The Grocer's Son/உலகசினிமா/பிரெஞ்சு/பிரான்ஸ் எம்டன்(மளிகைகாரர்) மகன்....



சிறுவயதில் எனக்கு மிகப்பெரிய ஆச்சர்யம் என்னவென்றால் தபால்காரர் எல்லோருடைய வீட்டில் உள்ளவர்களின் பெயர்களையும் எப்படி மறக்காமல் நினைவுவைத்துக்கொள்கின்றார் என்று நினைத்து அதிசியத்து இருக்கின்றேன் 

என் அப்பாவுடைய பெயரை நினைவு வைத்து இருக்கலாம் ஆனால் எனக்கு  மூன்றாம் வகுப்பு பரிட்சை ரிசல்ட் கார்டை என்னிடம் சரியாக வந்து கொடுத்த போது பிரமித்த போய் இருக்கின்றேன்... ஆனால் இப்போது ஏழுகழுதை வயசாகி போனபிறகுதான் அந்த உண்மை தெரிகின்றது...


லேட் சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்(பதினெட்டுபிளஸ்)புதன்27/04/2011


ஆல்பம்....

இப்ப பெட்ரோல் விலை..61 ரூபாய்... அப்படியே ரவுண்டா 75ரூபாய்க்கு ஆக்கிட்டா எந்த பிரச்சனையும் இல்லை.. எத்தனை நாளைக்குதான்.. நஷ்டத்தில் பொதுமக்களுக்காக ஆயில் கம்பெனிகள் இயங்குவது...????போடாங்...
===========
கலைஞர், ஜெயலலிதா இருவருமே ஈழத்தமிழர் நலன்  பற்றி பேசுவது நகைப்பாக இருக்கின்றது... கடந்த 50 வருடமாக இப்படித்தான் பேசி வருகின்றோம்.. இதுவும் கடந்து போகும்...
=========

புட்டபர்த்தி சாய்பாபா....

 
சாய் பாபா ஒரு மனிதன்....
அவர் கடவுள் அல்ல
அவர் மேஜிக் சாமியார்
சாய் பாபா மீது வைத்து இருக்கும் எந்த விமர்சனத்துக்கு நான் பதில் சொல்லபோவதில்லை..

காரணம் இவைகள் எல்லாம் எனக்கும் தெரியும்தான்...அவர் மீது  நீங்கள் வைக்கும் எல்லா விமர்சனங்களும் எனக்கும்  உண்டு...



DELTA / உலக சினிமா/ஹங்கேரி/பதினெட்டுபிளஸ்/ தப்பான ரத்த உறவு...


எனக்கு தெரிந்த ஒரு நண்பரின்  நண்பர் குடும்பத்தில் அவரது சித்தப்பா 1960களில் எங்கள் ஊரில் இருந்து வீட்டை  விட்டு ஓடி  சென்னைக்கு வந்து இங்கு ஒரு பெரிய நிறுவனத்தில் மேனேஜராக உயர்ந்து 5 பிள்ளைகள் பெற்றுக்கொண்டார்... இன்று  அந்த பிள்ளைகள் உலகின் பல்வேறு நாடுகளில் நல்ல நிலையில் வாழ்க்கை நடத்துகின்றார்கள்..


சார் நல்ல விஷயம்தானே? இதுல என்ன? பெரிய சுவாரஸ்யம்???


சுவாரஸ்யம் இல்லாமையா இந்த விஷயத்தை சொல்லுவேன்...??? அவர் திருமணம் செய்து கொண்டது.. தனது  சொந்த சித்தியை.....1960களில் அந்த காதலுக்கு எவ்வளவு பெரிய எதிர்ப்பு கிளம்பி இருக்கும் என்று நினைத்து பாருங்கள்...

TEEN MAAR -telugu // திரைவிமர்சனம்..



பவன் கல்யாணின் முந்தைய படமான கொமரம்புலி பார்த்து விட்டு மிரண்டு போய் இருந்தேன்.... பட் இப்போது தீன்மார், பார்க்க போகலாமா? அல்லது வேண்டாமா? என்று இருந்தேன்.... சரி நம்ம திரிஷாவுக்காக போய் விட்டு வரலாம் என்று இருந்தேன்.

=======

மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் பதினெட்டு பிளஸ் 24/04/2011

ஆல்பம்


நண்பர் துக்ளக் பத்திரிக்கை வாங்கி இருந்தார்..பெரும்பாலும் அதனை வாசிப்பது இல்லை...ஏதெச்சையாக புரட்டினேன் கேள்விபதில் பகுதியை   பார்த்தேன் ஒரு கேள்வி பதில் எனக்கு சிரிப்பை வரவழைத்தது..

கேள்வி... ஒருவேளை திமுக  தேர்தலில் ஜெயித்து ஆட்சிக்கு வந்து விட்டால்????

பதில்..
இன்று மக்கள் மனநிலையை நாம் அறிந்த வகையில் ... நீங்கள் சொல்கிறமாதிரி முடிவு வந்தால் மிகப்பெரிய தேர்தல் மோசடி நடந்து இருக்கின்றது என்று நான் சொல்லுவேன் என்று  சோ பதில் சொல்லி இருக்கின்றார்....

சோவுக்கான எனது பதில்....

தம்பி டீ இன்னும் வரலை...
============


Mr. Perfect-telugu- திரைவிமர்சனம்..வீட்டுக்கொடுப்பவன் கெட்டுப் போவதில்லை




எனக்கு ரஜினி பிடிக்கும்
எனக்கும்...

எனக்கு முட்டை தோசை பிடிக்கும்
எனக்கும்

எனக்கு தலைகறி பிடிக்கும்
எனக்கும்

எனக்கு சுஜாதா ரைட்டிங்ஸ் பிடிக்கும்
எனக்கும்

எனக்கு விடுதலைபுலிகள் தலைவர் பிரபாகரனை பிடிக்கும்
எனக்கும்


கோ... பரபர சரசர....(திரைவிமர்சனம்)




கோ என்பது அக்மார்க் தமிழ் சொல்.,... கோ என்றால் அரசன்....இந்த படத்துக்கு கிங்மேக்கர் என்ற பெயர் வைப்பதாக பரிசீலத்ததாகவும் அதுக்கு நிகரான தமிழ் வார்த்தை இல்லாத காரணத்தால் கோ என்ற வைத்ததாக எனது நண்பர் எழுத்தாளர் பாலா சொன்னார்.....


ஆனால் படத்துக்கு ஆங்கில அர்த்தத்தையும் விளையாட்டையும் சேர்த்து அர்த்த படுத்தி பார்த்தால் இந்த படம் வேறு ஒரு அர்தத்தை தருகின்றது....

கோ விளையாட்டு விளையாடி இருக்கின்றீர்களா? மற்ற  விளையாட்டு போல் கோ விளையாட்டை சாதாரணமாக விளையாட முடியாது.. பர பரவென்ற இருக்க வேண்டும்.. பரபரவென்றால் சகல நேரமும் என்று அர்த்தம்....

 எப்பவேணா நம்ம பின்னாடி வந்து கோன்னு ஒத்த வார்த்தை சொல்லிட்டு உட்கார்நதுடுவான்.. அதுக்கு பின்னாடி நாமதான் ஓடனும்.... எதிரியை அவுட் ஆக்கற பெரிய பொறுப்பு நம்ம தலைமேல திடும்னு வந்து விழும்...


im juli-உலகசினிமா/ஜெர்மன்/காதலியை தேடும் காதலன்

 
ஒரு பழமொழி இருக்கின்றது.... காதல் எப்போதுமே தோற்பதில்லை.. ஆனால் காதலிக்க தேர்தெடுக்கும் ஆளை பொறுத்து சில வேளைகளில் காதல் தோற்றுவிடுகின்றது.. அதுக்காக ஒட்டு மொத்தமாக காதலை தப்பு என்று புறம் தள்ள முடியாது அல்லவா??...

வருடத்துக்கு ஒரு முறை சுற்றுலா செல்லும் வழக்கம் நம் தமிழ்குடும்பங்களை பொறுத்தவரை அறிது என்பேன்....பல வருடங்களுக்கு ஒரு முறை  எதாவது ஒரு ஊருக்கு செல்வார்கள்... முக்கியமாக அந்த லிஸ்ட்டில் கொடைக்கானல் மற்றும் ஊட்டி நிச்சயம்..... இப்படித்தான் நம்ம சுற்றுலா இருக்கும்....

ஆனால் வெளிநாட்டினர் வருடத்துக்கு ஒரு முறை கண்டிப்பாக எதாவது ஒரு புதிய நகரத்துக்கு சென்றுவருவார்கள்...காரணம் வாழ்க்கையை வாழ்பவர்கள் அவர்கள் மட்டுமே....சரி அப்படியே ஊருக்கு போனாலும் எந்த ஊருக்குன்னு முடிவு செஞ்சிட்டுதான் நம்மில் பல பேர் போவோம்... ஆனால் காற்று அடிக்கும் திசையெல்லாம் பயணிக்க உங்களால் முடியுமா???


சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்(பதினெட்டுபிளஸ்)புதன்20/04/2011

ஆல்பம்...

சாதாரணமாகவே நாம் என்றால் அந்த சிங்கள பண்ணாடைங்களுக்கு நாமன்னாலே செம கடுப்பு.. அதுவும் இந்தியா கிரிக்கெட்ல பைனல் மேட்சில் அவர்களை நம்ம ஆளுங்களால் தோற்கடிக்கப்பட்டதும் இன்னும் அவனுங்க காண்டு ஆயிட்டானுங்க.. இந்த லட்சனத்துல ஒரு 4 மீனவர்களை போட்டு தள்ளிட்டானுங்க... அப்படி அவனுங்க செய்யவே மாட்டானுங்கன்னு சந்தியம் செஞ்சு பொங்க வச்சி சொல்ல, இங்கே பல கபோதிங்க இருக்கு....எல்லாத்தை விட உச்சம் ஐபிஎல் அணியில்  இந்தியாவில் விளையாடும் அவனுங்க ஆளுங்களை திரும்ப அழைத்து இருக்கின்றார்கள்..இதுலயே அவனுங்க புத்தி என்னன்னு எல்லோருக்கும் தெரிஞ்சி போய் இருக்கும்...அவனுங்க போங்கு பசங்கன்னு எத்தனைவாட்டி சொன்னாலும் மத்திய அரசு ஒத்துக்கபோறதுஇல்லை...... இருந்தாலும் டைம் பத்திரிக்கையில் அந்த ராஜபக்சே பண்ணாடை முதல் 100 பேர்ல 4வது இடத்துல வந்து இருக்காம் அதனால் அதுக்கு ஒரு மைனஸ் ஓட்டு குத்தி உங்க எதிர்ப்பை தெரிவிங்க.. இன்னும் விரிவா தம்பி கார்த்திகேயன் எழுதி இருக்கார்....அந்த லிங்கை படித்து விட்டு அப்படியே மைனஸ் ஓட்டு போடுங்க.... எனக்கு தொடர்ந்து மைனஸ் ஓட்டு குத்தும் பண்ணாடைகளும் ராஜபக்சேவுக்கும் ஒரு மைனஸ் ஓட்டு குத்திட்டு எனக்கும் போடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.....
===============


விஜய் டிவி நிகழ்ச்சி நீயா நானாவில் நான்....




கற்றது தமிழ் ராம் எனக்கு நல்ல நண்பர்... ஒரு நாள் ஜாக்கி நம்ம நண்பர் குழந்தைக்கு பிறந்தநாள் போட்டோ எடுத்துக்கொடுக்க முடியுமா? என்றார்.. நான் அப்போது பிரியாக இருந்த காரணத்தால் ஓகே என்றேன். அவருடைய நண்பர் திருமுருகன் திநகரில் விளம்பர ஏஜென்சி வைத்து இருக்கின்றார்.. அவருடைய குழந்தை ஆதிரை பிறந்தநாள் விழாவில் படம் எடுத்துக்கொண்டு இருக்கும் போது நீயா நானா நிகழ்ச்சி பற்றிய பேச்சு வந்தது.....


லேட் மினிசாண்ட்வெஜ்அண்டுநான்வெஜ்(பதினெட்டுபிளஸ்) ஞாயிறு17/04/2011

 
ஆல்பம்...

தேர்தலுக்கு முன் கடைசி இரண்டு நாளில் பணம் பாதாளம் வரை பாய்ந்து இருக்கின்றது... முக்கியமாக இந்த வேலைகளில் திமுககாரர்கள் கில்லாடிகள்.... அதே போல் பணம் கொடுத்தால் எந்த இடத்தல் பிரச்சனை இல்லையோ, பணத்தை யார் வாங்கி கொண்டு சத்தியத்துக்கு கட்டு பட்டு ஓட்டு போடுகின்றார்களோ? அந்தவகையான மக்கள் வசிக்கும் இடங்களில்தான் பணபட்டுவாடா நடந்து இருக்கின்றது.. இதில் இருக்கட்சிகளும் களத்தில் குதித்து தங்கள் திறமையை காட்டின என்பதை மறுக்க முடியாது...தமிழகம் முழுவதும் உள்ள வீடுகளில் பணம் கொடுப்பது என்பது சாத்தியம் இல்லை...கடலூரில் நான் வசிக்கும் குடிசைபகுதி சுற்றிலும் பணத்தை கொடுப்பார்கள்... எங்கள் வீட்டுக்கு மட்டும் கொடுக்கமாட்டார்கள்.. காரணம் என் அப்பா அந்த பணத்தை தொடக்கூட மாட்டார்... அதனால் பணம் எங்கள் வீட்டுக்கு மட்டும் வராது....
==================

அடுத்த முதல்வர் யார்?




யாராக வேண்டுமானாலும் இருந்து போகட்டும்...திமுக அல்லது அதிமுக ஆட்சி அமைக்கும் அல்லது கூட்டனி ஆட்சி அமைய வாய்ப்பு இருக்கும் அவ்வளவுதானே?

சார்பு நிலையாக பேச ஆரம்பித்தால்  வண்டி வண்டியாக பேசலாம்.. அரசியல் சாக்டையில் யாரும் யோக்கியம் இல்லை என்பதுதான் உண்மை...


சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்(பதினெட்டுபிளஸ்)புதன்13/04/2011


ஆல்பம்..

தேர்தல் களம் 2011 என்று, இந்த அரசியலில் முக்கிய திருப்புமுனை விஷயங்களையும் எழுதினேன்.. அதில் கலைஞர் பற்றி எழுதிய பதிவுக்கு யூ டூ புருட்டஸ் என்ற ரேஞ்சிக்கு கேள்வி எழுப்பி இருந்தார்கள்..கலைஞருக்கு ஓட்டு போடுங்கள் உங்கள் சின்னம் உதயசூரியன்  என்று சொல்லவில்லை... எந்த விஷயம் எப்படி காமன்மேனை பாதித்தது என்று சொல்லி இருந்தேன்.. காமன் மேன் என்றால் நடுத்தரகுடும்பத்தில் இருக்கும் இணையத்தை பயண்படுத்துவோர் என்று நினைக்கின்றார்கள்...கிராமபுறமக்கள் என்ன நினைக்கின்றார்கள் என்று நான் எழுதி இருந்தேன்.. காமன்மேன்தாட் என்றால் கிராமத்து மக்களும் என்று புரிந்து கொள்ளுங்கள்...சரி வாய் கிழிய பேசுகின்றீர்கள்... கலைஞருக்கு  மாற்று யார் என்றால் அதுக்கு மட்டும் பதில் இல்லை...
================================


முதல்வர் கலைஞர் (தேர்தல் களம்/2011)

 
தமிழக அரசியலில் கை பட்டா குத்தம் கால் பட்டா குத்தம் என்று எல்லோராலும் போட்டு வார்த்தைகளால் தாக்கபடுபவர் முதுபெரும் தமிழக அரசியல் தலைவர் கலைஞர் கருணாநிதிதான்..

ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்து முடிந்து போது கலைஞர் கவர்மென்ட் அவ்வளவுதான் என்றார்கள்.. வாஷ் அவுட் என்றார்கள்..

கிராமங்களில் மக்களோடு பேசியபோது அவர்கள் சொன்னது எவன் கொள்ளை அடிக்கலை இந்த மகராசன் எங்களுக்கு கொடுக்க்கறானே அது போதும்.... அதனால்தான் நான் திரும்ப திரும்ப ஸ்பெக்டராம் பிரச்சனை வந்த போது, ஒரு விஷயத்தை தெளிவாக சொன்னேன்.


பாமக/ராமதாஸ்( தேர்தல்களம் 2011)

எனக்கு யார் 40சீட் தருகின்றார்களோ அவர்கள் பக்கம்  நான் இருப்பேன் என்று 2011சட்டசபை எலெக்ஷனுக்கு பகிங்கர ஸ்டெமென்ட் விட்டவர் மருத்துவர் ராமதாஸ்...

நடுநிலையாளர்கள் மிரண்டு போனார்கள்...40சீட் கொடுத்தால் எந்த பக்கமும் இவர் பேசுவாரா என்று? என்று கேள்வி எழுப்பினார்கள்..
அப்ப கொள்கையே அந்த கட்சிக்கு இல்லையா ? என்று வினா எழுப்பினார்கள்.. 


ஜெ .ஜெயலலிதா ( தேர்தல்களம்/2011)




நந்தவனத்தில் ஒரு ஆண்டி அவன் நாலாறு மாதமாய் குயவனை வேண்டி கொண்டு வந்தான் ஒரு தொண்டி அதை குத்தாடி குத்தாடி போட்டு உடைத்தாண்டி....இந்த பாடல் ஜெவுக்கு மிக பொருத்தமான பாடல்...

திமுகவை வீழ்த்த ஒரு அருமையாக சந்தர்ப்பம்.. ஸ்பெக்ட்ரம் விஷயம் மட்டும் திமுக பக்கம் கிடைத்து இருந்தால் மிக அழகாய் மக்களிடம் சேர்பித்து இருப்பார்கள்... அதனை தனது பிரச்சாரத்தின் மூலம் மிக அழகாக ஓட்டு போடும் கிராமத்து மக்களிடம் கொண்டு போய் சேர்த்து இருப்பார்கள்.


வடிவேல் வெடிவேல் (தேர்தல்களம்/2011)

 
வடிவேல் தனது அரசியில் கன்னி பேச்சை முதன் முதலில் திருவாரூரில் இருந்து ஆரம்பித்த போது நண்பரோடு பேசிக்கொண்டு இருக்கையில் வடிவேலு இந்த தேர்தலில் மிகப்பெரிய எழுச்சிக்கு வடிவேலு காரணமாக இருப்பார் என்று சொன்னேன்.

நண்பர் அதுக்கு டிவியை போட்டு ஆதித்யா சேனல் வைத்து பாருங்க..நாள் புல்லா இந்த மூஞ்சியைதான் பார்த்துக்குனு இருக்காங்க..ஒரே போர் என்று அங்கலாய்த்தார்...ஆனால் விஜயகாந்த் ஜெவிடமே 40 சீட்டு வாங்கிய ஒரு கட்சியின் தலைவர் அவரின் பேச்சைதான் மக்கள் உன்னிப்பாய் பார்ப்பார்கள்...வடிவேல் ஒரு காமேடி பீஸ் என்று சொன்னார்...


விஜயகாந்த் (தேர்தல்களம் 2011)


வைகோவுக்கே விஜயகாந்த் அவர்களின் பிரசாரத்தை பார்க்கும் போது நாம் எந்த விதத்தில் இவரை விட குறைந்து போய்விட்டோம், பேச்சிலா? அல்லது அரசியல்அனுபவத்திலா? எந்த விதத்தில் நாம் விஜயகாந்தை விட குறைந்து போய்விட்டோம் என்று வைகோ நினைத்து பார்க்காத இரவுகள் மிக குறைவாக இருக்கும்.....பிரச்சாரத்தின் போது விஜயகாந்த் பேசுவதை மட்டும் வைத்து வைகோ நினைத்து இருக்க வாய்ப்பு இருக்கின்றது.


வைகோ (தேர்தல்களம் 2011)


எல்லா கட்சி அலுவலகமும் கல்யாண கோலத்தில் இருக்க எங்கள் கட்சி அலுவலகம் மட்டும் இழவு வீடாக இருக்கின்றது.. இதுக்கு காரணம் துரோகம் செய்த ஜெயலலிதா என்று சொல்லியவர் வைகோ அல்ல...மதிமுகவின் ஸ்டார் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் இன்று செய்தியாளர்களிடம்  இப்படித்தான் குமுறி இருக்கின்றார்......

வைகோ கரைபடியாத கைக்கு சொந்தக்காரர். அரசியலில் அவர் மிக யோக்கியர் என்று பல நடுநிலையாளர்கள் சொல்ல கேள்வி பட்டு இருக்கின்றேன். அதே போலதான் அவரும்...ஒன்றரை வருடம் சிறையில் இருந்தார்...காரணம் விடுதலைபுலிகள் பற்றி பேசியதால் சிறையில் இருந்தார்.அவர் வெளியே வந்த போது கூட அவருடைய நிலைபாட்டை இன்று வரை புலிகள் விஷயத்தில் மாற்றிக்கொள்ளவில்லை...


லேட் மினிசாண்ட்வெஜ்அண்டுநான்வெஜ் (பதினெட்டுபிளஸ்) ஞாயிறு12/04/2011

 
ஆல்பம்.

ஊழல் தினமும் சாப்பிடும் இட்லி சட்னி ரேஞ்சுக்கு மலிந்து போய்விட்ட இந்த நிலையில் அந்த ஊழலுக்கு போர் கொடி தூக்கிய ஹசாரே பாராட்டுக்குறியவர் என்றாலும்.. அவரும் ஒரு ஸ்டன்ட் பார்ட்டி என்று சிலர் சொல்லி வருவது வேதனையை அளிக்கின்றது.. இந்த உலகத்துல அப்ப எவனுமே யோக்கியமா இல்லையா?? இப்படி எல்லோர் மேலேயும் சந்தேகம் அடைந்து கொண்டே இருந்தால் என்ன செய்வது????
=========

..த்தா என்ன வாழ்க்கைடா இது...???

நேத்து நைட்டு  ஒரு எட்டு மணி இருக்கும் ...என்   வீட்டுக்கு அருகில் இருக்கும் 20 வயது இளைஞன்..அவன் வீட்டில் குடியிருக்கும் ஒருவரின் குழந்தையை அழைத்துக்கொண்டு கடைக்கு போய்விட்டு, வருகின்ற வழியில்  என்னை பார்த்தான்... அந்த குழந்தை எப்போது என்னை பார்த்தாலும் மிரளும்...மிரளும் குழந்தைக்கு தைரியம்  சொல்லி அங்கிளுக்கு ஒரு ஹாய் சொல்லு அபி என்று அந்த  குழந்தையிடம் சொன்னான்..


மறக்கமுடியாத கிரிக்கெட் (உலககோப்பை கிரிக்கெட்/2011)





பொதுவாக இந்திய கிரிக்கெட் வீர்ர்கள் மைதானத்தில் பீல்டிங் செய்கின்றார்களா? என்பதை எப்படி கண்டு பிடிப்பது.. ரொம்ப சிம்பிள்... எந்த பால் போனால் எதிராளிக்கு கை காட்டுவார்கள்... மற்ற டீமில் பால் ஓடினால் இரண்டு பேர் துரத்துவாகள்.. ஒருவர் மிஸ் பண்ணினாலும் அடுத்தவர் பிடிக்கவும்... போர் லைன் அருகில்  பாலை தடுத்து விட்ட்டால் அடுத்த ஓடிவருபவர் அந்த பாலை எடுத்து கீப்பரிடம்  வீச ரெடியாக வருவார்... இப்படி பேர் லைனுக்கு ஓடும் பாலை இரண்டு பேர் இந்திய அணியில் துரத்தி நான் பார்த்ததே இல்லை.. அப்படி பீல்டிங்கில் சிறப்பு வாய்ந்த அணி நமது அணி..


ஹர்பஜன் ஒரு பயந்தாங்கோலி எந்த பால் துரோ பண்ணாலும் சென்னை28 பிரேம் போல அந்த பாலை பிடிக்கவே மாட்டான்.. பாலை மிஸ் பண்ணிட்டு கண்ணைவேற மூடி திறந்துக்குவான். அதை பார்க்கும் போது வயறு எல்லாம் எரியும்.. அப்படி ஒரு பயம்.,.. முக்கியமா ரன் ஆவுட் செய்யும் போது ஸ்டெம்புகிட்ட ஹர்பஜன் இருந்த செம காமெடியா இருக்கும்.


சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்(பதினெட்டு பிளஸ்)புதன் 06/04/2011


பதினைந்து வருடத்துக்கு முன் கோமாவில் இருந்து ஒருவர் எழுந்து வந்தால்? வந்தவரிடம் தமிழகத்தில் எலக்ஷன்நடக்கின்றது என்று சொன்னால் கொப்புரான சத்தியம் செய்தாவது அவரை நம்பவைக்க வேண்டி இருக்கும். அவர் நிச்சயம் நம்ம வாய்ப்பே இல்லை... காரணம் எலெக்ஷன் நடப்பது போல எந்த பழைய படோபடமும் இல்லை என்பதுதான் நிலமை...

======================
இப்போதுதான் எங்கள் வீட்டு அருகில்,தனது பேட் சின்னத்தில் ஓட்டு போட வேண்டி எல்லோருக்கும் பெரிய கும்பிடு வைத்துகொண்டு செல்கின்றார்.. நடிகர் மன்சூர்அலிகான்.. ஒரு பதினைந்து பேர் அவரை பாலோ செய்கின்றார்கள்...


நான் ரசிக்காத கிரிக்கெட் (உலககோப்பை/2011)

 
கிரிக்கெட் விளையாட்டுக்காகஒரு குடும்பமே சண்டை போட்டுக்கொள்ளுமா?? எங்கள் அத்தை வீட்டில் நடக்கும்...மேட்ச் முடிந்து பல மணிநேரம் அந்த சண்டை நீடிக்கும்... இரவு சாப்பாட்டின் போது சோத்து குண்டானை டொப் என்று தரையில் வைப்பதில் தெரியும். இன்னமும் கோபம் அத்தைக்கு  குறையவில்லை என்று...


சண்டைக்கான காரணத்தை நீங்கள் தெரிந்து கொண்டால் சிரிப்பீர்கள்..

சச்சின் விளையாட வந்தால் எப்போது நாலு பயலுகளுக்கு ஹெல்மட் மாட்டி எதிர் அணி கேப்டன்,  கீப்பருக்கு பக்கத்தில் ஆப்சைடில் வரிசையாக நாலுபேரை நிறுத்துவார்கள்.


சச்சினுக்கு ஆப்சைடில் சும்மா போகும் ஒய்டு பாலை கூட வம்புக்கு இழுத்து அவுட் ஆவது என்பது அப்போது ரொம்ப பிரசித்தம்....இந்த வேல்டு கப்பிலும் அப்படித்தான் சச்சின் அவுட் ஆனார்...


கிரிக்கெட் செண்டிமென்ட் (உலககோப்பை கிரிக்கெட்/2011)



கிரிக்கெட் விளையாட்டை ரொம்ப தனியாக ஒரு நாளும் நான் பார்த்தது இல்லை... எங்கள் அத்தைக்கு மூன்று பசங்க... அவுங்க வீட்லதான் கிரிக்கெட்  பார்ப்பேன். அது மட்டும் இல்லை அங்க கிரிக்கெட்  பார்க்க ஒரு பெரிய கூட்டமே வரும்...

இந்தியா விளையாடும் போது எல்லாம் ஒரு பெரிய உற்சாகத்தோடு பார்ப்போம்.. அந்த ஹாலில் ஒரு 20க்கும் குறையாத நபர்களோடு கிரிக்கெட்டை பார்ப்போம்...

அரை லிட்டர் பாலில் 20  பேருக்கும் டீ போட்டு கொடுக்கும் திறமை எங்கள் அத்தைக்கு மட்டுமே உண்டு.


மினிசாண்ட்வெஜ்அண்டுநான்வெஜ்(பதினெட்டுபிளஸ்) ஞாயிறு03/04/2011


ஆல்பம்...

28 வருடம் கழித்து இந்த ஆண்டு உலக கோப்பையை இந்திய அணி வென்றுகாட்டிஇருக்கின்றது. எவ்வளவு போராட்டம்? எவ்வளவு விமர்சனங்கள்? எல்லாம் தாண்டி இந்திய அணி  வென்றது மகிழ்சி இது குறித்து தனி பதிவுகள் எழுதலாம் என்று இருக்கின்றேன்.
============
தினம் தினம் தமிழகத்தில் அரசியல் சூடு சூறாவளியாக அடித்துக்கொண்டு இருக்கின்றது. என்ன நடக்கின்றது என்று தெரியவில்லை முக்கியமாக மதுரையை பொறுத்தவரை நாள் ஒன்றுக்கு ஒரு செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றது. பொறுத்து இருந்து பார்ப்போம்...
============

பெண்களுரில் திருட்டு பயம்....



பெங்களூர் சின்ன நகரம்... ஆனால் தகவல் தொழில்நுட்ப வேலை வாய்ப்பு காரணமாகவும் அந்த சின்ன நகரம் இளைஞர்களால் பெருத்து காணப்படுகின்றது...பென்ஷனர் பேரடைஸ் என்று இப்போது யாராவது பெண்களுரை சொன்னால் வேறு வழியாக சிரிப்பார்கள்....

இளவயதினர் ஆதிக்கம் பெண்களூரில் அதிகமானதால் அங்கு சமுக விரோத செயல்களும் அதிகம் ஆகிவிட்டன.. எல்லாவற்றிற்கும் பணம் பிரதானமாகிவிட்டது...  போதை மற்றும் பெண்களுக்கு பணம் அதிகம் தேவையாய் இருக்கின்றன.. அதனால் திருட்டு இங்கு அதிகம்...


Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner