இறையான்மை என்றால் என்ன? அந்த வார்த்தையை வைத்து எப்படி பொழப்பு நடத்தலாம்.


எழுத்தாளர் பட்டு கோட்டை பிரபாகர் அவர்கள் தொட்டால் தொடரும் என்ற அருமையான நாவலை எழுதினார் அதன் ஒவ்வோரு அத்தியாயத்திலும் காதல் என்பது என்று எழுதி விட்டு எதாவது எழுதுவார்

(உம்)
காதல் என்பது
வாயில் பிரஷ்உடன் கனவு கான்பது
காதல் என்பது
தபால்காரர் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருப்பது என்று எழுதி இருப்பார்

அது போல் இந்த இறையான்மை பற்றி எழுதினால் நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன்


இறையான்மை என்பது

1, அது பிங்பேக் தியரிபோல் புரியாதது.

2,அது காங்கிரஸ்காரர்கள் மட்டும் குத்துகை எடுத்து கொண்டு இருக்கும் சொல்.

3, இனி வரும்காலங்களிலும் அதை வைத்து காங்கிரஸ்காரர்கள் பிழைப்பு நடத்த
உதவ வேண்டிய சொல்


4 , காங்கரஸ்காரர்களான ஞானசேகரன் தங்கபாலு போன்றவர்கள் அந்த வார்த்தையை பயன் படுத்தியே பிழைப்பு நடத்தி பிழைக்கும் நாதியற்றவர்கள்.

5, இந்தியா, பங்களாதேஷ் தேசத்தில் மட்டும் காற்றில் பறக்க விட்ட சொல்.

6, இந்தியா டுடே மற்றும் தினமலர் இந்த இரண்டு பத்திரிக்கைகள் மட்டுமே அந்த சொல் படி நடப்பவை.

7, சுப்ரீம் கோர்ட் சொல்லியும் காவிரியில் கர்நாடக ஜலம் விடாததை பற்றி மேலுள்ள இரண்டு பத்திரிக்கைகளும்இந்திய இறையாண்மை பற்றி அலட்டிக்கொள்ளாதவை.

8,இறையான்மை மீறிய வைகோவை கூட்டனியில் வைத்துக்கொண்டே கைது செய்ய சொல்லி அறிக்கை வி்ட்டு தள்ளும் ஜெயலலிதா மிகவும் பாரட்டத்தக்கவர்.

9,இறையான்மை பற்றி பேசிக்கொண்டே இருக்கும் ஜெயலலிதா அரசு நிலமான டான்சி நிலத்தை வாங்கி நீதி மன்றத்தால் கண்டடிக்கப்பட்ட போது இந்திய இறையான்மையை காற்றில் பறக்க விட்டவர்

10, அந்த கட்சி எம் எல் ஏ எஸ்வி சேகர் இந்திய இறையபண்மையின் ஓட்டு மொத்த குத்தகைதாரர்.


11,சோ ராமஸ்சுவாமி இறையான்மை முகத்தில் முழிப்பார், இறையான்மையால் பல்துலக்குவார், இறையான்மை பெட்ஷீட்டால் போர்த்தி கொண்டு தூங்குபவர்.

12,நாம் போன்ற சாதரண மனிதாகள் எல்லாம் இறையான்மை சொல்லை உச்சரிக்க லாயக்கற்றவர்கள்

13, அது ஹிண்டு பேப்பர் வாசித்து ஐஐடியில் கோர்ஸ் முடித்து அடுத்த பிளைட்டில் அமெரிக்காக செல்லும் மேட்டுகுடி மக்கள் உபயோகப்படு்த்தும் சொல்
14, ஒரு வீட்டில் ஜெயா டிவி ஒடுகின்றது என்பதை வீட்டின்வெளியில் இருந்தே கண்டுபிடித்துவிடலாம். செய்தி நேரத்தின் போதுஇறையான்மை வார்த்தை நிமிடத்துக்கு 5முறை கேட்டால் சட்சாத் அது ஜெயாடிவிதான்.


15, இந்திராகாந்தி, எம்ஜி ஆர் போன்றவர்கள் விடுதலை புலிகளை வளர்த்து விட்டது மூலம் இறையான்மைக்கு துரோகம் செய்தவர்கள்

16,அந்த வார்த்தை பற்றி இன்னும் நிறைய எழுதலாம். ஆனால் நேரமின்மை காரணமாக பஞ்ச் டயலாக்குடன் முடிக்கிறேன்

17, இறையான்மை என்பது

பொங்கடா கொய்யாலுங்கலா வாயில் அசிங்கமா வருது.....


அன்புடன்/ ஜாக்கிசேகர்

பாகம்/5 அகதி வாழ்கை எப்படி இருக்கும்?


அகதியாக இருப்பது எவ்வளவு கொடுமையான செயல். அதுவும் கதியற்றவராக இருக்கும் போதுஇந்த படித்த நாகரிக உலகம் எப்படி எல்லாம் அந்த நாதி அற்ற கதியற்ற மனிதனை அலைகழிக்கிறது. இறையாண்மை என்ற பெயரில் அடிக்கும் கூத்துக்கள்அப்பப்பா கொடுமைடா சாமி.

அகதிகளின் வாழ்வு துயரங்களையும், அவர்களின் தாய் நாட்டு பாசத்தையும் தன் நாட்டு மக்களின் துயரம் பார்த்து ஏதும் செய்ய இயலாமல் அல்லல் படுவதும். தன் நாட்டு மொழியின் இரண்டொரு வார்த்தைகள் வெயிநாட்டுக்காரர் பேச கேட்டு புல்லரிப்பதும். தன் நாட்டு காலவரங்கள் என்று முடிவுக்கு வரும் என்று நித்தம் நித்தம் செத்து பிழைக்கும் கதியற்றவர்களின் வாழ்கை நிலை எவருக்கும் வர கூடாது.அது பற்றி இந்திய தமிழர்களுக்கு புரியாது. எனென்றால்

இந்திய தமிழர்கள் ஒருரூபாய்க்கு அரிசி வாங்கி வயிற்றை ரொப்பிக்கொள்ள முடியும்.

சுபிட்சமான வாழ்வு வாழ்வதால்
இழுப்பின் வலிகளை நம்மால் உணரமுடிவதில்லை. இரண்டு மணி நேர மின் வெட்டை நம்மால் தாங்க முடிவதில்லை. இப்படி சொல்லிகொண்டே போகலாம் .

அகதியாய் இருப்பவன் படும் பாடுகளை இவ்வளவு தத்ரூபமாக அழகாக சொன்னதில்லை என்பேன். படித்து விட்டால் பெரிய புடுங்கிகள் போல் நினைக்கும் சென்னைவாசிகளில் சிலர் இந்த படத்தை கட்டடாயம் பார்க்க வேண்டும்.
சட்டம் என்பது வேறு. மனிதாபிமானம் என்பது வேறு என்பதையும், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மனிதனின் கேள்விக்குறியான வாழ்க்கை நிலையையும் மிக அற்புதமாக எதார்தத்துடன் காட்சி படுத்தி தன் ஒரு சினிமா பிதாமகன் என்பதை நிருபித்து இருக்கிறார் இயக்குநர்ஸ்பில்பெர்க்

படத்தின்

பெயர் டெர்மினல் படம் வெளியான ஆண்டு 2004
அதே போல் படத்தின் மற்றுமொரு சிறப்பம்சம் சத்தியம். நம்மில் எத்தனை பேர் செய்து கொடுத்த சத்தியத்துக்கு விசுவாசமாய் இருக்கிறோம்

விதி படத்தில் மேட்டர் முடிந்த உடன் பூர்ணிமா மோகனிடம் அப்ப நீங்க செய்த சத்தியம்?
சத்தியம் சக்கரை பொங்கல் வரட்டுமாடி பேதை பெண்ணே என்று மோகன் சொல்லுவார் இந்திய அரசியல் வாதிகள் சத்தியமும் சக்கரை பொங்கல் வகையை சார்ந்ததே.

படத்தின் கதையின் நாயகன் விக்டர் நவோஸ்கி (டாம்ஹாங்ஸ்)தன் தந்தைக்கு செய்து கொடுத்த சத்தியத்துக்காக நாயாய் பேயாய் அலைவதும் ரொம்ப அற்புதமாகஅதன் அழகியல் மாறாமல் இயக்கிஇருக்கிறார்

விக்டர் நவோஸ்கி எனும் ஒருவன் ரஷ்யாவில் துண்டாடபட்ட நாடான க்ரோக்கிஷியாவில் இருந்து அமெரிக்காவின் நுயார்க் நகரில் இருக்கும் ஜான் எப் கென்னடி விமானநிலயத்தில் இறங்குகிறான் அவன் நியுயார்க் வந்ததன் நோக்கம் தன் தந்தைக்கு செய்து கொடுத்த சத்தியத்திற்க்காக நியுயார்க் நைட்கிளப்பில் ஒருவரை சந்திக்க வேண்டும் அவ்வளவே.

அவன் கென்னடி விமான நிலயத்தில் இறங்கி வெளிவருவதற்க்குள் அவன் சொந்த நாடன க்ரோக்கோஷியாவில் உள் நாட்டு கலவரம் வெடித்து அரசாங்கம் கவிழ்ந்து விடுகிறது. இதனால் அவனின் சொந்த நாட்டு வீசா செல்லாமல் போகிறது.

அவன் திரும்பவும் சொந்த நாட்டிற்க்கு போகவும் முடியாது .அங்கே கலவரம்,நுயுயார்க் நகரத்தி்லும் கால் பதிக்க முரயாது எனெனில் கலவர நாட்டின் குடிமகன் அவன்நாட்டில் அவனுக்கு கொடுத்த வீசாகொடுத்த கவர்மென்ட் கலைந்ததால் அதுவும் முடியாது.

அவன் கென்னடி ஏர்போட்டில் இருந்து வெளியே ஒரு அடி எடுத்து வைத்தால் கூட கைது செய்து சிறையில் தள்ள ரெடியாக இருக்கிறது கென்னடி ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆட்கள்.


அவன் அந்த ஏர்போர்ட்டிலேயே காலம் தள்ள வேண்டிய நிலமை. அவன் எங்கு தங்குவான் அவனுக்குஎப்படி சாப்பாடு கிடைக்கிறது அதற்க்கு அவன் என்ன என்ன காரியங்கள் செய்கிறான் என்பதை சுவைபட சொல்லிஇருக்கிறார் இயக்குநர் இதற்க்கு நடுவில் விமான பணிப் பெண்ணான காத்தரீன் ஜீட்டா ஜோன்ஸ் மீது காதல் வேறு..


படித்தவர்கள்சட்டம் இருக்கிறது என்ற காரணத்தால் எப்படி எல்லாம் ஆட்டம் போடுகிறார்கள் என்பதையும் அதிகாரவர்கத்தில்இருப்பவர்களுக்கும்கீழ் நிலை மக்களுக்கும் உள்ளஇடைவெளிகளை மிக அற்புதமாக சொல்லி இருக்கிறார்.ஸ்பில்பெர்க்

அந்த ஏர்போட்டில் காலம் தள்ளும் போது அவனுக்கு நண்பர்களாக குப்தா எனும் இந்திய கிழவர்மற்றும் சிலரும் நட்பாகிறார்கள்.

ஒரு கட்டத்தில் அந்த கென்னடிஏர்போர்ட்டில் விக்டர் நவோஸ்க்கியை தெரியாதவர்களே இல்லை என்ற நிலமை. அதே போல் எர்போர்ட் அத்தாரிட்டி ஆபிஸர் விக்டர் நவோஸ்கியை கைது செய்து கங்கனம் கட்டி அலைவது. இவ்வளவு சிக்கல்களுக்கு நடுவில்

1. விக்டர் தன் தந்தைக்க செய்து கொடுத்த சத்தியத்தை நிறை வேற்றுகிறானா?

2. விக்டர் நியுயார்க் நகரத்தில் கால் பதித்தானா?

3.விக்டருக்கும் விமானபணிப்பெண்ணுக்கான காதல் என்னவாயிற்று?

4.விக்டருக்கு அந்த ஏர்போர்ர்டில் உதவி செய்தவர்களின் கதி என்ன?

வெள்ளி திரையில் கான்க அல்லது திருட்டு டிவிடி யில் காண்க....

படத்தின் சுவாரஸ்யங்களில் சில............

ஸ்பில்பெர்க் எடுத்ததில் இதுதான் குப்பை படம் என்று விமர்சிக்கிறவர்களும் இருக்கிறார்கள். ( நம்ம ஊரில் அன்பே சிவம் படம் குப்பை என்பது போல்)

படத்தில் காட்டப்படும் ஏர்போர்ட் அத்தனையும் செட்டு போட்டு எடுத்தார்கள் என்றால் நம்புங்கள் மக்களே...( புகைபடங்கள் மேலே உங்கள் பார்வைக்கு)


படத்தில் நடித்திருக்கும் குப்தா பாத்திர படைப்பு சென்னையில் பீடா கடை வைத்து இருந்தவரை சென்னை காவல் துறையினர் எப்படி எல்லாம் லஞ்சம் வாங்கி அவரை கொலைகாரனாக மாட்டினார்கள் என்று சொல்லும் போது நம் இந்திய மானமும் சென்னை மானமும் காற்றில் பறந்து விட்டது.

சட்டமா ?மனிதாபிமானமா? என்பதை க்ரொக்கோஷியா நாட்டில் இருந்து ஆயுர்வேத மருந்து தன் தந்தைக்கு எடுத்து வரும் போது அதை ஏஙர்போர்ட் நிர்வாகம் அனுமதி மறுக்க அதனை லாவகமாக பேசி விக்டர் அவனிடத்தில் சேர்பது அழகிலும் அழகு.

இந்த படத்தின் பாத்திர படைப்பு உண்மை சம்பவங்களின் அடிப்டையாக கொண்டது(The movie is based on the 18-year-stay of Mehran Karimi Nasseri in the Charles de Gaulle International Airport, Terminal I, Paris, France from 1988 to 2006.)


க்ரக்கோஷியா நாடு ஒரு கற்பனை நாடு.

தன் நாட்டில் கலவரம் ஏற்பட்டதை டிவியில் பார்க்கும் டாம் ஹங்ஸ் மொழி தெரியாமல் தவிப்பதும் கண்களில் நீர் மல்க அலைபான்வதும் அகதிகளின் வாழ்வில் நடக்கும் அப்பட்டங்களை அப்டியே செல்லுலாய்டில் வடித்து இருப்பார் இயக்குநர்.


குப்தாவாக நடித்து இருக்கும் இந்திய கிழவரின் நடிப்பு மிகை படுத்தாமல் இயல்பாய்இருக்கும்

படத்தின் இசை படத்தின் மிகப்பெரிய பலம்.

இந்த படம் கமெடி படம்தான் என்றாலும் மிக மெல்லிதான சோகத்தை படம் முழுக்க இழையோட விட்டுஇருப்பது இயக்குநரின் சாமர்த்தியம்.

இந்த படம் பார்க்கும் போது அகதியாய் இருப்பது எவ்வளவு கொடுமையான செயல் என்ன என்பது படம் பார்க்கும் போது நீங்கள் அறிவீர்கள்.

குவைத்திலருந்து இந்தியா வந்ததும் எர்போட்டில் செக்கிங் செய்து வெளி வருவதற்க்குள் தாவு தீத்துட்டான் பா என்று புலம்புகிறோம். அனால் அதே ஏர்போர்ட்டில் தங்கி வாழ்வது எவ்வளவு கொடுமையான செயல்.

ஏர்போர்ட் அகதி வாழ்கை கூட ஒரு விதத்தில் ஏற்றுக்கொள்ளலாம். இலங்க காடுகளில் மனைவி மக்களுடன் ராணுவத்தின் ஷெல் அடிப்புக்கு பயந்து பாம்பு மற்றும் கொடிய ஜந்துக்களுடன் வாழ்வது எவ்வளவு கொடுமை என்பதை எண்ணிபார்த்தால் எஸ் வி சேகர் போல் யாரும் தெனாவெட்டாக பேட்டி கொடுக்கமாட்டார்கள்




The Terminal

Theatrical release poster
Directed by Steven Spielberg
Produced by Steven Spielberg
Walter F. Parkes
Laurie MacDonald
Andrew Niccol
Written by Andrew Niccol
Sacha Gervasi
Jeff Nathanson
Starring Tom Hanks
Catherine Zeta-Jones
Music by John Williams
Cinematography Janusz Kaminski
Editing by Michael Kahn
Distributed by DreamWorks Pictures
Amblin Entertainment
Release date(s) June 18, 2004
Running time 128 min.
Country United States
Language English
French
Russian
Bulgarian
Budget $60,000,000
Gross revenue $219,417,255
Official website • IMDb • Allmovie


வாழ்வில் பார்க்க வேண்டிய படம்



அன்புடன் ஜாக்கிசேகர்

(பாகம்/5) அகதி வாழ்கை எப்படி இருக்கும்

அகதியாக இருப்பது எவ்வளவு கொடுமையான செயல். அதுவும் கதியற்றவராக இருக்கும் போதுஇந்த படித்த நாகரிக உலகம் எப்படி எல்லாம் அந்த நதி அற்ற கதியற்ற மனிதனை அலைகழிக்கிறது. இறையாண்மை என்ற பெயரில் அடிக்கும் கூத்துக்கள்அப்பப்பா கொடுமைடா சாமி.

அகதிகளின் வாழ்வு துயரங்களையும், அவர்களின் தாய் நாட்டு பாசத்தையும் தன் நாட்டு மக்களின் துயரம் பார்த்து ஏதும் செய்ய இயலாமல் அல்லல் படுவதும். தன் நாட்டு மொழியின் இரண்டொரு வார்த்தைகள் வெயிநாட்டுக்காரர் பேச கேட்டு புல்லரிப்பதும். தன் நாட்டு காலவரங்கள் என்று முடிவுக்கு வரும் என்று நித்தம் நித்தம் செத்து பிழைக்கும் கதியற்றவர்களின் வாழ்கை நிலை எவருக்கும் வர கூடாது.அது பற்றி இந்திய தமிழர்களுக்கு புரியாது. எனென்றால்

இந்திய தமிழர்கள் ஒருரூபாய்க்கு அரிசி வாங்கி வயிற்றை ரொப்பிக்கொள்ள முடியும்.

சுபிட்சமான வாழ்வு வாழ்வதால்
இழுப்பின் வலிகளை நம்மால் உணரமுடிவதில்லை. இரண்டு மணி நேர மின் வெட்டை நம்மால் தாங்க முடிவதில்லை. இப்படி சொல்லிகொண்டே போகலாம் .

அகதியாய் இருப்பவன் படும் பாடுகளை இவ்வளவு தத்ரூபமாக அழகாக சொன்னதில்லை என்பேன். படித்து விட்டால் பெரிய புடுங்கிகள் போல் டநினைக்கும் சென்னைவாசிகளில் சிலர் இந்த படத்தை கட்டடாயம் பார்க்க வேண்டும்.
சட்டம் என்பது வேறு. மனிதாபிமானம் என்பது வேறு என்பதையும், வாழ்வாதபாரம் பாதிக்http://2.bp.blogspot.com/_FDULgrSOClk/SQ1hFxxztBI/AAAAAAAAAno/dMeqVcmMo5I/s1600-h/catherine_zeta_jones1.jpgகப்ட்ட மனிதனின் கேள்விக்குறியான வாழ்க்கை நிலையையும் மிக அற்புதமாக எதார்தத்துடன் காட்சி படுத்தி தன் ஒரு சினிமா பிதாமகன் என்பதை நிருபித்து இருக்கிறார் இயக்குநர்ஸ்பில்பெர்க்

படத்தின்

பெயர் டெர்மினல் படம் வெளியான ஆண்டு 2004
அதே போல் படத்தின் மற்றுமொரு சிறப்பம்சம் சத்தியம். நம்மில் எத்தனை பேர் செய்து கொடுத்த சத்தியத்துக்கு விசுவாசமாய் இருக்கிறோம்

விதி படத்தில் மேட்டர் முடிந்த உடன் பூர்ணிமா மோகனிடம் அப்ப நீங்க செய்த சத்தியம்?
சத்தியம் சக்கரை பொங்கல் வரட்டுமாடி பேதை பெண்ணே என்று மோகன் சொல்லுவார் இந்திய அரசியல் வாதிகள் சத்தியமும் சக்கரை பொங்கல் வகையை சார்ந்ததே.

படத்தின் கதையின் நாயகன் விக்டர் நவோஸ்கி (டாம்ஹாங்ஸ்)தன் தந்தைக்கு செய்து கொடுத்த சத்தியத்துக்காக நாயாய் பேயாய் அலைவதும் ரொம்ப அற்புதமாகஅதன் அழகியல் மாறாமல் இயக்கிஇருக்கிறார்

விக்டர் நவோஸ்கி எனும் ஒருவன் ரஷ்யாவில் துண்டாடபட்ட நாடான க்ரோக்கிஷியாவில் இருந்து அமெரிக்காவின் நுயார்க் நகரில் இருக்கும் ஜான் எப் கென்னடி விமானநிலயத்தில் இறங்குகிறான் அவன் நியுயார்க் வந்ததன் நோக்கம் தன் தந்தைக்கு செய்து கொடுத்த சத்தியத்திற்க்காக நியுயார்க் நைட்கிளப்பில் ஒருவரை சந்திக்க வேண்டும் அவ்வளவே.

அவன் கென்னடி விமான நிலயத்தில் இறங்கி வெளிவருவதற்க்குள் அவன் சொந்த நாடன க்ரோக்கோஷியாவில் உள் நாட்டு கலவரம் வெடித்து அரசாங்கம் கவிழ்ந்து விடுகிறது. இதனால் அவனின் சொந்த நாட்டு வீசா செல்லாமல் போகிறது.

அவன் திரும்பவும் சொந்த நாட்டிற்க்கு போகவும் முடியாது .அங்கே கலவரம்,நுயுயார்க் நகரத்தி்லும் கால் பதிக்க முரயாது எனெனில் கலவர நாட்டின் குடிமகன் அவன்நாட்டில் அவனுக்கு கொடுத்த வீசாகொடுத்த கவர்மென்ட் கலைந்ததால் அதுவும் முடியாது.

அவன் கென்னடி ஏர்போட்டில் இருந்து வெளியே ஒரு அடி எடுத்து வைத்தால் கூட கைது செய்து சிறையில் தள்ள ரெடியாக இருக்கிறது கென்னடி ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆட்கள்.


அவன் அந்த ஏர்போர்ட்டிலேயே காலம் தள்ள வேண்டிய நிலமை. அவன் எங்கு தங்குவான் அவனுக்குஎப்படி சாப்பாடு கிடைக்கிறது அதற்க்கு அவன் என்ன என்ன காரியங்கள் செய்கிறான் என்பதை சுவைபட சொல்லிஇருக்கிறார் இயக்குநர் இதற்க்கு நடுவில் விமான பணிப் பெண்ணான காத்தரீன் ஜீட்டா ஜோன்ஸ் மீது காதல் வேறு..


படித்தவர்கள்சட்டம் இருக்கிறது என்ற காரணத்தால் எப்படி எல்லாம் ஆட்டம் போடுகிறார்கள் என்பதையும் அதிகாரவர்கத்தில்இருப்பவர்களுக்கும்கீழ் நிலை மக்களுக்கும் உள்ளஇடைவெளிகளை மிக அற்புதமாக சொல்லி இருக்கிறார்.ஸ்பில்பெர்க்

அந்த ஏர்போட்டில் காலம் தள்ளும் போது அவனுக்கு நண்பர்களாக குப்தா எனும் இந்திய கிழவர்மற்றும் சிலரும் நட்பாகிறார்கள்.

ஒரு கட்டத்தில் அந்த கென்னடிஏர்போர்ட்டில் விக்டர் நவோஸ்க்கியை தெரியாதவர்களே இல்லை என்ற நிலமை. அதே போல் எர்போர்ட் அத்தாரிட்டி ஆபிஸர் விக்டர் நவோஸ்கியை கைது செய்து கங்கனம் கட்டி அலைவது. இவ்வளவு சிக்கல்களுக்கு நடுவில்

1. விக்டர் தன் தந்தைக்க செய்து கொடுத்த சத்தியத்தை நிறை வேற்றுகிறானா?

2. விக்டர் நியுயார்க் நகரத்தில் கால் பதித்தானா?

3.விக்டருக்கும் விமானபணிப்பெண்ணுக்கான காதல் என்னவாயிற்று?

4.விக்டருக்கு அந்த ஏர்போர்ர்டில் உதவி செய்தவர்களின் கதி என்ன?

வெள்ளி திரையில் கான்க அல்லது திருட்டு டிவிடி யில் காண்க....

படத்தின் சுவாரஸ்யங்களில் சில............

ஸ்பில்பெர்க் எடுத்ததில் இதுதான் குப்பை படம் என்று விமர்சிக்கிறவர்களும் இருக்கிறார்கள். ( நம்ம ஊரில் அன்பே சிவம் படம் குப்பை என்பது போல்)

படத்தில் காட்டப்படும் ஏர்போர்ட் அத்தனையும் செட்டு போட்டு எடுத்தார்கள் என்றால் நம்புங்கள் மக்களே...( புகைபடங்கள் மேலே உங்கள் பார்வைக்கு)


படத்தில் நடித்திருக்கும் குப்தா பாத்திர படைப்பு சென்னையில் பீடா கடை வைத்து இருந்தவரை சென்னை காவல் துறையினர் எப்படி எல்லாம் லஞ்சம் வாங்கி அவரை கொலைகாரனாக மாட்டினார்கள் என்று சொல்லும் போது நம் இந்திய மானமும் சென்னை மானமும் காற்றில் பறந்து விட்டது.

சட்டமா ?மனிதாபிமானமா? என்பதை க்ரொக்கோஷியா நாட்டில் இருந்து ஆயுர்வேத மருந்து தன் தந்தைக்கு எடுத்து வரும் போது அதை ஏஙர்போர்ட் நிர்வாகம் அனுமதி மறுக்க அதனை லாவகமாக பேசி விக்டர் அவனிடத்தில் சேர்பது அழகிலும் அழகு.

இந்த படத்தின் பாத்திர படைப்பு உண்மை சம்பவங்களின் அடிப்டையாக கொண்டது(The movie is based on the 18-year-stay of Mehran Karimi Nasseri in the Charles de Gaulle International Airport, Terminal I, Paris, France from 1988 to 2006.)


க்ரக்கோஷியா நாடு ஒரு கற்பனை நாடு.

தன் நாட்டில் கலவரம் ஏற்பட்டதை டிவியில் பார்க்கும் டாம் ஹங்ஸ் மொழி தெரியாமல் தவிப்பதும் கண்களில் நீர் மல்க அலைபான்வதும் அகதிகளின் வாழ்வில் நடக்கும் அப்பட்டங்களை அப்டியே செல்லுலாய்டில் வடித்து இருப்பார் இயக்குநர்.


குப்தாவாக நடித்து இருக்கும் இந்திய கிழவரின் நடிப்பு மிகை படுத்தாமல் இயல்பாய்இருக்கும்

படத்தின் இசை படத்தின் மிகப்பெரிய பலம்.

இந்த படம் கமெடி படம்தான் என்றாலும் மிக மெல்லிதான சோகத்தை படம் முழுக்க இழையோட விட்டுஇருப்பது இயக்குநரின் சாமர்த்தியம்.

இந்த படம் பார்க்கும் போது அகதியாய் இருப்பது எவ்வளவு கொடுமையான செயல் என்ன என்பது படம் பார்க்கும் போது நீங்கள் அறிவீர்கள்.

குவைத்திலருந்து இந்தியா வந்ததும் எர்போட்டில் செக்கிங் செய்து வெளி வருவதற்க்குள் தாவு தீத்துட்டான் பா என்று புலம்புகிறோம். அனால் அதே ஏர்போர்ட்டில் தங்கி வாழ்வது எவ்வளவு கொடுமையான செயல்.

ஏர்போர்ட் அகதி வாழ்கை கூட ஒரு விதத்தில் ஏற்றுக்கொள்ளலாம். இலங்க காடுகளில் மனைவி மக்களுடன் ராணுவத்தின் ஷெல் அடிப்புக்கு பயந்து பாம்பு மற்றும் கொடிய ஜந்துக்களுடன் வாழ்வது எவ்வளவு கொடுமை என்பதை எண்ணிபார்த்தால் எஸ் வி சேகர் போல் யாரும் தெனாவெட்டாக பேட்டி கொடுக்கமாட்டார்கள்




The Terminal

Theatrical release poster
Directed by Steven Spielberg
Produced by Steven Spielberg
Walter F. Parkes
Laurie MacDonald
Andrew Niccol
Written by Andrew Niccol
Sacha Gervasi
Jeff Nathanson
Starring Tom Hanks
Catherine Zeta-Jones
Music by John Williams
Cinematography Janusz Kaminski
Editing by Michael Kahn
Distributed by DreamWorks Pictures
Amblin Entertainment
Release date(s) June 18, 2004
Running time 128 min.
Country United States
Language English
French
Russian
Bulgarian
Budget $60,000,000
Gross revenue $219,417,255
Official website IMDb Allmovie


வாழ்வில் பார்க்க வேண்டிய படம்



அன்புடன் ஜாக்கிசேகர்

குண்டு வெடித்ததும் இந்தியாவில் நிகழ்வது என்ன?

நேற்று அசாம் கவுகாத்தியில் குண்டு வெடித்து 70 பேர் பலியானார்கள்(30/10/2008) இந்த பதிவு டெல்லி குண்டு வெடிப்பின் போது எழுதியது. இப்போதும் எப்போதும் இந்தியாவிற்க்கு பொறுந்தும்.....

இன்னும் குண்டு வெடிக்கும் போதெல்லாம் இதே பதிவை உயிர் சேதம் மற்றும் நாளை மடடும் மாற்றி போடலாம் என்று இருக்கிறேன். எனெனில் இத்தனை பலியாகி இருக்கிறார்கள் உளவுதுறை என்ன செய்கிறது? அவர்களுக்கு கெபடுககும் சம்பளம் எல்லாம் விழலுக்கு இறைத்த நீர்தானா?

இதற்க்கு மேல் பழைய பதிவை படியுங்கள் இது எப்போதும் பொறுந்துவது போல்தான் எழுதியுள்ளேன்


நேற்று முன் தினம் தலைநகர் டெல்லியில் நடந்த குண்டு வெடிப்பில் இதுவரை 30 பேர் உடல் சிதறி மடற்றும் 100க்கு மேற்பட்டவர்கள் பலியாக உள்ளனர்.



சில மாதங்களுக்கு முன் அகமதாபாத், பெங்களுர், சூரத் போன்ற இடக்ளில் குண்டு வெடித்து இறந்து போனது ஞாபகம் இருக்கலாம் அல்லது தமிழனாக இருக்கும் பட்சத்தில் அது மறந்து போய் இருக்கலாம்.இந்தியனாக இருக்கும் பட்சத்தில் அதை சகித்து கொண்டு இருக்கலாம். அல்லது பொதுவானாக இந்தியனாக இருந்தால் பக்கத்து வீட்டில்தானே நடந்தது நமக்கேன் கவலை என்ற உயர்ந்த பண்பு காரணமாகவும் நாம் மறந்து போய் இருக்கலாம்,


பெங்களுர், சூரத், அகமதாபத் போன்ற இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்ந்த போது எப்படி பொங்கி எழுந்து தீவரவாதத்தை அடக்குவதாக பாவித்து என்ன சூலுரைத்தார்களோ, அதே போல்தான் இப்போதும் பெரிய தலைவர்கள் அனைவரும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள்.


இதுவரை தீவரவாதத்தை அடக்க எந்த ஒரு முன் ஏற்பாடும் எடுத்ததாகதெரியவில்லை. உளவுதுறை என்ன மயிர் புடுங்கி கொண்டு இருக்கிறது என்பது புரியவில்லை.

இந்தியாவில் ஒவ்வோரு முறை குண்டு வெடிப்பின் போது கீழுள்ளவை நிகழும்...

1. குண்டு வெடிப்பு நிகழ்ந்ததும் உடல்களை உடனே அப்புறபடுத்தி உடனே லட்ச ரூபாய் நிவாரணம் அறிவிப்பார்கள்

2. காயம் பட்டவர்களை நேரில் பார்த்து ஆறுதல் கூறி ஒரு போட்டோ எடுத்து அதனை இந்தியா முழுவதும் வெளிவரும் பிராதன பத்திரிக்கைகளில் முதல் பக்கத்தில் வரும் படிபிரதமர் வட்டாரத்தினர் பார்த்து கொள்வார்கள்.

3.சோனியா காந்தியும் நேரில் போய் பார்க்கிறார் என்றால் குண்டு வெடிப்பு சேதம் அதிகம் என்று அர்த்தம்.

4. அத்வானி பொடா சட்டம் இருந்தால் தீவிரவாதமே நிகழாது என்று பேட்டி கொடுப்பார்.

5. இந்திய மீடியாக்கள் நான்கு நாட்கள் நாம் இருப்பது இந்தியாவிலா அல்லது இலங்கையிலா என்று தற்போது விஸ்காம் முடித்த வெள்ளை தோல் பெண்களை வைத்து மூண்றுநாள் ஓப்பாரி வைத்து விட்டு சல்மான்கான் யார் உதட்டில் இப்போது ஈரப்டுத்தி கொள்கிறார் என்பதை ஆராய போய் விடுகிறார்கள்.

6.கொஞ்சம் கோபம் உள்ளவர்கள் பத்திரிக்கையிலும் பிளாக்கிலும் எழுதி தன் கோபத்தை தீர்த்து கொள்கிறார்கள்.

7. எல்லா தலைவர்களும் கண்டனம் தெரிவிப்பார்கள்.

8.குண்டு வெடிப்பில் தன் உற்றாரை இழந்து வாடும் உறவினர்கள் மார்பில் அடித்துகொண்டு அழும் காட்சி மறுநாள் தினசரிகளில் நிச்சயம் இடம்பெறும்.



9. ஒருவாரம் கழித்து இறந்தவர் ஒருவருடைய சோக செய்தி வாரப் பத்திரிக்கையில் இடம்பெறும்.



10. இந்தியர்கள் பத்திரிக்கை, தொலைகாட்சி, வாரபத்திரிக்கைகளில் குண்டு வெடிப்பு செய்திகளை படித்து விட்டு பார்த்து விட்டு, த்சோ த்சோ என்று சொல்வார்கள் .


அடுத்த குண்டு வெடிப்பு நடந்ததும் இதே செயல்கள் இந்தியாவில் நிச்சயம் நடைபெறும் இந்தியர்கள் த்சோ, த்சோ சொல்ல காத்து இருப்பார்கள்...

அன்புடன்/ஜாக்கிசேகர்

பதிவர்களுக்கு என்நன்றிகள் (எனக்காக நேரம் ஒதுக்கியவர்களுக்கு மட்டும்)




வாழ்த்துவது என்பது ரொம்ப ரொம்ப மனதை மகிழ்விக்கும் செயல் என்பேன், நீங்க நல்லா இருக்கனும் அப்படி சொல்லரதுக்கு காசு பணம் தேவை இல்லை. அப்படி சொல்லறதையே சோம்பேறி தனமா நினைக்கறவங்களும் இருக்கதான் செய்யறாங்க.


கடந்த அக்டோபர் மாதம் 19ம் தேதி என் திருமணம் மிக சிறப்பாக நடந்தது, பொதுவாக இயற்கையை ரசிப்பவன் நான் என்பதால் கல்யாணத்திற்க்கு முதல் நாள் இயற்கை என் கல்யாணத்தை ரொம்பவே ரசித்தது. புதுச்சேரி அருகே இருக்கும், கடலூரில்எனது திருமணம் இனிதே நடந்தேறியது . சென்னைக்கும் கடலூருக்கான பயணதூரம் 3மணி நேரம் 45 நிமிடங்கள்.


அதுமட்டும் இல்லாமல் தேமுதிக மாநாடு சென்னையில் நடந்ததால், டிராபிக் ஜாம் வேறு அதிக அளவில் இருந்ததாக சென்னையில் இருந்து நேரில் வந்து வாழ்த்திய நண்பர்கள் சொன்னார்கள்.

நான் மிகவும் எதிர்பார்தத்த நபர்கள் வெவ்வேறு சூழ்நிலை கைதியாகி சில பல ஏற்புடைய காரணங்கள் சொன்னாலும் நான் எதிர்பார்க்காத நபர்கள் மற்றும் முகம் பார்த்திராத பதிவர்கள் வாழ்த்தியது என்னை மெய் சிலிர்க்க செய்தது.

பதிவர் அதிஷா என் திருமண அழைப்பை தன் பதிவில் இட்டு என் வேலை பளுவை வெகுவாய் குறைத்தார். அதை ரொம்ப உரிமையாகவும் செய்தார்.




பதிவர் நித்யகுமாரன் அந்த கொட்டும் மழையிலும் தன் ஒருவயது குழந்தையுடன்,குடும்பத்துடன் வந்து வாழ்த்தினார். தன் வார இறுதி நாட்களை தியாகம் செய்து வந்து இருந்தார்.

பதிவர் முரளி கண்ணன் அவர்கள் என்னை கைபேசியில் தொட்ர்பு கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
எனக்கு ரொம்பவே ஆச்சர்யம் முடிந்த வரை வர முயற்ச்சி செய்வதாக சொன்னார்.

பதிவர் தங்க முகுந்தன் சுவிட்சர்லாந்து நாட்டிலிருந்து போன் செய்து வாழ்த்து தெரிவித்தார் ரொம்பவும் மகிழ்வாக உணர்ந்தேன் வாழ்ந்து சொல்ல எனக்காக கொஞ்ச நேரம் மெனக்கெட்டார் பாருங்கள் , அது எனக்கு மிகுந்த மகிழ்வை தந்தது.

பதிவர் நிர்ஷான் கொழும்பிலிருந்து திருமண்த்தன்று கைபேசியில் வாழ்த்து தகவல் அனுப்பினார்

அதே போல் பல முகம் தெரியாத பதிவர்கள் கைபேசி முலம் வாழ்த்து செய்தியை சொன்னார்கள் திருமண வேலை பளுவில் மறந்து தொலைத்து விட்டேன். மன்னிக்கவும்.


வாழ்திய பதிவர்கள்

1. தங்கராசா ஜீவராஜ்
2.புகழேந்தி
3.ஜ்யோவராம்சுந்தர்
4.புதுகை தென்றல்
5.அரவிந்தன்
6.புதுவைசிவா
7.யேகன்பாரிஸ்
8.வெண்பூ
9.யாழ்
10.ரமேஷ்
11. சந்திரன்
12. பின்னுட்டம் பெரியசாமி
13.சரவணகுமரன்
14. கானாபிரபா
15.கிரி
16தெகா
17.நவநீதன்
18. தமிழ்பறவை
19.ராஜநடராஜன்
20.புதுகை அப்துல்லா.
21.முகுந்தன்
22. அத்திரி போன்ற பதிவர்கள் பின்னுட்டம் போட்டும் மெயில் அனுப்பியும் வாழ்த்து சொன்னார்கள்


பொத்தாம் பொதுவாய் கைபேசியிலும் நேரிலும் பின்னுட்டம் இட்டும் வாழ்த்து சொன்ன நல்ல உள்ளங்களுக்கு என்று என்னால் என் நன்றியை தெரிவிக்க எனக்கு இஷ்டம் இல்லை . அப்படிதான் பொத்தம் பொதுவாக ஒரு நன்றி தெரிவிக்கபடுகிறத தென்றால் அந்தநன்றியை நான் தெவிக்காமலே இருந்து இருப்பேன்.

எல்லாவிலை உயர்வையும் சமாளிக்க,வாழ்ந்தே தீரவேண்டிய கட்டயாத்தில் பொங்கியதை டிபன் பாக்ஸில் சுட சுட அடைத்து கொடுத்த அன்னைக்கு, “போயிட்டுவரேன்மா ” என்று சொல்ல கூட மறந்து, மாநகர பேருந்து பிடிக்கவும், புறநகர்மின் தொடர் வண்டி பிடிக்கவும் சிட்டாக பறந்து செல்லும் இன்றைய கால கட்டத்தில் எனக்காக நேரம் ஒதுக்கி,


என் எதிர்கால வாழ்வு சிறக்க வாழ்த்திய மேலே பெயர் குறிப்பிட்ட எனதருமை பதிஉலக நண்பர்களுக்கு இந்த ஜாக்கிசேகரின் நெஞ்சார்ந்த நன்றிகள்



அன்புடன்/ஜாக்கிசேகர்

இயக்குநர்கள் அமீர் மற்றும் சீமான் திடிர் கைது.....அண்மைசெய்தி

இரமேஸ்வரத்தில் இலங்கை தமிழர்களுக்கு அதரவாக சற்று உணர்ச்சி வசப்பட்டு பேசிய இயக்குநர்கள் அமிர் மற்றும் சீமான் இருவரும் இன்று மாலை இலங்கை தமிழருக்கு அதரவாக மனித சங்கிலிநடத்திய பிறகு பிரிவினையை தூண்டியதாக புகாரின் அடிப்படையில் இருவரும் திடிரென கைது செய்யப்பட்டுள்ளனர்.

காலையிலேயே தினமலர் நாளிதழ் கலக்கத்தில் இயக்குனர்கள் என்ற தலைப்பில் வால் போஸ்டர் பார்த்ததுமே எனக்கு லேசாக மனதில் பட்டது...

இன்னும் என்ன என்ன நடக்க போகிறதோ ?

அனைத்து பதிவர்களும் என் திருமணத்திற்க்கு் வந்து ஆசிர்வதிக்க வேண்டுகிறேன்....


அன்பார்ந்த பதிவர்களே வணக்கம் .


வரும் ஞாயிறு(19/10/08)அன்று கடலுரில் கூத்தப்பபாக்கத்தில் முருகாலயா திருமண மண்டபத்தில் எனது திருமணம் நடக்க இருக்கிறது . அனைத்து வலைபதிவர்களும் இதையே அழைப்பாக ஏற்று நேரில் வந்து வாழ்துத்த வேண்டுகிறேன் .

சென்னையில் ஏதாவது வரவேற்ப்பு வைக்கலாம் என்றால் சென்னையில் விலைகள் கேட்ட போது எனக்கு மயக்கமே வந்து விட்டது போங்கள். அதனால் (18/10/08) சனிக்கிழமைகடலூரில் அதே முருகாலயா மண்டபத்தில் வரவேற்ப்பும் வைத்து இருக்கி்றேன்.


இவ்வளவு லேட்டாக சொல்வதால் என்னை தவறாக என்ன வேண்டாம். வீடு இப்போதுதான் மாற்றினேன். அதனால் வலை இயக்கம் இல்லாமல் போய்விட்டது.

உங்கள் ஆசிர்வாதங்களை எதிர்பார்த்து காத்து இருக்கும்



ஜாக்கிசேகர்

எனது கைபேசி 9840229629

பதிவர் சிங்கை கிரிக்காகவும், ரஜினிக்காகவும் நான் எடுத்த புகைப்படம்...


பதிவர் கிரிக்காக நான் எடுத்த புகைப்படம் இது...


பின் புற படத்தில் இயந்திர தனமாய் கையில் ரோஜாப்பூ வைத்து இருப்பவர் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர், இந்த வயதிலும் அடுத்தவன் பொண்டாட்டியோடு மன்னிக்கவும், ஜஸ்வர்யாராயோடு ஆடுபவர்.

கீழே பிளாட்பாரத்தில் உட்கார்ந்து இருப்பவர்கள் கொஞ்சமாக ஆசிர்வதிக்கபட்டவர்கள்.

ஊண் குருடு இல்லாமல் பிறந்து தனது அந்திம காலத்தில் மருமகள், மகனின் வசவுகளை ஏற்று வாழ்பவர்கள்,
தன் சோகத்தை ரோட்டோரத்தில் உட்கார்ந்துதன் வயது ஒத்த நண்பர்களுடன் பேசுபவர்கள்.

ஹீம் ரஜினியோட பிறந்த நேரம் அப்படி, பாருங்கள் கடவுளின் திருவிளையாடல்களை ஒரே பூமி ரத்தம் சதை அழுகை உணர்வு, காமம் எல்லாம் ஒன்றே ஆனால் வாழ்க்கை தரம் மட்டும்????????

ஆனால் ரஜினிக்கு இந்த வாய்ப்பு சும்மா ஒன்றும் கிடைக்கவில்லை அந்த அசுர வளர்ச்சிக்கு பின் நிறைய காயங்களும் வேதனைகளும் இருக்கிறது, ரஜினி பெங்களுருவில் பஸ் கண்டக்டர், அவர் சென்னை லாயாலோ கல்லுரியில் படிக்க வில்லை. அவர் அப்பா பெயர் ஒன்றும் எஸ் ஏ சந்திரசேகர் அல்ல....



ஆனாலும் ரஜினி கடவுளால் ஆசிர்வதிக்கபட்டவர்தானே....


நான் எடுத்த புகைபடங்களில் இந்த படமும் என் ரசனை பட்டியலில்....





அன்புடன்/ ஜாக்கிசேகர்

ஒரு மனிதனின் பரிணாம வளர்ச்சி, அரிய புகைபடங்களுடன் ..(இ மெயிலில் வந்த சோக்கு)

ஒரு மனிதனின் பரிணாமவளர்ச்சி..............................








அன்புடன்/ ஜாக்கிசேகர்

இந்தியாவில் குண்டு வெடிப்பு நிகழ்ந்ததும் நடக்கும் பத்து புளித்து போன நிகழ்வுகள்.....


நேற்று முன் தினம் தலைநகர் டெல்லியில் நடந்த குண்டு வெடிப்பில் இதுவரை 30 பேர் உடல் சிதறி மடற்றும் 100க்கு மேற்பட்டவர்கள் பலியாக உள்ளனர்.



சில மாதங்களுக்கு முன் அகமதாபாத், பெங்களுர், சூரத் போன்ற இடக்ளில் குண்டு வெடித்து இறந்து போனது ஞாபகம் இருக்கலாம் அல்லது தமிழனாக இருக்கும் பட்சத்தில் அது மறந்து போய் இருக்கலாம்.இந்தியனாக இருக்கும் பட்சத்தில் அதை சகித்து கொண்டு இருக்கலாம். அல்லது பொதுவானாக இந்தியனாக இருந்தால் பக்கத்து வீட்டில்தானே நடந்தது நமக்கேன் கவலை என்ற உயர்ந்த பண்பு காரணமாகவும் நாம் மறந்து போய் இருக்கலாம்,


பெங்களுர், சூரத், அகமதாபத் போன்ற இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்ந்த போது எப்படி பொங்கி எழுந்து தீவரவாதத்தை அடக்குவதாக பாவித்து என்ன சூலுரைத்தார்களோ, அதே போல்தான் இப்போதும் பெரிய தலைவர்கள் அனைவரும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள்.


இதுவரை தீவரவாதத்தை அடக்க எந்த ஒரு முன் ஏற்பாடும் எடுத்ததாகதெரியவில்லை. உளவுதுறை என்ன மயிர் புடுங்கி கொண்டு இருக்கிறது என்பது புரியவில்லை.

இந்தியாவில் ஒவ்வோரு முறை குண்டு வெடிப்பின் போது கீழுள்ளவை நிகழும்...

1. குண்டு வெடிப்பு நிகழ்ந்ததும் உடல்களை உடனே அப்புறபடுத்தி உடனே லட்ச ரூபாய் நிவாரணம் அறிவிப்பார்கள்

2. காயம் பட்டவர்களை நேரில் பார்த்து ஆறுதல் கூறி ஒரு போட்டோ எடுத்து அதனை இந்தியா முழுவதும் வெளிவரும் பிராதன பத்திரிக்கைகளில் முதல் பக்கத்தில் வரும் படிபிரதமர் வட்டாரத்தினர் பார்த்து கொள்வார்கள்.

3.சோனியா காந்தியும் நேரில் போய் பார்க்கிறார் என்றால் குண்டு வெடிப்பு சேதம் அதிகம் என்று அர்த்தம்.

4. அத்வானி பொடா சட்டம் இருந்தால் தீவிரவாதமே நிகழாது என்று பேட்டி கொடுப்பார்.

5. இந்திய மீடியாக்கள் நான்கு நாட்கள் நாம் இருப்பது இந்தியாவிலா அல்லது இலங்கையிலா என்று தற்போது விஸ்காம் முடித்த வெள்ளை தோல் பெண்களை வைத்து மூண்றுநாள் ஓப்பாரி வைத்து விட்டு சல்மான்கான் யார் உதட்டில் இப்போது ஈரப்டுத்தி கொள்கிறார் என்பதை ஆராய போய் விடுகிறார்கள்.

6.கொஞ்சம் கோபம் உள்ளவர்கள் பத்திரிக்கையிலும் பிளாக்கிலும் எழுதி தன் கோபத்தை தீர்த்து கொள்கிறார்கள்.

7. எல்லா தலைவர்களும் கண்டனம் தெரிவிப்பார்கள்.

8.குண்டு வெடிப்பில் தன் உற்றாரை இழந்து வாடும் உறவினர்கள் மார்பில் அடித்துகொண்டு அழும் காட்சி மறுநாள் தினசரிகளில் நிச்சயம் இடம்பெறும்.



9. ஒருவாரம் கழித்து இறந்தவர் ஒருவருடைய சோக செய்தி வாரப் பத்திரிக்கையில் இடம்பெறும்.



10. இந்தியர்கள் பத்திரிக்கை, தொலைகாட்சி, வாரபத்திரிக்கைகளில் குண்டு வெடிப்பு செய்திகளை படித்து விட்டு பார்த்து விட்டு, த்சோ த்சோ என்று சொல்வார்கள் .


அடுத்த குண்டு வெடிப்பு நடந்ததும் இதே செயல்கள் இந்தியாவில் நிச்சயம் நடைபெறும் இந்தியர்கள் த்சோ, த்சோ சொல்ல காத்து இருப்பார்கள்...

அன்புடன்/ஜாக்கிசேகர்

திருமணம் முடிந்த சில மணித்துளிகளில்(புது மாப்பிள்ளை) மங்களுர் சிவா வீட்டில் நான்...


எல்லா பதிவர்களும் நேரில் மங்களுர் சிவாவை வாழ்த்தினாலும் அருகில் இருந்தும் என்னால் நேரில் சென்று திருமணத்தில் கலந்து கொள்ள முடியவில்லை, வேலை முடிந்து அவர் அண்ணன் வீட்டுக்கு சென்று அவரை சந்தித்து வாழ்த்து கூறினேன்.


மணமக்கள் இருவரும் எல்லா வல்ல இறைவன் அருளாள் நீடுடி வாழட்டும்.

வாழ்த்துக்கள் மங்களுர் சிவா, பூங்கொடி

அன்புடன்/ஜாக்கிசேகர்

வலைபதிவர்களுக்கு என் நன்றிகள்


கடந்த மூன்று மாதத்தில் நான் வலை பதிவு ஆரம்பித்து இதுவரை பத்தாயிரம் பேர் என் பதிவை இன்றோடு படித்து இருக்கிறார்கள். நீங்கள் தொடர்ந்து என் எழுத்துக்கு கொடுத்து வரும் ஆதரவு உங்களை எல்லோரையும் நினைக்கும் போது என்னை மெய் சிலிர்க்க வைக்கின்றன.


குடும்ப பாரத்தை தாங்க தூர தேசம் சென்று தன் கனவுகளை நனவாக்க இரவு பகல் பாராது உழைத்து, மனைவி பிள்ளைகளை நினைத்து தலையனைக்கு முத்தம் கொடுத்து விட்டு மல்லாக்க விட்டம் பார்க்கும் என் தமிழ் ரத்த சொந்தங்கள்.

தாய் நாட்டில் என்னதான் நடக்கிறது என்பதை அறிய விரிவாய் அலச விரிவாய் பேச இந்த வலை இனைப்பு மட்டும்தானே ஒரே வழி

என்னை பொறுத்தவரை தூர தேசத்தில் இருக்கும் என் ரத்த சொந்தங்களுக்கும் உள்ளுர் சொந்தங்களுக்கும் எதாவத செய்தியை என் பார்வையில் உங்களோடு பகிர்ந்து கொள்ள முடிகிறது என்பதே என்னை பொறுத்தவரை மகிழ்வான விஷயம்.

தொடர்ந்து எனக்கு அதரவு கொடுத்தும் பின்னுட்டம் இட்டும் என்னை உற்சாகப்படுத்தும்


எல்லோருக்கும் என் நன்றிகன்


அன்புடன் /ஜாக்கிசேகர்

மங்களுர் சிவா திருமணம் முடிந்ததும் பாடும் பாடல் என்ன?



நம்ம சக பதிவர் மங்களுர் சிவாவுக்கு வரும் 11 ம் தேதி சென்னை வடபழனியில் திருமணம் வெகு விமர்சியாக நடக்க இருக்கிறது. வலைபதிவர் சார்பாகவும் என் குடும்பத்தினர் சார்பாகவும், அவருக்கும் அவர் வாழ்கை துணைக்கும் எல்லாம் இனிதே நடக்க எல்லாம் வல்ல பரம் பொருளை வேண்டுகிறேன். இனிவரும் காலங்கள் வசந்தமாய் வாழ எல்லாவல்ல இறைவனை வேண்டுகிறேன்.

ஓ இன்னம் மேட்டருக்கு வரலியா? ஓகே நம்ம சிவா திருமணம் முடிந்து பாடும் பாடல்

“‘ஜெர்மணியில் செந்தேன் மலரே, தமிழ்மகனின் பொன்னே சிலையே காதல் தேவதையே, காதல் தேவதை பார்வை கண்டதும் நான் எனை மறந்தேன்....”

என்ன சிவா இந்த பாடலை தானே உங்கள் உதடு முனு முனுக்கும்.....?

வாழ்த்துக்கள் சிவா.


அன்புடன்/ ஜாக்கிசேகர்

(பாகம்/1) கால ஓட்டத்தில் காணமல் போனவைகள். (தொடர் விளையாட்டு)




ஹரிக்கேன் விளக்கு...




தமிழகம் முழுவதும் மின் வெட்டால் பொதுமக்கள் தினறி, கழுத்து வியற்வை,அக்குள் வியற்வை பிசு பிசுப்புடன், கலைஞர் கவர்மெண்ட்டை திட்டிக்கொண்டு இருக்கும், இந்த வேளையில் இது பற்றி எழுதுவது நல்லது என்பேன்.


பொதுவாய் இந்த மாதிரி விளக்குகளைஎல்லா கிராமங்களிலும் பயண்படுத்துவர்.
பொதுவாய் விவசாயிகள் இரவில் தண்ணீர் பாய்ச்சவும், இரவில் வரப்பு பார்த்த நடக்கவும் இந்த விளக்குகள் பயன்படும்.

இதற்க்கு ஹரிக்கேன் விளக்கு என்று ஏன் பெயர் வந்தது தெரியுமா? புயல் காற்றுகளின் போது அல்லது எந்த பயங்கர காற்றுகளுக்கும் ஈடு கொடுத்து அனைந்து போகாமல் வெளிச்சத்தை கொடுக்க வல்லது.
ஹரிக்கேன் என்றாலே புயல்தானே...


இதற்க்கு கடலுர் மற்றும் சற்று வட்டாரங்களில் இதற்க்கு லாந்தர் என்று பெயரிட்டும் அழைப்பர்.

இந்த விளக்குகளை மீனவர்களின் உற்ற தோழன் என்று சொன்னால் அது மிகையில்லை...

மின்சாரம் எட்டி பார்க்காத அந்த கால கட்டத்தில் எங்கள் அம்மா அந்த லாந்தர் விளக்கை சாயிந்திரம் 5 மணிக்கெல்லாம் எடுதது முந்தின நாள் இரவில் அந்த விளக்கு உழைத்து கலைத்ததால் அதன் கண்ணாடியில் கருப்பு சுவாலைகள் படிந்து இருக்கும். அந்த கரும் ஜுவாலைகளை துடைத்தால்தான் பளிச்சென ஒளி கிடைக்கும்.

கண்ணாடி தொடைக்கவும் கக்கூஸ் கழுவவும் ஸ்பிரே வராத அந்த காலத்தில் மதியம் சமையல் செய்து நீர்த்து போன வரட்டி
( மாட்டு சாணத்தில் செய்த எரி பொருள்) சாம்பலை எடுத்து அந்த குடுவை போன்ற கண்ணாடி குடுவை உள்ளே, சர்ம்பலை உள்ளே போட்டு துணியால் துடைத்ததும் அந்த குடுவை பளிச்சிடும் பாருங்கள் அடா அடா....

அப்போது என்ன சுட்டி டிவி குட்டி டிவி போன்ற போழுது போக்குகளா இருந்தது?. கவனம் சிதற, அதனால் எங்க அம்மா செய்யும் இந்த வேளையை இமை பிசக்காமல் பக்கத்தில் உட்கார்ந்து கவனித்து கொண்டு இருப்பேன்.

நம்ம எல்லோருக்கும் நாம் செய்யும் வேலையை பிறர் கவனித்தால் ஒரு தடிப்பு நம்மில் வந்து ஒட்டி கொள்ளுமே அது போல் கண்ணாடியை சாம்பலால் துடைக்கும் அந்த வேளையை, என் அம்மா ஏதோ அனு சக்தி ஓப்பந்தத்துக்கு கோப்பு ரெடி செய்வது போல் அந்த துடைக்கும் வேலையை செய்து கொண்டு இருப்பாள்.

இப்போதெல்லாம் லாந்தர் என்ற ஹரிக்கேன் விளக்குகளை ரஜினி,கமல் போல் அடிக்கடி பார்க்க முடிவதில்லை நடிகர் கார்த்திக்கை போல் எப்போதாவதுதான் கண்ணில் படுகின்றது.

ஆனால் அந்த விளக்கு வெளிச்சத்தில்தான் 50 பைசா அட்டை புத்தகத்தில்
அனா ஆவன்னா படித்தேன், தப்பாக எழுத்துக்களை படித்து, என் அம்மா மூஞ்சி ராட்சசியாக மாறி தலையிலும் தொடையிலும் கொலை வெறி தாக்குதல் நடத்தி தடுக்க முடியாமல் அழுது வீங்கிய கண்ணங்களுடன் வீட்டின் மூலையில் உட்கார்ந்து இருந்தது, இன்றும் என் நினைவின் ஈர அடுக்குகளில்.....


மழைகாலங்களில் அந்த லாந்தர் விளக்கு என் கூரை வீட்டின் நடு மையத்தில் உள்ள கொக்கியில் மாட்டி இருக்கும். அது காற்றில் அசையும் போதெல்லாம் எல்லா பொருட்களின் நிழல்களும் மாறுபாடு அடைந்து பக்கத்து சுவர்களில் தெரியும்.

அதுதெரியும் போது நீட்டி விழும் அந்த நிழல்களுக்கு எதாவது உருவங்களை உருவகப்படுத்தி நடு சாமம் வரை ரசிப்பேன்.

ஹரிக்கேன் விளக்கை தொட்டு பல வருடங்கள் ஓடி விட்டன இருப்பினும், அந்த மண்ணெண்னை வாசமும் அது சில நேரங்களில் பக் என்று பற்றிகொண்டதும் அலறி அடித்து அம்மாவின் தொடைகளை கட்டி கொண்டு பாதுகாப்பு தேடியதும்,விளக்கை சரி செய்து பயத்தை போக்க தலை முடி கோதி தூங்க வைத்ததை எப்படி மறப்பது.

ஹரிக்கேன் விளக்குக்கும் என் அம்மாவுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது இருவருமே பணி செய்துவிட்டு பலன் எதிர்பார்க்ககாதவர்கள்.

என் அம்மா மட்டும் அல்ல, இன்னும் நிறைய குடும்பங்களின் அம்மாக்கள் ஹரிக்கேன் விளக்குகளாய் வீழ்ந்தும்,
இன்னும் வாழ்ந்தும் வருகிறார்கள்.

தன் மேல் தினமும் படியும் கரும்புகை ஜுவாலைகளை மறைத்தபடி....


என் பழைய பதியப்பாடாத வாழ்கையை பதிவில் பதிய வைக்க உரிமையோடு தொடர் ஓட்டத்தில் சேர்த்த மங்களூர் சிவா என் நன்றிக்கு உரியவர்.

அதே போல் என் அம்மாவின் கோபத்தையும், என் அம்மாவின் பாலு ஜுவல்லர்ஸ் புன்னகையும், ரொம்ப நாட்களுக்கு பிறகு லாந்தர் விளக்கின் மஞ்சள் வெளிச்சத்தை மனதில் உருவகப்படுத்தி, அதில் என் இறந்து போன என் இளைமைக்கால அம்மாமுகத்தை பொருத்தி யோசிக்க வைத்ததிற்க்கு என் கோடன கோடி நன்றிகள்.

நன்றி மங்களூர்சிவா..

அன்புடன் /ஜாக்கிசேகர்.

(பாகம் -4)ஒரு கார் டிரைவரும், ஒரு டிரக் டிரைவரும்... (DUEL) ஆங்கிலபட சினிமா விமர்சனம்



நிறையா பேரு இந்த படத்த பார்த்து இருப்பாங்க, அது மேட்டர் காதன்டி இந்த படம் பார்க்காதவங்களுக்கான நுவீஸ் இது
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

__ நம்ப டைனோசர் படம் எடுத்த ஸ்பீல் பெர்க் துரை எடுத்த பஸ்ட்டு எடுத்த பாயாஸ்கோப் இது , அந்த ஊர்ல மாமியார் மருமக சண்ட இல்லை அதனால மூக்கு சிந்த வைக்கிற சீரியல் எடுக்க சொல்லாம ஒரு படம் எடுக்க சொன்னாங்க , ஸ்பீல்பெர்க் தன் திறமைய நிருபிச்ச படம் .



கதை தக்கனுன்டுதான். ஒருத்தன் ஒரு சிவப்பு கலர் கார்ல ஏறிஒரு வேலை விஷயமா, கலிபோர்னியா பாலைவனம் வழியா ரொம்ப துரரம் கார்ல போறான் அப்போ ஒரு டேங்கர் லாரி அவனை காரை கிராஸ் பன்னுது அப்புறம் , போய் டிவிடி வாங்கி பாருங்கன்னா .



அஞ்சாதே படத்துல மொகம் காட்டாத மொட்ட பாஸ் கூட இந்த படத்தோட இன்ஸ்பிரேஷன்தான் . குறிப்பு செலவே இல்லாம படம் எப்படி சுவாரஸ்யமா எடுக்கறது எப்படின்னு இந்த படம் கத்துதரும் எல்லா ஊடகத் துறை மாணவர்களும் தவறாம பார்க்க வேண்டிய படம்
_

படத்தை பற்றிய சுவாரசிய தகவல்கள்....



படத்தில் ஒரு டிரக்கையும் காரை வைத்து ஒரு திரில்லர் தர முடியும் என்பதை திரையுலக பிதாமகர் ஸ்பீல் பெர்க் நிறுபித்தார் ..

முதலில் தொலைகாட்சி படமாக எடுத்து பின்பு இதை முழுநீள திரைப்படமாக மாற்ற பட்டது..

எல்லோர் மனதிலும் இருக்கும் ஆழ் மனது பயத்தை தன் கதைக்கு அடி நாதமாக எடுத்துக்கொண்டார்

படம் பார்த்து விட்டு எந்த லாரியும் ஹாரன் சத்தத்ததோடு நம்மை கடந்தால் ஈரக்குலை நடுங்கும்
_____________________________________________________________________________________
அன்புடன்- ஜாக்கி சேகர் _______________________________________

(பாகம்/3) பாம் வைக்கும் டீச்சர்...... HEAVEN 2002 திரைப்பட விமர்சனம்

பாம் வைக்கும் பள்ளிகூட டீச்சர்......





பாடம் சொல்லி கொடுக்கும் டீச்சர் பாம் வைத்தால் என்னவாகும்? அதுதான் ஹெவன் படத்தின் கதை ...

ஹெவன் படத்தின் கதை....
பிலிப்பா ஒரு பிரிட்டிஷ் டீச்சர் அவள் கணவன் மோசமான மருந்து உட் கொண்ட காரணத்தால் இறக்க நேர்கிறது.
அந்த ஊரில் இருக்கும் பெரிய டான் மருந்து கம்பெனி போர்வையில் போதை மருந்துகள் தயாரிப்பதால் அந்த மருந்து பிலிப்பா கணவன் நோய்க்காக எடுத்துகொள்ள,மருந்து ஓவர் டோஸ் ஆகி டீச்சர் பிலிப்பா கணவன் இறக்க நேர்கிறது.


இந்த உண்மை கண்டு பிடித்த டீச்சர் பிலிப்பா உண்மைகளை போலீ்ஸில் சொல்லியும் எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் தானே அந்த டானை கொல்லநினைக்கிறாள். கொஞ்சம் கடுகு உளுத்தம் பருப்பு,கொஞ்சம் கடலை எண்ணையில், வறுத்த ரவை கொட்டி உப்புமா செய்வது போல் ஒரு பாம் தயாரிக்கிறாள். அந்த பாம் சிறிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது

(படத்தின் இயக்குநர் Tom Tykwer, கதநாயகனுக்கும் கதநாயகிக்கும் முக்கியமான காட்சி பற்றி விளக்குகிறார்)

அந்த பாம் வெடிக்கும் போது ஒருவர் மட்டுமே இறக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வண்ணம் தாயரிக்கப்பட்டது.

இந்த படத்தின் திரைக்கதை ஆசிரியர் Krzysztof Kieslowski அபார மூளை செயலாற்றலால்,டீச்சர் பிலிப்பா அந்த மருந்து கம்பெனி டானை கொல்வதற்க்காக வைக்கப்ப்ட்ட பாம் வெடித்து இரண்டு சிறுமிகள்அவர்களின் தகப்பன், மற்றும் ஒரு வேலைகார பெண்மணிஎன நால்வர் இறக்கிறார்கள். டீச்சர் கைது செய்யபடுகிறாள்.

அவளை என்கவுன்டர் செய்ய அதிகார வர்கம் ஆவலாய் பறக்கிறது,அவளுக்கு மொழிப்பெயர்பாளனாக வரும்
FILIPPO - Giovanni Ribisi கதாநாயகன்அவளை காப்பாற்றுகிறான். அவளோடு அவன் காதல் கொள்கிறான். அவர்கள் சிறையில் இருந்து தப்பிக்கிறார்கள்,அதன் பிறகு இருவரும் பிடரியில் கால் பட ஓடுகிறார்கள், ஒரு கட்டத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள்.

அவர்கள் போலீஸில் மாட்டி க்கொண்டார்களா?அல்லது தப்பித்தார்களா? என்பதை ரொம்பவும் அற்புதமாக அலுப்பு தட்டாமல் சொல்லி இருக்கிறார்கள்..



படத்தின் சிறப்புகள்...

1. விஷீவலாய் இந்தபடம் ஒரு அற்புதமான பொக்கிஷம்

2.டீச்சர் பாம் வைக்க போகும் ஆரம்ப காட்சிகள் எதிலும் தேவை இல்லாமல் டயலாக் வைக்காமல் விஷீவலாகவே திரைக்கதை அமைத்து இருப்பது...

3.பாம் எடுத்துக்கொண்டு அவள் ரோட்டில் போகும் போது லோவ் ஆங்கிளில் ஒரு பெரிய டவர் பில்டிங் காட்டும் போது, எங்க பாட்டி ஸ்டைலில் சொல்ல வேண்டும என்றால் நம் ஈரக்கொளையே நடுங்குது...

4. தன் வைத்த பாமில் இரண்டு குழந்தைகள் இறந்தது அறிந்து டீச்சர் மயக்கம் ஆவதும் கதாநாயகன் அவள் மேல் காதல் கொள்வதும் மிக இயல்பாய் எடுக்கப்பட்டு இருக்கிறது

5. பால் வண்டியில் தப்பிக்கும் போது அவர்கள் தப்பி விட்டார்கள் என்பதை பால் வேனின் பின்புறக்கதவு திறந்து நடு ரோட்டில் பால் கேன்கள் உருள்வது டைரக்டரின் திறமைக்கு சான்று....

6. படத்தின் ஒளிப்பதிவாளர் Frank Griebe இவர் படத்தின் இரண்டாவது ஹீரோ, முக்கியமாக ஹெவன் என்று பேர் போடும் அந்த ஒரு ஈகிள் ஐ வீயுவ் ஷாட் ஒன்று போதும்...

7. படத்தின் ஈகிள் ஐ வீயுவ் ஷாட் காட்சிகள் இந்த படத்துக்கு மிகப்பெரிய பலம் மற்றும் நல்ல வீஷீவல் டேஸ்ட் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் அவர்கள் தப்பி போகும் ரயிலை டாப் ஆங்கிளில் காட்டுவதும் கொள்ளை அழகு...


8.இயக்குநர் Tom Tykwer காலத்தால் அழியாத ரன் லோ லா ரன் படத்தை எடுத்த பிதாமகர்.

9.இந்த படம் 2002 ஆம் ஆண்டு வெளிவந்தது ,94 நிமிடங்கள் ஓடும் இந்த படத்தின் கிளைமாக்ஸ் சிலருக்கு புரியாமல் போகலாம் அப்படி புரிய வில்லை என்றால் படத்தை மறுமுறை அவர்கள் பார்க்கவேண்டும்


10.இந்த படத்தை 60செகன்ட் பிரிவியு மற்றும் த வால் ஸ்டிரிட் ஜெர்னல் போன்ற பத்திரிக்கைகள் வெகுவாய் புகழ்ந்துள்ளன

இதுவாழ்வில்தவற விடாமல் பார்க்க வேண்டிய படம். எப்போது இந்த பதிவை படித்தாலும் இந்த படத்தை பார்த்தாலும் பின்னுட்டடடம் இட்டு என்னோடு உஙக்ள் சந்தோஷங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்....


உங்கள் கருத்து மற்றும் விமர்சனங்கள் எதிர்பார்த்து காத்து இருக்கும்...


அன்புடன்/ஜாக்கிசேகர்

(பாகம்/2) பார்த்தே தீர வேண்டிய படங்கள்..........


பார்த்தே தீர வேண்டிய படங்கள் ஒரு முன்னுரை..............





ஒரு படத்தை எப்படி பார்ப்பது என்று முதலில் நீங்கள் கற்றுக் கொள்ளவேண்டும்
ஒரு படத்தை எந்த இடையூறு இல்லாமல் பார்க்க வேண்டும். படம் பார்க்க வேண்டும். அதுவும் நல்ல படம் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் மட்டுமே படம் பார்க்க வேண்டும். பல பிரச்சனைகளை வைத்துக்கொண்டு படம் பார்க்க வேண்டாம்.

ஒரு திரைப்படத்தின் ஆரம்ப பத்து நிமிடங்களை ஹீக் என்று அழைப்பார்கள் அதாவது எதோ எதோ பிரச்னைகள் மற்றும் மன நிலைகளில் படம் பார்க்க வரும் ரசிகனை, அந்த படத்தின் தொடக்க காட்சிகள் அந்த படத்தோடு அந்த ரசிகனை
கட்டி போட வேண்டும்.
பொதுவாக பத்து மணிக்கு படம் என்றால் ஒன்பது ஐம்பதுக்கு தியேட்டர் உள்ளே இருக்க வேண்டும். ஆனால் நம்மவர்கள் பத்து இருபதுக்கு உள்ளே வந்து எல்லாருடை காலை மிதித்து விட்டு படம் போட்டு எவ்வளவு நேரம் இருக்கும்?என்று நம்மிடம் எறிச்சலுட்டும் கேள்வியை கேட்டுவைப்பார்கள். “எவ்வளவோ சீக்கிரமாகதான் வந்தேன் கொஞ்சம் டிராபிக்ல மாட்டிகிட்டேன்”என்று நாம் கேட்காமலே விளக்கம் எல்லாம் தருவார்கள்.

நமது படங்கள் எல்லாம் முதலில் ஹீரோ என்ட்ரி உடனே ஒரு சாங் வைத்து விடுவார்கள். நம்மாளு ஒரு தம் போட்டு வெட்டி கதை பேசி எல்லாருடைய காலை மிதிச்சு படம் போட்டு பத்து நிமிஷம் இருக்குமா? என்ற கேனை கேள்வி கேட்கும் போதுதான் நம்ம டைரக்டர்கள் மெயின் சப்ஜெக்டுக்கு வருவாங்க...(உம்) ராமராஜன் படங்கள்

சரிசார் ஹீக் படங்களுக்கு எதாவது உம் கொடுங்கள் சார் .

ஓகே தனுஷ் நடிச்ச பொல்லாதவன் படம் பார்த்து இருப்போம் அதுல, எடுத்ததும் ஹீரோ திரையை பார்த்து சில வசனம் பேசுவார், நான் ரெண்டு பேரை போட்டுட்டன், ரெண்டு பேர் தப்பிச்சு என் வீட்டுக்கு போயிருக்காங்க, அவுங்க போறதுக்குள்ள நான் வீட்டுககு போகனும். எனக்கு கால்ல ஒரு வெட்டு வேற விழுந்து இருக்கு, என்று சொல்லி நடந்து வந்து, ஒரு பல்சர் பைக் அருகே ரத்தகாயங்களுடனும் கையில் கத்தியுடன் வந்து நிற்பார்.

ரத்தகாயங்களுடனும் நிற்க்கும் ஒரு ஹீரோ எல்லாத்துக்கும் இந்த “பல்சர்பைக்”தான் காரணம் என்று சொன்னால் உங்களுக்கே மனதில் கேள்வி வரும் எப்படி இந்த பைக் காரணமாக இருக்கும்என்ற கேள்விகளோடு கவனமாக கதை மேல் ஒன்றி படம் பார்க்க துவங்குவீர்கள்.

பொதுவாக பொல்லாதவன் வெற்றிக்கு அந்த கதையுடன் பார்வையாளனை கட்டி போட்ட விதம்தான் அந்த படத்தின் வெற்றிக்குகாரணம் தறுதலை புள்ள, காதல், அப்பனை எதிர்த்தல் போன்ற பல விஷயங்கள், பார்த்து பார்த்து சலித்து போன கதை என்றாலும், அதை வெற்றிமாறன் கொடுத்த விதம் படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது என்பேன்.

பொல்லாதவன் படத்தின் கூடுதல் வெற்றிக் காரணம் நான் முன்பே சொன்னது போல் தமிழர்கள் 15 நிமிடம் படம் ஓடி பார்ப்பவர்கள் அதனால் பொல்லாதவன் படத்தின் முதல் பத்து நிமிடங்களை பார்க்கவில்லை என்றால் திரும்பவும் அந்த படத்தினை பார்த்தே ஆக வேண்டும் அதனால் கூட அந்த படம் ஓடி இருக்கும்
( சும்மா ஜோக்கு)


சரி ஒரு படம் எப்படி இருக்கவேண்டும்? இந்த பொருளாதார பிரச்சனைகள் மிகுந்த வாழ்வில் எந்த படம் இரண்டு மூன்று நாட்கள் அந்த படத்தின் பாதிப்பு தொடர்ந்து இருக்கிறதோ அதுதான் நல்லபடம். (உம்) காதல் திரைப்படம்.

சார் எங்களுக்கு ஷகிலா நடிச்ச கனவில் கில்மா கூடதான் என் நெஞ்சிலேயே மூணு நாலு, நாளைக்கு இருக்கு அது எப்படின்னு நண்பர் நித்யயயயா போல கேள்வி கேட்க கூடாது. அந்த மாதிரி படங்கள் உங்க நெஞ்சிலயும் இருக்கும்,உங்க கு.........இருக்கும்.
( உங்க குண்டக்க மண்டக்க கேள்வியிலயும் இருக்கும்னு சொல்ல வந்தேன்)

லெட்மீ கம் டு த பாயிண்ட்....
இப்போது நான் எழுத போகும் படங்கள் சத்யஜித்ரே காலத்து பழம்காலத்து படங்கள் அல்ல....

அதே போல் சோகத்தை மட்டும் பிரதானமாக கொண்ட படங்கள் அல்ல.பொதுவாய் பிளாக் அண்டு ஓயிட் படங்களை பற்றி நான் எழுத போவது இல்லை. நான் சொல்ல போகும் படங்கள் உங்களுக்கு அந்த படம் பாதிப்பை ஏற்படுத்த வேண்டும்.

எனென்றால்அவார்டுவாங்கும் எல்லா படங்களும் சூப்பர் படங்கள் அல்ல, போன உலக பட விழாவுக்கு முந்தய உலக படவிழாவின் போது எழுத்தாளர்கள் சுபா வை சந்தித்தேன், அவர்கள் இருவரும் என்னுடைய நண்பர்கள் அதிலும் பாலகிருஷ்னன் எப்போதும் என்னை நினைவில் வைத்து இருப்பவர்...

அவர்கள் ஒரு உக்ரென் நாட்டு படம் பாத்து விட்டு வெறுத்து போய் வெளியே வந்தார்கள் அந்த படத்தின் கதை என்னவென்று கேட்டேன் சார் ஒருத்தன் கேமராவை பத்து நிமிஷம் பார்த்துகிட்டே இருக்கான்சார் அப்புறம் இன்னொருத்தன் காட்டுறாங்க என்ற வெறுத்துபோய் சொன்னார்கள். சில படங்கள் படம் பார்த்தவர்களை வெறுக்க வைக்கும் படங்களும் இதில் அடங்கும்



நாம் அப்படி பட்ட படங்கள் இல்லாமல் ரொம்பவும் எல்லோரையும்,என்னையும் கவர்ந்த படங்களை இனி பார்ப்போம். நீங்கள் பின்னுட்டம் மற்றும் உங்கள் ஓட்டுக்களை வைத்தே என் கலைதாகம் அதிகரிக்கும்

அன்புடன்/ ஜாக்கிசேகர்

தர்மம் ஜெயித்தது, பசுபதி பாவம் சும்மா விடவில்லை



ரஜினி நடித்த குசேலன் என்றுகுசேலன் படத்தைவிளம்பர படுத்தி 60 கோடி ரூபாய்க்கு அந்த படத்தை சாய்மீரா நிறுவனத்திடம் கவிதாலயா விற்றது ஊருக்கே தெரிந்த கதைதான்

அதே போல் குசேலன் கதை உலகத்துக்கே தெரிந்த கதைதான்.
கிருஷ்ணரை பற்றிய கதை என்றால் ரஜினி நடித்த என்று போட்டு இருக்கலாம் அதில் யாருக்கும் எந்த ஆட்சேபனை இல்லை. ஆனால் குசேலன் பற்றிய கதையில் பசுபதி நடித்த என்று தான் வர வேண்டும் அதை விடுத்து ரஜினி என்ற மனிதரின் முகத்திற்க்காக படம் ஓட வேண்டும் என்பதால் பிரதான பாத்திரம் ஏற்று நடித்த பசுபதி இசை வெளியீட்டு விழாவில் புறக்கணிக்கப்பட்டார்


வியாபார உத்திக்காக கடைசி வரை பசுபதி இருட்டடிப்பு செய்யப்பட்டார். குசேலன் நாளை ரிலீஸ் என்ற நிலையில் அவர் போட்டோ சுவரொட்டிகளில்
தோன்ற ஆரம்பித்தார்... இது பற்றிய பதிவு ஏற்க்கனவே எழுதி இருக்கிறேன்


இந்த கூத்துக்ளை எல்லோரும் அறிந்ததுதான் இப்போது நஷ்டத்துக்கு ரஜினி பொறுப்பு ஏற்க்க வேண்டும் இல்லை என்றால் ரஜினி படத்துக்கு ஒத்துழைப்பு கொடுக்க மாட்டோம் என தியேட்டர் உரிமையாளர்கள் போர்க் கொடி உயர்த்தி உள்ளார்கள்

பசுபதி ரொம்பவும் சந்தோஷமாக இருப்பதாக தகவல்.............


அன்புடன்/ ஜாக்கிசேகர்

(பாகம்/1)அனைத்து வலைபதிவர்களுக்கும் ஒரு அறிவிப்பு....






பொதுவாய் நான் வலைபதிவுலகுக்கு வந்து மூன்று மாதங்கள்தான் ஆகின்றது. ஆனால் இதுவரை 9304 பேர் என் பதிவை வாசித்து விட்டார்கள்... என் எழுத்து ரசிக்க தக்கதாகவே இருக்க வேண்டும் என்பது என் எண்ணம். இறைவனுக்கும் நன்றி.எனக்கு தமிழ் புதினங்கள் வாசிக்க கற்று கொடுத்த என் அன்னைக்கும் என் நன்றிகள். சில விஷயங்களை சுவை பட எழுதிகிறேன் என்பது எனக்கே தெரிகின்றது .

என் பதிவுகளை மாற்று வலை பக்கத்தில் தொடர்ந்து இடம் கொடுக்கும் நண்பர்களுக்கும், மற்றும் பல வாசக நண்பர்கள் என் பக்கத்தினை லிங்க் கொடுத்து மற்றவருக்கு படிக்க உதவியாய் இருந்தவர்களுக்கும் என் நன்றிகள்


தொடர்ந்து என் பதிவை வெளியிட்டுவரும் தமிழ் மணத்துக்கு என் நன்றிகள் தேன்கூடு எப்போதாவதுதான் என் பதிவை வெளியிடுகிறது அதே போல்தான் தமிழ் கனிமை மற்றும் தமிழ் வெளி போன்றவைகள் எல்லாம்......




மூன்று மாதங்களுக்கு முன் என் வீட்டுக்கு எதெச்சையாக வந்த நண்பர் நித்யா
http://nithyakumaaran.blogspot.com/ பதிவை துவக்கி கொடுத்தார்.அவருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். எற்கனவே பதிவுகள் பற்றி தெரிந்து இருந்தாலும், என் தயக்கங்களை உடைத்து என்னை உற்சாகபடுத்தியது நித்யாதான்.

பொதுவாய் பிறர் வலைதளம் சென்றாலும் கருத்து மோதலில் சிக்காமல் இருக்கவே நான் ஆசைபடுபவன் இருப்பினும் என் எழுத்துக்ளை தொடர்ந்து வாசித்து பின்னுட்டம் இட்டும் உற்சாக படுததிவரும் பதிவர்கள், மங்களுர் சிவா, வெண்பூ,நித்யா,இவன், கிரி,போன்ற சில முகம் தெரியாத பதிவர்களுக்கு என் நன்றிகள்.

மங்களுர் சிவா ஒரு படி மேலே போய் அவர் பதிவில் எனது பதிவை இனைக்க அவர் பதிவு மூலமாக நிறைய பேர் வாசிக்கிறார்கள் திரு மங்களுர் சிவாவுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்


நான் நிறைய படங்கள் பார்ப்பவன், நான் ஒரு கேமராமேன். நான் இதுவரை முன்று குறும்படக்ள் இயக்கி இருக்கிறேன். நான் இயக்கிய முதல் படம் துளிர் எனும் படம் மாநில அளவிலான குறும்பட போட்டியில் முன்றாம் பரிசு பெற்றது.

நிறைய உலக பட விழாக்களில் கலந்து கொண்டு இருக்கிறேன்.யார் யாரோ படங்களின் விமர்சனங்கள் எழுதும் போது,
நான் ரசித்த நெகிழ்ந்து போய் கண்களில் ஜலம் வைத்து பார்த்த படங்களை

“பார்த்தே தீர வேண்டிய படங்கள்”

எனும் தலைப்பில் எழுத போகிறேன் உங்கள் மேலான கருத்துக்களையும் ஆதரவுகளையும் கொடுக்க வேண்டுகிறேன்.

இதில் எந்த நாட்டு மொழிப்படமாக இருந்தாலும் அது இந்த வரிசையில் இருக்கும். அது வாசகர்கள் முன்பே பார்த்த படமாக கூட இருக்கலாம்.

எல்லா நல்ல படங்களையும் இந்த அடைப்புக்குள் சேர்க்க வேண்டும் என்பதே என் எண்ணம்

அன்புடன்/ ஜாக்கிசேகர்

நல்ல படங்களை புறக்கணி்க்கும் நம்மவர்கள்....


நல்ல படங்களை தமிழர்கள் புறக்கனிப்பது என்பது இன்று நேற்று நடக்கும் விஷயம்ல்ல , சில படங்கள் நல்ல விளம்பர படுத்தபட்டும் சரியாக ஓடாது. சில படங்கள் காதநாயகர்களின் ரசிகர்களின் போட்டியால் படங்கள் படு தோல்வி அடையும்

சில படங்கள் மிக நன்றாக இருந்தும் படம் வாங்கிய வினியோகஸ்தர்கள்,மற்றும் இயக்குநர்கள்,தயாரிப்பாளர்கள் அலட்சியத்தால் மற்றும் தமிழ் சினிமா ரசிகர்களின், சினிமா பற்றிய புரிதல் காரணமாக படம் ஓடாமல் போய்விடும் அந்த வகையில் நேற்று சன் டிவியில் ஒளிபரப்பான கண்னா அந்த வகையை சார்ந்தது அல்லது மேலுள்ள லிஸ்ட்டில் சேர்க்கபட்டவை எனலாம்.

கண்னா படம் பற்றி ஒரு சிறு விமர்சனம்...

கோவையில் ஒரு பணக்காரர் பிரகாஷ்ராஜ் மற்றும் அவர் மனைவி சரண்யா இந்த தம்பதிகளுக்கு ஒரு பத்தாம் வகுப்பு படிக்கும் பெண். மற்றும் ஒரு பையன் இருக்கிறார்கள்.பெண் ஊட்டிக்கு சுற்றலா செல்கையில் அங்கு கண்னா எனும் வாலிப வயதுடைய பையன், அந்த பெண்ணுக்கு பழக்கம் ஆகிறான். சுற்றுலா முடிந்து வந்தாலும் அந்த பையன் ஞாபகமாக இருக்கும் அந்த பெண் பெற்றோருக்கு தெரியாமல் ஊட்டிக்கு சென்று அந்த பையனை சந்திக்க விருப்புகிறாள் அந்த பத்தாம் வகுப்பு படித்த அந்த பெண் அந்த கண்னா என்ற பையனை சந்தித்தாளா? அந்த பத்தாம் வகுப்பு பருவ பெண்ணுக்கு நேர்ந்த கொடுமைகள் என்ன? என்பதுதான் கதை .


தமிழில் இந்த மாதிரி கதை முயற்ச்சிகள் எப்போதாவது அத்தி பூத்தாற் போல் நடக்கும் விஷயங்கள். இந்த படத்தின் தயாரிப்பாளருக்கு பிரகாஷ் ராஜுக்கு கொடுத்த சம்பளமாவது கிடைத்து இருக்குமா என்பது தெரியவில்லை.

பெண்னை கானோம் என்றதும் பிரகாஷ்ராஜ் ஒரு நடுத்தர தகப்பனின் அவஸ்தையை மிக அழகாக வெளிபடுத்தி இருக்கிறார் அதே போல் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஷுலா பெரும்பாலான படங்களில் தன் மார்பையும், இடுப்பையும் நம்மி களம் இறங்கும் இவர் இந்த படத்தில் தன் நடிப்பை நம்மி களம் இறங்கி இருக்கிறார் அது நன்றாகவே கை கொடுத்து இருக்கிறார்.


பெண் கிடைத்த உடன் எந்த ஆர்பாட்டமும் இல்லாமல்அந்த பெண்னை அனைத்து கொண்டு தேற்றுகிறார்கள் பாருங்கள் அது ஒன்று போதும் இது நல்ல படம் என்று உணர்த்த...


படத்தை இயக்கிய திரு ஆனந் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.படத்தில் எந்த லாபமும் கிடைத்து இருக்காது.இருப்பினும் இந்த மாதிரி கதைகளை படமாக்க முன் வந்த தயாரிப்பாளருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்


அன்புடன் /ஜாக்கிசேகர்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner