GONE GIRL -2014- காணமல் போன எழுத்தாளர் மனைவி.
நிக் காலையில
எழுந்துருக்கரான்… எழுந்தா கடுப்பா இருக்கு… வெளியே வந்து பார்க்கறான்..
ரோடு அமைதியா இருக்கு…
மணி பார்க்கறான்..
ஏழரை ஆவுது…
கடுப்பா
இருக்கு…
காரை எடுத்துக்கிட்டு
போறான்….
எங்கே போறான்
தெரியுமா?
பேமானி எங்க
வேடிக்கை பார்க்கறே…
கதை சொன்ன அட்லீஸ்ட்
ஊம் கொட்டனும்னு ஒரு அடிப்படை கர்ட்டசி மயிறு கூடவா உனக்கு தெரியாது…
சரிய்யா….உம்…
நேரா
அவன் காரை எடுத்துக்கிட்டு போறான்..
ம்….
எங்க போறான் தெரியுமா?
Labels:
கிரைம்,
திகில்,
திரில்லர்,
பார்த்தே தீர வேண்டிய படங்கள்,
ஹாலிவுட்
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ரகுமான் ஜி.
2009 ஆம்
ஆண்டு ஒட்டு மொத்த உலகமும் இந்தியாவை திரும்பி
பார்க்க வைத்த ஆண்டு..
கோல்டன் குளோப்பில் பப்டா என்பதோடு விட்டு விடாமல்
ஒரேநாளில் ஒன்றுக்கு இரண்டு ஆஸ்கார்
பெற்ற இசையமைப்பாளனை மேற்கத்திய உலகமும் கிழக்கிந்திய உலகமும் ஆச்சர்யத்துடன் திரும்பி பார்த்தன.... அவ்வளவு
ஏன்... ஸ்பீல் பெர்க் படங்களுக்கு இன்றுவரை
இசைக்கோர்ப்பு செய்யும் ஜான்வில்லியம்ஸ் போன்ற இசைமேதைகளே கொஞ்சம் ஆடித்தான் போனார்கள்...
ஆம் இந்தியா
சார்பாக ஒன்றுக்கு இரண்டு ஆஸ்கார்களை ஏ ஆர் ரகுமான் பெற்றார்...
Labels:
அனுபவம்,
ஆர். ரகுமான்.,
இந்திய சினிமா,
இன்று பிறந்தவர்கள்,
ஏ,
தமிழ்சினிமா
ஈ அடிச்சான் காப்பி அடிக்கும் புரட்சி எப்எம்.
உலகில் மிகப்பெரிய கொடுமை எதுவென்றால்... நீங்கள்
எழுதிய பதிவை நீங்களே இது நான் எழுதிய
பதிவுதான் என்று நிரூபிக்க வேண்டிய இடம்
இருக்கின்றது பாருங்கள் அதுதான் கொடுமை...
காப்பி என்றால் என்ன இன்ஸ்பிரேஷ்ன் என்றால் என்ன?
என்று பக்கம் பக்கமாக எழுதியவன் நான்...இப்போது
ஈ ஆடிச்சான் காப்பி என்றால்
என்னவென்றுவேறு எழுதி தொலைக்க வேண்டி வரும் போல...
Labels:
அனுபவம்,
சமுகம்,
சவுஜன்யா,
பதிவர் வட்டம்
எல்லை மீறுகின்றதா? புத்தாண்டு கொண்டாட்டம்...
புத்தாண்டு கொண்டாட்டம் எல்லை மீறி போகின்றதா ??? என்று சன்டிவி நியூஸ் சேனலில் இளைஞர்கள் சிலர் எல்லை மீறிய காட்சிகளை காட்டினார்கள்…
குட் பை 2014
1994 ஆம் ஆண்டு கடலூரில் இருந்து சென்னைக்கு பேருந்தில் செக்யூரிட்டி வேலைக்கு சரியாக 31 ஆம் தேதி பெரியார் பேருந்தில் சென்னை நோக்கி வரும் போது பிரபு ரசிகர் மன்றத்தினர் மெட்டாடர் வேன்களில் நடிகர் பிரபு பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல சென்னை நோக்கி விரைந்தனர்… அவர்களோடு எதிர்கால கனவுகளோடு நானும் சென்னை நோக்கி……
Labels:
அனுபவம்,
சினிமா சுவாரஸ்யங்கள்,
தமிழ்சினிமா
Kayal /2014/ கயல் சினிமா விமர்சனம்.
பரிட்சார்த்த முயற்சிகள் தன் திரைப்படங்களில் அதிகம் செய்து பார்த்த பிரபுசாலாமன் கடைசியில் காதலை
கையில் எடுக்க
தொடர்ந்து இரண்டு படங்கள் வெற்றியோ வெற்றி.. அது மட்டுமல்ல... மைனா திரைப்படம் அதன் திரைக்கதை கட்டமைப்பு...
கேரக்டர் சேஷன் எல்லாம் தமிழ் சினிமாவில் கொண்டாடப்படவேண்டிய திரைப்படம் இது என்றால் மிகையில்லை...
Meaghamann-2014- மீகாமன் திரைவிமர்சனம்.
தடையறதாக்க மகிழ்திருமேனியின் இரண்டாவது திரைப்படம் முதல் படம் முன் தினம் பார்த்தேனே.. செவன்த் சேனலுக்காக செய்த படம்… பத்தோடு பதினொன்றாக போய் விட்டது..
மகிழ் செல்வராகவன், மற்றும் கவுதமிடம் அசிஸ்டென்டாக
இருந்தவர்… அதனால் தனது இரண்டாவது திரைப்படமான தடையற தாக்க திரைப்படத்தை ஆக்ஷன் மூலம் பூசி கொடுத்தார்… இதில் பெரிய விஷயம் என்னவென்றால் அருன்
விஜய் போன்ற பிரேக் இல்லாத நடிகரை வைத்து தன்னம்பிக்கையோடு ஒரு ஆக்ஷன் திரைப்படத்தை கொடுக்க செம தில் வேண்டும்… தடையறதாக்க மகிழ்
பெயரை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த திரைப்படம் என்றே சொல்ல வேண்டும்…
Labels:
கிரைம்,
சினிமா விமர்சனம்,
தமிழ்சினிமா,
திரில்லர்,
பார்க்க வேண்டியபடங்கள்
PISAASU -2014- பிசாசு திரை விமர்சனம்.
பொதுவா தமிழ் திரைப்படங்களில் பேய் படம் பார்த்து பயப்படுவதற்கு பதில் சில நேரங்களில் சிரிப்பை வரவைத்து விடுவார்கள்...
அந்த அளவுக்கு பேயை
சிரிப்பு பொருளாக மாற்றும் வித்தை
தெரிந்தவர்கள்… மற்றும் புரிதல் அதிகம் உள்ளவர்கள் என்றும் சொல்லலாம்.
இன்னைக்கு வரைக்கும் பிளாக் அண்டு ஒயிட் திரைப்படங்களில் நான் பார்த்து பயந்த திரைப்படம்
நெஞ்சில் ஓர் ஆலயம்.
Labels:
கிரைம்,
தமிழ்சினிமா,
திகில்,
திரில்லர்,
பார்க்க வேண்டியபடங்கள்
ஸ்டீவன் ஸ்பீல் பெர்க் (இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்)
உலகில் மிக கொடுமையான விஷயம் என்னவென்றால் இரண்டு அப்பா இரண்டு அம்மாவோடு வாழ்வதும் வளர்வதும்தான்.. அவன்
பிள்ளையை நன்றாக பார்த்துக்கொள்வான் என்று இவளும்… இவள் நம் பிள்ளையை நன்றாக பார்த்துக்கொள்ளுவாள் என்று
அவனும் நினைத்து இருக்க… இரண்டு பேரும் இணைந்து பெற்ற பிள்ளையை பார்த்துக்கொள்ளாமல் நட்டாற்றில் விடப்படுபவர்கள்
கண்டிப்பாக விவாகரத்து செய்யப்பட்ட பெற்றோர்களின்
பிள்ளைகளே….
Good People-2014 /மாட்டிக்கொண்ட நல்லமனிதர்கள்
பணம் பிரதானம்தான் ,இருந்தாலும் சில நேரங்களில் அதீத பணத்தேவையின் போது தெரிந்தோ தெரியாமலோ சில தவறுகளை மனிதர்கள் செய்து தொலைத்து விடுகின்றார்கள்… சில நேரங்களில் நேரம் நன்றாக இருந்தால் செய்த தவற்றில் மாட்டிக்கொள்வதில்லை… நேரம் நன்றாக இல்லாமல் ஏழரை சனி புல் போக்கசில் தவறு செய்தவர்களை பார்த்துக்கொண்டு இருப்பாரேயானால் ஆப்பு தவறு செய்தவர்களுக்கு உருவாகி விட்டது என்று அர்த்தம்.
Labels:
கிரைம்,
சினிமா விமர்சனம்,
டைம்பாஸ் படங்கள்,
திரில்லர்,
ஹாலிவுட்
Subscribe to:
Posts (Atom)














