மிரண்டு போன கடவுள் ??? பெண் பதிவர்கள் மன்னிக்கவும்...


உண்மை தமிழன் போன்ற ஒரு கேரக்டர் கடவுளிடம் அதாவது அப்பன் முருகனிடம் மனம் முருக வேண்டி வரம் கேட்டது.
அதுவும் ஒருநாள் இல்லை இரண்டு நாள் இல்லை ஒருவாரம் அப்பன் முருகனை விடாமல் டிஸ்டர்ப் செய்து அல்லது இம்சை கொடுத்து அப்பன் முருகனிடம் அப்பாயிண்ட்மெண்ட் கேட்டது...

முருகன் தலைவர் கலைஞர் போன்று ரெண்டு பொண்டாட்டிகாரர் ரொம்பவும் பிசி வேறு அது மட்டும இல்லாமல் பெண்களின் மன ஆழங்களை நன்றாக அறிந்தவர்.

உத கேரக்டர் தவ வலிமையை மெச்சி ஒரு நாள்

உத கேரக்டர் எதிர்பாராத வகையில் அப்பன் முருகன் எதிரில் வந்து உட்கார்ந்தார். கேள் பக்தா உன் ஆசை எதுவாயினும் அதை நிறைவேற்றுகிறேன் என்றார்.

உத கேரக்டர் ரொம்ப புத்திசாலிதனமாக கடவுளிடம் அவர் பவரை சோதிக்க எண்ணி எனக்கு அமெரிக்காவில் இருந்து சென்னைக்கு ஒரு ஒத்தையடி பாதை இருந்தா போதும் என்று வேண்டியது ...

அப்பன் முருகன் அப்செட்...

ரிசஷன் பிரியட்ல எதாவது நல்ல கம்பெனியில் வேலை வேண்டும் என்று கேட்காமல் இது போல் கேட்டது அப்பன் முருகனையே அப்செட்டாக்கியது..

சுதாரித்து கொண்ட முருகன் அது இப்போது சாத்தியப்படாது வேறு ஏதாவது கேள் நான் செய்கிறேன் என்று அப்பன் முருகன் பிராமிஸ் செய்தார்..

உத கேரக்டர் இந்த உலகத்தில் ஒரே ஒரு பையனை மட்டும் விரும்பும் படி ஒருபெண்ணை உங்கள் பவரை கொண்டு மாற்றுங்கள் என்று சொல்ல,

உடனே வேர்த்து வேலவேலத்து போன அப்பன் முருகன் மகனே உத உனக்கு அமெரிக்காவுல இருந்து சென்னைக்கு சிங்கிள் ரோடு வேண்டுமா? அல்லது டபுள் ரோடு வேண்டுமா? அல்லது நெஷனல் ஹைவேஸ் வேண்டுமா எது வேண்டுமானாலும் கேள் உடனே செய்கிறேன் என்று நெற்றி வியர்வையை துடைத்தபடி அப்பன் முருகன் சொன்னார்...


அன்புடன்/ஜாக்கிசேகர்

காம பதிவர்கள் (கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும்)


ஒரு பெண் சற்றே பெரிதான வயிற்றை வைத்துக்கொண்டு இரவு ஒன்பது மணிக்கு அவசரம் அவசரமாக பதிவர் புருனோ போன்ற ஒரு நல்ல மருத்தவரை பார்க்க போயிருந்தாள்...கண்களில் தாரை தாரையாக கண்ணீர்,வார்டு பாய் அவள் உட்கார இடம் இல்லாதகாரணத்தால் அவன் இருக்கையை அவளுக்கு கொடுத்தான்.

தாரைதாரையாக தண்ணீர் அவள் கண்களில்வந்து கொண்டே இருந்தது வரவேற்ப்பு அறையில் இருந்த டிவியில் கோலங்கள் ஓடிக்கொண்டு இருந்தது, ஆதி எப்போதும் போல் ஹீஸ்ட்டிரியா பேஷன்ட் போல் கத்திக்கொண்டு இருந்தான்.

அவளுக்கான டோக்கன் எண்19 அவள் புடவை தலைப்பை வைத்து கேவி கேவி அழுததை பார்த்த வார்டு பாய் அவளை உடனே டாக்டரை பார்க்க அனுமதித்தான்.. அழுத கண்களுடன் வார்டு பாயிக்கு கண்களால் நன்றி சொல்லிய படியே அவள் உள்ளே சென்றாள்..

மருத்துவர் உட்கார சொன்னார் அப்போதும் அவள் கேவி கேவி அழுவதை நிறுத்தவில்லை டாக்டர் பத்து நிமிடம் பொறுமை காத்தார்.. அவள் சற்றே சகஜ நிலைக்கு வந்து, கணவனை அழைத்து வராமல் குடும்பக்கட்டுப்பாடு செய்ய ஏதாவது மருந்து இருக்கிறதா? என்று வினவினாள்.

டாக்டர் பொறுமையுடன் சொன்னார் அதற்க்கு சாத்தியம் இல்லை என்று...

டாக்டர்/ உனக்கு திருமணம் ஆகி எத்தனை மாதம் ஆகின்றது?

அவள்/எழு மாதங்கள் டாக்டர்

டாக்டர்/ எழு மாதம்தானா? அதற்க்குள் ஏன் கணவணுக்கு குக ஆபரெஷன் செய்ய ஆர்வமாய் இருக்கிறாய்?

அவள்/அவள் அழுத கண்களுடன் டாக்டர் நான் ஆறுமாசம், என் தங்கை ஐந்து மாசம்,என்தங்கையோட நண்பி நாலுமாசம், எங்க பக்கத்து வீட்டு ஆண்ட்டி மூனு மாசம், எங்க வீட்டு வேலைக்காரி இரண்டு மாசம்,இதெல்லாம் விட கொடுமை எங்க பாட்டி ஒருமாசம் டாக்டர் என்று சொல்லி கேவி கேவி அழுதாள்.

டாக்டர்/இதெல்லாம் ஆம்பளையா பொறந்தா சகஜம் என்று சொல்வதற்க்குள் அவள் வீருட் என்று எழுந்து புடவைதலைப்பாள் மூக்கை சிந்தியபடி எது சகஜம் டாக்டர் என் வீட்டு நாய் ஜீம்மி நாளு நாளா வாந்தி எடுத்துக்குனு இருக்கு டாக்டர் என்று அவேச பட்டாள். டாகடர் ஆர்வாமாகி உங்க கணவர் எப்படி இருப்பார் என்று கேட்க இதோ இந்த பிளாக்ல இருக்கிற ஒரு வரி விடாம நிறுத்தி நிதானமா ஆர்வமா ரொம்ப நேரமா படிக்கிறாறே அவர்தான் என்றாள் அந்த பெண்....


குறிப்பு/ பல ஜோக்குகள் படித்து ரசித்து அது என்னோடும் என் உதட்டு புன்னகையுடனும் போய் விடுகின்றது அது உங்களை மகிழ்வித்து உங்களை புன்னகை மன்னனாக்க இது போன்ற சோக்குகள் உங்களை இனி மகிழ்விக்கும். நாலு வரியில் நான் படிக்கும் இந்த மாதிரி சோக்குகள் என் கற்பனை நடையில் கதை போல் எழுதலாம் என்று இருக்கிறேன்,

காமத்தை ரசித்து கொண்டே காமத்தை எதிர்க்கும் தமிழர்களான நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?????

அன்புடன்/ஜாக்கிசேகர்

எச்சரிக்கை இப்ப ஊட்டிக்கு போகாதிங்க....


எல்லா நகரத்து சாலைகளும் ரோம் நகரத்தை நோக்கி செல்கின்றன என்பது போல் 3 நாள் சேர்ந்தாற் போல் லீவு விட்டால் எல்லா வாகனங்களும் கொடைக்கானல் மற்றம் ஊட்டி மலைபதையை நோக்கி செல்கின்றன என்பது புது மொழி....

மே1ம் தேதி வெள்ளிக்கிழமை வர அதன் அடுத்த இரு தினங்களும்சனி ஞாயிறு என்று தொடர்ந்து விடுமுறை நாளாக வர தமிழகத்தில் உள்ள எல்லோருடைய வீட்டிலு்ம் பெட்டிக்கட்டிக்கொண்டு புறப்படும் இடம் ஊட்டி அல்லது கொடைக்காணல்தான் அல்லது வேற ஏதாவது மலைவாசத்தலம்.

என் நண்பிக்கு மே1 அன்று திருமணம் என் திருமணத்துக்கு புயல் மழையில் வந்தவள் என்பதாலும் மிக நெருங்கிய நண்பி என்பதாலும் நான் மனைவியுடன் ஊட்டி சென்றோம் 4 நாட்கள் டேரோ போட்டோம்...

பணம் பெருத்தவர்கள் மட்டும் இந்த மாதிரிகோடை விடுமுறையில் ஊட்டிக்கு செல்லலாம். பட்ஜெட் பேமிலி கோடைக்கால ஊட்டிக்கு போக வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்... நடுத்தர குடும்பத்தினர் ஊட்டி செல்வதை தவிற்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்
எனென்றால் 750 ரூபாய் பெறுமானம் கொண்ட ரூம் வாடகை 2500 ரூபாய்க்கு ஏறி இருக்கின்றது.. அது மட்டும் இல்லாது எல்லா விலைகளும் உயர்ந்து இருக்கின்றன...

காரை பார்க் செய்து பொட்டானிக்கார்டன் போவதற்க்குள் தாவு தீர்ந்து விடுகின்றது... சட்டென டிராபிக் ஜாம் வேறு ஆகி அது கிளியர் ஆவதற்க்குள் நம் மூளை நரம்புகள் வெடித்து விட போட்டி போடுகின்றன...

காரணம் எல்லோரும்டிராபிக்கில் ஒரே சைடில் வெயிட் செய்து கொண்டு இருக்கும் போது பெரிய புடுங்கி மாதிரி காரை முன்னாடி எடுத்துக்குனு போன ஆப்போசிட்ல வர்றவன் இவன் அம்மாவை தேவிடியான்னு கத்தறான்.


எல்லா இடத்திலும் குப்பைமலை போல் குவிந்து கிடக்கின்றன... முக்கியமாக வாட்டர் பாட்டில் மற்றும் பெப்சி மிரான்டா பாட்டில்கள் குப்பை எங்கும் இறைந்து கிடக்கின்றன...
இரண்டு நிமிடத்தில் சேரிங் கிராஸ் வர வேண்டியதூரத்தை ஒன்வே என்று சொல்லி பதினைந்து நிமிட மாக்குகின்றார்கள்... அங்கும் நல்ல வெயில் தான்.ஊட்டியி்லும் கழுத்து வியர்வை பிசுபிசுக்கின்றது, என்ன வாகனத்தில் போகும் போது நன்பகல் பண்ணிரண்டுக்கு குளிர் காற்று முகத்தில் அடித்து தமிழக தேர்தல் பற்றி குசாலம் விசாரிக்கின்றது...

குடும்பத்துடன் செல்பவர்கள் ஆப் சீசன் என்று அழைக்கப்படும் டிசம்பர் மாதத்தில் செல்ல வேண்டுகிறேன்... ஒரு குரோம் பேட்டை குடும்பம் நடு இரவில் வந்து 10 பேருடன் வந்திறங்கி ரூம் கிடைக்காமல் தவித்து, கம்பளி கூட கொடுக்காமல் 4500 ரூபாய் வாங்கி ரூம் கொடுத்து தாலி அறுத்த கொடுமையும் நடந்தது.

ஊட்டி ஆட்டோகாரர்களை கம்பேர் செய்யும் போது சென்னை ஆட்டோக்காரர்கள் தெய்வத்தின்ட தெய்வம்...

ஆகவே நண்பர்களே புதிதாய் திருமணம் ஆனவர்களே இதனால் அறியப்படும் நீதியாதெனில் ஊர் ஓடும் போது நீயும் ஓடு என்ற பழமொழிக்கு ஆப்போசிட்டாக ஊர்ல பல பேர் ஊட்டிக்கு போகும் போது நீ போகாதே என்பதுதான் புது மொழி ...

ஊட்டி பற்றிய பதிவு புராணங்கள் வரும் பதிவுகளில்....

அன்புடன்/ஜாக்கிசேகர்

புதுமையை புகுத்திக்கொண்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்துதுறை


வீடியோ கோச் அரசு பேருந்துகளில் பயனம் செய்யும் தென்மாவட்டத்து மக்கள் இந்தக்கொடுமையை நன்கு அறிந்து இருப்பார்கள், சில நேரங்களில் தூக்கம் வராது அவர்கள் போடும் படத்தை பார்த்தே தொலைத்து தீர வேண்டிய கட்டாயம்...

இப்படித்தான் நான் ஒரு முறை மதுரை செல்ல நேர்ந்த போது ராமராஜன் சேது அபிதா நடித்த பெயர் நினைவில் நிற்க்க மறுத்த படத்தை போட்டார்கள் நானும் சகித்து பார்த்து தொலைத்தேன், மதுரை இறங்கி சின்னதாக ஒரு இன்டர்வியு எடுத்து அன்று மாலை அதே பேருந்தில் சென்னை திரும்ப இரவும் அதே படம் என்நிலை நினைத்து நொந்து சாப்பிட நிறுத்திய இடத்தில் ஒரு குவாட்டர் வாங்கி தண்ணீர் கலக்காமல் கோபத்துடன் அடித்து சுருண்டு படுத்தேன்...

நல்ல படத்தை போட்டு கிளைமாக்ஸ் நெருங்கும் நேரத்தில் ஊர் வந்து தொலைக்க சட்டென டிவி பொட்டியை ஆப் செய்து சில கண்டக்டர்கள் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்ததோடு அல்லாமல் சத்தியம் தியேட்டர் ஆப்பரேட்டர் போல் நக்கல் பார்வை வேறு பார்ப்பார்கள்...

சில மாதங்களுக்கு முன்பு புதுவையில் இருந்து சென்னை கிழக்கு கடற்க்ரை சாலையில் பயணம் செய்து கொண்டு இருந்த போது வீடியோவில் தொடர்ந்து எம்ஜீஆர் பாடல்கள் ஓடிக்கொண்டு இருந்தது.

இன்பமே உந்தன் பேர் பெண்மையோ என்று பாடி உடன் நடித்த பெண்ணை படுக்கையில் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை அனைத்தையும் ஒரு அருவி பக்கத்தில் உதட்டு சுழிப்புடன் முன்னாள் முதல்வர் எம்ஜியார் செய்து கொண்டு இருந்தார்..

நான் டிரைவரிடம் சென்றேன் யார் இந்த பாடலை போட்டது? என்றேன்.
நான்தான் எனக்கு தலைவர் பாடல்னா ரொம்ப பிடிக்கும் என்றார் . டூட்டி முடிஞ்சு உங்க வீட்ல போய் உங்க பொண்டாட்டி புள்ளைங்களோட பாருங்க உங்களை வேணாங்களை, எங்க பொறுமையை ஏன் சோதிக்கி்றீர்கள் என்றேன் பாட்டு மாற்றப்பட்டு வீடியோவில் காக்க காக்க சூர்யா வந்தார்...


இப்போது இது போன்ற தொல்லைகளுக்கு எல்லாம் தீர்வாய்இப்போது ஒரு புதிய முறையை தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை அறிமுகப்படுத்தியுள்ளது
அதாவது ஒரு கம்யூட்டர் பிளாட் மானிட்டர் ஒன்று டிவி பெட்டிக்கு பதில் வைத்து உள்ளார்கள் அதோடு ஒரு சின்ன சீப்பியூவையும் பொறுத்தி உள்ளார்கள்...

கண்டக்டர் டிக்கெட் கொடுத்து விட்டு சுவிட்சை போட்டால் போதும் கம்யூட்டர் ஆனாகி வின்டோஸ் எழுத்துக்கள் திரையை ஆக்கிரமித்து படம் ஓடுகின்றன இதில் சிறப்பு அம்சம் யாதெனில் திரைப்படம் ஏதும் ஒளிபரப்பாமல் ஏதாவது ஒரு படத்தில் இருந்து இரண்டு காமெடி காட்சிகள் இரண்டு பாடல்கள் என்று ஓடு்கின்றது. நடு நடுவில் விளம்பரங்கள் என்று வருகின்றது. இதன் மூலமும் போக்குவரத்து கழகத்துக்கு அதிக வருமானம் கிடைக்கும்..


சோதனை ஒளிபரப்பாக இப்போது அனைத்து தமிழ்நாடு அரசு வீடியோ கோச் நெடுந்தூர பேருந்துகளிலும் காமெடிக்காட்சிகள் ஓடுகின்றன . இதன் சிறப்பு மானிட்டர் என்பதால் ஒளிஒலி துல்லியமாக இருக்கின்றது...அதே போல் போக்கு வரத்து தலமையகத்தில் ஏற்கெனவே பதியப்பட்ட படங்கள்தான் பேருந்தில் ஓடும் இதனால் புதிய படங்கள் திருட்டு வீடியோவாக அரசு பேருந்துகளில் ஓடாது...


கண்டெக்டர் டிரைவர் விறுப்பு வெறுப்பு இல்லாமல் காட்சிகள் ஓடுகின்றன வாழ்த்துக்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்துதுறை

ஒரு சின்ன விண்ணப்பம்

பேருந்துகளில் உள்ள பயணிகள் சீட்கவர் எல்லாம் அழுக்கு ஏறி மட்டமாக வாந்தி வருவது போல் உள்ளது அதே போல் மூட்டை பூச்சிகள் கூட ஒரு சில பேருந்துகளில் உயிரை எடுக்கின்றன...

எப்போதும் புதுமைக்கு முதல் குரல் கொடுக்கும் தமிழக போக்குவரத்து துறை இது போன்ற அடிப்படைவசதிகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்

அன்புடன்/ஜாக்கிசேகர்

அப்புறம் என்ன மயித்துக்குடா காசு வாங்கறிங்க-????


சில இடங்களில் சுத்தமாக லாஜிக் என்பது இருக்கவே இருக்காது, அப்படி லாஜிக் சுத்தமாக இல்லாத விஷயத்தை உங்ககிட்ட நான் பகிர்ந்துக்கிறேன்...
பல லட்சக்கணக்கான மக்கள் வந்து போற இடம் கோயம்பேடு பேருந்து நிலையம்..

உதாரணத்துக்கு மாம்பலத்தில் இருந்து புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேர் கோயம்புத்தூர் போறாங்கன்னு வச்சுக்குங்க...அங்க ரெண்டு நாள் தங்கிட்டு வராங்கன்னு வச்சுக்குங்க அல்லது மிட்நைட்ல வந்து கோயம்பேடு இறங்கினா ரொம்ப ஈசியா இருக்கறது டூவீலர் எடுத்து வந்து கோயம்பேடு பஸ்ஸாண்டுல போட்டுட்டு ஊருக்கு போறதுதான் சிக்கனமான வழி....

இல்லன்னா மாம்பலத்தில் இருந்து கோயம்பேடுக்கு வருவதற்க்கு ஆட்டோவுக்கு 150 ரூபாயும் சப்போஸ் மிட்நைட் வந்து இறங்கிட்டா 200 ரூபாயும் ஆட்டோக்காரன்கிட்ட தெண்டம் அழனும். அதனால பொதுவா கோயம்பேடு பார்க்கிங் ஸ்டேண்டுல டூவலர் போட்டுட்டு ஊருக்கு போறதுதான் புத்திசாலிதனம்..
ஊருக்கு போயிட்டு
4 நாளைக்கு கழிச்சி வந்ததாக்கூட வெறும் 40ரூபாய்தான் பார்க்கிங் சார்ஜ்ஆகும். இப்ப பிரச்சனை பார்க்கிங் சார்ஜ் கட்டணத்தை பத்திதான். நேத்துதான் எதெச்சையா பார்க்கிங்ல கொடுத்த சிலிப்பை திருப்பி பார்த்தேன்.

அதாவது ஒருநாள் கட்டணம் பத்து ரூபாய்....

அதுல இருந்த மூணாவதா இருந்த நிபந்தனையை படிச்சு பார்த்துட்டு அப்படியே ஷாக்காயிட்டேன்... அதாவது ஊர்தியை நிறுத்தப்பட்ட காலத்துக்குள் வாகனத்துக்கு ஏற்படுகின்ற சேதத்திற்க்கோ அல்லது திருட்டுக்கோ நிர்வாகமோ அல்லது நிறுத்துமிட அலுவலரோ பொறுப்பு இல்லை என்று சொல்கிறது...

அப்புறம் எதுக்கு பார்க்கிங் சார்ஜ் வாங்கறிங்க? திருடிக்கிட்டு போன நாங்க பொறுப்பு இல்லைன்னு சொல்லறிங்க இல்லை , அப்புறம் எதுக்கு இங்க வண்டியை நிறுத்திட்டு காசு கொடுத்துட்டு போகனும்.... காசு கொடுக்காம ஏதாவது பொறம் போக்குல நிறுத்திட்டு போறோம்... காசு கொடுக்கறது வண்டியை எந்த சேதமும் இல்லாம பாத்துக்கறதுக்குதானே? அப்புறம் எதுக்குடா
காசு வாங்கறிங்க???
அது மட்டும் இல்லாம சென்ட்ரல் ஸ்டேசன் பார்க்கிங் சிலிப்லயும் இந்த கொடுமை கூத்துதான் நடக்குது... அது மட்டும் இல்லாம வண்டியை எடு்க்கும் போது எப்படியும் இரண்டு இண்டிகேட்டரையாவது உடைச்சி வச்சிடறானுங்க பண்ணடை பசங்க...

அப்புறம் என்ன மயித்துக்கு பார்க்கிங் காசு?


அன்புடன் அடங்காத கோபத்துடன்...
ஜாக்கிசேகர்

கலைஞரை மட்டும் ஏன் எல்லோரும் திட்டுகிறார்கள்?



கலைஞருக்கு வக்காலத்து வாங்குவது இந்த பதிவின் நோக்கம் அல்ல, ஆனால் கலைஞரை மட்டும் ஏன் எல்லோரும் திட்டு கிறார்கள் என்பதை சற்று யோசித்தால் கிழிள்ளவைதான் பதிலாய் வருகின்றது....


உளவியல் ரீதியாகவே இதை பார்ப்போம் பொதுவாக தமிழனுக்கு நம்ம அக்மார்க் கலரான கருப்புக்கலரில் எவன் முன்னேறினாலும் பிடிக்காது... ச்சே ச்சே இன்னா சார் அப்படி திங் பன்றிங்க, அப்படி எல்லாம் கிடையாது சார் , நாங்க கலர் பார்க்கமாட்டோம். சரி அப்படின்னா சொளக்கார் பேட் புல்லாவும் சேட்டு, எப்படி வந்தான், இன்னமும் கிராமத்துல வட்டி மேல வட்டி போட்டு நம்ம ஆள் பணத்தை முழுசா அட்டை பூச்சி போல உறியறானுங்களே அது எப்படி?


இதுவே நம்ம ஆள் பணத்தை வட்டிக்கு நியாயமா கொடுத்தாலும் அவனை எமாத்துறதுலயும் அவனை கவுக்கறதுலயையும் உறுதியா இருப்பான்.

அதே போல தமிழை தப்பா பேசனும் அப்படி பேசறவனைதான் தமிழ்ன் நம்புவான் இதை தனது பிதாமகன் படத்துல கூட கின்டல் செய்து இருப்பார் பாலா...


ரெண்டாவது தாழ்த்தபட்ட இடத்துல இருந்து மேலை வந்தவன் எப்படி இவ்வளவு செல்வ செழிப்போட இருக்கறது, இதுவே அவன் உயர்ந்த சாதியா இருந்தா கேள்வியே கிடையாது....

தமிழ் நாட்டுல ஒரு சேட் தப்பா தமிழ் பேசி கோடியை சுருட்டுலாம், வெள்ளையா இருந்தா அவன் நல்லவன் என்ற நிலைப்பாடு நம்ம சமுகத்துல காலம் காலமா இருக்கு...

ஆங்கில புலமை மட்டும் இருந்தாதான் வட இந்திய சேனல்கள் எல்லாம் மதிக்கும் இதற்க்கு கூட அன்பே சிவம் படத்தை உதாரணத்துக்கு சொல்லலாம் மூஞ்சு கோனையான கமல் மாதவனுக்கு நல்லதுதான் செய்வாரு ஆனா அவன் நம்பறதும் பேசி பழக ஆசைப்படுவதும் பிராடு கேரக்டர்ல நடிச்ச யூகிசேதுகிட்டதான்... ஏன்னா அவன் இங்கிலி்ஷ் பேசுவான் அவ்வளவுதான்...



25 பைசா எடுத்துக்கிட்டு வந்து சென்னையில் வளர்ந்த விஜிபி பன்னிர்தஸை ஒத்துக்குவோம் பெட்ரோல் பங்குல பெட்ரோல் போட்ட அம்பானியை ஒத்துக்குவோம் இன்னம் நிறைய சொல்லலாம்


கலைஞர் அப்ப யோக்கியமா என்ற கேள்வி நிச்சயம் கேட்பார்கள் அவர் யோக்கியம் என்று நான் சொல்ல வில்லை அவர் மீதும் தவறு இருக்கின்றது ஆனால் அவரை மட்டும் குற்றம் சொல்வதைதான் நான் வன்மையாக கண்டிக்கிறேன்


கலைஞர் செய்த ஒரே தப்பு தமிழனாக பிறந்ததும், பார்பானியத்தை எதிர்த்ததும், திராவிடத்தை பரப்பியதும்தான், பார்பானியத்தை எதிர்பவர்கள் எல்லொரும் நம்மை பொறுத்தவரை கேட்டவர்களே....
எனென்றால் அவர்கள் எல்லோரும் சொல்லும் இடத்தில் இன்னமும் இருக்கின்றார்கள். (தினமலர் இந்து துக்ளக்)
நாம் கேட்டு கொள்ளும் இடத்தில் இன்னமும் இருக்கின்றோம் அவ்வளவுதான்.....

பார்பானியத்தை எதிர்த்த கோபம்தான் கலைஞரை திரும்பிய பக்கம் எல்லாம் தாக்குகின்றது...


அன்புடன்/ஜாக்கிசேகர்

சனிக்கிழமை ( 24/04/09)பதிவர் சந்திப்பு ஒரு பார்வை....







பொதுவாக ஞாயிறு மாலை நடைபெறும் பதிவர் சந்திப்பு இந்த முறை சற்றே முந்திக்கொண்டு சனிக்கிழமை நடந்தது, இது எனது மூன்றாவது பதிவர் சந்திப்பு...இரண்டு மூறை மறத்தமிழனாய் தியேட்டரில் படம் போட்டு கால் மிதித்து மன்னிப்பு கேட்டு உட்கார்ந்து படம் போட்டு பத்து நிமிஷம் இருக்கமா? என்ற கேனக்கேள்வி கேட்பவன் போலதான் நான் பதிவர் சந்திப்புக்கு போய் இருக்கிறேன்.

அதனால் இந்த முறை எப்படியும் முன்பே போய் விட வேண்டும் என்று மெரினா சாலையில் விரைந்து காந்தி சிலை சென்ற போது மொத்தம் 4 பேர் இருந்தார்கள் அப்போது மணி 5,10 என்க்கு ரொம்ப சந்தோஷம்....

ஆசிப் மீரான் , செல்வேந்திரன், மற்றம் இரண்டு பேர்.
நிறைய பேர் வந்த கொண்டு இருந்ததாலும் நிறைய பேசியதாலும் பெயர்கள் இயல்பாய் மறந்து விட்டன மன்னிக்கவும் ,மன்னிக்கவும் ...

ஜெயரோம் சுந்தர், காவேரிகனேஷ் அக்னிபார்வை, பாலபாரதி,செல்லமுத்து குப்புசாமி(கிழக்கு பதிப்பக பிரபாகரன் புத்தகம் எழுதியவர்) , பைத்தியக்காரன் , தண்டோரா, வால்பையன் மூத்த பதிவர் சிவஞானம், வெயிலான்,டோண்டு,லக்கிலுக்,புருனோ,அதிஷா,அப்துல்லா,நர்சிம்,தமிழ் ஸ்டுடியோ அருன்,
ஸ்ரீ,கேபிள் சங்கர் போன்றவர்கள் வந்ததும் பதிவர் சந்திப்பு கலை கட்ட தொடங்கியது....


பொதுவாக இந்த முறை பழம் தின்று கொட்டை போட்ட பதிவர்கள் எல்லோரும் ஒத்துக்கொண்ட விஷயம்இந்த சந்திப்பு போல் எப்போதும் கூட்டம் இருந்தது இல்லை என்று, அதாவது 40பேருக்கு மேல் வந்து இருந்தார்கள்...


முன்பு எல்லாம் பதிவர் சந்திப்பு என்றால் 5 பேர் பத்து பேர்தான் வருவார்கள் என்று சொன்னார்கள்

வழக்கம் போல் டோண்டு தன் கைப்புத்தகத்தை கொடுத்து அனைவர் பெயரையும் எழுத சொன்னார் நான் பார்த்த சந்தித்த பதிவர்களிளேயே, சின்சியர் சிகாமணி டெடிகெஷன்னு சொன்னா இந்த விஷயத்துல டொண்டு சார்தான்,

எங்களிடம் கூட ஒரு அலட்சியம் குடி கொண்டு இருக்கும் அவர் எப்போதும் வந்தாலும் பதிவர்கள் பெயரை கேட்டும் அவர்கள் டீடெயில் வாங்கி உடனே வீட்டுக்கு போய் பதிவு போடுவதில் அவருக்கு நிகர் அவரே..

பதிவர்சந்திப்பில் எனக்கு பிடித்த விஷயம் கலைஞரை திட்டினவனும் ஜெயலலிதாவுக்கு வக்காலத்து வாங்கியவனும் ஒன்னா நின்னு சிகரெட்டும் டீயும் குடிப்பாங்க...

இதுதான் ஆரோக்யம், இந்த நட்புக்காகவே எத்தனை முறை வேண்டுமானாலும் போய் பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ளலாம்...

வால்பையன்ன ஒரு கேரக்டர்தான் இந்த முறை என்க்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியவர்,. அவர் பதிவுல லாங்ஷாட்ல சின்ன பையன் போல போட்டோ போட்டு இருந்தார் நானும் ரொம்ப சின்ன பையன் நினைச்சிட்டேன்,ரொம்ப இல்ல கொஞ்சம்தான் சின்ன பையன் காது பக்கம் கொஞ்சம் நரைச்சிறுக்கு...

டோண்டு என்னோடு அறிமுகம் அவும் போது காசி தியேட்டர் ஓனர் நலமா என்று கூசாலம் விசாரித்தார்...

அப்புறம் எல்லோரும் அறிமுகப்படலம் நடந்தது எல்லோரும் உள்ளேன் அய்யா என்று பள்ளி்யில் பெயர் சொல்வது போல் கைஉயர்த்தி பெயர் சொன்னார்கள்.

நான் வந்ததும் சில போட்டோக்கள் எடுத்தேன் நான் போட்டோ எடுக்கும் போது கொஞ்சம் அட்டேன்ஷனில் வந்தார்கள் எனென்றால் நான் போட்டோகிராபர் என்பதால் ஆனால் கொண்டு போனது டப்பா கேமரா அனால் அடுத்த முறை பதிவர்கள் போட்டோவை தெள்ளதெளிவாக எடுத்து அவர்கள் பற்றிய கருத்துக்களை எழுதுகிறேன்...


அரசியல்வாதி போல் கஞ்சி போட்டோ வெள்ளை சட்டை வெள்ளை வேட்டியில் முத்த பதிவர் சிவானம் வந்து இருந்தார் ....

ஈழத்தை பற்றிதான் டாபிக் இருந்தது பதிவர்சந்திப்பில் சூடாக எதாவது விவாதிப்பார்கள் என்றால் அப்படி எதும் கிடையாது விவாதிப்பு என்றால் அது ஒரு சிறு சிறு குழுவாக விவாதிக்க ஆரம்பிப்பார்கள் அது அவர்கள் என்ன ஓட்ட அலைகளுக்கு செட் ஆனாவர்கள் அந்த குழுவில் இருப்பார்கள்... அதே போல் உண்மையான விவாதம் அல்லது கலை கட்டுதல் என்றால் லைட்ஹவுஸ் பக்கத்தில் இருக்கும் டீக்கடைதான்.

நான் எப்போதும் ஒரு குழுவில் பேசினாலும் மற்ற குழுக்களில் என்ன டாபிக் ஓடுகின்றது என்று எட்டிப்பார்பது வழக்கம்...



நான், அக்னிபார்வை புருனோ, பைத்தியக்காரன் தண்டோரா என்று குழுவாக பேசிக்கொண்டு இருந்தோம், செல்வமுத்து குப்புசாமி ரொம்பவும் பேசுவதற்க்கே கூச்சப்பட்டதால் அவரிடம் பேசிக்கொண்டு இருந்தேன்..

பீச்சில் நல்ல கூட்டம் லீ்வ் வேறு விட்டு விட்டதால் டாடி பீச்சக்கு கூட்டிட்டு போங்க போன்ற வேண்டுகோள்களை ஒருவாரத்துக்கு கேட்டு கொண்டுஅதற்க்காக பிள்ளைகளை பீச்சுக்கு கூட்டிக்கொண்டு வந்தவர்கள் ஏராளம்... அழகான பெண்களாய் இருக்கிறார்கள் ஆனால் கையில் ஒரு குழந்தை வைத்து இருக்கிறார்கள் எப்படி? என்று தெரியவில்லை...

40 பேர் கொண்ட கூட்டம் என்பதால் சுண்டல் பையன்கள் இலங்கை ராணுவம் போல் சுற்றி வளைத்து முகத்துக்கு நேரே சுண்டல் பாத்திரத்தை நீட்டி அண்ணா சுண்டல் என்றார்கள்... நாங்கள் சோனியா மன்மோகன் போல் எதற்க்கும் மசியவில்லை என்பது குறிப்பிடதக்கது...

இதற்க்கு நடுவில் ரெண்டு வாண்டுங்க புடிக்கிற ஆட்டம் வெளையாடுச்சிங்க அதுங்க மறைச்சிக்கறதுக்கு பதிவர் சந்திப்பு கூட்டத்தல வந்து மறைச்சிக்கிட்டு ஆட்டம் ஓட்டம் காட்டி கொண்டு இருந்துச்சிங்க..

வேலை வாய்ப்பு கேள்வி குறி ஆனதால் ஐகாக்ஸ் வளாகம் தவிர்த்து காந்தி சிலை பின்பு இரண்டு நவ நாகரிக பெண்கள் உட்கார்ந்து ஒரு பையணிடம் பேசிக்கொண்டு இருந்தார்கள் உடம்பு நன்றாக காற்று வாங்கும் உடை அணிந்து இருந்தார்கள். நம் கழுகு கண்ணக்கு தப்பவில்லை.. ஒரு பெண் முன்பக்கம் பாதி காற்று வாங்வது போல் உடை அணிந்து இருந்தால் இன்னோரு பெண் பின்பக்கம் முழுவதும் திறந்து வைத்து இருந்தாள்.



பதிவர்கள் லைட்ஹவுஸ் டீக்கடைக்கு போகும் போது இந்த காட்சியை பார்த்து இருக்கலாம் பார்த்தவர்களுக்கு மச்சம் பார்க்காதவர்களுக்கு மச்சம் இல்லை அவ்வளவுதான்.

லைட்ஹவுஸ் டீக்கடையில் காரசாரமான சிறு குழு விவாதங்கள் நடைபெற்றன. நான், அக்னி ,புருனோ, ஊர்சுற்றி,தன்டோரோ, தமிழ் குரல் போண்றவர்கள் நிறைய பேசினோம் , பாலபாரதி, லக்கி,அதிஷா,கேபிள் சங்கர் போண்றவர்கள் விடை பெற்றார்கள்..

என்னவோ தெரியவில்லை இந்த சந்திப்பில் திடிர் அறிமுகமாய் மருத்துவர் புருனோவோடு நான் அதிகம் நட்பு பாராட்டினேன்... அப்புறம் அவரரைசென்னை மருத்துவக்கல்லூரியில் அவர் அறையில் விட்டு விட்டு, விருந்தோம்பலாய் தண்ணீர் காரசேவ் கொஞ்சம் சாப்பிட்டு விட்டு, சில பதிவர் கைபேசி எண்கள் வாங்கி கொண்டு, பூந்த மல்லி சாலையில் இரவு பத்து மணிக்கு வண்டியில் வேகம் கூட்ட சில்லென காற்று முத்த மிட்டது

எவ்வளவுதான் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் நேரில் பார்க்கும் போது நட்பு பாராட்டவதும், அப்த ரெக்கர்ட் விஷயங்கள் மனம் விட்டு பேசவும், நம் கருத்துக்களை எந்த சோடைனையும் இன்றி பறிமாறவும் வலைபதிவர் சந்திப்பு வாரா வாரம் நடத்தபட வேண்டும்

வாரா வாரம் பதிவர் சந்திப்பு நடத்தலாம். நானும் கலந்து கொள்ளலாம் ஆனால் என் மனைவி பத்திரக்காளியாக மாறி விடுவாள்...காளி வேஷத்தை விட என் மனைவிக்கு மதுரை மீனாட்சி வேஷம் மிக பொறுத்தமாய் இருக்கும் அதனால் பாத்து செய்யுங்க... அதே போல வாரா வாராமான்றதையும் முடிவு செய்யுங்க...


அன்புடன் /ஜாக்கிசேகர்

பிரபல முன்னனி கதாநாயகிகளை பாழ் படுத்திய நடிகர்???


பிரபல கதாநாயகிகள் பல படங்களில் நடித்து பெயர் வாங்கி இருக்கிறார்கள் அவர்கள் நடித்த பல படங்கள் வெற்றிப்படமாகவும் அமைந்து இருக்கின்றன.. அதில் ஒரு சில படங்கள் 100 நாட்களை கடந்த படங்கள் ....அந்த பபிரபல நடிகைகள் மற்றும் படங்கள் கீழே....

நயன்தாரா .........சந்திரமுகி, பில்லா.
ஜெனிலியா.........சந்தோஷ் சுப்ரமணியம்
சிம்ரன் ..............வாலி
ஸ்ரேயா...................சிவாஜி
ரீமா சென்.............. மின்னலே
சினேகா..................வசூல் ராஜா
திரிஷா.......................சாமி
மீரா ஜாஸ்மீன்.........ரன்

மேலுள்ள படங்கள் எல்லாம் 100 நாட்கள் வெற்றிக்ரமாய் ஓடியவைஇப்போது இதே நடிகைகள் நடித்த பிளாப் படங்களை இப்போது பார்க்கலாமா?

நயன்தாரா..................... வில்லு
ஜெனிலியா....................சச்சின்
சிம்ரன்..............................உதயா
ஸ்ரெயா..........................அழகிய தமிழ் மகன்
ரீமா சென்.......................பகவதி
சினேகா .........................வசிகரா
திரிஷா ..........................ஆதி , குருவி
மீரா ஜாஸ்மீன்............புதிய கீதை


மேலுள்ள நடிகைகள் மார்கெட்டை டவுன் செஞ்சது
ஒரே ஒரு ஆள்தான் அவருதான் நம்ம கீரேட் டாக்டர்இளையதளபதி விஜய்...


எதாவது கிசு கிசு இருக்கும்னுதானே வந்திங்க... மாமா பிஸ்கோத்து.....


அன்புடன்/ஜாக்கிசேகர்

கணத்த இதயத்துடன் இந்த படங்களை பாருங்கள் பதிவர்களே, பாவம் அந்த பெண்...










குறிப்பு...

சிலர் இந்த பாடத்தை பார்த்து இதழோரத்தில் புன்னகையை வரவைக்கலாம் ஆனால் ரஜினி கமலை விட தலைவருக்க ஒரு பெரும் சிறப்பு இருக்கின்றது... அறிமுகப்படத்தில் இருந்து 48 படங்கள் வரை கதாநாயகனாகவே நடித்து வந்து இருக்கிறார் என்பது குறிபிடத்தக்கது... இது தமிழ்நாட்டில் எந்த நடிகருக்கும் கிடைக்காத பேரு....

இன்னும் இரண்டு படங்கள்தான் இருக்கின்றன 50 என்ற இலக்கத்தை எட்ட அதுவரை தமிழ்நாடு தாங்குமா?

அன்புடன் /ஜாக்கிசேகர்

ஈழத்தழமிழருக்காக ஒரு நாள் வேலை நிறுத்தம் சென்னையில் வெற்றியா????

( ரோகினி தியேட்டர் பூந்த மல்லி ரோடு)

எதை தின்னால் பித்தம் தெளியும் என்று தெரியாததால் கலைஞர் இன்ஸ்டன்ட் பந்த் அறிவித்தார். இன்று காலை பல இடங்களில் கடைகள் திறந்து இருக்க வில்லை, அத்தியாவசிய பொருள் பால் மட்டும் ஜரூராக விற்பனை ஆனது...

சென்னையில் மெயின் ரோட்டில் இருந்த கடைகள் அனைத்தும் மூடியிருந்தன, கிளைச்சாலைகளில் இருந்த சிறு கடைகளில் பக்கத்து வீட்டு செங்கேனி அக்காவின் அவசரத்தேவையான கடுகு உளுத்தம் பருப்பு பிரச்சனைகள் சிறு கடைகள் மூலம் நிவர்த்தி செய்யப்பட்டன.


எந்த நேரமும் திறந்து இருக்கும் இட்லி மாவு கடைகள் மூடப்பட்டு இருந்தன பெட்ரோல் பங்குகள் திறந்து இருந்ததால் இரு சக்கர வாகனங்கள் சிரமம் இல்லாமல் ஓடின...


என் நண்பர் நெல்சன் பள்ளிக்கரனை கிரஹபிரவேசத்திற்க்கு போய் ஆட்டோக்கள் சொத்தை எழுதி கேட்ட காரணத்தால் 30 ரூபாய் கொடுத்து 17 பேர் வரும் ஷேர் வேனில் 30 பேர் வியற்வை நாற்றத்துடன் தி நகர் வந்து சேர்ந்தார்களாம்....
பாருங்க சார் இப்படி திடுதிப்புன்ன பந்த அறிவிச்சதால என்பாடுல்லாம் இன்னைக்கு நாய் பொழப்பா போச்சு என்ற அலுத்துக்கொண்டார்... இதனாலே கலைஞருக்கு நிச்சய்ம் ஓட்டு குறையும் பாருங்க என்று ஆருடம் வேறு சொன்னார்..

( ஈகா தியேட்டர் எதிர் பாலம்)

மதியம் டீயும் பொறை கூட சாப்பிட வழியில்லாமல் அலையும் போது என்வாழ்க்கையில் காலையில பிஸ்கெட் சாப்பிட்டு உயிர் வாழ்ந்தது இன்றுதான் என்றார் என் நண்பர் சகாதேவன் ...

எக்மோரில் எங்கு தேடியும் சாப்பாடு கிடைக்காததால் ஒரு சந்து கடையில் ஆயா ஒன்று வடை சுடாமல் தக்காளி சாதம் விற்றது... அது எல்லோருக்கம் மெக்கனஸ் கோல்டு கிடைத்த சந்தோஷத்தை கொடுத்தது...
( ஏக்மோர் மேயர் ரோடு சந்திப்பு)


பசியில் வாயில் சோறு வைத்துக்கொண்டு என் நண்பர் செந்தில் சொன்னார் நமக்கு ஒரு வேளை சாப்பாட்டுக்கே கண்ணை கட்டி காட்டுல விட்டா மாதிரி இருக்கே பல மாசமா காட்டுல குடும்பத்தோட வாழற ஈழத்தமிழரை நினைச்சா மனதுக்கு ரொம்ப கஷ்டமா இருப்பதாக சொன்னார், பசி மயக்கத்தில் அதை எல்லோரும் உணர்நது ஆதரித்தோம்... ( ஷாப்பர்ஷாப் சிக்னல்)


எங்கும் ஆட்டோக்கள் ஓடவில்லை, ஒடிய ஒரு சில ஆட்டோ டிரைவர்கள் ராஜபக்ஷேவைவிட மிக கேவலமாக நடந்து கொண்டார்கள்...

மாநகர பேருந்துகள் ஒரு பேருந்து கூட கண்ணில் படவில்லை அவர்கள் மிகத்தீவிரமாக இருக்கின்றார்கள் போலும்?...
( ஹரிங்டன் ரோடு வெறிச்சோடிய ஷாப்ர் ஷாப்)

எப்போதும் டி ஷர்ட்டில் மிதமிஞ்சிய மார்புடன் காணப்படும் ஹாரிங்ட்டன் ஷாப்ர் ஷாப் எந்த கலர்களும் இல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டது.


பொது மக்களை இந்த பந்த் அதாவது அன்றாடம் காட்சிகள் என்று சொல்லப்படும் பொது மக்களை இந்த வேகாத வெயி்லில் காட்சி எடுத்துவிட்டது என்பதுதான் உண்மை....


எல்லாக்கடைகளும் மூடப்பட்டு இருந்தன அரசின் நேரடி கஜானாவான டாஸ்மார்க் மட்டும் இல்ங்கை தமிழர் பற்றி கிஞ்சித்தும் கவலை கொள்ளாமல் காலையிலே திறந்து விட்டது ... (மதுரவாயல் அருகே ஒரு..........)

தமிழக குடி மகன்கள் எல்லோரும் ஒரு கட்டிங் போட்டு விட்டு 40 ரூபாய்க்க சிக்கன் லெக் பீஸ் சாப்பிட்டு ஈழத்தமிழர்களுக்கான போர் நிறுத்த எதிர்ப்பை பதிவு செய்தார்கள்


அன்புடன்/ஜாக்கிசேகர்

சீக்கியரின் மயிரை விட மதிப்பற்றதா? தமிழனின் உயிர்....


நேற்று காலை முதலே தமிழகம் எங்கும் உலவும் குறுந்தகவல் இது...
பிரான்ஸ் நாட்டில் சில மாதங்களுக்கு முன்பு சீக்கியர்கள் டர்பன் அணிந்து நடந்து சென்ற போது தீவிரவாதிகள் என்று சொல்லி தேடித் தேடி அடித்து துவைத்தனர் சீக்கியர்கள் டர்பன் அணிந்து வெளியே சென்றால் உதை நிச்சயம் என்று தெரிந்ததும் அவர் இனத்தை சேர்ந்த பிரதமர் மன் மோகன் சிங் உடனே பிரான்ஸ் அரசாங்கத்துக்கு போன் செய்து
( அப்போது தந்தி வேலை செய்யவில்லை இல்லையென்றால் அதைதான் அவர் அடித்து இருப்பார்) நம்ம பசங்க உங்க நாட்டுல ஊடு கட்டி உதை வாங்குறானுங்க...
நம்ம ஊர்ல நம்ம இன பசங்களுக்கு மில்டிரியிலேயே தலையில டர்பன் கட்டிக்கலாம்னு விதிவிலக்கும் உண்டு .... அந்த ரூல்சை நான் அங்க எதிர்பார்க்க முடியாது..

நம்ம பயலுவ உதை வாங்கனதை கேட்டதும் என் ரத்தம் கொதிச்சிடுச்சி இல்லை அது கூட பரவாயில்லை டர்ப்னை கலைச்சி உட்டா அத கட்றதுக்கு மாமங்கம் ஆவும் அதனாலை நம்ம பயல்களை உதைவாங்கமா பார்த்துக்கோங்க... அதுவும் உடனே போன் அடிச்சி பேசினாங்க...

நாம என்னதான் இங்க மனித சங்கிலி பந்த்ன்னு போராட்டம் நடடத்தினாலும் நம்ம சிங் கண்டுக்கவே மாட்டேன்குறாறு... கேட்டா புலம் பெயர்த தமிழர்கள் என்று சொல்லவார்கள் அப்ப சீக்கிய பசங்க புலம் பெயராமலா போனாங்க?


அதாவது உதை வாங்குனதுக்கே உடனே போன்...

இலங்கையில் அப்பாவி மக்கள் கொத்துக்கொத்தா சாவும் போது கூட வண்மையா? கண்டிக்கிறேன் அறிக்கை விடுகிறார் அவ்வளவுதான். அந்த அறிக்கை கூட இரண்டாம் கட்ட தலைவர்கள் மூலமாதான் வெளிவரும்...

எனக்கு நேற்று வந்த குறுந்தகவலின் செய்தி இதுதான்

சீக்கியரின் மயிருக்கே( டர்பன் அணியும் உரிமைக்கெட்டு) பிரான்ஸ் அரசிடம் பேசிய மன்மோகன் சிங் ஈழ தமிழர்களின் உயிர்களுக்காக சிங்கள அரசிடம் பேச மறுப்பது ஏன்? சீக்கியனின் மயிரை விட மதிப்பற்றதா தமிழனின் உயிர்?... உணர்வுள்ள ஒவ்வோறு தமிழனுக்கும் இது போய் சேரட்டும்....




இந்த குறுந்தகவலுக்கு எனது கோபமான பதில் கீழே...

ங்ங்ங்கோத்தா? அவன்களுக்குள்ள ஒத்துமை இருக்கு அதுக்காக மயிர் மேட்டருக்கே கொதிச்சி போயிடறானுங்க நமக்கு???????????????


அன்புடன்/ஜாக்கிசேகர்

சவ ஊர்வலத்தில் அநாகாரிகமாக நடந்து கொண்ட ரவுடிகள்...


மிகச்சரியாக ஒரு மணிநேரம் எழு நிமிடங்களுக்கு முன்பு தமிழ் நாட்டின் தலைநகரம் சென்னையின் பிரதான சாலையான நெல்சன் மாணிக்கம் ரோட்டில் இருந்து அந்த சவ ஊர்வலம் பூத்மல்லி சாலையில் அபபோதுதான் திரும்பி இருந்தது, அப்போது நான் எக் மோரில் இருந்து மதுரவயல் நோக்கி வந்து கொண்டு இருந்தேன்.

வழக்கமான சவ ஊர்வலம் போல் இல்லாது மிக அமைதியாக போய் கொண்டு இருந்தது. வேட்டு சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டு இருந்தது, சவ ஊர்வலத்தில் இருக்கும் பினம் ஆனா? அல்லது பெண்ணா? தெரியாது. ஆனால் சாலை முழுவதும் பூக்கள் இறைந்து கிடைந்ததை வைத்து அது பெரிய சாவு என்பதை புரிந்து கொண்டேன்...

அண்ணா நகர் ரவுண்டான சிக்னல் அருகே சிக்னலுக்காகபஸ் மற்றும் இருசக்கர வாகனங்கள் நின்று கொண்டு இருந்தது... அபபோது சவ ஊர்வலத்தின் முன்னே சென்று கொண்டு இருந்த தமிழ் சினிமா வெள்ளை டாட்டா சுமோ ரவுடிகள் போன்ற எட்டு பேர் பிணத்தின் மீது இருந்த மாலையில் இருந்த பூக்களை எடுத்து அருகில் இருந்த எல்லோர் மீதும் வீசத்துவங்கினார்கள்...

இதில் கொடுமை பேருந்து ஓரத்தில் உட்கார்ந்து இருந்த பெண்கள்தான் அவர்கள் முக்கிய குறியாக இருந்தது, சாஸ்த்திரி பவனிலும் டி எம் எஸ்லிலும் வேலை முடிந்து வரும் வழியில் ஸ்பெஷல் கிளாசில் இருந்த பெண்ணையும் அழைத்துக்கொண்டு வரும் மாமிகள் மேல் எல்லாம் பிணத்தின் மீது இருந்து எடுத்த பூக்களின் அர்ச்சனையை திறம்பட செய்தான் ஒருவன்...

அவர்கள் என்ன செய்வ்து என்று ஒரு நிமிடம் திகைத்து அதன் பிறகு தலையில் அடித்துக்கொண்டு நகர்ந்தார்கள்

டூவிலரில் இருந்த பெண்கள் நிலைதான் ரொம்ப கொடுமையாக இருந்தது, போலிஸ் எந்த இடத்திலும் தென்படவில்லை.. எல்லோருத் தண்ணியில் மிதந்து கொண்டு இருந்தார்கள் நான் எனது டூவிலரை ஒரு ஜீக்ஸ் பெண்ணின் டூவிலர் பக்கத்தில் நிறுத்தி அவளுக்கு பாதுகாப்பு கொடுத்தேன்... சட்டென வந்து போதையில் வந்து பிணத்தின் மாலையை அவள் கழுத்தில் போட்டு வெறி குத்தாடினாலும் அச்சர்யபடுவதற்க்கு இல்லை




எல்லோரும் அந்த இடத்தை விட்டு வேகமாக செல்லதுடித்ததில் இரண்டு டுவிலர்காரர்கள் இடித்துக்கொண்டு சின்ன சண்டை வேறு நடந்தது. பேருந்தில் ஓரத்தில் உட்கார்ந்து இருந்த பெண்கள் வீட்டுக்கு போய் குளிக்க வேண்டிய கோபத்தில் மென்று விழிங்கினர்...

சாமி வீதி உலாவில் வரும் உற்சவர் பிரசாத பூக்களை போல் எல்லோர்மீதும் வீசினார்கள் எல்லாவற்றையும் விட உச்சக்கட்ட கொடுமை ஒரு குளிருட்டப்ட்ட கடையை திறந்து அதனுள் முழு பினத்தின் மீது போட்ட மாலையை வீசினான்...

பால்கானியில் நின்று ரைட்ரயலாக வேடிக்கை பார்த்த குடும்பத்து பெண்களும் தப்பவில்லை என்பதுதான் அவர்கள் மீதும் பாரதிராஜா படம் போல் பூக்கள் அர்ச்சனை நடந்ததுதான் உச்சகட்ட கொடுமை...

அந்த சவ ஊர்வலத்தை கடந்து போக பஸ்கள் எல்லாம் வலைந்து நெளிந்து தலை தெறிக்க ஒடியது ரொம்ப கொடுமையாக இருந்தது...


நாம் எப்போது திருந்த போகிறோம் சுதந்திரம் என்பது அடுத்தவன் மூக்கு நுனிவரைதான் என்பதை எப்போது உணர போகின்றோம்...
இன்றைக்கு நடந்து செயல் அந்த பக்கம் சென்ற அத்தனை பேர் மூக்கிலும் மொடக் என்று ஒரு குத்து குத்தி ரத்தம் வழிந்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியது எனக்கு அந்த feeling இருந்தது..

வீடு வந்த பிறகும் இன்னும் அந்த ரத்த வாசனையும் பிசு பிசுப்பும் என்னால் உணர முடிகின்றது....

அன்புடன் /ஜாக்கிசேகர்

வை கோ என்ன செய்து இருக்க வேண்டும்???


தாய் கழகமான திமுகழகத்தில் பிரச்சனை அதனால் வெளி வந்தார் பல உயிர்கள் பலி ஆகின அதன்பிறகு புதியதாக மதிமுக என்ற கட்சி துவங்கப்ட்டடது... இது நாம் அனைவரும் அறிந்த விடயம்தான் ....

உயிர் வாழ தகுதி உடையதாக மாறும் போது ஜாக்கிசேகர், கலைஞர், வைகோ எல்லாம் ஒன்றுதான் அதன் பிறகுதான் மனிதாபிமானம், கண்ணியம், போன்றவைகள்...

தனித்த போட்டி என்ற நிலைப்பாட்டை எடுத்து அவர் கட்சியினரை ஆரம்ப கட்டத்தில் சோர்ந்து போக செய்தார், அதன் பிறகு களம் கண்ட பாமக, மக்கள் தொலைக்காட்சி, அச்ரப்பாக்கம் அருகே ஆர்ட்ஸ்அண்டு சயின்ஸ் காலேஜ், தினப்பத்திரிக்கை,மாதப்பத்திரிக்கை என்று வளர்ந்து விட்டது...


பாமக வுக்கு தெரியும் தனித்த நிலைப்பாடு என்பது இப்போதைய தமிழக அரசியலில் தம்படி பெறாத விஷயம்... அதுகளம் கண்ட ஜெவுக்கும் கலைஞருக்கும் மிக நன்றாகவே தெரியும்...


அவர் ஏதாவது கட்சியுடன் அப்போதே கூட்டனி அமைத்து இருக்க வேண்டும், காரணம் மக்களின் மறதி.... கலைஞர் துரோகம் செய்து விட்டார் அதனால் உயிர் பலி அதனால் மதிமுக பிறந்தது என்று இப்போது எவருக்கும் தெரியாது....

அதே போல் தமிழக மக்கள் விட்டை விட்டு ஓட்டுபோட போக வேண்டும் என்றால் எதாவது வலுவான காரணங்கள் தமிழகத்தில் நடந்து இருக்க வேண்டும்...

அதாவது ராஜிவ் காந்தி இறந்து இருக்க வேண்டும். கலைஞர் கைது செய்யப்ட்டு இருக்க வேண்டும், ரஜினி வாய்ஸ் கொடுத்து இருக்க வேண்டும். அல்லது ஜெ நகைகள் டிவியில் காண்பித்து இருக்க வேண்டும்...

இப்படியெல்லாம் நடந்தால்தான் ஓட்டு சதவிகிதம் 60 பர்சென்ட்க்குமேல் தாண்டும் இல்லையென்றால் , அவ்ளவு நல்லது செய்த காமராஜரை வீட்டுக்கு அனுப்பியிருப்போமா? நாம்... இதில் சூப்பராக சூளுரைக்கும் வைகோ எம்மாத்திரம்...

பாமக ராமதாஸ், எடுக்கும் நிலைப்பாட்டை ரொம்ப லேட்டாக எடு்த்தார் வைகோ. திரும்பவும் பொடவில் கைது செய்யப்ட்டு பாசிச வெறி பிடித்த ஜெயலலிதா என்று கழுத்து நரம்பு புடைக்க கத்தி சிறையில் இருந்து.... பூந்த மல்லி சிறையில் கலைஞரை பார்த்து கட்டி பிடித்து அழுது, தேர்தல் களம் கண்டு திரும்பவும் ஜெவிடம் கூட்டனி கண்டதை மக்கள் ரசிக்கவில்லை...

வைகோ நல்ல பேச்சாளர் , தோளில் தொங்கும் விழாத துண்டை எடுத்து எடுத்து போட்டு பேசும் பாடி லாங்வேஜ் எல்லாம் இன்றைய எந்த அரசியல் தலைவரிடமும் காணக்கிடைக்காதவைகள்... நல்ல உணர்ச்சி பேச்சாலன், ஹிட்லர் போல் சூளுரைப்பதில் வேகம், தமிழர் பாதுகாப்பில் தமிழர் விடுதலையில் காட்டும் கோபம் எல்லாம் இருந்தும் அவர் வளரவில்லை காரணம்?.

திரும்ப தாய் கழகமான திமுகாவில் போய் சேர்ந்ததும், எனெக்கென்ன என்று இப்போது ஜெ யோடு கூட்டனி வைத்துக்கொண்டு எப்படி இருக்கின்றாரோ அதே போல் அப்போதும் அங்கே இருந்து இருக்க வேண்டும்.

ஏனென்றால் கலைஞருக்கு பிறகு என்ற கேள்வி திமுகாவில் வரும் போது அங்கே வைகோ அளவுக்கு பேச வேற யாரும் இல்லை... ஸ்டாலி்ன் என்னதான் அடுத்த கட்ட தலைவராக பிரகடனப்டுத்தி இருந்தாலும் அந்த ஆளுமை, வெறிப்பேச்சு அவரிடம் இல்லாதது போல் தெரிகின்றது...

பேச்சை வைத்தும் அட்சியை பிடித்த திமுகழகம் என்பதை எவரும் எளிதில் மறக்கவும் மறுக்கவும் முடியாது...

கொக்கு மீனுக்கு காத்து இருப்பது போல் தாய் கழகத்தில் சேர்ந்ததும் வைகோ காத்து இருந்து இருக்க வேண்டும்... அவருக்கு தமிழகத்தில் நல்ல இடம் வரலாற்றில் கிடைத்து இருக்கும்

எளிதில் உணர்ச்சிவசப்படும் வைகோ போன தேர்தலில் உணர்ச்சிவசப்பட்டுவிட்டார்... அதை இப்போது அனுபவிக்கின்றார்....

அன்புடன்/ஜாக்கிசேகர்

தாம்பூலம் என்றால் நிஜாம் பாக்கு கிரிக்கெட் என்றால்..?.



(குறிப்பு...)
மந்தரா பேடி அம்மா முதல்ல டிவி சீரியல்ல தலைய காட்டுனவங்க, அப்புறம் அண்ணி அக்கான்னு குணச்சித்திரம் காட்டுனாங்க...அதன் பிறகு செட் மேக்ஸ்ல உலக கிரிக்கெட் போட்டிக்கு இதைவிட திறந்த மனதா சேலையில வந்தாங்க...
அன்னிக்கு பிடிச்ச சனியன் புடிச்ச மந்தரா பேடி குளிர் சொரம் இன்னைக்கும் நமக்கு விட்டு போகலைங்க.... எனக்கு கிரிக்கெட்னா அவிங்கதான் ஞாபகத்துக்கு வர்றாங்க என்ன செய்யறது

இந்த போட்டோவுக்கு போஸ் கொடுத்தது எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்தான் என்பது இனைப்பு செய்தி....


இப்பெல்லாம் கிரிக்கெட் பால் எடுத்து விளையாடஎனக்கு மனசே வர்றது இல்லை.... நீங்களே சொல்லுங்க... எப்படி விளையாட முடியும்?


அன்புடன் /ஜாக்கிசேகர்

மனதை கவர்ந்த சென்னை காசி தியேட்டர் ஓனர்...



நானும் என் மனைவியும் படம் பார்த்து பல நாட்கள் ஆகின்றன காதலித்த போது பார்த்த படங்கள் ஏராளம் ஆனால் திருமணம் ஆனதும் பார்த்த படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்,பார்க்க நேரம் அமையவில்லை, அப்புறம் கண்ணை கட்டும் டிக்கெட் விலை.

ரொம்ப நாளைக்கு பிறகு அயன் படம் பார்க்கலாம் என்று எண்ணி படம்பார்க்க நானும் என் மனைவியும் காசி தியேட்டர் சென்றோம், காசி தியேட்டர் பற்றி என் சொந்த ஊர் கடலூரில் நான் சிறு வயதாக இருக்கும் போதே கேள்வி பட்டு இருக்கிறேன். அப்போது என் மாமா குடும்பம் மொத்தமும் விஜய் அப்பா சந்திர சேகர் இயக்கி நடிகை ராதிகா நடித்த நீதி்க்கு தண்டனை படம் பார்க்க போய் சின்ன பசங்களான என் மாமா பசங்களை தியேட்டருக்குள் அனுமதிக்க வில்லை. ஏனென்றால் அது ஏ சர்டிபிக்கேட் படம். நம்ம ஊரில் அந்த கதையெல்லாம் கிடையாது. அப்போதே அந்த தியேட்டர் பற்றி பிரமாண்டமாக நினைத்து இருக்கிறேன்

அதன் பிறகு சென்னை வந்து பல தியேட்டர்கள் பார்த்தாகி விட்டது, சென்னை வந்து காசி தியேட்டரில் கூட சேது படம் பார்த்ததாக ஞாபகம் அப்போது அந்த தியேட்டரின் ஸ்கிரின் ரொம்பவும் சின்னதாக இருந்தது அதன் பிறகு அன்பே சிவம் பார்த்த போது அந்த தியேட்டர் தன் முகத்தை மாற்றிக்கொண்டு விட்டது. டாய்லட்டுக்கெல்லாம் டைல்ஸ் போட்டு பெரிய திரை அமைத்து டிடிஎஸ் சவுண்டு எல்லாம் போட்டு பக்காவாக மாறி விட்டது. சமீபத்தில் நான் அந்த தியேட்டரில் நான் பார்த்த படம் வேட்டையாடு விளையாடு...


நான் நேற்று மாலை சென்னை காசி தியேட்டர் சென்றேன்
டிக்கெட் முடிந்து விட்டது... இருப்பினும் நான் மனைவியுடன் சென்றதால் நிறுத்தி வைத்த இரண்டு டிக்கெட்டுகள் கொடுத்தார்கள்.... அயன் படம் பார்க்க இரண்டு பாக்ஸ் டிக்கெட் எடுத்து உள்ளே சென்றால் அந்த பாக்சில் டிடிஎஸ் சவுண்ட் சரியாக கேட்கவில்லைஆனால் நான் தரை டிக்கெட்டில் கூட படம் பார்க்க தயார்.

தியேட்டர் ஹவு்ஸ்புல் ஆகிவிட்டதால் அது சாத்தியம் இல்லை என்பது எனக்கு தெரியும்.... இருந்தும் நான் டிக்கெட் கிழிப்பவரிடம் அரை மணி நேரத்தில் புக்கிங் குளோஸ் ஆகிவிடும் அப்போது வேறு எங்காவது இரண்டு சீட் காலியாக இருந்தால் அதில் உட்கார அனுமதி கேட்டேன்..... அவர் சூப்பரவைசரிடம் அனுமதி கேட்கச்சொன்னார். படம் அங்கே ஓடிக்கொண்டு இருந்தது.

சூர்யா பள பளக்கும் பகலா நீ பாட்டில் தெலுங்கு காஸ்ட்யுமில் டான்ஸ் ஆடிக்கொண்டு இருந்தார்.

சூப்பரவைசரிடம் கேட்டேன்....

“ அவர் கொடுத்த சீட்டு கொடுத்ததுதான் நீங்கள் அங்கேதான் உட்கார வேண்டும்”
என்று என்னை ரொம்ப கேவலமாக பார்த்து கத்தினார். அவர் தன்னை அமெரிக்கா நாசாவில் வேலை பார்ப்பதாக நினைத்து நடந்து கொண்டார்.

சார் சீட்டு ஏதாவது இருந்ததா கண்டிப்பாக உட்கார அனுமதிக்கிறேன் என்று அவர் சொல்லி இருக்க வேண்டும். அதுதான் அவர் வகித்த பதவிக்கு அழகு. என்னை போன்ற பார்வையாளர்கள் சென்றால்தான் அது காசி தியேட்டர் இல்லை என்றால் காசி கல்யாண மண்டபம் ஆகிவிடும். என்பதை அவர் மறந்து விட்டார்.


நான் நிர்வாகியை பார்க்க வேண்டும் என்று சொன்னேன் அந்த நேரத்தில் எனக்கு டிக்கெட் கொடுத்தவரே தீயேட்டர் ஓனர் சுப்ரமணி என்பதை அறிந்தேன் அவரிடம் அவர் சூப்பர்வைசர் எகிறியதை சொன்னேன்.

பார்வையாளரிடம்அவர் நடந்து கொண்ட விதத்தை சொன்ன போது அவர் சொன்னார் ஒன்னு புரி்ஞ்சிக்கோங்க இந்த வேலைக்கு படிச்சவன் எவனும் வேலைக்கு வர மாட்டேங்குறான். அப்படி வந்தாலும் காலையில 9 மணிக்கு வந்து 7 மணிக்கு வீட்டுக்க போக துடிக்கிறான்
காலையில10 மணிக்கு வந்து நைட் 12 மணிக்கு மேல போகற வேலை இது... இந்த மாதிரி ஆட்கள்தான் கிடைக்கிறாங்க.. நான் என்ன செய்ய? அவர் அப்படி பேசி இருக்க கூடாது என்றார் .

டிக்கெட் குளோஸ் ஆகி உங்களுக்கு டிக்கெட் கொடுத்ததுக்கு காரணம் பேமிலியா வந்து இருக்கிங்க.. இப்பெல்லாம் பேமிலியா படம் பார்க்க வர்றவங்க கம்மியாகிட்டாங்க...ஒரு பேமிலி படம் பார்க்க வந்து திரும்பி போனா அடுத்து அவுங்க படம் பார்க்க எப்படியும் 2 மாசம் கழிச்சிதான் வருவாங்க...
அதனால எந்த புது படம் காசியில வந்தாலும் 50 டிக்கெட் நிறுத்தி வச்சு பேமிலியா வர்றவங்களுக்கு கொடுத்து என் தியேட்டரை ஆறுமாசமா டெவலப் பண்ணி வச்சு இருக்கேன் என்றார். இது எவ்வளவு பெரிய விஷயம். அவர் சொன்னது போல் பால்கனி முழுவதும் நிறைய குடும்பத்தினரை காண முடிந்தது.
உங்களுக்கு நைட் ஷோவுக்கு டிக்கெட் மாத்தி தர்ரேன் என்று சொன்னார்,
நான் அவருக்கு நன்றி சொன்னேன். மனைவியோடு வீடு வந்து திரும்ப இரவு காட்சிக்கு போனோம்....


அவர் ரேஞ்சுக்கு இவ்வளவு டிடெய்ல் எல்லாம் எனக்கு சொல்ல வேண்டும் என்று அவசியம் இல்லை, அதே போல் தியேட்டரில் முன்பு போல் படம் ஓடும் போது ஏசி எல்லாம் ஆப் செய்யாமல் படம் முடியும் வரை ஏசி குறையாமல் இருந்தது.
கியுப் புரஜெக்ஷனில் படம் துல்லியமாக ஓடியது... டிடிஎஸ் சவுண்ட் ரொம்பவும் அற்புதமாக இருந்தது...

காசி தியேட்டர் ஓனர் சுப்ரமணி என் நினைவில் என்றும் இருப்பவர்.... பணம் எவரிடம் வேண்டுமானாலும் இருக்கும் அனால் ஒரு சிலரிடம் மட்டுமே பண்பை காண முடியும்.

எல்லாம் முடிந்து அயன் படம் இரவு பார்த்து விட்டு வீடு வரும் போது என்னையும் என் மனைவியும் அயன் பட இயக்குநர் கேவி ஆனந் எங்களை நன்றாக ஏமாற்றி விட்டார்....

அன்புடன்/ஜாக்கிசேகர்

உங்களால் சாத்தியமாயிற்று சொல்கிறது சன்டிவி...




நன்றி.....



எங்களால் சாத்தியமாயிற்று என்பது கொஞ்சம்தான் உண்மை... திமுக அரசின் பலமும் அறிவாலய கோட்டையில் இத்தனை நாள் வாழ்க்கை நடத்தியதே இந்த வளர்ச்சிக்கு காரணம் என்பதே அக்மார்க் உண்மை....


அன்புடன்/ ஜாக்கிசேகர்

கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (ஏடிஎம்)


கால ஓட்த்தில் காணாமல் போனவை எழுதும் போதே கால ஓட்த்தில் புதிதாய் வந்தவையையும் எழுதுவது தானே முறை அதனால் கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவைகளை எனது பார்வையில் எழுத போகிறேன்.

உலகில் மாற்றம் என்பது மட்டுமே மாறாதது என்பதுதான் உலகில் மாற்றவே முடியாத விதி.

நீங்கள் சேமிக்கும் பணத்தை பாதுகாப்பாக வைக்கும் இடம் தேசிய மயமாக்கப்ட்ட வங்கிகள்தானே அப்படி பட்ட வங்கிகளில் பணம் எடுக்க வேண்டம் என்றால் அவ்வளவுதான் எழு கடல் எழு மலைதாண்டி கிளி உயிரை எடுத்து வரும் விஷயம். அதுவும் சனிக்கிழமை என்றால் 11.30 வரைக்கும்தான் அன்னைக்கு வேற பேங்குல கூட்டம் அல்லும்.

கவுன்டரின் உள்ளே இப்படித்தான் சம்பாஷனைகள் நடக்கும்...

நங்க நல்லூர் ஒரு கிரவுண்டு இடம் இருக்காம் நீ வாங்கிக்கிறியா?

அட நீங்க வேற பையனுக்கு வாங்கின லோனே மாசம் ஆன கழுத்தை கடிக்கிது...

ஒரு காலத்துல காடா இருந்த இடம் அந்தப்பக்கம் போகவே அப்பெல்லாம் பயமா இருக்கும்

இது ஆண்களின் சம்பாஷனை...

இதுவே பெண்களின் சம்பாஷனை வேறு மாதிரியாக இருக்கும்....

“மேடம் கொஞ்சம் சிக்கரம் பணம் எண்ணி கொடுங்க மேடம்”
நான் என்ன பத்ரகாளியா பத்துக்கை இருக்க நான் மனுசி சார் அத புரிஞ்சிக்கோங்க... அவசரத்துல ஒரு நோட்டு தப்பா வந்துட்டா நீங்க நேர்மையா கொடுத்துடுவிங்கலா? பணம்சார் உங்க வேகத்துக்கு எல்லாம் என்னால ஆட முடியாது.....

பெண் ஊழியர்களையும் குத்தம் சொல்ல முடியாது ஆனால் அவர்கள் பணத்தை மிக மெதுவாக எண்ணுவார்கள்.

காலையில வேலைக்கு போகனும் என்று புருஷனிடம் கெஞ்சியும் மீறி ஏதாவது நடந்து இருக்க வேண்டும்

அது அப்பட்டமாய் வெளியே தெரியும், தலை காய்ந்தவனிடம் எல்லாம் எறிந்து விழுவார்கள் ..

“ஏன் சார் ஒரு டேட்டை கூட பில்லப் கூட செய்யாம செலனை நீட்டறிங்க”?
என்று சொல்ல டென்ஷன்ல மறந்துட்டேன் என்று இவர் தன்னிலை விளக்கம் வேறு கொடுக்க அப்புறம் சண்டை நடக்க ஒரே காமெடியாக இருக்கும்...


எல்லா குறைகளையும் தீர்க்க ஏடிஎம் வந்தது அனைவர் வயிற்றிலும் பீர் வார்த்தது...

டேட் எழுதவில்லை என்ற சண்டை இல்லை, அவசரத்துக்கு பேனா எடுக்காமல் போய் எவரிடமும் வழிய வேண்டாம். மிக முக்கியமாக 100 ரூபாய் எடுக்க கால் கடுக்க கவுண்டரில் காத்து இருக்க தேவை இல்லை...
ரெகுலர் கஸ்டமர் என்றால் கவுண்டர் பின்புறம் போய் பணம் கட்டி விட்டு வரலாம்... இங்கு அப்படி இல்லை .இது மெஷின்....


எல்லோலரயும் எண்களாக ஞாபகம் வைத்துக்கொண்டு தாள்களாக கொடுக்கும் அதிசயம்.. ராமசாமியும் ஜாபர் அலியும் இதற்க்கு ஒன்றுதான்.

என்ன ஒரு குறை ஏட்டிஎம்மில் பணம் எடுத்து பர்ச்செஸ் போகலாம் என்று கையில் 100 வைத்துக்கொண்டு ஏட்டிஎம் சென்றால் நெட் ஒர்க் பெயிலர் நியரஸ்ட் ஏட்டி்எம்முக்கு செல்லவும் அங்கு சென்றால் இதே நிலமைதான்.

எவனோ ,

“உன் பணத்தை உன் முகத்துல இன்னும் பத்து நிமிஷத்துல வீசி எறியறேன் இல்லைன்னா நான் ரத்ன வேலுக்கு பொறக்கலடா”

என்று தொடை சவால் வீட்டு பணம் எடுக்க ஏடிஎம் வந்து நெட் ஒர்க் பெயிலியர் என்றால் எவ்வளவு ஆத்திரம் வரும் விளைவு


வடபழனி கே கே நகர் அசோக் பில்லர் கனாரா பேங்க் ஏடிஎம் டிஸ்பிளேக்களில் கோப முத்திரையாக சாவியால் கோடு கிழித்து இருப்பதை இன்றும் காணலாம்



ஏடிஎம் என்றால் எனி டைம் மணி என்று அர்த்தம்.....

எனது ஏடிஎம் கவிதை....




ஒவ்வோறுமுறை ஏடிஎம்மில்
பணம் எடுக்கும் போதும்
எடுக்கும் தொகையை விட
ஒருதாளாவது அதிகம்
இருக்கும் என்று
திரும்ப திரும்ப
சலிக்காமல் இன்றுவரை
எண்ணுகிறேன்....

என்ன செய்வது அது
என்னை விட பெரிய பிராடு போலும்...


அன்புடன்/ ஜாக்கிசேகர்

கோடைக்கு குளு குளு கிளாமர் படங்கள்...

தினமும் பல்லாயிரக்கணக்கான படங்கள் ஈ மெயி்லில் நிறைய வருகின்றன, நான் என்ன செய்கின்றோம் படிக்கின்றோம் டெலிட் செய்கின்றோம், அப்படி செய்யாமல் நான் ரசித்ததை உங்களுக்கு அன்ன பறைவை போல் கொடுக்க இருக்கிறேன். உலகில் ஏதோ ஒரு பகுதியில் அல்லது கணத்தில் நடந்த படங்களை உங்களுக்கு தருகிறேன்....












அன்புடன் /ஜாக்கிசேகர்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner