட்டில் ரூபாய் பத்தாயிரத்துக்கு பட்டாசு வாங்கி நேற்று முழுவதும் வெடித்துக்கொண்டு இருந்தார்கள்...29 இன்சு சான்சுயி டிவிக்கான தொகையை வெறும் காகிதமாக மாற்றினார்கள்....சிவகாசி சிறார்களின் உழைப்பு இங்கே மிகிழ்வாய் மாறியது...ஒரே மகிழ்ச்சி ஆட்டோ பாம் சத்தம் குறைக்கபட்டுவிட்டது....

வெடிக்காத வெடியை எல்லாம் பொறுக்கி அதன் மருந்தை ஒரு பேப்பரில் கொட்டி அதனை எறிய வைத்து வேடிக்கை பார்ப்போம்... வீட்டில் கொசு அதிகம் இருக்கும்.. அப்போது ஒரு பாம்பு மாத்திரை போட்டு எரித்தால் கொசு துண்டைகானோம் துணியை கானோம் என ஓட்டம் பிடிக்கும்....

தீபாவளி முன்னை போல் மக்கள் பெரிய உற்சாகமாய் கொண்டாடுவதில்லை.. மக்கள் தங்கள் கவனத்தை பல விஷயங்களில் செலுத்த ஆரம்பித்து விட்டார்கள்... மக்கள் தங்களை மாற்றிக்கொண்டு வெகுகாலம் ஆகிவிட்டது...


அந்த சிறுவயது தீபாவளி பண்டிகைக்கான உற்சாகம் இப்போது ஏன் என்னிடம்இல்லை என்று எனக்கு நானே கேள்வி கேட்ட போது.... பதில் கிடைத்தது

என் அம்மாவிடம் கேட்பேன் விதம் விதமாக ருசியாய் உணவு சமைத்து விட்டு அம்மா இலையில் வெறும் ரசத்தை மட்டும் போட்டுக்கொண்டு சாப்பிட்டு விட்டு கை கழுவிக்கொள்வாள்.... ஏன் என்று கேட்டால்?... நானே சமைத்து நானே சாப்பிட பிடிக்கலை என்பாள்...

அதே போலநானே சம்பாதித்து நானே தீபாவளி கொண்டாட அதிகம் ஆசைவரவில்லை என்று எண்ணுகின்றேன்... எனென்றால் அப்போது அப்பா சம்பாதித்தார்... நான் தீபாவளி கொண்டாடினேன்.... இப்போது?????

அன்புடன்
ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும்...ஜாக்கியின் தீபாவளி நல்வாழ்த்ததுக்கள்...

தீபாவளி நல்வாழ்த்துக்கள்....



சென்னையில் தீபாவளி பண்டிகையை திநகர் பக்கம் போகும் போது என்னால் உணர முடிந்தது... அவ்வளவு கூட்டம் ரோடு முழுவதும் மக்கள் கூட்டம்...முக்கியமாக பெண்கள் கூட்டம்தான் அதிகம்... இவ்வளவு பெண்கள் எல்லாம் எங்கு இருந்தார்கள் என்று யோசிக்கும் போது மிக மலைப்பாய் இருக்கின்றது....

எல்லா அப்பாக்களுக்கு ஒரு வித பயத்துடன்தான் கடைக்குள்ளே நுழைகின்றார்கள்.... நன்றாக தெரியும் அந்த சுடிதார் மெட்டிரியல்ரூ 300 மதிப்பு என்று... ஆனால் தீபாவளியை காரணம் காட்டி அதற்க்கு 700 ரூபாய் மதிப்பு கொடுத்து கொள்ளை லாபம் பார்த்தார்கள்...

இருப்பதிலேயே ஒரு கேவலமான ஒரு உடையை எடுத்துக்கொண்டு அந்த டிரஸ்தான் வேண்டும் என்று அந்த பெண் பிள்ளை அடம் பிடிக்க பாசம் கண்ணை மறைக்க ஒருவித வெறுப்புடன் ஒரு அப்பா வாங்கி கொடுத்துக்கொண்டு இருந்தார்...

ஒரு என்ஜீனியரிங் படிக்கும் மாணவன் 5 பேன்ட் 5 சட்டை எடுத்து கை முழுவதும் அடிக்கி கொண்டு இருக்க... ஆடிப்பபோன அப்பா....
“ நிச்சயமா உனக்கு கல்யாணம் நடக்கும், அப்ப உன் மாமனார்கிட்ட சொல்லி 20வது 20வதாக எடுத்துக்கோ இப்ப ரெண்டு எடுத்துக்கோ என்றார்...

நிறைய பெண்கள் இப்போதெல்லாம் மிக இறுக்கமாக உடை அணிந்து கொண்டு வலைய வலைய வந்து கொண்டு இருக்கின்றார்கள்....

மாமனாரிடம் வகையாக கறக்க இப்போதே தனது மகனை தயார்படுத்தும் பாங்கை நினைத்து கவலைபட்டேன்....



முன்பு போல் இப்போதெல்லாம் மனது லயித்து தீபாவளி கொண்டாட முடிவதில்லை.. அத ஒரு காணாக்காலம் போல் இருக்கின்றது... நேத்து இரவு 10,30 வரை டிரஸ் எடுக்க யோசித்து கொண்டு இருந்தேன்...

வரும் திங்கள் எங்கள் முதல் திருமணநாள்... நினைவு வைத்து இப்போதே வாழ்த்து சொல்லிய நண்பர்களுக்கும் பதிவர்களுக்கும் எனது நன்றிகள்...சிலர்இரண்டு நாட்களுக்கு முன் போன் செய்து சரியான நாளில் சொல்வதாக நினைத்து ,வாழ்த்து சொல்லி அசடு வழிந்தார்கள்...உங்கள் ஆர்வத்துக்கு எனது வணக்கங்கள்....

எங்கள் திருமணம் போன வருடம் அக்டோபர் 19ம் தேதிதான் நடந்தது என்றாலும்,கடந்த பத்து வருடங்களாக நானும் எனது மனைவியும் காதலித்த காலங்களில்... எனக்கு டிரஸ் செலக்ட் செய்தது எனது மனைவிதான்... இப்போது அவள் வெளிநாட்டில்... எந்த டிரஸ் எடுப்பது எவ்வளவு விலையில் எடுப்பது போன்ற பல குழப்பங்களையும் மீறி இரவு 11.45 டிரஸ்எடுத்து விட்டேன்... குகூளில் எடுத்த டிரசை காட்டினேன்... நன்றாக இருப்பதாக சொன்னாள்...
என்ன நான் எனக்கு 600 ரூபாய்க்கு பேண்ட்டும், 300க்கு சட்டையுமாக வந்து விட்டேன்... எனது மனைவியாக இருந்து இருந்தால், எனக்கு மட்டுமே ரூ 4000க்கு எடுத்து என்னை கதி கலங்க வைத்து இருப்பாள்...



இந்த மனைவிகள் சுத்த மோசம் நன்றாக கெடுத்து வைத்து விடுகின்றார்கள்... உள்ளுக்குள் ஒரு கோபம் யார் மீதோ, எதன் மீதோ..... ஒரு கட்டிங் அடித்து விட்டும் இரவு 3 மணிவரை தூக்கம் வராமல் புரண்டு கொண்டு இருந்தேன்....

இருப்பினும் எல்லோருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் அனுப்பி சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டேன்...
அதே போல் ஒரு விஷயம் எல்லோரிடமும் கவனித்தேன்... அதாவது வாழ்த்து சொல்லும் போது மறக்காம அண்ணிக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் சொல்லிடுங்க... என்று சொல்கின்றார்கள்.... அதே போல் சாட்டுக்கு வந்தாலும் அண்ணி நலம் விசாரிக்காது பேச்சு தொடங்குவது இல்லை... மிக்க நன்றிகள்...

மிக்க நன்றி நண்பர்களே.... எல்லோருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்... உங்களுக்கும் உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் எனது இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.... இந்த சந்தோஷம் எப்போதும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எப்போதும் நிலைத்து நிற்க்க எல்லாம் வல்ல பரம் பொருளை வேண்டிக்கொள்கின்றேன்...

அன்புடன்
ஜாக்கிசேகர்(என்கின்ற)
தனசேகரன்

தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

(BOW) (உலக சினிமா/கொரியா) 18++ கொரிய இயக்குனர் கிம் கி டுக்கின்... தி போவ்....

சுயநலத்துடன்தான் இங்கே மனிதன் வாழ்கின்றான்... அப்படி இல்லை என்று எவன் சத்தியம் அடித்தாலும் நம்பாதீர்கள்... நான் மற்றவரை விட சுயநலம் குறைவான வாழ்க்கை வாழ்கின்றேன் என்று சொன்னால் அதனை கொஞ்சம் நம்பலாம்....

அபூர்வ சகோதரர்கள் படத்துல தாடி வச்சவன் எல்லாம் தாகூர் இல்லை.. சுருட்டு புடிக்கறவன் எல்லாம் சர்ச்சில் இல்லை என்று அமரர் நாகேஷ் அவர்கள் ஒரு வசனம் பேசுவார்... அது போல் இந்த உலகில் வயதானவர்கள் எல்லாம் யோக்கியர்கள் இல்லை....

எல்லோரும் அவர்கள் செய்யும் வாழ்க்கைக்கு ஒரு நெறிமுறையை கற்பித்துக்கொண்டு வாழ்க்கை நடத்துகின்றனர்... அது சமுகத்தால் ஏற்றுக்கொள்ளபடாத விஷயமாக இருந்தாலும் அதனை செயல் படுத்துவர்...

வயதானாலும் காமம் என்ற விஷயம் எப்படி ஆட்டி படைக்கின்றது என்பதற்க்கு இந்த படம் ஒரு உதாரணம்... அது தனது மகள் வயதாக இருந்தாலும்அல்லது பேத்தி வயதாக இருந்தாலும் மனம் காமம் எனும் விஷயத்தில் மையல் கொண்டு விட்டால் அது எது பற்றியும் கவலைபடாது...

காமம் நம்மை ஆட்சி செய்ய தொடங்கி விட்டால் அது சொல்வதே சட்டம், அது சொல்வதே வேத வாக்கு, அது ஆட்சயில் உறவுகள் என்பது கிடையாது, சமுகம் வகுத்த எல்லை கோடுகள் கிடையாது... காமத்தை பொறுத்தவரை யாராக இருந்தாலும் எவனாக இருந்தாலும் எவளாக இருந்தாலும் காமத்தை பொறுத்தவரை தீர்வு காணப்பட வேண்டும் அவ்வளவுதான்...
BOWபடத்தின் கதை இதுதான்....
கடலின் நடுவில் ஒரு மீன் பிடி படகு. அதற்கு பக்கத்தில் ஒரு சிறிய படகு... அந்த படகில் ஒரு பெரியவரும் ஒரு16 வயது சிறுமியும் வாழ்கின்றார்கள்... கிழவருக்கு வேலை என்ன வென்றால் சிறிய படகை எடுத்துக் கொண்டு கரைக்கு போய் மீன் பிடிப்பதில் ஆர்வம் உள்ளவர்களை தனது போட்டுக்கு அழைத்து வந்து கட்டணம் வாங்கி மீன் பிடிக்க அனுமதிப்பதும் அதன் ்முலம் வரும் வருமாணத்தில் கிழவரும் அந்த பெண்ணும் வயிற்றை கழுவிக்கொள்கின்றார்கள்....
மீன் பிடிக்க படகுக்கு வரும் இளைஞர்களுக்கு அந்த பெண்ணின் மீது ஒரு கண் இருந்து கொண்டே இருக்கின்றது... அவ்வப்போது அந்த கிழவரிடம் ஜோசியம் கேட்க அந்த பெண்ணை ஒரு ஊஞ்சலில் ஆட விட்டு அம்பு விட்டு அந்த பெண் அந்த கிழவர்க காதில் சொல்ல அதன சம்பந்தபட்டவர் காதில் சொல்வது கிழவரின் ஜோசியம் சொல்லும் ஸ்டைல்...

ஒரு கட்டத்தில் அந்த பெண் சிறுவயதில் தொலைந்து போன பெண் என்பது தெரியவருகின்றது... அந்த பெண்ணை தினமும் குளுப்பாட்டுவதில் இருந்து பல வேலைகள் அந்த கிழவர் அந்த பெண்ணுக்காக செய்வது எல்லாம் அந்த பெண்ணின் 17 வது வயதில் பூப்பெய்தியதும் அந்த பெண்ணை அதாவது சிறுமியாக சின்ன வயதில் இருந்தே வளர்த்த பெண்ணை அந்த கிழவர் திருமணம் செய்து கொள்ள ஆர்வமாக இருப்பதுதான்...அந்த பெண்ணுக்கு திருமண உடைகள் ,புது செருப்பு போன்றவை வாங்கி வைத்துக்கொண்டு அந்த நாளுக்காக காத்து இருப்பார்... ஆனால் மீன் பிடிக்க வரும் ஒரு இளைஞனை அந்த பெண் விரும்ப ஆரம்பித்து விடுவாள்... அவன் அந்த பெண் சிறுவயதில் இருந்தே வெளி உலகம் பார்க்காமல் அந்த பெண்ணை அந்த கிழவர் வளர்த்து இருப்பார்... அந்த சிறுமியாக இருந்து 17 வயது பருவமங்கையாக மாறிய
அந்த பெண் யாருக்கு கிடைத்தால் அடங்கா காமம் கொண்ட அந்த கிழுவருக்கா? அல்லது அந்த இளைஞனுக்கா? என்பதை வெண்திரையில் பாருங்கள்...

படத்தின் சுவாரஸ்யங்களில் சில...

கொரிய இயக்குனர் கிம்மின் இந்த படம் உறவுகளின் சிக்கல்களையும்... தனிமனித அபிலாஷைகளையும் அலசுவதாக உள்ளது இந்த படம்....

எல்லா படத்துக்கும் கிம் ஒரு பேக்ரவுண்ட் வைத்து இருப்பார் ... இந்த படத்தின் பிரதான பேக்ரவுண்ட் கடல்....

அதே போல் எல்லா படத்திலும் ஒளிப்பதிவுக்கு முக்கியத்துவம் இருக்கும் எனென்னறால் காட்சிகளை விஷுவலாக சொல்லும் போது ஒளிப்பதிவு அற்புதமாக இருக்க வேண்டும்... இது வே பக்கம் பக்கமா வசனம் பேசினால் கான்சன்ட்ரேஷன் அதில் போய் விடும்.. எதாவது தவறு என்றால் கூட தப்பித்துக்கொள்ளலாம்.. அனால் இதில் அப்படி இல்லை...

இந்த படத்தில் டித்த கிழவரும் அந்த பெண்ணுக்கும் எந்த டயவலாக்கும் இல்லை... படத்தின் மொத்த வசனத்தை ஒரு ஏ போர் ஷீட்டில் எழுதி விடலாம்...

மீன் பிடிக்க வந்தவர்கள்... கிழவர் உன்னை தினமும் பக்கத்தில் படுக்க வைத்து கொள்வார்களா? என்பதை சொல்லிக்கொண்டே அந்த சிறுமியின் மார்பு பிடித்து இழுத்துபவனை கிழவர் அம்பின் மூலம் பதில் சொல்வது அழகு

மீனை பிடித்த அந்த பெண்ணின் சட்டைக்குள் போட்டு விட்டு மீனை எடுப்பது போல் அந்த பெண்ணின் மார்பை துழாவும் அந்த காட்சியை தமிழ் படத்தில் யோசிக்க முடியாத விஷயம்.... எது எப்படி இருந்தாலும் பெண்ணை காமமாகத்தான் இந்த ஆண் சமுதாயம் பார்க்கும் என்பதை காட்சிகளில் அழகாக சொல்லி இருப்பார் கிம்...

அந்த சிறுமியின் சிரிப்பு மிகுந்த குழந்தை தனமாக இருக்கும்....

அதுவும் கிளைமாக்ஸ்காட்சிகளில் அந்த பெண்ணை டைரக்டர் இலைமறை காய் மறைவாக அந்த காட்சி எடுத்த விதம் அருமை...

தினமும் அந்த பெண்ணை அந்த கிழுவர்தான் குளுப்பாட்டி விடுவார்... ஆனால் அந்த இளைஞன் மேல் காதல் வந்த பிறகு... தன்னை கல்லயாணம் செய்ய இந்த கிழவர் நினைப்பது தெரிந்ததும்... அந்த பெண் காட்டும் கூச்சம் அற்புதம்...

இது போன்ற விஷீவல படங்களுக்கு ஆர்டி்ஸ்ட்டுகள் மிகவும் திறமைசாலியாக இருக்க வேண்டியது கட்டாயமாகின்றது... அதே போல் அந்த கிழவராக நடித்து இருப்பவர் பார்வையிலேயே எல்லா நடிப்பையும் காட்சிகளையும் தன் உடல் அசைவு மூலம் வெளிபடுத்தும் நல்ல கலைஞன்....

இந்த படத்தினை கி்ம் எழுதி இயக்கி தயாரித்து இருப்பார்...(இயக்குனர் கிம்)
இந்த படத்தை தமிழ்நாட்டில் எடுத்து இருந்தால்.. கிம்மை ஒரு காமக்கொடுரனாக சித்தரித்து வேறு கதையே கிடைக்கலியா? என்று எல்லா பத்திரிக்கைகளும் திட்டி எழுதி விட்டு.. நடுப்பக்கத்தில் நயன், ஷிரேயாவின் பாதி மார்பகம் தெரிவது போல் படம் போட்டு இருப்பார்கள்...

இந்த படம் கேன்ஸ் உலகபடவிழாவில் திரையிடப்பட்டது....

படத்தின் டிரைலர்...

படக்குழுவினர் விபரம்....

Directed by Kim Ki-duk
Produced by Kim Ki-duk, Yong-gyu Kang
Written by Kim Ki-duk
Starring Han Yeo-reum, Jeon Seong-hwang
Release date(s) 12 May 2005 (South Korea)
Running time 90 min.
Country Korea
Language Korean
Budget US$950,000

அன்புடன்
ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner