(பாகம்..8) மாத சம்பளம் ஒரு லட்சத்துக்கு136ரூபாய் கம்மியாக வாங்கிய சாப்ட்வேர் இளைஞனின் சோக கதை




(இது கொஞ்சம் கற்பனையும் நிறைய உண்மைகளும் கொண்ட கதை)





நிரு ஆறுமாத கர்பத்துடன் வேலைக்கு சென்றால், தினமும் காரில் நிருவை அவள் ஆபிஸில் விட்டுவிட்டு செல்வான்

பல சோதனைகள் மற்றும் வேதனைகளை தான்டி இரட்டை குழந்தைகளை நிரு பெற்றாள் நிரு அம்மாவுக்கு தகவல் சொல்லி அனுப்பபட்டது. அடுத்த பிளைட் பிடித்து தாயையும் சேயையும் பார்த்து விட்டு சென்றால் போகும் போது இரண்டு லட்சம் பணக்கட்டுயை நிரு அம்மா கமலிடம் கொடுத்தால் ,தேவையான பணம் இருக்கிறது , உங்கள் அன்பு மட்டும் போதும் என்றான்.

மாப்பிள்ளை ரொம்ப ஜென்டில் மேன் போல் நடந்து கொண்டதில் நிரு அம்மாவுக்கு ரொம்பவும் மகிழ்ச்சியாக இருந்தது. கொஞ்சம் நாள் கழித்து நிருவின் அப்பாவும் குழந்தையை பார்க்கும் சாக்கில் வந்து ஒட்டிக்கொண்டார்

அம்மா அப்பா ஒன்று சேர்ந்ததும் நிரு மப்பு தலைக்கு ஏறிசுத்தமாக மாமனார் மாமியாரை மதிக்காமல் எடுத்து எறிந்து பேசினால் சட்டென்று ஸ்டேட்டஸ் பற்றி பேச ஆரம்பித்தால்.

கலைஞருக்கு ராமதாஸ் கொடுத்த குடைச்சல் போல் நிருவின் அனைத்து செயல்களும் இருந்தன.
நிருவன் செயல்களால் வெறுத்து போன கமல் அம்மாவும் அப்பாவும் பெஙக்ளுர் வருவதை நிறுத்திக்கொண்டார்கள். இவன் மட்டும் இரண்டு அல்லது மூன்று வாரத்திற்க்கு ஒரு முறை சென்னை வந்து பார்த்து செல்வான்.

கமலு்க்கு சம்மபளம் ஏற்றப்பட்டது எவ்வளவு தெரியுமா ?மாதம் ஒரு லட்சத்துக்கு196 ஆறு ரூபாய் கம்மியாக சம்னளம் வாங்கினான்.

சசிகலா அடம் பிடித்து டான்ஸி நிலம் வாங்க சொல்லியது போல் நிரு கமலை அடம்பிடித்து பெங்களுரில் வீடு வாங்க சொன்னாள். கமல் சென்னையில் வீடு வாங்கலாம் என்று எவ்வளவோ சொல்லியும் கெஞ்சியும் காதில் நிருபோ்ட்டு கொள்ளவில்லை.

கமல்பெங்களுரில் 65 லட்சத்துக்கு வீடு வாங்கினான். அப்போதாவது குடம்பம் நன்றாக இருக்கும் என்று நம்பினான். இரண்டு குழந்தைகளை பார்த்து கொள்வதற்க்காக நிரு அம்மா தன் மகள் கூடவே இருந்தாள்.

ஆறுமாதம் கழித்து அவள் வேலைக்குசென்றாள். கமல் எவ்வளவோ எடுத்து சொல்லியும் நிரு வேலைக்கு சென்று வந்தால், காரில் நிருவை பிக்கப் பண்ண போகும் போது எல்லாம் எல்லோரும் இந்தியர்கள் மன நிலையில் நிருவை பார்த்தார்கள்.

(இந்தியர் மன நிலை என்பது, “தன் பொண்டாட்டியை எவனும் பார்க்க கூடாது, மத்தவன் பொண்டாட்டியை எப்படி வேண்டுமானாலும் பார்க்கலாம்”)

நிருவுக்கு அப்படி பார்பது பிடித்து இருந்தது, கமலுக்கு அப்படி இருப்பது சுத்தமாக பிடிக்கவில்லை.

கமல்எதிர்பாராத அதிர்ச்சியாக திடிரென நிரு பிள்ளைகளுடன் சென்னை செல்வதாக கூறினாள்,அங்கே தன் கம்பெனி மாறுதல் உத்தரவு தந்து இருப்பதாகவும். மாதம் 40,000ஆயிரம் கிடைக்கும் வேலையை விட தான் தாயராக இல்லை என்றாள். அதற்க்கு மாமியார்காரியும் ஒத்து ஊதினாள்.

வேறு வழி இல்லாமல் கமலை விட்டு விட்டு நிருவும் குழந்தைகளும் சென்னையில் குடியேறினாள். பிள்ளைகளை சென்னையல் பிரபல பள்ளியில் எல் கே ஜி சேர்த்தாள்


இதற்க்குள் தன் தங்கைக்கும் தன் தம்பிக்கும் வெகு விமர்சியாக திருமனம் செய்து வைத்தான், பெங்களுர் நண்பர்கள் பலருக்கு கேட்காமலேயே உதவி செய்தான்,

மூளை கசக்கும் வேலை செய்து வீட்டுக்க வந்தால், தன் குழந்தைகளும் மனைவியும் சென்னையில் இருப்பதால்,தன் சொந்த வீட்டில் மிக வெறுமையாக உணர்ந்தான்.

மாதம் இரண்டு முறை பெங்களுரில் இருந்து கார்மூலம் சென்னை வந்து முதலில் கல்பாக்கம் போய் அம்மா அப்பாவை பார்த்து விட்டு பிறகு மாமியார் வீடு சென்று குழந்தைகளை பார்த்து விட்டு ஞாயிறு விடியலில் காரில் பெங்களுர் செல்வான். தனைக்கு சென்னையில் இருந்து பெங்களு்ரில் தங்கி வேலைபார்க்கும் நண்பர்கள் காரில் வருவார்கள்

சனிக்கிழமை மாமியார் வீட்டில் இருந்து ஞாயிற்று கிழமை தன் அம்மாவீட்டுக்கு தன் குழந்தைகள் மற்றும் நிருவை அழைத்தால் ரொம்பவே ஷோ காட்டுவாள். கமல் வீட்டில் இருக்கும் போது எப்போதும் உம் என்று உட்கார்ந்து இருப்பாள்

மாதம்ஒருலட்சம் வரை சம்பாதித்தும் தனக்கு ஏன் நிம்மதி இல்லை என்று புலம்பினான். பணம் மட்டும் இருந்தால் நிம்மதி இருக்கும் என்று சொன்னவர்களை கமல் புன்சிரிப்புடன் பார்த்தான். கமல் உனக்கு என்னடா கவலை பொண்டாட்டி 40,000 ஆயிரம் சம்பாதிக்கிறா, நீ ஒரு லட்சம் சம்பாதிக்கிற என்று கல்பாக்கம் நண்பர்கள் கேலி செய்யும் போது கமல் மனதுக்குள் அழுதான்...

கமல் தன் பிள்ளைகள் பேரில் 5 ஏக்கர் நில்ம் செங்கல்பட்டு அருகே நிலம் வாங்கி விட்டு தன் நண்பர்கள் மற்றும் அம்மா அப்பாவை பார்த்து விட்டு நிரு குழந்தைகளுடன் ஊர் சுற்றி விட்டு இரவில் தன் நண்பனுடன் காரில் பெங்களுர் நோக்கி பறப்பட்டான்
வாணயம்பாடிக்கு பக்கத்தில் ஒரு டீக்கடைக்கு சற்றுதள்ளி காரை நிறுத்தி விட்டு இயற்கை உபாதை முடித்து டீ குடித்து விட்டு காரில் முதலில் கமல் நண்பன் உட்கார கார் பின் புறமாக கமல் நடந்து வந்து டிரைவிங் சீட்டில் உட்கார எத்தனிக்கும் போது பெங்களுர் செல்லும் லாரி கண்இமைக்கும் நேரத்தில் கமல் மீது மோதியது சத்தம் பெரிதாகவும் கேட்கவில்லை .

காரில் உட்கார்ந்த கமல் நண்பன் ஏன் இன்னும் கமல் ஏறவில்லை என்று கார் விடடு இறங்கி காரை சுற்றி வந்து கமலை பார்த்த போது மூன்று நிமிடத்துக்கு முன் கலகலப்பாக பேசிய கமல் தன் ஒரு பக்க முகத்தை இழந்து ரத்த வெள்ளத்தில் துடிப்பதை பார்த்து அதிர்ச்சியில் கமல் நண்பன் தரையில் சாய,


ரொம்ப நேரமாக டீ குடித்து போயு்ம் அந்த கார் நகராமல் இருப்பதை பார்த்து டீகடைகாரர் மகன் கார் அருகே வந்து பார்த்த போது,
கமல் ஒரு ப்க்க முகம் சிதைந்து துடித்து கொண்டு இருப்பதையும் ஒருவர் சுய நினைவின்றி இருப்பதை பார்த்து ஆம்புலண்ஸ்க்கும் போலிஸிக்கும் தகவல் கொடுக்க,


ஆம்புலண்ஸ் மற்றும் போலீஸ் இரண்டும் சவகாசமாக வந்து சேர்ந்த போது கமல் நண்பன் பேய் பிடித்தது போல் பேந்த பேந்த விழிக்க,

கமல் என்ற, ஒரு லட்சம் சம்பளம் வாங்கிய சப்ட்வேர் இளைஞன் முகம் சிதைந்து ஏன் சாகிறோம் என்று தெரியாமலேயே செத்து போனான்

பொது மக்கள் கமலை“ பாடி” என்று அழைத்த போது கமலின் பெற்றோர் வாணியம்பாடி அரசு பொது மருத்துவமனை சவகிடங்குக்கு அலறலுடன் வந்து சேர்ந்தார்கள்.....

(தொடரும்)

ஜாக்கிசேகர்

பாலச்சந்தருக்கும், ரஜினிக்கும் கோடன கோடி நன்றிகள்...
















சென்னை நகரெங்கும் உச்ச நடிகர் ரஜினி நடிக்கும் குசேலன் பட சுவரொட்டிகள் இப்போதுதான் பார்க்க நேர்ந்தது,

அதில் பசுபதி என்ற நடிகர் கூட நடிக்கிறார் போல் தெரிகிறது. படத்தில் நடிக்கவில்லை என்றால் பட போஸ்டரில் வரமுடியுமா? என்ன..

பாடல் வெளியீட்டு விழாவில் கூட ரஜினி அவர்களின் படம் தவிர வேறு எவருடைய படமும் அதில் இல்லை,

குசேலன் கதை என்ன என்று சிறு வயது முதலே நன்றாக தெரியும் அவல் கொடுத்த கதையும் அல்வா கொடுத்த கதையும் எல்லோருக்கும் தெரிந்தததே...

அதே போல் ரஜினி அங்கிள் இங்க இங்க என்று அஹஹ என்று அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில்சிரிக்குமே அந்த பொண்ணு பேரு என்ன? மீனாவா அந்த பொண்ணு கூட நடிச்சிருக்குப்பா...

இருப்பினும் வியாபார தந்திரத்துக்காக பசுபதி படம் பாடல் வெளியீட்டு விழா சவரொட்டியில் விடுபட்டு இருக்கலாம்

இப்போதாவது பசுபதி படத்தை சுவரொட்டியில் சேர்த்தார்களே அதற்க்காக உச்ச நடிகர் ரஜினிக்கும், பெருமை நிகர் நிறுவனமான கவிதாலயா நிறுவனத்துக்கும் என் நன்றிகள்

சினிமா ஒரு கூட்டு முயற்சி என்று எங்கோ படித்ததாக ஞாபகம்...

இந்த சனியம் புடிச்ச ஞாபகம் இந்த மாதிரி வரி எல்லாத்தையும் சுதி மதி இல்லாம ஞாபகபடுத்தி தொலைக்குது




அன்புடன்/ ஜாக்கிசேகர்

இந்தியாவில் நடுத்தர குடிமக்கள் பயமின்றி உயிரோடு வாழ ஒரு எளிய வழி.....


புரூஸ் வில்லீஸ் மற்றும் சாமுவேல் ஜாக்சன் இருவரும் கலக்கிய படம் டைஹார்ட் பார்ட்3 அதே போல் இந்தியாவின் தொழில் நகரான சூரத் நகரில் 18 இடங்களில் வெடிக்காத குண்டுகள் கண்டுபிடித்து உள்ளது காவல்துறை அது மட்டும் வெடித்து இருந்தால் சொல்ல முடியாத அளவுக்கு உயிர் சேதம் பொருட் சேதம் ஏற்பட்டு இருக்கும்.


முக்கிய முடிவுகள் எடுக்க முதலமைச்சர் கூட்டம் ஏற்பாடு செய்து பல முக்கிய முடிவுகள் தீவிர வாதிகளுக்கு எதிராக ,எடுக்க உ ள்ளதாக மத்திய அமைச்சகம் தெரிவித்தது ஆனால் இதுவரை கூட்டவில்லை....

ராஜசேகர ரெட்டி ஆப்பிரிக்காவில் இருக்கிறார், கருணாநிதி அமெரிக்காவில் இருக்கிறார், எடியுரப்ப ஆர்டிக் பிரதேசத்தில் இருக்கிறார் பாருங்கள் இன்னும் முதலமைச்சர் கூட்டத்தை கூட்டடவில்லை.

பொதுவாக இதுவரை 50 பேர்தான் செத்து இருக்கிறார்கள், இன்னும் சாவு எண்ணிக்கை கூடும் போது யோசிப்பார்பகள் போலும்......


நாளை பள்ளிகல்லூரிகளுக்கு விடுமுறை அளித்துள்ளதுசூரத் மாவட்ட நிர்வாகம்..



போர்கால நடவடிக்கை என்றால் என்ன என்று இதுவரை இந்திய அரசு உணரவில்லை


பெங்களுரில் வெள்ளிக்கிழமை இறந்த இரண்டு பேரை பற்றி நாம் என்ன பெரிதாக கவலைபட்டுவிட முடியும்...
அவர்கள் குழந்தைகளுக்கு என்ன செய்து விடமுடியும் இந்திய அரசு கொடுக்கும் நிவாரன பணம் ஒருலட்சம் ரூபாய். ஒரு
எல் கே ஜி சீட் கூட வாங்க முடியாது....


நாம் கையலாகத நடுத்தர வர்கம் தானே, மிஞ்சி போனால் பிளாக் எழுதலாம் அல்லது ஹின்டுவுக்கு லட்டர் டு தி எடிட்டர் எழுதலாம்

இந்தியராய் பிறந்து உயிரோடு இருக்க வேண்டும் என்றால் அடுத்த ஜென்மத்தில் , சோனியா ,மன்மோகன்சிங்,அத்வானி,சிவராஜ்பாட்டில்,பிரனாப்முகர்சி, லாலூ போன்றவர்களுக்கு மகனாக,மகளாக பிறப்பதை தவிர வேறு வழியில்லை.

எனக்கு இதுவரை இதை தவிர வேறு வழி தெரியவில்லை, உங்களுக்கு??????????????????????????????????????????????????????????????????????


அன்புடன்/ ஜாக்கிசேகர்

இந்தியாவில் பொதுமக்களின் உயிரின் விலை ரூபாய் ஒருலட்சம்...

பெங்களுர் குண்டு வெடிப்பில் இரண்டு பேர் இறந்து போனார்கள், தீவிரவாதிகளின் இந்த கொடுஞ்செயலை நமது பாரத பிரதமர் கண்டித்தார்.


அப்புறம் உள்துறை அமைச்சகம் கண்டித்தது , அப்புறம் உள்துறை அமைச்சர் கண்டித்தார். அப்புறம் பெங்களுர் போலீஸ் கமிஷ்னர் கண்டித்தார், அப்புறம் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து இறந்தவருக்கு ஒரு லட்சம் அறிவித்தார்கள்.

அப்புறம் பாரளுமன்றத்தில் மணியாட்ட போய்விட்டார்கள், செப்டம்பர் 11க்கு பிறகு அமெரிக்காவில் எங்காவது குண்டு வெடித்ததா???,

எல்லா பெரிய பொறுப்பில் உள்ள எல்லோருக்கும் கருப்பு பூனை படை இருக்கிறது. பொது மக்களுக்கு??? இந்திய நாடளுமன்ற வளாகத்தில் துப்பாக்கி வெடித்த போது இந்திய இறையான்மையை கேலிக்குள்ளாக்கும் செயல் என்றார்கள் இப்போது என்ன செய்ய போகிறார்கள்???


அய்யா தீவிரவாதிகளே குண்டு வைப்பது என்றால் பெரிய இடத்தில் வையுங்கள், அண்ணாடம் காய்சி பொதுமக்கள் பகுதிகளில் வைக்காதீர்கள், உங்களுக்கு புண்ணியமாக போகும்,எனெனில் அவர்கள் உயிரின் விலை ஜஸ்ட் ஒரு லட்சம்தான்

அன்புடன் /ஜாக்கிசேகர்

விஜய் நடித்த குருவி படம் பற்றி அடுத்த ஜோக்.....

















ஒருவர் / ஹலோ விஜய் சாருங்களா?


விஜய் / ஆமாம் விஜய்தான் பேசறன்

ஒருவர் / உங்க குருவி படத்தால எங்களுக்கு நல்ல கலெக்ஷன்


விஜய் / நீங்க எந்த தியேட்டர் ஓனர்,

ஒருவர் / நாங்க அமிர்தாஞ்சன் கம்பெனி ஓனர் பேசறன்

விஜய்/ ????????????????????????????????????,


அன்புடன்/ ஜாக்கிசேகர்

(பாகம்..7)மாத சம்பளம் ஒரு லட்சத்துக்கு136ரூபாய் கம்மியாக வாங்கிய சாப்ட்வேர் இளைஞனின் சோக கதை





(இது கொஞ்சம் கற்பனையும் நிறைய உண்மைகளும் கொண்ட கதை)



கமல் பெங்களுருவில் வீடு பார்த்தான், எந்த பிரச்சனையும் இல்லாமல் இருக்க தனி வீடு பார்த்தான்...

ஒரு சுப யோக சுப தினத்தில் தமிழர்களை வெறுக்கும் கன்னட வெறியர்கள் மண்ணில் தன் சொந்தங்களை விட்டு குடி யேறினான்.

92ல் சொந்த நாட்டிலேயே ஈழத்தமிழர் போல் பெங்களுரி்ல் உதை வாங்கிய சம்பவங்களை அவனுக்கு கல்பாக்கம் நண்பர்கள் மூலம் ஞாபகப்படுத்தப்பட்டன..

இருப்பினும் ரோஜா படத்தில் எஸ் வி சேகர் அப்பா மதுபாலாவிடம் குழி பணியாரம் கேட்டு விட்டு, ரிஷி இந்த நேரத்தில் உன்னை காஷ்மீர் அனுப்பறத நினைச்சா, எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு என்பர். அதற்க்கு நம்ம அரவிந்சாமி, “காஷ்மீர் போக ஏன் சார் பயப்படனும், காஷ்மீர் நம்ம இந்தியாவுலதான் சார் இருக்கு”என்பார் அந்த டயலாக் எல்லாம் நினைத்து மனதை தேற்றிகொண்டான்..

வீடு குடியேறிய போது எல்லா தேவையான பொருட்களையும் கமல் அம்மா,அப்பா வாங்கி வைத்தார்கள், நிரு பெண்வீட்டு பொருளாக ஏதும் எடுத்து வராததால் எல்லா பொருட்களும் வாங்கி வைத்தார்கள்...

கமலும் நிருவும் ரொம்ப சந்தோஷமாக வாழ்வை துவங்கினார்கள். அது காங்கிரஸ் இடதுசாரி கூட்டனி போல் இருந்தது...கமலுக்கு ஒரு பழக்கம் இருந்தது தினமும் வேலை விட்டு வந்து எந்த நேரமாக இருந்தாலும் அவன் அம்மாவுக்கு போன் செய்வதை வழக்கமாக கொண்டு இருந்தான்

கிழே பேசும் அனைத்து டயலாக்குகளும் கமலும் நிருவும் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டவை, எழுதும் எனக்கு சரியாக ஆங்கிலம் தெரியாததால்,அவரவர்கள் தங்கள் மனதில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து கொள்ளவும் (சாரி பார்த டிஸ்டபண்ஸ்)


“வீட்டுல குத்து கல்லு மாதிரி இருக்கேன் என்னை சாப்பிட்டியா, தூங்கினாயான்னு ட கேட்காம அப்படி என்ன அம்மா புன்ளைக்கு அப்படி என்ன கொஞ்சல் ”

“நிரு நான் ஒன்னும் எவகிட்டயும் பேசல எங்க அம்மா கி்ட்டதான் பேசனேன்...”

நிருவுக்கு தனிமை தந்த வெறுப்பும் தான் அம்மா ,அப்பாவிடம் பேச முடியவில்லையே என்று வெறுப்பும் கோபமாக வெடித்தன...

காங்கிரஸ் இடதுசாரி பிரச்சனை அனுசக்தி ஒப்பந்தத்தில் ஏற்பட்டது போல் கமல் நிருவுக்கும் கமல் அம்மாவால் பிரச்சனை ஏற்பட்டது..

எல்லா விஷயங்களையும் கமல் அம்மாவிடம் கேட்டு கேட்டு செய்வது சுத்தமாக பிடிக்கவில்லை

அழகிரிக்கு தயாநிதி மாறனை பிடிக்காதது போல் நிருவுக்கு கமல் அம்மாவை பிடிக்காமல் போனது.

நிரு தனிமையை விரட்ட பெங்களுருவில் உள்ள சாப்ட்வேர் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தாள் .கமல் ஏதும் மறுப்பு சொல்லவில்லை.. மாதம் 15000சம்பளத்திற்க்கு சேர்ந்தாள்.

கமல் சின்சியாரிட்டியை பார்த்து அவனுக்கு பிடித்தம் எல்லாம் போக 60,000 கையில் வந்தது,நிருவின் சம்பளம் எல்லாம் சேர்த்து மாதம் 75,000 வந்தது..

கமல் கார் வாங்கினான், கார் வாங்கும் முன்பே தன் நண்பகள் கார் ஓட்டி இருப்பாதால் கார் அவனுக்கு பெங்களுர் சாலைகளில் அவன் சொன்ன பேச்சு கேட்டது.

நேராக அவன் தன் மனைவி வேலை செய்யும் அலுவலகத்துக்கு சென்றான். நிருவுக்கு கமல் கார் வாங்கியதை சொல்லவில்லை சின்ன சஸ்பெண்ஸ் மற்றும் அவள் அழகை ,சாரி அவள் கண் விரியும் அழகை ரசிக்க நினைத்தான்.

நிரு சீ த்ரு சாரியில் ஹை ஹில்சுடன் ஒய்யாரமாக கார் அருகே நடந்து வந்தால், யாரோட கார் இது கமல் ?என்றாள். என் எஜமானியம்மாவுக்கு என் பரிசு என்றான் கமல்..
உலக அழகி பட்டம் வாங்கியதும் ஐஸ்வார்யாராய் உட்பட இரண்டு கையையும் தாடையில் வைத்து அழகிகள் சிரிப்பார்களே அதே போல் நிருவும் சிரித்தால்...


கமல் தன் மனைவியுடன் மைசூர் ரோட்டில் 130கிலோ மீட்டர் வேகத்தில் விரைந்தான், நிரு வயிற்றை பிடித்துக் கொண்டு காரை ஓரம் நிறுத்த சொன்னாள்,காரை ஓரம் நிறுத்தியதும் கார்விட்டு இறங்கி நிரு வாந்தி எடுத்தாள்

கமல் முதலில் அது சாதரண வாந்தி என்றுதான் நினைத்தான் அப்புறம் அது கமல் நிரு இருவரும் சேர்ந்து செய்த ஓவர்டைம் வேலையால் வந்த வாந்தி என்பது நிருவின் வெட்க புன்னகையால் அறிந்து கொண்டான்.

கமல் அன்று ரொம்பவும் சந்தோஷமாக இருந்தான்.....தற்போதைக்கு நம்ம சோனியா காந்தி போல...

நரசிம்மராவுக்கு பிறகு நம்பிக்கை வாக்கெடுப்பில்வெற்றி பெற்ற பிரதமர்


முதலில் டிவிஷன் வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற மன்மோகன் சிங் அரசு மிண்ணணு வாக்கெடுப்பிலும் வெற்றி பெற்றது...













டென்ஷன் துளிகள்.............................................


வாக்கெடுப்பு முடிந்து எல்லோரும் டென்ஷனாக இருந்தார்

அத்வானி தன் உதடுகளை தடவிய படியே டென்ஷனில் இருந்தார்

ஆர்வ மிகுதியால் எல்லா உறுப்பினர்களும் எழுந்து நிற்க அவர்களை அடக்க சோம்நாத் சாட்டர்ஜி தவித்து போனார்

நமது பிரதமர் எப்போதும் போல் ஒருமாதிரி ஸ்டைலாக தவக்ட்டையில் கை வைத்த படி இருந்தார்...

மண்ணனு வாக்கெடுப்புக்கு பிறகு துண்டு சீட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டு டென்ஷன் எகிறியது...

120 கோடி மக்களை ஆளப்போகும் ,அடுத்து வழிநடத்த போவது யார் என்பதை அறிவிக்க ரொம்ப நேரம் எடுத்துக்கொண்டார்கள்...

தேவகௌடா இப்போதும் எதிர் மேஜையில் படுத்த படியே இருந்தார்...

நாங்களே எல்லாவற்றிலும் சிறந்தவர்கள் என்று நினைக்கும் சன் குழுமம் தன் செய்தி சேனலில் தூர்தர்ஷன் லோக் சபா சேனலின் ஒளிபரப்பை கடன் வாங்கி ஒளிபரப்பியது

எப்போதும் அமளி துமளியாக இருக்கும் நாடளுமன்றம் சென்னை ஜோதி தீயேட்டரில் பிட்டு போடும் போது ஏற்படும் நிசப்தத்தை ஞாபகப்படுத்தியது

முந்தைய பிரதமர் வாஜ்பய் ஒரு ஓட்டு வித்யாசத்தில் தோற்றார். அவரது கட்சியில் எல்லோரும் டென்ஷனாக இருந்தார்கள்


இறுதியில் வெற்றி அறிவிக்க பட்டது ...256லிருந்து 275 ஆக ஆதரவு உயர்ந்தது


வந்தே மாதரம் இசைக்கபட்டு நாடளுமன்றம் இன்றைய கூத்துகளை இனிதே முடித்து கொண்டது

அன்புடன் /ஜாக்கிசேகர்

மன் மோகன் அரசுக்கு வாக்கெடுப்பில் வெற்றி (தப்பித்தது) அமெரிக்கா சந்தோஷப்படும்

மொத்த உறுப்பினர்கள் ........ 541

வராதவர்கள்........... 2 ( அப்படி என்ன கிழிக்கற வேலை யோ)

அதரவு......................253

எதிர்ப்பு........................232

இந்த களேபரத்துக்கு நடுவே நம் சபாநாயகர் சோம்நாத் தன் போண்டா மூக்கை நோன்டிக் கொண்டு இருந்தார்...

மன் மோகன் சிங் உடனே பாத்ரூம் செல்வது நல்லது....அவ்வளவு டென்ஷன் சாருக்கு

அன்புடன் /ஜாக்கிசேகர்

தமிழ் சினிமாவின் பரிதாப உதவி இயக்குநர்கள்
















லட்சிய இளைஞர்கள் (தமிழ் சினிமா உதவி இயக்குநர்கள்)
















அழுக்கேறிய ஜுன்சும்


ஆறுமாதகால தாடியும் தான்


இவர்களின்


அடையாளங்கள் ...







தொடர்ந்து புகைப்பதால்


தடித்த உதடுகளும்


எண்னைப் பார்க்காத தலையும்


அவர்களின்


அக்மார்க் முத்திரைகள்...



தூக்கம் தொலைந்த


கண்களில்


அரை நூற்றாண்டு


சரித்திரத்தை மாற்றும்


கனவுகள் இலவசம்.





புரிந்தாலும்


புரியாவிட்டாலும்


ஒரு நாவல் புத்தகம்


ஒரு கைக்குறிப்பேடு


இவர்களின் கையில்


நிச்சயம் இருக்கும்





தெருவோர


டீக்கடைகள் தான்


இவர்கள் இளைப்பாறும்


வேடந்தாங்கல்.





இவர்களின்


பெற்றோர்களின் கனவு


தன் மகனை


மருத்துவராகவோ


பொறியாளனாகவோ


பார்க்கத்தான் ஆசை


ஆனால்


இவர்களின் கனவோ


வேறானது...





திருமண வயதை தாண்டி


ஜன்னல் வழியாக


சாலை வெறித்துப்


பார்க்கும்


சகோதரிகள்...





ஒரு பக்க நுரையீரலை இழந்து


காச நோயால் அவதிப்படும்


அம்மா...





வெள்ளாமை பொய்த்தால்


ஐம்பது வயதிலும்


வேதனைப்படும்


அப்பா...





இது


எதுபற்றியும் இவர்களுக்கு


கவலை இல்லை


இவர்களின் ஒரே கவலை


"வாழ்நாள் கவலை"


நல்ல தமிழ் சினிமா


எடுப்பது தான்...
















(சமர்ப்பணம் சினிமா பற்றிய புரிதல் இல்லாது சினிமா பார்ப்பதாலேயே தாணும் ஒரு இயக்குநராக மாறவேண்டும் என்று தென்மாவட்டங்களிலிருந்து பஸ் பிடிக்கும் அனைத்து இளைஞர்களுக்கும்)

தமிழ்நாட்டு இளைஞர்களை நினைத்து நொந்தபடியே,

அன்புடன் - ஜாக்கிசேகர்

(புகைபடத்துக்கும் கவிதைக்கும் எந்த தொடர்பும் இல்லை)


(குறிப்பு தமிழ்மணத்தில் நான் இனைவதற்க்குமுன் எழுதிய பதிவு இது மீண்டும் நண்பர்கள் வேண்டுகோளுக்கு இணங்க....)

பதிவர்கள் படித்து ரசித்து கருவிபட்டையில் ஓட்டு போடவும்

இலங்கை தமிழனாகவாவது பிறந்து இருக்கலாம்....


இலங்கை தமிழனாக பிறந்து இருந்தால் விடுதலைபுலிகள் தலைவர் பிரபாகரனாவது தட்டி கேட்பார். எம் மக்கள் மீது கை வைக்க நீ யார் என்று கேள்வி கேட்பார், இந்திய தமிழனாக பிறந்ததால் யாரும் கேட்க நாதியில்லை இதுவரை 400 க்கு மேற்பட்ட மீனவர்கள் சிங்கள படையால் சுடப்பட்ட இறந்து இருக்கிறார்கள்.


கர்நாடகத்தில் உதை வாங்குகிறோம், கேரளா அனை உயரம் ஏற்ற மறுக்கிறது, ஆந்திராவில் பாலாற்றில் அனைகட்ட போகிறார்கள்.


இதுவரை யாரும் கேட்டதில்லை, தலைவர் கலைஞருக்கு டயட் கன்ட்ரோல் இருக்க வேண்டும் என்று யாரோ சொல்ல அதை தவறுதலாக தன் உடன்பிறப்புகளுக்கு சொல்லி உண்ணாவிரதத்தை அறிவித்து இருக்கிறார்


விடுதலைபுலி திலீபன் இந்திய அரசு கவனத்தை ஈர்க்க உண்ணாவிரதம் இருந்தார்
அவருக்கு என்ன நிலமை ஏற்பட்டது என்று உலகம் அறியும்....
அதனால் யாராவது உண்ணாவிரதம் இருக்கிறார்கள் என்றால் எனக்கு சிரிப்புதான் வருகிறது...

காவிரி பிரச்சனைக்கு புரட்சி தலைவி உண்ணாவிரதம் இருந்தார்கள் , காவிரி பிரச்சனை தீர்ந்து விட்டதா என்ன???

அன்புடன்/ ஜாக்கிசேகர்

இனி சிங்கள ராணுவத்துக்கு கவலை இல்லை....


தமிழக மீனவர்ளை இனி இலங்கை ராணுவம் இனி தைரியமாக சுட்டு தள்ளலாம். இனி மேல் இலங்கை ராணுவம் தமிழக மீனவர்களை சுட்டாலும் ரூபாய் 5 லட்சம் தமிழக அரசு கொடுத்து விடும். இதையும் தமிழக மீனவர்கள் ஏற்றுக் கொண்டு இருக்கிறார்கள்.


இலங்கை ராணுவத்துக்கு எந்த பாவமும் வராமல் தமிழக அரசு காக்க போகிறது.
உலகத்தில் நாம் 5வது பெரிய இராணுவம் வைத்து இருக்கிறோம். குறைந்த பட்ச ஒரு கண்டிப்பை கூட நம் பிரதமர் தெரிவிக்கவில்லை.


நாம் உலகத்தில் 5 வது பெரிய ராணுவம் வைத்து இருக்கிறோம் என்று என் வீட்டு நாய் ஜிம்மியிடம் சொன்னேன் அது விழுந்து விழுந்து சிரித்தது. அதுவும் சாவது ஒரு தமிழன் என்றேன். அது என்னை விட கேவலமான பிறப்பாயிற்றே என்று சொன்னது அதில் உண்மை இல்லாமல் இல்லை....

அன்புடன் /ஜாக்கிசேகர்

(பாகம்...6) மாத சம்பளம் ஒரு லட்சத்துக்கு136ரூபாய் கம்மியாக வாங்கிய சாப்ட்வேர் இளைஞனின் சோக கதை




(இது கொஞ்சம் கற்பனையும் நிறைய உண்மைகளும் கொண்ட கதை)




கமலுக்கு காமத்தீ பற்றிக் கொண்டது. அந்த தீ நிருவிடமும் தன் வேலையை காட்டியது.

அம்மாவை பார்க்கும் ஆசையும் நிருவை இருட்டில் பார்க்கும் ஆசையும் அதிகமாகி போனதால், கமல் வெள்ளி இரவே பேருந்து பிடித்து சனிக்கிழமை காலை சென்னை வந்து ஞாயிற்று கிழமை இரவு சென்னையில் பஸ் ஏறி விடியலில் பெங்களுர் இறங்கி காலை ஷிப்ட் என்றால் கண்ணில் ஊளையுடன் வேலைக்கு சென்று
இருக்கிறான்


கமல் போல் இன்றும் நிறைய சாப்ட்வேர் இளைஞர்கள்,இளைஞிகள் தன் பெற்றோர் மற்றும் தன் காதலனை பார்க்க வாரம் வாரம் சென்னையும், சென்னையிலிருந்து பெங்களுரும் செல்கின்றன.

இந்த சாப்ட்வேர் இளைஞர்களின் பாசத்தையும் காதலையும் தனியார் பேருந்துகள் மனசாட்சி இல்லாமல் பேருந்து கட்டணம் என்ற போர்வையில் கொள்ளை அடிக்கின்றனர்.

சென்னையிலிருந்து குளிர்சாதன ஏசி பஸ்ஸில் பெங்களுர் செல்ல தமிழக அரசு நி்ர்னயத்த கட்டண தொகை 325ரூபாய் ஆனால் எல்லா தனியார் பேருந்துகளிலும் குளிர்சாதன வசதி இல்லாமல் 450ரூபாய வசூலிக்கிறார்கள்அதுவும் விசேஷநாட்களில் அவர்கள் வைத்ததுதான் சட்டம் . ஏசி இல்லாத பேருந்துக்கு600ரூபாய் கேட்கிறார்கள், இந்த சாப்ட்வேர்காரர்களும் மாத மாதம்பெருந்தொகையை இழக்கின்றனர் இதில் கமலும் விதி விலக்கல்ல

கமல் தான் செய்யும் வேலையை காதலித்தான் எல்லோரும் 8மணி நேரம் கணக்கு பார்த்து வேலை செய்த போது 10 மணி நேரம் ஆனாலும்தனக்கு கொடுக்கபட்ட வேலையை திறம்பட தவறில்லாதமல் செய்தான்.அதனால் டீம் லீடரிடம் நல்ல பெயர் எடுத்தான்.

எல்லா ஆண்களும் வேலை நேரத்தில் பெண்கள் போதையில் மிதக்க இவன் கருமமே கண்ணாக இருந்ததால் வெகு சீக்கரத்தில் டீம் லீடர் ஆனான் .மாதம் 30,000 சம்பளம் வாங்கினான்.

பெங்களுர் பெண்கள் ஒருசிலரை தவிர எல்லோருக்கும் பாய்பிரன்ட் இருந்தார்கள். ஒருமாதம் காதல் என்ற போர்வையில் நன்றாக சுற்றுவார்கள் இன்னும் இரண்டு வாரத்தில் கல்யாணம் செய்து கொள்ள போகிறோம் கமல் என்று சொல்வார்கள் ஆனால் அடுத்த மாதத்தில் அவனோட டேஸ்ட் ஒத்து வரலை அதனால நான் கல்யாணத்துக்கு முன்னமே நான் தப்பிச்சுட்டேன் தேங்காட் என்பார்கள். கமல் அவர்களை ஆச்சர்யத்தோடு பார்பான். எல்லாம் காசு தந்த சுதந்திரம், நான் மாதம் 20,000சம்பாதிக்கிறேன் என்னை யார் கேட்க முடியும் என்ற தெனா வெட்டு....

பெற்றோர்களாலும் கேள்வி கேட்க முடியவில்லை ,எங்கே கேள்வி கேட்டால் மாதம் வரும் பணம் கூட நின்று விடும் எனெனில்,எவன் எவன் கால்ல எல்லாம் விழுந்து வட்டிக்கு வாங்கி படிக்க வச்சவனுக்குதான் அந்த வேதனை தெரியும்.

கமல் தன் செலவு மாதம் பத்தாயிரம் போக மீதி 20,000 தன் அப்பாவிடம் கொடுத்து படிப்புக்கு வாங்கிய கடன்களை அடைக்க சொன்னான்.

நிருவை பெண் கேட்டு கமல் அவள் வீடு சென்றான், பெண் கேட்டான். நிருவின் பெற்றோர்கள் இடது சாரிகள் போல் விடாப்பிடியாக இருந்தார்கள்.

ஐந்து நாள் விடுப்பில் பெங்களுரில் இருந்து வந்த கமல் அழகிரி திடும என ராயல் கேபிள் விஷன் தொடங்கியது போல் கமல் நிருவை ரிஜிஸ்டர் மேரேஜ் செய்தான்.

விஷயம் தெரிந்த நிரு பெற்றோர், மாறன் சகோதரர்களுடன் இனி ஒட்டும் இல்லை உறவும் இல்லை என அழகிரி அறிவித்தது போல் நிருவின் பெற்றோரும் அறிவித்தனர்,.

கமல் தனது கல்யாணத்துக்கான வறவேற்பை பெங்களுரிலும் கல்பாக்கத்திலும் வைத்தான் கமலுக்கு வந்து குவிந்த பரிச பொருட்களே அதற்க்கு சாட்சி. கமல் நிறைய நல்ல இதயங்களை சம்பாதித்து வைத்து இருந்தான்,



கமலும் நிருவும் தேனிலவுக்கு சிம்லா போனார்கள். தேனிலவு சாப்டர் எழுத வேண்டாம். நானும் தமிழ்படங்கள் தம்பதிகள் பால் சாப்பிட்டு பிறகு அவர்களை காட்டாமல் கேமரா குழந்தை படத்தை காண்பிக்குமே, அதே போல் விட்டு விடுவோம் மீறி நான் தேனிலவு சாப்டர் எழுதினால் சாருநிவேகிதா போல் எழுதிகிறேன் என்பார்கள் எதற்க்கு வம்பு...? அல்லது தமிழ் மணத்தில் வார்த்தை பிரயோகம் தவறு என்பார்கள்.
நானும் நிறைய காமம் என்ற வார்த்தை பயண்படுத்தி இருக்கிறேன்....

காமத்தை ரசித்தபடியே காமத்தை எதிர்க்கும் நம்மவர்களிடம் இருந்து, நான் தப்பிக்க வேண்டும் அவ்வளவே...


(தொடரும்)
(பாகம் 1)
(பாகம் 2)
(பாகம் 3)
(பாகம் 4)
(பாகம் 5)

மற்ற பாகங்களை படிக்க விரும்புவோருக்காக மேலே.....

அன்புடன்/ ஜாக்கிசேகர்

அஞ்சாதேவுக்கு பிறகு மீண்டும் சுப்ரமணியபுரம் திரைப்படம் தமிழ் சினிமாவை தலை நிமிர வைத்து இருக்கிறது


( தமிழ் சினிமாவை மீண்டும் தலை நிமிர வைக்க வந்திருக்கும் படம்)











1980 களில் இலக்கு இல்லாமல் சுற்றும், பாச, நேசத்துக்காக ஏங்கும் பாசக்கார பயல்களின் கதை...

1980களில் மதுரை எப்படி இருந்தது என்று நம் கண் முன் நிறுத்துகிறார்கள். இதில் அழகர்,பரமு என்ற இரண்டு நண்பர்கள் அவர்கள் இருவருக்கும்ஏற்படும் பிரச்சனைகள் அதில் அழகருக்கு ஏற்படும் காதல் அதனால் ஏற்படும் மோதல் என்று ரொம்ப அற்புதமாக எடுத்து இருக்கிறார்கள்

அழகராக வரும் ஜெய் மிக அற்புதமாக அவருடைய பாத்திர படைப்பை செய்து இருக்கிறார். முக்கியமாக தன் காதலியை பார்த்தவாரே கீழே விழுந்து மீசையில் மண் ஒட்டாதது போல் எழுந்து நின்று சிரிப்பார் பாருங்கள் அது ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். சென்னை 28க்கு பிறகு அவருக்கு இது நல்ல படம் .


அழகர் காதலியாக வரும் சுவாதி தெலுங்கு இறக்குமதி.தெலுங்கு யாரடி நீ மோகினியில் பாலக்காட்டு மாமி கேரக்டரில் நடித்து இருப்பவர்,இவரின் கண்கள் படத்துக்கு பலம் சேர்கின்றன முக்கியமாக அழகரை எதிரிகள் சூழும் இடத்தில் அவர் கதறுவது அழகு்...


இயக்குநர் சமுத்திரகனி முக்கியமான பாத்திரத்தில் மிகவும் இயல்பாய் நடித்து இருக்கிறார்.
ஆட்டோவில் அவர் சசிகுமாரிடம் மாட்டும் இடத்தில் தியேட்டரே கை தட்டுகிறது



அவருக்கு நண்பராக நடித்து பட்டையை கிளப்பி இருக்கும் சசிகுமார் (இயக்குநர் , தயாரிப்பாளர்)ரொம்ப அற்புதமாக பரமு பாத்திரத்தை செய்து இரு்க்கிறார்.

காசியாக வரும் கஞ்சா கருப்பு பின்னி பெடலெடுத்து இருக்கிறார். கஞ்சா கருப்பு தன் வாழ் நாளில் பெருமையாக சொல்லிக் கொள்ளும் படியான படம்


ரெம்போன் ஆர்ட் டைரக்டர் மிக அற்புதமாக செய்து இருக்கிறார். அவருக்கு இந்த படத்துக்கு விருது கிடைத்தாலும் வியப்பதற்க்கு இல்லை.

இசை ஜேம்ஸ் வசந்தன் காம்பயரர் வேலை மட்டும் இல்லாமல் ரொம்ப அற்புதமாக செய்து இருக்கிறார்

மொத்ததில்,இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என மூன்று அவதாரம் எடுத்து இருக்கும் சசிகுமார் பாராட்டுக்கு உரியவர்.
முதல் படத்திலேயே உலக தரத்துக்கு படம் செய்து இருப்பது மிகவும் பாராட்டபடவேண்டிய விஷயம்.


விமர்சனம் என்ற போர்வையில்
முழு கதையையும் சொல்லும் ஆள் நான் இல்லை. இந்த படத்தை பாருங்கள் ஒரு வித்யாசமான அனுபவத்தை நீங்கள் உணர்வீர்கள்

அன்புடன்/ஜாக்கிசேகர்

மாத சம்பளம் ஒரு லட்சத்துக்கு136ரூபாய் கம்மியாக வாங்கிய சாப்ட்வேர் இளைஞனின் சோக கதை (பாகம்5)











(இது கொஞ்சம் கற்பனையும் நிறைய உண்மைகளும் கொண்ட கதை)


தன் இயல்பான முகத்தை விட்டு விட்டு புஷ் முகம் மாட்டிக்கொண்டு அவஸ்தை படும் மன்மோகன் சிங் போல, தன் கலாச்சார முகத்தை இழந்து ஐ ரோப்பிய முகம் மாட்டிக் கொண்டுள்ள பெங்களுர்....




பென்ஷன் வாங்குபவர்களின் சொர்க புரி பெங்களுர் என்று முன்பு சொன்னார்கள் அனால் இப்போது பெங்களுர் பிரமச்சாரிகளின் சொர்க புரி என்றால் அது மிகையாகாது.

அவ்வளவு பெண்கள்.அழகழகான பெண்கள். நம்ம தமிழநாட்டை தவிர்த்து வேறு எந்த ஸ்டேட்டிலும் கள்ளி பால் ஸ்டாக் இல்லை போலும்.

கமல் முதன்முறையாக பெண்களுக்கு கொடுக்கப் போகும் 33 பர்சன்ட் இடஒதுக்கீடுக்கு கவலைப்பட்டான்.


கமல் பல்வேறு பெண்களை தான் வளர்ந்த கல்பாக்கத்தில் பார்த்து இருந்தாலும், அதே போல் எம் பி ஏ படிக்கும் போது மிக அழகான பெண்களை பாண்டிச்சேரியில் பார்த்து இருந்தாலும்,பெங்களுர் பெண்கள் ஒரு தினுசாகவே இருந்தார்கள்.

பெங்களுர் பெண்கள் பிறரை கவரவே உடை உடுத்தினார்கள். டிசர்ட் ஜி்ன்ஸ் போட்டால் டி சர்ட் உள்ளே பிரா போடுவதை தவிர்த்தார்கள், இது பற்றி தன் நண்பர்கள் வட்டத்தில் விசாரித்த போது , “உனக்கு ஏன்டா தேவையில்லாத கவலைலாம் அது அவுங்க அவுங்க சவுரியத்தை பொறுத்தது ”என்றார்கள்

கமல் நான்கு நண்பர்களுடன் சேர்ந்து பெங்களுர் மடிவாலாவில் வீடு எடுத்து தங்கினான். சிங்கிள் பெட்ரூம் அறைக்கு 5000 ரூபாய் வாடைகையும் 50000ரூபாய் அட்வான்ஸ் என்றார்கள். மாதம் ஆளுக்கு 1125 ரூபாய் அறைக்கு கொடுததார்கள் அந்த அறைக்குஐந்து ஆயிரம் வாடகை அதிகம்தான். இது போல் ஹவுஸ் ஓனருக்கு இனனும் 5 வீடுகள் இருப்பதாக சொன்னார்கள் மாத கணக்கு போட்டு கமல் வாய்பிளந்தான்.


இவர்கள் பில் கூட கொடுக்க போவதில்லை,வரியும் கட்ட போவதில்லை. எந்த ஹவுஸ் ஓனரையும் எந்த ஸ்டேட்டும் கட்டு படுத்தாது என்பதை புரிந்து கொண்டான். அப்படி அவர்களை கட்டு படுத்தினால் ஓட்டு அவர்களுக்கு வாராது ஏனென்றால் ரேஷன் கார்டு வைத்து ஓட்டு போடுபவர்கள் ஹவுஸ் ஓனர்கள்தான் , வாடகைக்கு குடியிருப்பவன் அல்ல...

பெங்களு்ருவில் அவன் சந்தோஷப்பட்ட விஷயம் தண்ணீர் பிரச்சனை இல்லாததுதான். சாபப்பட்ட சென்னை வாசிகள் போல் இல்லாமல், தண்ணீர் மிக தராளமாக கிடைத்தது, இனிப்பாக இருந்தது.

அதே போல் திருமணமாகாத பிரம்மச்சாரிகள் அறைக்கு வயது பெண்கள் வந்து போவதை எவரும் அலட்டிக்கொள்ளாதது ஆச்சாயம் அளித்தது.பெங்களுருவில் பணம் மட்டுமே பிரதானமாக இருந்நதது.

கூட்டம் கூட்டமாக பெண்கள் வீடு எடுத்து தங்கி இருந்தார்கள், எல்லோருக்கும் ஒரு பாய் பிரன்டு இருந்தார்கள்.எல்லா பெண்களுக்கும் ஒரு சோக கதை இருந்தது, அந்த சோககதைகள் மனதில் குறித்துக்கொண்டான் அதை நிரு மற்றும் அம்மாவிடம் பகிர்ந்து கொள்ள எண்ணனினான்.

வேலைக்கு சேர்ந்த ஒரு வாரத்தில் கமல் எனும் இந்திய சாப்ட்வேர் இளைஞனின் மூளை உடல் எல்லாம் அமெரிக்க முதளாளிகளுக்கு அடிமை சாசனம் எழுதின...

அவனிடம் இந்திய அரசு உரிமையாக போட்ட சம்பளத்தின் வரியில் பல வளர்ச்சி பணிகளில் இந்தியாவும் தன் முகத்தை மாற்றி கொண்டது.

நீங்களே யோசித்து பாருங்கள் 60ஆண்டுகால சதந்திர இந்தியாவில் கடந்த பத்து வருடங்களில்எற்ப்பட்ட வளர்ச்சி சொல்லில் அடங்காதது. அந்த வளர்ச்சியில் கமலின் உழைப்பும் வியற்வையும் இருக்கிறது.

கமல் தினமும் காலை மாலை இரு வேளைகளிலும் அம்மாவுக்கும் நிருவுக்கும் போன் பண்ணினான்

அப்போதுதான் திருபாய் அம்பானி,, இந்தியர்கள் அதிகம் பேச ஆசைப்பட , அதுவரை ராமதாஸ் போல் ஆட்டம் போட்ட செல்போன் கம்பெனிகள் பெட்டிபாம்பாய் அடங்கிபோனார்கள்.
செல் போன் கம்பெனிகள் விலை குறைத்தன.

கமல் இரண்டு கைபேசிகள் வாங்கினான் ஒன்றை அம்மாவுக்கும் மற்றதை நிருவுக்கும் கொடுத்தான். நிரு பெற்றோர் கண்ணில் கமல் படததால்
தன் பெண்ணின் காதல் பார்த்தீபன் சீதா காதல் போல் முறிந்ததாக நினைத்துக் கொண்டார்கள்.

எப்போது கமல் வீடு வந்தாலும் அவனை அவன்தாய் இளைத்து விட்டதாக சொல்லி சொல்லி இரண்டு நாட்டு கோழிகளின் உயிருக்கு வேட்டு வைத்தாள்
கமல் குடும்பம் அவனை கொன்டாடியது. அவனும் எல்லோருக்கும் மரியாதை கொடுத்தான் .


வார வாரம் சென்னை வர ஆரம்பித்தான். நிருவை மாயஜாலில் மீட் செய்தான் தான் இன்சென்டிவ் வாங்கிய பணத்தில் நிருவை மகிழ்விக்க 80 ருபாய்க்கு மக் பாப்கானும், 150 ரூபாய் சினிமா டிக்கெட்டும் வாங்கினான்

கூட்டம் இல்லாத ஆங்கில படத்தில் இந்தியர்கள் பொதுவாய் பான்பராக் பீடா எஎஎஎஎஎஎஎஎஎஎச்சில் துப்பும் சுவற்று ஓர சீட்டை தேர்ந்து எடுத்தான்.

படம் ஓடத்துவங்கியவுடன் பயம் இல்லாது அவள் உதட்டில் தன் உதட்டால் ஊர்வலம் நடத்தியவன் மெல்ல கை நடக்கத்துடனும், கழுத்து வியற்வை பிசு பிசுப்புடன், நிரு கழுத்துக்கு கிழே கையை இறக்கினான்.

நிரு எந்த எதிர்ப்பும் காட்டாமல் தமிழ் சினிமா ஹீரோயின் போல் தன் லிப்ஸ்டிக் உதட்டை கடித்தால்....


(தொடரும்)



அன்புடன்/ ஜாக்கிசேகர்

ஜெயலலிதா, கலைஞர்,வைகோ, விஜயகாந்த் இவர்களை பற்றி எனக்கு வந்த குறுந்தகவல்





இது பழைய கள் ஆனால் புதிய மொந்தையில்...



கலைஞர் ,ஜெயலலிதா,வைகோ, மூவரும் ஹெலிகாப்டரில் செல்கிறார்கள்....


ஹெலிகாப்டர் தமிழகத்தின் மேல் சட சட சத்தத்துடன் பறக்கிறது...

( இது எப்போதுமே சாத்தியமில்லாத விஷயம்தான் மேலே படியுங்கள்)

முதலில் கலைஞர் 100 ரூபாய் எடுத்து வெளியே போடுகிறார் ,நான் ஒரு தமிழனின் குடும்பத்தின் பசியாற்றிஇருக்கிறேன் என்றார்.

உடனே வைகோ இரண்டு 50 ரூபாய் நோட்டை வெளியே போட்டு, நான் இரண்டு தமிழர்கள் குடும்பத்தின் பசியாற்றி இருக்கிறேன் என்றார்.

ஜெயலலிதா 100 ரூபாய்க்கு, ஒரு ரூபாய் சில்லரை காசுகளாக எடுத்து வெளியே வீசி நான் நூறு தமிழர்களுடைய சந்தோஷத்துக்கு காரணம் என்று எப்போதும் போல் பெருமை பேசினார்.

இதையெல்லாம் வேடிக்கை பார்த்த பைலட், இந்த ஹெலிகாப்டரை
இப்போது தரையில் மோத விட்டு 6 கோடி தமிழ் மக்களின் சந்தோஷத்துக்கு நான் காரணமாக இருக்கப்போகிறேன்,என தரையில் ஹெலிகாப்ட்ரை மோதவிட்டான்.

இதோடு கதை முடியவில்லை , கதைப்படி ஹெலிகாப்டர் விபத்தில் தமிழ்நாடு காப்பாற்ற பட்டு விட்டது.

இப்போது 75 ஆண்டுகால பாரம்பரிய மிக்க தமிழ் சினிமாவை காப்பற்ற பட வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு 6 கோடி தமிழர்களான நமக்கும் இருக்கிறது .

அதனால், விஜயகாந்தை ஓட்டு போட்டு தமிழக முதலமைச்சராக ஆக்கிவிட்டாள், விஜயகாந்த் தமிழ் திரைப்படங்களில் நடிக்க மாட்டார்.

நம் 75 ஆண்டுகால பாரம்பரியமிக்க தமிழ் சினிமா காப்பற்றபடும் எப்படி நம்ம ஐடியா ???

அன்புடன் / ஜாக்கிசேகர்

ஜுலை2008/ PIT போட்டிக்கான படங்கள்

வாழ்கை ஒரு வட்டம் மாதிரி இங்க கீழ இருக்கறவன் மேல போவான், மேல இருக்கறவன் கீழ வருவான்

( போட்டிக்கான இரவு படம் இதுவே) (1)
..............................................................................................................................................................................

இதுவும் எனக்கு பிடித்த படம்தான் மாவிலை தோரணம் போன்று மிளகாய் தோரணம்.... (2)
..................................................................................................................................................................................







எல்லா குழந்தைகளும் சந்தோஷத்தோடு சுற்றினாலும் நடுவில்உள்ள இந்த பொம்மை பெண் குழந்தை மட்டும் அரை நிர்வாண உடம்புடன் நிரந்தர புன்னகையுடன்..... (3)

..................................................................................................................................................................................

ஐயா , சாமிங்களா எனக்கு தெரிஞ்ச வரை ஏதோ எடுத்து அனுப்பி இருக்கிறேன், நண்பர்களே உங்கள் கருத்துக்களை வரவேற்க்கிறேன். மேலுள்ள முன்று படங்களும் டிரைப்பாடு இல்லாமல் கையில் வைத்தே எடுக்கப்பட்டது

அன்புடன் /ஜாக்கிசேகர்

கண் கட்டை அவிழ்த்துக் கொண்ட சன் டீவி, மற்றும் சன் குழுமம்

இரவு நேர 75 ஆண்டு சினிமா வரிசையில் இளமைக்கால ஜெயலலிதா படங்கள், வாரத்தில் 3 விஜயகாந்த் படங்கள். தேவைபட்டால் சரத்குமார் படங்கள் (இன்னும் கார்த்திக் படஙக்ள் லிஸ்டில் வரவில்லை) வை கோ கட்சியின் மாநாடு, மற்றும்பேரணி விளம்பரங்கள். தினகரன் மற்றும் தமிழ் முரசுகளில் மக்களை பாதிக்கும் வாடகை பிரச்னைகளைஇரண்டு நாட்கள் முன் எழுதினார்கள். 30 நாட்களில் 24 கொலைகள் எங்கே போகிறது சென்னை ?? என்று கேள்வி கேட்டார்கள். எத்தனை இன்ஸ்பெக்டர்கள் கட்ட பஞ்சாயத்து செய்தார்கள் என்ற பட்டியல் வெளியிடுகிறார்கள். மதுரை தினகரன் பிரச்சனையில் கொஞ்சம் மாறினார்கள். தினகரனுக்கும் கழகத்துக்கும் சம்மதமில்லை என்று முரசொலியில் செய்தி வெளியானவுடன் மக்கள் அடிப்படை பிரச்சனைகளை கையில் எடுததுக் கொண்டார்கள். இறைவனுக்கு நன்றி.

“தினகரனுக்கும் கழகத்துக்கும் தொடர்பில்லை என்றார்கள். ஆனால் அறிவாலயத்தில் இன்னமும் இருக்கும் சன் டிவி போர்டு நேற்று கூட என்னை பார்த்து நக்கல் சிரிப்பு சிரித்தது ”

அன்புடன்/ ஜாக்கிசேகர்

மாத சம்பளம் ஒரு லட்சத்துக்கு136ரூபாய் கம்மியாக வாங்கிய சாப்ட்வேர் இளைஞனின் சோக கதை (பாகம்4)

(இது கொஞ்சம் கற்பனையும் நிறைய உண்மைகளும் கொண்ட கதை)

மன்மோகன் சிங் எப்படி அமெரிக்க அனுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்ற துடிக்கிறாறோ, அதே போல் கமல் நிருவை காதலித்த நாட்களில் துடித்து போனான்.


உலகத்தில் எல்லோரும் அழாகாக தெரிந்தார்கள் எல்லோரையும் நேசிக்க தொடங்கினான். உலகத்தில் எவறும் தவறு செய்யாதது போல் உணர்ந்தான். மொத்ததில் பருத்திவீரன் கார்த்தி போல் மாறி போய் இருந்தான்.

கடந்த மூன்று மாதகாலமாக தமிழக எதிர்கட்சி தலைவர் கோடநாட்டில் ஓய்வு எடுத்து ஜாலியாக இருப்பதுபோல் எதுபற்றியும் கவலை கொள்ளாது ரொம் ப ஜாலியான வாழ்க்கை வாழ்ந்தால் நிருபமா...எனெனில் கமல்தான் தினமும் செல்போனில் அவள் அழகை புகழ்கிறானே.

நடிகர் சத்யராஜ் மேல் புவனகிரியில் வசிக்கும் ஒருவன், இந்திய இறையான்மைக்கு வேட்டு வைத்தார் என்று பொதுநல வழக்கு போட்டு தமிழனுக்கு தமிழனே எதிரி என்று எப்படி மீண்டும் நிருபித்தானோ, அதே போல் கமலின் நண்பன் ஒருவன் கமல் பைனல் இயர் படிக்கும் போது நிருபமா அப்பாவிடம் போட்டு கொடுத்தான்.

உண்மை தமிழர்கள் எப்படி சுப்ரமணிய சுவாமியை பார்பார்களோ அதே போல் நிருவை அவள் வீட்டில் வெறுப்பாக பார்த்தார்கள் கமலின் தராதரம் தகுதி போன்றவை குறித்து கேள்வி எழுப்பபட்டது. எதிர்பார்த்த தகுதி இல்லாத காரணத்தில் நிரு பெற்றோர் கம்லை புறக்கனிக்க சொன்னார்கள். நிரு காதலித்தாலும் தொடர்ந்து பிரைன் வாஷ் செய்ததால் அவள் குழப்பிபோனாள் எனென்றால் நிருபமா பணக்கார பெண் என்று வாசகர்கள் எற்கனவே அறிந்ததுதான்

கமல் வீட்டில் அவன் காதல் தெரிந்த போது முதலில் தயங்னகினாலும் பின் தன் மகன் ஆசைக்கு குறுக்கே நிற்க்கவில்லை, ஒரே கேள்விதான் கேட்டார்கள்
“ ஏன்டா இந்த பொண்னு உனக்கு சரியா வருவாளா?” அது சொத்துள்ள பெண் என்பதற்க்கான கேள்வி அல்ல. அவள் உடை உடுத்தி கொண்ட விதம் கமல் பெற்றோரிடம் கேள்வியாக வந்தது.

கமல் எப்படியாவது அவளை கரம் பிடிக்க, நிறைய சம்பாதித்து அவள் எப்படி பிறந்த வீட்டில் இருந்தாலோ அதை விட இன்னும் சிறப்பாக அவளை வாழ
வைக்க உறுதி எடுத்தான் அவன் நேரம் அப்போதுதான் பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியா பக்கம் பார்வையை திருப்பிய நேரம் அது...


அப்போது அம்மா ஆட்சி தொழில் தொடங்க வந்த பன்னாட்டு நிறுவனங்களிடம்
100சி என்றால் பத்து சி எனக்கு என்று கணக்கு போட, எல்லோரும் பிடரியில் கால் பட துண்டை காணோம் துணியை காணோம் என பென்ஷனர் பாரடைஸ் பெங்களுர் ஓடினார்கள் அதனால் பெங்களுருக்கு கமலும் ஓட வேண்டிய நிலை ஏற்பட்டது. ஐமேக்ஸ் தியேட்டர் எப்படி ஐதராபாத்துக்கு ஓடியதோ அதே போல் கமலின் நண்பர்கள் சிலர் ஐதராபாத்துக்கு ஓடினார்கள்.

கமல் நிரு உதட்டில் ஊர்வலம் நடத்தி இருந்தாலும் கல்லூரியில் முதல் மதிப்பெண் எடுத்ததால் பெங்களுருவில் அவனுக்கு மாதம்15000 சம்பளத்தில் வேலை கிடைத்தது கமல் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பாண்டிச்சேரி மகளிர் கல்லூரியில் நிரு கம்யுட்டர் சயின்ஸ் முடித்தால்.

பெங்களுரில் வேலை கிடைத்ததை போன் மூலம் விஷயத்தை சொன்னான் ஏனெனில் நேரில் சென்றால் தன் மனது அவளை பார்த்ததும் மாறி விட கூடாது என்பதற்க்காக. கமல் பெற்றோரிடம் ஆசி பெற்ற பெங்களுர் வந்து வேலையில் சேர்ந்த முதல்நாள் கமல் யோசித்தான்

தான் அவசரப்பட்டுவிட்டோமோ? நிருதான் பேரழகி என்று நம்பி இருந்தான், அவன் வேலை செய்த பன்னாட்டு நிறுவனத்தில் நிறைய நிருபமாக்கள் இருந்தார்கள்

காரணமே இல்லாமல் கொஞச்ம் வெயிட் பண்ணி இருந்தால் நல்ல செல்போன் வாங்கி இருக்கலாம் .... என்ற ஜோக் ஞாபகத்துக்கு வந்தது ..உங்களுக்கு தெரியுமா? அந்த ஜோக்???

(தொடரும்)


அன்புடன் /ஜாக்கிசேகர்

ஒரு விபத்து நேரில் பார்த்தேன் ஆனால் ஏதும் செய்யமுடியவில்லை நீங்களாக இருந்தால் என்ன செய்து இருப்பீர்கள்??


நேற்று இரவு மிகச்ரியாக 10,15 க்கு பெருங்களத்தூரில் இருந்து தாம்பரம் வழியாக நான் கிண்டி வரவேண்டும். லேசாக மழை தூரிக்கொண்டு இருந்தது. நானும் எனது நண்பியும் எனது இரண்டு சக்கர வாகனத்தில் பயணப்பட்டோம். தாம்பரம் மேம்பாலம் ஏறும் போது சரியாக சொல்வதென்றால் பழைய அனுராக தியேட்டர் எதிரில் பலவாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தன.

நான் வாகனங்கள் உள்ளே பயணித்து சில வாகனங்களை கடந்த போதுதான், அது மிகப்பெரிய விபத்து என்பது புரிந்தது. ஒரு பெரிய சரக்கு லாரி ரோடு ஓர மீடியனில் மோதி கவிழ்ந்து இருந்தது. லாரிக்கு கீழே 45 வயது மதிக்கதக்க ஒருவர் தலை முழுவதும் ரத்தத்துடன், கால் கை கொஞச்ம் வெட்டி வெட்டி சுய நினைவு இல்லாமல் இழுத்துக்கொண்டு இருந்தார்,இன்ஸ்பெக்டர் விறைப்பான உடுப்புடன் மேலதிகாரிகளுக்கும் , தகவல் சொல்லி கொண்டு இருந்தார் . லாரியின் டிரைவரும் கிளினரும் அதற்க்குள் புற முதுகிட்டு ஓடி இருந்தார்கள்.


யாரோ ஒரு புண்ணியவான் ரத்தத்துடன் துடித்து கொண்டுஇருந்தவருக்கு தவித்த வாய்க்கு தண்ணி ஊற்றினார் முன்று அடி தூரத்தில் டீவிஎஸ் 50தன் உருவத்தை இழுந்து அலங்கோலமாகி இருந்தது. விபத்தை பார்த்ததும் என் நண்பி என் தோள் பட்டைபிடித்து கடவுளே என்று முனகினாள் கொஞ்சம் தூரத்தில் சரவணஸ்டோர்
கட்டை பை அந்த உயிருக்கு போராடும் மனிதர் போல் அனாதையாக கிடந்தது.


எல்லா வாகனங்களும் வழிகிடைத்தால் ஓடி விடும் மனநிலையில் இருந்தன...
எனக்கு போக வழி இருந்தும் எனக்கு போக மனம் இல்லை. என்வாகனத்தையும் நண்பியையும் அங்கே நிறுத்திவிட்டு நான் விபத்து நடந்த இடம் நோக்கி நடந்தேன் அதற்க்குள் பின்னால் இருக்கும் வாகனங்கள் விழி ஏற்படுத்தி ஒரு பெரிய பேருந்து செல்ல அதன்பிறகு வந்தத ஒரு பிரஸ் வண்டி அந்த வண்டி எங்கிருந்து வநத்து என்று தெரியவில்லை...

நான்கு பேர் சின்ன டிஜிட்டல் கேமரா உடன் துடித்து கொண்டு இருப்பவரை சேர்த்து படம் எடுத்து கொண்டு இருந்தனர் . தூரத்தில்ஒரு ஏட்டு ஐயா வாக்கிடாக்கியுடன் இன்ஸ்பெக்ட்ருக்கு மிக பவ்யமாக சலாம் போட்டார். இன்னும் அந்த ஒருவர் துடித் கொண்டு இருந்தார். யாரோ ஒருவர் மிக அருகில் பார்த்து விட்டு காது வழியாக ரத்தம் வந்து விட்டது அதனால் பிழைப்பது கடினம் என்றார்.

நான் எதாவது உதவலாம் என்று சென்றேன் இன்ஸ்பெக்டர் இருந்ததால் கூடும் கூட்டம் நேற்று இல்லை, இன்ஸ்பெக்டர் அது ஒரு கடுமையான வேலை பளு என்பதால் அவர் கடுகடுப்புடன். இருந்தார்



தூரத்தில் எங்காவது சைரன் சத்தம் கேட்கிறதா? என்று பார்த்தேன் அதற்க்கான எந்த சாத்திய கூறும் இல்லை. ஒரு வேளை ரத்த சேதம் அதிகம் என்பதால் அம்புலன்ஸ் இன்னும் வர வில்லையோ? இன்ஸ்பெக்டர் இப்போது பேசினார்

செல்போனில் இன்ஸ் பேசியது தெளிவாக கேட்டது “ சார் இப்பதான் பத்து நிமிஷத்துக்கு முன்னாடிதான் நடந்தது ஆம்புலண்ஸ்க்கு சொல்லிட்டேன்..
ஆனால் அந்த இன்ஸ்பெக்டர் நினைத்து இருந்தால் எதாவது மீன்பாடி வண்டி பிடித்து அந்த ஒருவரை அனுப்பி இருக்கலாம். இன்னும் அந்த ஒருவர் ரத்த சகதியில் துடித்து கொண்டு இருந்தார்.

தூரத்தில் என் நண்பி நிற்க்கும் இடம் நோக்கி நான் பார்த்த போது அவள் லேசாக தள்ளாடுவது தெரிந்தது. அருகில் செல்லவும் அவள் என்மீது சரியவும் சரியாக இருந்தது. மயக்கம் வந்தது ஒரு பெண் என்பதால் திடிர் என்று நாலு பேர் வந்தார்கள் . ஒருவர் தண்ணீர் பாட்டிலுடன் ஓடி வந்தார்

வந்த நாலு பேரில் ஒருவர் என்னை ரொம்ப உரிமையுடன் திட்டினார்.
“ என்சார் இந்த மாதிரி இடத்துல லேடிஸ் சோட நிக்கறீங்க” முகத்தில் தண்ணீர் தெளித்து அவளை மயக்கம் தெளிவித்து வண்டியில் உடக்ர்ந்து மெதுவாக வண்டி
கிளப்பினேன். அவள் என்னை முதகு பின்னே அனைத்து கொண்டாள். அவள் கைகளில் நடுக்கத்தை உணரமுடிந்தது. யாரோ ஒருவர் திட்டியது ஞாபகம் வந்தது. அந்த விபத்தில் சிக்கிய ஒருவருக்கு சீக்கிரம் முதலுதவி கிடைத்து உயிர் பிழைக்க வேண்டினோம்

எப்போதும் வேகம் எடுக்கும் வண்டி நேற்று நாற்பதுக்கு மேல் தாண்டவில்லை, வீடு திரும்பும் வரை நாங்கள் இருவரும் பேசிக்கொள்ளவில்லை. வரும் வழி முழுவதும் வேகமாக அம்புலன்ஸ் ஏதாவது வருகிறதா என ஆர்வத்துடன் பார்த்தேன் மிஞ்சியது ஏமாற்றமே...


இதுவே கிரமமாக இருந்தால் அந்த ஒருவர் அம்புலன்ஸ் வரும் வரை துடித்து கொண்டு இருக்கமாட்டார், இந்நேரம் ஒரு டிராக்டர் அல்லது எவருடைய தோள்களே அம்புலன்ஸ் ஆகியிருக்கும் ..

வீடு வந்து வெகு நேரம் நான்துங்கவில்லை. அலங்கோலமான டீவிஎஸ் 50யும் ,சரவணாஸ்டோர் கட்டை பை யும் நினைவில் வந்து போயின....

ஜாக்கெட் போடாமல் ஆடிய நயன்தாரா... திருந்துமா ? தினத்தந்தி....


தினத்தந்தி ரொம்ப நாளைக்கு பிறகு நேற்றுதான் ஷேர் ஆட்டோக்களால் ஏற்படும விபத்து குறித்து ரொம்ப விளாவரியாக எழுதியது. அதற்க்கு நல்ல ரெஸ்பான்ஸ். நேற்று பஸ் நிறுத்தங்களில், போலிஸ் ஷேர் அட்டோக்களை கண்கானித்தது. அதனால் சென்னை போக்குவரத்து நெரிசல் ரொம்பவும் குறைவாக இருந்தது.


இதுபோன்ற செய்திகள் தொடர்ந்து , வெகு ஜன மக்களால் பெரிதும் விரும்பி வாசிக்கபடும் பத்திரிக்கைகளில் வந்தால் அரசு அதிகாரிகளுக்கும் ஒருபயம் வரும். ஆனால் தினத்தந்தி எந்த கட்சி ஆளுங்கட்சியாக வந்தாலும் அதற்கு ஜால்ரா போட்டு, எழுதுவதையே வடிக்கையாக கொண்டுள்ளது. ஏனெனில் அரசு விளம்பர வருவாய் போய் விடும் என்ற பயம் காரணம். சரி நேற்று வெளியிட்ட செய்திக்கு இன்றைக்கு நகரில் என்ன நிலமை அதற்க்கு அதிகாரிகள் என்ன மாதிரி நடவடிக்கை எடுத்தார்கள் என்பது பற்றி ஒரு பாலோ அப் கொடுத்தால் என்ன குடி மூழ்கியா போய்விடும்???


நடவடிக்கை எடுத்த அதிகாரிகளை பாராட்டினால் இன்னும் மேலும் நல்லது நடக்கும்அதை செய்யாமல் நயன்தாரா சத்யம் படத்துக்காக, ஜாக்கட் அணியாமல் துணிச்சலாக ஆடினார் என்பதை கட்டம் கட்டி போட்டு இருக்கிறார்கள். நயன்தாரா காசு கொடுத்தால் அவுத்து போட்டுகூட ஆடுவார். அதுவும் ஜாக்கட் இல்லாமல் துணிச்சலாக ஆடினாராம். அவர் என்ன துணிச்சலாக விபத்தில் கவிழப்போகும் ரயிலை நிறுத்தினாரா? அல்லது துணிச்சலாக வேறு ஏதாவத செய்தாரா? முதல்மரியாதையில் நடிகை ராதா ஜாக்கெட் போடாமல் நடித்தார்,அது வேறு காலகட்டம் இப்போது பல கதாநாயகிகள் பிரா உடன் ஆடுகிறார்கள். அது இன்னும் அந்த செய்தி சேகரித்த நிருபருக்கு தெரியவில்லை போலும்,

நயன்தாரா, ஜாக்கட் ,துணிச்சல் போன்றவை விடுத்து இன்னும் மக்களுக்கு பயன் தரும் பல விஷயங்களை தந்தியிடம் எதிர்பார்க்கிறோம். எனென்றால் எத்தனை பத்திரிக்கை வந்தாலும் தந்திக்கு தமிழ் மக்களுக்குமான உறவு ரத்த சம்மந்தமான உறவு, அதை புரிந்து மக்கள் பிரச்சனைகள் அதிகம் முன்வைக்கபட வேண்டும் என்பதே எனது விருப்பம்

அன்புடன்/ ஜாக்கிசேகர்...

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner