ஒளிப்பதிவாளர் கே.வி ஆனந்



கே.வி ஆனந்...

தமிழ் சினிமாவின் ஒளிப்பதிவு துறையில்  உச்சம் தொட்டு அசத்திய மனிதர்…

அவர் ஒளிப்பதிவில் மிகப்பெரிய சவாலான பணி என்றால்  சிவாஜி படத்தில் வரும் சஹான பாடலில் சுற்றிலும் கண்ணாடி மாளிகையில் லைட்  வைத்து இருப்பதும் தெரிய கூடாது.. கிளாரும் தெரியக்கூடாது   … முக்கியமாக ஆர்ட்டிஸ்ட் உட்கார்ந்து பேசும்  காட்சியும் கூடாது.. மூவ்மென்ட் இருக்கும் நடனகாட்சி… அப்படி என்றால் டிராலி, ஜிம்மி ஜிப்  எல்லாம் மூவ் ஆகும் இருந்தாலும் எதிர்கண்ணாடியில்  பிம்பம் வராமல் படம்பிடித்து இருப்பார்…  அது போன்று  நிறைய பாடல்களையும் காட்சிகளையும் சொல்லிக்கொண்டே போகலாம்…


எழுத்தாளர் பாலகுமாரன் பேட்டி.



தந்தி டிவியில்  கிழக்கு பதிப்பகம் பத்ரி ராஜபாட்டை என்ற நிகழ்ச்சியை ஆரம்பித்து இருக்கின்றார்...


 தந்தியை விட்டு வெளிவந்து ஒன்றரை வருடங்கள் ஆனாலும் அதுதான் என் தாய் வீடு என்பதால் சில நிகழ்ச்சிகளில் அவ்வப்போது கவனம் செலுத்துவேன்...

நண்பர் ரசனை ஸ்ரீராம் பேஸ்புக்கில்  எழுத்தாளர் பாலகுமாரனை  பத்ரி நேர்முகம் செய்த ராஜபாட்டை நிகழ்ச்சியின் லிங்க் கொடுத்து இருந்தார்... அள்ளி அள்ளி பருகும் அமிர்தமடா  என்று கேப்ஷன் வேறு எழுதி இருந்த காரணத்தால் மிகவும் ஆர்வமானேன். அதனால் யூடியூபில் அதனை  பார்த்தேன்..



Commitment (2013)/உலக சினிமா/தென்கொரியா/ பாசமலர் உளவாளி,






  எப்படி இந்தியா பாகிஸ்தான்  ஒன்னா இருந்து… சுதந்திரம் கொடுக்கறேன்னு ரெண்டுத்தையும் பிரிச்சி வச்சிட்டு போனதில் இருந்து  இன்னைக்கு வரைக்கும் அடிச்சிக்கிட்டு மங்கம் மாய்கின்றோம்..


அதே போலதான்  ஒன்னா இருந்த நாடு  கொரியா… நம்மளை எப்படி பிரிட்டிஷ்காரன் மேல உட்கார்ந்துக்கிட்டு ரவுண்டு கட்டினானோ.. அது போல  கொரியாவை ஐப்பான்காரன்  காய் அடிச்சான்.. விளைவு சவுத்  கொரியா.,.. நார்த் கொரியான்னு பிரிஞ்சி போய் அடிச்சிக்கிட்டு இன்னைக்கு வரைக்கு கொய்யால  அடிச்சிக்கிட்டு சாவரனுங்க…

Happy New Year-2014/ அசத்தும் இந்தி திரைப்படம் ஹேப்பி நியூயர்.



எழுத்தாளர் ஞானிசங்கரன் மகன் மனுஷ் நந்தன் ஹேப்பி நீயூயர் திரைப்படத்துக்கு   ஒளிப்பதிவு செய்து இருப்பதாகவும்... சாந்தி தியேட்டரில் அப்படத்தின் தமிழ் வெர்ஷன்  பார்த்ததையும் மக்கள் மிகவும் ரசித்ததையும் தனது முகநூலில் எழுதி இருந்தார்... 


நம்ம ஊர்காரர் ஒளிப்பதிவு செய்த பிரமாண்ட படம் எப்படி இருக்கின்றது  என்று பார்த்து விட்டு வரலாம் என்று சாந்தி தியேட்டரில்  தமிழ் வெர்ஷனுக்கே புக் செய்தேன்....

கடந்த ஓராண்டுகளாக ஹேப்பிநியூயர்  படத்தின் பிரோமோஷன் இல்லாத ஊடகமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு   சலிக்க சலிக்க பிரமோஷன் இருந்தது  என்றே சொல்ல வேண்டும். இப்படியான  பிரமாண்ட படம்  எப்படி மனுஷ் நந்தனுக்கு கிடைத்தது..

சந்திரபாபுவுக்கு வந்த சத்திய சோதனை.





 இருக்கும் நாலு முடியை ஒதுக்க  சலூனுக்கு  சென்று  மாதத்துக்கு  125 ருபா  தண்டமாக கொடுப்பது என் இயல்பு...  

தலையில் எந்த புதுமையும்  செய்யலாம் என்று ஆசை இருந்தாலும்  இறைவன் கொடுத்த வாய்ப்பை பறித்து விட்ட காரணத்தால் மீசை மற்றும் கிருதாவில் எதையாவது கொடுக்கும் காசுக்கு எதையாவது செய்ய சொல்லி பார்ப்பதும்  பார்பரை செய்ய சொல்லி இம்சிப்பதும்  என் இயல்பு.

Dilwale Dulhania Le Jayenge-1995/ இந்தி சினிமா / மும்பையில் 990 வாரங்களை கடந்து ஓடும் திரைப்படம்.



மிகச்சரியா  ஐந்து நாட்களுக்கு முன்... அதாவது ஆக்டோபர் 20 ஆம் தேதி 1995 ஆம் ஆண்டு தில்வாலே துல்ஹனியா லேஜாயேங்கே திரைப்படம் மும்பையில் உள்ள மராத்தாமந்தீர் திரையரங்கில்  திரையிடப்பட்டு 19 வருடமாக ஓடிக்கொண்டு இருக்கின்றது..

நண்பர் வெட்டிக்காடு ரவிச்சந்திரன் சோமு.....




நண்பர்  வெட்டிக்காடு ரவிச்சந்திரன் சோமு.....


தஞ்சை அருகே இருக்கும் வெட்டிக்காடு என்னும் சிறுகிராமத்தில் பிறந்து, 

படிப்பில் முதல் மாணவனாக திகழம் போதே அப்பாவோடு வயலில் கடலை கொல்லையில் கவளையில் தண்ணீர் இறைப்பது, மடை கட்டுவது, வயலில் களை எடுப்பது, கதிர் அறுப்பது, இரவில் களத்திற்கு காவலுக்கு படுக்க போவது, என்று வயல் வேலைகள் செய்துக்கொண்டே .... 


பெருங்களத்தூர் பைக் ஸ்டேன்ட் பக்கிங்க... ஜாக்கிரதை மக்களே...





பெருங்களத்தூர் ஒரு முக்கிய ஜங்கஷனாக உருவெடுக்கும் என்று யாரும் நினைத்துக்கூட பார்த்து இருக்க மாட்டார்கள்..


முக்கியமா என்றைக்கு மதுரவாயல் பைபபாஸ் தொடங்கியதால்  கோயம்பேடு செல்லும் பேருந்துகள் நகரத்தினுள் நுழையாமல் பைபாஸ் சாலையில் செல்ல ஆரம்பித்ததோ...??

என்றைக்கு தென்மாவட்ட பேருந்துகள்... கோயம்பேட்டில் இருந்து கிளம்பி.... வடபழனி கிண்டி தாம்பரம், வழியாகக  செல்லாமல் பைபாஸ் வழியாக செல்ல ஆரம்பித்ததோ.. அன்றில் இருந்து பெருங்களத்தூர் ஜங்ஷன் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாற ஆரம்பித்தது....

நடிகர் விஜய் மீதான விமர்சனங்கள் ஒரு பார்வை.




பத்தாவது  படித்து பாஸ் பண்ணி  ஸ்கூலுக்கு போய்  மார்க் ஷீட்டுல கையெழுத்து போட சொல்லி மார்க்ஷீட் கொடுப்பாங்க... அதே போல பிளஸ் டூ பாஸ் ஆனதும் அதே போல மார்க்ஷீட்டுல கையெழுத்து போட சொல்லி  மார்க்ஷீட் கொடுப்பாங்க.. 

இரண்டு கையெழுத்தையும் வித்தியாசத்தை பாருங்க.. நிறைய இருக்கும்.. முக்கியமா இரண்டு வருஷம்தான்... இத்தனைக்கு இரண்டுமே  நாம்  போட்ட கையெழுத்துதான்.


Kaththi-2014 /கத்தி திரைவிமர்சனம்.



ஒரு நடிகன் அரசியலுக்கு வர ஆசைப்பட்டால் என்னவெல்லாம் நடக்கும் என்பதை நடிகர் விஜய்க்கு சமீபத்தில் நிகழ்வதை  இந்த தலைமுறை பார்த்து தெரிந்துக்கொள்ளலாம்..


Bangalore days- பெ(ண்)ங்களூர் டேஸ்....







 யாழினியோடு  ஒரு வாரம் மற்றும்  கடந்த சனி ஞாயிறு என்று இரண்டு நாட்கள் பெண்களூர் வாசம்... பெண்களூரில் நிறைய மாற்றங்கள்.. அதுமட்டுமல்ல... போற்றி புகழ்ந்த பெங்களூர் டேஸ் திரைப்படம் பார்த்தாயிற்று ...  

வாழ்த்தியமைக்கு நன்றிகள்.




திருமணநாள் வாழ்த்து மழையில் நனையவைத்த அத்தனை உள்ளங்களுக்கும்  என் நன்றிகள்...கல்யாண நாள் ஞாயிறு என்பதால்  அப்பாவை பார்த்து ஆசி வாங்க குடும்பத்துடன் கடலூருக்கு சென்றேன்..

திண்டிவனத்தில் இருக்கும் வனிதா அத்தை வீட்டில் ஆசிர்வாதம் பெற்று தம்பி பாலா குடும்பத்துடன்  கடலூர் சென்று அப்பாவிடம் ஆசி வாங்கி... அப்படியே திருவகீந்தபுரம் பெருமாளையும் ஹயகிரிவரையும் வணங்கி விட்டு ஞூயிறு இரவு பாண்டியில் கம்பன் கலையாரங்கம் எதிரில் உள்ள லாட்ஜில் தம்பி பாலா குடும்பதோடு தங்கினோம்....


நேற்று முழுக்க பாண்டி பீச், ஆரோவில், என்று சுற்றி விட்டு நேற்று இரவுதான் சென்னைக்கு வந்தோம்...

அதனால் கமென்ட் இட்ட நண்பர்களுக்கு  நன்றி சொல்ல முடியவில்லை.


THE NOVEMBER MAN -2014/குரு சிஷ்ய உளவாளிகளின் கதை.




இயக்குனர்  டோனிஸ்காட் இயக்கத்தில்  ராபர்ட் ரெட்போர்ட், மற்றும் பிராட் பிட் நடித்து வெளிவந்த மகத்தான காவியத்தை யாரெல்லாம் கண்டு ரசிச்சி இருக்கிங்க..??


உளவாளி என்ற வேலை இருக்கின்றதே... நாமே வலியபோய் வாண்டட் ஆக வண்டியில் ஏறி  பிரச்சனைகளை சந்திக்கும் தொழில்.....  எந்த நேரத்திலும் தம் உயிருக்கும் குடும்பத்தினர் உயிருக்கும் ஆபத்து வரலாம்...

 வில்லன் குரூப்பில்  உளவாளியாக  சேந்து விட்டால்  சொந்த நாட்டு  மக்களேயே  கொல்ல வேண்டி வரும்..

வாழ்த்துகள் வேண்டி ...



சுதா மேடம் உங்க வாழ்க்கையில ரீவைன்ட் பட்ட்னை கடவுள் உங்க கிட்ட கொடுத்தா.. உங்க வாழ்கையில  நடந்த ஒரே விஷயத்தை நீங்க மாத்திக்கலாம் ஆனா ஒரு கண்டிஷன்.....ஒரே  ஒரு சான்ஸ்தான்  என்ன செய்விங்க...??? என் மனைவியின் அலுவலகத்தில் அவள்  நண்பர்கள் என் மனைவியிடத்தில் கேட்ட கேள்வி.

யோசிக்க நேரம் எல்லாம் எடுத்துக்கொள்ளவில்லை...

 சட்டென என் மனைவி சொன்னாள்... 


கிரேசி மோகன்





இன்று காமெடி நடிகர், வசனகர்த்தா, நாடக கலைஞர் கிரேசிமோகனுக்கு பிறந்தநாள்…

தொழில் நுட்ப வளர்ச்சி அடைந்த இந்த காலத்திலும் நாடக கலைக்கு உயிர் கொடுத்துவரும் ஒரு சிலரில் கிரேசியும் ஒருவர்.

இதுவரை 5000க்கு மேற்ப்பட்ட மேடை நாடகங்களை மேடையேற்றிய திறமை சாலி. இன்னமும் கருத்து மோதல் அற்று கிரேசி கிரியேஷனில் ஒரு குடும்பமாக அவரது நண்பர்கள் நடித்து வருகின்றார்கள் என்றால் அதுதான் இந்த கால கட்டத்தில் பெரிய விஷயம்.

கடலூர் கிருஷ்ணாலயா தியேட்டரில் அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தை இரண்டரை ரூபாய் டிக்கெட்டுக்கு சட்டையை கிழித்துக்கொண்டு  பார்த்தவைகள் என் நியாபக அடுக்குகளில்....

அந்த படத்தில் வில்லன் நாகேஷ் பேசும் வசனம் ஒன்று வரும்.. தாடி வச்சவன் எல்லாம் தாகூரும் இல்லை.. சுருட்டு புடிக்கறவன் எல்லாம்  வின்ஸடன் சர்ச்சிலும் இல்லை என்று நாகேஷ் பேசும் வசனம் எனக்கு மிகவும் பிடித்தது....


நல்ல நண்பர்கள்.

இரவு உணவுக்கு மயிலையில்  உள்ள ஒட்டலுக்கு சென்றோம்... யாழினி வழக்கம் போல கண்ணில்பட்டதை எல்லாம் வாங்கி கொடுக்க வேண்டும் என்று கேட்டு நச்சரித்தாள்...


 எதிர் மேசையில்  மொத்தம் 12 பேர் சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்கள்.. அதில் இரண்டு பேர் பெண்கள்...

வாட்ஸ் அப்,ஹேப்பி நியூயர்  ஷாருக்கின் சிக்ஸ் பேக்,அஜித்தின் லுக், பேஸ்புக்,எதிர்பார்த்த பேங்க் பேங்க் மொக்கையான கதை என்று இன்றைய இளைஞர்களின்  வாழ்வை பேச்சில் பிரதிபலித்துக்கொண்டு இருந்தார்கள்...

பெண் நண்பர்களோடு கெட்டு கெதர் வந்து இருந்தாலும்.. அதே  நட்பு கூட்டத்தில் யாரோ ஒருவனை இரண்டு பேரில் ஒருத்திக்கு பிடித்து இருக்க வேண்டும். கண்களில் மகிழ்ச்சி, அதை விட காதலில் சிக்கியவள் கண்களில் வெளிப்படும் போதையான அலட்டல்.... ஹீ இஸ் மை மேன் அப்படின்ற ஒரு அலட்டல் அவளின்  கண்கள்,உடல்மொழி போன்றவற்றில்   வெளிப்பட்டுக்கொண்டு இருந்ததது...

 எங்கேயாவது என்னை போன்ற ஒரு ஆள் அவள் நண்பர்கள் கூட்டத்தில் அவள்  வெளிப்படுத்தலை கண்டுபிடித்து தொலைய போகின்றான் என்ற கவலை அவ்வப்போது  அவள் அலட்டலை குறைத்ததோடு  அவள் இயல்புக்கு திரும்ப ரொம்பவே  பிரயத்தனப்பட்டுக்கொண்டு இருந்தாள்.

மற்றொரு பெண் எல்லா பசங்களோடும் நின்றுக்கொண்டு  செல்பி எடுத்துக்கொண்டு இருந்தது...

பில் செட்டிலிங் டைம்...

இரண்டு பேர்  ஓஎம்ஆர் அருகில் இருக்கும் பிரமாண்ட வளாகத்தில் இன்ட்ர்வியூவிக்கு செல்ல போவதாக சொல்ல...

என் மனைவி அவர்கள் பேச்சில் ஆர்வமானாள்...

என் மனைவி மேனேஜராக இருக்கும் வளாகத்தில்  உள்ள ஒரு கம்பெனியில்  ஒப்பனிங் இருப்பதாக அவர்கள் பேசிக்கொள்ள.....

ஏங்க.. அந்த பசங்க ரெஸ்யூமை எனக்கு  அனுப்ப சொல்லுங்க..  எங்க கம்பெனியில் ஓப்பனிங்க இருந்தா சொல்லலாம் இல்லை என்றாள்..

நான் அவர்களில் ஒருவனை அழைத்தேன்.... அவன் முதலில் ஏன் இந்த ஆள் அழைக்கின்றான்...? என்று கேள்விகுறி முகத்தில் அப்பிக்கொண்டு  தயங்கி தயங்கி  என் முன்னே வந்தான்....

நீ இன்டர்வியூக்கு போற இல்லை.. அதே வளாகத்தில்  இருக்கும் பிரபல கம்பெனியில்  அங்க இவுங்கதான் மேனேஜர்...நீ இன்ர்வியூவுக்கு போறபடி போ... உன் ரெசியூமை இவங்களுக்கு அனுப்பு... இவுங்க கம்பெனியில் ஓப்பனிங் இருந்தா கண்டிப்பா  சொல்லுவாங்க.. என்றேன்..

தேங்யூ சார்...

ஆண்ட்டி ரொம்ப தேங்க்ஸ் ஆண்ட்டி..

ஆண்ட்டியா...?  அப்ப உனக்கு வேலைக்கு ஹெல்ப் பண்ணமாட்டாயா? என்று கலாய்த்தேன்..


சாரிக்கா.... என்று சொல்லி விட்டு மெயில் ஐடி வாங்கி கொண்டு  வேலை தேடும் பையன்  சென்று விட்டான்..

பில் செட்டில் செய்து பேரர் வரும் வரை வெளியே அரட்டை அடித்துக்கொண்டு இருந்தார்கள்...

அதில் இரண்டு பேர்  உள்ளே வந்தார்கள்...

மேம்...எங்க  செட்டுல  எல்லோருக்கும் வேலை கிடைச்சிடுச்சி... அவனக்குமட்டும்தான் இன்னும் வேலைகெடைக்கலை.. அவனும் டிரைப்பண்ணிக்கிட்டுதான் இருக்கான்...எங்க எல்லாருக்கும் ரொம்ப கஷ்டமா இருக்கு... பிளிஸ்மேம் அவனுக்கு எங்கயாவது ஓப்பனிங் இருந்தா சொல்லுங்க மேம் என்று  கெஞ்சினார்கள்...

என் வாழ்வில், என் முன்னேற்றத்தில் நண்பர்களின் பங்கு இன்றியமையாதது... அவர்களின் தூண்டுதலாலே வளர்ச்சியடைந்தேன்....

 பாருங்கள்... தன் நண்பனு வேலைவேண்டி கெஞ்சிக்கொண்டு இருக்கும் இரண்டு இளைஞர்களை பார்க்கையில் எனக்கு பெருமையாக இருந்தது..

நல்ல  நண்பர்கள் அமைந்தவர்கள் பாக்கியசாலிகள்...

அவர்கள் சென்றஉடன் தளபதி படத்தில்  வரும்... கீழுள்ள வரிகளும் என் நண்பர்களும் நினைவில்  வந்தார்கள் என்பதே உண்மை.
======
பந்தம் என்ன சொந்தம் என்ன போன என்ன வந்த என்ன
உறவுக்கெல்லாம் கவலைப்பட்ட ஜென்மம் நானில்ல
பாசம் வைக்க நேசம் வைக்க தோழன் உண்டு வாழவைக்க
அவனை தவிர உறவுக்காரன் யாரும் இங்கில்லே
உள்ளமட்டும் நானே உசுரகூட தானே
என் நண்பன் கேட்டா வாங்கிக்கன்னு சொல்லுவேன்
என் நண்பன் போட்ட சோறு நிதமும் தின்னேன் பாரு
நட்பை கூட கற்பை போல எண்ணுவேன்
சோகம் விட்டு சொர்க்கம் தொட்டு ராகமிட்டு தாளமிட்டு பாட்டு பாடும் வானம்பாடி நாம் தான்

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்
14/10/2014



நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

MADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு


தென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க  தென் சென்னையில் தெரியாம  இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்னையில் தெரியாம  இடிச்சிட்டா ஏய் கண்ணு என்னை தலையிலயா.. வச்சிக்கிட்டு இருக்கே..??  ஒம்மால பார்த்து போ.. என்ற சீறல்  இருக்கும்...

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner