உப்புக்காத்து...15(ஊட்டி/1)




ஹனி மூன் எவ்வளவு முக்கியமான விஷயம் என்பது இப்போது திருமணம் செய்து கொள்ளும்  பல  தோழர் தோழிகளின் எதிர்பார்ப்பை என்னால் புரிந்து  கொள்ள முடிகின்றது..
திருமணம் முடிந்ததும் எந்த ஊருக்கு ஹனிமூன் என்று  கேள்வியோடு நிறுத்தாமல், ஊட்டி கொடைக்கானல் என்று நான் என்  ரேஞ்சிக்கு, சுதேசிதனமாக  யோசித்து கேள்வியை முன் வைத்தால்... அவர்கள் லண்டன்,மால்தீவ், சிங்கபூர், என்று தாலிகட்டும் போதே பிளைட் டிக்கெட்டை கையில் வைத்துக்கொண்டுதான் தாலியே கட்டிக்கொள்கின்றார்கள்..

 என்னுடைய மாணவி  ஒருவள் திருமணம் முடிந்தால் நயகராவில்தான் ஹனிமூன் என்று தெளிவாக மாப்பிள்ளையிடம் சொல்லியே தாலிகட்டிகொண்டாள்

 எங்க அம்மாவும் அப்பாவும் எங்கே ஹனிமூன் கொண்டாடி இருப்பார்கள் என்று என்னுள் இயல்பாய் எழுந்த கேள்விக்கு    என்னிடம் பதில் இல்லை.
ஒரு வேளை என் அம்மா உயிரோடு இருந்து இருந்தால்  என்னிடம் அந்த கேள்விக்கு நிச்சயம் பதில் இருந்து இருக்கும்..

சமீபத்தில் ஆனந்த விகடன் பொக்கிஷத்தில்  பிரபல எழுத்தாளர்கள்  பற்றி அவர்கள் பிள்ளைகள் தெரிவித்த கருத்துக்களை பகிர்ந்து இருந்தார்கள்.. எல்லா எழுத்தாள அப்பாக்களும் டெரர்களாகதான் இருந்து இருக்கின்றார்கள்.. அதில் எழுத்தாளர்   லேனா தமிழ்வாணன்  தனது ஹனிமூன்   அனுபவத்தை பகிர்ந்து இருப்பார்.. திருமணம் முடிந்து  எங்காவது   வெளியூருக்கு ஹனி மூன் போலாம் என்று நினைத்துகொண்டு இருந்த போது .. நீ சின்ன பையன் உனக்கு விபரம் பத்தாது.. அதனால  மகாபலிபுரத்துக்கு ஹனி மூன் போயிட்டு வா என்றதோடு மட்டும் இல்லாமல் இரண்டாம் நாளே குடும்பத்தோடு லேனா தங்கி இருந்த  ஹோட்டலுக்கு போய்  விட்டாரம் அவுங்க அப்பா  தமிழ்வாணன்...

 இப்படி எல்லாம் எல்லோரும் தங்கள் ஹனிமூன் பற்றி அனுபவங்களை பெற்று  இருந்தாலும் ஹனிமூன் அனுபவம் எங்களுக்கு இல்வே இல்லை...

  திருமணமான புதியதில் என்  மனைவியின் நண்பிக்கு  ஊட்டியில் நிச்சயதார்த்தம்.. பெங்களுர் நாங்கள் சென்றால் அவளை சந்திக்காமல்  இருந்ததே இல்லை... அதே போல பெங்களூரில் இருந்து எங்கள் திருமணத்துக்கு அவளது நெருங்கிய தோழியுடன் வந்து எங்களை வாழ்த்தி இருக்கின்றாள்.. அதனால் அவள்  நிச்சயதார்த்தத்துக்கு கண்டிப்பாக வர வேண்டும் என்று அன்புக்கட்டளை விடுத்த காரணத்தால்  நாங்கள் செல்ல முடிவு எடுத்தோம்.

  என் மனைவியின்  உறவினர்கள் பலர் லாகர்தம்மாக இருப்பார்கள்..  ஒரு மாதத்துக்கு முன்பே டிரெயினில் டிக்கெட் புக்  செய்து  விடுவார்கள். ஒன்பது மணி டிரெயினுக்கு ஏழுமணிக்கே  பிளாட்பாரத்தில் போய் உட்கார்ந்து  விடுவார்கள்...ஆனால் நான் எப்பவுமே திடிர் முடிவுகள்தான்..   தேசாந்திரி போல கிடைத்த டிக்கெட்டை எடுத்துக்கொண்டு   கிடைத்த பேருந்தில் பயணிப்பது எனக்கு ரொம்ப பிடிக்கும்.

சரி அவள் திருமண நிச்சயதார்த்தத்துக்கு ஊட்டிக்கு போகலாம் என்று முடிவு  செய்தாகிவிட்டது.. அதுக்கு முன்ன  சின்ன பிளாஷ் பேக்.. எங்க ஊர் கடலூருக்கு இதுவரை 75 முறைக்கு மேல எனது பைக்கில்  சென்று இருக்கின்றேன்.  சென்னை டூ கடலூர் 175 கிலோ மீட்டர் போக வர 350 கிலோ மீட்டர்..  சென்னை டூ பெங்களூர் தூரம்.
அப்படின்னா யோசிச்சி பார்த்துக்கோங்க.

இதுல நானும் என்  ஒய்ப்புமே ஒரு பத்து வாட்டிக்கு மேல  பைக்ல கடலூர்  போய் இருக்கின்றோம். அது என்னவோ எங்க ரெண்டு பேருக்கும் பைக் டிராவல் ரொம்பவே பிடிக்கும்இங்க இருந்து காஷ்மீர் வரை கூட பைக்கில்  போயிட்டு வரனும்னு எனக்கு ஒரு திட்டம் இருந்திச்சி.. பட் யாழினி பொறந்திட்டா.. சோ இனி கார் வாங்கி அதுல  காஷ்மீர் வரை போகனும்னு ஆசை பார்ப்போம்.

 லெட் மீ கம் டூ த பாயின்ட்

சரி ஊட்டி போறதுன்னு முடிவு எடுத்தாலும், எந்த பஸ்லயும் டிக்கெட் புக் பண்ணலைஸ்டெரியிட் பஸ் ஏறி போறதை காட்டிலும். பஸ் மாறி மாறி போனா ஒரு அளவுக்கு   டிக்கெட் ரேட் குறையும் என்பதால் பஸ் மாறி மாறி போலாம்னு முடிவு எடுத்தோம். காரணம்  செம டைட்.. என்னைக்குதான் டைட் இல்லாம இருந்துச்சி... ??

 ஞாயிற்றுக் கிழமை  நிச்சயதார்த்தம்.... நாங்கள் வெள்ளிக்கிழமை காலையில் ஊட்டிக்கு போகலாம் என்று முடிவு எடுக்கின்றோம். இருவரும் அலுவலகத்துக்கு சென்று  வீடு திரும்பினோம்.. திரும்புவும் போவதா ?வேண்டாமா என்று ஒரே கொழப்பம்... சரி போயிட்டு வந்துடுவோம் என்று இரவு பத்துமணிக்கு முடிவு எடுத்தோம்...

பைக்கில் 12மணிக்கு   கோயம்பேடு பஸ் டெர்மினல்ஸ்ல இறங்கி, பைக்கை ஸ்டாண்டில் போட்டு  விட்டு, பஸ் புடிக்க போனா செமை கூட்டம்... முதல்ல சேலம் பஸ் பிடிச்சோம்...  சனிக்கிழமை காலையில எட்டுமணிக்கு சேலம் வந்துச்சி.. அதுக்கு அப்புறம்  கோயம்புத்தூர்... காரணம் என்னோட தோழி கால் உடைஞ்சி அந்த காலுக்கு கட்டு போட கோயம்புத்தூர்ருக்கு வரேன்னு சொல்லி இருந்தாங்க...  கோபியில இருந்து மாருதி ஆம்னில வந்துகிட்டு இருக்கேன்னு  சொன்னாங்க.. அவினாசி கிட்ட நாங்க ரெண்டு பேரும்  ஒரு ஸ்டாப்புல பேருந்துல  இறங்கி வெயிட் பண்ணி, அவுங்களை பார்த்துட்டு, அதே வண்டியில  கோயம்புத்தூர் வந்து இறங்கி அவுங்க கிட்ட விடைபெற்றோம்..

ஊட்டிக்கு பஸ் இல்லை மேட்டுபாளையத்துக்குதான் பஸ் இருந்துச்சி....அதுல போய் எறிக்கிட்டோம்.. மதியம் மூனு மணிக்கு மேட்டுப்பாளயத்துல இறங்கினோம். அதுக்கு அப்புறம் ஊட்டி பஸ் பிடிச்சி பயணப்பட்டோம்.. பேச்சுவாக்குல என் மனைவிக்கிட்ட சொன்னேன்.... இதுதான் நம்ம ஹனிமூன் டிரிப் என்று.. நன்றாக கவனியுங்கள் ஒரு பேச்சுக்கு சொன்னேன்....

என் மனைவி சொன்னாள்.. அஸ்க்கு புஸ்க்கு இது ஒன்னும் நம்ம ஹனி மூன் டிரிப் இல்லை.. என் பிரண்டோட  நிச்சயதார்த்துக்கு போறோம்.. இது அந்த கணக்குல சேராது என்றாள்......அஞ்சுமணிக்கு  ஊட்டியில போய் இறங்கி ஒரு ஹோட்டல்ல ரும் போட்டு தங்கினோம்... மொத வேலையா சென்னைக்கு மறுநாள் ஞாயிற்றுகிழமை சென்னைக்கு போக அரசு போக்குவரத்து கழகத்துல டிக்கெட் புக் செஞ்சேன்..
நைட்டு ஏழரை மணிக்கு பஸ் சென்னைக்கு புறப்படம்னு சொன்னாங்க......

ஞாயிற்றுகிழமை நிச்சயதார்த்தம் அட்டன் செஞ்சோம்...   14/12/2008 ஞாயிற்றுக்கிழமைபத்துமணிக்கு எல்லாம் பக்ஷன்முடிஞ்சிடுச்சி... என் மனைவிக்கு ஊட்டி இதுதான் முதல் டிரிப்... சோ எல்லா இடத்தையும் சுற்றி காட்ட விரும்பினேன்..

ஒரு சின்ன பிளாஷ் பேக்...
இதுக்கு முன்னாடி ஊட்டிக்கு  சில கல்யாணத்துக்கு போட்டோ எடுக்க வந்து இருக்கேன்... ஷுட்டிங்க்கு வந்து இருக்கேன்...நானும் எனது நண்பர்களோடு பைக்கில் ஊட்டிக்கு வந்து இருக்கோம்... அப்படி ஊட்டிக்கு வந்த போது முதுமலைக்கு போக பைக்காராடேம் வழியா முதுமைலை போய் அங்க இருந்து மைசூர் போற ரோடு  இருக்கு...ஆனா தலைக்குந்தா , மசினக்குடி வழியா ஒரு ரூட் முதுமைலைக்கு போற ரூட் ஒன்னு இருக்கு... அந்த வழியா முதுமலைக்கு போக யமாஹா பைக்கில் மூவரும் அந்த வழியா பயணப்பட்ட்டோம்..40 கிலோ மீட்டர் ஆனா 36 ஹேர்பின் பெண்ட்.. ரொம்ப இறக்கமா இருக்கும் பர்ஸ்ட் கீர்லதான் இறங்கனும்.. நாங்க மூனு பேரும் அந்த ரூட்ல பைக்ல இறங்கி ஆறாவது பெண்டுலயும் மூன்று பேரும் விழுந்து எழுந்தும் ஏகப்பட்ட சில்லரை வாங்கி திரும்பவும் முதுமலையை நோக்கி பயணப்பட்டோம்... அந்த பயணம் ஜென்டில்மேன் படம் ரிலிஸ் ஆன அஞ்சாவது நாள் அந்த பகுதியில் பயணப்பட்டோம்.. சோ செமை திரில்லான பயணம் அது...

என் வாழ்க்கையில் மறக்க முடியாத  பைக் பயணம் அது...ஒரு சின்ன சிலிப்.. பிரேக் பெயிலியர்ன்னா கூட 2800 அடி பள்ளத்துல விழனும் ஒரு எலும்பு கூட தேராது....அப்பலாம் சின்ன வேன் போல இருக்கும் சேரன் பஸ்தான் அந்த ரூட்ல ஓடிக்கிட்டு இருக்கும்.. அதே போல ஜீப்புங்க பறக்கும்... யானைகள் அதிகம் நடமாடும் வழி என்பதால் நைட்டு ஆறுமணிக்கு எல்லாம் ரோட்டை குளோஸ் பண்ணிடுவாங்க..அந்த ரூட்லதான் நாங்க போயிட்டு வந்தோம்.... பிளாஷ் பேக் முடிஞ்சிடுச்சி...


பழைய காதலியும் புது பொண்டாட்டியுமான என் மனைவியை அசத்த திட்டம் போட்டேன்...ஊட்டியில பைக் வாடகைக்கு கிடைக்கும்னு கேள்விபட்டு இருக்கேன்...சோ விசாரிச்சேன்...  பத்து நிமிஷத்துல எங்க ரூமுக்கு டிஸ்கவர் பைக்  வந்து நின்னுச்சி...

ஊட்டி  முழுசும் பைக்ல சுத்த ஆரம்பிச்சோம்.. அப்படியே தொட்டபெட்டா அது இதுன்னு சுத்தும் போது...நான் சொன்னேன்... ஏன்டி.. ஒரு ரூட்இருக்கு ஆனா அது ரொம்ப டேஞ்சர்.. முதுமலை போற ரூட் 15 வருஷத்துக்கு முன்ன அதே ரூட்ல பைக்குல நான் என் பிரண்ட்ஸ்சோட  போய் இருக்கேன்.. இப்ப அந்த ரூட் மூடிட்டாங்களா? இல்லையான்னு தெரியாது.. சோ..நாம அந்த ரூட்ல பைக்குல முதுமலை போயிட்டு வந்துடுவோமா? என்றேன்.. அவளும் தாரளமா  போலாம்னு சொன்னா....

நான் பைக்கை தலைக்குந்தா பக்கம் விரட்டினேன்.. நைட்டு எட்டுமணிக்கு குளோஸ்  பண்ணிடுவோம்னு போட்டு இருந்துச்சி.. நாங்க  மதியம் ஒன்றரை மணிக்கு பொறுமையா கல்லட்டி பால்ஸ்  ரோடு வழியா மசினக்குடி போய் அங்க இருந்து முதுமலை பைக்ல போயிட்டு வருவதுதான் பிளான்..பட் நேரம் ஆச்சின்னா நடுவுலயே திரும்பிடுவோம்.. காரணம்  நமக்கு நைட்டு  எழரைக்கு பஸ் என்றதும் மண்டையை மண்டை ஆட்டினாள்...

தலைக்குந்தா செக் போஸ்ட் தாண்டியதும்... திரில்லான அந்த வழியில் பர்ஸ்ட் கீர்லேயே போக ஆரம்பிச்சோம்...அப்பதான் செங்குத்தான இறங்கு பாதையில பைக் ஸ்லோவா இறங்கும்... இரண்டு  அவ்வதுமூனாவது கீர்ல போன, வளைவுல கண்ட்ரோல்  இல்லாம அதள பாதளத்துல விழுந்து வைக்க வேண்டியதுதான்... சோ ரொம்ப ஸ்லோவா இறங்க ஆரம்பிச்சோம்...

பைக்கோட் பிரேக்டிரம் அதிக சூடு காரணமா புகைய ஆரம்பிக்கும் என்பது எனக்கு ஏற்கனவே தெரியும் என்பதால் நான் ரொம்ப ஸ்லோவா  அங்க அங்க நிறுத்தி நிறுத்தி இறங்கினோம்...

செமைய ஜாலியான பயணம்... நடு நடுவுல சின்ன பால்ஸ் அங்க அங்க  வழிந்து கொண்டு இருக்க அங்க எல்லாம் நின்னு போட்டோ எடுத்துகிட்டு பொறுமையா மலையில் இருந்து இறங்க ஆரம்பிச்சோம்.. யானைகள் கடந்து போனதற்க்கு அடையாளமாக அங்க அங்க யானையோட விட்டைகள் கடந்துச்சி...

யானை கீனை வந்துச்சின்னா அப்படியே வண்டியை திரும்பிக்கிட்டு ஓட வேண்டியதுதான்... என்று என் மனைவியிடம் சொன்னேன். முதலில் ஆர்வமாக வந்தவளுக்கு ஆள்ஆரவாரமற்ற வழியை பார்த்து அமைதி காக்க ஆரம்பித்தாள்...ஐந்து நிமிடத்துக்கு ஒரு ஜீப் அல்லது கார் எங்களை கடந்து போய் கொண்டும் எதிரில் வந்து கொண்டும் இருந்தது.. எதிரில் வரும் வாகனங்கள் முக்கி முனறி ஏறிக்கொண்டு இருந்தன...ஒரு கிலோமீட்டர் கடக்க எழு நிமிடத்துக்கு மேல் நேரம் எடுத்துக்கொண்டு மிக மெதுவாக இறங்கி கொண்டு இருந்தோம்... அப்படி என்றால் அந்த வழியை  யோசித்துக்கொள்ளுங்கள். இந்த பகுதியில் நிறைய விபத்துகள் நடந்து இருக்கின்றது..காட்டுயானை தாக்கியும் பேருந்து கவிழ்ந்தும், நிறைய பேர் இறந்து போய் இருக்கின்றார்கள்.

ஒரு கட்டத்தில் இந்த வழியாக மனைவியை அழைத்து வந்தது தவறோ? ஏதாவது  ஒன்று என்றால்  உதவிசெய்யக்கூட  எந்த வழியும் இல்லை.. நிறைய ஹாலிவுட் திகில் படங்கள் போன்றவை நினைவுக்கு வந்து  எனக்கு பயத்தை ஏற்ப்படுத்தின.. ஆனால் அதை எதையும் என் மனைவியிடம் பகிர்ந்து கொள்ளவில்லை..

நடு நடுவே வாகனத்தை நிறுத்தி போட்டோக்கள்  எடுத்துக்கொண்டு மலையை விட்டு இறங்கி விட்டோம்... மசினிக்குடின்னு 10 கிலோமீட்டர் தூரம்  என்று இருக்கையில்  பைக்கை வேகம் எடுத்தேன்.. மணி சரியாக நாலு மணி... இனிமேல் மசினக்குடி தாண்டி முதுமலை போவது சாத்தியம் அல்ல அதனால் நாம் இப்போதே திரும்பினால்தான்  இரவு சென்னை செல்லும் பேருந்தை பிடிக்க முடியும்.. இந்த பாதையை உனக்கு காட்டத்தான் நான் இந்த பக்கம்  வந்தேன்..

கூடலூர் பைக்காரோடேம் வழியாக முதுமலைக்கு வரலாம்.. ஆனா அது சுத்து இது ஷாட் ரூட் ஆனா வெரி டேஞ்சர் ரூட் அதனால் திரும்பி விடுவோம் என்று சொன்ன போது எனக்கு வண்டி ஓடுவதில் சிறிய மாற்றம் அப்படியே வண்டியை திரும்பி  காட்டுதனமான வேகம் எடுத்தேன்.. என் மனைவிக்கு  ஒன்றும்புரியவில்லை ஏன் இவ்வளவு வேகம் என்றாள்..?

பத்து நிமிஷத்துக்கு எதுவும் பேசாதே என்றேன்.. எனக்கு உடம்பு வியர்க்க ஆரம்பித்த்து...கைகளில் நடுக்கம்...

வேகம் என்றால் வேகம் டிஸ்கவர் எங்களை வைத்துக்கொண்டு மலைப்பாதையில் மூன்று ஹேர்ப்பின் பெண்டுகளை கடந்து கொஞ்சம் கொஞ்சமாக வண்டி அலையத்தொடங்கியது...

ஏங்க..? வண்டி ஏன் இப்படி அலையுது...?

ம் ஆப்புல நாமலே வந்து  உக்காந்துகிட்டோம் டி..

 என்ன சொல்லறிங்க...?

 வண்டி பஞ்சருடி எருமை...

என்னது பஞ்சரா-?

ஆமாம்.....

என்னங்க பண்ணறது.. --?

போன மாசம் இதே ரூட்ல ஒரு பொண்னை கூட்டிகிட்டு வந்து நடுத்தெரு நாராயாணன் போல நான் நின்னமாதிரி கேட்கிறே..? எனக்கு மட்டும் என்ன தெரியும்.. ?

ஒரு பத்து நிமிஷம் அமைதியா இரு...

செல்போன் டவர் சுத்தமாக இல்லை...

பத்து நிமிடமாக அத்துவனக்காட்டில்  நிற்கின்றோம். எந்த வாகனமும் வரவில்லை.. யானை வருமோ? என்ற கவலை..
எப்படி பஞ்சர் போடுவது..?

எப்படி 2500 உயரத்துக்கு  மேல் இருக்கும்  ஊட்டிக்கு இந்த வண்டியை எப்படி எடுத்து செல்வது..?

அதுக்கு முன் ஒரு பாதுகாப்பான இடம் தேவை...யார் உதவிக்கு வருபவார்கள்.. ?தெரியாது..

என்ன செய்ய போகின்றோம்...? தெரியாது...

யாராவது நாலு ரவுடிகள் எங்களை ரவுண்டு கட்டினால்? சாத்தியம் இருக்கின்றது...

வாழ்வில் முதல் முறையாக இப்படி ஒரு ரிஸ்க் எடுத்தற்கு என்னை நொந்துகொண்டேன்..

15வருடத்துக்கு முன் இதே ரூட்டில் யமாஹாவில் வந்து விழுந்து  எழுந்தோம்..ஆனால் நாங்கள் மூன்று பேருமே ஆண்கள்.. ஆனால் இப்போது என் மனைவி கூட இருக்கின்றாள்... என்ன செய்வது?

 காட்டுயானை துரத்தினால்  எவ்வளவு வேகமாக இவளை அழைத்துக்கொண்டு ஓட முடியும்..? ஏதாவது பாறை பிளவு  இருந்தால் அதன் உள் ஒடி மறைந்துகொண்டால் மட்டுமே யானையிடம் இருந்து தப்பிக்க முடியும்...

ஒரு வாரத்துக்கு முன் சுற்றுலா வந்த ஒரு  ஜெர்மன் டூரிஸ்ட் பெண்ணை யாளை தும்பிக்கையால்  அடித்து சாகடித்து விட்டது என்று வரும் போது  டீக்கடையில்   சொன்ன தகவல் என்னை கலங்கடித்து விட்டது.

குரங்கு ஒன்று எங்களை பார்த்து   நக்கல் சிரிப்பை உதிர்த்து விட்டு நகர்ந்தது..

ஓத்தா உனக்கு நல்லா வேணும்...? எதாவது ஒன்னு ஆச்சின்னா.. அவ தம்பிக்காரனுக்கு என்ன பதில்  சொல்லறது? உனக்கு தேவையா? சரி வந்ததுதான் வந்து தொலைஞ்சியே.. காலையில கௌம்பி வந்து இருந்தாலாவது  பிரச்சனைன்னா  மதியத்துக்குள்ள ஏதாவது உதவி கிடைச்சிஇருக்கும்.. இருட்டிக்கிட்டு இருக்கு நாதாரணமா சென்னையில் இருட்டுனாலே  நைட்டு பெக்ட் போல இருக்கும் ஆனா இங்கன முழுசும் மரம் சூழ்ந்து இருக்கு எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்... மணி நாலு பத்து.. மழைமேகங்கள் திரண்டு ஒரு வித பயத்தை கொடுத்துக்கொண்டு இருந்தன..

நான் என் மனைவியின் தோள் தொட்டு ஐயம் சாரி என்றேன். வெகு துரத்தில் ஒரு ஜீப் வந்தது.. கை  காட்டினோம் நிறுத்தாமல் சென்றது..இன்னவோ இண்டிக்கா என்று  நிறைய கை காட்டினோம், சிலது நின்று கதை கேட்டு விட்டு ஐயோ பாவம் என்று புகைக்கக்கிய படிகிளம்பின... சிலது அட்வைஸ் மழை பொழுந்து விட்டு சென்றன.. ஏன்யா  பொண்டாடியை கூட்டிக்கிட்டு இந்த நேரத்துல எவனாவது பைக்ல வருவானா?- என்ற ஒரு இன்னோவா கேட்க? நான் மனதில் நான் வருவேன் என்று அந்த நேரத்துலும் என் மனதில் பதில் சொல்லிக்கொண்டேன்...சரி ஏதாவது வண்டி காலியாக வந்தால் இவளை மட்டும் ஏற்றி ஊட்டிக்கி அனுப்பி விட்டு நாம ஏதாவது செய்யலாம் என்றால்  வந்த சில வண்டிகள் புல்லாக வந்து கொண்டு இருந்தன..

 என் மனைவி ஒன்று மட்டும் சொன்னால்.. ஏது நடந்தாலும் நான் உன் கூடவே இருக்கேன்... என்னால மலை மேல போயிட்டு நகம் கடிச்சிகிட்டு தேவுடு காக்க முடியாது.. ஏது நடந்தாலும் உன் கூடவே இருக்கேன் என்று திரும்ப பதில்  சொன்னாள்... அந்த   அழுத்தமான மற்றும் என்னை கலவரப்படுத்தாத பேச்சு அந்த நேரத்தில் இதமாக இருந்தது. அவள் என் பதட்டத்தை உணர்ந்து இருக்க வேண்டும்.

அடுத்த பத்து நிமிடத்துக்கு எந்த இரைச்சலும் இல்லை.. கானகம் என்றால் என்ன? என்று  பள்ளியில் படிக்கும் போது கேள்வி கேட்டால் பதினைந்து பக்கத்துக்கு பதில் எழுதும்அளவுக்கு எனக்கு பல சத்தங்கள் கேட்டுகொண்டு இருந்தன... சில நேரத்தில் அமானுஷ்ய அமைதி கிலி பிடிக்க வைத்துக்கொண்டு இருந்தது..

என்னை நானே திட்டிக்கொண்ட கணங்களில் அந்த சம்பவம் முக்கியமான கனம்.. என்ன முடிவு எடுப்பது என்று குழம்பி போனேன்..

ஒரு பைக்..  நானும் என் மனைவியும் உதவி வேண்டிய காத்து இருந்தோம்..

அகேலா கிரேனில் இருக்கும் கேமரா அப்படியே மேலே போக கானகத்துக்கு நடுவில் மனசஞ்சலங்களுடன் நாங்கள் நின்றுக்கொண்டு பேந்த பேந்த விழத்துக்கொண்டு இருந்தோம்.

இஷ்டதெய்வத்தை வேண்டியபடி காத்து இருந்தோம்.

கார் சத்தமா? அல்லது மோட்டார் பைக் சத்தமா என்று தெரியவில்லை... வெகு தூரத்தில் மலையில் இருந்து இறங்கும் சத்தம் கேட்டது...
தொடரும்.




பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.




நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

18 comments:

  1. யோவ் உனக்கு ரொம்பத்தான் ஏத்தம். செஞ்ச தப்ப இவ்ளோ அழகா சொல்ற சரி சொல்றீயே ஆர்வமா படிச்சிட்டு வந்தா தொடரும் போட்டுட்ட என்ன நினைச்சிட்டு இருக்க மச்சி நீ ஒழுங்கா திங்கள்கிழமைக்குள்ள நீ அடுத்த பாகத்துல நடந்தத சொல்ற வேற ஏதாவது பதிவு போட்டு வீடு தேடி வரும் ஆட்டோ சரியா யாழினி அம்மாவ கேட்டதா சொல்லு மச்சி

    ReplyDelete
  2. ஜாக்கி, உங்க எழுத்து திறமையை எண்ணி பலமுறை வியந்த் இருக்கிறேன் . . மிகைப்படுத்துவதாக நினைக்க வேண்டாம் . . மிக அருமையாக விவரித்திருக்கிறீர்கள் . . இந்த ஒரு பாகத்தை வைத்தே ஒரு மிகப்பெரிய வெற்றி படத்தை எடுக்க முடியும் என்பது என் எண்ணம் . . .

    ReplyDelete
  3. Interesting Post Jackie. Suspense laam kodukureenga :)

    ReplyDelete
  4. சஸ்பென்ஸ் நாவலை படிப்பது போன்ற த்ரில்...

    தொடருங்கள் ஜாக்கி

    ReplyDelete
  5. ennaa saamarthiyama thappa sari pannurenga jakki anna.super suspence story.thikil kathai maariye irukku.i like that your style....

    ReplyDelete
  6. Jackie.... Continue soon.... Will be waiting...

    ReplyDelete
  7. அடுத்த பாகம் எப்போ??? சீக்கிரம்... :))...

    ReplyDelete
  8. சூப்பரான பயண ஹனுபவம்!?? ஹனிமூன் டிரிப்பில்ல அதான்!

    ReplyDelete
  9. oru thriller movieku interval vitta maathiri irukku

    ReplyDelete
  10. oru thriller movieku interval vitta maathiri irukku.

    ReplyDelete
  11. மிக அருமையாக எழுதறிங்க... அடுத்த பாகத்தை விரைவில் எதிர்பார்க்கிறோம்

    ReplyDelete
  12. Super sir. Last month en friend office tourku masinakudi than pona. Andha place pathi enkita soli romba kadupethina. Ipo nengala....?

    ReplyDelete
  13. Anna... neenga eluthurathu koda travel panra mathiri erukku....appuram ennachi... sekkiram sollunga....
    anna... ungalukku appave mudi kottitucha... Anni peyar ennanna.. yazhini pappa eppadi erukka...

    ReplyDelete
  14. சஸ்பென்ஸ் நாவலை படிப்பது போன்ற த்ரில்...உங்க எழுத்து திறமையை எண்ணி பலமுறை வியந்த் இருக்கிறேன் . .

    தொடருங்கள் Sekar

    ReplyDelete