(அம்மாவுக்கு அஞ்சலி)ஒரு மகன் தன் அம்மாவிடம் சொல்லக்கூடாத வாக்கியம்.....




ஒரு மகன் தன் அன்னையிடம் இன்னும் 3 மாதத்தில் நீ இறந்து விடுவாய் என்று சொல்வது போல் ஒரு சூழ்நிலை ஒருவருக்கு உருவானால் எப்படி இருக்கும்??? ... எனக்கு அப்படி ஒரு சூழ்நிலை என் வாழ்வில் வந்தது.....

இன்று என் அம்மாவுக்கு தெவஷம்.... என் அம்மா 23.09.1996 அன்று திங்கட்கிழமை காலையில் என் அப்பா,நான் என் வயதுக்கு வந்த 4 தங்கைகளை விட்டு விட்டு எங்களை அம்போவென விட்டு விட்டு இறைவனடி சேர்ந்த நாள் ... நாள் படி நட்சத்திர படி இன்று அவரை31.08.2009 நினைவு கூறும் நாள் ....

ரேஷன் அரிசி சாப்பிட்டு, கூரை வீட்டில் வாழ்க்கை ஓட்டியபோது எங்களுடன் இருந்தவர்... நாங்கள் நல்ல அரிசி சாப்பிடும் இந்த நேரத்தில், அவர் எங்களோடு இல்லை....

காசநோய் எனது பாட்டிக்கு வந்து அவரை கவனித்து கொள்ள போனவருக்கும் அந்த நோய் தொற்றிக்கொண்டது... என் அம்மாவுக்கு அந்த நோய் தாக்கியும் தொற்றியும் இருக்காது.... அவருக்கு சத்து இல்லாததும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து போனதும் முக்கிய காரணம்...,பியுசி படித்த என் அம்மாவிக்கு நிச்சயம் தெரியும் இப்படி இருந்தால் நோய் தொற்றிக்கொள்ளும் என்று தெரிந்தும்... என் பாட்டியை அருகில் இருந்து பார்த்துக் கொண்டாள்... காரணம் தன் அப்பா சொந்த சித்தியை இரண்டாம் திருமணம் செய்து கொண்டதால் பத்து வயது ஆன என் அம்மாவை அழைத்துக்கொண்டு பண்ரூட்டியில் இருந்து விழுப்புரத்தில் உள்ள மந்தகரையில் தனி வீடு எடுத்து வாசம் செய்தவள் அல்லவா அவள் (என் பாட்டி)....


அதுமட்டும் அல்ல தெரு தெருவாய் ஜாக்கெட் துணி விற்று அதன் மூலம் தன் மகளை பியூசி வரை படிக்க வைத்து, ஒரு நல்ல இடத்தில் வாழ்க்கை கொடுத்தவள் அல்லவா அவள்... தன் பெண்ணுக்காக உடல் சுகத்தை தூக்கி போட்டவள் அல்லவா அவள்.... அந்த நன்றிகடனுக்காக என் பாட்டி முகம் சுளிக்காமல் என் அம்மா நடந்து கொண்டாள்...

வேண்டாம் என்று சொன்னால் என் அம்மா சொன்னால்...“ காசநோயளி என்று என்னை ஒதுக்குகின்றாயா? “என்று என் அம்மாவிடம் எதிர் கேள்வி கேட்டதால்? தன்னை பெற்ற மகள் ஒதுக்குகின்றாள் என்று அந்த நினைப்பு தன் பெற்றவளுக்கு வரக்கூடாது என்பதற்க்காக தன்னை காச நோய் அரக்கனிடம் தெரிந்தே என் அம்மா தன்னை அற்பனித்து கொண்டவள்....

கண்டிப்பு காட்டும் இடத்தில் கண்டிப்பு, பாசம் காட்டும் இடத்தில் பாசம் காட்டும் என் அம்மா ஒரு விசித்திர பிறவி....

எங்க அம்மா என்னை உதைத்தது போல் எந்த பிள்ளையும் அவர்கள் அம்மாவிடம் உதைவாங்கி இருக்க மாட்டார்கள்....அப்போதெல்லாம் வீட்டில் அடுப்பு எறிக்க உதவும் சவுக்கு கட்டை எடுத்து ஓட ஓட உதைப்பாள்.....

தன் பையன் படிக்காவிட்டாலும் புத்திசாலியாக ,ஸமார்ட்டாக இருக்க வேண்டும் என்று என்னை சிறுவயதிலேயே நிர்பந்திக்க வைத்தவள்....

முதல்நாள் வகுப்புக்கு போகும் போது ஒரு புது பென்சில், பலப்பம், ரப்பர், சிலேட்டு என்று வாங்கி ஒரு ஜோல்னா பையில் போட்டு கொடு்த்தாள் அன்று மாலை பள்ளி விட்டு வீடு வரும் போது, சிலேட்டு மட்டும்தான் இருக்கின்றது...பென்சில் ரப்பர், பலப்பம் எதுவும் இல்லை... தொலைத்து விட்டேன்... தன் ஜுட்டிகை இல்லாத, மக்கு மகனை நினைத்து அப்போதே கவலை கொள்ள ஆரம்பித்து விட்டாள்.... மறுநாள்
1431 பயோரிய பல்பொடியில் ஒரு சின்ன பல்பம், சின்ன பென்சில் , ஒரு ரப்பர் எல்லாம் போட்டு கொடுத்தாள் அதவும் அன்று மாலை தொலைத்து விட்டு தலை சொறிய, என் அம்மா வந்த கோபத்துக்கு பக்கத்தில் உள்ள சவுக்கை மிளாரை எடு்த்துக் கொண்டு பத்ரகாளியாக மாறி பல் கடித்து என்னை ஓட விரட்டி என்னை சுளுக்கெடுத்த ராட்சசி அவள்....
இன்று என் வீட்டில் என் சம்பந்த பட்ட ஆவணங்கள் மிக நேர்த்தியாக கோப்புகளில் அடிக்கு வைத்து இருப்பேன் என் மனைவியின் ஆவணங்கள் வீட்டில் எங்கு வேண்டுமானாலும் கிடக்கும்... அதற்க்கு காரணம் என் அம்மா கொடுத்த உதைதான்.....

இருமல் மற்றும் சளியோடு போராடிய என் அம்மா...என் அம்மா மருத்துவரை பார்த்த போது என் அம்மாவின் ஒரு பக்க நுரையிரலை காசநோய் கிருமிகள் போட்டி போட்டுக்கொண்டு சாப்பிட்டு ஏப்பம் விட்டு விட்டன.... அதன் பிறகு ஒரு 5 வருடம் காலம் உயிரோடு இருந்தாள்....

கால் மற்றும் வயிறு உப்பி சிறுநீர் கழிப்பதில் என் அம்மா சிரம பட்ட போது மீண்டும் டாக்டரை பார்த்த போது இன்னும் 3 மாதம் உன் அன்னை உயிரோடு இருப்பார் என்று டாக்டர் சொன்ன போது என் அம்மா என்ன சொன்னார்? என்ன சொன்னா? என்று என்னை நோண்டி நோண்டி கேட்ட போது என்னால் உண்மையை சொல்லாமல் இருக்க முடியவில்லை...

அப்போது மரண பயத்தை என் அம்மாவின் கண்களில் பார்த்தேன்.. அந்த கொடுமை எந்த பிள்ளைக்கும் வரக்கூடாது... என் அப்பா துவண்டு போய் விட்டார்....

நான் என் அம்மாவை கடலூரில் இருந்து பாண்டி கோரிமேடு ஜிப்மர் மருத்துவமனை எதிரில் உள்ள காசநோய் மரு்துதவமனையில் சேர்த்து வைத்தியம் பார்க்க அழைத்து செல்ல என்னிடம் கார் வைத்து அழைத்து போக கூட என்னிடம் அப்போது பணம் இல்லை வீங்கிய காலுடன் உள்ள அம்மாவை பேருந்து ஏற வைத்து பாண்டி பேருந்து நிலயத்தில் இறக்கி ஆட்டோ வைக்க காசு இல்லாமல் டெம்போவில் ஏற சொன்னால்... தன் பிள்ளை தன் கூடவே இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாள்... அவளால் டெம்போ ஏற வீக்கிய காலை அவளால் மடக்கி ஏற முடியவில்லை...
(இன்று என் வீட்டில் சிறு படையல் வைத்து என் அம்மாவை நினைவு கூர்ந்த போது எடுத்தபடம்)


நான் வாடகை சைக்கிள் எடுத்து வந்து பின்புறம் கேரியரை அவள் பின்புறம் வைத்து அதில் உட்கார வைத்து அப்படியே சைக்கிளை நிமிர்த்தி...நான் பேலன்ஸ் பண்ணி ஏறி சைக்கிள் மிதித்தேன் மனம் எல்லாம் காயத்துடன் அம்மா படும் உடல்வலி பொறுக்க முடியாமல்....

ஜிப்மர் மருத்துவமனை பாண்டி பேருந்து நிலயத்தில் இருந்து மேடான பகுதியில் இருக்கும்.... என் அம்மாவை சைக்கிளில் வைத்து மிதிக்க முடியவில்லை ஒரு இரண்டு கிலோமீட்டர் அவளை வைத்து நான் சைக்கிள் மிதித்து சென்றதை என்னால் எப்போதும் மறக்க முடியாது....நாக்கு தள்ளிவிட்டது.... நான் படும் அவஸ்த்தை பார்த்து “ஏன்டா ராஜா, முடியலையா?” என்று என் அம்மா கேட்க... சனியனே நான்தான் உன்னை டெம்போவில் ஏறிப்போக சொன்னேன் இல்லையா? என்று என் இயலமையில் கத்த... அம்மா கப் சிப்....

அதன் பிறகு டாக்டர் குறித்து கொடுத்த மூன்று மாதத்தில் இருந்து , நான் எடுத்து மேல்கட்ட நடவடிக்கையால் அந்த பாண்டிகாசநோய் மருத்துவமனையில் மேலும் மூன்று மாதங்கள் கடவுள் என் அம்மாவுக்கு உயிர் பிச்சை அருளினார்...

என் அம்மா வயிறு வீங்கி கஷ்டப்பட்ட போது என்னிடம் அப்போது மட்டும் என்னிடம், பணம் இருந்து இருந்தால் இன்னும் கூட ஆரம்பத்திலேயே சிகிச்சை அளித்து இருக்க முடியும்....5 பிள்ளைகள் உயிர் வாழ ரேஷன் அரிசி உதவி செய்த காலம் அது... என்ன செய்ய...? எல்லாம் விதி...

இறக்கும் முன் மூன்று நாளைக்கு முன்பு என் அம்மா மஞ்சள் பூசி கேசத்துக்கு சிக் ஷேம்பூ போட்டு சி்க்கென்று இருந்தால்....

என் அம்மா என்னிடம் கேட்டாள்???
நான் செத்துட்டா நீ என்ன செய்வாய்? என்று நான் சொன்னேன்... அந்த மரம் ஒருநாள் சாக போகின்றது... இந்ததாத்தா ஒருநாள் சேத்து போவார்.. அந்த புது கார் ஒருநாள் பழசா ஆகும் எல்லாரும் ஒருநாள் சாகப்போறோம்... என்ன நீ கொஞ்சம் சீக்கிரம் என்றேன்...

தன் பிள்ளை புத்திசாலிதனமாய் பேசுவதை நினைத்து வியந்து போனாள்... அந்த கோலத்தில் அவளை போட்டோ எடுக்க சொன்னாள்.... இன்னும் இரண்டுநாளில் நான் கேமரா வாங்கி வந்து எடுக்கின்றேன் என்று சொல்லி இருந்தேன் அதற்க்குள் கடவுளுக்கு அவசரம் என்ன செய்ய ?என் அம்மாவின் கடைசி ஆசையை என்னால் நிறைவேற்ற முடியவில்லை....

இதுவரை ஒரு லட்சத்துக்கு அதிகமான காட்சிகளை நான் கேமராவில் சிறைபடுத்தி இருப்பேன்....இன்னும் சிறைபடுத்துவேன்..ஆனால் என் அம்மாவை சிக் ஷேம்பூ போட்டு குளி்த்து சிக்கென இருந்த என் அம்மாவை கேமரா சட்டத்தில் என்னால் சிறைபடுத்த முடியாமல் போய் விட்டது....

இன்றும் என் அம்மா உயிர் விட்டபாண்டி ஜிப்மர் எதிரே உள்ள காசநோய் மருத்துவமனையை கடக்கும் போது, நான் பேருந்தில் சென்றாலும், பைக்கில் சென்றாலும் அந்த மருத்துவமனையை பார்த்து சேவித்து கொள்வேன்....

பேருந்தில் போகும் போது நான் அப்படி சேவிக்கையில் எல்லோரும் எசூதா கோவில் இருக்கின்றது என்று பேருந்து ஜன்னல் வழியாக எட்டிப்பார்க்க அங்கே மருத்துவமனைதான் இருக்கும்.... குழம்பி போன மனநிலையில் என்னை வித்யாசமாக பார்க்கும், சக பயணியிடம் சொல்ல முடியுமா? என் அன்னையோடு கடைசியாக உறவாடிய இடம் இந்த இடம் என்று.....

என் அம்மாவை பற்றி சில நினைவுகள் இன்னும் பல பதிவுகளில் அவள் நினைவு வரும் போது எல்லாம்....

எனக்கு எல்லாம் கத்து கொடுத்த குரு என் அம்மாவுக்கு இந்த பதிவு சமர்பணம்...மனதில் இருந்த பாராம் குறைந்தது போல் உள்ளது...

நன்றி
அன்புடன்
ஜாக்கிசேகர்...

(PREY) காட்டு ராஜா சிங்கமும் சில மனிதர்களும்...


எப்போதுமே காட்டு விலங்குகள் அது பாட்டுக்கு அதன் வாழ்விடங்களில் வசித்து கொண்டு இருக்கும்.. நாம்தான் அதனை அவ்வப்போது நோன்டி வினையை விலைக்கு வாங்கி கட்டி கொள்கின்றோம்..

ஒரு வாரத்துக்கு முன் கூட ஊட்டி முதுமலையில் ஒரு வெளிநாட்டு கார பெண்மணியை யானை அடித்து போட்டு கொன்று விட்டது.... காரணம் வன விலங்குகளை பார்பதற்க்கு காட்டின் உள்ளே பாதுகாப்பற்ற இடத்துக்கு கைடு அழைத்து்கொண்டு போயிருக்கின்றான்.. அது இடத்துக்கு அழையா விருந்தாளியாக போனதால் அயானை அடித்து போட்டு விட்டது... இது பராவாயில்லை சிங்கம், புலியாக இருந்தால் அவ்வளவுதான் ... மிக வலியுடன் கொடுரமாக இறக்க வேண்டியதுதான்... அப்படி ஆப்பி்ரிக்கா காட்டில் சிங்கம் புலி பார்க்க அழையா விருந்தாளியாக காட்டில் செல்லும் ஒரு குடும்பத்தின் நிலை என்ன என்பதை சொல்லலும் படம்தான் பிரே..

PREY படத்தின் கதை இதுதான்....

நியுமேன் என்பவன் ஆப்பிரிக்க காட்டில் வேலை விசயமாய் தங்கி இருப்பவன் இவனது மனைவி இரு குழந்தைகளும் காட்டு விலங்குகள் பார்க்க ஆசைபட அவர்கள் ஒரு ஜீப்பில் ஒரு கைடுடுன் அனுப்பி வைக்கின்றான்...அந்த இரண்டு பசங்களில் ஒன்று 14 வயது பெண் , ஒன்று10 வயது ஆண்பிள்ளை ... அம்மப ஸ்தானத்தில் இருப்பவள் அம்மா அல்ல...ஸ்டெப் மதர் .. அதனால் முதலில் இருந்தே அவளை அந்த பசங்களுக்கு பிடிக்கவில்லை... அஇவள் எது சொன்னாலும் அவளை ஒரு காமெடி பீஸ் போல் நடத்துகின்றார்கள்....


அழைத்து போன கைடை சிங்கம் அடித்து கொன்று விட அதன் பிறகு அந்த இரண்டு பிள்ளைகளும் அந்த ஸ்டெப் மதர் எனனவானார்கள் என்பது மீதி கதை... ஒரு விஷயம் எடுத்து போன ஜீப் ஆக்கிசடென்ட் ஆகி விட என்ன செய்து இருப்பபார்கள் அவர்கள்???? வெண் திரையில் பாருங்கள்...



படத்தின் சுவாரஸ்யங்களில் சில..


இது மாதிரி திகில் படங்களை பொறுத்தவரை நிறைய வந்து விட்டது .... சவுண்டில் மிரட்டியே வயிற்றை கலக்க வைத்து விடுவார்கள்....

இந்த படத்தில் ஆப்பி்ரிக்க காட்டின் அழகை அப்படியே செல்லுலாய்டில் கேமராமேன் பதிய வைத்து இருப்பார்


இந்த படம் உண்மை சம்வங்களின் அடிப்படையில் எடுத்த படம்....

ஸ்டெப் மதரை அம்மா என்று அழைக்கும் அளவுக்கு எடுத்து போன திரைக்கதை அற்புதம்

என்ன இருந்தாலும் இந்த படம் டைம்பாஸ்படம்தான்..

இந்த மாதமோ அல்லது அடுத்த மாதமோ இந்த படம் தமி்ழில் டப் செய்ய பட்டு வருகின்றது...

பல காட்சிகளில் உண்மையிலேயே மிரட்டி வயிற்றை கலக்க வைத்து இருப்பார்கள்...

ஜுராசிக் பார்க்கும் இந்த படத்துக்கு அடிப்படை ஒன்றுதான்
அது பெரிய பட்ஜெட் இது சின்ன பட்ஜெட் படம் .... அவ்வளவுதான்....


படத்தின் டிரைலர்....



படக்குழுவினர் விபரம்
Release: January 30, 2008 (U.S.)
Directed by: Darrell Roodt
Written by: Darrell Roodt, Beau Bauman and Jeff Wadlow

Starring:
Bridget Moynahan
as Amy Newman
Peter Welleras Tom Newman
Carly Schroeder as Jessica Newman
Jamie Bartlett as Crawford
Conner Dowds as David Newman
அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

(Cinema Paradiso) (உலக சினிமா / இத்தாலி)நெஞ்சை தொடும் கதை....


நான் கடலூர் கமலம் தியேட்டரில் டிக்கெட் கொடுத்துக்கொண்டு இருந்தேன்...3ம் வகுப்பு டிக்கெட்தான் என்னிடம் கொடுக்க சொல்லி கொடுப்பார்கள்..தனசேகரன் என்று எழுதிய அலுமினிய டப்பாவில் 25 ரூபாய்க்கு சில்லரை போட்டு தருவார்கள்...60 டிக்கெட் என்றால் எந்த எண் வரை கொடுக்க வேண்டும் என்று எண்ணி மடித்து வைத்து கொடுப்பார்கள்... நாம் அந்த மடித்து வைத்து இருக்கும் டிக்கெட் வரை கொடுக்க வேண்டும்...

டிக்கெட் புக்கை எடுத்துக்கொண்டு கவுண்டர் நோக்கி நடக்கையில் சிறைக்கைதிகள் போல டிக்கெட் வாங்க நெருக்கி கொண்டு இருக்கும் மனிதர்களை பார்க்கையில் கண்களில் ஒரு இறுமாப்பு இருக்கும்...(இப்போது நினைத்து பார்க்கின்றேன்... டிக்கெட் கொடுக்கற எனக்கே இவ்வளவு தடிப்புன்னா? போலிஸ்காரன்களுக்கு எப்படி இருக்கும்???)

நான் கவுண்டர் உள்ளே போய் உடனே கதவு திறக்க மாட்டேன் வத்தி ஏத்தி சாமி கும்பிட்டு விட்டு கவுன்டர் கதவை திறந்தால் பத்து கைகள் அந்த சிறிய ஓட்டை வழியாக கை நீட்டிக்கொண்டு இருக்கும் ஒவ்வொறு விரல்களிலும் விதவிதமான கசங்கிய ரூபாய்தாள்கள் இருக்கும்.....

கடலூர் கிருஷணாலா திரை அரங்கில் அபூர்வ சகோதர்கள் படத்துக்கு 2ரூபாய் டிக்கெட்டுக்கு நெரிசலில் சிக்கி, எனக்கு மேலே கவுண்ட்ரில் ஏறி போனவன் என் மேல் கால் வைக்க, அவன் காலை கடித்து அவனை அலறவைத்து கூட்ட நெரிசலில் மிதிபட்டு சட்டை கிழிந்து....தியேட்டர் உள்ளே போனால் கமல் கவுதமி இருவரும் மனதில் நிற்க்காமல் கிழிந்த சட்டையும் அப்பாவின் கோபமுகமும் நினைவில் நின்றது....

எங்கள் கூத்தப்பாக்ம் ஊருக்கு பக்கத்தில் பாதிரிக்குப்பம் ஜெகதாம்பிகா டூரிங் டாக்கிசில் மாலை புனல் ஸ்பிக்கரில் வளையபட்டி தவில் போடும் போதே, இங்கு அன்று பார்க்க போகும் சினிமா பற்றி எனக்குள் மனத்திரையில் வேறு ஒரு படம் ஓடும்.... டாக்கி்சில் 4 இன்டர்வெல் விடும் போது விற்க்கும் தேங்காய் ரொட்டி முறுக்கு எனக்கு பிடித்தமான ஒன்று....

படம் இன்டர்வெல்லில் ஆப்பரேட்டர்ரூமில் பிலிம் சுற்றுவதையும் பிலிம் மாட்டுவதையும் தூர நின்று ரசித்து இருக்கின்றேன்..

எங்கள் ஊர் முத்தையா தியேட்ட்ரில் பிட்டு படம் பார்க்க போய் முகத்தை மறைத்து...இன்டர்வெல்லில் பெண்கள் பாத்ரூம் பக்கம் போய் டிக்கெட் கவுன்டரில் மறைந்து கொண்டு இருந்து இருக்கின்றேன்....

அதே தியேட்டரில் பிட் தியேட்டரில் ஓடும் போது காமம் தலைக்கு எறிய ஒருவன் 5 வது சீட்டில் கைமதுனம்செய்ய... அவன் சீட்டில் போடும் வேகம் எங்கள் வரிசையில் உள்ள எல்லேரையும் அவன் போட்ட ஆட்டத்தை உணரவைத்தான் , அவன் யாரை பற்றியும் கவலை படாமல் செய்ததை பார்த்து திகைத்து போய் இருக்கி்றேன்...

கடலூர் பாலாஜி தியேட்டரில் இதே போல் பிட் பார்க்க போய் பெண்கள் கவுன்ட்ரில் ஒளிந்து இருக்கும் போது 40 வயது மதிக்கதக்க ஆள், மெல்ல பேச்சு கொடுத்து 5 வது பிட்டு சூப்பர் இல்ல என்று சொல்லி விட்டு, பணம் எவ்வளவு வேண்டமானாலும் தரேன் அந்த மறைவுக்கு வா என்று என்னை அழைக்க, எனக்கு கை கால் நடுங்கி அங்கு பிடித்த ஓட்டம் வீட்டில் வந்துதான் நின்றேன்... ஒருவாரத்துக்கு அந்த பதட்டம் எனக்கு தனியவில்லை...

அதே முத்தையா தியேட்டர்,ஒரு ஆங்கில படம். படத்தில் பிட் ஓடும் போதுஇவன் எதோ அவனை இருட்டில் ஏதோ செய்து இருக்க வேண்டும்.... பளார் என்று அரை விழும் சத்தம் கேட்க அடிவாங்கியவன் சட்டென எழுந்து ஓடி விட்டான்... நாங்கள் யார் அடித்தார், யார் உதை வாங்கினார்கள் என்று தெரியாமல் குழம்மி போய் இருந்து கொண்டு திரும்பி பார்த்து, திரும்பி பார்த்து படம் பாத்தோம்..

கடலூர் பாடலி தியேட்டரில்செம்பருத்தி படம் டிக்கெட் எடுக்கும் போது எவனோ ஒருவன் எதோ சின்ன பிரச்சனையில் எங்கள் மூவரையும்,“ ங்கோத்தா” என்று திட்ட, நான் ங்கொம்மா கு..... என்று ஆரம்பித்து பேட் வேர்ட் யூஸ் செய்து அவன் உதட்டை கிழிக்க, நாங்கள் மூவரும் முதல் வகுப்பில் படம் பார்க்க சட்டென யாரோ தேடுவது போல் ஜாக்கி இன்ஸ்டிங்ட் சொல்ல, திரும்மி பார்த்தால் உதடு சற்றே வீங்கிய வாரே மார்கெட் காலனி பசங்க,எட்டு பேருடன் எங்களை அவன் தேட... ,நாங்கள் மூவரும் புறமுதுகிட்டு துண்டைகானோம் துணியைகனோம் என்று திரைக்கு முதல் வரிசை பெஞ்சில் உட்கார்ந்து கொண்டோம்.... அந்த படத்தில் “பட்டு பூவே மெட்டு போடு” பாட்டில் நீச்சல் குள காட்சி தவிர படம் மனதில் ஒட்டாமல் சாமி ஆண்டவா இவன்க கையில சிக்காம விடு போய் சேர ஆண்டவனை பிரார்த்திப்பதிலேயே கவனமாய் இருந்தேன்...

சென்னை வந்து வயிற்று பிழைப்புக்காக, அலங்கார், தேவிதியேட்டரில் பிளாக்கி டிக்கெட் விற்று ரவுடி கும்பலால் மிரட்டபட்டு அதை விட்டேன்...

சத்தியம் தியேட்ட்ரில் அரை நிர்வாணம் மற்றும் உடலுறவு காட்சிகளை , வெக்கபடாமல் பார்த்த பெண்களை பார்த்து வியந்து போய் இருக்கின்றேன்....


சத்தியத்தில் படம் பார்த்து கொண்டு இருக்கும் போது சட்டென கரெண்ட் போய் எமர்ஜென்வி விளக்கு சட்டென எறிய... இன்டெர்வலுக்கு இன்னும் அரை மணிநேரம் இருக்கும் என்று கணக்கு போட்ட அந்த காமம் தலைக்கேறிய காதலன், அந்த பெண்ணின் முன் பக்க சுடிதாரை கொஞ்சமும் பயம் இல்லாமல் உயர்த்தி பட்டினத்தார் சொன்னது போல் கறந்த இடத்தை, மெல்லிய சினிமா வெளிச்சத்தில் பார்த்துகொண்டு இருக்க..., சட்டென விளக்கு எறிய அந்த பெண் ஒன்றும் புரியாமல் தலையில் கைவைத்து குனிந்து கொள்ள அவன் உடைகளை சரி செய்ததான், இருவரும் யாரையும் நிமிர்ந்து பார்க்கவில்லை. திரும்பவும் படம் போட்ட போது அவர்கள் எஸ்கேப்.....


என்னதான் எத்தனை தியேட்டர் வந்தாலும் எனக்கு எனோ சென்னை தேவி தியேட்டர் ஸ்கிரின் எனக்கு ரொம்பவும் பிடிக்கும்....

இப்படி தியேட்டர் அனுபவங்களை இன்னும் நான் பத்து பக்கத்துக்கு மேல் எழுதவேன்... அந்தளவுக்கு எனக்கு தியேட்டர் அனுபவங்கள் எனக்குள் உண்டு...அப்படி இத்தாலியில் உள்ள சினிமா பாரடைசோ தியேட்டர் ஆபபேரட்டருக்கும் அந்த பகுதி்யில் வசிக்கும் பையனுக்கும் எற்படும் அழகான உறவை மையபடுத்தி சொன்னபடம்தான் சினிமா பாரடைஸோ...
சினிமா பாரடைசோ படத்தின் கதை இதுதான்.....
செல்வேடர் எனும் பெரிய இயக்குனர் வீட்டில் வந்து படு்க்கின்றார்.. அவரது படுக்கையில் இருக்கும் பெண்மணி உங்கள் அம்மா போன் பண்ணினாங்க... என்று சொல்ல என்ன வென்று கேட்க? அல்பிரடோ என்பவர் இறந்து விட்டதாகவும் உங்களுக்கு தகவல் சொல்ல சொன்னாகள் என்று அவள் சொல்ல... அப்படியே பிளாஷ் பேக்கில் காட்சிகள் விரிய... அல்பரடோ சினிமா பாரைடைசோ என்ற தியேட்டரில் ஆபரேட்டர்... செல்வேடர் அப்பா இரண்டாம் உலக யுத்தித்தில் இறந்து போனவர். அம்மா இளம் விதவை செல்வேடரை வளர்க்க கஷ்டபட எப்போதும் சினிமா தியேட்டரில் இருக்கும் பிள்ளையை நினைத்து கவலை கொள்கின்றாள்...அதன் பிறகு அல்பரோடுவுக்கும் செல்வடோருக்கும் எப்படி பழக்கம் ஏற்பட்டது... இதில் அல்பரோடுவுக்கு தியேட்டரில் ஏற்படும் தீ விபத்தில் பார்வை போய்விட, திரும்பவும் தியேட்டர் புதுப்பித்து ஆப்பரேட்டராக 10வயதுசெல்வேடர் படம் ஓட்டுகின்றான்... அதன் பிறகு அவர்கள் வாழ்க்கை என்னவானது... செல்வேடருக்கு ஏற்படும் காதல் என்னவானது?அவர்கள் இவரும் என்னவானார்கள்? போன்றவற்றை செல்வேடர் பார்வையில் விரியும் பிளாஷ்பேக் காட்சிகளில் ரசித்து மகிழுங்கள்....


படத்தின் சுவாரஸ்யங்களில் சில.....
ஒரு தியேட்டரில் என்ன என்ன நிகழ்வுகள் நிகழும் என்பதை அற்புதமாக பதிய வைத்து இருப்பார்கள்... தமிழில் ஹவுஸ்புல் படம் முழுக்க முழுக்க தியேட்டர் பின்னனியில் வந்த படம்... வேறு ஏதாவது இருந்தால் சொல்லவும் சட்டென நினைவில் இல்லை..


இந்த படத்தை இத்தாலியில்155 நிமிஷமாக ரிலிஸ் செய்தார்கள்..ஆனால் உலகம் எங்கும் ரிலிஸ் செய்யும் போது படத்தின் நீளத்தை குறைத்து 124 நிமிடங்களுக்கு ரிலிஸ் செய்தார்கள்...


உலகசினிமா பார்க்க ஆசைபடுபவர்கள் முதலில் இந்த படத்தில் இருந்து ஆரம்பிப்பது நல்லது என்பது எனது கருத்து...

தியேட்டரில் நடக்கும் கூத்துக்களை நகைச்சுவை இழையோட சொல்லி இருப்பது அழகு...

இந்த படத்தின் கதாபாத்திரங்கள் படம் பார்த்து ஒரு வாரத்துக்கு நம்மோடு வாழ்வார்கள்..

நம் சந்தோஷப்படுத்திய தியேட்டர்கள் இடிபட்டால் எனக்கு ஒரு மாதிரி அன்று முழுவதும் இருக்கும்... அப்படித்தான் சென்னை ஆனந் தியேட்டர் இடிக்கபட்ட போது அதனை புகைபடம் எடுத்து வைத்து்கொண்டேன்... அது போல் இந்த படத்தில் அந்த சினிமா பாராடைசோ தியேட்டர் சிதிலமடைந்து கிடக்கும் போது அந்த கதாபாத்திரங்கள் அதனை பார்க்கும் போது நமக்கும் அந்த பிலிங் வந்து விடும்....

படத்தின் டைட்டில் மிக நன்றாக இருக்கும்....

தியேட்டர் தீ விபத்தில் எறிந்த உடன் அதனை புதுபித்து அதற்க்கு சிறுவனாக இருக்கும் செல்வடரை ஆப்பரேட்டராக இருக்க செய்வது கண்களில் நீர் வர வைக்கும் காட்சிகள்...

அல்பரடோ...இறக்கும் முன் தன் மனைவியிடம் செல்வடருக்கு கிப்டாக கொடுக்கும் பிலிம் ரோலை திரையில் போட்டு பார்த்து அவன் கண்கள் கலங்கும் போது நம் கண்களும் தன்னாலே கலங்கும்...

இந்த படத்தின் ஒளிப்பதிவாளர்Blasco Giurato இன்டோரிலும் அவுட்டோரிலும் பல காட்சிகள் உறுத்தல் இல்லாமல் பதியவைத்து இருப்பார்.. முக்கியமாக சினிமா அரங்கில் உள்ளே எடுக்கபட்ட காட்சிகள் அற்புதம்...

சிலருடைய காமம் மட்டும் வயதானாலும் தீர்த்து்கொள்கின்றார்கள்... அதற்க்கு இந்த படத்தின் காட்சி சாட்சி...

அதே போல் தான் காதலித்த பென்னை போல் இருக்கும் பெண் தன் காதலியின் மகள் என்று அறியும் காட்சியில் காரில் இருக்கும் ரிவர்வியூ மிரர் மூலம் காட்டி கேமரா கோனம் மாறும் காட்சிகள் கவிதை..

இந்த படத்தின் சில காட்சிகள் தெலுங்கில் சித்தார்த் நடித்த ஆட்டா படத்தில் அப்படியே யூ்ஸ் செய்து இருப்பார்கள்


விருதுகள்...
Awards
Preceded by
Pelle the Conqueror Academy Award for Best Foreign Language Film
1989 Succeeded by
Journey of Hope
Preceded by
A World Apart
(award then called Grand Prix Special du Jury) Grand Prix du Jury, Cannes
1989
tied with Trop belle pour toi Succeeded by
Tilaï tied with
The Sting of Death
Preceded by
Pelle the Conqueror Golden Globe for Best Foreign Language Film
1990 Succeeded by
Cyrano de Bergerac
Preceded by
Life and Nothing But BAFTA Award for Best Film Not in the English Language
1990 Succeeded by
The Nasty Girl

படத்தின் டிரைலரை பார்த்து மகிழுங்கள்....



படக்குழுவினர் விபரம்....
Directed by Giuseppe Tornatore
Produced by Franco Cristaldi
Giovanna Romagnoli
Written by Giuseppe Tornatore
Starring Salvatore Cascio
Marco Leonardi
Philippe Noiret
Jacques Perrin
Music by Ennio Morricone
Cinematography Blasco Giurato
Editing by Mario Morra
Release date(s) 1988
Running time 155 Mins Italy
121 Mins Cut USA
174 Mins
Director's Cut
Country Italy
Language Italian


அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

என் இல்லாளின் முதல் வெளிநாட்டு பயணம்....


“ஏங்க நான் ஊருக்கு போகின்றேன்” என்று என் மனைவி சொன்ன போது நான் ஏதோ திருச்சி ,ஸ்ரீரங்கத்துக்கு போவது போல் ஓக்கே சொல்லி விட்டேன்... ஆனால் இப்போது அவள் இல்லாமல், அவளை சட்டென பார்க்க முடியாமல் மனது தவியாய் தவிக்கின்றது...

பக்கத்தில் இருக்கும் பெங்களூருல் இருக்கும் அவள் அம்மா வீட்டிக்கு போனால் , மனதுக்கு தெரியும் இரண்டுநாளில் வந்து விடுவாள் என்று அப்படியும் எனக்கு போர் அடித்தால் நான் அங்கு போய் விடுவேன்...

ஆனால் அவள் இப்போது போய்இருப்பது அயர்லாந்தில் டூபளின் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை சென்னை ஏர்போர்ட்டில் பிளைட் ஏற்றி விட்டேன்... அவளுக்கு அதுதான் முதல் விமானபயணம்,வெளிநாட்டு பயணம் எல்லாம்... நான் பிளைட் எப்படி இருக்கும் என்று ஆங்கில படங்களில் மட்டுமே பார்த்து இருக்கின்றேன்.. தாம்பரம் நோக்கி போகும் போது தலைக்கு மேல் ரொம்ப சத்தத்துடன் அது இறங்குவதை பார்த்து இருக்கின்றேன்... அவ்வளவே

அவள் ஊர் போய் சேரும் வரை எனக்கு செம டென்ஷன் போங்கள்... எனென்றால் புவியீர்ப்பு திசைக்கு எதிரான பயணம் அல்லவா? அதனால்தான்....


3மாத காலம் அவர்கள் கம்பெனியில் அக்கவுன்ட்ஸ் சம்பந்தமாக அயர்லாந்தில் டிரைனிங்...கடந்த வருடம் அக்கேடாபர் 19ம் தேதிதான் எங்கள் திருமணம் நடந்தது...பத்து வருடம் பார்த்து, ரசித்து, காதல் திருமணம் செய்து கொண்ட பெண்தான்.. இருந்தாலும் இந்த பிரிவு எனை வாட்டுகின்றது....

காரில் வீடு வந்து அழைத்து போய் வீட்டில் விடும் வசதி அவள் அலுவகத்தில் இருந்தாலும், நான் சும்மா இருந்தால் மாலை வேலையில், அவளை அழைக்க அவள் அலுவலகத்துக்கு போய் அவளை அழைத்து வருவேன்....

நல்ல காபி குடிந்து , அதுவும் காலையில் காப்பி குடித்து 5 நாட்கள் ஆகின்றது... கால் வலிக்கின்றது என்று சொன்னால் எந்த நேரமாக இருந்தாலும், சட்டென சுடுதண்ணீர் வைத்து அதில் கொஞ்சம் டெட்டால் ஊற்றி வெது வெதுப்பான நீரில் காலை வைக்க சொல்லி செல்லமாக மிரட்டுபவள்....

நேற்று தனிமையில் தோசை வார்க்கும் போது அவள் ஞாபகம்... என்னை எப்போதும் சமையல் கட்டு பக்கம் விடவே மாட்டாள்... காரணம் காய்கறி அறிந்த அரிவாள் மனை நடுவில் இருந்தால், அதனை எடுத்து ஓரம் வைக்க சொல்லுவேன்... அதனால் என்னை சமையல் அறை பக்கம் விடவே மாட்டாள்....இப்போது அது என்னுடைய ராஜ்யமாக மாறிப்போய் இருக்கின்றது...

நான் எப்போதாவது காபியும், தோசையும் வார்த்து கொடுத்தாலே ஐயம் சோ லக்கி என்று சொல்லுவாள்...

அவள் சுத்த வெஜிட்டேரியன், கொஞ்சம் ஆச்சாரம்.... நான் எதையும் தின்னும் ரகம்.... அங்கு எடுத்து போன உணவு பொருட்கள் தீர்ந்ததும் என்ன செய்வாள் என்ற தெரியவில்லை...


இந்த பெண்கள் ரொம்பவும் மோசம் ஆண்கள்வளரும் போது தாய் பார்த்து பாத்து செய்து அவனை கெடு்க்கின்றாள்... தாரம் அதை விட அதிகமாக கவனித்து அவனை ஹோம் சிக் ஆக்குகின்றார்கள்...

என்ன கொடுமைன்னா அவள் எடு்த்து போன லேப்டாப்ல நெட்கனெக்ஷன் அக்சப்ட் ஆகலை... எடுத்து போன போன் வேறு பிரச்சனை...

அயர்லாந்தில் தமிழ் பதிவர்கள் யாராவது இருக்கின்றீர்களா? அப்படி இருந்தால் எனக்கு தெரியபடுத்துங்கள்...அல்லது அயர்லாந்து டூப்ளின் நகரத்துக்கு பக்கத்தில் இருந்தாலும் ஓகே....கடல் கடந்து எதாவது உதவி என்றால் நாம் எப்படி செய்ய முடியும்...விருப்பம் இருப்பின் சொல்லுங்கள்... அல்லது சென்னையில் இருந்து அயர்லாந்து சென்றாலும் சொல்லுங்கள்.....

என் மனைவிஅயர்லாந்தில் இரவில் 8 மணிக்கு வெயில் அடிக்கின்றதும்மா.... என்று சொல்கினறாள்... என் மனைவி ஊருக்கு போகின்றாள் என்ற உடன் பள்ளியில் 5 மார்க் கொஸ்டினுக்கு வேல்டு மேப் பாத்துவிட்டு பரிட்சைக்கு போவோம்... அதற்க்கு அப்புறம் இப்பதான் வேல்டு மேப் பார்க்கின்றேன்.... அயர்லாந்து எங்கே இருக்கின்றது என்று....


எனது நண்பர் நித்யகுமாரன் இல்லாள் பிரிவு பற்றி எழுதிய கவிதை இங்கே பொறுத்தமாய் இருக்கும் என்று நம்புகின்றேன்....


நீ
தளும்ப தளும்ப தரும்
காபி குவளைகள்
காலியாகவிருக்கின்றன

தளும்புகின்றன...

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

நடுநிசி வந்து
பூட்டிய கதவு திறந்து
அசந்து படுத்தாலும்
என்னோடு சேர்ந்து
உறங்க மறுத்து
உன் ஞாபக அலையடிக்கிறது
மாத காலண்டர்...

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

நீ
திட்டித்திட்டி செய்யாததையெல்லாம்
அனிச்சையாய் செய்கிறேன்...

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

வேண்டுமட்டும் தூங்கலாம்
ஆப்பாயில் சாப்பிடலாம்
10 மணி தாண்டி வீடு வரலாம்

இந்த எந்த சுதந்திரமும் வேண்டாம்
விரைந்து வா....

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

குடிக்க சுடுதண்ணீர் போடுகையிலும்
உள்ளாடை துவைக்கையிலும்
தெரிந்து போகிறது...

என்னை எந்தளவு
கெடுத்து வைத்திருக்கிறாயென்று...

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

நீ
திரும்பிவரும் நாள்வரை
மொத்தமாய் கிழித்தபின்
காலண்டரும் எனைப்பார்த்து
கைகொட்டி நகைக்கிறது....


எனது எல்லா பதிவுகளுக்கும் முதல் வாசகி எனது மனைவிதான், ஆனால் இப்போது மற்றவர்கள் போல அவளும் வாசிக்க வேண்டும்.... என்ன கொடுமை சரவணன் இது...
இந்த பதிவை என் மனைவி அயர்லாந்தில் படிப்பாள் என்று நினைக்கின்றேன் அதற்கு சீக்கரம் நெட் அவள் லேப்டாப்பில் ஒர்க் ஆக வேண்டும்....

ஒரு மாதிரி குழும்பி போய் என்ன எழுதுவதென்று தெரியாமல் எழுதிஇருக்கின்றேன்.. அதுமட்டும் எனக்கு நன்றாக புரிகின்றது...

அன்புடன்
ஜாக்கிசேகர்...

(EXECUTIVE DECISION) பாம் வெடித்தால் 14 மில்லியன் வாஷிங்டன் நகர வாழ் மக்கள் காலி



பொதுவாய் அமெரிக்கர்கள் அவர்கள் நாட்டையும் கொடியையும் ,ஏன் அவர்கள் அதிபரை கூட கேவலபடுத்துவார்கள் ஆனால் சத்தம் இல்லாமல் அவர்கள் நாட்டின் மதிப்பை படங்கள் மூலம் உணர வைத்துவிடுவார்கள்.... நீங்கள் ஹாலிவுட் படங்களை கூர்ந்து கவனித்தால் அவற்றை புரிந்து கொள்ள முடியும்...

இன்டிபண்டன்ஸ்டே படத்தில் அமெரிக்க அதிபர் உரையாற்றுவதாய் ஒரு காட்சி இருக்கும் அந்த காட்சியை உற்று நோக்கினால் உங்களுக்கு உள்ளே ஒரு சிலிர்ப்பு ஓடும் ... அது போல் நம்முடைய படங்களில் எனக்கு தெரிந்து ரோஜாவில் அர்விந்தசாமி கொடி எறிப்பை தடுக்கும் போது எனக்குள் அந்த உணர்ச்சி, சிலிர்ப்பு...நிகழ்ந்தது. ஆனால் பல படங்களில் அவர்கள் நாட்டை நேசிக்க செய்யும் ,அலட்டும் விஷயங்கள் அதிகம்....

அமெரிக்கர்களை பொறுத்தவரை அவர்களால் ஏதுவும் முடியும் என்பதில் இறுமாப்பு உடையவர்கள்...அவர்கள் பேச்சில் செயலில் எல்லாவற்றிலும் ஒரு அலட்சியம் குடி கொண்டு இருக்கும்... உலக நாடுகளின் ராஜா என்பதாக நினைத்து அது எடுத்துவரும் முடிவுகள், பல நாடுகளின் வயிற்றில் மண் அள்ளி போட்டது வரலாறு...

பலநாடுகளில் முக்கியமாக அரபு தேசங்கள் எதுவும் அமெரிக்கா அடிவருடிகள் அல்ல.. எல்லாம் மனதில் ஒன்றை வைத்துக்கொண்டு வெளியே சிரித்து பேசிகொண்டு காலத்தை கடத்துகின்றன... ஆனால் அரபு மக்கள் அமெரிக்கா மீது கோபமாக இருக்கின்றார்கள்... அது அவர்களுக்கும் தெரியும்.... அப்படி அமெரிக்கா மீது வெறுப்பு உள்ள ஒரு தீவிரவாத கூட்டம் ஏதென்சில் இருந்து,அமெரிக்கா போகும்.... பிளைட்டை கடத்தினால் என்னவாகும் என்பதே எக்சிகியுட்டிவ் டிசிஷன் படத்தின் கதை....


EXECUTIVE DECISION படத்தின் கதை இதுதான்....

ஒரு பெரிய தீவரவாதிகளின் தலைவன்... அவன் மகளுக்கு கல்யாணம் அந்தநேரத்தில் அவன் அசந்த நேரம் பார்த்து அவனை போலிஸ் கைது செய்து விடுகின்றது... அவனுக்கு ஒரு தம்பி... அந்த சட்டிசாம்பார் தன் அண்ணை விடுவிக்க ஏதென்சில் இருந்து 400 அமெரிக்கர்களை ஏற்றிக்கொண்டு செல்லும் ஓசியானிக் ஏர்லைன்ஸ் விமானத்தை கடத்துகின்றார்கள்... அதில் என்ன விசேஷம் என்றால் பிளைட்டில் சாதாரணபாம் வைக்கவில்லை கெமிக்கல்பாம் வைத்து இருக்கின்றார்கள்...எப்படி பட்ட கெமிக்கல் தெரியுமா? ஒருசொட்டு ..ஒரே ஒரு சொட்டு உஜலா சொட்டு போல கிழே விழுந்தாலே, ஒரு 10 பேர் செத்து போயிடுவாங்க... அவன் வாஷிங்டன் மொத்தத்தையும் அழிக்க அதாவது 14 மில்லியன் மக்களை அழிக்க கிலோ கணக்குல பிளைட்ல கெமிக்கல் பாம் வச்சி இருக்கினறான்....

அதாவது திருச்சி ரயில்ல பாம் வச்சி இருக்கறேன்னு சொன்னா விழுப்புரம் ஜங்ஷன்ல வண்டியை நிறுத்தி தரோவா செக் பண்ணி அனுப்பலாம்.. பாம் வச்சி இருககறது பிளைட்ல என்ன பண்ணறதுன்னு தெரியாம... அமெரிக்க கவர்மென்ட் விழி பிதுங்கி நிக்குது... என்ன மாதிரிEXECUTIVE DECISION
எடுத்தார்கள்... பிளைட் வாஷிங்டன் நெருங்கறதுக்குள்ள எதாவது முடிவு எடுத்தாகனும் இல்லைன்னா கடலுக்கு நடுவுலயே 400 அமெரிக்கர்களுக்கு ஜலசமாதி செய்யனும்.. என்ன செய்தார்கள் என்பதை விறு விறுப்பாய் சொல்லி அசத்தி இருக்கின்றார்கள்....

படத்தின் சுவாரஸ்யங்களில் சில....

ஒரு விமானம் எப்படி இருக்கும் அதனுள் என்ன அமைப்பில் இருக்கும் என்பதையும் இதுவரை விமானம் ஏறாதவர்கள் இந்த படத்தை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்... ஒரு விமானத்தை அதுவும் போயிங் விமானத்தை அக்கு வேற அணிவேறாக பிரித்து காட்டி இருப்பார்கள்....


இந்த படத்தின் திரைக்கதை ஸ்பீடு படத்தின் திரைக்கதையை ஒத்து இருக்கும் அந்த அளவுக்கு அடுத்தது என்ன , அடுத்தது என்ன என்று விரல் நகம் கடிக்க வைக்கும் திரைக்கதை...
கதாநாயகியாக(விமானபணிப்பெண்ணாக) ஹெலிபெர்ரி நடித்து இருப்பார்... இந்த பெண் ஒரு கருப்பு தேவதை என்றால் மிகையில்லை... அந்த பெண்ணின் கண்களுக்கு நான் ரசிகன்...

400 அமெரிக்கர்களாக இருந்தாலும் அவர்கள் அமெரிக்கர்கள் அல்லவா? அவர்கள் உயிரை காக்க அவர்கள் எடுக்கும் முடிவுகள் சூப்பர்.... நாமும்தான் இருக்கின்றோமே....

அதுமட்டும் அல்ல அவர்கள் கமண்டோ படை வீரர்கள் எதையும் செய்ய வல்லவர்கள் போல எப்போதும் அவர்கள் படத்தில் காட்ட முயல்வார்கள்...

விமானத்தில் கமென்டோ விரர்கள் ஏறும் காட்சி நம்ப முடியாது என்ற சொன்னாலும் நம்ப வைப்பது போல் படத்தை எடுப்பவர்கள் அவர்கள்...

அதிரடி மன்னன் ஸ்டிவன் சிக்ல இந்த படத்தில் கேஸ்ட் ரோல்தான் செய்து இருப்பார் இருந்தாலும் அப்போது அவருக்கு இருந்த மார்கெட்டை படக்குழு நன்கு பயண்படு்த்திக்கொண்டது எனலாம் பத்த நிமிடம் மட்டும் திரையில் வருபவரை எல்லா வால் போஸ்டர்களிலும் வருவது போல் பார்த்துக்கொண்டார்கள்....

படத்தின் ஹீரோவாக கர்ட் ரசல் நடித்த இருப்பார்.....


அற்புதமான திரைக்கதை கொண்ட விறு விறு ப்பான படம் இது என்பேன்...

நகம் கடித்து நகரும் நிமிடங்களில் ஒரு டயலாக் வரும்

கால் த பிரசிடென்ட் ..இட்ஸ் ஆன் எக்சிகியூட்டிவ் டிசிஷன் நவ் என்று சொல்லும் போது ஒரு விதமான சிலிர்ப்பு வரும்...



படக்குழுவினர் விபரம்

Directed by Stuart Baird
Produced by Joel Silver
Written by Jim Thomas
John Thomas
Starring Kurt Russell
Halle Berry
John Leguizamo
Oliver Platt
Joe Morton
David Suchet
J.T. Walsh
Marla Maples
Ahmed Ahmed
Richard Riehle
and Steven Seagal
Music by Jerry Goldsmith
Editing by Frank J. Urioste
Distributed by Warner Bros.
Release date(s) March 15, 1996
Running time 134 minutes
Language Engli
டிரைலரை பாருங்கள்....



அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

எனது 300வது பதிவும்,என் பதிவு பக்கம் வந்து போன உங்கள் எல்லோருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்...



14.04.08 அன்றுதான் நான் வலை உலகிற்கு அறிமுகமானநாள்...வலையில் தமிழில் எழுதலாம் என்பது எனக்கு அப்போதுதான் தெரியும்... எப்போதாவது நெட்டில் மேட்டர் பார்க்க பிரவுசிங் சென்டர் போய் அது டவுன்லோடு ஆகும் வரை வெப்துனியா போன்ற தமிழ் தளங்களில் செய்திகள் வாசி்த்து இருக்கின்றேன்... கம்யுட்ட்ரில் தமிழில் வாசிக்க முடியும் என்பது எனக்கு அப்போதுதான் தெரியும்...

இப்போது போல் இல்லாமல் மெயில் ஒன்றை நண்பர் உதவியுடன் ஓப்பன் பண்ணி வைத்த போது ஈ அடித்தது... இப்போது போல் அப்போது நண்பர்கள் இல்லை... இரண்டு மாதத்திற்க்கு ஒரு முறையாவது நெட் சென்டர் போய் பார்த்து விட்டு வந்தேன்....

பிலிம் புரட்சி முடிந்து எல்லா கேமராக்களும் டிஜிட்டல் கார்டுகளுக்கு மாற எனக்கு பர்சனல் பிசி அவசியம் ஆனது... ஏனென்றால் போட்டோ காப்பி பண்ணி சீடியில் ஏற்றி கொடுக்க நிறைய அலட்டினார்கள்..கொஞ்சம் அதிகமான பில்லையும் போட்டு வைத்தார்கள்...

வீட்டில் பிசி வந்தது... நெட்கனெக்ஷன் இழுக்க காரணம்..இந்துஸ்தான் கல்லூரியில், பசங்களுக்கு பாடம் நடத்தும் போது எதாவது சந்தேகம் என்றால் அந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்யவும், நான் தெளிவு பெறவும் எனக்கு வலை தேவையாய் இருந்தது...

கம்யுட்டர் பற்றி எனக்கு சுத்தமாக எதுவும் தெரியாது இப்போதும்தான்... எனக்கு கம்யுட்டர் பற்றிய, அடிப்படை கத்து கொடுத்து எனது கல்லுரிதான்...முதன் முதலாய் சில போட்டோக்களை சீடியில் இருந்து கம்யுட்டர் ,ஈ டிரைவில் போட்டோக்களை நான் காப்பி செய்த போது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை...

என் மனைவியின் நண்பர் பதிவர் நித்யா அவர்கள், தான் வலை எழுதுவதாகவும் அதனை வாசித்து பார்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்... எனக்கு அந்த வலையை திறந்த போது ஆச்சர்யம்... தனி நபர்களால் வலை எழுத முடியுமா? அதுவும் தமிழில்....?


அது ஒரு பெரிய பிரச்சனை தமிழ் டைப் எனக்கு தெரியாது.... ஆங்கில டைப்பும் எனக்கு தெரியாது...ஈவ்வளவு ஏன் ஆங்கிலமே எனக்கு தெரியாது... இரண்டு விரல்கைளை வைத்து தடவி தடவி டைப் அடித்தேன்.... என் முதல் பதிவுகள் பலது 20 வரியை தாண்டாது.. சத்து இல்லாத குழந்தைகள் போல் 5 வரி 10வரியில் முடிந்து கொள்வேன்.... இப்போது அப்படிஇல்லை... ஆனால் எழுத்து பிழைகள் நிறைய இருக்கின்றன... அடித்து அடித்த கீ போர்டுக்கு வயதாகி விட்டது“ ரூ”போட்டால் “ர”விலேயே நிற்க்கின்றது.. இன்னும் வேகம் வரவில்லை... தமிழ் எழுத்துக்களை செய்திதாள்களில் கட் செய்து கீ போர்டில் ஒட்டி பொழைப்பை நடத்துகின்றேன்...எழுத்து பிழைகளுக்கு மன்னிக்கவும்... இருப்பினும் மனதில் ஒரு வெறி கற்றுக்கொள்ள வேண்டும் என்று....

ஒரு நல்ல நாளில் அவர் பிளாக்கரில் கணக்கு ஒன்றை ஓப்பன் செய்து சுய முதுகுசொறிதலுக்கு அடி போட்டார்... இதோ 300யை எட்டி விட்டேன்....

பிளாக்கால் என்ன பயன்???

எனக்கு நல்ல நண்பர்களை பெற்ற தந்தது....முகம்தெரியாத நண்பர்கள் என்னை நெசிக்க செய்தது....போனிலும் மெயிலிலும் என்னை தொடர்பு கொள்ளும் நண்பர்கள்... பட விமர்சனம் நல்லா எழுதிரிங்க.... உங்க அனுகவங்களோடு கலந்து எழுதறது நல்லா இருக்கு என்று பாராட்டும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கின்றது...

வலையுலகம் நான் வந்து ,இந்த ஒரு வருடத்தில் எனக்கு நெருங்கிய நண்பர்கள் ஆனவர்கள்..

நித்யகுமாரன், உண்மை தமிழன், கேபிள் சங்கர், நையான்டி நைனா, நட்புடன் ஜமால்,தண்டோரா,வண்ணத்துபூச்சி, அகநாழிகை, லக்கிலுக், நர்சிம்,அதிஷா, பாஸ்டன் ஸ்ரீராம்,முரளிகண்ணன், அக்னி பார்வை,பைத்தியகாரன், ஜ்யோரோம் சுந்தர், டாக்டர் புருனோ, பாலபாராதி, ஸ்ரீ,கார்ததிகைபாண்டியன்,வடிவேலன், வெண்பூ, மங்களுர்சிவா.... ஆசிப் மீரான் போன்றவர்களை குறிப்பிட்டு சொல்லவேண்டும்....எப்போதுவேண்டுமானாலும் போனில் பேசுவேன்.... வலையுலகம் வரும் முன் இவர்கள் எல்லாம் யாரென்றே எனக்கு தெரியாது... எல்லோருக்கும் எனது நன்றிகள்....

எப்போதுமே எனக்கு பின்னுட்டம் இட்டு அசத்தும் எனது வலையுலக நண்பர்கள்...

நையான்டி நைனா, நட்புடன் ஜமால், ராஜ்குமார்,ஜெட்லி, வால்பையன், மங்களுர்சிவா, சூரியன் , ரெட்மகி, துபாய் ராஜா, நாஞ்சில்நாதம், ராஜ், ராஜாகே வி ஆர், திருச்சிகாரன்,ஸ்டார்ஜன், யோ வாய்ஸ், பளாக் பாண்டி, வந்தியதேவன், டிவி ராதாகிருஷ்னன், பாலகுமாரன் வத்திராயிருப்பு,மின்னுது மின்னல் , இளவட்டம் , யோ, கவிதைகாதலன், ஜெர்ரி, ராகவன் நைஜீரியா, வண்ணத்து பூச்சி,சின்னபையன், பிஸ்கோ்து பயல், மஞ்சூர் ராஜா, பிரதிப் பாண்டியன்,வெட்டிபையன், ராம்ஜீ யாஹு, பதுவை சிவா, தருமி,. கலையரசன்,காத்திகேயனும் அறிவுதேடலும்..,கக்குமாணிக்கம்,அமு செய்யது,வடுவூர் குமார், நான் ஆதவன், அது ஒரு கனாக்காலம், போன்றவர்கள் எப்போதும் பின்னுட்டம் இட்டு அசத்துபவர்கள்....


போன் மற்றும் மெயிலில்,

திருமதி பெர்னான்டோ, பாஸ்டன் ஸ்ரீராம், ஹரிராஜகோபாலன், பாலமுருகன், ஆர் ஆர் பேன்றவர்களுக்கு எனது நனறிகள்....

என் எழுத்தை புக்மார்க்கில் போடுவதற்க்குள் படித்து விடும் 170 நண்பர்கள்...


ராஜு, சரவணன்,பிரபு ஜெயா , தன்ராஜ், ஜுயோரக், ஆன்ந், திலிப்இன் பதிவு,சூர்யா, சங்கரராம், ஆர் ஆர்,தத்து பித்து , நல்ல தம்பி, நாகு, விஜயராஜா , ராஜி, ஆன்ந், ராம், சதிஸ் கண்ணன், கந்த குமார், முரளிகண்ணன், புகழினி, லோயர்,ரன்ஜு, சரவணகாந்,பிரபு ஜெயா,எம்ஜெவி, ரவிச்சந்திரன், பாலா, கத்துக்குட்டி , சதா , அருன்கார்த்திக், சரவணன்,தேவதாசன், ராஜ்குமார் சீனிவாசன், மாலாக்க முத்துபிருஷ்னன் , அங்கிள் சென், செந்தில் துபாய், இளங்கோ, துபாய் ராஜா, புரட்சிக்கவி, மின்னுது மின்னல், சில்க் சமிதா, ராத்மாதவ்,நாஞ்சில் நாதம், அன்பு,ஜெட்லி,ரெட்மகி,தாமஸ் ரூபன், இரா சிவக்குமாரன், வாசவன்,ரவி மோகன், 23சீ, கைப்புள்ள,யோ வாய்ஸ், கதிர்ஈரோடு,அருள்பிரகாஷ்,ராமய்யா, ஆர்கே, முருகன், ஸ்ரீராம் நாராயணன்,கேபிள் சங்கர், மேட்ரிக்ஸ்,.முத்து லிங்கம், கேவிபட்டி. சித்து,பனையுரான், சஞ்சனாஎம்எஸ்,இளங்கோவன் ,கண்றாவி,தினேஷ், தமிழ் குடும்பம், சுரேஷ்குமார்,ரெமோபாய், கிருத்திகன் குமாரசுவாமி, நெல்லை சரவணகுமார், ஹெர்வா அனிதா,சுதாகர், ஈஷ்,விஷாலிவின், நையான்டி நைனா, கார்த்திகை பாண்டியன், கக்கு,செல்வகிருஷ்னா, 100 பாலோயர்,பிரதீப்பாண்டியன்,மணிப்பயல் ,வர்ஷா,தேன்மொழிதங்கமணி,பூங்குன்றன், சென்பகநாதன்,ஸ்டாஜ்ன், குடந்தை அன்புமணி,அஜீத் ராஜ்குமார்,சே,இராகவன்நைஜீரியா,ரஹ்மான்,பிஸ்கோத்துபயல், சங்கர், ,கபிலன்,ஷுரிடிசாய்தாசன்,பிரகாஷ்114,கனகராஜா ஜதிஸ்,சுந்தர் ,பாலா, அகநாழிகைபொன்வாசுதேவன்,தேவன்மயம் , நன்னிலங்கைதமிழன்,கலைஅரசன், ஜெய் ஜெய், வினு,இலங்கேஸ்வரன் ,தமிழ் மாங்கனி,ரம்யா, சுரேஷ்,ராஜன்,சுப்பு , சங்கர்கனேஷ், உயிர்நண்பன்,விடிவேலன் ஆர் , விஸ்வம்,ஸ்ரீ.தமிழ்பிளாக்கின் டிப்ஸ்,ரவி சரவணன்டி,யாரோ அவன் யாரோ, வந்தியதேவன்,கிருஷ்ணமூர்த்தி, ச்ங்கொலி, வழிபோக்கன், அத்திரி,உலவு.காம்,ரமேஷ்,பதுவைசிவா,சரவணகுமரன்,கருவெளி,அப்பாவி தமிழன், வண்ணத்துபூச்சி, சந்ரு , அமு செய்யது,என்றென்றும் அன்புடன்பாலா,வால்பையன் , அக்னிபார்வை, உண்மைதமிழன்மங்களுர்சிவா, நட்புடன்ஜமால்,குடுகுடுப்பை, தண்டோரா,கோவிகண்ணன்,சென் ,வெண்பூ,நித்யகுமாரன்,குண்டுமாமா,புதுகைசாரல்,திரட்டி.காம்,மதுவதனன்மௌ,மு்துது கோபாலகிருஷ்னன்,வீனோரதா,பவுலோஸ்,வலைநன்பன் , வேலன்ராஜன்,ரங்ஸ் போன்றவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.....உங்களால இது சாத்தியமாயிற்று..... மற்றும் பெயர் விடுபட்ட இருந்தால் மன்னிக்கவும்.

என்னை பதிவுக்கு அறிமுகபடுத்திய நண்பர் நித்யகுமரன் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார்.. எத்தனைமுறைதான் எனது பெயரை சொல்லுவாய் என்று???? என் அம்மா எனக்கு இது செய்தால், அது செய்தால் என்று நான் சாகும்வரை சொல்லிதானே ஆக வேண்டும் அது போல்தான் இதுவும் என்றேன்....

முடிந்தவரை நன்றி மறக்க கூடாது என்ற கொள்கையோடு வாழ்ந்துவருகின்றேன்....

எனது பிளாக்கை அவர்களுடைய பிளாக்கில் லிங்க் கொடுத்து அவர்களுடைய தளத்துக்கு வருபவர்களை படிக்க வைக்கும் பெரியமனதுகாராகள்,


1.புதியவன் http://www.pudiyamanithan.blogspot.com/

2.பேபிஆனந்தன் http://www.babyanandan.blogspot.com/

3.தேவன்மயம் http://abidheva.blogspot.com

4.யோவாய்ஸ்..http://yovoice.blogspot.com

5. வந்தியதேவன்..http://enularalkal.blogspot.com

6.ராஜா கேவிஆர்..http://kvraja.blogspot.com

7. சரவணகுமார் எம் எஸ்கே..http://msk-cinema.blogspot.com/

8. அத்திரி... http://rajkanss.blogspot.com

9.திரட்டி..http://thirati.blogspot.com/

10.விக்னேஷவரன்..http://vaazkaipayanam.blogspot.com

11. புதுவைசிவா..http://puduvaisiva.blogspot.com/மற்றும் எனது தளத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும்

தமிழ்மணம் மற்றும் தமி்ளிஷ் தளங்களுக்கு எனது நன்றிகள்...

நண்பர் கேபிள் இரண்டு நாட்களுக்கு முன் சொன்னார் http://www.alexa.comல் எனது ரேங் ஒரு லட்சத்து பதினெட்டில் இருப்பதாக....அப்போது பார்த்த வரையில்
118425 என்ற அளவில் அதாவது ஒரு லட்சத்தி பதினெட்டு வரை எனது வலைதளம் வந்துள்ளது வலையுலகம் வந்த ஒன்றரை வருடத்தில் இது மிகப்பெரிய செயல்.... அது போல் ஒரு லட்சத்துக்குள் வந்தவர் பதிவர் லக்கிதான்..... வெகுவிரைவி்ல் உங்கள் ஆசியுடன்http://www.alexa.com ரேங்கில் ஒரு லட்சத்துக்குள் வர வேண்டும் என்று எனக்காய் பிரார்த்தனை செய்யுங்கள்....

அதற்க்கு காரணம் நீங்கள், உங்கள் அன்பு, உங்களால் இது சாத்தியமாயிற்று....

நான் பதிவு எழுத மிக உறுதுனையாய் என்னை எப்போதும் ஊக்கபடுத்திய எனது துனைவியார் சுதாதனசேகரன் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்...

பெயர் விடுபட்டவர்கள் என்னை மன்னிக்கவும்

அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

(REST STOP) 18+ டைம்பாஸ் படங்கள்...


ஹாலிவுட்காரர்களை பாருங்கள் அவர்கள் எதையும் காப்பி அடிக்க மாட்டார்கள் அவர்கள் சுத்த தங்கம், வைரம் என்று சொல்லுபவர்களுக்கு ஒன்றை சொல்லுவேன்... திகில் படம் என்று ஒன்று எடுப்பார்கள் பாருங்கள் அது போல் 1322 கதையாவது அது போல் பார்த்து இருக்கின்றேன்....

சில படங்கள் கேரக்டர்கள் மட்டும் மாற்றி விட்டு அப்படியே எடுத்து இருப்பார்களோ என்று என்ன வைக்கும் அளவுக்கு அந்த படங்கள் இருக்கும்.... இந்த வகை படங்களை பற்றி சொல்ல வேண்டும் என்றால் சின்ன வயதில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக கொலை செய்யும் ஒரு சைக்கோ... பாலைவணபகுதிகளில் தனிமையில் பயணப்படும் ஜோடிகளை தேடிப்பிடித்து கொள்வதுதான் இந்த படங்களின் அடிப்படை.. இந்த வகை படங்களில் இரண்டு பார்த்து விட்டலே அடுத்து எந்த படததின் கதையை நீங்கள் எளிதில் யூகிக்க முடியும்...

ரெஸ்ட் ஸ்டாப் படத்தின் கதை இதுதான்.....

காதலனும் காதலியும் ஒரு காரில் கலிபோர்னியா நோக்கி பழைய ஹைவேசில் போகின்றார்கள்...போகும் போது காமம் தலைக்கேற செக்சும் வைத்துக்கொள்கின்றார்கள்... ரெஸ்ட் ஸ்டாப் என்ற மோட்டலில் அவள் பாத்ரூம் போய் விட்டு காதலனை பார்த்தாள் அவனை காணவில்லை... அவள் என்னவானான் அவன் என்னவானான் என்பது மீதிக்கதை...

படத்தின் சுவாரஸ்யங்களில் சில...

கதாநாயகி அழகு...

நீங்கள் நினைப்பது போலவே கதாநாயகி அரை நிர்வாணம் குளோசப்பில் காண்பிக்க படுகின்றது..

நீங்கள் நீனைப்பது போலவே அந்த சைக்கோ ,கிடைப்பவர்கள் எல்லோரையும் கொடுரமாக சித்தரவதை செய்து கொலை செய்கின்றது...

வேறு என்ன சொல்ல கதாநாயகியும், படத்தின் சினிமோட்டோகிராயியும் கொள்ளை அழகு....
பொழுது போகவில்லை என்றால் இந்த படத்தை பார்ககலாம்.. அவ்வளவுதான்...


படக்குழுவினர் விபரம்...
Directed by John Shiban
Produced by R. J. Louis
Written by John Shiban
Starring Jaimie Alexander
Joey Mendicino
Nick Orefice
Deanna Russo
Joey Lawrence
Music by Bear McCreary
Cinematography Mark Vargo
Editing by Richard Byard
Distributed by Warner Home Video
Release date(s) 2006
Running time 85 minutes
Country USA
Language English



இனி யூ டியுப்வில் படத்தை பற்றிய காட்சிகள் இருந்தால் இனைக்கபடும்.. தொழில் நுட்ப உதவி செய்த பதிவர் கேபிள் மற்றும் வடிவேலன் அவர்களுக்கு என் நன்றிகள்...

இந்த பதிவில் இருந்து பார்த்தே தீர வேண்டிய படங்கள், பார்க்க வேண்டிய படங்கள் வரிசையில், பார்க்கலாம் என்ற வகை படங்களை டைம்பாஸ் படங்கள் என்ற லேபிளில் தொடர்ந்து எழுத இருக்கின்றேன் வழக்கம் போல் உங்கள் ஆதரவும், பின்னுட்டமும் இருக்கும் என்ற நம்பிக்கையில்....


அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

(THE BOON DOCK SAINTS)பதிவர் பாஸ்டன் ஸ்ரீராம் மற்றும் பாஸ்டன் நகரவாசிகள் ஜாக்கிரதை....

நாட்டில் கொலையும் கொள்ளையும் பெருகிவிட்டால் நாம் என்ன சொல்லுவோம்? பகவான் கல்கி அவதாரம் எடுத்து தீயவா எல்லாரையும் அழிச்சிடுவா... என்று சொல்லக்கேட்டு இருக்கின்றோம்... சரி சப்போஸ் பகவான் வரவில்லை என்றால் என்ன செய்வோம் தேமே என்று சீரியல் பார்ப்போம்...

சரி நாட்டில் கொலை, கொள்ளை, இவைகள் கட்டுகடங்காமல் போனால் எதாவது யாராவது செய்துதானே ஆக வேண்டும்...யாராவது என்றால் அது யார் எப்படி நடக்கும்? யாராவது அல்லது எந்த குழுவாவது பொறுப்பு ஏற்க்க வேண்டும் அல்லவா?

அப்படி ஏற்பவர்கள் யாராவது ஒருவருக்கு விசுவாசமாய் இருக்க வேண்டும் அல்லவா..? பணத்தயும் , பெண்களையும், போதையையும் பார்த்துவிட்டால் மனிதனாய் பிறந்த எல்லோருக்கும் புத்தி பேதலித்து விடும் என்பதுதான் உண்மை... அவர்கள் கட்டுபாடுடன் இருக்க வேண்டும்... யாராவது ஒருவர் மீது பயம் வர வேண்டும்...அல்லது யாருக்காவது ஒருவருக்கு விசுவாசமாய் இருக்க வேண்டும்.... அப்படி கடவுளுக்கு விசுவாசமாய் இருப்பவர்கள் என்ன செய்கின்றார்கள் என்பதுதான்THE BOON DOCK SAINTS படத்தில் மிக சுவாரஸ்யமாக ரொம்பவும் ஸ்டைலாக சொல்லி இருக்கின்றார்கள்....

படத்தின் கதை இதுதான்...... ரிசர்வியர் டாக் என்று ஒரு ஆங்கில படம் இருக்கின்றது... அதன் இயக்குனர் மர்டர் படங்களின் பிதாமகன் குவின்டின் டார்டினோ.... அந்த படத்தை இன்றளவும் உலக சினிமா ரசிகர்ககள் கொண்டாடுகின்றார்கள் அந்த படத்தை போல ஒரு மேக்கிங் இந்த படத்தில் நீங்கள் பார்க்கலாம்...

அமெரிக்க பாஸ்டன் நகரில் இருக்கும் இரட்டையர்கள்Conner (Sean Patrick Flanery) மற்றும்Murphy (Norman Reedus) இருவரும் கத்தோலிக்க கிருஸ்துவர்கள் சர்ச்சி்ல் சாமி கூம்பிட்டு விட்டு ,ஒரு பாரில் தனது நண்பர்களுடன் தண்ணி அடிக்கும் போது.... ரஷ்யன் மாபியா கும்பலை சேர்ந்தவர்கள் பாரை உடனே காலி செய்ய வேண்டும் என்றும் அந்த இடத்தில் வேறு ஒரு காம்ளெக்ஸ் கட்ட போவதாக சொல்ல... வாய் தகராறு முற்றி கைகலப்பாகி இரண்டு பேர் இறந்து போகின்றார்கள்... அங்கு நடந்த கொலையை Paul Smecker (Willem Dafoe) எனும் எப்பீஐ எஜென்ட் வர... அவர் துப்பு துலக்கி அந்த இரட்டையர் இரண்டு பேரையும் கைது செய்து, பின்பு அவர்கள் தங்களை தற்காத்து கொள்ள அந்த கொலைகள் செய்தார்கள் என்ற உண்மை தெரிய வர அவர்கள் வெளியே வருகின்றார்கள்....

வந்தவர்கள் சும்மா இல்லை... கைல இருக்கற காசை எல்லாம் எடுத்து போய் நல்ல துப்பாக்கி வாங்கி ரஷ்யன் மாபியா கும்பலை சுட்டு சாகடித் கொண்டே இருக்கின்றார்கள்..எப் பீ ஐ விழி பிதுங்கி வேடிக்கை பார்க்கின்றது... பாஸ்டன் நகர தொலைக்காட்சியில் எத்தனை பேர் செத்துக்கொண்டு இருக்கின்றார்கள்.. என்பதை போட்டு எப் பி மானத்தை கப்பல் ஏற்றுகின்றார்கள்... அப்படி என்னதான் எப் பிஐ பிடிங்கியது... ஏன் அவர்களை கைது செய்ய முடியவில்லை?, அவர்கள் ஏன் பைத்தியம் போல் மாபியாக்களை சாகடிக்கின்றார்கள்?? அதை விட கொடுமை சாகடித்து விட்டு ,சாகடித்து விட்டு ஏன் சர்ச்சில் போய் பாவமன்னிப்பு கேட்கின்றார்கள்? அவர்கள் என்ன லூசா என்பதை வெண் திரையில் பார்த்து மகிழவும்....

படத்தின் சுவாரஸ்யங்களில் சில....


ரொம்ப ரொம்ப ஸ்டைலான மேக்கிங் படம் இது அதற்க்கு இயக்குனருக்கு ஒரு நன்றி....

துப்பாக்கி் சண்டை போட்டு வரும் படங்கள் இது போன்று ஸ்டைலை தருவதில்லை என்பதை படம் பார்த்து கொண்டு இருக்கும் போது உணர்வீர்கள்....

படம் முழுவதும் ஒரு விறு விறுப்பு நம்மில் தொற்றிக்கொள்ளும்.....
படத்தில் வரும் ஃபன்னிமேன் கேரக்டர் சூப்பர் அவனிடம் ஒரு ரஷ்ய டான் கதை கேட்பதும் அதற்க்கு அவன் கதை சொல்லும் காட்சிகள் திக் திக் ரகம்...

படம் முழுவதும் ரத்தம் ரத்தம், மூளை சிதறல்கள், கண் சிதறல்கள், துப்பாக் தோட்டா சிதற்ல்கள் என படம் முழுவதும் ஒரே சிதறல்கள் மயம்தான்.

முதல் காட்சியில் தம்பியை சாகடிக்ககீழே அழைத்த போக அவனை காப்பாற்ற அண்ணன் என்ன செய்கின்றான் என்பதை படம் பார்க்கும் போது ரசிக்கவும்..


இந்த படத்தில் எனக்கு பிடித்த விஷயம் என்னவென்றால் ஒரு கொலை நடக்க போகும் முன் காட்டி விட்டு அதன் பிறகு கொலை நடந்த போன பிறகு அந்த எப்பீஐ போலிஸ் வந்து இந்த தோட்டா இப்படி இருந்தது வந்து இருக்க வேண்டும்... வந்து சுட்டவனில் ஒருவன் உயரம் கம்மியாக இருக்க வேண்டும் என்று சொல்ல சொல்ல அதே போல் காட்சிகள் விரிவதும் அது போல் திரைக்கதை அமைத்து இருப்பதும் அழகிலும் அழகு....

ஒரு வட்டமாக உட்கார்ந்து இருக்கும் ரஷ்ய டான்களை ஏசி ப்ளான்ட் வழியாக அண்ணன் தம்பி இருவரும் வந்து அவர்களுக்குள் சண்டை போட்டுக்கொண்டே எதிர்பாராமல் உள்ளே விழ அத்தனை பேரையும் இருவர் சுட்டு சாய்ப்பது அழகு....


இயக்குனர் Troy Duffy வாழ்வில் நடந்த உண்மை சம்பவங்களை வைத்தே இந்த படத்தின் திரைக்கதை பின்னபட்டதாம்...

அதே போல் சினிமோட்டோகிராபர்Adam Kane கை வலிக்க கை குலுக்கி் கொண்டே இருக்கலாம்.... படத்தின் பல காட்சிகள் 48 பிரேமில் ஷுட் செய்து இருக்கின்றார்கள்... அப்படி ஷுட் செய்யும் போது எவ்வளவு பிலிம் கேன் யூஸ் ஆகி இருக்கும் என்று நினைக்கும் போது தலை சுற்றுகின்றது..


இந்த படத்தை பார்த்தால் துப்பாக்கி சுடும் ஸ்டைலை நீங்கள் கற்றுக்கொள்ளும் அளவுக்கு துப்பாக்கியை உபயோகிப்பார்கள்....

படக்குழுவினர் விபரம்....


Directed by Troy Duffy
Produced by Elie Samaha
Lloyd Segan
Robert Fried
Chris Brinker
Written by Troy Duffy
Starring Willem Dafoe
Sean Patrick Flanery
Norman Reedus
David Della Rocco
Billy Connolly
Music by Jeff Danna
Cinematography Adam Kane
Editing by Bill DeRonde
Studio Franchise Pictures
Distributed by Indican Pictures
Release date(s) January 21, 2000
Running time 110 min.
Country Canada
United States
Language English
Spanish
Papiamento
Budget $6 million[1]
Gross revenue $30,471[1]





அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

சாண்ட்விச் ஆன்டு நான்வெஜ் 18+ (24,08,09)

ஆல்பம்...

பொக்கிஷம், கந்தசாமி போன்ற படங்கள் மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பி தோல்வி அடைந்து இருக்கின்றன....ஒரு தயாரிப்பாளர் இயக்குனர் எது கேட்டாலும் முகம் சுளிக்காமல் செய்து கொடுத்த படங்கள் மேலே உள்ள இருண்டு படங்களும்... ஆனால் இரண்டும் 4 நாட்கள் கூட அந்த படத்தினை பற்றி நல்ல விதமாக செய்திகள் வரவில்லை என்பதே உண்மை...

நான் ஷுட்டிங்கில் இருந்த போது காதில் விழுந்தவை...பொக்கிஷத்தை படம் பற்றி பேசும் போது 20 லட்டர் படித்து கொண்டே இருந்ததால் எப்படி பொறுமையாக ரசிகன் படம் பார்ப்பான் என்று சொல்லுகின்றார்கள்... ... கந்தசாமி படத்தை பற்றி... நான் சினிமா ஆட்களையோ டெக்னிக்கள் ஆட்களையோ.. நான் கேட்கவே மாட்டேன் ஒரு சிலரை தவிர சினிமாவில் எல்லா படத்தையும் குப்பை என்று சொல்லுபவர்களை நான் பார்த்துஇருக்கின்றேன்.... அதனால் நான் பொதுவாய் சினிமா ஆட்கள் விமர்சனத்தை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்... அதில் ஒரு வன்மம் பொறாமை இருக்கும்....ஜெயித்துவிடக் கூடாது என்ற ஆசை பேச்சில் இருக்கும்... நான் எல்லோரையும் சொல்லவில்லை.. ஒரு சிலர் இருக்கின்றார்கள்.... அதனால் பொதுவாய் சினிமாகாரர்கள் விமர்சனத்தை பொருட்படுத்துவதில்லை.... கேபிள் அப்படி இல்லை நல்லா இருந்த படத்தை ஒரு போதும் குறை சொன்னதில்லை.. ரசனைகள் வேறு பட்டு இருக்கின்றன..ஆனால் சினிமாவின் உழைப்பு அவருக்கு நன்றாகவே தெரியும்..

நண்பர் கார்த்திகை பாண்டியன் எழுதிய கந்தசாமி விமர்சனத்தை படிக்க நேர்ந்தது அவர் இப்படி விமர்சித்து உள்ளார்... அழகான சட்டங்களுடன் பிரேம் பை பிரேம் இழைத்து இருக்கின்றார்கள் ஆனால் உள்ளே ஓவியம் இல்லை என்ற பாணியில் எழுதி இருக்கின்றார்...சராசரி பார்வையாளன் பார்வையிலும் அந்த படம் எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.... நன்றி பாண்டியன்


கேபிள் சங்கர் பதிவை இன்று உற்றுகவனித்த போது அதில் முன் பக்கத்தில் இருக்கும் ஹாட்ஸ்பாட்டை எடுத்துவிட்டார்... என்ன காரணம் என்று தெரியவில்லை... குமுதம் ஆனந்த விகடன் போடாத படங்களை ஒன்றும் அவர் போட்டு விடவில்லை... இருப்பினும் அது அவர் விருப்பம்.... கடந்த ஒரு வாரமாய் தமிழ் மணத்தில் கோலாச்சிய நண்பர் கேபிள் சங்கர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்... ஆனால் ஒரு நாளைக்கு இரண்டு மூன்று எழுதுவார் என்று எதிர்பார்த்தேன் ஆனால் ஒருநாளைக்கு ஒன்றுதான் எழுதினார் வேலை பளு போலிருக்கு.... இருப்பினும் நண்பருக்கு நட்சத்திர வாழ்த்துக்கள்...


மிக்சர்...
கடந்த ஒரு வாரகாலமாக ஷட்டிங் மற்றும் பர்சனலாக கொஞ்சம் நான் டல்லாக இருந்தேன்... அதனால் எழுதிய பதிவிற்க்கு பின்னுட்டம் இனிதான் எழுத வேண்டும்... எது எப்படி இருந்ததாலும் நீங்கள் கொடுக்கும் ஆதரவு என்னை சந்தோஷம் கொள்ள செய்கின்றது... பின்னுட்டம் இட்ட இனிமேலும் இடப்பொகின்ற நண்பர்களுக்கு என் நன்றிகள்....சட்டென பதில் போடததால் மரியாதை அற்றவன் என்று யாரும் என்ன வேண்டாம்....
என் வேலை பளுவுக்கு ஒரு உதாரணம்... கடந்த வெள்ளி இரவு எனக்கு இருந்த பர்சனல் வேலை காரணமாக தூங்கவில்லை... விடியலில் இரண்டு மணிக்கு படுத்தேன்.. 3 மணிக்கு வீட்டு வாசலில் கார்..... சன்ரைஸ் கால்ஷீட் போட்டு இருந்தார்கள்... நாங்கள் நாலு மணிக்கு எங்கள் கேமராமேனோடு புது கத்திப்பாரா பாலத்தில் இருந்தோம் அப்படியே தொடர்ந்த ஷுட்டிங் ஞாயிறு விடியலில் 2 மணிக்கு பேக்கப் ஆகியது... எல்லோரையும் வண்டி டிராப் செய்து எனது வீட்டில் இறங்கும் போது 4 மணி... குளித்து விட்டு படுக்கைக்கு வந்த போது 4,30...உடல் வலி என்றால் ? அப்படி ஒரு வலி...
அறிவிப்பு...

பார்த்தே தீர வேண்டிய படங்கள் , பார்க்க வேண்டடிய படங்கள் லிஸ்ட் எழுதினாலும்... பார்க்கலாம் என்ற லிஸ்ட்டில் படங்கள் எழுதலாம் என்று இருக்கின்றேன் மிக விரிவாய் எழுதாவிட்டாலும்.. அந்த படத்தை பற்றி சிறு அறிமாவது கொடுக்கலாம் என்று இருக்கின்றேன்.... பார்க்கலாம் கொடுத்த காசிற்க்கு பங்கம் இல்லாத படங்களை அதாவது ஜஸ்ட் பார்க்கலாம் என்ற படங்களை எழுதகின்றேன்... வழக்கம் போல் அதற்கு ஆதரவு கொடுப்பீர்கள் என்று எண்ணுகின்றேன்...

சந்தோஷம்.....
நண்பர் ராஜ்குமார் ஒரு பின்னுட்டம் இட்டு இருந்தார்.. அதில் நான் படங்களை அறிமுகப்படுத்தி டெம்ட் செய்வதால், அவருக்கு விடுமுறையான வெள்ளிக்கிழமைகளில் படம் பார்த்து தொலைக்க ஹோம் மினிஸ்டர் தடா போட்டு இருக்கின்றார்களாம்.. வெள்ளிக்கிழமை லேப்டாப் தொடர்கூடாது என்று.... சந்தோஷமாக இருக்கின்றது... படம் பார்க்கும் ஆவளை தூண்டுவது போல் எனது எழுத்துக்கள் இருப்பதற்க்கு கடவுளுக்கு நன்றி சொல்லிகொள்கின்றேன்...

ஆதவன் படத்தின் டிரெய்லர் டிவியில் பார்த்த உடன் அந்த பாடலின் காட்சி கோணங்கள் அற்புதமாக இருக்க யார் கேமராமேன் என்று விசாரித்த போது ஜீம் கனேஷ் என்றார்கள்... அவரை நான் பார்த்தது இல்லை ஆனால் பல விளம்பர படங்களில் கேமராமேனாக வேலை செய்து இருக்கின்றார்...எனக்கு20 உனக்கு 18 அவர் செய்த படம்தான்...கேஎஸ் ரவிக்குமார் படத்தில் முதன் முதலாக அசத்தலான ஷாட்டுகள்....

எஸ் எம் எஸ்...
சட்டென சில படங்ககளை தவரவிட்டு பின்பு வருத்தப்படுவோம் அது போல் விகடன் டாக்கிஸ் சிவா மனசுல படம் நேற்று டிவியில் போட்டார்கள்.. ரொம்ப ஜாலியாக அனுபவித்து பார்த்தேன் காதலர்களின் ஊடல் கதை என்றாலும் பல காட்சிகள் ரசிக்கும் படியாகவே இருந்தது...
அந்த படத்தில் வரும் பெண்ணின் சிரிப்பும், முகமும் என்னை கவர்ந்தது... எப்படியோ மாட்டிக்கிட்டேன் படத்தில் ஒரு கால்டவுசரோடு நடக்கும் பாடலில் அந்த பெண்ணிண் இடுப்பும் சிறு தொப்பையும்... ஓகே நன்றாகவே இருக்கின்றது....

ஐயோ அவசரபட்டு அந்த பிள்ளைய வருனுச்சிபுட்டேனே, என் பொண்டாட்டி சோத்துல விஷத்தை வச்சிடுவாளே.......


விஷுவல் டேஸ்ட்....(நான் எடுத்தில் பிடித்து...)
சென்னை சென்ட்ரல் அருகில் உள்ள பழைய தங்கும் விடுதிகள்... வெள்ளை அடித்து கலர் சட்டை போட்டு்கொண்ட போது எடுத்தது....
அடையாறில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பி்ன் பறவை பார்வை கோணம்...
ஊட்டியில் ஜம்ப் செய்யும் இளம்பெண்... அந்த பெண் போட்ட வீல் சத்தம் இன்னும் என் காதுகளில்...

நான்வெஜ்....
ஜோக்...1
ஒரு கம்பெனியின் உள்ளே சுவரில் இருந்த வாசகம்...

நாம் எல்லோருடைய இழந்த தன்னம்பிக்கையை மீட்டு தருவோம்...தளர்ந்து போன மனதிற்க்கு மென்மையாய் தோள் கொடுப்போம்...அவர்கள் கண்களில் கர்வம் வரவைப்போம்... இப்படித்தான் அந்த பிரா கம்பெனியின் எல்லா சுவர்களிலும் எழுதி வைத்து இருந்தார்கள்...


ஜோக் ...2
அவனுக்கு செக்ஸ் என்றால் என்னவென்றே தெரியாமல் வளர்த்தான் அவன் அப்பன்...சரோஜதேவி,ஹெச் எம் டி,ஜோதி தியேட்டர், எதும் தெரியாது அவனுக்கு... நன்றாக பக்தி பழமக அவனை வளர்த்தார்... பிள்ளைகளுடன் சேர்ந்து கெட்டு போய்விடுவான் என்பதால் தன் மகனை பள்ளிக்கு அனுப்பவே இல்லை.., இன்றுவரை ஆனா ஆவன்னா ஒரு எழவும் தெரியாது...அவனுக்கு தெரிந்தது எல்லாம் கோவில், பிரசாதம்,குளம்,சாமி ஊர்வலம் அவ்வளவுதான்... இருப்பினும் தனக்கு பின் தன் சொத்துக்கு வாரிசு வேண்டி அவனை புரிந்து கொள்ள கூடிய பெண்ணாக பார்த்து அவனுக்கு கட்டி வைத்தார் அவன் அப்பா... தன் மருமகளிடம் அவனை இப்படி பக்தி பழமாக வளத்தற்க்கு மன்னிப்பு கேட்டார்... அவளும் சரி என்றால்... இருப்பினும் உடைகளையும் போது அவனுக்கு எப்படியும் மூட் வரும் என்று நம்பினால்... நெருக்கமான தன் நண்பியுடன் டிஸ்கஸ் செய்தால்... அவள் சொன்னால் உடலில் எந்த இடத்திலும் முடி வைத்துக்கொள்ளாதே... எல்லா வற்றையும் ஷேவ் செய்து விடு என்று சொல்ல... அவளும் அது போலவே செய்து முதலிரவு அறைக்கு வந்தாள்.... அவன் சேரில் கழுத்தில் உத்திராட்சத்துடனும், நெற்றியில் பட்டையுமாக, உட்கார்ந்து இருந்தான்...அவன் எதிரில் படுக்கை அருகில் வந்தாள்.... முதலில் மேலுடையை அகற்றினாள்... அவனிடத்தில் எந்த ரியாக்ஷனும் இல்லை...புயலுக்கு பின் ஒரு அமைதி இருக்குமே.. அது போல் இருந்தான்.. எந்த சலனமும் இல்லாமல் , இடுப்புக்கு கீழே உள்ள மிச்ச சொச்ச உடைகளையும் கலைந்தாள்... அவனிடத்தில் எந்த ரியாக்ஷனும் இல்லாததால் சற்றே சினுங்கி பெட்டில் நிர்வாணமாய் படுத்துக்கொண்டால்....சில நொடிகளில் அவன் சேரை விட்டு எழுந்தான்... அவனின் அசைவு அவளுக்கு சந்தோஷத்தை கொடுத்தது...அவளை முழுதாய் பார்த்தான் அவன் பார்வையை அவள் ரசித்தாள்...அவன் அவனது சட்டைபையில் துழாவி ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்தான் கோவிலில் பார்த்த உண்டி ஞாபகத்துக்கு வர அதனுள் காசை தினித்த விட்டு படுக்கையை அவன் சுற்றி வர ஆரம்பித்தான்....

அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

(POWDER BLUE) 18+ துயரத்தின் துரத்தல்....





சிலர் செய்யும் வேலைகள் ரொம்பவும் வித்தயாசமானவை....நாம் அதே வேலைகளை எப்படி இப்படி முகம் சுலிக்காமல் செய்கின்றார்கள் என்று நினைக்கும் போது அந்த வேலைகள்தான் அவர்கள் பசியாற உதவுபவை...


சில பெண்கள் உடலை மூலதனமாக வைத்து வயிற்று பசி ஆற்றுகின்றார்கள்...ஆனால் அவர்கள் நிலை பற்றிநாம் கவலை கொள்வதே இல்லை.... அவர்கள் அந்த பணம் பெற எவ்வளவு வலிகளை சமக்கின்றார்கள் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்....


இளமையில் செய்த தவறுகளுக்கு சாகும் வயதில் பிராய சித்தம் தேட சிலர் முற்படுவார்கள்... இப்படி நிறைய பேருக்கு வாழ்வின் வலிகளை எதி்ர்கொள்கின்றவர்களை பற்றி கதை இது....



.... அவனின் வேலை சவப்பெட்டி செய்து விற்பதும் இறந்த உடல்களை அழகுபடுத்தி கொடுப்பது அவன் வேலை...

அவன் அந்த அவலையை ரசித்து செய்கின்றான்.... அவனுக்கு கடன் வேண்டும் எல்லா பேங்குகளிலும் கடன் கேட்க கை விரிக்கின்றது.....

அவன் மனைவியை ரொம்பவும் நேசிப்பவன்... அவனும் மனைவியும் காரில் போகும் போது விபத்தில் அவன் மனைவியை இழக்கின்றான் அதிலிருந்து காரில் ஒரு துப்பாக்கி மற்றும் நிறைய பணத்தை வைத்துக்கொண்டு ,என்னை தயவு செய்து கொன்றுவிட்டு இந்த பணத்தை எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லுகின்றான்....

கேன்சர் உள்ள ஒருவன்... மரணம் அவனை துரத்திக்கொண்டு இருக்கின்றது... எந்த சேரத்திலும் அவன் இறந்து விடுவான் என்பதை அறிவிக்கும் விதமாக எப்போதும் அவன் மூக்கில் ரத்தம் எட்டிப்பார்த்துக்கொண்டு இருக்கும்....

அடைகளை அவிழ்த்து போட்டு வாழ்க்கை நடத்தும் தாய் அவளின் மகன் மூன்று மாதமாய் கோமாவில் இருக்கின்றான்... அவன் கண் சிமிட்ட மறந்து போய் பல மாதங்களாய் அப்படியே இருக்கின்றான்....செக்ஸ் கிளப்பில் வேலை செய்வது அவளுக்கு அறவே பிடிக்கா விட்டாலும் தன் மகன் மருத்துவ செலவுக்கும் வாழ்க்கை நடத்தவும் பணம் தேவையாய் இருக்கின்றது.... (நம்ம ஊராக இருந்தால் இந்த பொழப்புக்கு பத்து பாத்திரம் தேய்த்து உயிர்பிழைக்கலாம் என்பார்கள்... சொல்பவர்கள் யாரும் அடுத்த வீட்டில் பாத்திரம் கழுவும் அனுபவத்தை பெறாதவர்தகள்...)


ஆணாக பிறந்து பெண்ணாக மாறும் ஒருவனின் மன வலிகள்....


கணவனோடு விவகாரத்து பெற்று தனியாக வாழும் ஓட்டலில் சப்ளையர் வேலை செய்யும் பெண்மணி....

இப்படி நிறை கதாபாத்திரங்களை சொல்லிக்கொண்டே போகலாம் இவர்கள் எல்லாம் எப்படி ஒரே நேர்கோட்டில் வருகின்றார்கள் என்பதையும்... இவர்களுக்குள் என்ன சம்பந்தம் என்பதை திரைக்கதையில் எப்படி அவிழ்கின்றார் இப்படத்தின் இயக்குநர் எனபதையும்... அவர் எப்படி அவிழ்க்முற்படுகின்றார் என்பதை பவுடர் பூளு படத்தில் பாருங்கள்......

படத்தின் சுவாரஸ்யங்கள் சில.....

உணர்வுகளின் வலியையும் மிக அழகாய் சொல்ல வந்த படம் இது அதில் நிறையவே வெற்றி பெற்று இருக்கின்றார்கள் என்பதை சொல்லத்தான் வேண்டும்....

தினமும் தன் கோமா மகனுடன் போனில் ஸ்பிக்கர் விழியே பேசுவதை வழக்கமாக கொண்டவளுக்கு போனுக்கு சில்லரை இல்லாமல் தவிக்கும் முதல் காட்சியும் அதன் பின் அந்த குழந்தைக்கு கோமா என்று காட்டும காட்சி மிகவும் அழுகு...

படத்தில் நிறைய அரை நிர்வாண காட்சிகள் உண்டு,, அதனால் குடும்பத்துடன் பார்க்கும் போது ஜாக்கிரதை...

ஒரு அப்பா வயதுடையவனுடன் அந்த விபச்சார பெண்ணுடன் பேச விரும்ப.. தன்னேடு படுக்கையை பகிர வந்தவன் என்று நினைத்து அவள் அவனுடன் பகிரும் முன் போர் பிளேயில் ஈடுபட அப்போது அவன் என் கால்களுக்கு வயதாகி விட்டது என்று சொல்ல... ஆனால் நிக்க முடியாத அளவுக்கு இன்னும் வலு விழக்கவில்லை என்று அவள் சொல்ல... எனக்கு உன்னிடம் கொஞசம் பேச வேண்டும் என்று சொல்ல... வாயால் மட்டும் பேசிக்கொண்டு இருந்தால் எனக்கு பணம் கிடைக்காது என்று சொல்லும் காட்சி மிகவும் அற்புமான காட்சி...


கிருஸ்மசுக்க தன் மகனுடன் விடுமுறையை கழிக்க வேண்டும் என்று சொல்லும் பெண்ணை பண்டிகை நாட்களில் எனது நண்பர்கள் வருவார்கள் என்பதால் விடுமுறை தர முடியாது என்பதை சொல்லும் போது நடக்கும்... அந்த காட்சி ரகம்...

எப்போதுதே அவிழ்த்து காட்டி பழக்கபட்டவள் அவள்.... காதலனுடன் இருக்கும் போது அவள் அவிழ்க்காமல் இருக்க அவன் உடை களைவது கவிதை... அதற்கு முன் அவர்கள் முத்தமிடும் போது பின்னனி்யில் உள்ள வால்பேப்பர்.. ஒரிஜினல் போல் லைட்டிங் அமைத்து இருப்பது அழகு....

அந்த பெண் உனது பாத்ரூம் உபயோகிக்கின்றேன் என்ற சொல்லி விட்டு அவள் போதைக்காக பவுடர் உறுஞ்ச... இங்கே இவன் உயிர் வாழ ஆஸ்துமாவுக்காக இன்ஹேலர் உறியும் காட்சி சின்க் சூப்பர்...

அதே போல் அவள் நிர்வாண நடனம் ஆடும் கிளப்புக்கு வரும் போது அவன் பார்க்கின்றான் என்றதும் தன் திறந்த மார்பகத்தை மறைத்து கொண்டு அந்த ஷோவில் இருந்து அழுது வெளியேறுவத அழகான காட்சி....

அதே போல் தன் மகன் கண் சிமிட்டினான் என்று சொல்வதை நம்பாத டாக்டரிடம் என் குழந்தை எனக்கு வேண்டும் என்று சொல்லி அதற்க்காக என் உடலை எடுத்து கொள்கின்றாயா? என்ற கேட்கும் காட்சி காலம் காலமாய் திரைபடங்களில் வைக்கும் காட்சி என்றாலும்....நம் வாழ்க்கையின் சில அடிப்படை வாழ்க்கை முறை மாறாது என்பதற்கக்கான காட்சி அது...நான் என்ன ஒரு சேஞ்சுக்கு இடது கையால் சாப்பிட்டு பார்ப்போம் என்று.. சாப்பிட்டு நம் வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள போகின்றோமா என்ன????,


Forest Whitaker இந்த படத்தில் நடித்து இருந்தாலும் அவரே தயாரிப்பு அவதாரம் எடுத்தாலும் ... எல்லா படத்திலும் இது போல் சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு வருவது எரிச்சலை கிளப்புகின்றது.....


படத்தின் கடைசி காட்சிகள் க்ளிஷே காட்சிகளாய் மனதிற்க்கு பட்டாலும் அற்புதமான காட்சிகள் அவை....

படம் முழுவதும் கதாநாயகி போட்டு கொண்டு இருக்கும் உடைஒரு பக்கம் இறக்கி கொண்டே படம் முழுவதும் வருவார்... அதுதான் எல் ஏ நகர ஸ்டைல் போல் இருக்கின்றது.... மேலே படத்தில் பாருங்கள்...


படத்தின் நாம் சந்தித்த எல்லா கேரக்டர்களுக்கும் ஒரு முடிவை இயக்குனர் வைத்து இருக்கின்றார்

படத்தின் வீடியோ....
படத்தின் குழுவினர் விபரம்....

Directed by Timothy Linh Bui
Produced by Timothy Linh Bui
Forest Whitaker
Ross M. Dinerstein
Bobby Schwartz
Tracee Stanley-Newell
Written by Timothy Linh Bui
Starring Jessica Biel
Forest Whitaker
Patrick Swayze
Ray Liotta
Eddie Redmayne
Alejandro Romero
Distributed by Speakeasy Releasing
Release date(s) May 8, 2009 (limited)
June 9, 2009 (Blu-ray/DVD)[1]
Running time 106 minutes
Country United States
Language English


அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner