காலில் கவனம்.




ஏதோ லிகமன்ட் இஞ்சுரியாம்...தம்பி பாலா சொன்னான்..

காலில் முட்டியில் செம வலி.....
ஜவ்வு கிழிச்சிடுச்சாம்...


ஒரு வாராம திடிர் திடிர்ன்னு வலிக்கும் காலை ஊனி வச்சி நடக்க முடியாது...

ஒரு ஆறு வாரத்துக்கு போட்டுக்குன நடன்னு சொல்றான்...

வாழ்க்கையில இப்படி ஒரு சமாச்சாரத்தோட இதுதான் பர்ஸ்ட் டைம்..

இது மேல பேன்ட்டை போட்டுக்கிட்டு போனா.... வேற மாதிரி இருக்கு...

.
டாய்லட்டுக்கு போனா இரண்டு பக்கெட் சலுக்கு சலுக்குன்னு ஊத்தி கழுவினவனுக்கு....

திடிர்ன்னு சத்தியம்தியேட்டர்ல தண்ணி வராம பேப்பர் வச்சி துடைச்சிக்கிட்டு....

சினிமா பார்க்க போனா...? சினிமா ஓட்டவே ஒட்டாம...

ஏதோ ஒட்டிக்கிட்டு இருக்கற மாதிரி பீல் இருந்துக்கிட்டே இருக்கும் இல்லை....

அது போல ஒரு அன்ஈசியான பீலிங் வருது....


இன்னும் என்னவெல்லாம் பார்க்கனுமோ? பரம்பொருளே.?

நீ இருக்கச்ச எனக்கு என்ன கொறச்சல்..????

பார்த்துடலாம்டா....



இன்னைக்கு படம்தான் பார்க்க போறேன்....

தம்பி Ramesh Ram தெலுங்கு படம் PELLI CHUPULU எஸ்கேப்புல புக் பண்ணி இருக்கான்..

அண்ணா முத வாட்டி ரெண்டு பேரும் சேர்ந்து படம் பார்க்க போறோம்... மறந்துடாதே என்று நியாபகப்படுத்தினான்...

நாலு மணிக்கு படம்..

கால்ல கவனம் இல்லாம படத்துல கவனம் வைக்கோனும்..


ஜாக்கிசேகர்
09/08/2016




நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ....
.EVER YOURS...
 

2 comments: