(DAYLIGHT ROBBERY) 15+உலகசினிமா/பிரிட்டிஷ்... கத்தியின்றி ரத்தம் இன்றி பல கோடி அபேஸ்...


ஒரு பழைய பாடல் ஒன்று இருக்கின்றது... நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதும் இல்லை...சில வேலைகளை நீங்கள் எவ்வளவுதான் பக்காவாக பிளான் போட்டு இருந்தாலும் எதாவது ஒரு ஆப்பு நம் பின் பக்கம் செருக காத்துக்கொண்டு இருக்கும்... அந்த ஆப்புகளை கடந்தே, நமது வெற்றியையும் குறிக்கோளையும் அடைய முடியும்...

கொள்ளை அடிக்கும் படங்கள் எல்லாமே விறுவிறுப்பு நிறைந்தவை காரணம்..? அவர்கள் போடும் பிளான் என்பது முக்கிய காரணம்... நம்ம இயல்பவான வாழ்வில் ஏதாவது ஒரு பேங்கை கொள்ளை அடிக்க பிளான் போட முடியுமா?இல்லை வைரத்தை கொள்ளை அடிக்க பிளான் போட முடியுமா?

அது போலான கெத்து இருப்பவர்களை நாம் ரசிக்க ஆரம்பித்துவிடுவோம் என்பது உண்மை...அவர்கள் திரையில் சட்டத்துக்கு புறம்பாகதான் எல்லா வேலைகளிலும் செய்கின்றார்கள்.... இருந்தாலும் அவர்கள் திரையில் அறிமுக படுத்திய சில நிமிடங்களில் அவர்களில் ஒருவனாக நாம் மாறி போய்விடுகின்றோம்....

நம் அடிமனது ஆசைகளுக்கு அது பெரும் தீனியாக இருக்கின்றது.... கொள்ளை அடித்து விட்டு தப்பிக்கும் போது தடுக்கும் பெண்ணை கொலை செய்கின்றான்...தன் கடமையை செய்யும் போலிஸ்காரர் அவனை தடுக்கும் போது அல்லது கொள்ளையை தடுக்கும் போது,அந்த போலிஸ்காரரை துப்பாக்கியால் சுட்டு தலைசிதறி சாகடிக்கின்றான்... இருப்பினும் யாரவது ஒரு போலிஸ்காரர் அவன் காலை துப்பாக்கியால் சுட்டுவிட்டால்...

அவன் கொள்ளை அடித்த பொருளுடன் தப்பிக்க முடியாவிட்டால் நாம் வருத்தபடுகின்றோம் விசனபடுகின்றோம்... இதுவே நம் வீட்டுக்கு அருகில் செய்தால்... அல்லது நமக்கு நேர்ந்தால் அவர்களை வில்லனாக பார்க்கின்றோம்....

நம்ம தமிழ்நாட்டில் விருதுநகரில் கோடை விடுமுறைடிய ஜாலியாக கழிக்க ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பையன் 5 லட்சம் வரை நகை பணம் போன்றவற்றை கொள்ளை அடித்து இருக்கின்றான்.... இப்ப நாம் என்ன சொல்லுவோம்...முளைச்சி மூனு இலை விடல அதுக்குள்ள என்ன திருட்டு என்று நேரில் பார்க்கும் போது தலையில் ஒன்று போடுவோம் அல்லது பத்திரிக்கை செய்தி பார்த்து திட்டுவோம்... ஆனால் திரையி்ல் அதே பையன் கொஞ்சம் கஷ்டபடுவதாக காட்டி அவன் திருட்டின் நியாயத்தை சொல்லி விட்டால் நாம் அவனுக்காக வருத்தபடுவோம்.... இது எல்லா கொள்ளை படங்களுக்கும் பொறுந்தும்.....

இந்த பிரிட்டிஷ் சினிமா அந்த வகையை சார்ந்ததுதான்....கத்தியில்லைரத்தம் இல்லை பல மில்லயின் டாலர்கள் அபேஸ் எப்படி... பார்ப்போம்...

DAYLIGHT ROBBERY (15+உலகசினிமா/பிரிட்டிஷ்... ) படத்தின் கதை இதுதான்....

ஏழு பேர்
ஒரு பேங்க்
90நிமிடங்கள்....
20பினைகைதிகள்
பேங்கை சுற்றி போலிஸ் முற்றுகை....

இதையும் மீறிகத்தியன்றி ரத்தம் இன்றி 70,000,000 பணம் கொள்ளை அடிப்பது சாத்தியமா?

இதுதான் கதை......அப்படியே விட்டு போக ஆசைதான் இருந்தாலும் சொல்றேன்...

உலக கோப்பை பார்க்க போறேன்னு ஜெர்மனிக்கு எழு பேர் வராங்க... அப்படித்தான் பாஸ்போர்ட்ல டுரிஸ்ட் விசாவுல சொல்லிட்டு வராங்க...

எல்லாரும் மேச் பார்க்கும் போது இந்த எழு பேர் மட்டும் தம் அடிச்சிட்டு வரலாம் மாமுன்னு சொல்லிட்டு போவது போல் கொள்ளை அடிக்க போகின்றார்கள்...முடிவு என்ன திரையில் பார்க்கவும்...


படத்தின் சுவாரஸ்யங்களில் சில....
பொதுவாக பேங்க் ராப்பரி படங்களில் துப்பாக்கி வெடிக்கும் ரத்தம் தெரிக்கும்.... ஆனால்இந்த படத்தில் அப்படி ஏதும் இல்லாதது ஆச்சர்யமே...

இது போலான காட்சி அமைப்புக்கு அப்படி திரைக்கதை அமைத்து இருக்கும் அந்த குழுவுக்கு என் நன்றிகள்...

கொள்ளை அடித்து விட்டு வெளியே தப்பித்து போவதை திரைபடம் ஆரம்பித்து பத்தாவது நிமிடத்தில் காட்டி, கார் சேசிங் வைத்து பல கார்கள் காற்றில் பறக்கும்.... இடைவிடாமல் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டே இருப்பார்கள் ...ஆனால் இந்த படத்தில் அந்த கதையே இல்லை..

படத்தின் பெரும் பகுதி பேங்கில் உள்ளேயே நிகழ்வதாக கதையை அமைத்து இருக்கின்றார்கள்....

முக்கியமாக சுரங்கபாதை செட்டில் ஒளிப்பதிவு அற்புதம்...
நெஞ்சை தொட்ட காட்சி....
சுரங்க பாதையில் மண் சரிந்து ஒருவன் மாட்டிக்கொள்ள... அவன் உயிர்பயத்தி்ல் தவிக்கும் போது நீங்களும் தவிப்பீர்கள்.. என்பது உறுதி...

பொதுவாக கொள்ளை அடிக்கும் படங்களில் கூட்டாளிகள் ஏதாவது இக்கட்டில் மாட்டிக்கொண்டால்..அவர்களை கொன்று விடுவது கொள்ளை தலைவன்களின் பரம்பரை உலக வழக்கம்... ஆனால் இந்த படத்தில் எவரையும் கொள்ளவில்லை.....

கொள்ளை கூட்டத்தில் எப்படியும் பாதி மார்பு தெரியும் படி, அல்லது உள்ளாடை எதும் போடாத ஒரு கொள்ளைகார பெண் அந்த கூட்டத்தில் எப்படியும் இருப்பாள்... அது இந்த படத்தில் இல்லை..

இப்படி இந்த படம் முழுவதும் பிரேக்த ரூ்ல்ஸ்செய்து கிளேஷேக்கள் இல்லாமல் இந்த கொள்ளை படத்தை எடுத்து இருக்கின்றார்கள்...

இந்த படத்தின் டைட்டில் போடும் காட்சி அற்புதம்.... இட்டாலியன் ஜாப் ஓசன்11 படத்தின் திரைக்கதையை அவ்வப்போது தொட்டுவிட்டு சென்று இருக்கின்றார்கள்...

கிளைமாக்ஸ் அற்புதம்...


படத்தில் நிறைய சின்ன சின்ன டுவிஸ்ட்கள் இருந்தாலும் இதை யெல்லாம் ஏற்க்கனவே பார்த்து இருந்தாலும்... அல்லது யூகிக்க முடிந்தாலும் அதை வழங்கிய விதத்தில் இயக்குனர் வெற்றி பெற்று இருக்கின்றார்...

படத்தின் டிரைலர்....




படக்குழுவினர்விபரம்....

Directed by Paris Leonti
Written by Paris Leonti
Starring Paul Nicholls
Shaun Parkes
Distributed by Daylight Productions
Release date(s) 29th August 2008 (UK)
Running time 99 min. (approx.)
Country United Kingdom

அன்புடன்
ஜாக்கிசேகர்

நாலுபேரு இதை படிக்கனும்னா ஓட்டு போடுங்கப்பா...

(SNEAKERS) வித்யாசமான வேலைகள்...

உலகில் எவ்வளவோ வித்தியாசமான தொழில்கள் இருக்கின்றது...ஆனால் சவாலான வேலைகளுக்கு எப்போதுமே மவுஸ் இருக்கத்தான் செய்கின்றது... கரணம் தப்பினால் மரணம் என்று இருக்கும் போது அது போலான வேலையில் ஈடுபட பெரிய தில் வேண்டும்....

அப்படி தில்லாக வேலை செய்ய ஒரு நல்ல குழு வேண்டும்.. அப்படி ஒரு கூட்டம் மட்டும் கிடைத்து விட்டால்...எதிரியின் கண்களில் விரல் விட்டு ஆட்டிவிடலாம் அல்லவா??? அப்படி ஒரு விரல் விட்டு ஆட்டும் குழுவின் படம்தான் இது.....

SNEAKERS படத்தின் கதை இதுதான்....


..Martin Brice (Robert Redford0) ஒரு தேடப்பட்டு வரும் குற்றவாளி...கம்யூட்டர்களை ஹெக் செய்பவன்.... இதற்கு முன் ஒரு குற்றத்தில் ஈடுபடும் போது அவனது நண்பன் மாட்டிக்கொள்ள இவன் மட்டும் தப்பிவிடுகின்றான்.... காலங்கள் உருண்டு ஓடுகின்றது....


மார்டின் டைகர் டீம் என்ற செக்யூரிட்டி நிறுவனத்தை நடத்தி வருகின்றான்... அந்தகுழுவின் வேலையே எல்லா பேங்குகளில் உள்ள செக்யூரிட்டி குறையை சொல்லி காசுவாங்குவதுதான்... எப்படி என்றால்....

என் பேங்கில் திருட வாய்ப்பே இல்லை என்று நீங்கள் சொன்னால் அந்த பேங்கில் திருடி இப்படி எல்லாம் உன் பேங்கில் திருட வாய்ப்பு இருக்கின்றது என்று சொல்லி அந்த பேங்கிடம் பெரிய பில்லாக பொடுவதுதான் அவர்களின் பொழப்பே...


இப்படியே போனால் அது நைன் டூ பைவ் ஜாப்பாகிவிடும் என்பதால்.. கதையில் புதிதாய் இருவர் நுழைகின்றார்கள்...அவர்கள் நேஷனல் செக்கியூரிட்டி ஏஜென்சியில் இருந்து வருவதாக சொல்லி ஒரு வேலையை சொல்கின்றாகள்.. அப்படி மறுத்தால் உன் பழைய கதையை எல்லாம் எடுத்து உன்னை எப்படியும் வாழ்நாள் முழுவதும் களிதிங்க வைத்துவிடுவோம் என்று சொல்லி மிரட்டுகின்றார்கள்...
பழைய கதை அவர்களுக்கு தெரிந்த காரணத்தால் மார்ட்டின் அவர்கள் சொல்லும் வேலையை செய்ய ஒப்புக்கொள்கின்றான்... அவன் ஒத்துகிட்டா போதுமா? அவன் குழுவில் இருப்பவர்கள் ஒத்துக்கொண்டு விடுவார்களா? அந்த வேலையும் சாதாரண வேலை போல இல்லை....அந்த வேலையை எடுத்ததும் பல சிக்கலக்ளையும் பல கொலை முயற்ச்சியும் நடக்குது.....


அது என்ன வேலை?
அந்த வேலையை அவன் எப்படி வெற்றிகரமா செஞ்சான் போன்றவற்றை எப்படியாவது பார்த்துவிடுங்கள்...

படத்தின் சுவார்ஸ்யங்களில் சில...

படத்தின் அடுத்த கட்டம் என்ன என்று ஆர்வமாய் பார்ககவைக்கும் திரைக்கதை...

விறுவிறுப்பான ஆக்ஷன் தமாக்கா......

ஒரளவுக்கு திரைக்கதை யூகிக்க முடியும் என்றாலும் சுவராஸ்யத்துக்க பஞ்சம் இல்லை...

ஆக்ஷனோடு கொஞ்சம் காமெடி காட்சிகளும் இருக்கும்..

இந்த படம் 1992ல் வெளியான படம்...

படத்தின் ஹைலைட் சீ்ன்..
படத்தின் கண் தெரிந்தவர்கள் தினரும் போது கண் தெரியாத அந்த கேரக்டர் கண்டுபிடிக்கும் காட்சிகள் அத்தனையும் அசத்தல் ரகம்

படத்தின் டிரைலர்...



படக்குழுவினர் விபரம்...

Directed by Phil Alden Robinson
Produced by Lawrence Lasker
Walter F. Parkes
Written by Phil Alden Robinson
Lawrence Lasker
Walter F. Parkes
Starring Robert Redford
Dan Aykroyd
Ben Kingsley
Mary McDonnell
River Phoenix
Sidney Poitier
David Strathairn
James Earl Jones
Music by James Horner
Cinematography John Lindley
Editing by Tom Rolf
Distributed by Universal Studios
Release date(s) September 9, 1992 (USA)
Running time 126 min.
Language English
Gross revenue $105,232,691(Worldwide)


அன்புடன்
ஜாக்கிசேகர்

நாலுபேரு இதை படிக்கனும்னா ஓட்டு போடுங்கப்பா...



சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்(21•05•2010)

ஆல்பம்...

சென்னையில் ஒரு மழைகாலம்... நல்ல மழை... இந்த மழை மட்டும் பேயவில்லை என்றால் மக்கள் தவித்து போய் இருப்பார்கள்...வேளச்சேரியில் மழை பெய்த காலையில் ஆந்திரா பெண் ஒருவர் வேலைக்கு போகும் போது அறுந்து கிடந்த மின் கம்பி மிதித்து இறந்துவிட்டார்...அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை..மூன்று மாதத்துக்கு முன்புதான் சென்னையில் இருக்கும் காக்னிசென்டில் வேலை மாறுதல் கிடைத்து வந்தாராம்....மாண்டவர் மீண்டதில்லை... இருப்பினும் பக்கத்துவீட்டுபாரர் அந்த பெண் ரோட்டில் மயங்கி விழுந்து கிடப்பதாக நினைக்க அப்புறம்தான் மின் கம்பி மிதித்து இறந்து போனது தெரிகின்றது....நம்ம சென்னை ஆட்கள் வீட்டில் போய் கதவை சாத்தினால் திறப்பதே இல்லை...பால்கனியில் வந்தாவது என்ன நடக்குது என்று பார்க்கும் பழக்கம் இல்லை... இதுவே கிரமமாக இருந்தால் நாலு இளவட்டங்கள் ரவுண்டு கட்டி அங்கு கரண்ட் கம்பி அறுந்து கிடப்பதாகவும் யாரும் செல்ல வேண்டாம் என்றும் லைன் மேன் வரும் வரையில் ஆள் மாத்தி ஆள் காவல் இருப்போம்.. ஆனால் சென்னையில்....பாவம் யாராவது எச்சரித்து இருந்தால் நிச்சயம் அந்த பெண்ணின் இறப்பை தடுத்து நிறுத்தி இருக்கலாம்...

============================
தமிழ் செம்மொழி விழாவுக்கு ஏஆர் ரகுமான் போட்ட பாடல் நன்றாகவே இருக்கின்றது.... அன்று நடந்த நிகழ்வை பொதிகையில் ஒளிபரப்பினார்கள்...அது பல தமிழர்களுக்கு தெரியாது.......

=======================
தப்பு எங்க நடந்தாலும் தப்பு தப்புதான்...மத்திய அரசு மருத்துவமைனைகளில் கலாவதி மருந்துகள் பறிமுதல் செய்யபட்டன.. அப்ப என்ன அர்த்தம்... வாங்கி சாவ போறது பொதுமக்கள்... இவன் மகளையும் மகனையும் அப்பல்லோவில வாங்கின லஞ்ச பணத்துல உடம்பை காட்டிக்குவானுங்க... அப்படித்தானே... அரசு உழியர்கள் அத்தனை பேரும் முதல்வர் உட்பட அரசு மருத்துவ மணையில்தான் மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும என்று சட்டம் இயற்றபட வேண்டும்....
==================================

பதவி படுத்தும் பாடு.... முதல்வர் பதவியில் இருந்து மீண்டும் சிபூசோரன் பதவி விலக மறுத்து இருக்கின்றார்.. வரும் 5ம் தேதி முதல்வர் பதவி ஏற்க்க இருக்கு பாஜக என்ன செய்வது என்று தெரியாமல் கையை பிசைந்து கொண்டு இருக்கின்றது....
=========================
சர்க்கார் வாப்பான்னு சென்னை கோவளத்தில் இருக்கும் இஸ்லாமிய மத போதகர் மீது பாலியல் குற்றசாட்டு எழுந்து இருக்கின்றது..தர்காவுக்கு வரும் பெண்களை வசியம் செய்வது மற்றும்சிறுவர்களை ஓரினச்சேர்கையில் ஈடுபடவைக்கின்றார் என்பதாக புகார்... போலிஸ் அவருக்கு குறிவைத்து இருப்பதாக இந்த வார நக்கீரனில் செய்தி வெளியாகி உள்ளது... எல்லா மதத்தது சாமியார்களுக்கும் நேரம் சரியில்லை போலும்....
=============================
மிக்சர்........
லைலாபுயலால் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து சூட்டை தனித்து இருக்கின்றது... இயற்கைக்கு என் நன்றிகள்....
============
பாராட்டுகள்...
பொதுவாக ஒரு அரசியல்வாதியை பற்றி நம் மனதில் வரும் மதிப்பிடுகள் நம்மை பொறுத்தவரை முகம் சுளிக்க வைப்பதாகவே இருக்கும்....ஆனால் சைதை துரைசாமி நடத்தி வரும் ஐஏஎஸ் இலவச பயிற்ச்சி முகாம் மூலம் வருடா வருடம் பல தமிழர்கள் வெற்றி கொடி நாட்டி வருகின்றார்கள்... இந்த வருடம்146பேர் தேர்வில் வெற்றி பெற்று இருக்கின்றார்கள்... இவர் நடத்தி வரும் இலவச பயற்ச்சி முகாம் மூலம் தொடர்ந்து தமிழ்ர்கள் ஐஏஎஸ் தேர்வில் வெற்றிக்கொடி நாட்டிவருகின்றார்கள்.......சைதை துரைசாமி அவர்களின் சேவைக்கு நமது நன்றிகளும் பாராட்டுகளும்....
============================
உங்களுக்கு என் இதயபூர்வமான நன்றிகள்....
6லட்சத்தி ஐம்பதாயிரம் ஹிட்சுக்கு
===================================
பிளஸ்டூ

இந்தமுறை பிளஸ்டூ மதிப்பெண்களில் கணக்கில் நிறைய பேருக்கு குறைவான மதிப்பெண் என்பதால் நிறைய தமிழக மாணவர்களின் என்ஜினியரி்ங் கனவு கேள்வி குறியாக இருக்கின்றது... அதற்க்கு சென்னை யூனிவர்சிட்டியில் உட்கார்ந்து கொஸ்ட்டின் பேப்பர் தயாரித்த ஒரு சனியன்தான் காரணமாக சொல்கின்றார்கள்... எது எப்படியோ பலரின் கனவோடு ஒரு தனிமனித அதிமேதவித்தனத்தால் எல்லாம் குலைந்து போனது.....
========================
விரலுக்கு தகுந்த வீக்கம்...

பெற்றோர்கள் அவர்கள் பிள்ளைக்ளுக்கு ஏத்த கோர்ஸ்களில் சேர்க்கவும்...பொருளாதரத்தை மனதில் வைத்தும் சேர்க்கவும்... என் நண்பி ஒருவள் பைலட்டாக வேண்டும் எனபது சிறுவயது கணவு... லோன் எல்லாம் வாங்கி... நிலத்தை அடமானம் எல்லாம் வைத்து அந்த பெண்ணை பிலிப்பைன்ஸ் அனுப்பி பைலட் கோர்ஸ் படிக்க வைத்தார்கள்.. எல்லாம் எக்சாமையும் முடித்து தற்போது வேலை தேடிக்கொண்டு இருக்கின்றாள்...வாங்கிய கடன் வட்டி கட்ட முடியாமல் அந்த குடும்பம் தவிக்கி்ன்றது...30 லட்சத்துக்கு மேல் செய்த செலவுக்கு வெறும் பிரியாவாக பிலிப்பைன்ஸ் போய் கேப்டன் பிரியாவாக திரும்பி வந்து இருக்கின்றாள்... அது பணக்காரர்களின் தொழில்....மும்பையில் என் நண்பி வேலைதேடிக்கொண்டு இருக்கின்றாள்... ஏர் இந்தியாவில் பைலட் ஓப்பனிங் எப்போது போடுவார்கள் என்று காத்துக்கொண்டு மும்பையில் கிடைத்த வேலையை செய்து கொண்டு நம்பிக்கையுடன் காத்து இருக்கின்றாள்...உதவிக்கு யாரும் இல்லை.. நம்ம பரம்பரையில் வானத்துல அண்ணாந்து பார்த்தே பழக்கம்.... இல்லைன்னா ஒரு வேலை வாங்கி கொடுத்துடலாம்... பார்போம்...யாராவது பைலட் இதை படிச்சா....ஒரு தபா என்கிட்ட பேசுங்க அப்பு... அதனால் பெற்றோர்கள்..நம்ம தகுதிக்கி ஏத்த படிப்பை படிக்க வைக்கவும்....
==============================
மணிரத்னம் சார்....
இராவணன் படத்து தமிழ் டிரைலர் எல்லா சேனலிலும் ஓடுது....மெட்ராஸ்டாக்கிஸ்,பாடல்கள் வைரமுத்து,இசை ஏஆர் ரகுமான்,படத்தின் பேர் எல்லாம் தமிழில் வருகின்றது... மணிரத்னம் பிலிம் மட்டும் ஆங்கிலத்தில்.... இதை குத்தமா சொல்லலை.. டக்னு மனசல பட்டிச்சி...தமிழ்ல மணிரத்னம் படைப்புன்னு சொல்லலாமா?
மணிசார்... இதைகூடவா நோட்பண்ணுவிங்கன்னு என்னை வையாதிங்க....
=====================
டிவி டிரைலர்..
சன்டிவியில சுறா படத்துக்கு எத்தனை வித விதமான விளம்பரம் ஆனா பையா படத்துக்கு கலைஞர் டிவியில எப்ப பார்த்தாலும் சோன்ன்னு பேயற மழை... என்ன பெங்களுர்ல மழையான்னு கேட்டு கேட்டு அலுத்து போச்சி மாத்துங்கப்பு.....
======================
எனக்கு எக்சாம்....
நாளையில் இருந்து நாலு நாளைக்கு தொடர்ந்து பரிட்சை எழுத போறேன்... மதுரை காமராசர் பல்கலை கழக அஞ்சல் வழியில் எம்ஏ மாஸ்கம்யூனிகேஷன் ஜேர்னலிசம் பரிட்சை எழுத போறேன்.. இங்க போருர் டிரங் ரோட்டுல இருக்கற ஹோலி ஏஞ்சல் பள்ளியில் தினமும் மதியம் 2லிருந்து5வரை... அந்த நேரத்தி்ல் யாரும் போன் செய்ய வேண்டாம்...தினமும் டிராப்டில் இருக்கும் பதிவுகள் போஸ்ட் அகும்...நல்லா எழுதனும்னு இந்த 35வயசு மாணவனை வாழ்த்துங்க அப்பு....

==============================

இந்தவார சலனபடம்...

ங்கொய்யால....


============================
அஞ்சலி...

எழுத்தாளர் அனுராதரமனனுக்கு...

அவரின் வாரமலர் அட்வைசுக்கு நான் ரசிகன்..
==========================
பார்த்ததில் பிடித்தது...

ரேஷன் கார்டு மாற்ற ஸ்ரீபெரும்பத்தூர் போய் விட்டு என் பைக்கில் வீடு திரும்பி கொண்டு இருத்தேன்... குயின்ஸ் லேன்ட் பேருந்து நிறுத்தத்தில் ஒரு பையன் நிழற்குடையில் சாய்ந்து கொண்டு இருக்க அவன் மேல் அந்த பெண் சாய்து கொண்டு இருந்தது... நான் வாகனத்தின் வேகத்தை குறைத்தேன்...அந்த பெண்ணுக்கு தலை எல்லாம் கலைந்து, களைப்பு முகத்தில் கொட்டிக்கிடந்தது... சூட்டின் கதகதப்பு இன்னும் குறையவில்லை போலும்... அந்த பெண் அவன் காதில் ரகசியம் பேசுவாதாக கூப்பிட்டு காதை கடித்து வைத்தது...எனக்கு நம்ம ஊர் பேருந்து நிலையம்தானா என்று சந்தேகம் வந்தது......
===================
சுறா பாடலில் வங்க கடல் எல்லை கோவில் திருவிழா குத்து பாட்டில் ஆடும் வெள்ளை பெண்களில் இருவர் அக்கா தங்கை அல்லது டிவின்சாக இருக்க வேண்டும்...சிறுவயதில் இருந்தே கதாநாயகியை விட பின்னனியில் ஆடும் பெண்களின் மீதுதான் என் கவனம் பதியும்... அதில் சில பெண்கள் ஹீரோயின்களை விட அழகாக இருப்பார்கள்...படத்தில் இரண்டாவதாக பெண்ணாக (பச்சைகலர்)ஆடும் அந்த பெண் நல்ல அழகு...ஒரு ஸ்டேப் ரொம்ப காமெடியாக இருக்கும்...உடை டைட்டாக இருப்பதால் அவளால் நளினமாக ஆட முடியாது... காலை அகட்டி ஆடுவது நன்றாக இருக்கவில்லை....

===================================
ஒரு அசத்தல் நகை விளம்ரம்...

அந்த பெண்ணுக்கு கல்யாண ஆசை இல்லை காரில் அப்பா அம்மாவுடன் பயணம்.. அப்பா கல்யாண பேச்சையும் பையனை பற்றியும் சொல்ல.. மகள் கல்யாணத்தில் இன்ட்டிரஸ்ட் இல்லை என்று சொல்ல... அம்மா வரியில் இருக்கும் நகை கடையில் நிறுத்த சொல்ல... நகை போட்டு பெண்ணுக்கு அழகு பார்க்க .....நகை கடை ஊழியை கல்யணத்துங்ககாக? என்று கேட்க... எங்களுக்கு கல்யாணத்தில் இன்டிரஸ்ட் இல்லை என்று அம்மா சொல்ல.... அந்த பெண் முகத்தை சுருக்கி நகை கழட்டி கொடுத்து விட்டு திரும்ப காரில் பயணபடும் போது... அந்த பையன் பேர் என்ன? என்று அப்பாவிடம் கேட்க அம்மா கணவனை பார்த்து சொல்வாள்... கல்யாணம் ஆயி 25 வருஷம் அகுது இதுவரை பெண்களை புரிந்து கொள்ள தெரியவில்லை என்று சொல்லும் அந்த விளம்பரம்.. அதில் நடித்த பெண்ணின் அழகியலும் உடல் மொழியும் அற்புதம்... அந்த பெண்ணுக்கு நகை போட்டதும் ஒரு எக்ஸ்ரா அழகு வந்து ஒட்டிக்கொள்ளும் பாருங்கள்... இப்போது என் பேவரைட்....
================
ஒரு காமெடி விளம்பரம்....
தேவயானி என்னை குடும்பதலைவியா உணரவைப்பது பொம்மிஸ் நைட்டிஸ் என்று சொல்வது....
============
பிலாசபி பிச்சை...

மூச்சு நின்றால் மட்டும் மரணம் அல்ல.... முயற்ச்சி நின்றாலும்தான்...

பரத் எம்பிஏ....
===================
அமெரிக்காவுல ரெண்டு வகையான ரோடு இருக்கும் ஒன்னு நேஷனல் மற்றது இன்டர் நேஷனல்... நம்ம ஊர்ல இரண்டு ரோடு எப்பயும் நீங்க பார்க்கலாம்...

1.. அண்டர் கன்ஸ்ட்டிரக்ஷன்ஸ்

2.டேக் டைவர்ஷன்...

லட்சுமணன்...
================================


ரோட்டுல போறப்ப பாம்பு நம்ம கடிச்சா அது அரேஞ்சுடு மேரேஜ்....
பாம்புகி்ட்டயே போய் என்னை கடி.. என்னை கடின்னு சொன்னா அது லவ் மேரேஜ்...

ராமன்...

=======================

நான்வெஜ்...


ஜோக்....1

பதிவர் மயில் அனுப்பிய குறுஞ்செய்தி...

நடிகர் விஜய் காலேஜ் ஆரம்பித்த என்ன பேர் வைப்பார்...?
டாக்டர் விஜய் மெடிக்கல் காலேஜ் ஆப் என்ஜினியரிங்...
========================
ஜோக்...2
டீச்சர்...
கோழி முட்டை போடுமா? சேவல் முட்டை போடுமா?

பையன்....
சேவல் முதல்ல கோழியை போடும்... அப்புறமா கோழி முட்டையை போடும்.. அந்த முட்டையை சாப்பிட்டு விட்டு காலையில நீங்க வெட்................ போடுவிங்க...

டீச்சர்....
பையன் கன்னத்தில் பளிச்.......

=========================
பையன்கள்..இந்த கேள்வியை பொண்ணுங்ககிட்ட தைரியமா கேட்கும் இடம் எது தெரியுமா? எக்சாம் ஹால்....
கேள்வி... பிளிஸ் கொஞ்சம் காட்டுப்பா....
================

5பேர் திடிர்னு கிங்பிஷர் பிளைட்டுலநுழைஞ்சாங்க...விமானபணிப்பெண்கள் ஆறுபேரும் எதுவுமே கேட்காம டிரஸ் எல்லாத்தை கழட்டி உடம்புல ஒட்டு துணி கூட இல்லாம தரையில முட்டி போட்டாங்க...அதுல ஒரு பெண் கேள்வி கேட்டா?

இது பிளைட் ஹைஜாக்கா? ராப்பெரியா? அல்லது...
மாசத்துக்கு 4வாட்டி நடக்கற யூஷுவல் போர்டாப் டைரக்டர் மீட்டிங்கா?....
=====================


அன்புடன்
ஜாக்கிசேகர்

நாலுபேரு இதை படிக்கனும்னா ஓட்டு போடுங்கப்பா...

(Devil's Town) 18+ உலகசினிமா செர்பியா/ சமுகத்தின் இன்னொரு முகம்

வெப்கேம் ஸ்கேண்டல்கள் இப்போது வலைதளத்தில் பிரபலம்.... அந்த பெண் பெங்களுர் அல்லது சென்னையாக இருக்க வேண்டும்.... அந்த பெண் ரொம்பவும் அழகு.. அந்த பெண்ணுக்கு அன்றுதான் பிறந்தநாள்... கோவிலுக்கு எல்லாம் போய்விட்டு நெற்றியில் திருநீறு அணிந்து ஸ்டிக்கர் போட்டு எல்லாம் வைத்து ரொம்பவும் மங்களகரமாக இருக்கின்றாள்.... வேலைபாடு செய்யபாட்ட காஸ்ட்லி சுடிதார் அணிந்து இருக்கின்றாள்... அது அவளின் ஹாஸ்டல் ரூம்... காதலனிடம் வெப்கேம் வழியாக அந்த பெண் பேசிக்கொண்டு இருக்கின்றாள்...


அவன் என்ன சொன்னான் என்று தெரியவில்லை... கொஞ்சம் தயங்கி அந்த பெண் தன் மார்பகங்களை வெப்கேம் வழியாக காதலனுக்கு காட்ட அந்த காதலன் என்ற போர்வையில் இருந்த அந்த நாய் அதை ரெக்கார்ட் செய்து வெளியிட இப்போது உலகம் முழுவதும் அந்த பெண்ணின் அந்தரங்கம் எல்லோருக்கும் தெரிந்ததாக ஆகிவிட்டது.....இது போலான கயவர்கள் ஒரு குழுவாக செயல்பட்டு வருகின்றார்கள்... அவர்கள்.. சி்றுமிகளையும் விட்டு வைப்பதில்லை.... இது போல் நடக்கும் பலவிஷயங்களை வக்கிரங்களை இந்த படத்தின் ஊடே போகின்ற போக்கில் சொல்லிவிட்டு போகின்றது இந்த செர்பிய படம் டெவில் டவுன்.....

சாத்தான்கள் வாழும் நகரம்..... பல பேருடைய வாழ்க்கையை சொல்லும் போது அதனை ஒன்றுக்கு ஒன்று தொடர்பு படுத்தி சொல்லி இருப்பது இந்த படத்தின் திரைக்கதை சிறப்பு....

சமுகம் என்பது என்ன? நல்லதும் கெட்டதும் அடங்கியது... எல்லா இடத்திலும் நல்லவைகள் மட்டுமே காணப்பட்டாள்.. உலக சுபிட்சமாகிவிடும்....அனால் அப்படி உலகம் இருப்தில்லை.. இது போலான பேய்களுடனும் சமுகத்தில் வாழ்ந்துதான் தொலைக்கவேண்டும் என்று சொல்ல வந்திருக்கும் படம்


(Devil's Town) 18+ உலகசினிமா செர்பியா படத்தின் கதை இதுதான்...


ஜெலினா இவானா இருவரும் தோழிகள்...ஜெலினா ஏழை... ஜெலினா அம்மா இவானா வீட்டில் வேலை செய்கின்றாள்... இவனா டென்னீஸ் ஆட போகும் போது ஜெலினாவும் அவளோடு டென்னீஸ் கோர்டுக்கு செல்கின்றாள்...ஜெலினாவுக்கு டென்னி்ஸ் விளையாட ஆசை வருகின்றது..ஆனால் டென்னிஸ் ராக்கெட் விலை 200டாலர்... அவளோ ஏழை...அப்பாவிடம் பணம் கேட்க அவரோ போலிஸ் தேடும் குற்றவாளி...இவனாவுடன் நெட்டில் பழக்கம் அகும் ஒருவன் உன்னுடைய அப்பா நான்தான் என்று சொல்லிவிட்டு கொஙசம் கொஞ்சமாக அந்த பெண்ணின் உடையை கழட்ட சொல்லவது... கோழை காதலன் அவன் காதலி மற்றவனிடம் முத்தமிடுவதை பார்த்து ,தற்கொலைக்கு முயல்வது...,கோபமான டாக்சி ஓட்டி கொலை செய்ய துணியும் சின்னவயது பகை, குடும்ப தலைவியாக இருந்து கொண்டு சோரம் போகும் பெண்...
படம் எடுப்பதை வாழ்வின் லட்சியமாக வாழும் இளைஞன்... இப்படி அத்தனை பேரின் கதைகளும் ஒரு புள்ளியில் வருகின்றது.. தீர்வு என்ன படத்தை பார்த்து ரசித்து கொள்ளுங்கள்...

படத்தின் சுவாரஸ்யங்களில் சில....


நிறைய கதைகள் நிறைய கணவுகள் எல்லாம் ஒரு புள்ளியில் சேருவதாக திரைக்கதை அமைத்து இருக்கின்றார்கள்...

அப்பா என்று சொல்லிவிட்டு உடை கழட்ட சொல்லும் போது.. நமக்கு திக் என்று இருக்கும்...

குடு்ம்பத்துக்காக, பிள்ளைக்காக என்று சோரம் போகும் பெண்கள் இனம் உலகம் முழுவதும் இருக்கின்றது என்பதையும்... அவர்கள் இயலாமையையும் மிக அழகாக பதிவு செய்து இருக்கின்றார் இயக்குனர்..

காதலிக்க நேரமில்லை நாகேஷ் போல் ஒரு கேரக்டர் தன் தந்தையிடம் படம் எடுக்க காசு கேட்டு அலைவது நகைச்சுவை...

அதே போல் புல் வெளியில் முயல்கள் தப்பிக்கும் அந்த காட்சி நெகிழ வைக்கும் காட்சி...

வயதான காலத்தில் விலைமாதர்களிடம் போய் பணத்தை கொடுத்து எதையும் செய்யாமல் பார்த்துவிட்டு மட்டும் வருவதை ஒரு பொழப்பாக வைத்து இருக்கும் ஒரு அப்பன்...

போட்டில் டான்கள் உல்லாசமாக பெண்களோடு அனுபவித்துக்கொண்டு இருக்கும் போது அங்கு நடக்கும் கொடுர கொலையும் அதில் தப்பிக்கும் இரு் பெண்கள் அரை நிர்வாணமாக கரை ஏறி குனி குறுகுவதும் அற்புதமான காட்சிகள்...-

இந்த படம் எழாவது சென்னை சர்வதேச திரைப்படவிழாவில் கலந்து கொண்டு திரையிடப்பட்டது...

இந்த படத்தின் இயக்குனர் valadimir paskaljevic முதலில் குறும்பட இயக்குனராக இருந்து இவரது படைப்புகளுக்கு பல்வேறு அங்கீகாரம் கிடைத்து உள்ளது....இந்த படம் பல்வேறு விருதுகளை இவருக்கு பெற்றுதந்தது...

இந்த படம் ஏதோ செர்பிய தேசத்தை மட்டும் சொல்கின்றது என்று எடுத்துக்கொள்ள கூடாது.... இது எல்லா நாட்டுக்கும் பொறுந்தும்....



படத்தின் டிரைலர்....





குறிப்பு....

நண்பர்களுக்கு... இந்த படத்தின் லிங்க என்னிடம் கேட்க வேண்டாம்... இந்த படத்துக்கு புகைபடம் சேகரிப்பதற்க்குள் தாவு தீர்ந்து விட்டது....படம் அறிமுகபடுத்துவது மட்டும் நம் வேலை...அதே போல் எந்த படத்தையும் நான் டவுன்லோடு செய்து பார்க்கும் பழக்கம் என்னிடத்தில் இல்லை....

அன்புடன்
ஜாக்கிசேகர்

நாலுபேரு இதை படிக்கனும்னா ஓட்டு போடுங்கப்பா...

சென்னை தாஜ்மகாலும் அய்யன் அருவியும் ஒரு பார்வை...(நிழற்படங்களுடன்)


இரண்டு வாரங்களாக சென்னையில் தாஜ்மகால் மற்றும் குற்றாலும் செட்டுகள் தீவுத்திடலில் போட்டு இருப்பதாக நாளிதழில் விளம்பரம் வந்த வண்ணம் இருக்க...

எல்லார்வீட்டிலும் கேட்கும் அதே டயலாக் என் வீட்டிலும் ஒலித்தது... கல்யாணத்துக்கு அப்பறம் நீங்க ரொம்பவே மாறிட்டிங்க???

அப்படி மாறவில்லை என்று காட்டுவதற்க்காக இந்த ஞாயிறு அன்று தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிகழகம் ஏற்பாடு செய்து இருந்த கோடை திருவிழாவில் போடபட்டு இருக்கும் தாஜ்மகால், குற்றாலம் அருவியை பார்க்க என் மனைவியை அழைத்து போய் இருந்தேன்...

பெரிய பார்க்கிங் என்றார்கள்..ஞாயிறு காரணமாக சென்னைவாசிகள் திரண்டு வந்த கூட்டத்தை சாமாளிக்க முடியவில்லை...பார்க்கிங் இடங்கள் எல்லாத்தையும் நிறைந்து ரோடுவரை வந்து விட்டது...அந்த ரோட்டில் நின்ற பார்க்கி்ங் தூரம் பல்லவன் ஹவுஸ் சிக்னல் வரை வந்து விட்டது...

டிக்கெட் கொடுக்கும் கவுண்டர்கள் பலது இருந்தும் எல்லா கவுண்டரிலும் கீயூகட்டி மக்கள் நின்று இருந்தார்கள்..எல்லார் வீட்டிலும் கல்யாணத்துக்கு பின் மாறிவிட்டாய் என்ற டயலாக் பேசி இருப்பார்கள் போலும் ....எல்லோரும் குடும்பத்துடன் வந்து இருந்தார்கள்... அவ்வளவு கூட்டத்தை நான் எதிர்பார்க்கவில்லை... இவ்வளவு கூட்டம் வரும் என்று தெரிந்து இருந்தால் நான் சத்தியமாக விடுமுறை தினத்தை தேர்ந்து எடுத்து இருக்கமாட்டேன்..
நல்ல கூட்டம் எல்லாபள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் ரகவாரியாக பிள்ளைகள் ரவுண்டு கட்டி அடித்தார்கள்...(வீல் என்று கத்தியபடிமக்களின் குடல் வாய் வரை வந்த போது கிளிக்கியது)

எல்லா ராட்டிணத்திலும் பல குடும்பத்தினர் டிக்கெட் வாங்கி வரிசையில் காத்து நின்று கொண்டு இருந்தார்கள்...
(உட்கார கூட முடியாத அளவுக்கு மக்கள் கூட்டம்)

முதலில் தாஜ்மகால் செட்டுக்கு சென்றோம்... அங்கும் டிக்கெட் வாங்க கூட்டம் அலை மோதியது...தாஜ்மகாலை உள்ளே போய் பார்க்க 20ரூபாய் டிக்கெட்... பராவாயில்லை நன்றாகவே செட் போட்டு இருந்தார்கள்...
ஆனால் கட்டுக்கடங்காத மனித தலைகள் அதிகம் இருந்த காரணத்தால் அந்த ரியல் பீலிங்கை அனுபவிக்க முடியவில்லை...
செட்டை சுற்றி தாஜ்மகாலின் சுற்றுபுறத்தை பல ஆங்கில்களில் போட்டோ எடுத்து அதனை பெரிது பெரிதாக புளோ அப் செய்து வைத்து இருந்தார்கள்...300 அடியில் வங்காளவிரிகுடா கடல் இருந்தாலும்..
ஏனோ ரொம்பவும் புழுங்கி தள்ளியது... சட்டையை கழற்றி வீசி விடலாமா? என்று நினைக்கும் அளவுக்கும் ஒரே புழுக்கம்....

எனக்கு தெரிந்து தாஜ்மகால் செட்டை அதிக அளவில் பார்க்கவந்தவர்கள்..முஸ்லிம் குடும்பத்தினர்தான்...
எல்லா முஸ்லீம் பெண்களும் பர்தா அணி்ந்து சுதந்திரமாக தன் கணவர் மற்றும் குழந்தைகளுடன் இரண்டு கண்கள் மட்டும் தெரியும் வகையில் செட் தாஜ்மகால் முன் நின்று போட்டோ எடுத்துக்கொண்டனர்...சிலர் முகத்தை தெரியும் விதத்தில் எடுத்துக்கொண்டனர்....என் மனைவி சாதாரணமாக ஒரு போட்டோ எடுத்தால் அது நன்றாக வந்த சந்தோஷ மிகுதியில்... டிபரண்டாக இருக்க என் கண்ணாடியை போட சொல்லி ஒரு போட்டோ எடுக்க... ஒரு பெண்கையில் குழந்தை வைத்துக்கொண்டு என்னை பார்த்து நமுட்டு சிரிப்பு எனக்கு நன்றாக கேட்டது..

(கீழே படத்தை கிளிக்கினாள் என் மனைவி போட்டோ எடுப்பதை கையில் குழந்தையுடன் பார்த்து சிரிக்கும் பெண்மணி)தாஜ்மகால் செட்டை சுற்றி நடந்து வரலாம்..ஸ்பீக்கரில் ஏதோ ஒரு கஜல்பாடல் வழிந்தது... தாஜ்மகால் முன்புறம் சிறிய குளம் போல் நீர் ஊற்று வைத்து புல்தரைக்கு பதில் பச்சைகலர் கார்பெட் விரித்து இருந்தார்கள்.. (ஆக்ரா போய் படம் எடுத்துக்க முடியாவிட்டாலும்)

100 பேருக்கு 98 பேர் தன் மொபைலில் தன் குடும்பத்தை, தன் காதலியை, தன் மனைவியை,தன் குழந்தையை, தன் அம்மாவை, மொபைல் மற்றும் டிஜிட்டல் கேமராக்களில் படம் எடுத்து மகிழ்ந்தனர்....(இரவு நேரம் ஆரம்பிக்கும் போது)

ஆனால் யார் எடுத்த போட்டோவாக இருந்தாலும் எல்லா பிரேம்களிலும் ஜனதிரள் இருந்துகொண்டே இருக்கும்.... எல்லோரும் சொல்லி வைத்தது போல் மும்தாஜ்,ஷாஜகான் போட்டோ அருகில் நின்று படம்எடுத்துக்கொண்டனர்......
(ஒரு ரியல் ஷாஜகான் மற்றும் மும்தாஜ் குழந்தையுடன்)

எல்லா இடத்திலும் விடுமுறை விட்டதால் வீட்டை விட்டு எங்காவது அழைத்து போ என்ற தொந்தரவு காரணமாகவும்...அழைத்துவந்த வெறுப்பு மத்திய வயதை கடந்த அப்பாக்களின் முகத்தில் நன்றாக தெரிந்தது....

(தாஜ்மகாலின் மீது மக்கள் நடைபழகும் போது)

வயது பெண்கள் அதிகம் பர்சேஸ் செய்ய நிறைய கம்மல் தொங்கட்டான்கள் கடைவிரித்து வைத்து இருந்தார்கள்...குதிரைக்கு சேனம் போடுவது போல் பல்வேறு விஷயங்கள் பேசி கவணத்தை திசைதிருப்பி என் மனைவியை அந்த இடத்தை விட்டு அழைத்து செல்வதற்க்குள் எனக்கு பெரும்பாடாகிவிட்டது...

அப்பா இதுல 4 தோடு எடுத்தக்கறம்பா....

அது ஒன்னு என்ன வெலைம்மா?

75ரூபாய்பா....

(4 தோடு 300ரூபாய் என்று மனதில் கணக்கு போடும் போதே, அந்த தகப்பனுக்கு மயக்கம் வர ஆரம்பித்தது...)

இரண்டு எடுத்துக்கம்மா...

போப்பா அருவியிலயும் குளிக்க வேண்டாம்னு சொல்லிட்ட... இதுவும் இரண்டுன்னா... அதுக்கு எதுக்கு இங்க வரனும்? என்று கேள்வி கேட்டது அந்த பெண்...

நியாயம் உணர்ந்த அப்பா அதை வாங்கி தந்தார்....(அருவியில் குளிக்க அந்த பெண்ணுக்கு அனுமதி மறுத்த காரணத்தை அந்த பெண்ணின் வளர்ச்சி பார்த்தால் தெரியும்...)

சின்ன குழந்தைகள் பல வண்ண உடைகளில் வந்து கலக்கினர்... முக்கியமாக பெண்குழந்தைகள் உடைகள்... அவ்வளவு அற்புதமாக இருந்தது....நடுக்கூட்டத்தில் ஒரு எட்டுவயது பையன் அப்பா எனக்கு ஆய் வருது என்று சொல்லும் பிள்ளையை எங்கு அழைத்து போவது என்று முழிக்க ஆரம்பித்து பிள்ளையை கோவத்துடன் பார்த்தார்...

(மேல உள்ளபடத்தை கிளிக்கினால் அந்த கோபுரத்தின் பின்னே ஒரு பிறையும் நட்சத்திரமும் இருக்கும் பாருங்கள்... அது தானாகவே அமைந்தது... கோபுரத்துக்கு இன்னும் லைட் அதிகபடுத்தி எக்ஸ்போசர் கம்மி செய்து எடுத்து இருந்தால் இன்னும் அது நன்றாக தெரிந்து இருக்கும்....)

நிறைய ரோமியோக்கள்... வலம் வந்து கொண்டு இருந்தார்கள்...ஒரு பையன் கூட்டத்தின் காரணமாக ஒரு பெண்ணை பாடாய் படுத்த அவள்பாட்டி அவளை முன்னே நடக்கவிட்டு காவல்காத்தார்கள்....

ஒரு பையன் சைனா மொபைலில் சத்தமாக என் காதல் சொல்ல நேரமில்லை என்ற பையா படத்து பாடலை சத்தமாக வைத்து யாருக்கோ குறிப்பு அறிவித்து கொண்டு இருந்தான்...செளக்கார்பேட்டையில் இருந்து வந்த.....யாரோ ஒரு மூல்சந்தின் அம்மாவால் நடக்கவே முடியவில்லை...அவர்கள் அந்த ஐன கூட்டத்தின் ஊடே அவர்களின் வேகத்துக்கு அவர்களால் நடக்க முடியவில்லை...நின்று நின்று மூச்சு வாங்கியபடி நடந்தனர்...(தீவுத்திடலில் கூவத்தில் போட்டு இருக்கும் ஒரு மரபாலம்....இரவு நேரத்தில்)
நடந்தே பழக்கபடாதகாரணத்தாலும் அவர்களால் நடக்க முடியவில்லை... அதனால் நிறைய கூட்டம் அந்த பெண்மணியால் நகராமல் நின்று கொண்டு இருந்தது... அந்த அம்மாவின் பசங்கள் அவர்களை அப்படி பார்த்துக்கொண்டார்கள்....ஒன்று சொத்து காரணமாக இருக்கலாம்.. அல்லது அந்த பெண்மணி அவர்களை பாசத்தோடு வளர்த்து இருக்க வேண்டும்...
(மாலை வேலை நெப்பியர் சாரி ஆயுத எழுத்து பிரிட்ஜ்)

தாஜ்மகாலை சுற்றி பார்த்து விட்டு, நடந்து நேராக அய்யன் அருவியை போய் அடைந்தோம்... உள்ளே போகலாம் என்று நினைத்தால் டிக்கெட்150ரூபாய் என்று சொல்ல... என்னை போல் பல குடும்பங்கள் புறமுதுகிட்டு ஓடின.... 150ரூபாயை பெரிய பணமாக மதிக்காதவர்கள்... (அருவி பற்றிய விபரத்துக்கு கிளிக்கி பார்க்கவும்)

உள்ளே தண்ணீரில் ஆட்டம் போட்டு மகிழ்ந்தனர்... வந்து இருந்த கூட்டத்துக்கு மட்டும்....50 ரூபாய் என்டரன்ஸ் டிக்கெட் என்று சொல்லி இருந்தால்... அந்த குற்றால ஐயன் அருவி செட் இடிந்தே விழுந்து இருக்கும்.... அந்த அளவுக்கு கூட்டம்...(இரவு நேர ஐய்யன் அருவி...)


எல்லா இடத்திலும் பெண்கள் கூட்டம் அலை மோதிக்கொண்டு இருந்தது.. கள்ளிபால் ஸ்டாக் ஏதோ ஒரு வருடத்தில் தீர்ந்து போய் இருக்க வேண்டும்.. பையன்களை பார்க்கவே முடியவில்லை....95க்கு முன் பிறந்த பெண்களின் உடைகளில் ஒரு நீட்நஸ் இருக்கின்றது... 95க்கு பிறந்த பெண்கள் பலர் அணிந்து வந்த உடைகள் சொல்லிக்கொள்வது போல் இல்லை... எல்லோரும் சின்ன பெண்கள்தான்....நிறைய அம்மாக்களின் பாசம் கண்ணை மறைத்து இருந்தது... ஒரு இளவட்டம் ஒரு சின்ன பெண்ணை சுற்றி சுற்றி ஒரு 8 முறையாவது வந்து இருப்பார்கள்...
அருவியில் குளிக்க போவதாக இருந்தால் முதலிலேயே வீட்டிலேயே பிளான் செய்து கொள்ளுங்கள்... ஒரு நல்ல காட்டன் உடையை எடுத்து செல்லுங்கள்..பாலியஸ்டர் உடையில் சில பெண்கள் குளித்து, பலர் மூடை ஸ்பாயில் செய்து கொண்டு இருந்தார்கள்....ஒரு சின்ன பெண்... என்ன வயது ஒரு எட்டு இருக்கும்... அக்னி நட்சத்திரம் நிரோஷா போல் நீச்சல் உடை அணிந்து அந்த அருவி தண்ணீ்ரில் போட்ட ஆட்டத்தின் உற்சாகம் நம்மையும் வந்து தொற்றிக்கொண்டது....பக்கத்தில் பல தண்ணீர் விளையாட்டுக்கள் இருந்தன....ஆனால்நல்ல வெயிலில் போய் குளிக்க அந்த சென்னை ஐய்யன் அருவி ஏற்றது என்பது என் கருத்து...

ஒரு பெரிய பலூன் ரொம்ப நேரமாக பறக்க போவதாக சொல்லி சொல்லி சொல்லிக்கொண்டே இருந்தார்களே ஒழிய பறக்கும் வழியை கானோம்...

பலர் சாப்பிட பெரிய புட் கோர்ட் அமைத்து இருந்தார்கள்... எல்லாம் பெரிய நிறுவணங்களும் காசு பார்க்க கடை விரித்து வைத்து இருந்தார்கள்..யானைவிலை சொன்னார்கள்... இருந்தாலும் சாமிகிச்சன்ஸ் வைத்து இருந்த புட் கோர்ட்டில் நான் சிக்கன் பிரியாணியும் ரூ75....என் மனைவிக்கு சோலாபூரிரூ 35க்கும் வாங்கினேன்...


சிக்கனின் சூம்பி போன காலையும் நொச நொசத்து போன சாப்பாட்டையும் கையில் பிளாஸ்ட்டிக் உறையையுடனும், தலையில் பிளாஸ்டிக் தொப்பியையும் மாட்டிக்கொண்டும்.... கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல் தட்டில் பிரியாணியை வைத்து கண் எதிரே கொள்ளை அடித்தார்கள்...சரி இதுதான் சரி இல்லை...

சோளபூரியாவது சாப்பிடலாம் என்று பார்த்தால்.... சென்னாஎங்கள் இருவரையும் என்னா? என்றது... ஊசை அடித்து போனதை சூடு படுத்தி கொடுத்து இருந்தார்கள்...மனசாட்சி இல்லாதவர்கள்...யார் கேட்க முடியும்... அவர்களை என்ன செய்து விட முடியும்? உங்களுக்கு ஒரு வேண்டுகோள் எவ்வளவு பசியாக இருந்தாலும் இது போலான உணவு திருவிழாவில் அதுவும் இது போலான கட்டுகடங்காத கூட்டம் வரும் இடத்தில் எந்த உணவு பொருளையும் வாங்கி சாப்பிட வேண்டாம் என்று கேட்ககொள்கின்றேன்....

மிகச்சரியாக இரண்டு மணிநேரம் கழித்து சாப்பிட்டதை சத்தியம் தியேட்டரின் சாந்தம்ஸ்கிரினின் டாய்லெட்டில், கண்ணில் நீர் வர வாத்தியெடுத்துவைத்தேன்....
போலிஸ் பாதுகாப்பு எல்லாம் போட்டு இருந்தார்கள்... தரையில் எல்லாம் புழுதி மண் இருக்க... அதில் நடந்த நடந்து அந்த தரைமண்ணின் கலரே மாறிபோய்கிடந்தது....அந்த பக்கம் ஏதோ இசை கச்சேரி நடப்பதாக சொல்ல.... அதான் எந்த சேனல் வைத்தாலும் இசைகச்சேரி நடக்குதே என்று சொல்லி சமாதானம் செய்து கொண்டு வண்டி பார்க் பண்ண இடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தோம்...


புகைபடங்கள்....
மிஸ்டர்அண்டுமிசஸ்
ஜாக்கி

குறிப்பு ...

எல்லா படங்களையும் கிளிக்கி பெரிதாக பார்ககலாம்...

அன்புடன்
ஜாக்கிசேகர்

நாலுபேரு இதை படிக்கனும்னா ஓட்டு போடுங்கப்பா...

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner