இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். 2016






சுஜாதா சொன்னது போல தீபாவளி என்பது புது கைவெச்ச பனியன் போட்டுக்கொண்டு ஃபோன் பேசும் நாளாகி பலவருடங்களாகிறது என்று சொன்னதை நண்பர் ரசனை ஸ்ரீராம் நினைவு கூர்ந்து இருந்தார்…

========

திருவாரூர்





திருவாருர் பக்கம் காரில் பயணித்து இருக்கிறேன்.. ஆனால் இந்த முறை நேற்றும் இன்றும் திருவாரூரில் வாசம்...

சாண்ட் வெஜ் அண்டு நான் வெஜ் (25/09/2016)







ஆல்பம்.

கர்நாடாகவில் எந்த தமிழ்நாடு ரிஜிஸ்ட்ரேஷன்  வண்டிகளும்  இன்னும்  சென்றபாடில்லை…மாண்டியாவில்  20 நாட்களுக்கு பிறகு இப்போதுதான் அமைதி திரும்புகின்றதாம். 

மிஸ்யூம்மா



ஆகி விட்டது 20 வருடங்கள்…. அம்மா எங்களைவிட்டு சென்று…. நேற்று நடந்தது போல இருக்கின்றது..இதே தேதியில் 20 வருடங்களுக்கு முன் அந்த காலையை என்னால் மறக்கவே முடியாது....அழுதே பார்க்காத என் அப்பா உடைந்து அழுததை பார்த்தேன்...அம்மாவை அந்த அளவுக்கு நேசித்து இருப்பார் என்பதை அந்த அழுகையும் கண்ணீரும் உணர்த்தியது… கைலியில் கண்துடைத்து அப்பா வேலைக்கு சென்றார்… அந்த அளவுக்கு நேர்மை.. அப்படி இருந்தும் அந்த நிறுவனம் அப்பாவை ஏமாற்றியது என்பேன்.


ஆண் பெண் பாகுபாடு


கார் பந்தய வீரர் விகாஷ்…. ரேஸ் டிராக்கல காரை ஓட்றதுக்கு பதில் சென்னை ராதாகிருஷ்ணன் ரோட்டுல குடிச்சிட்டு இரண்டே கால் கோடி மதிப்பிலான போஷ் காரை ரேஸ் வேகத்தில் நள்ளிரவில் சென்னை சாலையில் ஓட்ட…


தறி கெட்டு போன கார் ஆட்டோ ஸ்டேன்டில் நின்று இருந்த ஆட்டோக்களில் ஒன்றல்ல இரண்டு அல்ல… பத்துக்கு மேற்பட்ட ஆட்டோக்களில் மேல் மோதி பத்துக்கு மேற்பட்டவரை பலத்த காயத்துக்கு உள்ளாக்கி ஒருவரை சாகடித்து தற்போது விகாஷ் கைது செய்யப்பட்டுள்ளார்…

தமிழக பந்த்


கர்நாடகாவுக்கு எதிரான பந்த் அமைதியாக தமிழகத்தில் நடந்து முடிந்தது...

அசம்பாவிதங்களே இல்லை. இத்தனைக்கும் ஆளுங்கட்சியான அதிமுக ஆதரவு தெரிவிக்கவில்லை...

சென்னையில் கடைகளை வியாபாரிகள் திறக்கவில்லை.. ஆப் ஷட்டர் திறந்து வியாபாரம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை .... தெரு முக்குல சின்ன சின்ன பொட்டிக்கடை திறந்து சிகரேட் பஞ்சத்தை போக்கின...

ஜாக்கிரதைடா ஜாக்கி




சென்னை போன்ற மாநகரத்தில் இருசக்கர வாகனத்தில் பயணிக்கையில் டிராபிக்கில் போர் அடித்து விடும்… ஒவ்வோரு முறையும் எதையாவது ரசித்து பார்த்து அந்த பயணத்தை அர்தமுள்ளதாக்கி கொள்ள வேண்டும் என்பது எனது அவா.


அதனாலே சாலைகளில் பயணிக்கு போது நிறைய விஷயங்களை உற்று நோக்கி பயணிப்பது எனக்கு பிடித்த விஷயம்… பேசிக்காக நான் கேமராமேன் மற்றும் புகைப்படகலைஞன் என்பதால் அதனை அதன் அழகியலோடு பார்பது எனக்கு பிடித்த விஷயம்.


மக்கு அப்பா




யாழினி எருமை 12 மணி வரைக்கு தூங்காம ஆட்டம் போட்டுக்கிட்டு இருக்க…. நாளைக்கு ஸ்கூலுக்கு போக எழுந்திருக்கும் போது ரொம்பவே படுத்துவ என்று கத்தினேன்..

மீண்டும் ஆட்டம் தொடங்கியது….

எனக்கு கோபம் தலைக்கேறியது…

சென்னை மாறி விட்டதா?




நேற்று பெசன்ட் நகர் மாதா கோவில் கோடியேற்றத்தால் சென்னை நகரம் போக்குவரத்தில் ஸ்தம்பித்து போனது… இரவு பத்து மணிக்கு மேலும் அதன்தாக்கம் சென்னை சந்து பொந்து தெருக்களில் காண முடிந்தது. மாலை வேளையில் கல்லூரி பேருந்துகளும் சென்னை மாநகர பேருந்துகளும் சூசு வந்து இடம் இல்லாமல் தவித்து விக்கித்து நிற்கும் பெண் போல தவித்து போயின…

நாடாடா இது --??




மாரத்தான்ல இரண்டு கிலோ  மீட்டருக்-கு   ஒருக்கா  தண்ணி  கொடுக்காம  சாகடிச்சி இருப்பானுங்க…
இப்ப செத்தது போன உடலுக்கு ஆம்புலன்ஸ் வண்டி கொடுக்காம சாகடிச்சி இருக்கானுங்க…

 12 கிலோ மீட்டர் தூரத்துக்கு  பொண்டாட்டி உடலை தூக்கி கிட்டு நடந்து  இருக்கான்  ஒடிசாவை  சேர்ந்த  புருசன்காரன்..
பொணம் கனம் என்னன்னு தூக்கி பார்த்தவனுங்களுக்கு தெரியும்…  உடலை  குளிப்பாட்டி  நாரு பேர் சேர்ந்து பாடைக்கு எடுத்துக்கிட்டு வந்து வைக்கறதுக்குள்ள  தாவு தீர்ந்துடும்..
காசு இருந்தாதான் இந்தியாவுல  எல்லாம்… நடக்கும்…


ஆண்டிப்பட்டி கணவாய் காத்து


இப்போது என் ரிப்பிட் மோடில் தினமும் நான் கேட்டுக்கொண்டு இருக்கும் பாடல்
தர்மதுரை படத்தில் வரும் ஆண்டிப்பட்டி கணவா காத்து பாட்டுதான் என்ன அற்புதமான வரிகள்….

வைரமுத்து யுவன் கூட்டனியில் அசத்தலோ அசத்தல் பாடல்இது.
பாடலில் வரிகள் மனதுக்கு இணக்கமாய் இருக்கின்றன…
மாமன் விஜய் சேதுபதி டாக்டராகி விட்டான்… அத்தை பெண் ஐஸ்வர்யா கிராமத்தில் விவசாய வேலைகளை பார்த்துக்கொண்டு கிளை நுலகத்தில் புத்தகங்கள் படித்த படி ராணி வாரஇதழுக்கு கடிதம் எழுதிக்கொண்டு இருக்கின்றாள்…

மாமன் டாக்டராகி வந்து விட்டான்… ஆனால் அவன் உயரத்துக்கு அதாவது படிப்பு மற்றும் வேலையில் இல்லை என்பதால் கொஞ்சம் சிறிய தாழ்வு மனப்பான்மை.
அதில் ஒரு வரி வரும்..

இந்த பாட்டுல 3:54 இல் இருந்து பாருங்க…
உன் பவுஷுக்கும் உன் பதவிக்கும் வெள்ளக்காரி புடிப்ப..
இந்த கிரிக்கியை ஏழை சிறுக்கியை எதுக்காக பிடிச்ச.?
ஒரு வெள்ளக்காரி காசு தீர்ந்தா வெளுத்து ஓடிப்போவா?
இவ வெள்ளரிக்கா வித்து கூட வீடு காத்து வாழ்வா…
இரண்டு பேரின் மன உணர்வுகளும் வார்த்தைகளாய்…
ஐஸ்வர்யாவின் கண்ணும்… படித்த மாமன் அதுவும் டாக்டர் மாமன் தன்னை கட்டிக்கொள்வானா என்ற ஏக்கம் இருக்கும் பாருங்க…

ஐ லவ்யூ ஐஸ்
சான்சே இல்லை…
பாடல் காட்சியை படமாக்கிய விதமும் அருமை.

ரொம்ப நாள் கழிச்சி உள்ளுக்குள்ள இருந்த கிராமத்தானை தட்டி எழுப்பிய திரைப்பட பாடல் இது…..

ஜாக்கிசேகர்
18/08/2016



#dharmadurai #vijaysethupathi #ishwarya #தர்மதுரை #வைரமுத்து #யுவன் #சினுராமசாமி #yuvan #jackiecinemas




நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

கவிஞர் முத்துகுமாருக்கு அஞ்சலிகள்.




வானம் மெல்ல கீழிறங்கி மண்ணில் வந்து ஆடுதே,
தூறல் தந்த வாசம் இங்கு வீசுதிங்கே,
வாசம் சொன்ன பாஷை என்ன உள்ளம் திண்டாடுதே,
பேசி பேசி மௌனம் வந்து பேசுதிங்கே,
பூக்கள் பூக்கும் முன்னமே, வாசம் வந்தது எப்படி,
காதல் ஆனா உள்ளம் ரெண்டும் உயிரிலே இணையும்
தருணம் தருணம்..!
என்ன வரிகள்... -?? ஆனால் இந்த வரிகள் எழுதிய கைகள் ஓய்வு பெற்றன...
நாமுத்துக்குமார்.
கவிஞர் 41 வயதில் காலாமானார்.
இதய அஞ்சலிகள்

கண்ணாடி




காலையில் எழரை மணி வரைக்கும் தூக்கம்… அம்மா தண்ணி முஞ்சில ஊத்திதான் எழுப்புவா… அந்த அளவுக்கு தூக்கி தொலைப்பேன்.


எழுந்து வெப்பங்குச்சி உடைச்சி வாயில முனையை மைய வச்சி பிரஷ் போல ஆக்கி…. பச்சக் பச்சக்ன்னு எச்சி துப்பிக்கினே கொள்ளிக்கு போய் காலைக்கடன் முடிந்து, வீட்டுக்கு வந்து குளித்து, முதுகில் உள்ள தண்ணீரை துடைக்காமல் சட்டை டவுசர் போட்டு, ஏன் முதுகு தண்ணியை துடைக்காம சட்டை போட்ட என்று திட்டி அம்மாவிடம் சவுக்கு மெளாறால் அடிவாங்கி தலையில் எண்ணெய் வைத்து படிய சீவி முன் பக்கம் கொஞ்சம் மோது வைத்து கண்ணாடி முன் சிங்கார் சாந்து பொட்டு எடுத்து நெற்றிக்கு நடுவில் சின்னதாய் ஒரு டாட் வைத்து அதற்கு மேல விபூதி சின்ன கீற்றாக பூசி ….



அசத்தல் தெலுங்கு சினிமா.





ஹீரோயிச  சண்டைகள், முக்கியமாக  நாயகனின் என்ட்ரி சீன் உக்கிர வசனங்கள்.. ஐட்டம் சாங்கில் காமிரா கோணங்கள்  நடன மூவ் மென்டுகள்…. ரிச் கேர்ள்ஸ் ரிச் பாய்ஸ் பசங்கள் பத்து ரூபாய்க்கு ஆட சொன்னால் ஆயிரம் ரூபாய்க்கு ஆடும் ஆட்டங்கள்…, நாயகிகளின் செக்சி உடைகள்,  இடுப்பு வளைவுகள்,  பாடல் காட்சிகளில்  அதீத தொப்புள் தரிசனங்கள், தமிழில் இழுத்து போர்த்து நடித்த நடிகையா என்று மிரண்டு  வியர்க்க வைக்கும் கவர்ச்சி காட்சிகளில் அசால்ட்டாக நடிக்கும் நடிகைகள்…. தன்னை கடவுளாக பாவித்து காட்சிகளை வைத்துக்கொள்ளும் நாயகன்… வெளிநாட்டு காட்சிகள், மேக்கிங் ஸ்டைல்,  பேமிலி சென்டிமென்ட்,  அற்புதமான பாடல்கள்   என்று நான் தெலுங்கு  சினிமாவை ரசிக்க, கொண்டாட  அனேக காரணங்கள்  இருக்கின்றன….


காலில் கவனம்.




ஏதோ லிகமன்ட் இஞ்சுரியாம்...தம்பி பாலா சொன்னான்..

காலில் முட்டியில் செம வலி.....
ஜவ்வு கிழிச்சிடுச்சாம்...


ஒரு வாராம திடிர் திடிர்ன்னு வலிக்கும் காலை ஊனி வச்சி நடக்க முடியாது...

ஒரு ஆறு வாரத்துக்கு போட்டுக்குன நடன்னு சொல்றான்...

வாழ்க்கையில இப்படி ஒரு சமாச்சாரத்தோட இதுதான் பர்ஸ்ட் டைம்..

இது மேல பேன்ட்டை போட்டுக்கிட்டு போனா.... வேற மாதிரி இருக்கு...

தேசிய கீதமும் மைக் செட் பையனும்...





யாழினி பள்ளியில் சுந்திர விழா நிகழ்ச்சிக்கான ஒத்திகை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடந்தது…
நாம் நாடுகளில் குப்பை குளங்களை டுவிஸ்டர் ஆக்கி சில நேரங்களில் காற்று விளையாடும்…..

பல்பு என்பது யாதெனில்.?



நேற்று யூடியூபில் ஒரு மீட்டிங்….

முதல் முறையாக சென்னையில் நடைபெற்றது.
நான்கு நாட்கள் பெங்களூரில் இருந்து வந்த காரணத்தால் சட்டென சென்னை இயல்பு வாழ்க்கையில் ஒட்ட முடியவில்லை..

செம மொக்கை வாங்கினேன் என்று கூட பாலிஷாக சொல்லிக்கலாம்…

மதியம் இரண்டரைக்கு யாழினியை பள்ளியில் இருந்து நான்தான் அழைத்து சென்று டே கேரில் விட வேண்டும்..
ஓட்டலில் இரண்டரை மணிக்கு ரிஜிஸ்ட்ரேஷன் ஆரம்பம் என்பதாலும் காலையில் இறுமுகன் ஆடியோ லான்ச் போய் விட்டு நிற்க நேரம் இல்லாமல் எடிட் செய்து வலையேற்றி உடை மாற்றி மீட்டிங் நடந்த ஓட்டலுக்கு கிளம்பி விட்டேன்….

கபாலி படம் பார்க்க போன கதை.




எப்படியான படமாக இருந்தாலும் தியேட்டரில் போய் பார்த்து விடுவது வழக்கம்….

டிக்கெட் பஞ்சாயத்து பெரிய விஷயமாக  போய் விட்டது..
நண்பர் ரபிக்கிடம் டிக்கெட் சொல்லிட்டேன்..… ஆனா  தூக்கம் வரலை தூங்காம கண் முழுச்சி   இருக்க காரணம் நாலுமணிக்கு  ரோகிணி தியேட்டர்ல ஷோ….. ஒரு சினிமா ரசிகனா  அந்த படம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு… ஒரு மாசத்துக்கு மேல நடக்கும் கபாலி   படத்துக்கான  புரமோஷன்.,. அதனால்  தூக்கம் வரலை… ஒரு மணிக்கு தூக்கம் கண்ணை சொழட்டுச்சி…


kabali movie review - கபாலி திரை விமர்சனம்





விமானம்  வரை விளம்பரம் செய்தார்கள்....

மூன்று நாட்களுக்கு டிக்கெட் இல்லை என்று சொன்னார்கள்.. ஆனால் படம்  ஆரம்பித்த போது  ஒரு அரை மணிநேரத்துக்கு  எழுந்து எழுந்து கைதட்டி  ரசித்த ரஜினி ரசிகர்கள்..

இணையதள முடக்கம் சாத்தியமா?


173 இணைய தளங்களை முடக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்  தானு  உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததோடு  அவற்றை முடக்க அனுமதியும் பெற்று விட்டார்..

இத்தனை நாட்களாக எத்தனையோ சிறு முதலீட்டு படங்கள் வெளிவந்த போது அவைகள்  இணையத்தில் வெளியாகி பெரும் இழப்பை சந்தித்த போது எல்லாம் அமைதியாக  இருந்த  தானு தற்போது  அவர் படத்துக்கு மட்டும் உயர் நீதி மன்ற படி ஏறி இருப்பது எந்த விதத்தில் நியாம் என்று சக தயாரிப்பாளர்கள் பொருமி வருவது ஒரு பக்கம் இருக்கட்டும்..
அவர்கள் சொன்னது போல இணையத்தை முடக்க முடியுமா? அது சாத்தியமா? என்பது பற்றி  சற்று விரிவாய்  அலசி இருக்கின்றேன்.. வாசித்து விட்டு உங்கள்  கருத்துகளை பகிருங்கள்..
வீடியோ பிடித்து இருந்தால் ஷேர் செய்யுங்கள்.

#kabali #thanu #கபாலி #தானு #ரஜினி #ரஜினிகாந்த் #ரஞ்சித் #ஆன்லைன் #உயர்நீதிமன்றம் #சாத்தியமா



நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner