தமிழில் அற்புதமான ஒரு ரொமாண்டிக் சினிமா...



ஏனோ நம்மவர்கள் ஹாலிவுட்காரர்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் நம்மவர்களுக்கு நாம் ஏனோ கொடுக்க தவறி விடுகின்றோம்...நமது தமிழ் மொழியில் உணர்வுபூர்வமாய் ஒரு அற்புதமான படம் எடுத்து இருக்கின்றார்கள்... ஆனால் நாம் அந்த படத்தை மிகச்சரியாக கொண்டாடவில்லை என்பது என் கருத்து...

அதே போல் நம்மவர்கள் சினிமா பார்க்கும் பார்வை நிச்சயம் மாற வேண்டும்... இப்போதெல்லாம் நல்லபடங்கள் யார் எடுக்கின்றார்கள்? என்று அங்கலாய்ப்பு மட்டுமே நம்மிடம் உண்டு... ஆனால் அப்படி ஒரு படம் எடுத்தால் அந்த படத்துக்கு ஆதரவு என்பது நம்மில் எத்தனை பேர் கொடுக்கின்றோம்.... படத்தில் எந்த பிரேமிலும், எந்த வித ஆபாசமும் இல்லாத இந்த படத்துக்கு தமிழ் சமுதாயம் சரியான வெற்றியை கொடுக்கவில்லை என்பது என் எண்ணம்..


ரொம்ப அற்புதமான ரொமாண்டிக் தமிழ் மூவியாக நான் சொன்னது... பெண் இயக்குனர் பிரியா இயக்கிய “கண்ட நாள் முதல்” படத்தைதான்... இந்த படத்தை எப்போது பார்த்தாலும் ஒரு உற்ச்சாகம் ... என்னோடு ஒட்டிக்கொள்ளும்.... இது ஒரு கவிதையான காதல் படம்.....

ரொம்ப அற்புதமான படம்... நம் எல்லோருக்கும் ஒரு குணம் உண்டு . ஆணோ,பெண்ணோ அவர்களை நமக்கு முதலில் பிடிக்காதது போல்தான் தோன்றும் ஆனால் போக போக மனதளவில் நாம் அவர்களை நேசிப்போம் என்பதுதான் படத்தின ஒன்லைன்ஆ ர்டர்.... என் மனைவி அவள் பள்ளியில் படிக்கையில் என்னை பார்த்த போது என்னை பொறுக்கி என்றாள்... என்னோடு பேசவே அச்சப்படுவாள்....தேவ்ர்மகன் படம் வந்து பங்க் வைத்து அலைந்த நேரம் அது....

கண்டநாள் முதல் படத்தின் கதை இதுதான்....
கிருஷ்ணா(பிரசன்னா), ரம்யா (லைலா) இருவரும் சிறுவயதில் செங்கல் பட்டில் நடக்கும் ஒரு திருமணத்தில் சண்டை போட்டு கொள்கின்றார்கள்... விதியின் விளையாட்டு அவர்கள் 20 வருடம் கழித்து திரும்பவும் ஈரோட்டில் இருக்கும் ஒரு கல்லூரி ஆண்டு விழாவில் திரும்பவும் சண்டை போட்டு கொள்கின்றார்கள்....

சென்னையில் கிருஷ்ணாவின் நண்பன் அரவிந்(கார்த்திக்) நடத்தும் கம்யூட்டர் நிறுவனத்தை பார்த்துகொள்ள சொல்லி கிருஷ்ணாவிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு அமெரிக்கவில் இருக்கின்றான்....கிருஷ்ணாவின் நண்பன் அரவிந்துக்கு திருமணம் செய்ய அரவிந் அம்மா ரமணி(லட்சுமி) ஆசைப்பட... பெண் பார்க்கும் போது அது கடைசியில் இவனோடு சிறு வயதில் இருந்தே சண்டை போடும் ரம்யாதான் தன் நண்பனின் மனைவியாக போகின்றாள் எனபது தெரிந்தும்... அவளை திருமண்ம் செய்து கொள்ள வேண்டாம் என்றும், ரம்யாவின் அடங்காபிடாறி தனத்தை நண்பனிடம் கிருஷ்ணா எடு்த்து சொல்லிகின்றான்...அததே போல் முகத்துக்கு நேரே ரம்யாவிடம் அர்விந் தனக்கு இந்த திருமணத்தில் இஷ்டம் இல்லை என்று சொல்லிவிட்டு அமெரிக்கா பறக்க இங்கே ரம்யாவிட்டில் அவள் தங்கையால் குழுப்பம் நேரா... ரம்யாவின் அம்மாவுக்கு (ரேவதி) ஹார்ட் அட்டாக் வர அந்த ஆண் துனை இல்லாத வீட்டில் பொறுப்பாய் சில பல உதவிகள் ரம்யா குடும்பத்துக்கு செய்கின்றான்.... இருவருக்கும் சண்டை மறைந்த காதல் பூ பூத்த நேரத்தில் அமெரிக்காவில் இருந்து அரவிந் ரம்யாவையே கல்யாணம் செய்து கொள்கின்றேன் என்று வர குழப்ங்களுக்கு தீர்வை மிக கவிதையாக சொல்லி முடிக்கின்றார் இயக்குனர் ப்ரியா


படத்தின் சுவாரஸ்யங்களில் சில.....


முதல் பட வாய்ப்பை பெண் என்று நினைக்காமல் இயக்குனர் பிரியாவின் திறமையை நம்பி அவருக்கு வாய்ப்பு கொடுத்த பிரகாஷ்ராஜ் மற்றும் டுயட் பட நிறுவனத்துக்கு எனது மானசீக நன்றிகள்....

அதே போல் முதல் பட இயக்குனருக்கு பெரிய டெக்னிஷியன்கள் கொடுப்பது எல்லாம் பெரிய விஷயம்... ஒளிப்பதிவு பிசி... இசை யுவன் என்று சொல்லிக்கொண்டு போகலாம்....

ஒரு நடுத்தர குடும்பத்தில் ஒரு வயதுக்கு வந்த பெண், துணியை அயன் பண்ண போகின்றேன் என்று சொல்லி விட்டு ,காதலனோடு ஓடிப் போகும்பெண்ணாகளால், அந்த வீடுகள் தவிக்கும் தவிப்பை மிக அழகாக பதிவு செய்து இருப்பார் இயக்குனர்....


இருவர் சண்டையும் அதற்க்கு பின் அவர்கள் உணரும் மெல்லிய காதலும் அதை பார்வையாளனுக்கு காட்சி படுத்திய விதத்தில்இயக்குனர் நன்றாவே செய்து இருப்பார்... பிரசன்னாவின் காதலை ஆண் பார்வையாளனும் லைலாவின் காதலை பெண் பார்வையாளரும் படம் பார்க்கும் போது நிச்சயம் அந்த குறு குறுப்பு பிலிங்கை இரு பாலரும் உணர்வார்கள்...என்பதில் துளியும் சந்தேகம் இல்லை...

படத்தில் கடியும், கண்ணத்தில் பளீர் அறையும் வாங்கும் ஹீரோ எந்த இடத்திலும் தன் புஜபலத்தை படத்தில் காண்பிக்க வில்லை....

படத்தில் சண்டை காட்சிகளே இல்லை......

வீட்டிற்க்கு வரும் பிரசன்னா ரூமில் யார் வந்தாலும் கதவை திறக்க மாட்டேன் என்று சொல்லும் லைலா, பிரசன்னா வந்ததும் கதவை திறந்து வெளியே வரும் போதே அந்த காதலை நாம் உணர முடிகின்றது....

அதே போல் அவள் மூட் அவுட்டுக்கு காரணம் லைலா ஆபிஸ் மேனேஜர் காரணம் என்பதை அறிந்து, எதெச்சையாக டிராபிக்கில் அவனை பார்க்க....லைலா எவ்வளவோ சொல்லியும் கேளாமல் , காரில் ஏறி ஒரு ரவுண்ட் அடித்து விட்டு பிரச்ன்னா காரை விட்டு இறங்கியதும், மேனேஜர் வீங்கிய உதடுளுடன் மன்னிப்பு கேட்கும் போது அங்கே லைலா அவனை எவ்வளவு உயர்வாய் மதித்தாள் என்பதையும் நடு ரோடு என்று கூட பார்க்காமல் அவன் தோள்சாவதும் அதனுடே வரும் பின்னனி இசையும் கவிதையான நெகிழ்ச்சியான காட்சிகள்..... அதன் பிறகு வண்டியில் போகும் போது இவன் எனக்கானவன் என்பதாய் அவள் கையை எடுத்து அவள் தோள் மேல் போட்டு இறுக்கி கொள்வது...சிறப்பு..



வசனங்களில் ராமதாஸ் நன்றாக எழுதி இருப்பார் உதாரணத்துக்கு தேசிய நெடுஞ்சாலையில் பிரசன்னாவிடம் லைலா நான் நானாக இல்லமல் இருப்பதும் உன்னாலதான் என்று பேசும் அந்த வசனம் மிக அற்புதம்....


தன் காதலை நண்பனுக்காக விட்டு கொடுக்கும் பிரசன்னாவிடம் லைலா தேசிய நெடுஞ்சாலையில் பேசி விட்டு நடக்கும் காட்சியில் பின்னனியில் காதலே எனத்தொடங்கும் பாடல் கவிதை....

டிரெஸ் அளவுக்காக பிரச்ன்னாவிடம் லைலா கேட்க, அப்போது டல்லாக இருக்கும் பிரச்ன்னாவிடம் லைலா உடம்பு சரியில்லையா என்று கேட்கும் போது? கையை நீட்டி தனக்கு ஜீரம் இருக்கின்றதா என்று பிரச்ன்னா கை நீட்ட அதனை தட்டி விட்டு வைலா பிரச்ன்னா கழுத்தில் நெற்றியில் கை வைத்து பார்க்கும் இடத்திர் இயலாமையில் மனதளவில் பிரச்ன்ன புழுங்கும் காட்சிகள் பிரமாதம்....

ஒளிப்பதிவு பிசி உறுத்தாமல் காட்சிக்கு தேவையானதை மட்டும் சிறை படுத்தி இருப்பார்...

பாடல்களில் மெலடி அனைத்தும் அருமை...ஒரு பாடலில் பிரேம்ஜி நடித்து இருப்பார்...

ரேவதி , லட்சுமி, தேவதர்ஷினி போன்றவர்கள் நடிப்பு இயல்பானது....

மேற்க்கே மேற்க்கேதான் சூரியன் உதித்திடுமே சாங்கும் லோக்கேஷனும், அதில் லைலா கட்டிக்கொண்டு வரும் அனைத்து டார்க் கலர் சாரியும் , மனசை என்னவோ பின்னும் போங்க...

அதே போல் படம் நெடுக கார்னாடக சங்கீதம் இழையவிட்ட இசை படத்தை உறுத்தால் இல்லாமல் பார்க்க உதவும்....


இயக்குனர் பிரியா இயக்குனர் மணிரத்தனத்தின் உதவியாளர்....

ஒரு பெண் இயக்குனர் படம் என்பதால் படம் நெடுக ஒரு மென்னைமயை உணர முடிகின்றது....(படத்தில் இயக்குனர் பிரியா காட்சியை விளக்கும் போது....)

லைலா நல்ல நடிகை என்பது நிருபிக்கப்ட்ட விஷயம்தான்.. இந்த படமும் அதைதான் செய்கின்றது....

ரேடியோ மிர்ச்சி சுசித்தரா புருசன் ,கார்த்திக் நன்றாகவே நடித்து இருப்பார்...வழக்கம் போல நுனி நாக்கு ஆங்கிலம்....

ஏர்போர்ட்டில் லைலா கார்த்திக் கையை தொட்டு பேச அவனை தொட்டு பேசாதை எனக்கு பிடிக்கலை என்ற வெளிப்படையாக புலம்புவதம் , எல்லோரும் என்னை புரிந்து கொள்வார்கள் என்று சொல்லி விட்டு கண்கலங்கும் போது உண்மையிலேயே இயல்பான நடிகன் என்பதை பிரசன்னா நிருபித்து இருப்பார்...

அதே போல் லைலாவை பார்த்து “இவ பார்த்தாலும் சாகடிக்கிறா, பார்க்ாட்டாலும் சாகடிக்கறாடா” என்று சொல்லி புலம்பும் காட்சி கவிதை...


அதே போல் இந்த படத்தில் எ பில்ம் பை என்று இயக்குனர் பேர் மட்டும் போடாமல் படத்தில் வேலை செய்த எல்லோருடைய பெயரையும் போட்ட இயக்குனர் பிரியா உண்மையிலேயே வித்யாசமானவர்தான்....

ஏற்க்கனவே இந்த படத்தை பார்த்தவர்கள் மறுபடியும் நான் குறிப்பிட்ட விஷயங்களோடு இந்த படத்தை மீண்டும் பார்த்தால் இன்னும் ரசிப்பீர்கள்....



படத்தின் டிரைலர் பார்க்க கீழ் உள்ள தளத்துக்கு போகவும்.... http://www.indiaglitz.com/channels/tamil/trailer/7728.html

படத்தின் குழு விபரம்...

Director: Priya
Producer: Prakash Raj
cinematography: P.C. Sreeram
MUSIC_DIRECTOR: Yuvan Shankar Raja

Karthik Kumar - Aravind
Laila - Ramya
S.N. Lakshmi - Arvind's Mother
Srinivas Murthy - Ramya's father
Prasanna - Krishna
Revathi - Ramya's Mother

புகைபடங்கள்... நன்றி இன்டியா கிளிட்ஸ்


அன்புடன்/ஜாக்கிசேகர் தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

பெண்களை மிக உயர்வாய் சொன்ன பாடல் இது...

எவ்வளவோ பாடல்களை நாம் அனுதினமும் ரசிக்கின்றோம்... கேட்கின்றோம்.. எனக்கு மென்மையான பாடல்கள் மேல் காதல் கடந்த பத்து வருடங்களாகத்தான்... உதாரணத்துக்கு அஞ்சலி படத்தை எடுத்து்கொண்டாள்.. அதில் குழந்தைகள் பாடும் அஞ்சலி, அஞ்சலி... சின்ன கண்மணி .. பாடலை விட சம்திங் பாடல்தான் என் பேவரைட்....

ஆனால் இப்போது அப்படி அல்ல....

ஒரு பெண்ணை எந்தளவுக்கு உயர்வாய் சொல்ல முடியும்... வாழ்வின் ஆதார தேவையான நீருடன் பெண்ணை இனைத்து எழுதிய இந்த பாடல் என் பேவரிட்...

நீரின்றி அமையாது உலகு.... அது போல் பெண்ணின்றி அமையாது உலகு... என்ற தத்துவத்தை முன்னிறுத்தி சொன்ன பாடல் இது... அதில் வரும் வரிகள் என்னை எப்போதும் மெய்சிலிர்க்க வைக்கும்... வைரமுத்து எனும் கவிஞனை நான் மானசீகமாக காதலித்த பாடல் இது...

தண்ணிரையும் பெண்ணையும் கம்பேர் செய்யும் இடங்களையும், அதற்க்கான வைரமுத்துவின் கற்பனையும் வாவ் ரகம்...

கவிஞன் நதியிடம் சொல்கின்றான்... நீ பெண் போன்றவள் என்று... எப்படி?என்று நதி கேட்டால் சொல்வதாக சொல்கின்றான்... கேட்காமல் சொன்னால் அதற்க்கு சுவாரஸ்யம்இ இருக்காது அல்லவா? ஏனெனில் கேட்டு சொன்னால்தான் மரியாதை அல்லவா அதற்க்காகத்தான்....அதற்க்கு நிறைய காரணங்களை சொல்கின்றான்... அவை என்ன என்ன???


நடந்தால் ஆறு , எழுந்தால் அருவி, நின்றால் கடல் என்ற மூன்று நிலைகளை சொல்லிவிட்டு...
சமைந்தால் குமரி,மணந்தால் மனைவி, பெற்றாள் தாய் அல்லவா என்கின்றான்...

இப்போது பெண்ணையும்... நீரையும் கம்பேர் செய்கின்றான்...

காதலின் அருமை பிரிவில்
மனைவியின் அருமை மறைவில்
நீரின் அருமை அறிவாய் கோடையிலே.....

வெட்கம் வந்தால் உறையும்
விரல்கள் பட்டால் உருகும்
நீரும் பெண்ணும் ஒன்று வாடையிலே....


பாருங்கள் நீர் உறைவது வெட்கத்தினாலாம்.... அதை விட அற்புதவரி எது வென்றால் தண்ணீர் குடத்தில் பிறக்கின்றோம்... தண்ணீர் கரையில் முடிக்கி்ன்றோம்....இந்த வரி சான்சே இல்லை.....

அடுத்த கம்பேர்....

வண்ண வண்ண பெண்ணே வட்டம் இடும் நதியே வளைவுகள் அழகு...மெல்லிசைகள் படித்தல் மேடு பள்ளம் மறைத்தல் நதிகளின் குணமே... அது நங்கையின் குணமே... இரண்டு மே மேடு பள்ளம் மறைக்குமாம்...

தீங்கனியில்சாரகி, பூக்களிளே தேனாகி, பசுவினிலே பாலகும் நீரே...தாய் அருகே சேய் ஆகி தலைவனிடம் பாயகி, சேய் அருகே தாயாகும் பெண்ணே... பூங்குயிலே, பூங்குயிலே பெண்ணும் ஆறும் வடிவமாறக்கூடும்... நீர் நினைத்தால் பெண் நினைத்தால் கரைகள் யாவும் கறைந்து போக கூடும்...

பெண்ணை, நீரும் நினைத்து விட்டால் எல்லா வற்றையும் துவசம் செய்து விடுவார்களாம்...

அத்தியாவசிய தேவையான நீருடன் கவிஞரின் ஒப்பீடு என்பது மெய்சிலிர்க்க வைக்கும்... இந்த பாடலை நீங்கள் எத்தனை முறை கேட்டாலும்....உங்கள் வாழ்க்கையில் பெரும் பங்கு வகித்து அம்மா, மனைவி இருவரையும் மனதில் வைத்து அல்லது வார்க்கையில் உங்கள் உயர்வுக்கு காரணமான பெண்ணை மனதில் வைத்து கேட்டு பாருங்கள்... உணர்ச்சியில் கண்ணீர் வரும் என்பது நிச்சயம்...

இந்த பாட்டில் போட்டோகிராயியும் எடிட்டிங்கும் எனக்கு பிடிக்கும்




ரிதம் படத்தில் ஏஆர்.ரகுமான் இசையில் பாடகர் உன்னிமேனன் பாடிய பாடல் இது...


அந்த பாடல் காட்சிகளை.... கேளுங்கள் பாருங்கள்....




அந்த பாடலின் முத்தான வரிகள்(நன்றி பிரியமுடன் வசந்த்)
தமிழ் வரிகளோட பாடல் கேட்டுப்பாருங்க....



தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா

நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே
அடி நீயும் பெண்தானே
ஒன்றா இரண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வேனே
நீ கேட்டால் சொல்வேனே

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா

நடந்தால் ஆறு எழுந்தால் அருவி நின்றால் கடலல்லோ
சமைந்தால் குமரி மணந்தால் மனைவி பெற்றால் தாயல்லோ
சிறு நதிகளே நதியிடும் கரைகளே கரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே (2)

தினம் மோதும் கரை தோறும் அட ஆறும் இசை பாடும்
ஜில் ஜில் ஜில் என்ற சுருதியிலே
கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருணை வரும்
ஜல் ஜல் ஜல் என்ற நடையிலே

தினம் மோதும் கரை தோறும் அட ஆறும் இசை பாடும்
ஜில் ஜில் ஜில் என்ற சுருதியிலே
கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருணை வரும்
ஜல் ஜல் ஜல் என்ற நடையிலே

காதலி அருமை பிரிவில் மனைவியின் அருமை மறைவில்
நீரின் அருமை அறிவாய் கோடையிலே
வெட்கம் வந்தால் உரையும் விரல்கள் தொட்டால் உருகும்
நீரும் பெண்ணும் ஒன்று வாடையிலே
தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ
தண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ

தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ
தண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா

வண்ண வண்ண பெண்ணே வட்டமிடும் நதியே வளைவுகள் அழகு
உங்கள் வளைவுகள் அழகு
ஹோ மெல்லிசைகள் படித்தல் மேடு பள்ளம் மறைத்தல் நதிகளின் குணமே
அது நங்கையின் குணமே
சிறு நதிகளே நதியிடும் கரைகளே கரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே (2)

தினம் மோதும் கரை தோரும் அட ஆறும் இசை பாடும்
...
கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருணை வரும்
...

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா

தேன்கனியில் சாராகி பூக்களிலே தேனாகி பசுவினிலே பாலாகும் நீரே
தாயருகே சேயாகி தலைவனிடம் பாயாகி சேயருகே தாயாகும் பெண்ணே
பூங்குயிலே பூங்குயிலே பெண்ணும் ஆறும் வடிவம் மாறக்கூடும்
நீர் நினைத்தால் பெண் நினைத்தால்
கரைகள் யாவும் கரைந்து போகக் கூடும்

நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே
அடி நீயும் பெண்தானே
ஒன்றா இரண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வேனே
நீ கேட்டால் சொல்வேனே

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா


அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

ஒரு பெண் உதட்டில் முத்தமிட்டால் அதிஷ்டம் வருமா???(JUST MY LUCK)



ரொம்ப ஜாலியாக வெட்டு குத்து இல்லாமல் படம் பார்க்க வேண்டுமா? இந்த படத்தை நீங்கள் பார்க்கலாம் ...

எப்போதுமே சிலர் அதிஷ்டத்தின் மீது நம்பிக்கை அளவு கடந்த நம்பிக்கை வைத்து இருப்பார்... சிலர் அவ நம்பிக்கையும் வைத்து இருப்பார்கள்...

அதிஷ்டம் உள்ளவர்களை கடவுளால் ஆசிர்வதிக்க பட்டவர்கள் என்று சொல்லுவோம்.... அவர்கள் பின்புலமும் வளர்ந்த விதமும் நினைத்து பார்க்க முடியாத விஷயமாய் இருக்கும்...

உதாரணத்துக்கு ஜாக்கிசான், ரஜினி, விடிவேலு... போன்றவர்களை பார்த்தால் அவர்கள் பின்புலம் ரொம்பவும் ஏழ்மையில் இருந்து நல்ல நிலைக்கு வந்தவர்கள்... எல்லோரும்தான் கஷ்டபடு்கின்றார்கள் ஆனால் எல்லோருக்கும் அதிஷ்டம் வாய்பதில்லை... ஒரு சிலருக்கு மட்டும் கடவுள் ஆசிர்வாதம் எப்போதுமே இருக்கும் அப்படி கடவுள் ஆசிர்வாத்ம் கொண்ட பெண்ணின் கதைதான் ஜஸ்ட் மை லக் படத்தன் கதை...

JUST MY LUCK படத்தின் கதை இதுதான்....
Ashley Albright (Lindsay Lohan) எப்போதுமே அதிகபடியான அதிஷ்டத்தில் வாழ்பவள்... அவள் வந்து நின்றால் பேய்ந்து கொண்டு இருக்கும் மழை நிற்க்கும்... டாக்சி என்ற கத்தினால் ஒன்றக்கு பத்து டாக்சி வந்த நிற்க்கும் அதே போல் இதற்க்கு ஆப்போசிட்டாக ஒருவன்Jake Hardin (Chris Pine) வாழ்கின்றான் .. அவன் உப்பு விற்க்க போனால் மழை பெய்யும்... மாவு விற்க்க போனால் காற்று சூறாவளியாக மாறும்.....இப்படி பட்டவர்கள் ஒரு புள்ளியில் சந்திக்கஅந்த அந்த அதிஷ்ட பெண் இந்த துரதிஷ்ட பையனை முத்தமிட்டு தொலைக்கின்றாள்...

அவ்வளவுதான் அவனுக்கு அதிஷ்டம் ஷிப்ட் ஆக இவள் துரதிஷ்டசலியாக இவள் மாற... அவனிடம் இருந்தது திரும்ப முத்தம் திரும்ப பெற்றால் அதிஷ்டம் திரும்ப வரும் என நம்ப... அவனை கண்டுபிடிக்க வேண்டும் .. அவனை முத்த மிட்ட போது அவனை சரியாக பார்க்கவில்லை...

அதனால் அவனை கண்டு பிடிக்க பல ஆண்களை முத்தமிட்டு தொலைக்க வேண்டி இருக்கின்றது... அவனை கண்டுபிடித்தாயா? அப்படியே கண்டு பிடித்தாலும் அவன் இவளை முத்தமிட்டாளா? என்பதை வழக்கம் போல் எப்படியாவது மீதி படத்தை எங்கயாவது பாருங்க.....


படத்தின் சுவரஸ்யங்களில் சில....

ஒரு சின்ன மேட்டரை வைத்து கொண்டு மிக சிறப்பாக கோலாட்டம் ஆடி இருக்கின்றார்கள் அந்த வகையில் நாம் இயக்குனரை கை வலிக்க பாராட்டலாம்....

அதே போல் இந்த படத்தின் காட்சிகளில் ஒளிப்பதிவு கவனிக்க பட வேண்டிய விஷயம்....எல்லாகாட்சிகளும் பளிச் ரகம்....


காமெடி சென்ஸ் இல்லை என்றால் இது போல் படம் எடுப்பது கடினம்....

இந்த படத்தின் நாயகியை எல்லோருக்கும் பிடிக்கும்... அந்தளவுக்கு குழந்தை தனமான முகம்...

ரொமாண்டிக் காமெடி படம் இது....

படத்தில் ரசித்த காட்சிகளை சொன்னால் படம் பார்க்கும் போது சுவாருஸ்யம் குறைந்து விடும் அதனால் படம் பார்த்து விட்டு சொல்லுங்கள்...

கத்தி, ரத்தம் , துப்பாக்கி இல்லாத அக்மார்க் மென்மையான படம் இது...



படத்தின் டிரைலர்....


படக்குழுவினர் விபரம்...

Directed by Donald Petrie
Produced by Arnon Milchan
Arnold Rifkin
Donald Petrie
Written by Screenplay:
I. Marlene King
Amy B. Harris
Story:
Jonathan Bernstein
James Greer
I. Marlene King
Starring Lindsay Lohan
Chris Pine
Faizon Love
Missi Pyle
McFly
Music by Teddy Castellucci
Cinematography Dean Semler
Editing by Debra Neil-Fisher
Studio Regency Enterprises
New Regency
Cheyenne Enterprises
Distributed by 20th Century Fox
Release date(s) May 12, 2006 (USA)
Country United States
Budget $28 million
Gross revenue $38,077,373




அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

எனது இரண்டாவது குறும்படம்...“முதல் படி”மற்றும் எனது மீடியா நேர்க்காணல், உங்கள் பார்வைக்கு....


நம் நாட்டு பெண்கள்.. அதாவது நன்றாக அழகாக இருக்கும் பெண்கள் கை நிறைய சம்பாபதித்தாலும் கூட திருமணம் என்று வரும் போது வரதட்சனை, மூக்கு கொஞ்சம் பெரிசு, குள்ளம், கண் லேசாக சாய்ந்து இருக்கின்றது, போன்ற விஷயங்களை காரணம் காட்டி நிறைய பெண்கள் இன்னும் நம் நாட்டில் வீட்டின் ஜன்னல் பக்கம் தன் பார்வை வெறித்த படி இன்னும் வாழ்கின்றார்கள்...

சரி நன்றாக, அழகாக, கை நிறைய சம்பாதிக்கும் பெண்களுக்கே திருமணம் நடை பெறுவதில்,வரதட்சனை,நிறம் போன்றவற்றால் மிமணம் நடைபெறுவதில் சிக்கல் என்றால்... சற்றே உடல் குறைபாடு கொண்ட பெண்கள் என்ன செய்வார்கள்...?அவர்கள் கடைசி வரை கணவன், குழந்தை,என்பதை கற்பனையில்தான் கழிக்கவேண்டுமா? அவளின் உடல்சுகம் என்பது நீராகரிக்கபட்ட ஒன்றா? கணவன் பாசமாய் நெற்றியில் முத்தமிட்டுவதை கடைசி வரை கற்பனையில்தான் அவள் யோசிக்க வேண்டுமா?

பெண் பார்க்க போய் விட்டு சில ஆண்கள் போடும் ஆட்டம் முகம் சுலிக்க வைக்கும் ரகம்... பெண் பார்த்த பெண்ணின் உடம்பில்அது சரியில்லை, இது சரியில்லை என்று லிஸ்ட் போடும் போது மிகவும் கஷ்டமாக இருக்கும்...

நான் இந்த குறும்படத்தில் சொல்ல வந்த கருத்து என்னவெனில் போலியோ
நோயினால் கால் சூம்பி போய் இருக்கும் அல்லது அவலட்சனமான பெண்களை கட்டிக்கொள்ளுங்கள் என்று சொல்லவில்லை... அந்த அளவுக்குபரந்தம் எண்ணம் இருந்தால் ரொம்ப சந்தோஷம்.... ஆனால் சின்ன சின்ன உடல் குறைபாடு கொண்ட பெண்களை ஒதுக்காதீர்கள் என்றும் அவர்களும் பெண்கள்தான்...அவர்களுக்கும் வாழ்க்கை கனவுகள் உண்டு என்றும்... பரந்த மணதோடு வாழ்க்கை கொடுங்கள் என்றும்... மூக்கு சின்னதாக இருக்கின்றது, போன்ற அற்ப காரணங்களை காட்டி பெண்களை ஒதுக்காதீர் என்று வலியுறுத்த எடுத்த படம்....


பவித்ரா உடலில் சிறு குறைபாடு கொண்ட பெண் .. அவளுக்கு நிச்சயதார்த்தம் நடந்து தனது வருங்கால கணவனோடு பேசுகின்றாள்... அப்போது அவளை போன்ற சிறு உடல் குறைபாடு கொண்ட் பெண்களை எப்படி எல்லாம் இந்த பாழாய் போன சமுகம் எப்படி எல்லாம் மனதை காயப்டு்த்துகின்றது போன்ற விஷயங்களை பகிர்ந்து கொண்டு அவனுக்கு நன்றி தெரிவிக்கின்றாள்..... அதுதான் கதையே...



இந்த படம் இரண்டு மணி நேரத்தில் எடுக்கபட்டது....

படத்திற்க்கான தயாரிப்பு செலவு...750 ரூபாய் மட்டும்....

படத்திற்க்கு டப்பிங் இல்லை.... லைவ் சவுண்ட்தான்.... ஆனால் நடித்த பையனின் குரலும் சரியாக இல்லை அதனால் அவனுக்கு மட்டும எனது குரலில் டப்பிங் கொடுத்தேன்......



படத்தின் மிகப்பெரிய குறை இந்த படத்தில் நடித்த பையன் கார்த்திக்... ரிகர்சலில் நன்றாக டயலாக் பேசியவன்.... டேக்கில் கேமரா ஸ்டார்ட் சொன்னதும் அவனுக்கு ஒரு நடுக்கம் வந்த வேர்த்து விடுகின்றது... கண்கள் இயல்பாய் இல்லாமல் பட பட வென அடித்து கொள்ள.... வேறு என்ன செய்வது தலையெழுத்தே என்று கடனுக்கு எடுத்த படம் இது.... படம் எடுத்து கொண்டு இருக்கும் போதே அவனுக்கு பயத்தில் ஜுரம் வந்து விட்டது...


படத்தில் நடித்த பெண் எனது நண்பி. பெயர்... பவித்ரா... எனது படத்தின் முதல் கதாநாயகி... என்னோடு கல்லூரியில் பணி புரிந்தவர்...நான் இப்படி ஒரு கதையமைப்பை சொல்லி நடிக்க பெண் தேடிக்கொண்டு இருக்கையில்... (எனது படத்தில் பைசா வாங்காமல் நடிக்க வேண்டும்)படத்தை டிராப் செய்து விடலாமா? என்று யோசிக்கையில்.... கவலைபடதிங்க.... தனசேகரன்சார் இந்த படம் வந்தா நாளுபேராவது திருந்துவாங்க... அல்லது பொண்ணுங்களை அட்லிஸ்ட் குத்தம் சொல்றதையாவது நிறுத்துவாங்க என்று சொல்லி நடித்து கொடுத்தார்..... அவரு்டைய அந்த உதவி எந்த காலத்திலும் நான் மறக்க முடியாத ஒன்று...... நட்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பெண்...இப்போதும் நட்புபாராட்டுபவர்....

எனது இரண்டாவது குறும் படம் “முதல்படி” உங்கள் பார்வைக்கு கீழே.....


போன மார்ச் மாதத்தில் சென்னை பிலிம் சேம்பரில் 3வது உலக குறும்படவிழா நடந்தது... அதில் எனது மூன்று படைப்புகளும் திரையிட தேர்வு செய்யபட்டன.... அப்போது சன்டிவியில் எல்லாம் இன்டர்வியு எடுத்தார்கள்.... காலம் கடந்தாலும்...

எனது நேர்கானல் உங்கள் பார்வைக்கு...



எனது படத்தினை பாராட்டி எடிட்டர் லெனின் அவர்கள் எனக்கு சால்வை போத்தி ஆசிர்வதித்தார்....


அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

எனது டெம்ட் குறும்படமும், என் சிறு விளக்கமும்.....

காக்க காக்க படத்தில் நடிகர் சூர்யா ஒரு வரி சொல்லுவார்... பொண்ணுங்க விஷயத்துல நான் ஒன்னும் அவ்வளவு எக்ஸ்பர்ட் இல்லைன்னு... ஆது போலதான் எனக்கு சினிமாவும்.. குறும்படமும்....

நான் எடுத்த குறும்படங்கள் என் திரைவடிவத்தை சோதித்த பார்க்கும் ஆய்வுகூட எலிகள் என்பேன்...எதுவுமே செய்யாமல் அதை செய்து இருக்கலாம்... இதை செய்து இருக்கலாம் என்று சொல்வதை விட, எதையாவது செய்ய வேண்டும் என்று எடுக்கபட்ட படங்கள்தான் எனது குறும்படங்கள்..

அதே போல் சினிமா நான் மட்டும் விளையாடும் விளையாட்டு மைதானம் அல்ல.... அது எல்லோருக்கும் சாத்தியம் ஆன இடம்.... நேரம் இருந்தால் அதில் விளையாடி வெற்றி பெற வாழ்த்துக்கள்.... எனது படம் குறைந்த செலவில் நான் சொல்ல வந்த விஷயத்தை பல காம்பரமைஸ்களோடு சொல்லி இருக்கின்றேன்....


என் படத்தினை உங்கள் பார்வைக்கு வைத்தும் உங்கள் வரவேற்ப்புக்கு பெரு மகிழ்ச்சி அடைகின்றேன்....

போலி புகழ்ச்சிக்கு ஆட்பட வேண்டாம் என்பதில் இருந்ததுலாஜிக் மீறல் வரை எல்லோரும் நட்போடு உணர்த்தினீர்கள் மிக்க நன்றி...பல பேர் என்ன சொல்ல வந்திங்க என்று கேட்டார்கள்..?

இன்னும் சில பேர் முடிவை ஏன் பாசிட்டிவாக மாற்றவில்லை என்று வருத்தப்பட்டார்கள்.... ஒரு திரைப்படம் எல்லோரையும் திருப்தி படுத்தாது என்பது எனக்கு நன்கு தெரியும்....

நண்பர் மூரா சொன்னார்... பணம் இல்லை என்றால் யோசிக்க கூடாதா? என்று உண்மைதான் ஒரு காட்சியை யோசிக்கும் போதே.. பணம் முன்னால் வந்து நிற்கும் நண்பரே... பணத்தையும் இடத்தையும் தேவைகளை வைத்துதான் எல்லா காட்சிகளும் உருவாகும்...அது உங்களுக்கு தெரிய நியாயமில்லை... எனது முதல் படத்துக்கு 60 ஆயிரம் செலவு.... என் நண்பனின் மனைவியின் நகைகள் மார்வாடிகாரணிடம்.... கொஞ்சகாலத்துக்கு ரகசியம் பேசின....

என் நண்பனிடம் இவ்வளவு செலவு ஏன் ஏனும் போது , சினிமா இன்ஸ்டியுட்டில் சேர்ந்து படித்தால் செலவாகும் அல்லவா... அதனால் சினிமா எடுத்து கற்றுக்கொள்கின்றேன் என்றான்....

அந்த “துளிர்”படத்தால் என் வாழ்க்கை உயர்ந்தது... எங்களுக்கு நல்ல பேர் எங்கள் ஊரில் கிடைத்து.. ஆனால் போட்ட காசை எடுக்கும் வித்தை எங்களுக்கு கை வரவில்லை... லோக்கல் கேபிளில் ஒளிபரப்பினோம். மக்கள் முன் எங்கள் படைப்பை வைத்தோம்.. ஒரு இரண்டு கைபேசி எண்ணை கொடுத்தோம்.....சத்தியமாக சொல்கின்றேன் 180 போன் அழைப்புகள் படத்தை பற்றி பாராட்டி வந்த போது அதில் 12 கால் கள் கிளைமாக்ஸ் மாற்றி இருக்கலாம் என்ற கருத்தை வலியுறுத்தி வந்தன...

சரி டெம்பட் படத்தின் ஒற்றை வரி என்ன?.... போதைக்காக எடுத்து கொள்ளும் எந்த விஷயமும் ஒரே நாளில் தலை முழ்கும்... சாத்தியம் இல்லை என்பதுதான்...

நாளை முதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்... இன்னைக்கு ராத்திரிக்கு மட்டும் ஊத்திக்கின்றேன் என்ற பாடல்தான்.... அந்த படத்தின் ஒற்றைவரிபாடல்..

சத்தியம் சக்கரை பொங்கல்... போன்ற வரிகள்தான் இந்த படத்தின் ஒன்லைன் ஆர்டர்...

சரி கதைக்கு வருவோம்....

முதலில் கோவிலில் சத்தியமாக இனி சிகரேட் பிடிக்க மாட்டேன் என்று வேண்டிக்கொண்டு வருபவன்... ஏன் சிகரேட் பிடிக்க ஆரம்பித்தேன் என்பதற்க்கு காதல் தோல்வி காரணமாய் இருக்கின்றது....இப்போது அதாவது இந்த நேரத்தில் அவன் சிகரேட் விட்டதற்கு முக்கிய காரணம் அவன் அண்ணன் அவனை அசிங்கமான வார்த்தை சொல்லி திட்ட...சரி சிகரேட் விடு வோம் என்ற முடிவுக்கு வருகின்றான்... காரணம் ஒரு பெண் காதல் என்ற போ்வையில் ஏமாற்றி விட நண்பன் ஒருவன் சிகரேட்டை பழக்க படுத்த அன்றிலிருந்நது சிகரேட்க்கு அடிமை ஆகின்றான்.. அவள் நினைக்கும் போது எல்லாம் சிகரெட் பிடிக்கின்றான்....இதற்க்கு முன் இவன் சிகரேட் பிடிப்பதை இவன் குடும்ப உறுப்பினர்கள் கண்டித்து இருப்பதையும் சொல்கின்றான்... திரும்ப அவளை பற்றி வருனிக்கும் போது அவள் ஞாபகம் வர திரும் என்ன செய்கின்றான் என்பது கிளைமாக்ஸ்....இதுதான் கதை டெம்ட் படத்தின் கதை...

முதலில் இந்த படத்திற்க்கு நான் போடும் பணம் ஆயிரம் என்பது என்னை பொறுத்தவரை பெரிய விஷயம்....ஒரு பத்தாயிரம் இருந்து இந்த படத்தை எடுத்தது இருந்தால் இன்னும் நேர்த்தியாக ஒளிபதிவு செய்து எடுத்து இருக்கலாம்....

அதே போல் இந்த படத்தில் எல்லா காட்சியின் வசனங்களும் லைவ் சவுண்டில் எடுக்கபட்டது...படத்திற்க்கு டப்பிங் என்பதே இல்லை...


நண்பர் முரா அவர்களுக்கு நீங்கள் உங்கள் தரப்பை சொல்லி இருக்கின்றீர்கள்...நீங்கள் அறிமுகபடுத்திய குறும்படம் மிக அருமை... ஆது போல் எடுக்க என்னாலும் முடியும்... ஆனால் அந்த 12 நிமிட படத்தின் பின் டைட்டில் பேர் போடும் போது 50உழைத்த கலைஞர்கள் பெயரை பார்த்தீர்கள் அல்லவா?

இந்த ஏழு நிமிட படத்துக்கு மொத்தம்...4 பேர் உழைத்தோம் என்பதை மறவாதீர்... அது போல் ஒரு நண்பர் என்னிடம் பணம் இருந்தாலும் நீ படம் எடுக்க கொடுக்க யோசிப்பேன் என்று பின்னுட்டம் இட்டு இருந்ததார்...அண்ணே நீங்க யார் பெத்த புள்ளையோ..எனக்கு நீங்க பணம் கொடுத்து படம் எடுக்கறத பத்தி் எல்லாம் யோசிக்காதிங்க.... உங்க தொழிலை பாருங்க....

அதே போல் இந்த படத்தில் ஏன் மற்ற கேரக்டர்கள் இல்லை என்பதை நக்கலாக படம் எடுத்தால் பணம் லாஸ் ஆகும் என்பதை சொல்ல அந்த வரிகளை குறிப்பிட்டேன்.. நான் கலையை வளர்க்க சினிமாவுக்கு வரவில்லை...

ஏனென்றால் நான் நான்கு படம் எடுத்து விட்டு எழுதும் போது ஒவ்வொறு படைப்பாளியின் வேதனையும்... அதன் பின் இருக்கும் சோதனைகளையும் நான் அறிவேன்....மனதில் இருக்கும் காட்சியை திரைவடிவம் ஆக்குவது என்பது அவ்வளவு சாதாரணம் அல்ல.... அது எல்லேருடைய கூட்டு முயற்ச்சி... எல்லோரும் ஒரே அலைவரிசையில் வேலை செய்த படங்கள்தான் வெற்றி பெற்று இருக்கின்றன.....

அதே போல் எனக்கு டைரக்ஷன் என்பது எவரிடமும் நான் அசிஸ்டென்டாக இல்லை... நான் சினிமா பார்த்து சினிமா எடுக்க கொஞ்சமாக கற்றுக்கொண்டவன்.... என் அப்பா ஒரு ஜவுளிகடை குமாஸ்த்தா....என் 22 வயதுவரை நான் என்னவாக போகின்றேன் என்று தெரியாமல் இலக்கில்லாமல் சுற்றிதிரிந்தவன்.....


மற்றபடி அற்புதமான விமர்சனம் முன் வைத்த அனைவருக்கும் என் நன்றிகள்.. இன்னும் பல படங்கள் இன்னும் சிறப்பாக செய்வோம்... முரா அறிமுகபடுத்திய குறும்படத்தை நீங்கள் அவசியம் பார்க்க வேண்டும்...அந்த படம் கீழே...

அந்த 12 நிமட படம்



அந்தபடத்தையும் எனது படத்தையும் தயவு செய்து ஒப்பிடாதீர்கள்....அது லீராயல் மெரிடின்...எனது படம் ரோட்டோர சால்னாகடை.... எதாவது மனதை காயபடுத்தும் விதமாய் இந்த பதிவு இருந்தால் மன்னிக்கவும்....

நன்றி

உங்கள் ஆசியுடன்

அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

வலை பதிவர்கள் சந்திப்பும், ஸ்வீட் சிக்ஸ்டின் திரைப்படமும்....


முதலிலேயே பதிவர் பைத்தியக்காரன், இன்று திரையிடுவதாக இருந்தஆவணப்படம்.... தவிர்க்க இயலாத காரணத்தால் திரையிட முடியவில்லை என்றும் அதனால் எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி அவர்களின்... நாடகங்கள் குறித்தான ஆவணபடம் திரையிடப்படும் என்ற அறிவித்தார்......

ஆவணபடங்களை தூக்கி நிறுத்துவது பொதுவாக ஒளிபதிவுதான்... அது இந்த படத்தில் ரொம்ப நிறைவாக செய்து இருந்தார்கள்...அந்த ஒளிப்பதிவாளர் பெயர் தெரியவில்லை.. நண்பர் பைத்தியக்காரனிடம் செல் நம்பர் கேட்டு இருக்கின்றேன்... கொடுத்ததும் அந்த கலைஞனை பாராட்டி வைப்போம்.....

சிங்கை கோவியாரை (கோவி.கண்ணன்)நான் இன்றுதான் சந்தித்தேன்... சிங்கையில் இருந்து வந்து தலையை காட்டி விட்டு செல்வதாக சொன்னார்.... சிங்கையில் இருந்து வெங்காய வெடி போன்ற சாக்லெட்டுகளை அனைவருக்கும் கொடுத்து மகி்ழ்ந்தார்....

பைத்தியக்காரன் வந்திருந்த பதிவர்களுக்கு தண்ணீர் சப்ளை செய்தார்.... குடிக்கற தண்ணிதான் சாமி....

ஸ்வீட் ஸிக்ஸ்டீன் படத்தை பற்றி சொல்ல எதுவும் இல்லை....ஒரு படம் பல்வேறு மனநிலையுடன் வரும் பார்வையாளனை பத்தாவது நிமிடத்தில் அசத்த வேண்டும்... இந்த படம் ஒரு மணி நேரம் ஆகியும் யாரையும் அசத்த இயலாத காரணத்தால் ... எல்லோரும் கிழக்கு பதிப்பக மொட்டைமாடியில் சொந்த கதை பேசிக்கொண்டு இருந்தனர்....


படம் மட்டும் நன்றாக இருந்து இருந்தால் இன்னும் இந்த சந்திப்பு சிறப்பாய் இருந்து இருக்கும்... படத்தில் fuck என்ற வார்த்தையை படத்தில் வரும் எல்லா கதாபாத்திரங்களும் வரிக்கு வரி பேசினார்கள்... படத்தில் பேசாத ஒரே ஜீவன் படத்தில் நடித்த நாய்கள்தான்... திரைக்கதைக்காக இந்த படத்திற்க்கு விருது கிடைத்தாக சொன்னார்கள்... விருது குழுவினரை தேடி வருகின்றேன்...

நான் பைத்தியக்காரனிடம் இந்த பிரச்சனை குறித்து வெளிப்படையாகவே கருத்து சொல்லிவிட்டு வந்தேன்....

முக்கியமாக பாராட்டபட வேண்டிய விஷயம் கிழக்கு பதிப்பக மொட்டை மாடி டாக்கிஸ்.... மிக அற்புதமாக ஏற்பாடு செய்து கொடுத்து இருந்தார்கள்... இடத்தையும் ஏற்பாடு செய்த கிழக்கு பதிப்பக நிர்வாகத்துக்கும். பத்ரி சாருக்கும் சென்னை பதிவர் சார்பாய் நன்றியை தெரிவித்து கொள்கின்றேன்....

மற்றபடி படம் முடிந்து கிழக்கு பதிப்பக வாசலில் ஒரு கூட்டம் போட்டோம்... அதில் பதிபேர் கழண்டு கொண்டார்கள்... அதன் பிறகு டீக்கடை போய் டீ சாப்பிட்டுவிட்டு அதன் பிறகு சின்ன கூட்டம் போட்டு இரவு பத்து மணிவாக்கில் நான் அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன்....


அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

ரூபாய் ஆயிரம் செலவில் எனது 4வது குறும்படம்“ டெம்ட்” உங்கள் பார்வைக்கு..

இதுவரை நான் நான்கு குறும்படங்கள் இயக்கி இருக்கின்றேன்... அதில் 4 வது குறும்படமான டெம்ட் உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன்....

குறும்படம் எடுப்பது எனக்கு காதலான விஷயம் என்றாலும்... அதற்க்கு எனது பொருளாதாரம் எனக்கு எப்போதுமே இடம் கொடுத்ததில்லை...

எனது முதல் குறும்படம் “துளிர்”... மாவட்ட அளவிலான குறும்பட போட்டியில் 3வது பரிசை பெற்றது.. அதன் பிறகு “முதல் படி” என்ற ஒரு படம் எடுத்தேன்... அதன் பிறகு “பரசுராம் வயது 55” என்று ஒரு படம் எடுததேன் ....
இதில் சிறப்பு என்னவெனில் இந்த மூன்று படங்களும் சென்னையில் நடந்த உலககுறும்பட போட்டியில் திரையிட தேர்வு செய்யபட்டதாகும்...

என்னிடம் இருக்கும் கெட்ட விஷயம் எனது படைப்பை இன்னும் சிறப்பாக செய்து இருக்கலாம் என்று எப்போதும் நினைப்பதால் அதனை மக்கள் மன்றத்தில் வைக்க சிறு தயக்கம்...

கவிதை , கதை எழுதி நன்றாக இல்லை என்று கிழி்த்து போடுவது போல.....

ஆனால் நண்பர்கள் பல பேரின் வற்புறுத்தல் காரணமாக இப்போது ஓவ்வொன்றாக வெளியிட உத்தேசித்து உள்ளேன்....

இவ்வளவுநாள் வெளியிட இன்னொரு தயக்கம் எனக்கு யூடியுப் தொழில் நுட்பம் போன்றவை எனக்கு தெரியாது ... நண்பர் பதிவர் வடிவேலு அவர்கள் உதவியுடன் இந்த படம் உங்கள் பார்வைக்கு...

என் படங்களில் நடித்த எவருக்கும் கேமரா முன்னால் நின்ற அனபவம் கிடையாது... ரைட் லுக் லெப்ட் லுக் எதுவும் தெரியாது...அவர்களுக்கு நடிப்பு சொல்லி கொடுத்து....ஸ்கிரிப்ட் எழுதி ஒளிப்பதிவும் செய்தும் இயக்குவது ரொம்ப சிரமமான விஷயம் என்பேன்....

முதலில் பதிவர் ஜியோராம் சுந்த்ரின் ஒரு கதையை தேர்வு செய்து எடுக்க இருந்தேன் ஆனால்அதற்க்கு பொருளதாரம் இடம் கொடுக்காத காரணத்தால் இந்த படத்தை எடுத்தேன்... அதே போல் அவர் கதையை படமாக்கி கொள்ள அனுமதி கேட்ட போது நிச்சயம் செய்து கொள்ளுங்கள் என்று அனுமதி வழங்கினார் அவருக்கு என் நன்றிகள்....

இந்த படத்தை இன்னும் சிறப்பாக எடுக்க வேண்டும் எனில் இன்னும் பண்ம் வேண்டும்... கையில் இருந்த காசை போட்டு ரூபாய் ஆயிரத்தில் எடுத்தது...

எந்த உதவியாளனும் எனக்கு இல்லை இவ்வளவு ஏன் ஒரு தெர்மகோல் பிடிக்க கூட ஆள் இல்லை...

ஸ்கிரிப்ட் எழுதவும் ,டிஸ்கஸ் செய்யவும் ஆங்கில சப்டைட்டில் அடிக்கவும் எனது மனைவியின் உதவி மகத்தானது.... மதல் நாள் இரவில் ஸ் கிரிப்ட் எழுதி மறுநாள் கதலை 8 மணிக்கு தொடங்கி மதியம் 2 மணிக்குள் முடித்து சாயிந்திரம் 8 மணிக்கெல்லாம் படத்தை டிவிடியில் அவுட் எடுத்தோம்....

படம் எடுத்த கொண்டு இருக்கும் போது பதிவர் நித்யா என்னோடு ஒத்துழைத்தார்... எனது மனைவி மோர் ரெடி செய்து எடுத்து வந்து நடித்த நண்பர்களுக்கு கொடுத்து புரொடெக்ஷன் வேலை செய்தார்கள்....

இந்த படத்தின் வசனங்கள் பற்றி உங்கள் அபிப்ராயம் எதிர்பார்க்கின்றேன்....படத்தின் முடிவில் எனது போன் நம்பர் இருக்கின்றது தயவு செய்து இந்திய நேரப்படி இரவில் போன் செய்ய வேண்டாம் என்று நண்பர்களை கேட்டுக்கொள்கின்றேன்...பின்னுட்டத்திற்க்கு ஜீமெயில் மட்டும் பயண்படுத்தவும்

இந்த படத்தில் நடித்த இருவரும் எனது மனைவியி்ன் அலுவலகத்தில் வெவ்வேறு காலகட்டங்களில் பணி புரிந்த நண்பர்கள்.... அதுதான் இந்த படத்தின் கூடுதல் சிறப்பு என்பேன்....

இந்த படத்தின் கால அளவு எழு நிமிடங்கள் மட்டுமே

எனது குறும்படம் டெம்ட்





இயக்குனர் ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் குறும்பட விழாவில் இப்படி சொன்னார்... ஒரு குறும்படம் என்பது ஆற்றில் இருக்கும் குழங்கல்லை எடுத்து அற்புதமாக துடைத்து பட்டை தீட்டி அதனை மீண்டும் ஆற்றில் தூக்கிபேடுவதுபோல்தான்... ஏனென்னறால் அதனால் எந்த வருமானமும் இல்லை என்றார்.... குறும்படங்கள் ஒரு ஆத்ம் திருப்திக்கு மட்டுமே என்றார் அவர் சொல்வதுதான் எவ்வளவு உண்மை.....


அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

பெண்களை மிக உயர்வாய் சொன்ன பாடல் இது...

எவ்வளவோ பாடல்களை நாம் அனுதினமும் ரசிக்கின்றோம்... கேட்கின்றோம்.. எனக்கு மென்மையான பாடல்கள் மேல் காதல் கடந்த பத்து வருடங்களாகத்தான்... உதாரணத்துக்கு அஞ்சலி படத்தை எடுத்து்கொண்டாள்.. அதில் குழந்தைகள் பாடும் அஞ்சலி, அஞ்சலி... சின்ன கண்மணி .. பாடலை விட சம்திங் பாடல்தான் என் பேவரைட்....

ஆனால் இப்போது அப்படி அல்ல....

ஒரு பெண்ணை எந்தளவுக்கு உயர்வாய் சொல்ல முடியும்... வாழ்வின் ஆதார தேவையான நீருடன் பெண்ணை இனைத்து எழுதிய இந்த பாடல் என் பேவரிட்...

நீரின்றி அமையாது உலகு.... அது போல் பெண்ணின்றி அமையாது உலகு... என்ற தத்துவத்தை முன்னிறுத்தி சொன்ன பாடல் இது... அதில் வரும் வரிகள் என்னை எப்போதும் மெய்சிலிர்க்க வைக்கும்... வைரமுத்து எனும் கவிஞனை நான் மானசீகமாக காதலித்த பாடல் இது...

தண்ணிரையும் பெண்ணையும் கம்பேர் செய்யும் இடங்களையும், அதற்க்கான வைரமுத்துவின் கற்பனையும் வாவ் ரகம்...

கவிஞன் நதியிடம் சொல்கின்றான்... நீ பெண் போன்றவள் என்று... எப்படி?என்று நதி கேட்டால் சொல்வதாக சொல்கின்றான்... கேட்காமல் சொன்னால் அதற்க்கு சுவாரஸ்யம்இ இருக்காது அல்லவா? ஏனெனில் கேட்டு சொன்னால்தான் மரியாதை அல்லவா அதற்க்காகத்தான்....அதற்க்கு நிறைய காரணங்களை சொல்கின்றான்... அவை என்ன என்ன???


நடந்தால் ஆறு , எழுந்தால் அருவி, நின்றால் கடல் என்ற மூன்று நிலைகளை சொல்லிவிட்டு...
சமைந்தால் குமரி,மணந்தால் மனைவி, பெற்றாள் தாய் அல்லவா என்கின்றான்...

இப்போது பெண்ணையும்... நீரையும் கம்பேர் செய்கின்றான்...

காதலின் அருமை பிரிவில்
மனைவியின் அருமை மறைவில்
நீரின் அருமை அறிவாய் கோடையிலே.....

வெட்கம் வந்தால் உறையும்
விரல்கள் பட்டால் உருகும்
நீரும் பெண்ணும் ஒன்று வாடையிலே....


பாருங்கள் நீர் உறைவது வெட்கத்தினாலாம்.... அதை விட அற்புதவரி எது வென்றால் தண்ணீர் குடத்தில் பிறக்கின்றோம்... தண்ணீர் கரையில் முடிக்கி்ன்றோம்....இந்த வரி சான்சே இல்லை.....

அடுத்த கம்பேர்....

வண்ண வண்ண பெண்ணே வட்டம் இடும் நதியே வளைவுகள் அழகு...மெல்லிசைகள் படித்தல் மேடு பள்ளம் மறைத்தல் நதிகளின் குணமே... அது நங்கையின் குணமே... இரண்டு மே மேடு பள்ளம் மறைக்குமாம்...

தீங்கனியில்சாரகி, பூக்களிளே தேனாகி, பசுவினிலே பாலகும் நீரே...தாய் அருகே சேய் ஆகி தலைவனிடம் பாயகி, சேய் அருகே தாயாகும் பெண்ணே... பூங்குயிலே, பூங்குயிலே பெண்ணும் ஆறும் வடிவமாறக்கூடும்... நீர் நினைத்தால் பெண் நினைத்தால் கரைகள் யாவும் கறைந்து போக கூடும்...

பெண்ணை, நீரும் நினைத்து விட்டால் எல்லா வற்றையும் துவசம் செய்து விடுவார்களாம்...

அத்தியாவசிய தேவையான நீருடன் கவிஞரின் ஒப்பீடு என்பது மெய்சிலிர்க்க வைக்கும்... இந்த பாடலை நீங்கள் எத்தனை முறை கேட்டாலும்....உங்கள் வாழ்க்கையில் பெரும் பங்கு வகித்து அம்மா, மனைவி இருவரையும் மனதில் வைத்து அல்லது வார்க்கையில் உங்கள் உயர்வுக்கு காரணமான பெண்ணை மனதில் வைத்து கேட்டு பாருங்கள்... உணர்ச்சியில் கண்ணீர் வரும் என்பது நிச்சயம்...

இந்த பாட்டில் போட்டோகிராயியும் எடிட்டிங்கும் எனக்கு பிடிக்கும்




ரிதம் படத்தில் ஏஆர்.ரகுமான் இசையில் பாடகர் உன்னிமேனன் பாடிய பாடல் இது...


அந்த பாடல் காட்சிகளை.... கேளுங்கள் பாருங்கள்....




அந்த பாடலின் முத்தான வரிகள்(மன்னிக்கவும் ஆங்கிலத்தில்)
Dheemthananaa Dheemthananaa Dheemthananaa Dheemthananaa Dheemthananaa Dheemthananaa Dhiranaa Dheemthananaa Dheemthananaa Dheemthananaa Dheemthananaa Dheemthananaa Dheemthananaa Dhiranaa Nadhiyae Nadhiyae Kaadhal Nadhiyae Neeyum Pendhaanae Adi Neeyum Pendhaanae Onraa Irandaa Kaaranam Nooru Kaettaal Solvaenae Nee Kaettaal Solvaenae Dheemthananaa Dheemthananaa Dheemthananaa Dheemthananaa Dheemthananaa Dheemthananaa Dhiranaa Dheemthananaa Dheemthananaa Dheemthananaa Dheemthananaa Dheemthananaa Dheemthananaa Dhiranaa

Nadandhaal Aaru Ezhundhaal Aruvi Ninraal Kadalalloa Samaindhaal Kumari Manandhaal Manaivi Petraal Thaayalloa (Siru Nadhigalae Nadhiyidum Karaigalae Karaithodum Nuraigalae Nuraigalil Ival Mugamae) - 2 Dhinam Moadhum Karai Thoarum Ada Aarum Isai Paadum Jil Jil Jil Enra Sruthiyilae Gangai Varum Yamunai Varum Vaigai Varum Porunai Varum Jal Jal Jal Enra Nadaiyilae Dhinam Moadhum Karai Thoarum Ada Aarum Isai Paadum Jil Jil Jil Enra Shrutiyilae Gangai Varum Yamunai Varum Vaigai Varum Porunai Varum Jal Jal Jal Enra Nadaiyilae

Kaadhali Arumai Pirivil Manaiviyin Arumai Maraivil Neerin Arumai Arivaay Koadaiyilae Vetkam Vandhaal Uraiyum Viralgal Thottaal Urugum Neerum Pennum Onru Vaadaiyilae Thanneer Kudaththil Pirakkiroam Oahoa Thanneer Karaiyil Mudikkiroam Oahoa Thanneer Kudaththil Pirakkiroam Oahoa Thanneer Karaiyil Mudikkiroam Oahoa Dheemthananaa Dheemthananaa Dheemthananaa Dheemthananaa Dheemthananaa Dheemthananaa Dhiranaa Dheemthananaa Dheemthananaa Dheemthananaa Dheemthananaa Dheemthananaa Dheemthananaa Dhiranaa


Vanna Vanna Pennae Vattamidum Nadhiyae Valaivugal Azhagu Ungal Valaivugal Azhagu Hoa Mellisaigal Padiththal Maedu Pallam Maraiththal Nadhigalin Gunamae, Adhu Nangaiyin Gunamae (Siru Nadhigalae Nadhiyidum Karaigalae Karaithodum Nuraigalae Nuraigalil Ival Mugamae) - 2 Dhinam Moadhum Karai Thoarum Ada Aarum Isai Paadum... Gangai Varum Yamunai Varum Vaigai Varum Porunai Varum... Dheemthananaa Dheemthananaa Dheemthananaa Dheemthananaa Dheemthananaa Dheemthananaa Dhiranaa Dheemthananaa Dheemthananaa Dheemthananaa Dheemthananaa Dheemthananaa Dheemthananaa Dhiranaa

Thaenkaniyil Saaraagi Pookkalilae
Thaenaagi Pasuvinilae Paalaagum Neerae Thaayarugae Saeyaagi Thalaivanidam Paayaagi Saeyarugae Thaayaagum Pennae Poonguyilae Poonguyilae Pennum Aarum Vadivam Maarakkoodum Neer Ninaiththaal Pen Ninaiththaal Karaigal Yaavum Karaindhu Poagak Koodum Nadhiyae Nadhiyae Kaadhal Nadhiyae Neeyum Pendhaanae Adi Neeyum Pendhaanae Onraa Irandaa Kaaranam Nooru Kaettaal Solvaenae Nee Kaettaal Solvaenae Dheemthananaa Dheemthananaa Dheemthananaa Dheemthananaa Dheemthananaa Dheemthananaa Dhiranaa Dheemthananaa Dheemthananaa Dheemthananaa Dheemthananaa Dheemthananaa Dheemthananaa Dhiranaa

அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

(RAIN MAN) அனைவரும் பார்த்தே தீர வேண்டிய படம்


சில படங்களை சட்டென புறந்தள்ளி விடுவோம் .. அந்த வகையில் இந்த படத்தின் டிவிடி என் கையில் கிடைத்த போது எல்லாம் நான் இந்த படத்தினை பார்க்க ஆர்வம் கொள்ள வில்லை...

சில பதிவுகளுக்கு முன் யாரோ ஒரு நண்பர் இந்த படத்தை பார்க்க சொல்லி எழுதி இருந்தார்...சரி என்னதான் இருக்க போகின்றது என்று ரொம்ப அலட்சியமாக பார்க்க ஆரம்பித்த படம் இது... சட்டென மனதில் நீர் திவலைகளுடன் ஒட்டிக்கொண்டது...

பொதுவாய் நான் ஆக்ஷன் படத்தின் காதலன் இத போன்ற மென் சோக படங்கள் பார்க்க நல்ல மூட் வேண்டும்... அந்த மூட் இருந்தால் மட்டுமே இது போன்ற படங்களை நான் பார்பேன்....

காலயில் பின்னுட்டம் இட்ட நண்பர் மு இரா அவர்கள் எப்போதும் கொலை கொள்ளை படங்கள் பற்றி எழுதுகின்றீர்கள் மனதுக்கு இதமாய் படஙக்ளை அறிமுகபடுத்த கூடாதா? என்று தனது ஆதங்கத்தை தெரிவித்து இருந்தார்... அவருக்காக இந்த பதிவும் படமும்.....

நிறைய அற்புதமான நெஞ்சை நெகிழ வைத்த படங்களில் இந்த படமும் ஒன்று என்று சொல்லாம்....
ரெயின் மேன் படத்தின் கதை இதுததான்....
Charlie Babbitt (Cruise) லாஸ் ஏன்ஜல்சில் கார் டீலராக வாழ்க்கை நடத்துபவன்... கொஞ்சம் கடன் இருந்தாலும் அவன் அவள் காதலியுடன் பால் ம் எனும் இடத்துக்கு விக்கெண்டுக்கு போகின்றான் போகும் போது அப்பா மண்டையை போட்டுவிட்டார் என்ற தகவல் கிடைக்க சட்டென டிரப்பை கேன்சல் செய்து விட்டு ஓஹியோவில் இருக்கும் அப்பாவின் இறுதி சடங்கில் கலந்து கொள்கின்றான்.....

சொத்து வரும் என்று வக்கிலை பார்த்தால் அவர் அவனுக்கு ஒரு பைசாவும் அப்பா எழுதி வைக்கவில்லை என்று எழுதியதை படித்து காட்ட இடி விழுந்தது போல் இருக்கின்றான்.. சரி அதுவாவது பராவாயில்லை... 3 மில்லியன் டாலர் பணத்தை மென்டல் ஆஸ் பத்திரிக்கு வேறு தானமாக எழுதி வைக்க.. ஏன் அப்படி எழுதி வைத்தார்? என்று ஆராய அந்த மருத்துவமைனைக்கு போய் விசாரிக்கும் போதுதான் அவனுக்கு ஒரு அண்ணன்Raymond (Hoffman) இருக்கின்றான் என்ற தகவல் தெரிகின்றது....

சற்றே மன நலம் பிழன்றவனிடம் 3 மில்லியன் என்பதை ஏற்றுக்கொள்ளாமல் அவனை லாஸ் ஏன்ஞசல்சில் உள்ள வக்கிலிடம் ஒப்பினியன் கேட்க அவனை அழைத்து செல்கின்றான்... அவனுக்கு எளிதில் எதையும் கிரகிக்கும் தன்மை அவனுக்கு இருக்கின்றது....ஒரு உதாரணத்துக்கு டெலி போன் டைரக்டரியில் உள்ள எல்லா பேர்களும் நம்பர்களும் அவனுக்கு நினைவில் இருக்கும்......

அப்படி பட்டவனை ஒரு கட்டத்தில் அவனை லாஸ் வேகாஸ் சூதாட்ட விடுதி்யில் போய் அவன் ஞாபக சக்தியை பயண்படுத்தி நிறைய பணம் சம்பாதித்து கடனை அடைத்து.... முதலில் அவன் அண்ணனை வெறுத்தாலும், பின்பு அவன் அண்ணன்மேல் காதல் கொள்கின்றான்...
ஆனால் டிரஸ்ட்டில் வந்து அண்ணனை வைத்து நீ சம்பாதிக்கின்றாய் என்று சொல்லி சட்டபடி அவனை அழைத்து கொண்டு போக முயல அவன் அண்ணனை இழந்தான...? பாசம் ஜெயித்ததா? என்பதை ரொம்பவும் நெகி்ழ்ச்சியாக சொல்லி இருக்கின்றார்கள்....



படத்தின் சுவாரஸ்யங்களில் சில....

மேலே உள்ளபடத்தின் இயக்குனர் Barry Levinson இதற்க்கு முன் பல படங்களை எடுத்தாலும் டாய்ஸ் மற்றும் டிஸ்குளோசர் போன்ற படங்கள் எடுத்தவர்... இந்த படம் இவர் வாழ்வின் பெஸ்ட் என்று சொல்ல முடியும்...


இந்த படத்தின் பெரிய பலம் மென்மையான இயக்கம் என்றால் அது மிகையாகாது மனதில் ஓடிய காட்சிகளை செல்லுலாய்டில் வடிப்பது ஒன்றும் அவ்வளவு சுலபமான வேலை அல்ல... அதை இயக்குனர் சிறப்பாக செய்து இருக்கின்றார்


படத்தில் நடிப்பில் பின்னி பெடலெடுத்து இருப்பவர் Dustin Hoffman என்றால் மிகை இல்லை... அந்த கேரக்டர் பார்த்தால் சிற்ப்பிக்குள் முத்து கமல் ஞாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை...

அதே போல் படத்தில் முதுகெலும்பாக இருப்பது கேமராமேன்John Seale தொழில் நுட்ப அற்புதம்.... ஒரு சாதாரண சாலையையும் அதில் டாமும் ஆல்ப் மேனும் நடக்கும் காட்சியை கோணங்களில் காட்சி படுத்திய விதம் அற்புதம் அதே போல் காரில் ஓஹீயோவில் இருந்தது லாஸ் வேகாஸ் போகும் வழி காட்சிகள் அற்புதம் நீங்கள் பார்த்தால்தான் நான் சொல்வதன் அர்த்தம் உங்களுக்கு புரியும்....படத்தில் இந்த படத்தின் முதுகெலும்பு கேமரா மேன் John Seale


லிப்டில் தம்பியின் காதலி மனநலம் குன்றிய அண்ணனை உதட்டில் முத்தமிட்டு எப்படி இருக்கின்றது என்று கேட்க ஈரமாக இருக்கின்றது என்று சொல்லும் போது.... திரைக்கதையை பாராட்டாமல் இருக்க முடியவில்லை


அதே போல் இன்னும் இரண்டு வாரத்டதில் உன்னை சந்திப்பேன் என்று சொல்லும் போது அதற்க்கு எத்தனை நாட்கள் , எத்தனை மணி துளிகள்,எத்தனை நிமிடம் , எத்தனை நொடி என்பதை நொல்லும் காட்சியில் கண்ணில் நீர் வரும் காட்சி....

அதே போல் சட்டப்டி அவனை அனுப்புவதா ? என்று டிஸ்கஷன் செய்யும் போது டாம், ஹால்மேனிடம் பக்கத்தில் வந்து பேசும் போது மென்மையாக தலைசாய அப்போது கேமரா மெல்ல ஜீம் இன் ஆகும் காட்சி அற்புதம்....

படத்தின் முதலில் டாமை சுயநலக்காரன் என்று வெறுத்தாலும் பின்பு அவரை ரசிக்க முடிகின்றது...

பெற்ற விருதுகள்....
Rain Man won Academy Awards for Best Picture, Best Actor in a Leading Role (Dustin Hoffman), Best Director, and Best Writing, Original Screenplay. It was nominated for Best Art Direction-Set Decoration, Best Cinematography (John Seale), Best Film Editing, and Best Music, Original Score.

The film also won a People's Choice Award as the "Favorite Dramatic Motion Picture."

The film also won the Golden Bear at the 1989 Berlin International Film Festival. , Rain Man is the only film to have won both the Golden Bear and the Academy Award for Best Picture.


படத்தின் டிரைலர்...


படக்குழவினர் விபரம்...

Directed by Barry Levinson
Produced by Mark Johnson
Written by Screenplay:
Barry Morrow
Ronald Bass
Story:
Barry Morrow
Starring Dustin Hoffman
Tom Cruise
Valeria Golino
Music by Hans Zimmer
Cinematography John Seale
Editing by Stu Linder
Distributed by United Artists
Release date(s) December 16, 1988 (1988-12-16)
Running time 133 minutes
Country United States
Language English
Budget $25 million
Gross revenue $172 million


அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

(LONG KISS GOOD NIGHT ) சினேகா மாதிரி குடும்ப குத்து விளக்கு....



பொதுவாக தமிழக இளைஞர்களிடம் சர்வே எடுத்து பாருங்கள்... உங்கள் மனைவி எப்படி இருக்க வேண்டும் என்று.... எனக்கு சினேகா மாதிரி பொண்ணு வேண்டும் என்று சொல்லி விட்டு மதியம் கந்தசாமி பார்த்து விட்டு மாலை நண்பர்களுடன் பேசுகையில் மியாவ் மியாவ் சாங்குல அந்த கருப்பு சேலை கட்டிகிட்டு கெட்ட ஆட்டம் போடறது சூப்பர் மாமே என்று பேசும் நண்பர்களை நான் அறிவேன்.... வீட்டு வாசலை விட்டு தாண்டாமல் தனக்கே தனக்கு சேவை செய்யும் வேலைக்காரியாகவே அன்பு , பாசம் போன்ற போர்வையில் இன்றும் பல பெண்கள் நடத்த படுகின்றார்கள்....


நம்ம அம்மாக்கள், அல்லது மனைவிகள் எல்லாம் பல்லிக்கும் கரப்பானுக்கு பயந்து வீல் என்று கத்தி அவ்வப்பபோது வயிற்றில் புளியை கரைத்து வைக்கும் போது, அதே பாலினத்தை சேர்ந்த பெண்கள் ராணுவத்திலும், போராளி குழுக்களாகவும், இருந்து சாதனை செய்து வாழ்ந்து வருகின்றார்கள்...

சென்னையில் பெண்கள் ஆட்டோ ஓட்டும் போதே அதனை வாய்பிளந்து பார்க்கும் இந்த சமுகம்... ஏன் சென்னை பெண்களே கூட இன்னும் அந்த ஆச்சர்ய அதிர்ச்சியில் இருந்து மீள வில்லை என்பேன்... அவர்களும் பெண்கள்தான்... இவ்வளவு காலத்துக்கு பிறகு இப்போதுதான் பெண் ரயில் ஓட்டுனர் வந்து இருக்கின்றார்...

இந்த மாதிரி பெண்களை எனக்கு நிரம்ப பிடிக்கும் ஆணாதிக்க சமுகத்தில் தன்னையும் நிரூபிப்பவளை எப்படி பாராட்டாமல் இருக்க முடியும்...?
அப்படி குடும்ப குத்துவிளக்காக கணவனுக்கும் பிள்ளைகளுக்கும் சேவை செய்து கொண்டு இருக்கும் ஒரு பெண்னை சர்வதேச கடத்தல் கும்பல் துரத்தினாள் எப்படி இருக்கும் என்பதுதான் லாங் கிஸ் குட் நைட் படத்தின் கதை...


LONG KISS GOOD NIGHT படத்தின் கதை இதுததான்.....


பள்ளி ஆசிரியராக வாழ்க்கை நடத்தும் சமந்தா (ஜீனா டேவிஸ்) 6 வயது குழந்தைக்கு அம்மா, அழகான கணவன், அமைதியான வாழ்க்கை, ஆனால் 8 வருடத்துக்கு முன் தனக்கு என்ன நேர்ந்தது அல்லது அதற்க்கு முன் தான் என்னவாக இருந்தோம் என்பது வெற்றி விழா கமல் போல் ஒன்றும் தெரியாது... ஆனால் தான் யார் என்று அறிந்து கொள்ள பிரைவேட் டிடெக்டிவ் மிச்(சாமுவேல் ஜாக்சன்) உதவியை நாடுகின்றாள்... அவள் ஒரு கொலைகாரி என்பதும் சீஐஏவிற்க்கு, கொலை செய்தவள் என்பதும் தெரிகின்றது.... அவளை சர்வதேச கடத்தல் கும்பலும், சீஐஏவும் தேட அவள் கடத்தல் கும்பலிடம் மாட்டிக்கொள்கின்றாள்... அவள் எப்படி தப்பித்தாள்? கணவன் குழந்தை என்னவானார்கள்... கடைசியில் கொலைகாரியா? அல்லது குடும்பத்து குத்துவிளக்கா? என்பதை டிவிடியில் பார்த்து மகிழுங்கள்...


படத்தின் சுவாரஸ்யங்களில் சில....

இந்த படத்தின் இயக்குனர்தான் இந்த படத்தின் ஹீரோயினுடைய கணவர்....

இந்த படத்தின் இயக்குனர் இதற்க்கு முன் ஸ்டோலன் நடித்த கிளிப் ஹாங்கர் மற்றும் டை ஹார்டு போன்ற படங்களை எடுத்தவர்....

மிக ஆழகான வாழ்க்கையில் சமையல் அறையில் கத்தியை கண்டாலே தொடை நடுங்கும் அவளுக்கு ஒரு கத்தியால் காய் கறி நறுக்க அந்த கத்தி அவள் கைகளில் விளையாடம் அழகேஅழகு... அவளால் தன்னை கன்ரோல் பண்ண முடியாத அளவுக்கு அந்த கத்தியை சுழற்றி கொண்டே இருப்பாள்... அந்தளவுக்கு வேகம் தன்னிடம் உள்ளது எனில் தான் யார் என்று கேட்க? கதையும் நாமும் சுடு பிடிக்கின்றோம்.....

ஒரு பெண்ணை அமைதியாக காட்டி விட்டு அவளை சித்தரவதை செய்வது அவள் உடை எல்லாம் உருவி ஒரு பெட்டிகேட்டை மட்டும் விடுத்து அவளை ஐஸ் நீரில் முழ்கி அவளை சித்தரவதை செய்யும் போது நமக்கு இங்கு பரிதாபம் மேலிடும்...

ஆக்ஷன் காட்சிகளில் ஜீனா டேவிஸ் பின்னி பெடலெடுத்து இருப்பார்...


படத்தின் டிரைலர்...



படக்குழுவினர் விபரம்...
Directed by Renny Harlin
Produced by Stephanie Austin
Shane Black
Renny Harlin
Written by Shane Black
Starring Geena Davis
Samuel L. Jackson
Patrick Malahide
Craig Bierko
Brian Cox
With David Morse
And G.D. Spradlin
Tom Amandes
Yvonne Zima
Music by Alan Silvestri
Cinematography Guillermo Navarro
Editing by William Goldenberg
Distributed by New Line Cinema
Release date(s) October 11, 1996
Running time 120 minutes
Country United States
Language English
Budget $65,000,000

அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner