அப்புடு சார் மிஸ் யூ.






அப்படி ஒரு மனிதனை நீங்கள் சந்தித்து இருக்க முடியாது… மிக மிக இனிமையான மனிதன்… ஆனால் அவர் இன்று இல்லை…
இரண்டு புதன் கிழமைக்கு முன்தான் அவரை நேரில் மனைவியோடு அவரை சந்தித்தேன்… அதுதான் அவரை கடைசியாக பார்த்தது…வீட்டுல வந்து பத்திரிக்கை வைக்க வேண்டியதானே.. சார் மிஸ் ஆயிடும் சார்… அதனால ஆன் தி வேல உங்களுக்கு வச்சிட்டு வீட்டுக்கு ரிலாக்சா வந்து கூப்பிடுறேன் என்று சொன்னேன்.. வீட்டுக்கு போய் அவர் குடும்பத்தோடு அழைக்க நேரம் ஒத்துழைக்கவில்லை… இன்று அவரும் இல்லை.

இதில் கொடுமை என்னவென்றால்… 15 வருடத்துக்கு முன் யார் எனக்கு அவரை அறிமுகப்படுத்தி வைத்தானோ… அவனே எனக்கு போன் செய்து அவர் இறந்து விட்டார் என்று கதறி அழுததையும் அந்த செய்தி கேட்டு நான் வெடித்ததையும் என்னவென்று சொல்வது.

என் மனைவி வெடித்து அழுதார்...

dear zindagi 2016 movie review | டியர் ஜிந்தகி விமர்சனம்.


#dearzindagimovie
#dearzindagi
#srk

ஆர்கே சாலையில் இருக்கும் சிட்டி சென்டரில் இருக்கும் ஐ நாக்ஸ் தியேட்டர் நுழைவு சீட்டில் டியர் ஜிந்தகி திரைப்படத்தின் ஒன் லைனை எழுதி விடலாம்

ஆனால் அந்த ஒன்லைனை மூன்று மணி நேரத்துக்கு காதல், காமம், தவிப்பு, பெண் உணர்வுகள், பெண்கள் பார்க்கும் ஆண்கள் பார்வை என்று கலந்து கட்டி பேல்பூரி குண்டானில் போட்டு அடித்துக்கொடுத்து இருக்கின்றார் கவுரி ஷின்டே...

Kavalai Vendam movie review | கவலை வேண்டாம் திரை விமர்சனம்




#கவலைவேண்டாம்

திரைப்படம் பொழுது போக்கு ரொமான்டிக் காமெடி திரைப்படம்.... இந்த திரைப்படம் இளைஞர்களுக்கான ஜாலியான திரைப்படம்... அவ்வளவே..

கதை என்று பார்த்தால் அடித்து துவைத்து துணிக்காயவைக்கும் கொடியில் கிளிப் போட்டு காய துணி போலான சேம் கதைதான்...

ஆனால் படம் இளமையாக இருக்கின்றது.. பிரேமுக்கு பிரேம் பளிச் என்ற ஒளிப்பதிவு படத்துக்கு பெரிய பலம்..

வாழ்த்துகள் முரளி மச்சி.




உங்கள் பால்ய கால நண்பன் என்று யாரை சொல்லுவீர்கள்… ஒரு சிலர் ஒரு பெரிய பட்டியலே வாசிப்பார்கள்…


வாழ்த்துங்க பிரன்ட்ஸ்







ஆம் மச்சானின் திருமணம் நடந்து விட்டது…
நிறைய இடங்களில் பெண் பார்த்தோம்… ஆனாலும் திருமணம் தகையவில்லை. ஒரு கட்டத்தில் வெறுத்தே போனோனம்…

இயக்குநர் கவுதம்மேனன் ஒரு பெண்ணை காதலித்தார் ஆனால் அவருக்கு அந்த காதல் கை கூடவில்லை… ஆனாலும் அவரின் நெருங்கிய நட்பு வட்டத்தில் அவருக்கு ஒரு பெண் நண்பி இருந்தார்.. கவுதமின் ஏற்ற தாழ்வுகளிலும் இன்ப துன்பங்களிலும் அவர் உடன் இருந்தார்

கருப்பு பணம் சர்ஜிக்கல் ஸ்டிரைக்



இந்த சர்ஜிக்கல் ஸ்டிரைக்ல கார்டுல தேய்க்கறவனே கதி கலங்கி போய் இருக்கான் என்பதுதான் நிதர்சனம். நிறைய விஷயத்துக்கு கேஷ் தேவைப்படும்.. அதனால் பர்சேஸ் போய் கார்ட் ஒர்க் ஆகாம கைல வச்சி இருக்கற கேஷ் செலவு பண்ணக்கூடாதுன்னு தெளிவா இருக்கான்..

அதிரடி நேரு...




நேற்று சென்னைக்கு இரவு பதினோரு மணிக்குதான் வந்தேன்... நாளை காலை யாழினி நேருவாக வர வேண்டும் என்று பள்ளியில் இருந்து வந்த ஈ மெயில் கலவரத்தை ஏற்படுத்தியது...

100 ரூபாயை செலவழிக்க நிறைய யோசிக்க வேண்டியதாய் இருக்கின்றது. ஆனாலும் மனைவி... ஒரு ஒயிட் டிரஸ் வீட்டுல இருக்கு என்று தெம்பினை கொடுத்தார்.... தொப்பியும் பூவும் இருந்தா நேருவை தயார் செய்து விடலாம் என்று உப்புமா தயாரிப்பு ரேஞ்சிக்கு பேசிக்கொண்டு போனாள்...

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். 2016






சுஜாதா சொன்னது போல தீபாவளி என்பது புது கைவெச்ச பனியன் போட்டுக்கொண்டு ஃபோன் பேசும் நாளாகி பலவருடங்களாகிறது என்று சொன்னதை நண்பர் ரசனை ஸ்ரீராம் நினைவு கூர்ந்து இருந்தார்…

========

திருவாரூர்





திருவாருர் பக்கம் காரில் பயணித்து இருக்கிறேன்.. ஆனால் இந்த முறை நேற்றும் இன்றும் திருவாரூரில் வாசம்...

சாண்ட் வெஜ் அண்டு நான் வெஜ் (25/09/2016)







ஆல்பம்.

கர்நாடாகவில் எந்த தமிழ்நாடு ரிஜிஸ்ட்ரேஷன்  வண்டிகளும்  இன்னும்  சென்றபாடில்லை…மாண்டியாவில்  20 நாட்களுக்கு பிறகு இப்போதுதான் அமைதி திரும்புகின்றதாம். 

மிஸ்யூம்மா



ஆகி விட்டது 20 வருடங்கள்…. அம்மா எங்களைவிட்டு சென்று…. நேற்று நடந்தது போல இருக்கின்றது..இதே தேதியில் 20 வருடங்களுக்கு முன் அந்த காலையை என்னால் மறக்கவே முடியாது....அழுதே பார்க்காத என் அப்பா உடைந்து அழுததை பார்த்தேன்...அம்மாவை அந்த அளவுக்கு நேசித்து இருப்பார் என்பதை அந்த அழுகையும் கண்ணீரும் உணர்த்தியது… கைலியில் கண்துடைத்து அப்பா வேலைக்கு சென்றார்… அந்த அளவுக்கு நேர்மை.. அப்படி இருந்தும் அந்த நிறுவனம் அப்பாவை ஏமாற்றியது என்பேன்.


ஆண் பெண் பாகுபாடு


கார் பந்தய வீரர் விகாஷ்…. ரேஸ் டிராக்கல காரை ஓட்றதுக்கு பதில் சென்னை ராதாகிருஷ்ணன் ரோட்டுல குடிச்சிட்டு இரண்டே கால் கோடி மதிப்பிலான போஷ் காரை ரேஸ் வேகத்தில் நள்ளிரவில் சென்னை சாலையில் ஓட்ட…


தறி கெட்டு போன கார் ஆட்டோ ஸ்டேன்டில் நின்று இருந்த ஆட்டோக்களில் ஒன்றல்ல இரண்டு அல்ல… பத்துக்கு மேற்பட்ட ஆட்டோக்களில் மேல் மோதி பத்துக்கு மேற்பட்டவரை பலத்த காயத்துக்கு உள்ளாக்கி ஒருவரை சாகடித்து தற்போது விகாஷ் கைது செய்யப்பட்டுள்ளார்…

தமிழக பந்த்


கர்நாடகாவுக்கு எதிரான பந்த் அமைதியாக தமிழகத்தில் நடந்து முடிந்தது...

அசம்பாவிதங்களே இல்லை. இத்தனைக்கும் ஆளுங்கட்சியான அதிமுக ஆதரவு தெரிவிக்கவில்லை...

சென்னையில் கடைகளை வியாபாரிகள் திறக்கவில்லை.. ஆப் ஷட்டர் திறந்து வியாபாரம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை .... தெரு முக்குல சின்ன சின்ன பொட்டிக்கடை திறந்து சிகரேட் பஞ்சத்தை போக்கின...

ஜாக்கிரதைடா ஜாக்கி




சென்னை போன்ற மாநகரத்தில் இருசக்கர வாகனத்தில் பயணிக்கையில் டிராபிக்கில் போர் அடித்து விடும்… ஒவ்வோரு முறையும் எதையாவது ரசித்து பார்த்து அந்த பயணத்தை அர்தமுள்ளதாக்கி கொள்ள வேண்டும் என்பது எனது அவா.


அதனாலே சாலைகளில் பயணிக்கு போது நிறைய விஷயங்களை உற்று நோக்கி பயணிப்பது எனக்கு பிடித்த விஷயம்… பேசிக்காக நான் கேமராமேன் மற்றும் புகைப்படகலைஞன் என்பதால் அதனை அதன் அழகியலோடு பார்பது எனக்கு பிடித்த விஷயம்.


மக்கு அப்பா




யாழினி எருமை 12 மணி வரைக்கு தூங்காம ஆட்டம் போட்டுக்கிட்டு இருக்க…. நாளைக்கு ஸ்கூலுக்கு போக எழுந்திருக்கும் போது ரொம்பவே படுத்துவ என்று கத்தினேன்..

மீண்டும் ஆட்டம் தொடங்கியது….

எனக்கு கோபம் தலைக்கேறியது…

சென்னை மாறி விட்டதா?




நேற்று பெசன்ட் நகர் மாதா கோவில் கோடியேற்றத்தால் சென்னை நகரம் போக்குவரத்தில் ஸ்தம்பித்து போனது… இரவு பத்து மணிக்கு மேலும் அதன்தாக்கம் சென்னை சந்து பொந்து தெருக்களில் காண முடிந்தது. மாலை வேளையில் கல்லூரி பேருந்துகளும் சென்னை மாநகர பேருந்துகளும் சூசு வந்து இடம் இல்லாமல் தவித்து விக்கித்து நிற்கும் பெண் போல தவித்து போயின…

நாடாடா இது --??




மாரத்தான்ல இரண்டு கிலோ  மீட்டருக்-கு   ஒருக்கா  தண்ணி  கொடுக்காம  சாகடிச்சி இருப்பானுங்க…
இப்ப செத்தது போன உடலுக்கு ஆம்புலன்ஸ் வண்டி கொடுக்காம சாகடிச்சி இருக்கானுங்க…

 12 கிலோ மீட்டர் தூரத்துக்கு  பொண்டாட்டி உடலை தூக்கி கிட்டு நடந்து  இருக்கான்  ஒடிசாவை  சேர்ந்த  புருசன்காரன்..
பொணம் கனம் என்னன்னு தூக்கி பார்த்தவனுங்களுக்கு தெரியும்…  உடலை  குளிப்பாட்டி  நாரு பேர் சேர்ந்து பாடைக்கு எடுத்துக்கிட்டு வந்து வைக்கறதுக்குள்ள  தாவு தீர்ந்துடும்..
காசு இருந்தாதான் இந்தியாவுல  எல்லாம்… நடக்கும்…


ஆண்டிப்பட்டி கணவாய் காத்து


இப்போது என் ரிப்பிட் மோடில் தினமும் நான் கேட்டுக்கொண்டு இருக்கும் பாடல்
தர்மதுரை படத்தில் வரும் ஆண்டிப்பட்டி கணவா காத்து பாட்டுதான் என்ன அற்புதமான வரிகள்….

வைரமுத்து யுவன் கூட்டனியில் அசத்தலோ அசத்தல் பாடல்இது.
பாடலில் வரிகள் மனதுக்கு இணக்கமாய் இருக்கின்றன…
மாமன் விஜய் சேதுபதி டாக்டராகி விட்டான்… அத்தை பெண் ஐஸ்வர்யா கிராமத்தில் விவசாய வேலைகளை பார்த்துக்கொண்டு கிளை நுலகத்தில் புத்தகங்கள் படித்த படி ராணி வாரஇதழுக்கு கடிதம் எழுதிக்கொண்டு இருக்கின்றாள்…

மாமன் டாக்டராகி வந்து விட்டான்… ஆனால் அவன் உயரத்துக்கு அதாவது படிப்பு மற்றும் வேலையில் இல்லை என்பதால் கொஞ்சம் சிறிய தாழ்வு மனப்பான்மை.
அதில் ஒரு வரி வரும்..

இந்த பாட்டுல 3:54 இல் இருந்து பாருங்க…
உன் பவுஷுக்கும் உன் பதவிக்கும் வெள்ளக்காரி புடிப்ப..
இந்த கிரிக்கியை ஏழை சிறுக்கியை எதுக்காக பிடிச்ச.?
ஒரு வெள்ளக்காரி காசு தீர்ந்தா வெளுத்து ஓடிப்போவா?
இவ வெள்ளரிக்கா வித்து கூட வீடு காத்து வாழ்வா…
இரண்டு பேரின் மன உணர்வுகளும் வார்த்தைகளாய்…
ஐஸ்வர்யாவின் கண்ணும்… படித்த மாமன் அதுவும் டாக்டர் மாமன் தன்னை கட்டிக்கொள்வானா என்ற ஏக்கம் இருக்கும் பாருங்க…

ஐ லவ்யூ ஐஸ்
சான்சே இல்லை…
பாடல் காட்சியை படமாக்கிய விதமும் அருமை.

ரொம்ப நாள் கழிச்சி உள்ளுக்குள்ள இருந்த கிராமத்தானை தட்டி எழுப்பிய திரைப்பட பாடல் இது…..

ஜாக்கிசேகர்
18/08/2016



#dharmadurai #vijaysethupathi #ishwarya #தர்மதுரை #வைரமுத்து #யுவன் #சினுராமசாமி #yuvan #jackiecinemas




நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

கவிஞர் முத்துகுமாருக்கு அஞ்சலிகள்.




வானம் மெல்ல கீழிறங்கி மண்ணில் வந்து ஆடுதே,
தூறல் தந்த வாசம் இங்கு வீசுதிங்கே,
வாசம் சொன்ன பாஷை என்ன உள்ளம் திண்டாடுதே,
பேசி பேசி மௌனம் வந்து பேசுதிங்கே,
பூக்கள் பூக்கும் முன்னமே, வாசம் வந்தது எப்படி,
காதல் ஆனா உள்ளம் ரெண்டும் உயிரிலே இணையும்
தருணம் தருணம்..!
என்ன வரிகள்... -?? ஆனால் இந்த வரிகள் எழுதிய கைகள் ஓய்வு பெற்றன...
நாமுத்துக்குமார்.
கவிஞர் 41 வயதில் காலாமானார்.
இதய அஞ்சலிகள்

கண்ணாடி




காலையில் எழரை மணி வரைக்கும் தூக்கம்… அம்மா தண்ணி முஞ்சில ஊத்திதான் எழுப்புவா… அந்த அளவுக்கு தூக்கி தொலைப்பேன்.


எழுந்து வெப்பங்குச்சி உடைச்சி வாயில முனையை மைய வச்சி பிரஷ் போல ஆக்கி…. பச்சக் பச்சக்ன்னு எச்சி துப்பிக்கினே கொள்ளிக்கு போய் காலைக்கடன் முடிந்து, வீட்டுக்கு வந்து குளித்து, முதுகில் உள்ள தண்ணீரை துடைக்காமல் சட்டை டவுசர் போட்டு, ஏன் முதுகு தண்ணியை துடைக்காம சட்டை போட்ட என்று திட்டி அம்மாவிடம் சவுக்கு மெளாறால் அடிவாங்கி தலையில் எண்ணெய் வைத்து படிய சீவி முன் பக்கம் கொஞ்சம் மோது வைத்து கண்ணாடி முன் சிங்கார் சாந்து பொட்டு எடுத்து நெற்றிக்கு நடுவில் சின்னதாய் ஒரு டாட் வைத்து அதற்கு மேல விபூதி சின்ன கீற்றாக பூசி ….



Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner