சென்னையில் ஒரு கோடி கொடுத்து வீடு வாங்கனவன் எல்லாம் தெருகோடியில நிக்கறானுங்க....


மும்பை குண்டு வெடிப்பும் பாரபட்சம் உள்ள வட இந்திய மீடியாவும் சென்னை பெருமழை பற்றி பெரிதாய் அலட்டிக்கொள்ளவல்லை. முன்னாள் பிரதமர் விபிசிங் இறந்ததை கூட இரண்டு நிமிடம் சொல்ல மனம் வராத மீடியாக்கள்தான் வட இந்திய மீடியாக்கள்.


சென்னையில் ஆறு மாதங்களுக்கு முன்பு சென்னை வடபழனியை அடுத்த ராமாபுரம் , ஆழ்வார் திருநகர், தேவிகுப்பம் , வளசரவாக்கம், ஆலபாக்கம், இந்த பக்கம்வேளச்சேரி ராம்நகர், பள்ளிக்கரனை, பம்மல் மடிப்பாக்கம் போன்ற இடங்களில் எல்லாம் வீட்டு வாடகை என்பது டபுள் பெட்ரும் 10,000 ஒரு லட்சரூபாய் அட்வான்ஸ் தொகை கொடுத்து குடிபுகுந்தார்கள்.

அதுவும் சொந்தமாக கிரவுண்டு வாங்கி வீடு கட்டடும் போது ஒரு கோடி முதலிடு செய்தார்கள். வாங்கிய இடங்கள் எல்லாம் ஏரி மற்றும் தாழ்வான பகுதிகள். ஒரு கோடி கொடுதது வாங்ககியவர்கள் எல்லாம் தெரு கோடிக்கு வந்துஇருக்கிறாப்கள்.

தண்ணீர் உள்ள இடத்தில் இருந்து ஒரு ஆளை அழைத்து வர 80ரூபாய் வாங்கி அழைத்து வந்தார்கள் ஆட்டோ டிரைவர்கள் .

இப்போது மட்டும் அல்ல எப்போதுமே சென்னை ஆட்டோகாரர்கள் போல் நியாயமானவர்கள், சட்டத்துக்க கட்டுபட்டுநடப்பவர்கள் இநத உலகத்தில் இருக்க முடியாது.

பைக்கில் போன ரோட்டில் குழந்தை குட்டிகளுடன் போட்டில் போய் கொண்டு இருக்கிறார்கள் இந்த முதலிட்டை சொந்த ஊரில் செய்து இருந்தாலும் 25 டபுள் பெட்ரூம் தனி வீட்டுக்கு சொந்தக்காரகளாக இருந்து இருக்கலாம்.


அலச்சல்கார வீட்டு ஓனர்கள் பணம் வாங்கி பர்க்கெட்டில் போட்டதும் அந்த பக்கமே வர வில்லை இந்த ஆட்சி மட்டும் இல்லை எந்த ஆட்சியும் வெள்ளம் வரும் போது இரண்டாயிரம் பணம் பத்து கிலோ அரிசி கொடுப்பதோடு தன் கடமையை முடித்து கொள்கிறது.

அதற்க்கான உள் கட்டமைப்பை மேம்படுத்துவதும் தொலை நோக்கு பார்வையும் இவர்களிடம் இல்ல இல்லை.
கவுன்ஸ்லர்களும் காண்ட்ராக்ட் காரர்களும் கடன் இழவே என்று ரோடு போடுவதும் சாக்கடை கட்டுவதும் ஏதும் நிரந்தர தீர்வை தர இயலவில்லை.


ஆட்சியாளர்கள் போயஸ் கார்டனிலும் அதன் எதிர்புறம் உள்ள கோபால புரத்திலும் மனைவி நண்பியோடு இருக்கம் போது புறநகர் மக்கள்பற்றி அவர்களுக்கு என்ன கவலை வந்து விட போகிறது.


அன்புடன்/ஜாக்கிசேகர்.

எங்கே போனார்கள் அந்த பொட்டை பசங்க???


அமிதாப்பச்சன் ஏதாவது சொல்லி விட்டால் போதும் அவ்வளவுதான் ராஜ்தாக்கரே ஆட்கள் நிரா யுதபானி மும்பை மக்களை உண்டு இல்லை என்று செய்து விடுவார்கள்.

ஒரு அம்பாசிட்டர், ஒரு அரசு பேருந்தை எறித்து இருபது முப்பது கடைகளை உடைத்தால்தான் அவர்களுக்கு நிம்மதி தரும்.
அதே போல் இப்போதும் பொட்டை பொறுக்கிகள்தான் ஏகே 47 எடுத்து வந்தார்கள். இந்த பொட்டைகள் பானிபூரி சாப்பிட்டு என்.டி.டிவி பார்த்து கொண்டு இருந்தார்கள் இப்போது போய் ஏதாவது புடுங்க வேண்டியது தானே.

இவர்கள் பருப்பு அங்கே வேக வாய்பில்லை. வேக வைக்க நினைத்தாலும் நினைக்கும் போதே பயிறுகள் இறைந்து விடும்.



ஏகே 47 எடுத்துக்கொண்டு கடல் வழியாக தீவரவாதிகள் வந்த போது, ராஜ் தாக்கரே இது எங்கள் மஹாராஷ்ட்டிரா மண் , இந்த தீவிரவாதிகளை நாங்கள்தான் விரட்டுவோம். எங்கள் மண்ணின் மைந்தர்கள்தான் இதை புடுங்குவார்கள் வேறு யாரும் புடு்ங்க வேண்டாம் என்று சொல்ல வேண்டியதுதானே.


எங்ககிருந்தோ எந்த மாநிலத்தில் இருந்தோ வந்த கமாண்டோக்கள் மாநில எல்லை பார்க்காமல்உயிர் துறந்து எல்லோரையும் காப்பாற்றி நிலமையை கட்டுக்குள் எடுதது வந்தார்கள்.

அந்த பொட்டை பசங்க அமிதாப்பச்சன் பேனர் கிழிக்கவும் ஐஸ்வர்யாராய் போஸ்டருக்கு மீசை வரையவும் டுவீலரில் வரும் நிராயுதபானி குடிமகனை மிரட்டி இன்பம் காணவும்தான் லாயக்கு.....

அன்புடன்/ஜாக்கிசேகர்

Anukokunda Oka Roju 2005 (பாகம்/9) உலக தரத்தில் ஒரு தெலுங்கு சினிமா.



பொதுவாக தெலுங்கு படம் என்பது1980களில் பெல்பாட்டம் போட்டு பாக்கியராஜ் போடுவது போல் பெரிய கண்ணாடி அணிந்து பாக்கியராஜ் போலவே உடற்பயிற்ச்சி ஆட்டம் ஆடுவார்கள் அந்த கால கட்டத்து தெலுங்கு ஹிரோக்கள்.


தெலுங்கு ஹிரோயின்கள் கட்டாயம் விதவை டிரஸ் ஆன, மன்னிக்கவும் வெள்ளை உடை உடுத்தி மழையில் நனைய வைப்பார்கள். அப்போது கண்டிப்பாக அவர்கள் கருப்பு பிரா அல்லது சிவப்பு பிரா அணிந்து இருப்பார்கள், அவர்களுக்கு
பின்புறம் என் ஆம்மா வயது ஒத்த பெண்கள் பெருத்த தொப்பையுடன் டூபீஸ் மாட்டிக்கொண்டு ஆடுவார்கள்.


இடுப்பில் பவுன் கலரில் ஒரு மினுக்கும் கயிறு அணிந்து இருப்பார்கள், லைட்டாக தொப்புள் பக்கம் லேசாக நீர்த்திவலைகள் இருக்க எங்கிருந்தோ வரும் ஆப்பிள் அல்லது ஆரஞ்சு பழம் தொப்புளில் அடிக்க சம்மா அதிருதில்லை கணக்காக தொப்புள் அதிரும்.

இப்படிதான் தெலுங்கு படங்களை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் தலைமுறை மாற்றம் மெல்ல மாறியதும் இளம் இயக்குநர்கள் தங்கள் கையில் தெலுங்கு சினிமாவை எடுத்துக்கொண்டு இப்போது வெற்றி நடை போடுகிறார்கள். அப்படி வெற்றி நடை போட்டபடம்தான் ANUKOKUNDA OKA ROJU.


படித்து கொண்டே பாடகி சான்ஸ் தேடும் சர்மிலி... அம்மா அப்பா சின்ன வயதிலேயே டிவோர்ஸ் வாங்கி பிரிந்து விட்டார்கள். அப்பா மற்றும் ஸ்டெப்மதர்  மற்றும் அவர்களின் இரண்டு  குழந்தைகளோடு   வீட்டில் தங்கி படிக்கிறாள். சித்தி  கொடுமைகாரி. எப்படியாவது சினிமாவில் பெரிய பாடகி ஆகி விட வேண்டும என்று தொடர்ந்து முயற்ச்சிசெய்து வருபவள். அவ்வப்போது கோரஸ்ம் பாடுவாள்.

ஒரு நாள்  அப்பா அவர்  குடும்பத்துடன் வெளியூர் செல்ல நண்பி ஒருத்தி பேச்சை கேட்டு இரவு பார்ட்டியில் வியாழக்கிழமை இரவு கலந்து கொள்கிறாள். மறுநாள் எப்போதும் போல் கல்லூரி செல்ல, எப்போதும் கூட்டம் இருக்கும் பேருந்தில் அன்று கூட்டம் சுத்தமாக இல்லை. கல்லூரிக்கு அவசர அவசரமாக செல்ல அங்கும் யாரும் இல்லை. ஏன் யாரும் இல்லை என்று பியுனிடம் கேட்க இன்று சனிக்கிழமை என்று சொல்ல ,அவளுக்கு தூக்கிவாரி போட படம்பார்க்கும் நமக்கும்தான்.

அந்த ஒருநாள் என்ன ஆனது? அந்த ஒருநாள் எங்கே இருந்தாள்? அந்த ஒருநாள் அவள் நினைவு அடுக்கில் ஏன் இல்லாமல் போனது? வயசுப்பெண்ணாயிற்றே அந்த சுய நினைவு இல்லாத அந்த தினத்தில் அவள் கற்புடன்தான் இருந்தாளா? என தெரிய ANUKOKUNDA OKA ROJU படம் பார்க்கவும்

படத்தை பற்றி சில சுவாரஸ்யங்கள் சில.....

படத்தி்ன் இன்ஸ்பெக்டர் வேடம் ஏற்று இருப்பது கெஜபதி பாபு. டாக்ஸி டிரைவராக செஷான்க் இருவரும் அற்புதமாக நடித்து இருப்பார்கள்.

இந்த படத்தின் ஓப்பனிங் சீன் வழக்கமான தெலுங்கு படம் போல் இல்லாமல் ரொம்ப அற்புதமாக இருக்கும் இதுவே இது வித்யாசமான படம் என்று சொல்ல வைக்கும்.



குறைந்த முதலீட்டில் நட்சத்திடர அந்தஸ்த்து இல்லாத ஆட்களை வைத்து காமெடி கலந்த சஸ்பென்ஸ் திரில்லர் தந்த இயக்குநர் அதுவும் தெலுங்கில் இப்படி ஒரு படம் எடுத்த Chandra Sekhar Yeleti
என் பெருமைக்கு உரியவர்.

தொடந்து தெலுங்கு படத்தை பற்றிய என் எண்ணவோட்டத்தை மாற்றிய இயக்குநர் என்பேன்.

படத்தின் பெரியபலம் இந்த படம் வேறு எந்த படத்தையும் ஞாபகப்படுததாது.


எவராலும் கண்டுபிடிக்க முடியாத திரைக்கதை. எல்லா கேரக்டர்களும் பிரமாத படு்த்தியிருப்பார்கள்.

முக்கியமாக அந்த இங்கிலிஷ் வாத்தியார், சாமியார் இருவரும்


கவர்ச்சி சர்மிலி இதில் நடிப்பில் பின்னி பெடலெடுத்து இருப்பபார்.

கீரவானி பின்னனி இசை படத்துக்குமேலும் மெருகு....

இந்த படத்தின் ஒளிப்பதிவு அவய்லபுள் லைட்டில் எடுக்கப்பட்டது போல் தோற்றம் இருப்பதால் இந்த படத்துக்கு அது ரியாலிட்டி எபெக்ட் கொடுக்கின்றது.

இந்த படத்தின் இயக்குநர் இதற்க்கு முன் அய்த்தே என்ற தெலுங்கு படம்தான் இவரின் முதல் படம் அதுதான் தமிழில் நாம் என்ற படமாக வந்தது..

இனிமே யாரும் ஹாலிவுட் ஹாலிவுட்தான் என்று தயவு செய்து சொல்லாதீர்கள். நம்ம ஆட்களை முதல்ல மதிக்க கத்துக்கோங்க



இப்படி ஒரு தெலுங்கு படம் நீங்க பாத்திருக்க வாய்பில்லைதான் என்று நான் அடித்து சொல்லுவேன்




eevi rating: 3.5/5
Punchline
: Anukunnate Oka Manchi Cinema
Genre:
Thriller
Type:
Straight
Banner:
Just Yellow Media
Cast
: Charmy, Sashank, Pavan Malhotra, Harsha Vardhan, Narsing Yadav, Pooja Bharati, Jagga Rao, Sivannarayana, Ravi Prakash, Kaushal, Amit, Pingpong, Vasu Inturi, Sandra, Jayalakshmi, Baby Roopika

Dialogues: Gangaraju Gunnam
Lyrics: Sirivennela, MM Keeravani, Gangaraju Gunnam & Marut
Music: MM Keeravani
Choreography: Nixon
Cinematography: Sarvesh Murari
Stunts: Ramana
Editing: Mohan - Rama Rao
Art: Ravindar R

Costumes: Rama Vastala & Sandhya Ravi
Presents: Ramaraju D
Executive Producer: Urmila Gunnam
Story - Screenplay - Direction: Chandra Sekhar Yeleti
Producers: Gangaraju Gunnam & Venkat Dega

Theatrical release date: 30th June 2005


அன்புடன்/ ஜாக்கிசேகர்

மும்பை பற்றி எறிகிறது....

நேற்று இரவு பதினோரு மணியளவில் மும்பையில் தாஜ் ஓபராய் ஓட்டல்களில் தீவிரவாதிகள் குண்டு வெடிப்பு துப்பாக்கி தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள் .இதுவரை 80 பேர் பலி , 7 காவல் துறையினர் பலியாகி உள்ளனர். இன்னும் இடங்களில் குண்டு வெடிப்பும் நிகழ்த்தி உள்ளனர். இந்த பதிவு எழுதிக் கொண்டு இருக்கும் வரை மும்பை ஒபராய் ஓட்டலில் இன்னும் முழுமையாக காவல்துறை கட்டுப்பாட்டில் வர வில்லை. இராணுவம் ஒபராய் ஓட்டலில் நுழைந்து இருக்கிறது.




முன்பு எல்லாம் குண்டு வைத்து தீவிரவாதிகள் தலைமறைவு ஆனார்கள் இப்போதெல்லாம் டைஹார்டு படம் போல் இருபது தீவிரவாதிகள் ஒன்று சேர்ந்து குண்டு வெடிப்பும் துப்பாக்கி சூடு நடத்துகிறார்கள். வழக்கம் போல் மத்திய அரசின் உளவு துறை மயிர் புடுங்கி கொண்டு இருக்கிறது.

என்ன ஒரே ஆறுதல் அண்ணாடங்காட்சிகள் பயணம் செய்யும் பேருந்து, ரயில், மார்கெட் போன்ற இடங்களில் குண்டு வைக்காமல் பைவ் ஸ்டார் ஓட்டல்களில் அட்டாக் செய்து இருக்கிறார்கள்.


ஒருவேளை மேல் மட்டத்து மக்களுக்கு வலிகளையும் வேதனைகளையும் புரியவைப்பதற்க்காகவோ???

பார்ப்போம் மன்மோகன் அரசு இன்னும் எத்தனை பேரை மண்ணுக்கு அனுப்ப போகிறது என்று?


இந்த இடத்தில் என் பழைய பதிவை இணைக்கிறேன். அது எப்போதும் இந்தியாவுக்கு பொறுந்தும்

நேற்று அசாம் கவுகாத்தியில் குண்டு வெடித்து 70 பேர் பலியானார்கள்(30/10/2008) இந்த பதிவு டெல்லி குண்டு வெடிப்பின் போது எழுதியது. இப்போதும் எப்போதும் இந்தியாவிற்க்கு பொறுந்தும்.....

இன்னும் குண்டு வெடிக்கும் போதெல்லாம் இதே பதிவை உயிர் சேதம் மற்றும் நாளை மடடும் மாற்றி போடலாம் என்று இருக்கிறேன். எனெனில் இத்தனை பலியாகி இருக்கிறார்கள் உளவுதுறை என்ன செய்கிறது? அவர்களுக்கு கெபடுககும் சம்பளம் எல்லாம் விழலுக்கு இறைத்த நீர்தானா?

இதற்க்கு மேல் பழைய பதிவை படியுங்கள் இது எப்போதும் பொறுந்துவது போல்தான் எழுதியுள்ளேன்


நேற்று முன் தினம் தலைநகர் டெல்லியில் நடந்த குண்டு வெடிப்பில் இதுவரை 30 பேர் உடல் சிதறி மடற்றும் 100க்கு மேற்பட்டவர்கள் பலியாக உள்ளனர்.



சில மாதங்களுக்கு முன் அகமதாபாத், பெங்களுர், சூரத் போன்ற இடக்ளில் குண்டு வெடித்து இறந்து போனது ஞாபகம் இருக்கலாம் அல்லது தமிழனாக இருக்கும் பட்சத்தில் அது மறந்து போய் இருக்கலாம்.இந்தியனாக இருக்கும் பட்சத்தில் அதை சகித்து கொண்டு இருக்கலாம். அல்லது பொதுவானாக இந்தியனாக இருந்தால் பக்கத்து வீட்டில்தானே நடந்தது நமக்கேன் கவலை என்ற உயர்ந்த பண்பு காரணமாகவும் நாம் மறந்து போய் இருக்கலாம்,


பெங்களுர், சூரத், அகமதாபத் போன்ற இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்ந்த போது எப்படி பொங்கி எழுந்து தீவரவாதத்தை அடக்குவதாக பாவித்து என்ன சூலுரைத்தார்களோ, அதே போல்தான் இப்போதும் பெரிய தலைவர்கள் அனைவரும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள்.


இதுவரை தீவரவாதத்தை அடக்க எந்த ஒரு முன் ஏற்பாடும் எடுத்ததாகதெரியவில்லை. உளவுதுறை என்ன மயிர் புடுங்கி கொண்டு இருக்கிறது என்பது புரியவில்லை.

இந்தியாவில் ஒவ்வோரு முறை குண்டு வெடிப்பின் போது கீழுள்ளவை நிகழும்...

1. குண்டு வெடிப்பு நிகழ்ந்ததும் உடல்களை உடனே அப்புறபடுத்தி உடனே லட்ச ரூபாய் நிவாரணம் அறிவிப்பார்கள்

2. காயம் பட்டவர்களை நேரில் பார்த்து ஆறுதல் கூறி ஒரு போட்டோ எடுத்து அதனை இந்தியா முழுவதும் வெளிவரும் பிராதன பத்திரிக்கைகளில் முதல் பக்கத்தில் வரும் படிபிரதமர் வட்டாரத்தினர் பார்த்து கொள்வார்கள்.

3.சோனியா காந்தியும் நேரில் போய் பார்க்கிறார் என்றால் குண்டு வெடிப்பு சேதம் அதிகம் என்று அர்த்தம்.

4. அத்வானி பொடா சட்டம் இருந்தால் தீவிரவாதமே நிகழாது என்று பேட்டி கொடுப்பார்.

5. இந்திய மீடியாக்கள் நான்கு நாட்கள் நாம் இருப்பது இந்தியாவிலா அல்லது இலங்கையிலா என்று தற்போது விஸ்காம் முடித்த வெள்ளை தோல் பெண்களை வைத்து மூண்றுநாள் ஓப்பாரி வைத்து விட்டு சல்மான்கான் யார் உதட்டில் இப்போது ஈரப்டுத்தி கொள்கிறார் என்பதை ஆராய போய் விடுகிறார்கள்.

6.கொஞ்சம் கோபம் உள்ளவர்கள் பத்திரிக்கையிலும் பிளாக்கிலும் எழுதி தன் கோபத்தை தீர்த்து கொள்கிறார்கள்.

7. எல்லா தலைவர்களும் கண்டனம் தெரிவிப்பார்கள்.

8.குண்டு வெடிப்பில் தன் உற்றாரை இழந்து வாடும் உறவினர்கள் மார்பில் அடித்துகொண்டு அழும் காட்சி மறுநாள் தினசரிகளில் நிச்சயம் இடம்பெறும்.



9. ஒருவாரம் கழித்து இறந்தவர் ஒருவருடைய சோக செய்தி வாரப் பத்திரிக்கையில் இடம்பெறும்.



10. இந்தியர்கள் பத்திரிக்கை, தொலைகாட்சி, வாரபத்திரிக்கைகளில் குண்டு வெடிப்பு செய்திகளை படித்து விட்டு பார்த்து விட்டு, த்சோ த்சோ என்று சொல்வார்கள் .


அடுத்த குண்டு வெடிப்பு நடந்ததும் இதே செயல்கள் இந்தியாவில் நிச்சயம் நடைபெறும் இந்தியர்கள் த்சோ, த்சோ சொல்ல காத்து இருப்பார்கள்...

அன்புடன்/ஜாக்கிசேகர்

(பாகம்/8) மதிப்பில்லாத காதல். priceless பிரெஞ்சு பட விமர்சனம்.



நான் முதல் முதல் எழுதிய கவிதை

காதல் புனிதமானது
தெய்வீகமானதும் கூட
என் வீட்டு சகோதரிகள்
காதல்வயப்படாதவரை......

என்று அந்த வயதில் காதல் பற்றிய புரிதல் இல்லாமல் எழுதியது. நாட்கள் நகர்ந்தன என் திருமணமும் காதல் திருமணத்தில் முடிந்தது. அதுவும் ஒரு வருடம் இரண்டு வருடம் அல்ல பத்து வருடங்கள்.


காதல் சக்தி வாய்ந்த விஷயம்தான். அது எந்தளவுக்கு என்பதுதான் பிரைஸ்லெஸ் படத்தின் கதை.

ஜேன் ஒரு பார் அட்டன்டர். நாளைய சோத்துக்கு ஜிங்கிஅடிப்பவன். ஒரு நாள் அந்த ஓட்டலில் இருந்த பாருக்கு நேரங்கெட்ட நேரத்தில் ஐரின் வருகிறாள்,
அவளை பற்றி சில வரிகள் பார்த்தே ஆக வேண்டும்.


எண்ணை வளம் உள்ள நாடுகளின் மேல் எப்படி அமெரிக்காவுக்கு ஒரு கண்இருக்கிறதோ அதே போல் யாரிடம் எல்லாம் பணம் இருக்கிறதோ அவர்கள் மீது எல்லாம் ஐரினுக்கு ஒரு கண் இருக்கும், அதே போல் அவர்கள் கைபேசி எண் அவள்டைரியிலும் இருக்கும்.


பணம் ஒரு அறுபது வயது கிழவனிடம் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள் எதை பற்றியும் கவலை படாமல் முனியாண்டி விலாஸ் ஓட்டலில் காடை ,கவுதாரி ,சிக்கன், எல்லாம் ஒரு டிரேயில் வைத்து நீட்டுவார்களே அது போல் யாரிடம் வேண்டுமானாலும் தன் உடம்பை காட்டி விடுவாள்.

எல்ஐசி பாலிசி போல் அவளுக்கும் ஒரு பாலிஸி இருந்தது.
சுகத்துக்கு சுகம் பணத்துக்கு பணம் இதுதான் அந்த பெருமை வாய்ந்த பாலிஸி.


எத்தனையோ பேரிடம் எத்தனையோ இரவுகள் கழித்தாலும், ஜேன் வேலை செய்யும் ஓட்டலுக்கு அவள் வந்தது அறுபது வயது கிழவருடன்.

கிழவர் ரெண்டு பெக் போட்டதும் மட்டையாகி விட அன்று பார்த்து அவளுக்கு பர்த்டே.
கம்பெனிக்கு வந்த கிழவன் மட்டையானதால் சோகத்துடன் பாருக்குவர அங்கு ஜென் தவிர வேறு யாருமில்லை.


ஐரின்ஜேனை கம்பல் செய்து இரண்டு பெக் கம்பெனி கொடுக்க சொல்ல , தேவதை போன்ற பெண் கம்பனி கொடுக்க சொல்லும் போது யார்தான் கம்பெனி கொடுக்காமல் இருக்க முடியும்....

அது கடைசியில் இரண்டு பேர் உடம்பிலும் ஒட்டு துணி கூட இல்லாமல் செய்ய, அது அந்த கிழவனுக்கு தெரிய வர, அப்புறம் அந்த விஷயம் அந்த ஓட்டடல் முதலாளி்க்கு தெரிய வர கிழவன் அவளை கழட்டி விட, ஓட்டல் நிர்வாகம் இவனை கழட்டி விட இருவரும் நடுதெரு நாராயணனாக நடுத்தெருவில் நிற்க்கிறார்கள்.


ஐரின் தன் செய்த செயலை நினைத்து வருந்தி அடுத்த ஆளை தேடி போக, ருசி கண்ட பூனையான ஜேன் அவள் பின்னாடியே வர அடுத்த வேளை சோறும் தங்க இடமும் இல்லாத இருவரும் என்ன ஆனார்கள் அவன் காதல் கை கூடியதா?. அவன் காதலை அவள் ஏற்றுக்கொண்டாளா? என்பதை காமெடி கலந்த விறுவிறப்புடன் சொல்லி இருக்கிறார் இயக்குநர்Pierre Salvadori


படத்தை பற்றி சவாரஸ்யமான சில வரிகள்....

ஒரு சின்ன முடிச்சை வைத்து காமெடி கலந்து ரொம்ப அற்புதமாக லோ பட்ஜெட் படமாக இயக்கி இருக்கிறார் இயக்குநர்.


எவ்வளவுதான் ஜெனை ஜரின் உதாசினப்படுத்தினாலும். கடைசி கை இருப்பாக ஒரு யூரோ நாணயத்தை கொடுத்து பத்து செகன்டு உன்னைபார்த்து கொள்கிறேன் என்று சொல்ல அவள் அந்த ஒரு யூரோ பணத்தையும் வாங்கி கொண்டு பத்து செகண்டு முடிந்து விட்டது என்று சொல்லி அவள் நகர அவளை காதலுடன் பார்க்கும் நாயகனை கோவில்கட்டி கும்பிடலாம்.

காதல் வயப்பட்டவர்கள் இந்த படத்தை மிகவும் ரசித்து பார்ப்பார்கள்.

நாளைய சோத்துக்கு வழி இல்லாத நாயகன் நம்பிக்கையுடன் அவளை தொடரும் போது what ever may happen but life must go on.... என்ற வரி ஞாபகத்துக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை

நாயகன் காக்டெயில் கலந்து அவளுக்கு கொடுக்க அது நிறைய பெக் சென்றுவிட்டதை சிறு குடைமூலம் விளக்கியிருப்பார் இயக்குநர்.

நல்ல படம் பார்த்து நாளாயி்ற்று என்று வருத்தப்படுபவர்களுக்கு இந்த படம் அந்த ஏக்கத்தை பூர்த்தி செய்ய வல்லது.


Director: Pierre Salvadori

Cast: Audrey Tautou, Gad Elmaleh, Marie-Christine Adam, Vernon Dobtcheff full cast

Rated: 12A

Duration: 106 mins

UK Release: Jun 13 2008
US Release: Mar 28 2008

(பாகம்/7)பெண் பிறப்புறுப்பில் பல் வளர்ந்தால்? (teeth) ஆங்கில பட விமர்சனம்

கண்டிப்பாக வயது வந்தோறுக்கான பதிவு மற்றும் படம்.









மேட்டர் செய்யும் இடத்தில் ஒரு பெண்ணுக்கு பல் வளர்ந்து விட்டது என்று வைத்துக்கொள்ளுங்கள். என்ன ஆகும்.?

பொதுவாக வாயில் உள்ள பல் எதற்க்கு? கணமான பொருட்களை கடித்து பின்பு ருசிக்க அல்லவா.
அதுவே உங்கள் வாயில் தேவையில்லாமல் யாராவது விரல் விட்டால் நறுக்கென்று கடிக்கமாட்டீர்கள். அதுதான் அதேதான் இந்த படத்தின் மைய கரு.

உலகலாவிய அளவில் பெண்ணுக்கு எதிரான வன் கொடுமைகள் தினந்தோறும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் அவளை பாதுகாக்கும் ஆண் சமுகம் பாதுகாப்பு கொடுப்பதாக சொல்லி கொண்டு அவளை ருசி பார்த்து விடுகிறது.


இதில் நெருங்கிய உறவுகளான அண்ணன், தம்பி, கொழுந்தன், சில இடங்களில் அப்பா இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். பொதுவாக நிறைய ஆண்களுக்கு பெண் உறுப்பு போதையான விஷயமாக இருக்கிறது. அது போதை ஏறும் பட்சத்தில் மகள் என்று பார்க்காமல் , மருமகள் என்று பார்க்காமல் தன் இச்சையை தீர்த்துகொள்கிறான்.

ஒரு பெண் இடங்கொடுக்காமல் அந்த இடத்தை அடைய நினைப்பது உலகின் மிக கேவலமான செயல் என்பேன்.

இன்னும் சில அறிவு ஜிவிகள் ஒரு பெண்ணின் சம்மதம் இல்லாமல்எத்தனை பேர் இருந்தாலும் அவளை அடைய முடியாது என்று சொல்லபவர்களும் உண்டு.இரண்டு பேர் கையை பிடித்து கொண்டால் இரண்டு பேர் காலை பிடித்து கொண்டால் மேட்டர் ஓவர்.

இன்னும் முரண்டு பிடித்தால் அடி வயிற்றில் ஓங்கி ஒரு குத்து அவ்வளவுதான்.
( சாமி சத்தியமா எனக்கு எந்த அனுபவமும் இல்லங்க. ஒரு காட்டுவாசி ஆங்கில படத்தில் பார்த்தது.)

ஒரு பெண்ணின் பிறப்புறுப்பில் தெரிந்தோ தெரியாமலோ அல்லது தெய்வ குத்தத்துடனோ பல் முளைத்து விடுகிறது. அவள் சந்திக்கும் போராட்டங்களை சுவைபட, சற்று காமெடி சற்று திகிலுடன் சொல்லி இருக்கிறார் இயக்குநர்.

டான் பதினெட்டு வயது பருவ பெண். அப்பா, அம்மா மற்றும் அண்ணனுடன் வாழ்கிறாள். டான் கிருஸ்த்துவ மதத்தை பரப்பும் ஒரு பேச்சாளினி. அதனால் தான் எப்போதும் கற்புடன் வாழ வேண்டும என்ற கொள்கை உடையவள்.


டானின் அண்ணன் எப்போதும் செக்ஸ் பற்றிய எண்ணங்களோடு வாழ்பவன். சில நேரங்களில்அவன் அம்மாவின் எதிரே கூட செக்ஸ் வைத்து கொள்ள தயங்காதவன்.

அம்மா இரும்பும் போது கூட மருந்து கொடுக்காமல் செக்ஸ் வைத்து கொள்வான் என்றால் பார்த்து கொள்ளுங்களேன்.

டான் இயல்பிலேயே கூச்ச சுபாவம் மிக்கவள். அவளுக்கு டாபே என்ற நண்பன் பழக்க மாகிறான். ஒரு நாள் டான், டாபே மற்றும் சில நண்பர்களுடன் ஒரு அழகான நீர்வீழ்ச்சிக்கு செல்கிறாள். சில நாட்கள் கழித்து அதே நீர்வீ்ழ்ச்சி்க்கு டாபேயுடன் செல்ல நேர்கிறது.

ஒரு தனிமையான தருணத்தில் அவளை டாபே அடைய நினைக்கிறான். அவள் வேண்டாம் என்று எவ்வளவோ எடுத்து சொல்லியும் கெஞ்சியும் வலுக்கட்டயமாக அவளை புணர்கிறான்.

புணர்ந்து கொண்டு இருக்கும் போதே டாபே வீல் என்று கத்துகிறான். பயத்தில் ஆத்திரத்தில் எழுந்தவனுக்கு பிறப்புறுப்பே இல்லை அது பக்கத்தி்ல் துண்டாக கிடக்கிறது.

அதன் பிறகு அவள் தன் உடம்பில் இருக்கும் வித்தியாசத்துக்கு விடை காண டாக்ட்ரை போய் பார்க்கிறாள், டாக்டர் அவளை சோதனை செய்வதாக சொல்லி வாசலின் தடவி கை உறையுடன் டரன் பிறப்புறுப்பில் கை விடும போது டாக்டரின் கை விரல்களும் துண்டாகி விடுகின்றன.

டானுக்கு பிறப்புறுப்பில் வளர்ந்த பல் நீக்கப்பட்டதா? இன்னும் எத்தனை பேருடைய “அது” துண்டானது என்பதை திருட்டு டிவிடி அல்லது பர்மா பஜார் மார்க்கெட்டில் தேடிபிடித்து பார்க்கவும்.

படத்தை பற்றிய சில சுவாரஸ்யங்கள்....




உலகம் எங்கும் ஆண் மனநிலை என்ன என்பதை அற்புதமாக காட்டியிருக்கிறார்இயக்குநர் மிட்செல்.

இப்படி பிறப்புறுப்பில் பல் முளைக்கும் விஷயம் மட்டும் உண்மையாக இருந்தால் உலகில் எந்த பெண்ணும் அவள் விருப்பம் இன்றி புணரமுடியாது. அதே போல் உலகம் எங்கும் பெண்ணுக்கான வன்கொடுமை நடக்காது .

விபச்சாரம் எங்கும் நடக்காது.

உலகில் உள்ள ஆண்கள் பெண்ணை பயபக்தியுடன் நடத்திதான் ஆகவேண்டும். இல்லை என்றால் ஆணின் மேட்டர் கட் செய்யப்படும்.

ஜனத்தொகை உலகில் மட்டுப்படுத்தபடும். இன்னும் சொல்லி கொண்டே போகலாம்.

படத்தின் கிளைமாக்ஸ் சூப்பரோ சூப்பர். படம் பார்த்த ஜீவன்கள் பின்னுட்டத்தில் பதில் சொல்லி மகிழ வேண்டுமாய் கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்.



படத்தில் இந்த சப்ஜெக்ட்டுக்கு எந்த அளவுக்கு வேண்டுமானாலும் விரசம் காண்பித்து இருக்கலாம் ஆனால் அப்படி ஏதும் இல்லை. இதுவே ஒரு நல்ல இயக்குனருக்கான தகுதி.
இந்த படம் சுடன்ஸ் பிலிம் பெஸ்ட்டிவலில் இந்த படம் வெற்றி பெற்ற படம்.

இந்த படம் பார்த்த போது எனக்கு தோன்றிய எண்ணம் என்னவென்றால் உலகம் எங்கும் இருக்கும்பெண்களுக்கு பல் முளைக்கிறதோ இல்லையோ. இலங்கையில் உள்ள தமிழ் பெண்களுக்கு பல் முளைத்தால் சிங்கள ராணுவத்தின் கொடுர தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்ள ஏதுவாக இருக்கும் அல்லவா?. இது பைத்தியக்காரதனமான எண்ணம்தான் என்ன செய்வது.

இந்தியன் படத்தில் சுஜாதா வசனம் போல்.
புத்திக்கு தெரியும் விஷயம் மனதுக்கு தெரிவதில்லை.



Genres: Suspense/Horror and Teen
Running Time: 1 hr. 27 min.
Release Date: January 18th, 2008 (limited)
MPAA Rating: R for disturbing sequences involving sexuality and violence, language and some drug use.
Distributors:
Lionsgate, Roadside Attractions
U.S. Box Office: $346,342

(சன் டிவி)மாறன் சகோதரர்கள் சிந்திப்பார்களா???????


கலைஞரின் மனசாட்சியாக இருந்தவர் மறைந்த மத்திய அமைச்சர் முரசொலி மாறன். கடைசி வரை மாறன் தேவர் மகன் கமலஹாசன் போல் கலைஞரை எதிர்த்து பேசியதே இல்லை.

அவ்வப்போது கோபதாபங்கள் மாறனுக்கும் மாமா கலைஞருக்கும் ஏற்ப்பட்டாலும் ஒரு வாரம் கோபித்து கொண்டு மாமா வீட்டுக்கு வராமல் அப்புறம் தானே வந்து சமாதானப் படுத்திக்கொள்வார். எனென்றால் திட்டியது மாமா தானே?. ரோட்டில் போகிறவர் இல்லையே.

18 வருடங்களுக்கு முன்பு பூமாலை வீடியோ பத்திரிக்கை ஆரம்பித்து அதில் சினிமா செய்திகள் இயக்குநர் மற்றும் நடிகர் நடிகை பேட்டிகள் போன்றவையும் சினிமா தொடக்க விழாக்களையும் தொகுத்து வீடியோ கேசட்டாக தமிழகம் எங்கும் உள்ள வீடியோ கடைகளுக்கு வினியோகித்தார் கலா நிதி மாறன். அப்போது கடலூரில் ஒரு வீடியோ கடையில் நான் வேலை செய்துவந்தேன்.


ஆனால் வீடியோ கேசட் கடை காரர்கள் ஒன்று வாங்கி நிறைய காப்பி போட்டு விற்க்க அது தோல்வியில் முடிந்தது.

அதன் பிறகு சன் டிவி ஆரம்பித்து அது தமிழகத்தில் இன்றும் கோலாச்சி கொண்டு இருப்பதை யாவரும் அறிவர். அதற்க்கு கலாநிதி மாறனின் வியற்வையும் உழைப்பும், அவரின் அறிவும் திறமையுமே காரணம் என்றால் அது மிகையாகாது.

எல்லோருக்கும்தான் அறிவும் உழைப்பும் இருக்கிறது.
எல்லோராலும், எல்லோருக்கும் சாத்திய படுகிறதா? சாத்தியப்படாது. எனென்றால், திமுக என்ற அரசியல் செல்வாக்கு மட்டும் இல்லையென்றால் ஆசியாவின் இளம் தொழில் அதிபர் பட்டம் கிடைத்து இருக்குமா?


ஜெயா டிவிக்கு கூட அரசியல் செல்வாக்கு இருந்தது.
ஆனால் வியாபார உத்தி தெரிந்தவர் அங்கு யாரும் இல்லை அதனால் அது பெரிய அளவில் சோபிக்கவில்லை.

திமுக செல்வாக்கு உள்ள டிவி என்பதாலும் பொதிகைக்கு மாற்று வேண்டும் என்பதாலும் சன் கோலாச்ச ஆரம்பித்தது.


திமுக ஆதரவு டிவி என்பதலே கழகத்தினர் அதனை பார்த்து ரசித்து கொண்டாடினர்.


இப்போது இதன் இயக்குனர்கள் சொல்வது போல் நடுநிலை என்ற வார்த்தை மட்டும் 18 வருடங்களுக்கு முன்பு உபயோகப்படுத்தி இருந்தால், அறிவாலயத்தில் மட்டும் இல்லாமல் இருந்து இருந்தால், அது மட்டும் கோடம்பாக்த்தின் எதாவது ஒரு சாலையில் இருந்து இருந்தால்,இன்நேரம் சன் ஆபிஸில் வன்முறை வெறியாட்டம் நடந்து மதுரை தினகரன் பத்திரிக்கை கதி ஏற்பட்டு இருக்கும்.


மாறன் சகோதர்ர்கள் அப்போது அறிவாலய கோட்டைகுள்ளே வளர்ந்தார்கள். திமுக அரசியல் கேடயத்தை வைத்து மேலும் மேலும் முன்னேறினார்கள். அப்போது அவர்கள் நடு நிலை பேசவில்லை. பேசமாட்டார்கள் வியாபார உத்தியில் பேசவும் கூடாது. பேசியிருந்தால் அறிவாலய கோட்டையில் இருந்து அப்புறபடுத்தி இருப்பார்கள்.


தயாநிதி மாறன் யார்?
சைதை கிட்டு ,வெற்றி கொண்டான் போல் ஏதாவது கட்சி பொது கூட்டத்தையோ அல்லது கட்சி செயல்பாடுகளையோ மேடையில் பேசியவரா? இல்லை,
மாறன் இளைய மகன் அவ்வளவே.


கலைஞர் கைதின் போது முரசொலி மாறன், மத்திய அமைச்சராக இருந்த போதிலும்,
அந்த வயதிலும் வேட்டி அவுந்து வெள்ளை நிக்கர் வெளியே தெரிய போலிஸ் அடித்து இழுத்து போன போது, தன் தலைவனை காக்க போராடிய வேகம் மாறன் மகன்களிடம் எங்கு போனது.


வைகோ,
என் அப்பா கைதின் போது பழப்பு காட்டியவர் என்று சொல்லி சன்னில் காட்டாமல் விட்டதால்,
அந்த ஆளும் புழுங்கி புழுங்கி கடைசியில் ஜெ பக்கம் போனார்.
அப்படி அவர் போகாமல் இருந்து இருந்தால் இன்று ஜெயா டிவியில் மைனாரிட்டி திமுக என்ற வார்த்தை வந்து இருக்குமா? இப்போது என்னடாவென்றால் திமுக வெற்றிக்கு நாங்கள் காரணம் என்று நீங்கள் இப்போது சொல்கிறீர்கள்.


நீங்களும் காரணம்தான் அது மறுப்பதற்க்கில்லை அது உங்களின் செஞ்சொற்று கடன். அது உங்களின் கடமையும் கூட.

ஒரு சாதாரண திமுக தொண்டனுக்கு இருக்கும் கடமையை விட உங்களுக்கு அதிகமான கடமை இருக்கிறது .இன்னும் எழெழு ஜென்மத்துக்கு அந்த கடமை இருக்கிறது.

அரம்பத்தில் இருந்தே நடுநிலமை என்றால் அதுதான் உண்மையான ஆட்டம் இப்போது நடுநிலமை என்பது அழுகுனி ஆட்டம். அதைதான் அண்ணன் தம்பி இருவரும் செய்கிறீர்கள்.


நடுநிலை என்ற சொல்லோடு நீங்கள் சினிமா விமர்சனம் செய்து இருந்தால் எத்தனையோ படங்கள் ஓடி இருந்து இருக்கும் உங்களிடம் விற்க்காத படங்களை,
தமிழ் நாட்டில் இப்படி ஒரு படமே வரவில்லை என்று பொதுமக்கள் என்னும் அளவுக்குதானே படங்களை விமர்சனம் செய்வீர்கள் செய்து இருக்குறீர்கள் . உங்களாலும் தமிழ் திரைப்ட உலகம் அழிந்து என்றால் அது மிகை இல்லை


தமிழகத்தின் எல்லா பெட்டிகடைகளிலும் கடன் அன்பை முறிக்கும் என்று எழுதி வைப்பது போல்,
நீ வாழ பிறரை கெடுக்காதே என்ற அற்புதமான வாசகம் ஒன்று உண்டு. அது உங்களுக்கு தெரிய நியாயமில்லை.


ஒரு வேண்டுகோள் உங்கள் நடுநிலமைகளை கலைஞர் எனும் 85 வயது கிழவன் இறந்ததும் வைத்துக்கொள்ளுங்கள்.

இப்போதும் எப்போதும் நினைவு வைத்துக்கொள்ளுங்கள், நீங்கள் உங்கள் அறிவால் சூட்சமத்தால் இந்த பெரிய வெற்றியை பெற்றுள்ளீர்கள். ஆனால், திமுக அரசியல் செல்வாக்கு மற்றும், அறிவாலய கோட்டையை கேடயமாக பயன் படுத்தி வளர்ந்தீர்கள் என்பதை மறவாதீர்கள் சகோதரர்களே.


வளர்த்த கடா மார்பில் பாய்ந்ததடா என்று திமுக பொது கூட்டங்களில் கூம்பு வடிவ ஒலி பெருக்கியில் ஹனிபா கணீர் குரலில் கேட்டு இருக்கிறேன். அது கலைஞர் விஷயத்தில் உண்மையும் கூட.


வளர்த்த கடாக்களுக்கும், வளரும் கடாக்களுக்கும் கலைஞர் மார்பு என்றால் கொள்ளை பிரியம்..............


அன்புடன்/ ஜாக்கிசேகர்

என் சக பதிவர்களுக்கும் என் பதிவை வாசிப்பவர்களுக்கும் என் நன்றிகள்


நேற்றுதான் எழுத தொடங்கியது போல் இருக்கிறது . ஆனால் அதற்க்குள் எவ்வளவு பிரச்சனைகள், எவ்வளவு சந்தோஷங்கள்.

என் எண்ணத்தை இந்தபூமியில் வாழும் பல லட்சக்கணக்கான தமிழர்கள் படித்து பத்து பதினைந்து நிமிடத்தில் பதில் பின்னுட்டமாக போடும போது நம் எழுத்துக்கு உடன்கொடுக்கப் படும் வரவேற்ப்பு எந்த எழுத்தாளனுக்கும் கிடைக்காத வரப்பிரசாதம் என்பேன்.

அதே போல் தவறு என்றால் உடன் அந்த தவற்றை சுட்டிக்காட்டும் வேகமும் எனக்கு ரொம்பவும் பிடித்தமானது.

பதிவு எழுத ஆரம்பித்து அதற்க்குள் 100 பதிவாகவிட்டது. இன்னும் நிறைய எழுத ஆசைதான் ஆனால் என்ன செய்ய நேரம் கிடைப்பதில்லை. இருப்பினும் இந்த மூன்று மாதத்தில்100 எனும் போது சற்று மலைப்பாகவும் , சந்தோஷமாகவும் இருக்கிறது.

இந்த நல்ல விஷயத்தை எனக்கு அறிமுகப்படுத்திய வலைபதிவர் நித்யகுமாரன் என்றென்றும் என் நன்றிக்கு உரியவர்.

தொடர்ந்து என் பதிவுகளை வெளியிட்டு வரும் தமிழ் மனம் மற்றும் தமிழ் வெளி, தமிலிஷ் போன்ற திரட்டிகளுக்கும், தொடர்ந்து என் எழுத்துக்களை படித்து தொடர்ந்து ஆதரவு கொடுக்கும்

மங்களுர் சிவா

வெண்பூ

வால்பையன்

நித்யகுமாரன்

குண்டுமாமா

போன்றவர்களுக்கு என் இதயம் கனிந்த நெஞ்சார்ந்த நன்றிகள்.

அதே போல் அதிஷா, முரளி கண்ணன், கிரி, போன்று என் வலைபதிவை படித்து தொடர்ந்து பின்னுட்டம் இட்டு என்னை ஊக்கப்படுததும் சக பதிவர் அனைவருக்கும் என் நன்றிகள்.


அமெரிக்காவில் தொடர்ந்து என் எழுத்தை தொடர்ந்து வாசிக்கும் நண்பர்களுக்கும் மற்றம் உலகம் எங்கும் காற்றை போல் வியாபித்து இருக்கும் தமிழ் சொந்தங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

இந்த சுவாரஸ்யமான எழுத்தை எழுத முக்கிய காரணம் என் அம்மமா ஜெயலட்சுமி என்னை சிறு வயதில் அதிகம் வாசிக்க கற்றுகொடுத்ததே முக்கிய காரணம் என்பேன் .


அதே போல் கடலூர் திருப்பாதிரிபூலியூர் ராமகிருஷ்னா பள்ளியில் உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் கற்றுக் கொடுத்த ஒன்றாம் வகுப்பு ஆசிரியை ரோஸ்லின் டீச்சருக்கும்,

கதை படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்திய தினத்தந்தி சிந்துபாத் எழுதும் சாகா வரம் பெற்ற எழுத்தாளருக்கும்,

பாக்கெட் நாவல் அறிமுகபடுத்தி தமிழகத்தில் படிப்பு சுவை ஏற்படுத்திய பாக்கெட் நாவல் அசோகனுக்கும்,

பத்தாம் வகுப்பு படித்த என்னை கிரைம் நாவல் படிக்க வைத்த எழுத்தாளர்கள் ராஜேஷ்குமார் அவர்களுக்கும், சுபா, பட்டுகோட்டைபிரபாகர் அவர்களுக்கும்.


எழுத்தின் சுவை மேலும் கூட்டி உலகம் பற்றி அறிவை விசாலப்படுத்திய எழுத்தாளர் ஏகலைவன் சுஜாதாஅவர்களுக்கும்,

வாழ்க்கை பற்றிய அறிவை புகட்டிய எழுத்தாளர் பாலகுமாரன் அவர்கட்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்

தமிழ் டைப்பில் என் சந்தேகங்களை தீர்த்து வைக்கும் என் தங்கை சுதாவடமலைக்கும்,

எப்போதும் கம்யூட்டரே கதியா? என்று கேள்வி கேட்டு வெறுப்பு ஏற்றாமல் என் எழுத்தை தொடர்ந்து வாசித்து நல்ல எழுத்துக்களுக்கு வாழ்த்து உடன் தெடரிவித்து ஊக்கப்படுத்தும் என் மனைவி சுதா சீனிவாசன் என்றென்றும் என் நன்றிக்கு உரியவர்கள்

சிறுவயதில் ஏழ்மை குடும்பத்தில் பிறந்து ஹாலிவுட் வசூல் சாதனைகளை முறியடித்த என் இன்ஸ்பிரேஷன் ஹாங்காங் நடிகர் ஜாக்கிசானும் என் நன்றிக்கு உகந்தவர்


தொடர்ந்து எழுத பலத்தையும் அறிவையும் கொடுக்கும் எல்லாம் வல்ல பரம் பொருளுக்கு என் நெடுஞ்சான் கிடையான நன்றிகள் பல.

அன்புடன்/ஜாக்கிசேகர்

பதிவர்கள் பதறியதை போல் வாரணம் ஆயிரம் அந்த அளவுக்கு மோசமில்லை....





நேற்று இரவு சென்னை சத்தியத்தில் வாரணம் ஆயிரம் படம் பார்க்க நானும் என் மனைவியும் சென்றோம்.

கற்றது தமிழில் ஒரு வசனம் வரும்சென்னையில இரண்டு பேர்தான் இருக்கான். ஒன்னுசத்தியம் தியேட்டர் உள்ள இருக்கறவன்.
இன்னொருத்தன் சத்தியம் தியேட்டர் வெளியில இருக்கறவன். நாரும் வெளியில இருக்கற ஜாதிதான். ஆனா நல்ல படம் வந்த அந்த தியேட்டர்ல பாக்கறதுதான் எனக்கு வசதி. எவன் தலையும் மறைக்காது, எவனும் நம்ம தலைமேல கால வச்சி படம் பார்க்க மாட்டான்.

ஒரு பெண் நல்ல பெரிய மார்புடன் டி சர்ட்டில் இருந்தாள்
stop thinking என்று டி சர்ட்டில் எழதி இருந்தாள் அதனாலே என் கற்பனை அதள பாதாளத்துக்க சென்றது. புது மனைவி என்னை கையை கிள்ளி எச்சரித்தால்.

சத்தியம் தியேட்டர் கார்ப்பரேட் கம்பெனி போல் மாறிவிட்டது. நமக்குள் ஒரு விதமான தாழ்மனப்பான்மையை அது ஏற்படுத்துகிறது என்பது நிஜம் .வந்த எல்லா பெண்களும் ஒரு வித அலட்டலுடன் இருக்கிறார்கள்.

சரி படத்தை பற்றி சில வரிகள்.....


இறந்து போன தந்தையையும் அவர் காதலையும் தனக்காக தன் தந்தை எந்தளவுக்கு புரிந்து விட்டு கொடுததார் என்பதையும் மகனின் நினைவுகளோடு விரிவதுதான் படத்தின் கதை.

பதிவர்கள் பதறிய அளவுக்கு படம் அந்த அளக்கு மோசமில்லை என்பதே நிதர்சன உண்மை.

தவமாய் தவமிருந்து, பாரஸ்ட்கம்ப் போன்ற படங்களை ஞாபகபடுத்தினாலும்.கம்பேர் பண்ணக்கூடாது.

காப்பி அடிப்பது நம்மவர்களுக்கு கை வந்த கலை என்றாலும் அந்த பழைய கள்ளை எப்படிபுதிய மொந்தையில் ஊற்றி கொடுக்கிறார்கள் என்பதே முக்கியமானது.



காதல் படத்தின் கதை என்ன?
பணக்கார பெண்ணும் ஏழை பையணும் காதலிப்பதுதான் கதை.
இது தான் ஒன்லைன் ஆடர். ஆனால் அந்த படத்தை எப்படி பிரசன்ட் பண்ணினார்கள் என்பதே முக்கியம்.


வாரணம் ஆயிரம் படம் அந்தளவுக்கு மெனெக்கெட்டு இருந்தாளும் இடைவேளைக்கு பிறகு கொஞ்சம் கோட்டாவியுடன் கண்ண்னில் நீர் வருவதை தவிர்க்க முடியவில்லை.

முதல் பாதியில் படம் ரொம்ப அற்புதம் பழகி போன கதைதான் என்றாலும் அதை கொடுத்த விதத்தில் கௌதம் பாஸ் மார்க் வாங்கி இருக்கிறார் .

தவமாய் தவமிருந்து படம் குப்புசாமி அவர் தந்தையை பற்றிய படம் என்றால் வாரணம் ஆயிரம் சுரேஷ் அவர் தந்தை பற்றிய படம் எனலாம் .
குப்புசாமி தந்தை பற்றி படம் எடுக்கும் போது சுரேஷ் பற்றி படம் எடுக்க கூடாதா?

படத்தில் அசத்தலான இருண்டு பேர் சூர்யா மற்றொறுவர் சிம்ரன் அதுவும் அப்பா சூர்யா இறந்த போது சிம்ரன் நடிப்பு ரொம்பவும் அற்புதம்.


எப்படியாவது கௌதம் படத்திற்க்கு பணக்காரகளை கிடைத்து விடுகிறது.

இரயிலில் சமீரா ரெட்டியுடன் புரியும் ரொமான்டிக் சீன் ரொம்பவும் ரசிக்க தக்க அளவில் இருக்கிறது.

படத்தின் இசைதான் படத்திற்க்கு மிகப்பெரிய பலம்.

ஒரு காட்சிக்கும் மறு காட்சிக்கு டிசால் வ் டுயுரேஷன் எடிட்டிங்கில் வயிற்றெரிச்சலை ஏற்படுத்துகிறது.

அழகிய தீயே படத்தில் டைட்டானிக் படத்தை உல்ட்டாவாக சொல்வார்களே அது போல் சொல்லி இருக்கிறார்கள் என்று பொத்ததாம் பொதுவாக சொல்லி விட முடியாது.


கௌதம் படத்தின் பிற்பகுதியில் நிறைய கோட்டை விட்டு இருக்கிறார். எது எப்படி இருந்தாலும் படத்தை ரசிக்கதக்க அளவில் எடுத்துஇருக்கிறார் என்பதும் உண்மை


ஒன்று மட்டும் நிச்சயமாக தெரிகிறது பெரிய டைரக்டராக மாறி விட்டால் கதாநாயகன் காதலியை பார்க்க அமேரிக்காவுக்கும் போக வைக்க முடியும். ஆஸ்த்ரேலியாவுக்கும் போக வைக்க முடியும்.

மனது போர் அடித்தால் மனது சரியில்லை என்றால் காஷ்மீருக்கும் போக வைக்கமுடியும்.


அன்புடன்/ ஜாக்கிசேகர்

விலைமாதர்களை விட மோசமான வட இந்திய மீடியாக்கள்....

ஒரு காமெடி ஸ்ட்டோரி சொல்கிறேன் கேட்டுக்கொள்ளுங்கள். ஆனால் சிரிக்க கூடாது. நம் வரி பணத்தில் படித்து அமெரிக்காவில் செட்டிலான ஒரு இந்திய அமெரிக்கனை பொருளாதார பிரச்சனையால் ஒருவன் சுட்டு கொன்று விட்டான் .

உடனே வட இந்திய பத்திரிக்கைகள் இதுவரை பதினெட்டாவது இந்தியனை சுட்டு கொன்று விட்டார்கள்.நம் இந்தியர்களுக்கு பாதுகாப்பு அமெரிக்காவில் கேள்வி குறியாக இருக்கிறது என்று கூப்பாடு போட்டன.

இதே இந்தியாவில் ஆச்சி இட்லி பொடியில் இருந்து வருமானத்துக்கு ஏற்ற தரமான சோப்பான பவர் சோப்பு வரை இந்தியாவில் வரி கட்டி வாழ்க்கை நடத்தும் தமிழக மீனவர்களை, இதுவரை 4000க்கு மேற்பட்டவர்களை இலங்கை ராணுவம் சுட்டு கொன்று இருக்கறது. ஆனால் இது பற்றி எந்த வட இந்திய பத்திரிக்கையாவது கவலை தெரிவித்து இருக்குமா?

இந்த நாட்டில் படித்தவன் உயர்ந்த ஜாதி என்றால் ஒரு சட்டம்,
படிக்காதவன் தாழ்ந்த ஜாதி என்றால் ஒரு சட்டம் என்பது இன்னம் இருக்கத்தானே செய்கிறது.


அன்புடன் /ஜாக்கிசேகர்

விடுதலைபுலிகளின் கதி பற்றி தினமலர் பத்திரிக்கைக்கு என்ன கவலை?


இன்று (16/11/08 )காலையில் தினமலர் நாளிதழின் வால் பேப்பர் பார்க்க நேர்ந்தது. பூநகரி கடற் படை தளத்தை இலங்கை ராணுவம் கைப்பற்றி வி்ட்டதால் ராஜபக்சேவை விட,நமது தமிழக நாளேடு தினமலர் வெற்றி கூத்தாடுகிறது.

தினமலர் பத்திரிக்கை நிறைய சமுக பிரச்சனைகளை அவர்களின் நக்கலோடு அலசினாலும் ஒரு இனம் பூண்டோடு அழிக்கப்ட்டு கொண்டு இருக்கும் போது தினமலரின் இந்த நக்கல் தேவை இல்லாதது.

விடுதலைபுலிகளின் கதி என்ன? என்று வால் பேப்பரில் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். தினமலரை பொறுத்தவரை அது தீவிரவாத இயக்கம். அவர்கள் எப்படி போனால் என்ன எவன் மயிரை புடுங்கினால் இவர்களுக்கு என்ன?

ஆக விடுதலைபுலிகள் கதி என்ன ? என்று அந்த கேள்வியோடு வால்பேப்பர் போட்டால் சர்க்குலேஷன் தமிழகத்தில் அதிகம் விற்க்கும் என்பதால்தானே. அந்த வால்பேப்பர்.
இது ஆடு நனைகிறதே என்று ஓநாய் வருத்தப்படட் கதையாக இருக்கின்றது. போதும் நீங்கள் வருத்தப்பட்டதும் கவலை பட்டதும்.

நீங்கள் நங்கநல்லுரில் நாலவது தெருவில் தெருவிளக்கு எரியவில்லை என்று எழுதுவதோடு நிறுத்திக் கொள்ளுங்கள்.



இந்த பொழப்புக்கு...........................................................................................................................................................................
..........................................................................................................................................................................
..........................................................................................................................................................................
.........................................................................................................................................................................
அவர் அவர்கள் கோபத்துக்கு ஏற்றது போல் கோடிட்ட இடத்தை நிரப்பிக் கொள்க.


அன்புடன் /ஜாக்கிசேகர்.

சட்ட கல்லூரி மாணவர்கள் உதை வாங்கும் போது போலிஸ் வேடிக்கை பார்த்தது சரியே...



போலிஸ் வேடிக்கை பார்த்தது சரி என்றே என் மனதுக்குபடுகின்றது. கடந்த காலங்களை புரட்டி பார்த்தோமானால் போலிஸ் சட்டகல்லூரி மாணவர்கள் மோதல் என்பது சக்காளத்தி சண்டையை விட கேவலமாகவே நடந்து இருக்கிறது என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்.

போனமுறை கூட ஹாஸ்டலில் கலவரம் என்றதும் தடியடி அடித்து கலைத்தது போலிஸ்.
எப்படி எங்கள் வளகத்துள் போலிஸ் வரலாம் எங்களுக்குள் சண்டை என்றால் நங்களே தீர்த்து கொள்வோம் நீங்கள் உள்ளே வர தேவையில்லை என்றும் இந்த கலவரத்தின் போது தடியடிக்கு உத்தரவு இட்ட போலிஸ் மன்னிப்பு கேட்க வேண்டும என்று இதே சட்ட கல்லூரி மாணவர்கள் போராட்டம் எல்லாம் நடத்தினார்கள்.

அப்படி கலவரத்தை கட்டு படுதத வந்தவனை நீ யோக்கியம் இல்லை எப்படிஉள்ளே வரலாம். என்றால் எவன் உள்ள வந்து காப்பாத்துவான்.




இப்போது அதே வளாகத்தில் நடந்த சண்டையில் உள்ளே போனால் நாங்க வெட்டிக்குவோம் குத்திக்கிவோம் உங்களுக்கு எனன வந்தது என்று திரும்பி போலிஸ் மீதே பபழியை போடுவார்கள் அதனால்தான் போலிஸ் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தது.


பொதுவாக சட்டட கல்லூரி மாணவர்கள் என்றால்அராஜகத்தின் மொத்த உருவமாகதான் நமக்கு காட்சி அளித்து இருக்கிறார்கள். சட்டம் படிப்பதால் தான் என்னவோ பெரிய படுங்கிகள் போல்தான் அவர்களை எண்ணிக்கொள்வார்கள். வக்கிலாக மாறினால் கூட இந்த மனநிலை மாறாது. எப்போது பார்த்தாலும் ஸ்டிரைக் அடிப்பார்கள்.




பாரிஸ் முனை பகுதிக்கு போய் நிம்மதியாக பொருள் வாங்கி வரமுடியாது. ஆன் உன்னா உடனே ரோட்டுக்கு வந்து ஸ்டிரைக் செய்வார்கள்.

இந்த உதை கொடுத்த சம்பவத்தை பார்த்த எந்த பாரி முனை வியாபரியும் சந்தோஷப்பட்டே இருப்பான்.. அந்தளவுக்கு நொந்து நுடுல்ஸ் ஆக்கி இருக்கிறார்கள் சட்ட கல்லூரி மாணவர்கள்.

அதே போல் அந்த கல்லூரியில் காட்டு ஆற்று வெள்ளம் போல் கலந்து இருக்கும் ஜாதி அரசியல். எந்த நிலைபாட்டை எடுததாலும் அரசியல் தலைவர்கள் சப்போட்டுடன் எதிர்க்கும் ரவுடி மாணவர்கள்.

இந்த முறை உதைவாங்கும் போலி்ஸ் கை கட்டி வேடிக்கை பார்க்க காரணம் முன்பு இவர்கள்செய்த அராஜகத்துக்கு அதுவும் அவர்களுக்கு உள்ளே அடி கொடுதது அடி வாங்கும் போது வேடிக்கை பார்த்தது அவ்வளவுதான்.


இந்த சம்பவம் நடந்த மறுநாள் கோவை மாணவர்கள் அராஜகம் செய்ய கல்லூரி வளாகத்தில் போலிஸ் நுழைய எந்த போலிஸ் உள்ளே நுழைந்தாளும் தற்கொலை செய்து கொள்வேன் என்று சில மாணவர்கள்மாடி மேல் ஏறி ஷோ கட்டியதைதமிழ் மக்கள் எல்லோருக்கும் சன்நுயுஸ் காட்டியது. அதே போல் வேறு மாவட்டத்தில் நடந்த சட்ட கல்லூரி கலவரத்துக்கு சமாதானம் செய்ய போன இன்ஸ்பெக்டரை நெட்டி தள்ளி வெளியேற்றியது இதே மாணவ சமுதாயம்தான்.





பொதுவாக சட்ட கல்லூரிக்கு என்று வயது வரம்பு என்று ஏதும் இல்லை என்ற காரணத்தால் எவருக்கும் மாணவர்கள் என்ற எண்ணம் வரு வதில்லை அது மட்டும் அல்ல ஜாதி அரசியல் போன்றவை கலக்கும் போது அது இன்னும் அடங்கும் தன்மையை இழந்து விடு்கின்றது.

எவ்வளவு காரணம் சொன்னாலும் மிருகத்னமாக ஒரு மனிதன் உதை வாங்கும் போது பழைய கணக்கை தீர்ப்பதாக கை கட்டி வேடிக்கை பார்த்த போலிஸ் கண்டிக்கதக்கவர்கள்தான்.

கல்லுரி வளாகத்துக்குள் போலிஸ் வந்தால் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்ற காரணத்துக்ககாக அதை பாகிஸ்தான் பார்டர் போல் நினைத்து எல்லை மீறாத போலீஸ், அதுவும்கை கட்டி வேடிக்கை பார்த்த போது அவர்கள் காட்டு மிராண்டி மனநிலையில் இருப்பது போலவே தெரிகின்றது .

நான் கேட்கும் கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள்.

சட்டம் படிக்க வந்தவன் கையில் கத்தி எப்படி வந்தது.
மாணவர்களின் பெற்றோர் தன் மகன் என்ன செய்கிறான் என்ற கேள்வி கேட்காமல் எப்போது வீட்டுக்கு வந்தாலும் கதவை திறந்து விடுவதும், கையில் காசு கேட்கும் போது எல்லாம் கொடுததால் இந்த மாதிரி பொறிக்கிதனம்தான் செய்யும்.
கலவரம் நடக்க போகிறது என்று ஒரு சன்டிவி கேமரா நிருபருக்கு தெரியும் போது கல்லூரி முதல்வர் என்ன மமாதா கோவிலில் மணி ஆட்டிக்கொண்டா இருந்தார்.

போலிஸை குற்றம் சொல்வதற்க்கு முன் மாணவர்கள் பெற்றோர் எல்லோரும் தண்டனைக்கு உரியவர்களே. அதே போல் இந்த சண்டையில் ஈடுபட்ட எல்லா மாணவர்களின் கல்வி தகுதியை உடனே ரத்து செய்ய வேண்டும் . அவர்கள் ஏதாவது ஆடுமாடு மேய்த்து பிழைத்து கொள்ளட்டும்.அந்த மாணவர்கள் படிக்க லாயக்கற்றவர்கள்


போதவாக ஒரு சொல்வடை உண்டு.

மாணவன் நல்லவன்
மாணவர்கள் கெட்டவர்கள்

அன்புடன் /ஜாக்கிசேகர்

சட்ட கல்லூரி மாணவர்கள் கோபம் நியாயமானது தானா?


சட்ட கல்லூரி மாணவர்கள் ஒரே கல்லூரியில் உடன் படிக்கும் மாணவர்களை கொலை வெறி தாக்குதல் நடத்தி மூன்றுமாணவர்களை நடை பினமாக்கி இருக்கிறார்கள்.எல்லோரும் இந்திய இறையான்மை காப்பபற்றுவதற்க்காக படித்து கிழிக்க இருப்பவர்கள்.


பிரச்சனை என்பது உப்பு சப்பு இல்லாத காரணமாகத்தான் இருக்கும்.
ஒன்றும் இல்லாத காரணத்திற்க்கே கொலை வெறி தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள் என்றால்,
அதுவும் அடி பட்டு மயங்கியவனை பொலந்து கட்டும் இவர்கள் மனநிலையை பாருங்கள்.

படிக்கிற பையன் கையில் கத்தி இருக்க வேண்டிய அவசியம் என்ன? அப்படி இருக்கிறது என்றால் அது அப்படி என்ன தலை போககூடிய பிரச்சனை? அதற்க்கு வன்முறை ஒன்றுதான் தீர்வா?




அதே போல் என்ன இருந்தாலும் விடுதலைபுலிகள் ஆயுதம் தூக்கியது தவறு என்று நம்மவர்களில் படித்த பலர் சொல்ல கோட்டு இருக்கிறேன்.



படித்து சட்டத்தின் மூலம்எழை மக்களை காக்க வேண்டிய மாணவனின் கையில் கத்தி தடி போன்ற ஆயுதங்கள் . இந்தனைக்கு இலங்கை தமிழர்கள் போன்று பெரிய புலம் பெயர்ந்த வலியோ, சொந்த நாட்டில் அகதிகள் ஆக்கப்பட்டவேதனையோ ஏதும் இல்லாத மாணவர்கள் இவர்கள் சபிட்சமான வாழ்க்கை வாழ்ந்த இந்த மாணவர்களுக்கே இவ்வளவு கோபம் என்றால்? சொந்த நாட்டு மக்களை காக்க நினைத்த புலிகளுக்கு?


செருப்பு போட்டு இருப்பவனுக்குதான் அந்த செருப்பு கடிப்பதன் வலி தெரியும் என்பார்கள்.

பிறந்து வளர்ந்த நாட்டில் முன்றாம் தர குடிமக்களாக ஆக்கப்பட்டு, உரிமைகள் வேண்டும் என்று சாத்வீக முறையில் போரட்டாம் நடத்திய தமிழ் மக்களை நிராயுதபானியாக இருந்த போது அந்த கூட்டத்தில் கொலை வெறி தாக்குதல் நடத்தினார்களே சிங்களவர்கள், அப்போது எவ்வளவு கோபம் வந்து இருக்கும்.

காக்கும் என்ற இலங்கை அரசு கை கட்டி வெடிக்கை பார்க்கும் போது அந்த நாட்டு மக்கள் ஆயுதம் தூக்குவார்களா? மாட்டார்களா?

இப்போது கூட சட்டகல்லூரி மாணவர்கள் தாக்குதலை பக்கத்தில் வேடிக்கை பார்த்து கொண்டு நின்ற போலிஸ்சார் மீதுதான் போது மக்களின் ஒட்டு மொத்த கோபமும். அது போல்தான் ஒட்டு மொத்த தமிழர்களும்வெடிக்கை பார்த்த இலங்கை அரசுக்கு எதிராக ஆயுதங்கள் தூக்கினார்கள் இது பெரும் தவறா?


சின்ன பிரச்சனைக்கு கொலை வெறி தாக்குதல் நடத்தும் போது, தன் மனைவி தன் எதிரே கற்பழிக்கபடும் போதும், தன் தங்கையை எதிரில் ஆயுதம் வைத்து மிரட்டி கற்பழிக்க வைத்த போது எந்த அண்ணணும் பொங்கிதான் எழுவான்.


தன் சொந்த மக்கள் துரத்தி துரத்தி அடிக்கும் போது ஆவர்கள் ஆயுதம் தூக்கியதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால் சென்னை சட்ட கல்லூரி மாணவர்கள் ஆயுதஙக்ளை தூக்கியது என்ன நியாயம்?

ஆனால் தொடர்ந்து தமிழில் சில ஏடுகள் தொடர்ந்து புலிகள் ஆயுதம் தூக்கியது தவறு என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.



எந்த பெரிய வேதனையையும் அனுபவிக்காதவனும் ஆயுதம் எடுக்கிறான். பெரிய இழப்புகளை சந்தித்தவனும் ஆயுதம் எடுக்கிறான்.

ஆனால் தெரிந்தோ தெரியாமலே நாம் அனைவரும் வன்முறை அரக்கனால் கட்டப்பட்டு இருக்கிறோம் என்பதே நிதர்சன உண்மை.


அன்புடன்/ ஜாக்கிசேகர்

(பாகம்/6) 13பேர் உயிரும் ஒரு துப்பாக்கி குண்டும்....


இருபது வருடங்களுக்கு முன்பு ஈவில் டெட் என்ற ஆங்கில படம் பார்த்து விட்டுவெளியே வந்த என் நண்பர்களிடம் கேட்டேன்

எப்படி மச்சான் படம் இருக்கு?
மச்சான் “பீ ”கழட்டிக்கிச்சுடா என்று பயத்தில் வயிறு கலக்குவதை அப்படி சொல்லுவார்கள்.

“பீ” என்ற வார்த்தை உங்களுக்கு புரியவில்லை என்றால் அதன்ஆங்கில வார்த்தை ஷிட்.
வேட்டையாடு விளையாடு என்ற படத்தில் சைக்கோ கொளையாளிகள் உபயோகப்படுத்தும் வாத்தைதான் அது.

அது போல் ஷிட் கழட்டிக்கும் படம்தான் “13டசாமேட்டி” என்ற பிரெஞ் மொழிப்படம்.



20 வயது சாபெஸ்ட்டின் எப்படியாவது பணம் ஈட்டி பெரிய நிலைக்கு உயர வேண்டும் என்ற ஆசை கொண்டவன்.
ஒரு வீட்டில் எடுபிடி வேலை சென்து வயிற்றை கழுவுகிறான் அந்த வீட்டின் எமானர் அதிகமான போதை பொருள் சாப்பிட்டதால் அவர் இறக்க நேர்கிறது. அனால் அவரை போலிஸ் கண்கானித்து கொன்டு இருக்கிறது இறந்த கணவனை அடக்கம் செய்த உடன் தன் கணவன் எதோ ஒரு விஷயத்தை தன்னிடம் மறைத்ததாகவும்அது என்ன என்று தெரியவில்லை என்ற அந்த பணக்காரரின் மனைவி சொல்வதை சாபஸ்ட்டின் கேட்கிறான். அந்த பணக்காரருக்கு வரும் கடிதத்தை செபஸ்ட்டின் மறைத்து வைக்கிறான்.



அந்த கடிதத்தி்ல் ஒரு ரயில் டிக்கட்டும் ஒரு ஹோட்டலின் புக் செய்யபட்ட அறை ரசீதும் இருக்கின்றது .

எதாவது ஒரு வகையில் மிக அதிகமான பணம் கிடைக்கும் என்ற காரணத்துக்காகதான் அங்கு செபஸ்ட்டின் செல்கிறான். அவனை போலீ்ஸ்ம் அவனை பின் தொடர்கின்றது.

அவன் அந்த கடிதத்தில் சொன்ன நேரத்துக்கு ஆள்ஆரவாரம் இல்லாத காட்டு பகுதியில் இறங்க வாரகை காரோட்டி அவனை ஆச்சர்யத்துடன் பார்த்து செல்கிறான்

அவன் சென்ற சில நிமிடங்களில் ஒரு தாடிக்காரன் காரில் வந்து 13 என்ற எண்னை காட்ட, செபஸ்ட்டின் அவனிடம் இருந்த 13 என்ற எண்னை காட்டியதும் செபஸ்ட்டி்னை காரில் ஏற்றிக்கொண்டு பல மைல்தூரத்துக்கு அப்பால் இருக்கும் காட்டு பங்ளாமுன் அந்த கார் நிற்க்க. இன்னும் பல கார்களில் பலகணவான்கள் இறங்குகிறார்கள்.
ஒருவயதான பணக்காரன் அந்த கார் ஓட்டி வந்த தாடிக்காரனிடம் என்ன சின்ன வயது பையனாக இருக்கிறான் என்று கேட்க ?

அவன் நாம் பயன் படுத்தும் சங்கேத வார்த்தைகள் சரியாக இருந்ததால் அவனை அழைத்து வந்தாக சொல்ல..

செபஸ்ட்டின் இடம் உனக்கு இந்த விளையாட்டு விளையாட சம்மதமா என்று கேட்கும் போது தனக்கு ஏதும் தெரியாது என் எஜமானுக்கு வந்த கடிதத்தை தான் எடுத்து வந்ததாக கூறுகிறான்.

எல்லா ஊரில் இருந்தும் ஆட்கள் வந்து விட்டதால் இந்த விளையாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்று காட்டயப் படுத்த அது என்ன விளையாட்டு என்று தெரிய வரும் போது இந்த கட்டுரையின் முதல் பாராவில் வருவது போல் சபாஸ்ட்டி்னுக்கு ஷிட் கழுட்டி கொள்கிறது.

அது ரஷ்ய கிரிமினல்கள் ஒன்று சேர்ந்து விளையாடும் விளையாட்டு போட்டி.

மனிதாபிமானத்தை இலங்கை ராணுவம் எப்படி காலில் மிதித்து மனித உரிமை மீறுகின்றதோ அது போல் மனிதாபிமானத்தை மனித உரிமை மீறும் விளையாட்டு அது.

13 பேர் ரவுண்டாக நிற்க வேண்டும், அவர்களுக்க நடுவில் ஒரு குண்டு பல்பு தொங்கும் .




13பேர் கையிலும் ஒரே ஒரு துப்பாக்கி கொடுத்து அதன் உள்ளே ஒரே ஒரு குண்டு போட்டு அந்த துப்பாக்கி செம்பரை நன்றாக சுற்ற விட்டு ஒருவர் தலைக்கு பின் ஒருவர் துப்பாக்கி வைத்து ரப்பரி ரெடி ஜீட் என்றதும் அந்த குண்டு பல்பு எரியும் போது சுட வேண்டும். அதற்க்கு முன் அந்த பதிமுன்று பேரின் மீதும் பந்தயம் லட்சக்ணக்கில் கட்டி விளையாடும் விளையாட்டு. செத்தவர்களை ஓரம் தள்ளி விட்டுகடைசிவரை எவன் உயிரோடு இருக்கிறான் என்பதே விளையாட்டின் சுவாரஸ்யம்.
செபஸ்டின் உயிரோடு இருந்தானா?
செபஸ்ட்டினுக்க பணம் கிடைத்ததா?
அந்த வினையாட்டு போலிஸால் கண்டு பிடிக்கபட்டதா என்பதை திருட்டு டிவிடி அல்லது திருட்டு விசீடியில் கான்க.

படத்தை பற்றி சுவாரஸ்யங்கள்.

படம் முதலில் மெதுவாக ஆரம்பித்தாலும் பின்னால் நகம் கடிக்க வைக்கும் காட்சிகளுக்கு அந்த ஆரம்பம் தேவைதான்.

இந்த படம் 2005ல் வெளிவந்த படமாக இருந்தாலும் கருப்பு வெள்ளையில் எடுக்கப்பட்டது.

கலரில் வந்து இருந்தால் இன்னும கூடுதலாக நகம் கடிக்க வைத்திருக்கும்



சாபஸ்ட்டினுக்கு என்ன ஆகும் என்பதை நிமிடத்துக்கு நிமிடம் நம்மை நகம் கடிக்கவும் சீட்டின் நுனிக்கே நம்மை அழைத்து சென்றது இயக்குநரின் திரைக்கதை வெற்றி.


உயிர் பயத்தில் விளையாட்டில் கலந்து கொள்ளதவர்களை போதை அதிகம் கொடுதது பயம் தெளிய வைத்து விளையாட வைப்பது ரொம்பவும் கொடுமையானது.


உயிர்பயத்தை அப்படியே செல்லுலாய்ிடில் பதின விட்ட இயக்குநர் பாராட்டுக்குறியவர்.


பின்னனி இசை அடக்கி வாசித்து துப்பாக்கி செம்பர்சுற்றும் சத்தத்தை கேட்க வைத்து குலை நடுங்க வைத்தது ரொம்பவும் அருமை.

இந்த படத்தை உங்கள் வீட்டு ஹோம் தியேட்டரில் நல்ல சவுண்டில் படம் பார்த்து விட்டு எனக்கு சொல்லுங்கள்.

பணம் ஜெயித்தவனிடம் கூட பணம் வாங்கும் போதும் அதை தூக்கி நாயிக்கு போடுவது போல் போட அதையும் நாய் போல் அந்த தாடிக்காரன் எடுத்துக்கொள்வது மனித தன்மையற்ற செயல்


அதிகாரம்,பணம் அதிகம் வரும் போது எதை பற்றியும் கவலை படாது எதற்க்கும் மனித மனம் துணியும் என்பதை ரொம்ப அற்புதமாக சொல்லி இருக்கும் இயக்நர் பாராட்டுக்குறியவர்


The film won the World Cinema Jury Prize at the 2006 Sundance Film Festival. It also won two awards at the 62nd Venice Film Festival



13 Tzameti is a 2005 film written and directed by Georgian filmmaker Géla Babluani. Tzameti is the Georgian word for thirteen. 13 Tzameti is the feature length directorial debut for Babluani. It also marks the acting debut of his younger brother Georges Babluani, who plays the film's protagonist Sébastien.









Music by The Troublemakers
Distributed by Palm Pictures
Release date(s) Flag of France February 8, 2006
Running time 86 min.
Language French
Budget


அன்புடன்/ ஜாக்கிசேகர்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner