(PREY) காட்டு ராஜா சிங்கமும் சில மனிதர்களும்...


எப்போதுமே காட்டு விலங்குகள் அது பாட்டுக்கு அதன் வாழ்விடங்களில் வசித்து கொண்டு இருக்கும்.. நாம்தான் அதனை அவ்வப்போது நோன்டி வினையை விலைக்கு வாங்கி கட்டி கொள்கின்றோம்..

ஒரு வாரத்துக்கு முன் கூட ஊட்டி முதுமலையில் ஒரு வெளிநாட்டு கார பெண்மணியை யானை அடித்து போட்டு கொன்று விட்டது.... காரணம் வன விலங்குகளை பார்பதற்க்கு காட்டின் உள்ளே பாதுகாப்பற்ற இடத்துக்கு கைடு அழைத்து்கொண்டு போயிருக்கின்றான்.. அது இடத்துக்கு அழையா விருந்தாளியாக போனதால் அயானை அடித்து போட்டு விட்டது... இது பராவாயில்லை சிங்கம், புலியாக இருந்தால் அவ்வளவுதான் ... மிக வலியுடன் கொடுரமாக இறக்க வேண்டியதுதான்... அப்படி ஆப்பி்ரிக்கா காட்டில் சிங்கம் புலி பார்க்க அழையா விருந்தாளியாக காட்டில் செல்லும் ஒரு குடும்பத்தின் நிலை என்ன என்பதை சொல்லலும் படம்தான் பிரே..

PREY படத்தின் கதை இதுதான்....

நியுமேன் என்பவன் ஆப்பிரிக்க காட்டில் வேலை விசயமாய் தங்கி இருப்பவன் இவனது மனைவி இரு குழந்தைகளும் காட்டு விலங்குகள் பார்க்க ஆசைபட அவர்கள் ஒரு ஜீப்பில் ஒரு கைடுடுன் அனுப்பி வைக்கின்றான்...அந்த இரண்டு பசங்களில் ஒன்று 14 வயது பெண் , ஒன்று10 வயது ஆண்பிள்ளை ... அம்மப ஸ்தானத்தில் இருப்பவள் அம்மா அல்ல...ஸ்டெப் மதர் .. அதனால் முதலில் இருந்தே அவளை அந்த பசங்களுக்கு பிடிக்கவில்லை... அஇவள் எது சொன்னாலும் அவளை ஒரு காமெடி பீஸ் போல் நடத்துகின்றார்கள்....


அழைத்து போன கைடை சிங்கம் அடித்து கொன்று விட அதன் பிறகு அந்த இரண்டு பிள்ளைகளும் அந்த ஸ்டெப் மதர் எனனவானார்கள் என்பது மீதி கதை... ஒரு விஷயம் எடுத்து போன ஜீப் ஆக்கிசடென்ட் ஆகி விட என்ன செய்து இருப்பபார்கள் அவர்கள்???? வெண் திரையில் பாருங்கள்...



படத்தின் சுவாரஸ்யங்களில் சில..


இது மாதிரி திகில் படங்களை பொறுத்தவரை நிறைய வந்து விட்டது .... சவுண்டில் மிரட்டியே வயிற்றை கலக்க வைத்து விடுவார்கள்....

இந்த படத்தில் ஆப்பி்ரிக்க காட்டின் அழகை அப்படியே செல்லுலாய்டில் கேமராமேன் பதிய வைத்து இருப்பார்


இந்த படம் உண்மை சம்வங்களின் அடிப்படையில் எடுத்த படம்....

ஸ்டெப் மதரை அம்மா என்று அழைக்கும் அளவுக்கு எடுத்து போன திரைக்கதை அற்புதம்

என்ன இருந்தாலும் இந்த படம் டைம்பாஸ்படம்தான்..

இந்த மாதமோ அல்லது அடுத்த மாதமோ இந்த படம் தமி்ழில் டப் செய்ய பட்டு வருகின்றது...

பல காட்சிகளில் உண்மையிலேயே மிரட்டி வயிற்றை கலக்க வைத்து இருப்பார்கள்...

ஜுராசிக் பார்க்கும் இந்த படத்துக்கு அடிப்படை ஒன்றுதான்
அது பெரிய பட்ஜெட் இது சின்ன பட்ஜெட் படம் .... அவ்வளவுதான்....


படத்தின் டிரைலர்....



படக்குழுவினர் விபரம்
Release: January 30, 2008 (U.S.)
Directed by: Darrell Roodt
Written by: Darrell Roodt, Beau Bauman and Jeff Wadlow

Starring:
Bridget Moynahan
as Amy Newman
Peter Welleras Tom Newman
Carly Schroeder as Jessica Newman
Jamie Bartlett as Crawford
Conner Dowds as David Newman
அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

என் மனைவிக்கு இந்த பாடலை சமர்பிக்கின்றேன்...



ஒரு சில பாடல்கள் எப்போது கேட்டாலும் ஒரு உற்சாகம் நம்மை தொற்றிக்கொள்ள வைக்கும் அந்த வகையில் இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்தமானதும் கூட...

இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் என் மனைவி ஞாபகம் வந்து விடும்... திருமணம் ஆகாதவர்கள் கேட்டால் அவர்கள் காதலி ஞாபகம் நிச்சயம் வந்து தொலைக்கும்....

அந்த பாடல் அந்த அளவுக்கு பேமஸ் ஆகவில்லை இருந்தாலும் அந்த பாடலின் வரியும் வசீகரமும் என்னை கவர்ந்தது என்பேன்....


காதலன் காதலியை பிரிந்தாலும் அல்லது வீடு செல்லும் போது இன்னும் கொஞ்சம் நேரம் அந்த கை பிடித்து இருப்பது போல் அல்லது இருக்க வேண்டும் என்று நினைத்து பாடும் பாடல் இது...


அந்த பாடல் தொட்டி ஜெயா படத்தில் சிம்பு்வும்,கோபிகாவும் பாடும் பாடல்...இசை ஹரீஸ்...

பாடல் தொடங்கும் முன் வரும் தாரா தாரா என்ற கோராசும் அதன் பிறகு தொடங்கும் படலும் அற்புதம்....


காதலன்...
உயிரே என்னுயிரே என்னமோ நடக்கதுடி...
அடடா இந்த நொடி வாழ்வில் இனிக்குதடி
ஒரு நிமிடம் ஒரு நிமிடம் எனை நீ பிரியாதே...
எனது அருகில் நீ இருந்தால் தலைகால் புரியாதே
நிஜம்தானே கேளடி நினைவெல்லாம் நீயடி....
நடமாடும் பூச்செடி நீ என்னை பாராடி...

இது வரை எங்கிருந்தோம்
இதயமும் என்னை கேட்கின்றதே
பெண்ணே எங்கே மறைந்து இருந்தாய்
என்னுள் எப்படி நுழைந்து கொண்டாய்..... என்று காதலன் கேட்க அதற்க்கு காதலி சொல்கின்றாள்

உனக்குள்ளே ஒளிந்திருந்தேன்
உருவத்தில் உதிரமாய் கலந்து இருந்தேன்
உனக்கே உன்னை தெரியலையா?
இன்னும் என்னை புரியலையா? ... என்று போகும் பாடல்...

அதில் காதலி நடுவில் சொல்லுவாள் ...

எங்கே யோ உன் முகம் நான் பார்த்த ஞாபகம்...

எப்போதோ உன்னுடன் நான் வாழ்ந்து ஞாபகம்.....

நீங்கள் இந்த பாடலை கேளுங்கள் எப்போதும் இனிக்கும் பாடல்...



Singers : Karthik,Anuradha Sriram,Bombay Jeyashree


M:
Uyire en uyire ennavo nadakuthadi
Adada intha nodi valvil inikuthadi
Oh oru nimidam oru nimidam enai nie piriyathe
Enatharugil nie irunthal thalai kal puriyathe
Nijam thane kel adi ninaivellam nie adi
Nadam adum poochedi nie ennai par adi

Ithu varai engirunthom
Ithayamum unnai kekurathe
Penne enge marainthirunthai
Ennul epadi nulainthu kondai

F:
Unnakulle olinthirunthen uruvathil uthiramai kalanthu irunthen
Unnai unake theriyalaya ennum ennai puriyalaya

M:
Nan sirithu magilnthu silirkum payathai nie koduthai
Nan ninathu ninaithu nesikum kalathai nie anaithai

F:
Engeyo un mugam nan partha nyabaham
Epotho un unudan nan valntha nyabaham

M:
Uyire en uyire ennavo nadakuthadi
Adada intha nodi valvil inikuthadi
Oh oru nimidam oru nimidam enai nie piriyathe

F:
Enatharugil nie irunthal thalai kal puriyathe

M:
Nijam thane kel adi ninaivellam nie adi
Nadam adum poochedi nie ennai par adi

F:
Unnudan irukayile nilavukum siragugal mulaikirathe
Ithuvarai nanum partha nilava
Ithanai velicham kodutha nilava

M:
Unnudan nadakayile en ninal kandamai mariyathe
Munne munne nam ninalgal
Ondrai ondrai kalakindrathe

F:
Nie pesum varthai serthu vaithu vasikiren
Un swasa katru muchil vangi swasikiren

M:
Nijam thane kel adi ninaivellam nie adi
Nadam adum poochedi nie ennai par adi

F:
Uyire en uyire ennavo nadakuthadi
Adada intha nodi valvil inikuthadi
Oh oru nimidam oru nimidam enai nie piriyathe

M:
Oh oru nimidam oru nimidam enai nie piriyathe
Enatharugil nie irunthal thalai kal puriyathe

F:
Engeyo un mugam nan partha nyabaham
Epotho un udan nan valntha nyabaham
Nan valntha nyabaham






காதலியாகவோ,மனைவியாகவோ இருக்கும் ஒரு பெண்ணி்ன் சில கண பிரிவுக்காக பாடும் பாடல்.. பாடல் எழுதியவரை மட்டும் நீங்கள் சொல்லுங்கள்

அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

(THE ITALIAN JOB) 35 மில்லியன் மதிப்புள்ள தங்ககட்டிகள் அபேஸ் செய்யும் கதை...

எந்த வேலையையும் சலித்து கொண்டு செய்வது என்பது நல்லதல்ல... விருப்பத்துடன் முழு மூச்சாக எடுத்துக்கொன்ட வேலைய செய்ய வேண்டும்...நடிகர் கமலின் அம்மா ஒரு முறை நீ எந்த வேலையை வேண்டுமானாலும் செய் ஆனால் அந்த வேலையில் பெஸ்ட் என்று பெயர் எடுக்க வேண்டும் என்று சொல்வார்களாம்.. உதாரணத்துக்கு நீ டாய்லட் கழுவினால் கூட கமலை போல் சுத்தமாக டாய்லட் கழுவ இந்த உலகத்தில் அள இல்லை என்று சொல்லும் அளவுக்கு நீ உன் வேலையில் பெஸ்ட் என்று பெயர் எடுக்க வேண்டும் என்று சொல்லுவார்களாம்.... அப்படி செய்யும் வேலையை காதலிப்பவர்களை பற்றிய படம்...

எல்லாருக்கும் ஒரு தொழில் தர்மம் என்று உண்டு அது கொள்ளையர்களாக இருந்தாலும் சரி அல்லது கொலை செய்பவர்களாக இருந்தாலும் இருக்க வேண்டும்... அப்போதுதான் உருப்பட முடியும்...

பொருட்களின் மீது ஆசை வரும் போது அதன் வாங்க முடியாத இயலாமை திருட்டாக உருமாறுகின்றது... சின்னவயதில் திரில்லுக்கா திருடி இருக்கின்றேன்... செட்டியார் மெடிமிக்ஸ் சோப் விலைப்பார்பதற்க்குள் ஒரு தக்காளி எனது கால் சட்டை பாக்கெட்டில் போட்டு் இருக்கின்றேன்....அதே போல் மைதா கட்டுவத்ற்க்குள் ஒரு முட்டை என் கால் சட்டை பாக்கெட்டில்.... இதை ஒரு திரில்லுக்காக நான் என் அத்தை மகன்முரளி இருவரும் போட்டி போட்டுக்கொண்டு செய்வோம்.... அதே போல் கரெண்ட் போன அடுத்த செகன்ட் செட்டியார்கடையில் எதையாவது வாங்க வரிசையில் நிற்போம்....கொடுத்த 5 ரூபாய்க்கு எப்படி முட்டை வந்திச்சு வராதே என்று என் அம்மா கேட்ட போது பெருமையாக நான் என் சின்ன திருட்டை வெளிபடுத்திய போது அதிலிருந்து சரியாக 5 நாட்கள் என்னிடம் முகம் கொடுத்து பேசவில்லை.... ஒரு நாள் காலில் விழுந்து கெஞ்சி காரணம் கேட்ட போது... என் மகன் என்றால் அந்த ஈன செயலை செய்து இருக்கமாட்டான் என்று சொல்ல நான் கண்களில் கண்ணீரோடு என் அன்னையிடம் மன்னிப்பு கேட்டேன்...


நான் விளையாட்டுக்கு செய்தேன் என்று சொன்னேன்.... இந்த விளையாட்டுதான் நாளைக்கு உன்னை இந்த சமுகம் கேவலமாக பார்க்க வழி வகுக்கும் என்று என் அம்மா இரண்டுமணிநேரம் அட்வைஸ் செய்தால்... என் அம்மா அப்போது அந்த செயலை பாராட்டி இருந்தால் என் வாழ்க்கை திசைமாறி போய் இருக்கும்... உங்களுக்கும் இது போல் நடந்து இருக்கும்... ஒரு சின்ன பென்சிலையாவது நீங்கள் திருடி இருப்பீர்கள்... ஆனால் உங்களுக்கு சொல்வதற்க்கு அல்லது வெளிப்படுத்துவதற்க்கு கூச்சம் காரணணமாக இருக்கலாம்...சரி மேட்டருக்கு வருவோம்....

கத்தியின்றி ரத்தம் இன்றி கொள்ளை அடிக்க முடியுமா? முடியும் என்று சொல்லும் ஒரு கொள்ளை கூட்டம்... அப்படி ஒரு படம் எடுக்க முடியுமா? மடியும் என்ற நிருபித்து இருக்கின்றார்கள் அது என்ன படம் ரசிகர்களால் மிகவும் கொண்டாடபட்ட இத்தாலியன் ஜாப் படம்தான்

THE ITALIAN JOB படத்தின் கதை இதுதான்.......

குழுவின் தலைவன் John Bridger (Donald Sutherland) தலமையில் வெனிசில் ஒரு பாதுகாப்பான இரும்பு பிரோவில் தூங்கும், ஒரு35 மில்லலியன் மதிப்புள்ள தங்க கட்டிளை கொள்ளை அடித்து அதற்க்கு சுதந்திரம் கொடுக்க திட்டம் தீட்டுகின்றார்கள் எந்த உயிர் சேதம் இல்லாமல் John Bridger குழு அந்த தங்க கட்டிகளை மிக சாதூர்யமாக கொள்ளை அடித்து விடுகின்றார்கள்...ஜான் பிரிட்ஜருக்குஅவர் குழுவில் இருக்கும் Charlie Croker (Mark Wahlberg) என்பவனை ரொம்பவும் பிடிக்கும்.. அவனிடம் வயது வித்தியாசம் பாராமல் பல விஷயங்களை பகிர்ந்து கொள்ளுபவர்... அவருக்கு ஒரே ஒருமகள் இருக்கின்றாள்Stella Bridger (Charlize Theron) அவள் மீது உயிரையே வைத்து இருக்கின்றார்.... கொள்ளை அடித்து விட்டு போகும் போது அவர் குழுவில் இருக்கும் ஸ்டீவ் என்பவன் டபுள் கிராஸ் செய்து அந்த தங்க கட்டிகள் அனைத்தையும் கொள்ளை அடிக்க முயல தடுக்க வந்த John Bridgerயை போட்டு தள்ளுகின்றான்... பாலத்தின் மீது நடக்கும் இந்த சண்டையில் மற்றவர்களோடு அந்த வேன் ஆற்றில் கவிழ எல்லோரும் ஜல சமாதி அடைகின்றார்கள் என்ற எண்ணி ஸ்டீவ் எல்லா தங்ககட்டிகயோடு எஸ்கேப் ஆகின்றான்... உயிர் பிழைத்த நாலு பேர் கூட்டம் முதலில் John Bridger பெண் ஸ்டெல்லாவை கண்டுபிடிக்கின்றனர்.. அவளும் லேசுபட்டவள் இல்லை கார் வேமாக ஓட்டுவதிலும் எந்த பூட்டையும் திறக்கும் சாமர்த்திய சாலி.... நால்வர் குழுவும் அந்த பெண்ணும் இனைந்து அந்த ஸ்டீவை கண்டுபிடித்தார்களா? தன் அப்பாவை கொன்றவனை ஸ்டெல்லா எப்படி பழி வாங்கினாள்? 35 ில்லியன் தங்க கட்டிகளை ஸ்டிவ் என்ன செய்தான் போன்றவற்றை வெண்திரையில் கண்டு மகிழுங்கள்....

படத்தின் சுவாரஸ்யங்களில் சில.....


இந்த படத்தின் பெயரில் 1969ல் இங்கிலாந்தில் படம் எடுத்து விட்டார்கள்...அந்த படத்தை பார்த்து இன்ஸ்பயர் ஆகி இந்த படத்தினை பல மாறுதல்களுடன் எடுத்தார் இந்த படத்தின் இயக்குனர்...

இந்த படம்ஒரு அற்புதமன விறு விறுப்பான படைப்பு என்றால் அது மிகையில்லை... இந்த படம் பாத்து விட்ட வேளவரும் போது ஒரு உதட்டு புன்னகை உங்கள் உதட்டில் நிச்சயம்... நான் இந்த படத்தை பாண்டி ரத்னா தியேட்டரில் பார்த்ததாக ஞாபகம்...

மேலுள்ள படத்தில் இருப்பது இயக்குனர்..F. Gary Gray


இந்த படத்தின் இயக்குனர் டேக்கிங் ஸ்டைல் ஒரு அசத்தல் டீரிட்...படத்தின் முதல் டைட்டில் காட்சியில் பின்னனியில் ஒலிக்கும் இசையும் அதற்க்காக வெனிஸ் நகரத்தினை பல கோனங்களில் எடுத்த கட் ஷாட்டுகளில் டைட்டில் போடுவதும் அழகு... அதே போல் கொள்ளை அடித்த தங்க ககட்டிகள் தண்ணீ்ருக்கு அடியில் போவது போல் காட்சியில் தண்ணீ்ரில் இருந்து ஜும் பேக் ஆகி வெனிஸ் நகரத்தை காட்டி அப்படியே வானத்துக்கு போய் அப்படியே கீழே வரும் போது பணி மலையில் போகும் வேனை மெர்ஜ் கட்டிங்கில் பல இடங்களில் விளையாடிய எடிட்டர்Richard Francis-Bruce இருவரையும் பாராட்டலாம்.. முக்கியமாக டைட்டில் ஒர்க் அருமை....

Wally Pfister சினிமோட்டோகிராபர் ஆல்ப்ஸ் மலைதொடரில் எடுத்த காட்சிகளும் வெனிஸ் காட்சிகளும் ரயில் நிலைய சப்வே காட்சிகளும் அவர் ஒரு திறைமையான கேமரா மேன் என்பதை பறை சாற்றும் காட்சிகள்....

கொள்ளை அடித்ததும் ஜான் பிரிட்ஜர் தன் சகாக்களிடம் பணத்தை செலவு செய்யாதீர்கள் என்றும் பணத்தை இன்வெஸ்ட் செய்யுங்கள் என்று சொல்லும் இடம் அழகான கவிதை....


அதே போல் சார்லிக்கும் ஸ்டெல்லாவுக்கும் இருக்கும் மெல்லிய காதல் கலந்த நட்பு ரசிக்க தக்கதாய் இருக்கும்...

ஸ்டெல்லா பாத்திரத்தில் நடித்து இருக்கும்Charlize Theron ஒரு ஆஸ்கார் விருது நாயகி....நல்ல உடல் கட்டு கொண்டவர் அவர் எந்தளவுக்கு உடல்கட்டும் அழகும் கொண்டவர் என்பதற்க்கு சில படங்கள் (என் ஆசைக்கும்தான்) அந்த பெண்ணின் கண்களில் இருக்கும் மெல்லிய சோகம் கூட அழகுதான்....
அந்த அழகு ராட்சி படத்தின் மே லே இருப்பவர்...

சார்லியாக நடித்து இருக்கும் Mark Wahlberg டிபார்டட் படத்தி்ல் நடித்து இருப்பவர் அவரின் ஸ்மார்ட்நெஸ் ரசிப்பதாக இருக்கும்...

ஆல்ப்ஸ் மலையில் படபிடிப்பின் போது குளிர் வாட்டி வதைத்து இருக்கின்றது.. ஒரு டம்பளரில் தண்ணீர் எடுத்து 40 ஆடி நடப்பதற்க்குள் அந்த தண்ணீர் ஐஸ் கட்டியாக மாறி விடுகின்றது என்றால் பார்த்து கொள்ளுங்கள்...

டிரான்ஸ்போர்டர் படத்தின் ஹீரோJason Statham இந்த படத்தின் கதநாயகன் நண்பர்கள் பாத்திரத்தை செய்து இருப்பார்....

ஸ்டெல்லாவுக்கு சார்லி தன் நண்பர்களை அறிமுகப்படுத்தும் காட்சிகளில் அவர்கள் பிளால் சொல்லும் போது சிறு வயதில் அவர்கள் செய்த அட்டுழியங்களை காட்டும் காட்சி கல கல...

இந்த படத்தின் ரயில்வே சுரங்க பாதை காட்சிகள் பலதை செட் போட்டு எடுத்தார்கள்...

டிராபிக் ஜாம் காட்சிக்காக 300 கார்களை வைத்து ஒரு வாரத்துக்கு மேல் அந்த காட்சிகளை எடுத்தார்களாம்.....

படத்தின் இயக்குனர் கூடுமானவரை படத்தின் நடிகர்களே பல காட்சிகளில் டூப் போடாமல் நடிக்க கேட்டுக்கொண்டாராம்....

தொழில் நுட்பமாக கொள்ளை அடிக்கும் அந்த டெக்னிக் செமை திரில் ரகம்

இந்த படத்தின் கார் சேசிங் காட்சிகள் அவ்வளவு அற்புதமாக இருக்கும்....

இந்த படத்தி்ன் காட்சிகள் அனைத்தும் வெனிஸ் , இத்தாலி, லாஸ் ஏஞசல்ஸ் போன்ற இடங்களில் ஷட் செய்து இருக்கின்றார்கள்

வசூலில் பிச்சு உதறிய படம் இது...


படத்திற்க்கு கிடைத்த விருதுகள்
F. Gary Gray won a Film Life Movie Award for Best Director at the 2004 American Black Film Festival. Clay Cullen, Michael Gaines, Jean Paul Ruggiero and Mike Massa won an award for Best Specialty Stunt at the 2004 Taurus World Stunt Awards for the boat chase through the canals of Venice

படக்குழுவினர் விபரம்....
Directed by F. Gary Gray
Produced by Donald De Line
Written by Donna Powers
Wayne Powers
Troy Kennedy Martin
Starring Mark Wahlberg
Charlize Theron
Edward Norton
Seth Green
Jason Statham
Mos Def
and Donald Sutherland
Music by John Powell
Cinematography Wally Pfister
Editing by Richard Francis-Bruce
Christopher Rouse
Distributed by Paramount Pictures
Release date(s) May 11, 2003 (Tribeca Film Festival)
May 30, 2003 (United States)
August 21, 2003 (Australia)
September 19, 2003 (United Kingdom)
Running time 110 min.
Country United States
France
United Kingdom
Language English
Russian
Italian
Budget $60,000,000[1]
Gross revenue $176,070,171[1]

குறிப்பு ...ஒரு படம் பார்த்த படமோ பார்க்காத படமோ விமர்சனம் எழுதும் முன் அந்த படத்தை பார்த்து எழுதுவது எனக்கு பிடிக்கும் அந்த வகையில் ஒர படம் பார்த்து உள்வாங்கி விரிவாய் விமர்சனம் எழுத குறைந்தது 5 மணி நேரம் செலவாகின்றது அந்த வகையி்ல் நீங்கள் கொடுத்து வரும் ஆதரவுக்கு என் நன்றிகள்


அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

கமல் காப்பி அடிப்பவரா?



போன பதிவான பர்சூட் ஆப் ஹேப்பி படத்தின் விமர்சனத்தில் ஹாலிவுட் நடிக்ர் வில்ஸ்மித்தை கமலுக்கு இனையான என்று வார்த்தையை போட பலர் வருத்தப்பட்டு பின்னுட்டம் இட்டார்கள்... கமல் ஒரு நல்ல நடிகனே அல்ல அவர் எல்லாவற்றையும் ஆங்கில படத்தில் இருந்தது காப்பி அடித்து ஓப்பேற்றுகின்றார் என்ற அளவில் பதில் போட்டு இருந்தார்கள்...

காப்பி அடிப்பது என்றால் என்ன???
இங்கு எதுவும் சுயம்பு அல்ல, எல்லாமே மனிதர்களின் வலிகளும் அனுபவங்களும் மற்றவனுக்கு பாடம்...நம் பாடத்திட்டமே ஈ அடிச்சான் காப்பி முறைதான்...சினிமா நமது கண்டுபிடிப்பே அல்ல... அது நமது நாட்டுக்கு அறிமகமானபோது பல வெளிநாட்டினர் வந்து மொழி தெரியாமல் இந்தியா வந்து வேலை செய்து விட்டு போனார்கள் (உம்) எல்லிஸ் டங்கன்... இன்று தமிழகத்தில் பலர் சிகரெட்பிடிக்க காரணம் திரைபடங்களில் நாயகன் ஸ்டைலாக சிகரேட் பிடிப்பதுதான்... ஏன் நானே அப்போது ரஜினி ரசிகனாக இருந்த போது வெறும் பேப்பரை சுற்றி மண்ணெண்னைய் விளக்கில் அந்த பேப்பரை கொளுத்தி, சிகரெட் பிடித்து இரும்பி அம்மாவிடம் மாட்டி வாயில் ரெண்டு போடு போட்டு, நான் சிகரேட் பிடித்தது கூட ரஜினி என்ற தனிமனிதனின் அப்பட்டமான காப்பிதான்.....

பிள்ளைகளின் முதல் ஹீரோ அப்பாதான் அவரை பார்த்து அவர் மீசை வைத்துக்கொள்வது போல் வைத்துக் கொள்வதும் அவரை போல் கிருதா வைத்துக்கொள்வதும் எல்லாமே ஒரு காப்பிமயம்தான்..

இன்று நான் எழுதும் எழுத்து எதாவது ஒரு எழுத்தாளனின் காப்பிதான் அந்த எழுத்தாளர் வேறு ஒருவரை காப்பி அடித்து இருப்பார்... இதில் காப்பி என்பதை விட ஆதார தழுவல் என்ற வார்த்தை ரொம்ப பொறுத்தமாக இருக்கும்.... கேட்ச்மீ இப்யு கேன் படத்தை போல இருந்தது என்று சொன்னதற்க்கு எல்லா போலிஸ் திருடன் கதையும் அப்படித்தான் இருக்கும் என்று சொன்னார்கள்...அது மிகவும் சரிதான் .... ஆனால் ஒரு படத்தை கமல் ஈ அடிச்சான் காப்பியாக அடிக்ககின்றாரா என்பதே என் கேள்வி... சரி ஈ அடிச்சான் காப்பி என்பது என்ன? தெலுங்கில் எடுத்த பிரபுதேவா படத்தை துளியும் அதாவது காஸ்ட்யூம் கூட மாற்றாமல் சம்திங் சம்திங் எடுத்தால் அது ஈ அடிச்சான் காப்பி... அது கூட பல கோடி ரூபாய் முதல் போட்டு நடத்தும் வணிகம் சிலர் அப்படித்தான்....


சரி கமல் அப்படியே காப்பி அடித்தாலும் அந்த படத்தின் ஒன்லைன் ஆர்டர் மட்டும் எடுத்து கதை பண்ணுவார்.... தேவர் மகன் வந்த போது பங்க் வைத்து அலைந்த கூட்டத்தில் நானும் ஒருவன்...தமிழகத்தில் எம்ஜீ ஆரை போல சிவாஜி போல ரஜினி போல தன் வாழ்க்கையை காப்பி வாழ்க்கையாக வாழ்ந்தவர்கள் ஏராளம்.... இலக்கியத்தில் சுவை குன்றாத இலக்கியம் என்று போற்றபடும் கம்பராமாயனம், வால்மீகியால் எழுதப்பட்ட ராமாயணத்தை கம்பர் தன் நேட்டிவிட்டிக்கு ஏற்றார் போல் எழுதினார், அதனால் அவர் காப்பியடித்தது என்று சொல்ல முடியுமா?

சரி இதையெல்லாம் கூட பொறு்த்துக்கொள்ளலாம் ஆனால் கமலுக்கு நடிக்க தெரியாது என்பது போல் சொன்னதுதான் என்னை வருத்தம் கொள்ள செய்தது...

சலங்கை ஒலியில் கமல் டெல்லியில் நடக்கபோகும் நாட்டிய நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அழைப்பிதழை புரட்டிக்கொண்டே, அந்த மேதைகளை பற்றியம் அவர்கள் சிறப்புபற்றியும் சொல்லிக்கொண்டே வர சில பக்கங்கள் கழித்து அவர் போட்டோ இருக்க அப்போது கமல் காட்டும் எக்ஸ்பிரஷன்ஸ் வேறு யாராலும் நினைத்த கூட பாரக்க முடியாத நடிப்பு அது... அந்த பரவசத்தை பார்வையாளனுக்கு வர வைப்பவனே நல்ல நடிகன் ஆவான்.....

கமலின் ஏழு படங்கள் ஆஸ்கார் விருதுக்கு அனுப்பபட்டன.. இந்தியாவில் நான்கு தேசிய விருதுகளையும், 18 பிலிம் பேர் விருதுகளையும் பெற்ற ஒரே நடிகர் கமல்தான்...

இந்த கட்டுரை படித்த பிறகும் ஆம் கமல் காப்பி ஆடிப்பவர், நடிக்க தெரியாதவர் என்று நீக்ஙள சொன்னால் எனது பதில் ஆம் கமல் காப்பி அடிப்பவர்தான், நடிக்க தெரியாதவர்தான்...


அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

சாலை ஓரம் உட்கார்ந்து கொண்டு ஆசிர்வதிக்கும் கடவுள்கள்....

(வேளச்சேரி ரோட்டில் இருக்கும் ஒரு ஆலயம்)

பொதுவாக இந்தியா வளர்ச்சி அடைந்து கொண்டு இருக்கின்ற ஒரு நாடு...திட்ட மிட்ட நகரம் என்பது இந்தியாவில் ஒரு சில இடங்களை தவிர வேறு எங்கும் இல்லை...எனக்கு தெரிந்த வரையில் பிரெஞ்சுகாரர்கள் ஆட்சி செய்த புதுவையை தவிர திட்ட மிட்டநகரம் என்பதை நான் வேறு எங்கும் நான் கண்டதில்லை...(எனக்கு தெரிந்தவரையில் நான் சொல்லி இருக்கின்றேன்)

நெய்வேலி, கல்பாக்கம் போன்ற அரசு ஊழியர்கள் தங்கி வேலை செய்யும் இடங்களை திட்டம் இட்டு உருவாக்குவதால் அந்த டவுன்ஷீப்புகள், எந்த இடத்தில் கோவில், எந்த இடத்தில் குளம் ,எந்த இடத்தில் சர்ச், எந்த இடத்தில் மசூதி, போன்றவற்றை திட்டமிட்டு உருவாக்கி அதற்க்கான இடம் அமைத்து கொடுக்க, அது போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லாமல் இருக்கின்றது... மக்களும் எந்த சிரமும் இன்றி வழிபாடு செய்கின்றனர்....

ஆனால் தமிழகத்தின் பல பகுதிகளில் அப்படி அல்ல.. கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சி பெற்றவை... கும்பகோணத்தில் தெருவுக்கு தெருவுக்கு கோவில் வைத்து வணங்கி வழிபட்ட சமுகம் நம்முடையது என்றால் அது மிகையில்லை..

சென்னை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளை எடுததுக்கொண்டால் எல்லா இடத்திலும் அம்மன் கோவில் மற்றும் பிள்ளையார் கோவில் இல்லாத இடங்கள் இல்லை எனலாம்.... ஆனால் இதில் பெரும்பாலான கோவில்கள் இருப்பதும் தெருவின் ஓரத்தில்....

உதாரனமாக வேளச்சேரி, ராமாபுரம், வளசரவாக்கம் போன்ற இடங்கள் எல்லாம் 15 வருடங்களுக்கு முன்பு குட்டையும் ,குளமுமாக, ஏரியாக, முள் புதர்களாக காட்சி அளித்தவை... அப்போதில் இருந்தே இந்த இடங்களி் ல் வசித்த மக்கள் சாலையோரங்களில் கோவில் கட்டி வைத்து வழிபட ஆரம்பித்தார்கள்...

ஆனால் இன்று சென்னை வாழ் மக்கள் தொகையின் அளவும், வாகன பெருக்கமும், கட்டுக்கடங்காமல் போய் கொண்டு இருக்ககின்றது... அது மட்டும் இல்லாமல் சாலையோரம் உள்ள வேப்ப மரம் மற்றும் அரச மரங்கள் எல்லாம் திடிர் மஞ்சள் துணி கட்டிக்கொண்டு எதாவது ஒரு அம்மன் பேர் வைத்து மக்கள் வழிபட ஆரம்பித்து விட்டார்கள்....


மற்ற மதத்து கோவில்கள் இந்து கோவில்களை காட்டிலும் ரேஷியோவில் மிகவும் பின்தங்கி காணப்படுகின்றன... சர்ச்களும் மசூதிகளு்ம் இது போன்று சாலை ஓரங்களில் மிகவும் குறைவு....அதற்க்காக இல்வே இல்லை என்று யாரும் வாதம் செய்ய முடியாது....

பொதுவாக இந்த மாதிரி கோவில்கள் சிறிய அளவில் தோன்றுகின்றன... தோன்றும் போது சாலையில் இருந்து பின்புறம் அதாவது 20 அடி பின்னேதான் இருக்கின்றன... ஆனால் கோவிலுக்கு நிதி சேர சேர முதலில் கோவிலுக்கு முன் ஒரு சிறிய அளவிலான முன் மண்டபம் கட்டி அது சாலையின் முனை வரை வந்து விடுகின்றது...

மதப் பிரச்சனை என்பதால் போக்குவரத்து போலிசார் மற்றும் அந்த பகுதி மக்களே கூட வாய் பொத்தி மவுனம் காக்க வேண்டி உள்ளது...ஒரு தெருவில் ஒரு கிலோமீட்டருக்கு ஒரு கோவில் வீதம் இருப்பதுதான் இதில் ஆச்சர்யமான விஷயம்....

வேளச்சேரியில் இருந்து விஜய நகர் பெருந்து நிலையம் செல்வதற்க்குள் சின்னதும் பெரிதுமாக சாலையோர கோவில்கள் எப்படியும் அந்த 5 கீலோமீட்டர் இடைப்பட்ட பகுதியில்.. குறைந்தது 5 கோவில்களாவது இருக்கும்...
(மேலுள்ள படம் விஜய நகர் போகும் வேளச்சேரி பைபாஸ் சாலை சிக்கனல் அருகில் இருக்கும் கோவில்....)

கோவில் என்பது மனம்முவந்து பிரார்த்தனை செய்யும் இடம்... எந்த சத்தமும் இல்லாமல் மனதை தனிமை படுத்தும் இடமாக இருக்க வேண்டும்.... எந்த கார் சத்தமோ அல்லது எந்த தண்ணீர் லாரி சத்தமோ நமது பிராத்தனையை கலைக்க கூடாது....

ஆனால் அப்படி எடுத்துக்கொண்டால் தமிழகத்தின் பல பகுதிகளில் பல கோவில்கள் சாலையோரத்தில் இருக்கின்றது...ஆடிமாசத்தின் போது அம்மன் கோவில்களுக்கு விழா எடுக்கும் விதமாக கோவிலுக்கு முன் பெரிய பந்தல் போட்டு சாலையில் பயணிக்கும் பலருக்கு இடைஞ்சல் எற்படுத்துகின்றார்கள்...
அலங்கார மின் விளக்கு வைக்க, அரசியல்வாதிகள்தான் நேற்று போட்ட ரோட்டை மனசாட்சி இல்லாமல், குழி தோண்டி நாஸ்த்தி செய்கின்றர்கள் என்றால் ,ஆன்மீக அருள் பெயரில் இவர்களும் அரசியல்வாதிகளுக்கு நாங்கள் சற்றும் சலைத்தவர்கள் அல்ல என்பதை காலம் காலமாய் இவர்களும் நிருபித்து வருகின்றனர்....
(வேளச்சேரி செல்லும் சாலையல் ஓரு ரோட்டோர ஆலயம்...)


விருகம்பாக்கம் நேஷனல் தியேட்டர் அருகில் இருக்கும் வேம்புலி அம்மன் கோவில்... வளசரவாக்கம் மற்றும் வடபழனி, போரூர் வாசிகளுக்கு நன்கு தெரியும்... ரோட்டில் அதன் வாசல் இருக்கும் அந்த இடத்தில் ஒரு லாரி வளையவே சிரமபடும் இடம் அது... ஆனால் அந்த இடத்தில் நேற்று அம்மனுக்கு பாட்டுகச்சேரி வைக்க ரோட்டை அடைத்து பந்தல் போட்டு டிராபிக்கை படுத்தி எடுத்து விட்டார்கள்.. இன்னும் பிள்ளையார் சக்தி திருவிழா வேறு வரப்போகின்றது....

தினமும் நாம் போகும் ரோடு... இரவுதானே ... சீக்கரம் போய் படுக்கலாம் என்று அந்த வழியே போனால் கயிறு கட்டி ரோட்டை அடைத்து சற்று துரத்தில் கலர் கலர் லைட் அடித்து செல்லாத்தா எங்கள் மரியாத்தா பாடுவதற்க்கு பதில் ... கண்ணதாசன் காரக்குடி பேரைச்சொல்லி ஊத்திக்குடி என்று அம்மனுக்கும் பிள்ளையாருக்கும் பக்தியோடு சொல்லி வைப்பார்கள்....

ரோட்டை ஆக்கிரமிக்க இந்த ரோட்டு ஓர கோவில்கள் பெரிதும் பயன்படுகின்றன...அந்த கோவிலுக்கு பக்கத்தில் பூக்கடை வெற்றிலை பாக்கு தேங்காய் கடைகள் முலைத்து, அக்கிரமிக்க அதே நேர் கோட்டில் பக்கத்து கடைகாரர்கள் முன்னே வந்து தங்கள் ஆக்கிரமிப்பை வைத்தக்கெள்கின்றார்கள்..
மேலுள்ள படத்தில் இருக்கும் கோவில் ராமபுரத்தில் உள்ள ரோட்டோரத்தில் இருக்கும் வினாயகர் கோவில் காலையில் இங்கு ஏற்படும் போக்குவரத்து நெரிசல் சொல்லி மாளாது....இந்த வழியாக அலுவலகத்து போகின்றவர்கள்,மற்றும் ஈஸ்வரி பொறியல் கல்லூரி பேருந்துகள், எஸ் ஆர் எம் பல் கல்லூரி பேருந்தகள் எல்லாம் இந்த வழியாக செல்ல வேண்டும்... கூடவே இந்த தடத்து அரசு பேருந்துகள் மற்றும் மணல் லாரி தண்ணீர் லாரி போன்றவைகளை கணக்கில் எடுத்துக்கொள்ளுங்கள்... எல்லாம் இந்த வழியாக பயணிக்கும் போது போக்குவரத்து நெரிசல் எப்படி இருக்கும் என்று யூகித்து கொள்ளுங்கள்....

மேல்மருவத்தூர் கோவில்15 வருங்களுக்கு முன் தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் இருந்தது... மக்களின் ஏகோபித்த ஆதரவுக்கு பின் நெடுஞ்சாலையே சற்றே நகர்ந்து வளைந்து போனது வரலாறு.

தென் மாவட்டத்துக்கு சாலைவழியாக பயணம் செய்பவர்கள் இதை கவனித்து இருக்கலாம்... தாம்பரம் தாண்டியதும் வேகம் எடுக்கும் பேருந்துகள் பெருங்களத்தூர் அருகில் வேகம் குறையும் அங்கே ரோட்டு ஓரமாக இருக்கும் அம்மன் கோவிலில் சாமி கும்பிட நடு ரோட்டில் நிறுத்தி எலுமிச்சை பழம் வைத்து நம் மக்கள் செய்யும் அராஜகம் வார்த்தைகளில் சொல்ல முடியாது...
வழிபாட்டை நான் குற்றம் சொல்லவில்லை... ஆனால் அதனை செயல்படுத்தும் மக்களின்மீதுதான் எனது வருத்தங்கள் எல்லாம்... இதனால் பலதரப்பட்ட ம்க்கள் பாதிக்கபடுகின்றார்கள்....

எங்கள் ஊர் கடலூரில் இதே போல் சாலை யோரத்தில் இருந்த ஐயனாரை ரோட்டில் காரை நிறுத்தி வழிபடும் போது பள்ளி பிள்ளைக்ளை ஏற்றிக்கொண்டு வந்த வேன் எதி்ரில் வந்த பேருந்தில் மோதி, சம்பவ இடத்தில் பத்துக்கு மேற்பட்ட குழந்தைகள் இறந்து பேனார்கள்...

மேற்சொன்ன கோவில்களில் சன் டீடிஎச் விளம்பரம் போல் வாகனத்தி்ல்போகும் போது, நானும் சலாம் போட்டு கற்புரம் ஏற்றி வழிபட்டு சென்று இருக்கின்றேன் ஆனால் ரோட்டில் மற்றவர்களுக்கு பிரச்சனை ஏற்படுத்தாமல் வழிபட்டு இருக்கின்றேன்....

எந்த கடவுளும் இந்த இடத்தில் கோவில் கட்ட வேண்டும் என்று அடம் பிடிப்பதில்லை ஆனால் மக்கள்தான் கடவுளின் பெயரை சொல்லிஎல்லாவற்றையும் செய்கின்றனர்..... இந்த சாலையோர கோவில்களால் ஏற்படும் விபத்துகள் கொஞ்சம் நஞ்சம் அல்ல.. இதனை உணர்ந்து பொதுமக்களும் அதற்க்கு ஏற்ற வகையில் பெதுமக்களுக்கும் வாகன போக்குவரத்துக்கும் இடைஞ்சல் ஏற்படுத்தாத வகையில் வழிபாட்டு தளங்களை அமைக்க வேண்டும் என்பதே எனது ஆசை....

மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வரையில் விழிபாட்டுதளங்களை அமைக்கலாம் ஆனால் அதற்க்கு பெரிய மனது வேண்டும்... நம்மவர்கள் அதனை எப்போதும் ஈகோ பிரச்சனையாக பார்ப்பார்கள்...
ஆம் இந்தியா கலாச்சார பெருமைகள் தன்னகத்தே கொண்டவளரும் நாடு அல்லவா?????


அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

(THE PEACE MAKER) தொலைந்து போன பத்து அணுகுண்டுகள்...


நரைத்த தலையோடு ஒருவன் மிக கவர்ச்சியாக இருக்க முடியுமா? உலகின் மிக அழகான செக்சியான ஆண்கள் பட்டியலில் இவன் பெயரும் இடம் பெற்றது... அந்த நடிகனின் பெயர் George Clooney பொதுவாய் இந்த நடிகனின் கண்கள் பல செய்திகளை சொல்லும்...நல்ல அற்புதமான உடல்வாகுக்கு சற்றே பொறுத்தம் இல்லாத George Clooney கண்கள்தான் அவரின் பெரிய பிளஸ்....


அமெரிக்கர்களை பொறுத்தவரை அவர்களது படங்களில் எதையாவது தொலைத்துவிட்டு தேடுவது என்றால் அவர்களுக்கு இருட்டு கடை அல்வா சாப்பிடுவது போல் ரொம்பவும் பிடித்தமான விஷயம்..
தேடிக்கண்டுபிடித்த கண்டம் என்பதால் தெடுதல் ரொம்ப பிடித்தமான விஷயம் போலும்....

பொதுவாக அணு ஆயுதம் பற்றி அதன் பிரச்சனைகள் பற்றி இந்தியர்கள் அதிகம் அறிந்து இருக்க வாய்பில்லை ... எனக்கு தெரிந்து தமிழகத்தில் விக்ரம் படம்தான் பட்டி தொட்டி ரசிகர்களுக்கு ராக்கெட் எதிரி கைகளில் மாட்டினால் ஏற்படும் சேத விபரங்களை ஓரளவு விளக்க முயற்ச்சித்து எனலாம்...

இருந்தாலும் படித்தவர்கள் இரண்டாம் உலக போரின் போது ஜப்பான் ஹீரோஷிமா நாகசாகி போன்ற நகரங்கள் அமெரிக்கா போட்ட அணுகுண்டால் தரைமட்டம் ஆனதை எல்லோரும் அறிவார்கள் அந்த பயம்தான் இந்த பீஸ்மேக்கர் படத்தின் அடி நாதம்....

பீஸ்மேக்கர் படத்தின் கதை இதுதான்......

ரஷ்யாவில் இருந்து பத்து அணுகுண்டுகள் ரயில் மூலம் மிகவும் பாதுகாப்பான இடத்துக்கு எடுத்து செல்லும் போது அந்த பத்தையும் பக்கத்து ரயில் டிராக்கில் வரும் ரயிலில் வம் எமகாதகர்கள்.. எல்லா ராணுவ வீரர்களையும் கொன்று விட்டு அந்த பத்து குண்டையும் அபேஸ் செய்து விடுகின்றார்கள்.... போகும் போது பத்து குண்டில் ஒரு குண்டை வெடிக்க செய்து அதனை விபத்து போலஜோடனை செய்கின்றனர்.... ஆனால் அமெரிக்காவின் ஒயிட் அவுசில் குப்பை கொட்டும் Julia Kelly (Nicole Kidman)க்கு மட்டும் இது விபத்து அல்ல... விபத்து போர்வையில் நடந்த அணுகுண்டு கொள்ளை என்பதை கண்டுபிடிக்கின்றாள்...Lieutenant Colonel Thomas Devoe (George Clooney) ஒரு யூ எஸ் ஆர்மி ஸ்பெஷல் ஆபிசர் ... ரஷ்யாவுக்கு போன் போட்டு கேட்கும் போது ரஷ்யா நடந்த திருட்டை மூடி மறைப்பதை அறிந்து கொண்டு...கிட்மேன்,குளுனி இருவரும் தொலைந்து போன அணு ஆயுதத்தை தேடி செல்கின்றார்கள்...

கடத்தலின் பின்புலம் என்ன???
கடத்தல்காரர்கள் யார்?
நுனியும் தெரியாமல் அடியும் தெரியாமல் அந்த இருவரும் என்ன கிழித்தார்கள்?

ஏன் ?எங்கு அணுகுண்டு தொலைந்தாலும் அமெரிக்கா பதறுகின்றது போன்ற நியாயமான கேள்விகளுக்கான விடையை வெண்திரையில் காண்க...

படத்தின் சுவாரஸ்யங்களில் சில....

படத்தின் இயக்குனர் Mimi Leder டீப் இம்பெக்ட் என்ற படத்தை இயக்கியவர் ...இந்த படத்தின் விறு விறுப்பும் ஆக்ஷன் காட்சிகளும் சான்சே இல்லைஎனலாம்....

படத்தின் முதல் காட்சியான அணுகுண்டு கடத்தும் அந்த முதல் காட்சியும் அதன் ஒளிப்பதிவும் அற்புதம் Dietrich Lohmann...காட்டிய உழைப்பு அந்த முதல் பத்து நிமிடம் போதுமானது....

இரண்டு ரயில்களும் மோத போகின்றது என்பதை பார்வையாளனுக்குள் ஒரு பதட்டத்தை உருவாக்க பயணிகள் ரயிலையும் அதன் சந்தோஷங்களை காண்பித்துவிட்டு அதே டிராக்கில் அணுகுண்டு ரயில் வருவதை காட்டுவதும்....

ஜன்னல் ஓர இருக்கையில் இருக்கும் தாயின் மார்பில் பால் குடித்து கொண்டு இருக்கும் குழந்தையில் இருந்து கேமரா மெல்ல வெளியே வந்து எதிர் வரும் ரயிலை காட்டி நடக்க போகும் வீபரீதத்தை புரிய வைக்க அந்த ஒரு காட்சி போதும்.....

நிக்கோல் அறிமுகம் அகும் அந்த முதல் காட்சி ஒரு நீச்சர் குள காட்சி அந்த காட்சியின் போது கேமரா தண்ணீரில் இக்கும் போது நீக்கோல் சுழல்வதை போலவே பார்வையாளனும் சழல்வதை போல் படம் எடுத்து இருக்கும் ஒளிப்பதிவாளர் Dietrich Lohmann பாராட்டபட வேண்டியவர்..

நிக்கோல் ஒரு வெள்ளை சட்டை ஒரு ஸ்கர்ட் அணிந்த படி வேகமாய் நடந்து வரும் காட்சி கவிதை ரகம்...அந்த பெரிய இடத்தின் வளமையும் நடையும் அற்புதம்... பின்ன ஒயிட் அவுசில் வேலை என்றால் சும்மாவா?

நிக்கோல் நடிகர் டாம்குரிசின் முன்னாள் மனைவி....

குளுனி பார்மல்சில் வரும் காட்சிகளில் அவர் கம்பீரம் அபாரம்...அதை விட அந்த கிளைமாக்ஸ் காட்சிக்கு முன் அந்த பாலத்தில் நடக்கும் சண்டைகாட்சிகள் அற்புதம்...

குளுனி ஒரு ஸ்கிரீன் பிளே ரைட்டர்,தயாரிப்பாளர்,இயக்குனர் போன்ற பன்முகதன்மை கொண்டவர்
எனக்கு முதன் முதலில் சேர்ட்டிலைட் மூலம் பூமியில் போகும் காரின் என்னை வாசிக்க முடியும் என்பதை இந்த படத்தின் மூலம்தான் தெரிந்து கொண்டேன்..

ஆஸ்திரேலியாவில் சில விபரங்களை சேகரிக்க போகும் அந்த காட்சியும், கம்யூட்டரில் இருந்து தகவல் காப்பி செய்யும் அந்த காட்சி விரல் நகம் கடிக்க வைக்கும்....

ஒரு பென்ஸ் கார் இந்த படத்தில் குளுனியால் நாய் அடி பேய் அடி படுவதை பார்த்தால் கார் ரசிகர்களுக்கு கண்ணில் நீர் வரவழிக்க வைக்கும் காட்சி அது...அது போல் அந்த காட்சிக்கு முன் இருக்கும் கார் சேசிங் ஏ ஒன் ரகம்...

ஆக்ஷன் பட ரசிகர்கள் இந்த படத்தை தவற விட கூடாது...

அதிகார வர்க நாடுகள் தங்கள் சுய லாபத்துக்காக மேற்கொள்ளும் விஷயங்கள் எப்படி தனிமனிதனை பாதிக்கின்றது என்பதையும்....

வில்லன் அமெரிக்கவிடம் டிவியில் மிரட்டல் விடுக்கும் போது பேசும் டயலாக்குகள் மிகவும் அற்புதமானவை....

படக்குழுவினர் விபரம்....

Directed by Mimi Leder
Written by Michael Schiffer
Starring George Clooney
Nicole Kidman
Marcel Iureş
Music by Hans Zimmer
Cinematography Dietrich Lohmann
Distributed by DreamWorks
Release date(s) September 26, 1997
Running time 124 min.
Language English
Budget $50 milliom
Gross revenue Domestic:
$41,263,140
Worldwide:
$110,463,140

அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

(POINT BREAK)முன்னாள் அமெரிக்க அதிபர்கள் கொள்ளை அடித்தால்...????


கொள்ளை அடிப்பது ஒரு கலை...அந்த கலையை திரில்லுக்காக செய்வது என்பது சிலருக்கு பொழுது போக்கு...ஆனால் செய்யும் தொழிலில்.. எந்த தொழிலாக இருந்தாலும் மற்றவர் கவனிக்கும்படி செய்வது என்பது, பலருக்கு பிடித்து காரியம்தான் ... லீகலாக செய்வது என்பது எப்போதும் பிரச்சனை வராது ...

ஆனால் சட்டத்துக்கு புறம்பாக செய்யும் வேலையை பலர் கவனிக்கும்படி செய்வது என்பது சாதாரண காரியம் அல்ல... அதற்க்கு மிகுந்த துணிச்சல் வேண்டும்... வாழ்க்கையில் எது நடந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்ற அலட்சியம் வேண்டும்....மிகுந்த கட்ஸ் வேண்டும்... நெஞ்சில் உதை வாங்கும் தில் வேண்டும்

எல்லோராலும் இது போன்ற திரில்லை அனுபவிக்க முடியாது....கமிட்மென்ட் இல்லாத வாழ்க்கை வாழ்பவர்களுக்கே இது சாத்தியம்.... கூட இருக்கும் நண்பர்களிடத்திலும் இந்த தைரியம் வேண்டும்..... அப்படி பேங்கை கொள்ளை அடிக்கும் திரில் திருடர்களை பற்றிய கதைதான் அவுட் பிரேக் படத்தின் கதை...

பாயின்ட் பிரேக் படத்தின் கதை இதுதான்...
அவர்கள் வித்யாசமான பேங்க் கொள்ளையர்கள்... அவர்கள் கொள்ளை அடிக்கும் போது முன்னாள் ஜனாதிபதிகளின் முகமூடிகளை அனிந்து கொள்ளை அடிப்பார்கள்.. (உம் )ரீகன், நிக்சன்.....

4 பேர்,27 பேங்க் கொள்ளைகள்... மூன்று வருடமாக செய்து கொண்டு இருக்கின்றார்கள்...ஒருவரையும் சுட்டது இல்லை... எவருக்கும் காயம் ஏற்படு்த்தியது இல்லை...பேங்க் லாக்கருக்கு போய் டைம் வேஸ்ட் செய்வதில்லை.. காலை பத்து மணியில் இருந்து மதியம் இரண்டு வரை கலெக்ஷன் ஆகும் பேங்க் கல்லா பணத்தைதான் அவர்கள் கொள்ளை அடிப்பார்கள்... எந்த பேங்கிலும் 90செகன்ட் அதாவது ஒன்றரை நிமிடம்தான் அவர்கள் நேரத்தை செலவிடுவார்கள்.... போகும் போது ஒருவன் மட்டும் பேண்டை அவிழ்த்து பின்பக்கம் ஒரு பக்கத்தில் தேங்கும் மற்றோரு பக்கத்தில் யூவும் எழுதியதை அவிழ்த்து காட்டி விட்டு செல்வார்கள்.... தேங்க்யுவை அவன் பட்டில் எழுதியது தவிர போலிசிடம் வேறு எந்த க்ளுவும் இல்லை.....


இந்த கேசை கண்டுபிடிக்க Johnny Utah (Keanu Reeves) வருகின்றார் அவருக்கு நண்பராகAngelo Pappas (Gary Busey) துப்பறிகின்றார்கள்...அவர்கள் கடல் அலையில் சறுக்கி விளையாடுபவர்கள் என்பதை கண்டுபிடிக்கின்றார்கள்.... கடல் சறுக்கல் கற்றுக்கெள்ள போய் அவர்களை பிடிக்கலாம் என்று நினைக்கின்றான்.... அதற்க்குTyler Endicott (Lori Petty) உதவுகின்றாள்... அவன் அந்த முன்னாள்அமெரிக்க அதிபர்கள் முகமுடி பேட்டு கொள்ளை அடிக்கும் அந்த கொள்ளை கூட்டத்தை எப்படி கண்டுபிடித்தான் என்பதை விறுவிறுப்பாய் வெண்திரையில் காணுங்கள்......

படத்தின் சுவாரஸ்யங்களில் சில.....

நம்புங்கள் இந்த திரில்லர் படத்தின் இயக்குனர் ஒரு பெண்...செம அட்டகாசமான திரைக்கதை....
மேலே இருக்கற ரெண்டு படத்திலயும் இருக்கும் இந்த அம்மாதான் இந்த படத்தைதோட இயக்குனர் இவர் நடிகையும் கூட..

இந்த படத்தின் தயாரிப்பாளார் நம்ம டைடானிக் படத்தின் இயக்குனர் ஜேம்ஸ் கேமரோன்...இந்த படம் எடுக்கும் போதுதான் தலைவருக்கு திருமணம் நடந்தது..

படத்தின் ஹீரோ கெனுரிவீஸ் இந்த படத்திற்க்கு ஒப்பந்தம் போட்ட போது ஒரு சின்ன கதாபாத்திரத்துக்கு அழைத்து பின்பு பெரிய கதாபாத்திரம் வழங்கபட்டது..

இந்த படத்தின் உண்மையான ஹீரோ படத்தின் ஒளிபதிவாளர்Donald Petermanதான் என்றால் சந்தேகமே இல்லை...

கடல் சறுக்கு பற்றிய பின்புலம் என்பதால் படத்தின் பல காட்சிகள் ஓல்டுஸ்பைஸ் விளம்பரத்தை நினைவு படுத்தும்....கேமரா கோணங்கள் சான்சே இல்லை....


முக்கிய காட்சியாககெனு ஒரு கொள்ளைகாரனை துரத்தும் காட்சி பத்து நிமிட காட்சி... இந்த காட்சியில் கேமராமேனின் உழைப்பும் டைரக்டரின் எண்ணமும் திரையில் பிசகு இல்லாமல் காட்சிபடுத்தி இருப்பார்கள்...இந்த காட்சி பரபரப்பான காட்சி என்பேன்....என்னதான் படத்தை பற்றி ஆகா ஓகோ என்று புகழ்ந்தாலும் கிளைமாக்ஸ் மற்றும் பல காட்சிகள் இடைவேளைக்கு பிறகு கொஞசம் போர்.... அந்த தொய்வை நீக்கி இருந்தால் இந்த படம் பார்த்தே தீர வேண்டிய படங்கள் லிஸ்ட்டில் போய் இருக்கும்...இருந்தாலும் பார்க்கவேண்டிய படம் இது.... ஒளிப்பதிவுக்காக கண்டிப்பாக பார்க்கவேண்டிய படம்...

காதலிக்காக, அவள் உயிருக்காக எத்தனை பேரை ஒரு எப் பி் ஐ காரன் இழப்பான் என்று என் மனைவி படம் முடிந்ததும் கேட்டால்... அது நியாயமான கேள்வியும் கூட...

படக்குழுவினர்விபரம்...

Directed by Kathryn Bigelow
Produced by James Cameron
Peter Abrams
Robert L. Levy
Written by W. Peter Iliff
Starring Patrick Swayze
Keanu Reeves
Gary Busey
Lori Petty
John C. McGinley
James LeGros
Cinematography Donald Peterman
Editing by Howard L. Smith
Distributed by 20th Century Fox
Release date(s) July 12, 1991
Running time 123 minutes
Country United States
Language English
Budget $24,000,000 (estimated)
Gross revenue $83,531,958 (Worldwide)


அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

சாண்ட்விச் அன்ட் நான்வெஜ்.18+ (17,08,09)

ஆல்பம்....

மெரினாவில் பிளாஸ்டிக் பொருட்கள் தடையை அறிவித்து அது நேற்றில் இருந்து அமுலுக்கு வந்து இருக்கின்றது... வந்த நாளே நான் மெரினாவுக்கு என் மனைவியுடன் போன போது இரண்டு சுக்கு காபி கேட்ட போது பிளாஸ்டிக் கப்பில்தான் டீக்காரர் கொடுத்தார்... அதே போல் அந்த கப்பை குப்பை தொட்டியில் வீச, குப்பை தொட்டி தேடிய போது குப்பைதொட்டியை கானோம்....தீவிரமாக எப்போது அமுல்படுத்த போகின்றார்கள் என்று தெரியவில்லை....

சென்னையில் கொழுப்பெடுத்து திரியும் சில அதிகார வர்கத்து பசங்கள் செய்யும் அடாவடிக்கு அளவே இல்லை... பைக் ரேசிங் என்ற பெயரில் பொதுமக்கள் அதிகம் புழங்கும் மெரினாவின் சர்விஸ் லேனில் காவாளிப்பசங்கள் ரேஸ் விடுகின்றார்கள்... அமைதியாக உட்கார்ந்து பேசிக்கொண்டு இருக்கும் போதே காது கிழியும் ஓசையுடன் விருட்டென கிளம்பும் பைக்கின் ஓசை .... வியிற்றில் பயத்தை தோற்றுவிக்கின்றது..... எதாவது சின்ன குழந்தைகள் கிராஸ் செய்தால் அந்த குழந்தை நிலையை நினைத்து பார்க்கவே பயங்கரமாக இருக்கின்றது....

ஒரு வாரத்துக்கு முன் இப்படித்தான் நான் சர்வீஸ் லேனில் வந்து கொண்டு இருக்கும் போது ஒரு சனியன் வீலீங் செய்து பைக்கின், முன் சக்கரம் என் வலது கை பக்கம் அருகே சக்கரம் வரும் அளவு மிக நெருக்கமாக.... ஒரு சகடை வீலீங் செய்து என்னை வெறியேற்றியது... இவர்கள் ஒரு குழுவாக இருக்கின்றனர்.. தனியாக இருந்தாலும் புரட்டி எடுக்கலாம்... ஒருவனை புரட்டினால் ஒரு குழுவாக நம்மை புரட்டி விடுவார்கள் என்பதால் என் யோசனையை ஒத்தி வைத்து இருக்கின்றேன்...

மூன்று நாட்கள் முன் டி ஷர்ட் அணிந்த இரு் பெண்கள் பீச்சில் வண்டியை நிறுத்தி ஸ்டேன்ட் போட இரண்டு பேர் அவர்களை அசத்த ஸபீடாக பைக்கின் முன் சக்கரத்தை, யானை தும்பிக்கையால் ஆசீர்வாதம் செய்வது போல் முன் சக்கரத்தை மிக வேகமாக தூக்கி கொண்டு செல்ல.... ரொம்பவும் பைக்கை...மேலே தூக்க பைக் பேலன்ஸ் தவறி... இவர்கள் மேல் விழுந்தது... ஒருவன் காலில், சைலன்சர் சூடு வேறு போட்டுக்கொள்ள.... என்னையும் சேர்த்து யாருமே கீழே விழுந்தவனை தூக்கிவிடாமல் அவன் விழுந்ததை கைதட்டி பலர் ஆரவாரித்தோம்... அதன் பிறகு,காதில் கடுக்கன் போட்ட அவன் நண்பர்கள் குழு வந்தே, அவர்களை தூக்கிவிட்டது... எதிரில் கடை வைத்து இருக்கும் பலர் அவர்கள் விழுந்ததை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை... பீச்சில் வாக்கிங் போன பலரின் எண்ணம் இன்னும் வேண்டும் என்பது போல் இருந்தது.... ஏன் இப்படி இந்த வாலிபர்கள் மற்றவர்கள் வாழ்க்கையோடு விளையாடுகின்றார்கள்... இவர்கள் விழுந்து காலை முறித்துகொண்டால் சோறு போட சொத்து இருக்கின்றது... ஆனால் மற்றவர்களுக்கு......

மிக்சர்...
வாசித்ததில் வருந்தியது.....

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியின் மாணவர்குழு நாட்டுநல பணிதிட்டத்திற்க்காக, ஒரு கோவிலை சுத்தபடுத்தியது.. மதியம் சாப்பிடுவதற்க்கு முன் ஆசிரியர்கள் முதலில் அந்த கோவில் குளத்தில் குளித்து கரையேறி, அந்த குளத்தில் பிள்ளைகளை குளிக்க சொல்ல, குளித்து முடித்து கரையேறிய மாணவர்களில் ஒருவன் தன் தம்பியை கானோம் என கூச்சல்போட ,அந்த பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவன் குளத்தின் சேற்றில் பினமாக....
அழைத்து போன ஆசிரியர்கள்,உடன் இருந்த மாணவர்கள், பக்கத்தில்ஒன்றாக குளித்த அவன் அண்ணன், அவர்கள் மனநிலையை சற்றே நினைத்து பாருங்கள்....

பிராத்தனை...
சகபதிவர் சிங்கைநாதனுக்கு ஏற்பட்ட பிரச்சனைகள், பனி போல் விலகவும் அதற்க்காக தோள் கொடுக்கும் எமது சக பதிவுலக நண்பர்களுக்கும் நினைத்தத எல்லாம் நடக்க எல்லாம் வல்ல பரம்பொருளை வேண்டிக்கொள்கின்றேன்...


இந்த வாரம் குமுதம் புத்தகத்தில் வந்த விளம்பரம்... எப்படியெல்லாம் யோசிக்கறாங்கப்பா....????

வழக்கம் போல் நான்வெஜ் காரம் கம்மியாக இருப்பதாக பல நண்பர்கள் குறைபட்டுக்கொள்கின்றார்கள்....அதாவது நான்வெஜ் ஒரு சின்ன ரிலாக்சுக்காக எழுதுவது... அவ்வளவே...காரம் ஜாஸ்த்தி ஆனால் கண்ணீல் ஜலம் வந்துவிடும் அல்லவா? எப்போதாவது வரலாம்.... அடிக்கடி வருவது உடம்புக்கு நல்லது அல்ல என்பது உங்களுக்கு தெரியாதது அல்ல....


வாழ்த்துக்கள்... எனது நண்பர் கேபிள் இந்தவார தமிழ்மண நட்சத்திர பதிவாராக தேர்ந்து எடுக்கபட்டு இருக்கின்றார்...அவர் சிறப்புடன் செயல்பட வாழ்த்துகின்றேன்....

நன்றி....
படித்தபோது எனது நினைவு வந்து போட்டோ போட்டிக்காக லின்க் கொடுத்து என்னோடு தொபேசியில் செய்தி தெரிவித்த பதிவர் நண்பர் அகநாழிகை வாசுதேவனுக்கு என் நன்றிகள்....


விஷுவல் டேஸ்ட்... நான் எடுத்ததில் பிடித்து.....
படங்களை கிளிக்கி பார்க்கவும்.....

தண்ணீ்ரில் மூழ்கி வெளிவரும் போது எத்தனை நாளைக்குதான் போட்டோ எடுப்பது....ஊட்டியில் தேயிலை பசுமை ஆற்றில் மூழ்கி வெளிவந்தால் எப்படி இருக்கும்??? படத்தில் இருப்பது மாடல் அல்ல எனது மச்சான்...

இது கலிபோர்னியா மேம்பாலம் அல்ல..... சென்னை கத்திப்பரா மேம்பாலம்... பின்புறத்தில் நியான் எழுத்தில் ஜொலிப்பது ... பணக்காரர்கள் இளைப்பாறும் லீராயல் மெரிடின் ஹோட்டல்....
கிண்டி கத்திப்பாரா பாலத்தின் ஒரு அரை வட்டம்....
கிண்டி ரயில்வே ஸ்டேஷனில் இருந்து பூந்தமல்லி நோக்கி வேகம் எடுக்கும் வாகனங்கள்....

நான்வெஜ்....

ஜோக்..1
ஒரு வயசுக்கு மேல ஆம்பிளையா இருக்கட்டும், பொம்பளையா இருக்கட்டும்... கிருஸ்மஸ் மரம் போலதான்.... அந்த மரத்தில் இருக்கும் பால்,பெல், போல எல்லாம் அலங்காரத்துக்குதான்... இது கொஞ்சம் காமெடியானாலும், அதுதான் நிஜம்...

ஜோக்...2
ஒரு நல்ல வேலை ஆணுக்கு கிடைக்க 100பர்சென்ட் டேலன்ட் தேவைபடுகின்றது... ஆனால் பெண்ணுக்கு 4 பர்சென்ட் போதுமானது... மீதி அவர்களிடம்தான் 34.24.36 =96 இருக்கின்றதே.....


ஒரு சின்ன கருத்து....

பூக்களின் மரணம் பெண்களின் கொண்டையில்...
ஆண்களின் மரணம் பெண்களின் புன்......
(பிக்காலி பயலுவலா தப்பா நினைக்கறதே உங்க அம்புட்டு பேருக்கும் பொழப்பா போச்சு.... )புன்னகையில்னு சொல்ல வந்தேன்.....

அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

(BourneSupremacy) ஓடு.... ஓடிக்கொண்டேஇரு....

இரவில் கனவில் சிறு வயதில் ஒரு பாம்பு என்னை வெகு நாட்களாக துரத்திக்கொண்டே இருந்தது... அது எங்கு போனாலும் உயிரை வந்து எடுக்கு்ம் இவ்வளவு ஏன்.. கிராமத்தில் டூ பாத்ரூம் போக முள் செடிகளுக்கு பின்னால் உட்கார்ந்து கொண்டு டைம்பாசுக்கு எதி்ரில் இருக்கும் சிறு கற்களை எடுத்து வேறு ஒரு பெரிய கல்லில் அடித்த படி விளையாட,அப்படியும் இல்லை என்றால் அருகில் இருக்கும் பூண்டு செடி இலைகளை ஒவ்வொன்றாக கிள்ளி நேரத்தை கடத்தும் போது பக்கத்தில் வந்து ஹலோ சொல்லும் அந்த பாம்பு.... இதெல்லாம் கனவில்தான்...

காலையில் விழித்ததும் அம்மாவிடம் சொன்னேன்... அம்மா சொன்னால் பாம்பு கடித்தால் நல்லது என்று... அப்புறம் அந்த பாம்பு என்னை ஒரு நாள் இரவு கனவில் கடித்தும் வைத்ததும்... அதன் பிறகு எங்கு போனாலும் என் கால் கட்டை விரலை கடித்த படி என்னோடு மண்ணில் புரண்ட படி வந்து கொண்டே இருக்கும், கிளாஸ் ரூம், கோவில் என்று நான் எங்கு சென்றாலும் தொடர்ந்து என் காலை கடித்தபடி வந்து கொண்டே இருக்கும்...... அதன் பிறகு அந்த கனவு ஒரு சில வயதுக்குமேல் வரவில்லை....

கனவில் சிலது நடக்கும் சட்டென நம்மை தொட்டு விடும் தூரத்தில் விழப்பு வேறு வந்து தொலையும்...உடல் எங்கும் வியற்வையோடு.. தண்ணிரை தொண்டையி்ல் களுக்கி கொண்டால் அதன் பிறகு தூக்கம் ஓஹோகயாதான்...... இப்படி தொடர்ந்து கனவு வந்து தொந்தரவு செய்து கொண்டே இருக்கும் ஒருவனுக்கு... அந்த கணவின் விடை தேடி புறப்படும் படம்தான்BourneSupremacy படத்தின்கதை....

BourneSupremacy படத்தின் கதை இதுதான்....


இந்த கதை இரண்டாம் பாகம். முதல் பாகத்தில் போர்னை எதிரிகள் துரத்த அதிலிருந்து தப்பிக்க உதவி செய்த பெண் உடன் இந்தியாவில் கோவாவில் ஒரு ரிசார்ட்டில் தங்கி இருக்கின்றான்....
போர்ன் பாத்திரத்தை Matt Damon செய்து இருக்கின்றார்.... போர்னுக்கு தினமும் கனவில் பெர்லினில் உள்ள ஒரு ஓட்டலில் உள்ள ஒரு அரசியல் பின்புலம் உள்ள குடும்பத்தை கொலை செய்த கனவு தினமும் வாட்டுகின்றது.... போர்ன் ஒரு சீஐஎ ஏஜென்ட் அவனுக்கு கொடுக்கபட்ட அல்லது பயற்சி அளிக்கப்டடதே யாரை எப்போது சொன்னாலும் கேள்வி கேட்காமல் கொலை செய்ய வேண்டும் என்பதுதான்... ஆனால் இதற்க்கு நடுவில் ஒரு பெரிய பணமாற்றமும்,கோப்பு மாற்றமும் நடக்க.... இதை அறிந்த ஒரு ஆயில் பிசினஸ் டான், அந்த பைலையும், பெரும் தொகையையும் இடையில் புகுந்து கிரில் என்பவனை வைத்து இரண்டையும் அடித்து விடுகின்றான்.....

சீஐஏவின் பைலும் போச்சு பணமும் போச்சு.... பெரிய அவமானமாக போய் விடுகின்றது... போர்னை உலகம் முழுவதும் வலை வீசி தேடி வருகின்றது இந்தியாவில் இருக்கும் போர்னை இந்தியாவில் வைத்தே தீர்த்து கட்டி விட்டால் பணத்தையும், பைலயும் போர்ன் எடுத்துக்கொண்டு ஓடிவிட்டான் என்று கதை கட்டிவிடலாம் என்று எண்ணி இந்தியாவந்து அவனை கொலை செய்ய முயல... அவனுக்கு பதில் போர்ன் காதலி இறக்கின்றாள்.....

தன் காதலியை கொலை செய்தவனை கண்டு பிடித்து பழி வாங்கினான? சீஐஏவிடம் போர்ன் மாட்னானா? அவ்ன் தரப்பை எப்படி விளக்கினான்? குற்றவாளிகளை அடையாளம் காட்டினானா? போன்றவற்றை வெண்திரையில் பாருங்கள்.....
படத்தின் சுவாரஸ்யங்களில் சில.....

முதல் காட்சியே இந்தியாவில் கோவா என்று டைட்டில் போடும் போதே மனம் புல்லரிக்க தொடங்கும்.....

இந்தியாவில் கோவாவில் போர்ன் உடற்பயிற்ச்சிக்கா காலையில் கோவா கடற்க்ரையில் ஓட அதனை ஆலிவர் உட்டின் கேமரா விடாமல் துரத்த அதற்க்கு ஒரு இந்திய இசையான தப்பு மேளத்தை கலந்து பேக் ரவுன்டில் ஒரு இசையும் போர்னின் ஓட்டமும் உற்சாகமான காட்சி அது.....

கோவாவில் நடக்கும் அந்த கார் துரத்தல் காட்சி அற்புதமான காட்சி அமைப்பு... சேலை கட்டிய நம்மூர் பெண்களை எல்லாம் காட்டும் போது எனக்கு மரிழ்வை தந்தது...

இந்த படத்தின் கேமரா ஒரு சில காட்சிகள் தவிர படம் முழவதும் ஸ்டெடிகேமில் வைத்தே படம் பிடித்து இருப்பார்கள்....

ஏனெனில் திரைக்கதை அப்படியான திரைக்கதை... அதற்க்கு வேகம் கொடுத்து கேமரா பயணி்க்க வேண்டும் ... அதற்க்கு ஈடு கொடுத்து ஒளிப்பதிவாளர்ஆலிவர் வுட் ஒர்க் செய்து இருப்பார்....

ஓட்டம் ஓட்டம் படம் முழுவதும் அதிகார வர்கம் துரத்த தனிமனிதன் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்....

சிங்கத்தை அதன் குகையில் சந்திக்க ஒரு கட்ஸ் வேண்டும் அல்லவா? அந்த கட்ஸ் ஹீரோவுக்கு இருப்பதாக பின்னபட்ட திரைக்கதையி்ல் அந்த காட்சி ரசிகர்களிடம் பெரிதும் பேசப்பட்டது....

Matt Damon ரொம்ப சிறிப்பாக் அவருக்கு கொடுக்கபட்ட வேலையை ரொம்ப சீரியசாக முகத்தை வைத்து கொண்டு படம் முழுக்க விளையாடி இருப்பார்...

இந்த படத்தை பார்த்து முடித்த உடன் ஒரு நிறைவு இருக்கும் அதே போல் அந்த விடாக்கண்டன் வில்லன் உங்கள் நினைவில் இருப்பான்....


ஊரெல்லாம் இவனை தேடிக்கொண்டு இருக்கு சீஐஏ பில்டிங் பக்கத்தில் இருந்து பேசும் அந்த காட்சியை நீங்கள் பார்த்து அனுபவியுங்கள்...

Robert Ludlum என்பவர் எழுதிய கதையின் திரைவடிவம் இந்த படம்....

முடிவில் தான் செய்த தப்புக்கு பிராயசித்தமாக அந்த பெண்ணை சந்திக்க போவது கண்ணீல் நீர் வரவழைக்கும் காட்சி அது... சின்ன டூவிஸ்டுடன் படத்தை பயணிக்க வைத்த இயக்குனர்Paul Greengrass யை எவ்வளவு பாராட்டினாலும் தகும்...



படம் பெற்ற விருதுகளும் பரிந்துரையும்.....
Awards
Year Organization Award Category/Recipient Result
2005 ASCAP Film and Television Music Awards ASCAP Award Top Box Office Films: John Powell Won
2005 Academy of Science Fiction, Fantasy & Horror Films, USA Saturn Award Best Action/Adventure/Thriller Film and Best Actor- Matt Damon Nominated
2005 Broadcast Film Critics Association Critics Choice Award Best Popular Movie Nominate
2005 Cinema Audio Society Awards C.A.S. Award Outstanding Achievement in Sound Mixing for Motion Pictures Nominated
2005 Edgar Allan Poe Awards Edgar Best Motion Picture Screenplay Nominated
2005 Empire Awards, UK Empire Award Best Actor- Matt Damon and Best Film Won
2005 Empire Awards, UK Empire Award Best British Director of the Year- Paul Greengrass Nominated
2005 London Critics Circle Film Awards ALFS Award Best British Director- Paul Greengrass and Scene of the Year- the Moscow car chase sequence Nominated
2005 MTV Movie Award MTV Movie Award Best Action Sequence-the Moscow car chase sequence and Best Male Performance- Matt Damon Nominated
2005 Motion Picture Sound Editors, USA Golden Reel Award Best Sound Editing in Domestic Features - Dialogue & ADR and Best Sound Editing in Domestic Features - Sound Effects & Foley Nominated
2005 People's Choice Awards, USA People's Choice Award Favorite Movie Drama Nominated
2005 Teen Choice Award Teen Choice Award Choice Movie Actor: Action/Adventure/Thriller-Matt Damon and Choice Movie: Action/Adventure Nominated
2005 USC Scripter Award USC Scripter Award Tony Gilroy (screenwriter) and Robert Ludlum (author) Nominated
2005 World Soundtrack Award World Soundtrack Award Best Original Soundtrack of the Year-John Powell and Soundtrack Composer of the Year-John Powell Nominated
2005 World Stunt Awards Taurus Award Best Stunt Coordinator and/or 2nd Unit Director and Best Work with a Vehicle Won
2005 World Stunt Awards Taurus Award Best Fight- Darrin Prescott and Chris O'Hara Nominated

படக்குழவினர் விபரம்....

Directed by Paul Greengrass
Produced by Patrick Crowley
Frank Marshall
Paul L. Sandberg
Doug Liman
Written by Screenplay:
Tony Gilroy
Brian Helgeland
(uncredited)
Novel:
Robert Ludlum
Starring Matt Damon
Franka Potente
Brian Cox
Julia Stiles
Karl Urban
Gabriel Mann
Joan Allen
Music by John Powell
Cinematography Oliver Wood
Editing by Christopher Rouse
Rick Pearson
Distributed by Universal Studios
Release date(s) July 23, 2004
Running time 108 min.
Language English, Russian, German, Italian
Budget $75 million[1]
Gross revenue $288,500,217[1]

அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner